பிஎல்எஸ்-இன்டர்நேஷனல்-வருவாய்-44-சதவீதம்-உயர்வு
12 Aug 2025

சென்னை: டெல்​லியைத் தலை​மை​யிட​மாகக் கொண்ட பிஎல்​எஸ் இன்​டர்​நேஷனல் சர்​வீசஸ் நிறு​வனம், நடப்பு நிதி​யாண்​டின் முதல் காலாண்​டில் ரூ.711 கோடி வரு​வாய் ஈட்டி உள்​ளது. இது முந்​தைய ஆண்​டின் இதே காலத்​தை​விட 44% அதி​கம் ஆகும். இது​போல வட்​டி, வரி​கள், தேய்​மானத்​துக்கு முந்​தைய வரு​வாய் (ஈபிஐடிடிஏ) 53% உயர்ந்து ரூ.204 கோடியை எட்​டி​யுள்​ளது. நிகர லாபம் ரூ.181 கோடி​யாகி உள்​ளது. இது முந்​தைய ஆண்​டின் இதே காலத்​தை​விட 50% அதி​கம் ஆகும். கடந்த 2005-ம் ஆண்​டில் செயல்​படத் தொடங்​கிய இந்​நிறு​வனம், பல்​வேறு நாடு​களின் அரசுகளுக்கு விசா மற்​றும் தூதரக சேவை​களை வழங்கி வரு​கிறது. இது​மட்​டுமல்​லாமல், மதிப்பு கூட்​டப்​பட்ட சேவை​கள், குடி​யுரிமை, குடி​யிருப்பு சேவை​களை வழங்​கு​கிறது. மேலும் அதன் துணை நிறு​வன​மான பிஎல்​எஸ் இ-சர்​வீசஸ் மூலம் குடிமக்​கள் சேவை​களும் வழங்​கப்​படு​கின்​றன. 46-க்​கும் மேற்​பட்ட அரசாங்க வாடிக்​கை​யாளர்​களைக் கொண்​டுள்ள இந்​நிறு​வனம் 70-க்​கும் மேற்​பட்ட நாடு​களில் 50 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட சேவை மையங்​களைக் கொண்டு இயங்​கி வரு​கிறது.

பிற செய்திகள்: