
சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு சவாலாக பருவநிலை மாற்றம்: மாசுக்கட்டுப்பாடு வாரிய தலைவர் தகவல்
சென்னை: சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு பருவநிலை மாற்றம் பெரும் சவாலாக இருப்பதாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரிய தலைவர் ஜெயந்தி தெரிவித்துள்ளார். அறிவியல் மற்றும் தொழிற்சாலை ஆராய்ச்சி கவுன்சிலின் (CSIR) சென்னை வளாகம் மற்றும் தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் (NEERI) சார்பில் "தென்னிந்தியாவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் தற்போதுள்ள பிரச்சினைகள் மற்றும் சவால்கள்" என்ற தலைப்பில் கருத்தரங்கம் சென்னை தரமணியில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழ் நாடு மாசுக்கட்டுப்பாடு வாரிய தலைவர் ஜெயந்தி பேசியதாவது: வாகன உதிரிபாக உற்பத்தி, ஜவுளி, தோல், சர்க்கரை மற்றும் அதன் உப பொருட்கள் உற்பத்தியில் தமிழகம் முன்னிலையில் உள்ளது. நாடு முழுவதும் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களில் 40% பேர் தமிழகத்தில் உள்ளனர்.
இந்த கட்டுரை feedburner ஆல் வெளியிடப்பட்டது மற்றும் சுற்றுச்சூழல் செய்திகளை உள்ளடக்கியது.