தமிழ் டைம்ஸ் logo
ரூ.3.க்கு நாமக்கல் முட்டை.. குறைந்த விலைக்கு முட்டை வாங்கிய பொதுமக்களுக்கு அதிர்ச்சி !
உணவு

ரூ.3.க்கு நாமக்கல் முட்டை.. குறைந்த விலைக்கு முட்டை வாங்கிய பொதுமக்களுக்கு அதிர்ச்சி !

சிவகங்கையில் அழுகிய முட்டைகள் விற்பனை: குறைந்த விலைக்கு வாங்கிய பொதுமக்கள் வேதனை.   குறைந்த விலையில் நாமக்கல் முட்டை   நாமக்கல் பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்டதாக கூறி, சிவகங்கை நகராட்சியில், பல்வேறு பகுதிகளில் வண்டிகளில் முட்டைகள் விற்பனை செய்யப்பட்டதாக தெரிகிறது. ஒரு முட்டை ரூ.3 முதல் ரூ.4 வரை குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்ட நிலையில், கடைகளில் ரூ.6 முதல் ரூ.7 வரை விற்கப்படுவதாக கூறப்படுகிறது. குறைந்த விலை காரணமாக பொதுமக்கள் 30 முதல் 50 முட்டைகள் வரை வாங்கிச் சென்றுள்ளனர். ஆனால், மறுநாள் பயன்படுத்த முயன்றபோது பல முட்டைகள் அழுகிய நிலையில் இருந்ததாகவும், துர்நாற்றம் வீசியதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர். மேலும், சில முட்டைகள் சிறிய அளவில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.   கெட்டுப்போன முட்டை   சிவகங்கை மேலூர் சாலையைச் சேர்ந்த கட்டிட பொறியாளர் விக்னேஷ் (30) என்பவர் 30 முட்டைகள் வாங்கியதாகவும், பின்னர் அவற்றை வேகவைத்தபோது கெட்டுப்போனது தெரியவந்ததாகவும் கூறினார். இந்த முட்டைகள் பள்ளிகளுக்கு விநியோகம் செய்யப்பட வேண்டியவை ஆக இருக்கலாம் என்றும், தற்போது பள்ளிகள் விடுமுறையில் இருப்பதை பயன்படுத்தி வெளியில் விற்பனை செய்யப்படுகிறதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. பள்ளிகளுக்கு வழங்கப்பட வேண்டிய முட்டைகள் பொதுமக்களுக்கு ஏன் விற்பனை செய்யப்படுகின்றன என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.   கடும் வெயில் காலம் என்பதால் உணவுப் பொருட்கள் விரைவில் கெட்டுப்போகும்   மேலும், கடந்த சில நாட்களாக உணவகங்களில் உணவுத்துறை அதிகாரிகள் சோதனைகள் நடத்தப்படவில்லை என்றும், கடும் வெயில் காலம் என்பதால் உணவுப் பொருட்கள் விரைவில் கெட்டுப்போகும் அபாயம் உள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்பட வாய்ப்பு அதிகம் என்றும் கூறப்படுகிறது. இதனால், முட்டை விற்பனையாளர்கள் மற்றும் உணவகங்களில் தீவிர சோதனைகள் நடத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உடனடி ஆய்வு மேற்கொண்டு, தரமற்ற உணவுப் பொருட்கள் விற்பனைக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

abplive
ஜூலை 31, 05:30 AM
தேங்காய்க்குள் தண்ணீர் எப்படி வருகிறது? மர்மம் அல்ல... இயற்கையின் அற்புதமான அறிவியல்!
உணவு

தேங்காய்க்குள் தண்ணீர் எப்படி வருகிறது? மர்மம் அல்ல... இயற்கையின் அற்புதமான அறிவியல்!

தஞ்சாவூர்: தேங்காய்க்குள் தண்ணீர் எப்படி வருகிறது? விதைக்குள் உருவாகும் ‘திரவ உணவு’ முதல் சுவையான இளநீர் வரை தேங்காயின் உள்ளே நடக்கும் வியப்பூட்டும் உயிரியல் செயல்முறை பற்றி தெரியுங்களா? தேங்காயை உடைத்தவுடன் உள்ளே இருக்கும் தண்ணீரைப் பார்த்து, “இந்தத் தண்ணீர் எப்படி தேங்காய்க்குள் வந்தது?” என்ற கேள்வி பலருக்கும் தோன்றியிருக்கும். மரத்தின் வேர்கள் உறிஞ்சும் தண்ணீர் அப்படியே தேங்காய்க்குள் சேமிக்கப்படுகிறதா? அல்லது தேங்காயின் ஓடு தண்ணீரை வெளியில் இருந்து உறிஞ்சுகிறதா? அறிவியல் கூறும் உண்மை இதைவிட மிகவும் சுவாரசியமானது. தேங்காய்க்குள் இருக்கும் திரவம் வெறும் சாதாரண தண்ணீர் அல்ல. தாவரவியலில் இது திரவ எண்டோஸ்பெர்ம் எனப்படுகிறது. வளர்ந்து வரும் தேங்காய் விதையின் கருவுக்கு உணவு மற்றும் ஊட்டச்சத்து வழங்கும் இயற்கையான உயிரியல் திரவமே நாம் பருகும் தேங்காய் நீர். முதலில் உருவாகுவது இதுதாங்க... விதையின் உள்ளே இருக்கும் திரவப்பகுதி தேங்காய் மரத்தில் பூக்கள் உருவாகி, மகரந்தச் சேர்க்கை மற்றும் கருவுறுதல் நடைபெற்ற பிறகு, பழத்தின் உள்ளே இருக்கும் விதைப்பை பகுதியில் வளர்ச்சி தொடங்குகிறது. அப்போது எண்டோஸ்பெர்ம் எனப்படும் ஊட்டச்சத்து திசு உருவாகத் தொடங்குகிறது. தேங்காயின் தனிச்சிறப்பு என்னவென்றால், இந்த எண்டோஸ்பெர்ம் ஆரம்பத்தில் திடமான சதைப்பகுதியாக உருவாகாது. முதலில் அது திரவ நிலையில் உருவாகிறது. செல்கள் உருவாகும் முன், எண்டோஸ்பெர்ம் அணுக்கள் பல முறை பிரிந்து, திரவத்துக்குள் சுதந்திரமாக காணப்படும் நிலை ஏற்படுகிறது. இதனால் தேங்காயின் உள்ளே ஊட்டச்சத்து நிறைந்த திரவம் தேங்கத் தொடங்குகிறது. மரத்திலிருந்து தண்ணீர் எவ்வாறு செல்கிறது? மண்ணில் உள்ள தண்ணீரை தேங்காய் மரத்தின் வேர்கள் உறிஞ்சுகின்றன. அந்த நீர், மரத்தின் கடத்துத் திசுக்களின் வழியாக தண்டு, இலைகள் மற்றும் வளர்ந்து வரும் பழம் நோக்கி செல்கிறது. இலைகளில் நடைபெறும் நீராவிப் போக்கு மற்றும் தாவரத்தின் உட்புற நீர்ச் சுழற்சி ஆகியவை இந்த நீர் இயக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால், வேரிலிருந்து வந்த தண்ணீர் அப்படியே ஒரு சிறிய தொட்டியில் சேமிக்கப்படுவது போல் தேங்காய்க்குள் தேங்குவதில்லை. வளர்ந்து வரும் விதையின் உயிரியல் தேவைக்கேற்ப, மரத்திலிருந்து கிடைக்கும் நீர் மற்றும் கரைந்துள்ள சர்க்கரைகள், தாதுக்கள், அமினோ அமிலங்கள் உள்ளிட்ட பொருட்கள் விதையின் உள்ளே கொண்டு செல்லப்பட்டு, எண்டோஸ்பெர்ம் உருவாக்கத்தில் பயன்படுத்தப்படுகின்றன. அதனால் தேங்காய் நீர் என்பது தண்ணீருடன் தாவர ஊட்டச்சத்துக்கள் கலந்த இயற்கையான உயிரியல் திரவமாகும். இளநீரில் ஏன் இனிப்பு இருக்கிறது? இளநீரில் இருக்கும் இனிப்புக்கு முக்கிய காரணம் இயற்கையான சர்க்கரைகள். தேங்காய் வளர்ச்சியின் வெவ்வேறு கட்டங்களில் அதன் சர்க்கரை மற்றும் கனிமச் சத்துகளின் அளவு மாறுபடும். பழம் முதிரும் காலத்தில் தேங்காய் நீரின் வேதியியல் அமைப்பும் மாறுகிறது. தேங்காய் நீரில் சர்க்கரைகள் மட்டுமல்லாமல், பொட்டாசியம் உள்ளிட்ட கனிமங்கள், சில அமினோ அமிலங்கள், வைட்டமின்கள் மற்றும் தாவர ஹார்மோன்கள் போன்ற பல்வேறு சேர்மங்களும் காணப்படுகின்றன. இதனால் இளநீர் வெறும் சுவையான பானமாக மட்டுமல்லாமல், வளர்ந்து வரும் விதைக்கு தேவையான ஊட்டச்சத்து திரவமாகவும் செயல்படுகிறது. தேங்காய் சதை எப்படி உருவாகிறது? தேங்காய் வளர வளர, ஆரம்பத்தில் திரவமாக இருந்த எண்டோஸ்பெர்ம் படிப்படியாக திடமான வடிவம் பெறத் தொடங்குகிறது. முதலில் தேங்காயின் உள் சுவரை ஒட்டி மெல்லிய, ஜெல்லி போன்ற சதைப்பகுதி உருவாகும். பின்னர் அது தடிமனாகி, இறுதியில் நாம் சாப்பிடும் வெள்ளை தேங்காய் சதையாக மாறுகிறது. இந்த மாற்றத்தின் போது, திரவ எண்டோஸ்பெர்மில் இருந்த பல்வேறு ஊட்டச்சத்துக்கள் திட எண்டோஸ்பெர்ம் எனப்படும் தேங்காய் சதைப்பகுதியின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படுகின்றன. அதனால் தேங்காய் முதிரும்போது, உள்ளே இருக்கும் தண்ணீரின் அளவு பொதுவாகக் குறைந்து, சதைப்பகுதி தடிமனாகிறது. இளநீர் அதிகமாக இருப்பது ஏன்? இளம் தேங்காய், குறிப்பாக இளநீர் பருகப்படும் வளர்ச்சி நிலையில், அதன் உள்ளே திரவ எண்டோஸ்பெர்ம் அதிகமாக இருக்கும். இந்த நிலையில் சதைப்பகுதி இன்னும் முழுமையாகத் தடிமனாகி இருக்காது. எனவே தேங்காயை உடைக்கும்போது அதிக அளவு இளநீர் கிடைக்கிறது. பழம் தொடர்ந்து முதிரும்போது, திரவத்தின் ஒரு பகுதி சதைப்பகுதி உருவாக்கத்திற்கும், விதையின் வளர்ச்சிக்கும் பயன்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக முழுமையாக முதிர்ந்த தேங்காய்களில் இளநீர் அளவு குறைவாகவும், திடமான சதைப்பகுதி அதிகமாகவும் காணப்படுகிறது. தேங்காயை ஆட்டினால் சத்தம் ஏன் கேட்கிறது? முழுமையாக முதிர்ந்த தேங்காயில் உள்ள திரவத்தின் அளவு குறையும்போது, உள்ளே வெற்றிடப்பகுதி அல்லது காற்று இடம் உருவாகலாம். இதனால் தேங்காயை ஆட்டும்போது உள்ளே திரவம் அசையும் சத்தம் கேட்கும். அதே நேரத்தில், தேங்காயின் முதிர்ச்சியை அறிய மக்கள் பாரம்பரியமாகப் பயன்படுத்தும் ஒரு வழியாகவும் இந்த சத்தம் உள்ளது. ஆனால் ஒவ்வொரு தேங்காயின் வகை, வயது மற்றும் வளர்ச்சி நிலை மாறுபடுவதால், சத்தத்தை மட்டும் வைத்து அதன் தரத்தை முழுமையாகத் தீர்மானிக்க முடியாது. தண்ணீர் அல்ல... விதையின் இயற்கை உணவு! இதனால், தேங்காய்க்குள் இருக்கும் நீர் என்பது வெளியில் இருந்து ஓட்டையில் புகுந்த தண்ணீரோ, மழைநீர் சேமிப்போ அல்ல. மரத்தின் வேர் உறிஞ்சும் நீர் மற்றும் ஊட்டச்சத்துக்கள் தாவரத்தின் கடத்துத் திசுக்களின் வழியாக வளர்ந்து வரும் பழத்திற்குச் செல்கின்றன. பின்னர் விதையின் வளர்ச்சிக்குத் தேவையான உயிரியல் செயல்முறைகளின் மூலம், ஊட்டச்சத்து நிறைந்த திரவ எண்டோஸ்பெர்ம் உருவாகிறது. பின்னர் அதே திரவ எண்டோஸ்பெர்மின் ஒரு பகுதி படிப்படியாக திடமடைந்து தேங்காய் சதையாக மாறுகிறது. அதாவது, நாம் பருகும் இளநீர் என்பது தேங்காய் விதையின் வளர்ச்சிக்காக இயற்கை உருவாக்கிய ஒரு திரவ ஊட்டச்சத்து அமைப்பு. ஒரு சிறிய தேங்காயின் உள்ளே நீர் சுழற்சி, தாவர ஊட்டச்சத்து பரிமாற்றம், விதை வளர்ச்சி மற்றும் திசு மாற்றம் என பல அறிவியல் செயல்முறைகள் ஒன்றாக நடைபெறுகின்றன. ஒரு தேங்காயை உடைக்கும் போது கிடைக்கும் இளநீர் — இயற்கை உருவாக்கிய ஒரு சாதாரண பானம் அல்ல; வளரும் விதைக்காக மரம் தயாரிக்கும் உயிரியல் உணவு!

abplive
ஜூலை 31, 05:30 AM
தலைமுறைகள் கடந்தும் மக்களின் உன்னத உணவாக திகழும் தஞ்சாவூர் உரப்பு அடை
உணவு

தலைமுறைகள் கடந்தும் மக்களின் உன்னத உணவாக திகழும் தஞ்சாவூர் உரப்பு அடை

தஞ்சாவூர்: தமிழகத்தின் நெற்களஞ்சியமாம் தஞ்சாவூர், கலை மற்றும் கலாச்சாரத்திற்கு மட்டுமல்லாமல், பாரம்பரிய உணவு வகைகளுக்கும் உலகப் புகழ்பெற்றது. அந்த வகையில் தஞ்சை வட்டாரத்துக்கே உரித்தான பிரத்யேக சுவையுடன், தலைமுறைகள் கடந்தும் மக்களின் ஒரு உன்னத உணவுதான் "தஞ்சாவூர் உரப்பு அடை". சாதாரண அடை தோசைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்ட செய்முறையும், அசாத்திய சுவையும் கொண்டது இந்த பாரம்பரிய உணவு. உரப்பு அடையின் தனித்துவமான பின்னணி தஞ்சை மாவட்டத்து சமையலில் பருப்பு வகைகளின் பயன்பாடு எப்போதுமே சற்றே தூக்கலாக இருக்கும். இந்த உரப்பு அடை என்பது வெறும் பசி ஆற்றுவதற்கான உணவு மட்டுமல்ல, அது உடலுக்குத் தேவையான அத்தனை ஊட்டச்சத்துக்களையும் ஒருசேர வழங்கும் ஒரு சமச்சீர் உணவு (Balanced Diet). வழக்கமான அடைகளை விட இதில் காரமும் (உரப்பு), மசாலாப் பொருட்களின் நறுமணமும் அதிகமாக இருப்பதால் இதற்கு 'உரப்பு அடை' என்ற பெயர் வந்தது. சோழ நாட்டுப் பகுதிகளில் இன்றும் வீட்டுக்கு வரும் விருந்தினர்களை உபசரிக்க இந்த உரப்பு அடைதான் முதல் தேர்வாக இருக்கிறது. சுவையின் ரகசியம்: செய்முறை விசேஷம் தஞ்சாவூர் உரப்பு அடையின் அசாத்திய சுவைக்கு அதன் பக்குவமான அரைப்பு முறையே காரணம். பருப்பு மற்றும் அரிசி விகிதம்: பச்சரிசி மற்றும் புழுங்கல் அரிசியுடன் துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு மற்றும் பாசிப்பருப்பு ஆகிய நான்கு முக்கிய பருப்புகளும் சம அளவில் சேர்க்கப்படுகின்றன. மசாலா சேர்க்கை: இதனுடன் காரத்திற்கு ஏற்ப காய்ந்த மிளகாய், சோம்பு, சீரகம், மிளகு, பூண்டு, இஞ்சி மற்றும் பெருங்காயம் சேர்த்து, தண்ணீரை குறைவாக தெளித்து கரகரப்பாக (கொரகொரவென்று) அரைக்கிறார்கள். கூடுதல் சுவை: மாவை புளிக்க வைக்காமல், அரைத்த உடனே நறுக்கிய சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் தாராளமாக துருவிய தேங்காய்ப் பூ சேர்த்து தோசைக் கல்லில் ஊற்றுவார்கள். மொறுமொறுப்பும் மணமும் இந்த அடையை சுடும்போது தஞ்சை மக்கள் காட்டும் பக்குவம் தனித்துவமானது. தோசைக் கல்லை மிதமான சூட்டில் வைத்து, மாவை சற்றே தடிமனாக பரப்பி, நடுவில் ஒரு சிறிய துளையிட்டு, சுற்றிலும் சுத்தமான நல்லெண்ணெய் அல்லது பசு நெய் ஊற்றி சுட்டெடுப்பார்கள். அந்த துளையின் வழியே எண்ணெய் இறங்கி, அடையின் உள்பகுதி வரை வெந்து, வெளிப்புறம் பொன்னிறமாகவும் மொறுமொறுப்பாகவும் மாறும். அப்போது வீசும் சோம்பு மற்றும் பெருங்காயத்தின் மணம், பசியைத் தூண்டவல்லது. ஆரோக்கிய நன்மைகளின் களஞ்சியம் புரதச்சத்து நிறைந்தது: நான்கு வகையான பருப்புகள் சேர்க்கப்படுவதால், வளரும் குழந்தைகளுக்குத் தேவையான அத்தியாவசிய தாவரப் புரதம் (Plant Protein) இதில் முழுமையாகக் கிடைக்கிறது. செரிமானத்திற்கு நல்லது: சோம்பு, சீரகம், பூண்டு மற்றும் பெருங்காயம் ஆகியவை பருப்பினால் ஏற்படும் வாய்வுத் தொல்லையை நீக்கி, செரிமானத்தை எளிதாக்குகிறது. நீடித்த ஆற்றல்: இது ஒரு 'லோ-கிளைசெமிக்' (Low-Glycemic) உணவாக இருப்பதால், இரத்தத்தில் சர்க்கரை அளவை சட்டென்று உயர்த்தாமல், உடலுக்கு நீண்ட நேரத்திற்குத் தேவையான ஆற்றலைத் தருகிறது. சிறந்த காம்பினேஷன் எது? தஞ்சாவூர் உரப்பு அடையை பாரம்பரிய முறைப்படி "வெல்லம் மற்றும் கெட்டி வெண்ணெய்" தொட்டுச் சாப்பிடுவது ஆகச்சிறந்த சுவையைத் தரும். அடையின் காரத்திற்கும், வெல்லத்தின் இனிப்பிற்கும், வெண்ணெய்யின் மென்மைக்கும் இடையே உள்ள சுவைப்போர் அலாதியானது. இதுதவிர, காரசாரமான பூண்டு சட்னி அல்லது தக்காளி தொக்குடனும் இதனைப் பரிமாறலாம். இன்றைய நாகரிக உலகில் பீட்சா, பர்கர் போன்ற மேற்கத்திய உணவுகள் நம்மை ஆக்கிரமித்தாலும், தஞ்சாவூர் மண்ணின் மணத்தோடு, ஆரோக்கியத்தையும் சுவையையும் வாரி வழங்கும் இந்த "உரப்பு அடை" என்றும் தமிழர்களின் எக்காலத்து ஸ்பெஷல் உணவே!

abplive
ஜூலை 31, 05:30 AM
Trump's Fee Plan-Students: யோவ் ட்ரம்ப்பே.! மாணவர்கள கூட விட்டு வைக்க மாட்டியா.? US-ல் படித்து முடித்து வேலைக்கு சேர ரூ.1 கோடி ஃபீஸ்
உலகம்

Trump's Fee Plan-Students: யோவ் ட்ரம்ப்பே.! மாணவர்கள கூட விட்டு வைக்க மாட்டியா.? US-ல் படித்து முடித்து வேலைக்கு சேர ரூ.1 கோடி ஃபீஸ்

அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற பிறகு அமெரிக்காவில் பணிபுரிவதற்காக சர்வதேச மாணவர்களுக்கு வழங்கப்படும் விசாக்களுக்கு 1,00,000 அமெரிக்க டாலர் கட்டணம் விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக 'தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' செய்தி வெளியிட்டுள்ளது. H1-B-க்கு பதிலாக F-1 விசாவில் கை வைத்த ட்ரம்ப் நிர்வாகம் H1-B விசாக்களுக்கு 1,00,000 அமெரிக்க டாலர் கட்டணம் விதிக்கும் திட்டத்தை அமெரிக்க நீதிமன்றம் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, ட்ரம்ப் நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகையின்படி, மாணவர்களுக்கு வழங்கப்படும் F-1 விசாக்களின் நீட்டிப்பான விருப்பப் பயிற்சி (OPT) விசாக்களுக்கான அதிக கட்டணத்தை உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை பரிசீலித்து வருகிறது. OPT திட்டமானது, வெளிநாட்டுப் பட்டதாரிகள் தங்கள் மாணவர் விசாக்களில், படிப்புடன் நேரடியாகத் தொடர்புடைய துறைகளில் ஒன்று முதல் மூன்று ஆண்டுகள் வரை பணிபுரிய அனுமதிக்கிறது. தரவுகள் கிடைக்கப்பெற்ற சமீபத்திய ஆண்டான 2024-ல், ஏறத்தாழ 4,19,000 வெளிநாட்டினர் வெளிநாட்டுப் பணி உதவித்தொகை (OPT) திட்டத்தின் கீழ் பணிபுரிந்து வந்தனர். அமெரிக்கப் பல்கலைக்கழகங்களிலிருந்து பெரும்பாலான ஆட்சேர்ப்புகளை நடத்தும் தொழில்நுட்ப நிறுவனங்கள், H1-B விசாக்களுக்கான 1,00,000 அமெரிக்க டாலர் கட்டணத்தை எதிர்த்தன. க்ரீன் கார்டுகளுக்கும் 1 லட்சம் டாலர் கட்டணம் - வெளியுறவுத் துறை அதிகாரிகள் பரிசீலனை உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (DHS) செய்தித் தொடர்பாளர் ஒருவர் ஓர் அறிக்கையில் கூறியதாவது: “முறையாக அறிவிக்கப்படும் வரை எந்தக் கொள்கைகளையும் இறுதியானதாகக் கருதக்கூடாது. DHS-ல் நாங்கள், எங்களின் சட்டப்பூர்வமான குடிவரவு அமைப்பின் நேர்மையைப் பாதுகாக்க, எங்களிடம் உள்ள அனைத்து வழிமுறைகளையும் எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து எப்போதும் கலந்துரையாடி வருகிறோம்.” H-1B மற்றும் மாணவர் விசாக்களுக்குக் கூடுதலாக, அமெரிக்காவிற்கு வெளியே இருந்து கிரீன் கார்டுகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் மீது 1,00,000 அமெரிக்க டாலர் பிணைத்தொகையை விதிப்பது குறித்தும் வெளியுறவுத் துறை அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர். இந்த பிணைத் தொகையை, அவர்கள் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்து குடிமக்களான பிறகு மட்டுமே திரும்பப் பெற முடியும். அமெரிக்காவில் படிக்க விரும்பும் சர்வதேச மாணவர்களுக்கு OPT திட்டம் ஒரு முக்கிய ஈர்ப்பாக விளங்குகிறது. OPT இல்லாவிட்டால், பெரும்பாலான வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் பெற்ற திறன்களை வெளிநாட்டுச் சந்தைகளுக்கு எடுத்துச் சென்று, பட்டப்படிப்பு முடிந்தவுடன் உடனடியாக அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாவார்கள். கட்டணத்தை யார் செலுத்த வேண்டும்.? கட்டணத்தை மாணவர்களே செலுத்த வேண்டுமா அல்லது அவர்களை பணியமர்த்தும் நிறுவனங்கள் செலுத்த வேண்டுமா என்பதை ட்ரம்ப் நிர்வாகம் இன்னும் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.‘ ஒருவேளை நிறுவனங்கள் செலுத்த வேண்டும் என கூறப்பட்டால், அதற்கு பதிலாக, உள்நாட்டிலேயே பணியாட்களை தேர்வு செய்ய அந்நிறுவனங்கள் முடிவு செய்யும். அப்படி இல்லாமல், மாணவர்கள் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டால், அவ்வளவு பெரிய தொகையை அவர்கள் செலுத்த வாய்ப்புகள் இல்லை. இந்திய மாணவர்களுக்கு பாதிப்பு.? அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களில், 3.3 லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள்  இருக்கின்றனர். இந்நிலையில், தற்போது இந்த புதிய கட்டணம் விதிக்கப்பட்டால், அமெரிக்காவிலேயே படித்து முடித்து, அங்கேயே வேலை தேடி, கடனை அடைக்கலாம் என்ற கனவில் இருக்கும் நடுத்தர குடும்ப மாணவர்களுக்கு இது பெரிய பிரச்னையாக மாறிவிடும். அதனால், இந்த கட்டணம் நடைமுறைக்கு வரக் கூடாது என்பதே ஒட்டுமொத்த மாணவர்களின் பிரார்த்தனையாக இருக்கும்.  

abplive
ஜூலை 31, 05:30 AM
America F35 Jet : அலறிய ட்ரம்ப்.! 3 அதி நவீன எப்35 போர் விமானம் காலி.? அமெரிக்காவை மிரளவைத்ததா ஈரான்- நடந்தது என்ன.?
உலகம்

America F35 Jet : அலறிய ட்ரம்ப்.! 3 அதி நவீன எப்35 போர் விமானம் காலி.? அமெரிக்காவை மிரளவைத்ததா ஈரான்- நடந்தது என்ன.?

ஈரான் - அமெரிக்கா போர் ஈரான்- இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்ட நிலையில், இஸ்ரேலுக்கு ஆதரவாக களத்தில் இறங்கியது அமெரிக்கா, அந்த வகையில் கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக அமெரிக்கா- இஸ்ரேல் இணைந்து ஈரானை தாக்கி வருகிறது.  அமெரிக்கா, ஈரானின் ஏவுகணை தளங்கள், ராணுவ கட்டமைப்புகள் மற்றும் முக்கிய பாதுகாப்பு இலக்குகள் மீது பல்வேறு வான்வழித் தாக்குதல்களை மேற்கொண்டுவந்தது. இதற்கு பதிலடியாக, ஈரான் அமெரிக்க ராணுவ தளங்கள் மற்றும் அதன் கூட்டாளிகள் நாடுகள் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த மோதலால் மத்திய கிழக்கு முழுவதும் பதற்றம் அதிகரித்துள்ளது.  மேலும் கச்சா எண்ணெய் விநியோகம், ஹார்முஸ் நீரிணை வழிக் கடல்சார் போக்குவரத்து பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரானை குறிவைத்து தாக்கும் அமெரிக்கா போர் விரிவடையாமல் தடுக்க பல நாடுகள் உடனடி போர் நிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தையை வலியுறுத்தி வருகின்றன.  ஆனால் இதனை ஏற்றுக்கொள்ளாத அமெரிக்கா தனது முழு பலத்தை கொண்டு ஈரானை தாக்கி வருகிறது. இதில் பல ஆயிரம் பேர் உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த  மாதம் அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது. ஆனால் அடுத்த சில நாட்களில்  ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் தங்களது அனுமதியின்றி சென்ற கப்பலை ஈரான் தாக்கியது. இதனால் மீண்டும் அமெரிக்கா ஈரானை தாக்கி வரும் நிலையில் பல இடங்களில் ராணுவ கட்டமைப்பு அழிக்கப்பட்டது. இந்த பரபரப்பான நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோர் வெள்ளை மாளிகையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக ரகசிய சந்திப்பை நடத்தினர். நவீன சக்தி வாய்ந்த 3 அதி நவீன எப்35 போர் விமானம் காலி அப்போது ஈரானுக்கு எதிராக அடுத்தக்கட்டமாக எடுக்க வேண்டிய ராணுவ நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்பை அலற வைக்கும் வகையில், ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் புரட்சிகர ராணுவப்படை தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் அமெரிக்காவின் அதி நவீன சக்தி வாய்ந்த 3 அதி நவீன எப்35 போர் விமானம் முற்றிலுமாக அழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் பல விமானங்கள் சேதம் அடைந்துள்ளதாகவும், அமெரிக்க ராணுவ வீரர்கள் உயிரிழந்தாகவும் தகவல் வெளியானது. இது தொடர்பாக ஈரான் புரட்சிக்கர ராணுவப்படை வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்க ராணுவம் நேர்மையாக மோதாமல், ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணவ தளத்தில் இருந்து ஈரானை தாக்கியதாகவும், இதில் ஈரானின் உள்ள குயிஷம் தீவில் குடியிருப்புகள் மீது விழுந்தலில் ஒரு குழந்தை உயிரிழந்தாகவும், பலர் காயம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. ராணுவ வீரர்கள் உயிரிழப்பு இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஜோர்டானில்  உள்ள அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அந்த படைத்தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த அமெரிக்காவின் எப்35 போர் விமானங்கள் மற்றும் சில விமானங்களை குறிவைத்து பாலிஸ்டிக் ஏவுகணைகள் வீசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் மூன்று எப்35 போர் போர் விமானங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் அமெரிக்க ராணுவ வீரர்கள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்கள் உயிரிழந்துள்ளதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த தகவலை அமெரிக்கா மறுத்துள்ளது. ஈரான் ஏவிய ஏவுகனையை நடு வழியில் அழித்து விட்டதாக தெரிவித்துள்ளது. எனவே இதில் எந்த வகையில் உண்மையென அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை F-35 போர் விமானம் சிறப்பம்சம்.?  அமெரிக்காவின் 5-ஆம் தலைமுறை விமானமான F-35 போர் விமானம், எதிர்களிடம் இருந்து மறைந்து தாக்கும் திறன் கொண்டதாகும். இது உலகின் மிகவும் மேம்பட்ட போர் விமானங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அதிகபட்ச வேகமாக மணிக்கு சுமார் 1,930 கிமீ வேகத்தில் செல்லக்கூடியதாகும். F-35-இன் மிகப்பெரிய பலம் அதன் வேகம் மட்டும் அல்ல. எதிரியை முதலில் கண்டறிந்து, தகவல்களை உடனுக்குடன் பகிர்ந்து, எதிரி அறியுமுன் தாக்கும் திறன்தான் இதன் முக்கிய வலிமையாகக் கருதப்படுகிறது. F-35A  போர் விமானம், இந்திய ரூபாயில் சுமார் ₹700–800 கோடியாக என கூறப்படுகிறது.

abplive
ஜூலை 31, 05:30 AM
ஆகஸ்ட் மாதத்தில் 14 நாட்கள் வங்கி விடுமுறை! தமிழ்நாட்டிற்கு எத்தனை நாள் தெரியுமா?
இந்தியா

ஆகஸ்ட் மாதத்தில் 14 நாட்கள் வங்கி விடுமுறை! தமிழ்நாட்டிற்கு எத்தனை நாள் தெரியுமா?

ஆகஸ்ட் மாதத்தில் 14 நாட்கள் வங்கிகள் விடுமுறை. தமிழ்நாட்டில் மட்டும் எத்தனை நாள் விடுமுறை தெரியுமா? ஒவ்வொரு மாதமும் தொடங்கும் போது உங்களுக்கு வங்கி வேலைகள் ஏதாவது இருந்தால் அந்த மாதத்தின் விடுமுறை பட்டியலை தெரிந்து கொள்ள வேண்டும். வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து வங்கிகளும் மூடப்பட்டிருக்கும். அதே போல இரண்டு மற்றும் நான்காவது சனிக்கிழமையும் விடுமுறை உண்டு. இதோடு சேர்த்து இந்த ஆகஸ்ட் மாதத்தில் 14 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வீண் அலைச்சலை தவிர்ப்பதற்கு முன்கூட்டியே விடுமுறை தினங்களை தெரிந்து கொள்வது நல்லது. அதற்கேற்ப வங்கிப் பணிகளையும்  முடித்துக் கொள்ளலாம். விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தாலும் மாநிலங்களுக்கு மாநிலம் இந்த விடுமுறை தினங்கள் மாறுபடும். வங்கிகளில் விடுமுறை நாட்களின் விபரம்: ஆகஸ்ட் 2, 2026: ஞாயிற்றுக்கிழமை என்பதால் வங்கிகளுக்கு வழக்கமான விடுமுறை. ஆகஸ்ட் 4, 2026: கெர் பூஜா என்ற பண்டிகையின் காரணமாக திரிபுராவில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை. ஆகஸ்ட் 8, 2026: சிக்கிமில் கொண்டாடப்படும் "டெண்டோங் லோ ரம் ஃபாட்" எனும் பண்டிகைக்காக அங்குள்ள வங்கிகள் ஆகஸ்ட் 8 அன்று மூடப்பட்டிருக்கும். ஆகஸ்டு 9, 2026: ஞாயிற்றுக்கிழமை என்பதால் வங்கிகளுக்கு வழக்கமான விடுமுறை ஆகஸ்ட் 13, 2026: தேசபக்தர்கள் தினத்தை முன்னிட்டு மணிப்பூரில் உள்ள வங்கிகளுக்கு அன்று விடுமுறை. ஆகஸ்ட் 15, 2026: சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தியா முழுவதும் வங்கிகள், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை. ஆகஸ்டு 16, 2026: ஞாயிற்றுக்கிழமை என்பதால் வங்கிகளுக்கு வாராந்திர விடுமுறை. ஆகஸ்ட் 19, 2026: மகாராஜா பீர் பிக்ரம் கிஷோர் மாணிக்ய பகதூர் பிறந்தநாளுக்காக திரிபுரா மாநிலத்தில் வங்கிகளுக்கு விடுமுறை. ஆகஸ்ட் 22, 2026: இது ஆகஸ்ட் மாதத்தில் வரும் 4-வது சனிக்கிழமை. அன்றும் வங்கிகளுக்கு விடுமுறை. ஆகஸ்ட் 23, 2026: ஞாயிற்றுக்கிழமை என்பதால் வங்கிகளுக்கு வழக்கமான விடுமுறை ஆகஸ்ட் 25, 2026: மிலாடி நபி, முதல் ஓணம், முஹம்மது நபியின் பிறந்தநாள் போன்றவற்றுக்காக கேரளா மற்றும் ஆந்திரா மாநிலத்தில் வங்கிகளுக்கு விடுமுறை. ஆகஸ்ட் 26, 2026: கேரளாவில் ஐத்-இ-மிலாத், பரவாஃபத், திருவோணம் போன்ற பண்டிகைகளுக்காக அங்குள்ள வங்கிகளுக்கு விடுமுறை. ஒரு சில மாநிலங்களில் மிலாடி நபி ஆகஸ்ட் 26-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதன் காரணமாக மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், தமிழ்நாடு, உத்தரகாண்ட், தெலுங்கானா, மணிப்பூர், ஜம்மு & ஸ்ரீநகர், ஜார்கண்ட், சத்தீஸ்கர், பீகார், புது தில்லி, உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களிலும் வங்கிகளுக்கு விடுமுறை. ஆகஸ்ட் 28, 2026: ஈத்-இ-மிலாத்-உல்-நபி, ஸ்ரீ நாராயண குரு ஜெயந்தி, அய்யன்காளி ஜெயந்தி, ரக்ஷா பந்தன், பாங்-லாப்சோல் போன்ற பண்டிகளுக்காக குஜராத், மத்தியப் பிரதேசம், உத்தரகாண்ட், சிக்கிம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், ஜம்மு மற்றும் ஸ்ரீநகர், கேரளா, உத்தரப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை.ஆகஸ்ட் 30, 2026: ஞாயிற்றுக்கிழமைக்காக வங்கிகளுக்கு வழக்கமான விடுமுறை. விடுமுறை தினங்களிலும் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து அந்தந்த வங்கியின் நெட் பேங்கிங் சேவைகளை பயன்படுத்தலாம்.

abplive
ஜூலை 31, 05:30 AM
வருமான வரி தாக்கல்: இன்றே இறுதி நாள்! தவறினால் ரூ.5000 அபராதம் உறுதி! விபரம் இதோ..
இந்தியா

வருமான வரி தாக்கல்: இன்றே இறுதி நாள்! தவறினால் ரூ.5000 அபராதம் உறுதி! விபரம் இதோ..

இந்தியாவில் சம்பளதாரர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் தங்களின் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் ஆகும். எனவே இதுவரை வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாதவர்கள் உடனடியாக அந்த வேலையை முடித்து கொள்வது சிறப்பு. நிறுவனங்களில் வேலைக்கு செல்லும் ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மதிப்பீட்டு ஆண்டு 2026-27-க்கான (நிதியாண்டு 2025-26) வருமான வரிக் கணக்கை ITR 1 அல்லது ITR 2 ஆகிய படிவங்களை பயன்படுத்தி இன்றிரவு 12 மணிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். மத்திய அரசு இந்த தேதியை நீட்டிப்பதாக எந்த ஒரு பரிசீலனையும் இல்லை என அறிவித்து விட்டது. மேலும் கடைசி நேரத்தில் எத்தனை பேர் ITR  இணையதளத்தை பயன்படுத்தினாலும் இணையதளம் சிரமம் இன்றி செயல்படும் என்றும் விளக்கம் தெரிவித்துள்ளது. சுமார் 5 கோடிக்கும் அதிகமானவர்கள் இதுவரை கணக்கு தாக்கல் செய்துள்ளனர் என வருமான வரி துறை அதிகாரிகள் கூறுகின்றனர். இன்று கடைசி நாள் என்பதால் லட்சக்கணக்கான சம்பளதாரர்கள் ஒரே சமயத்தில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய முற்படலாம். எனவே இயன்றவரை காலையிலேயே வேலையை முடிப்பது சிறப்பு. வேலைக்கு செல்லும் சம்பளதாரர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி தான் இன்றுடன் முடிகிறது. வணிகம் அல்லது தொழில் வருமானம் ஈட்டும் நபர்கள் மற்றும் தணிக்கை தேவையில்லாத நபர்கள் ITR 3 மற்றும் ITR 4 படிவங்களை தாக்கல் செய்ய வேண்டும். இவர்களுக்கு ஆகஸ்ட் 31 கடைசி நாள். அதே போல கணக்கு தணிக்கை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ள வணிகம் அல்லது தொழில் செய்பவர்களுக்கு அக்டோபர் 31 கடைசி நாள். ஒரு வேளை இன்று இரவு 12 மணிக்குள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய தவறுபவர்கள், தாமதமான வருமான வரி தாக்கல் (Belated Return) முறையை பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனால், இதற்கு அபராதம் விதிக்கப்படும். உங்களின் ஆண்டு வருமானம் 5 லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தால் 5,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படலாம். வருமானம் 5 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக இருந்தால் 1,000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும். பழைய வரி கணக்கு நடைமுறை, புதிய வரி கணக்கு நடைமுறை என இரண்டு வழிமுறைகளில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து வருமான வரியை தாக்கல் செய்யலாம். புதிய வரி கணக்கு நடைமுறையில் பல்வேறு வரி சலுகைகள் கிடைக்காது என்றாலும் இதில் வருமான வரி உச்சவரம்பு அதிகம், ஆனால் பழைய வரி முறையில் பல்வேறு முதலீடுகளை குறிப்பிட்டு வரி சேமிப்பு செய்யலாம். உங்களுக்கு எது பொருத்தமானதோ அதனை பயன்படுத்தி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்.வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்கள் செய்யும் பெரிய தவறு இறுதியில் e- verification செய்யாமல் விடுவது தான். இதனை செய்தால் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யப்பட்டதாகவே அர்த்தம். எனவே e- verification-ஐ மறக்காமல் செய்து விடுவது நல்லது. வருமான வரி கணக்கு தாக்கல் செய்து அந்த ஆவணத்தை சேமிக்க வேண்டும். ஏனெனில் வங்கிகளில் கடன் பெற விண்ணப்பிக்கும் இதனை ஒரு ஆவணமாக கேட்கப்படும்

abplive
ஜூலை 31, 05:30 AM
PM Modi: இஸ்லாமாபாத்திற்கு செல்கிறாரா பிரதமர் மோடி? அழைப்பிதழை உறுதி செய்த பாக்., - அரசின் முடிவு என்ன?
இந்தியா

PM Modi: இஸ்லாமாபாத்திற்கு செல்கிறாரா பிரதமர் மோடி? அழைப்பிதழை உறுதி செய்த பாக்., - அரசின் முடிவு என்ன?

PM Modi: ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்படும் என பாகிஸ்தான் தரப்பு உறுதி செய்துள்ளது. பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கும் பாகிஸ்தான் இஸ்லாமாபாத்தில் நடைபெறும் 2027 ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சி மாநாட்டிற்கு பிரதமர் நரேந்திர மோடி அழைக்கப்படுவார் என்றும், அமைப்பின் நிலையான நடைமுறைகளுக்கு இணங்கி அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் அழைப்புகள் அனுப்பப்படும் என்றும் பாகிஸ்தான் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் பேசிய பாகிஸ்தான் வெளியுறவு அலுவலக செய்தி தொடர்பாளர், இந்தியா உட்பட அனைத்து ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உறுப்பு நாடுகளின் தலைவர்களுக்கும் அரசாங்கத் தலைவர்களுக்கும் அழைப்பிதழ்கள் அனுப்பப்படும் என்று தெரிவித்தார். அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் அழைப்பிதழ்களை அனுப்புவது மாநாட்டை நடத்தும் நாட்டின் கடமை என்றும், அது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) நிறுவப்பட்ட நெறிமுறையின்படி மேற்கொள்ளப்படும் என்றும் உறுதியளித்தார். பாகிஸ்தான் செல்கிறாரா பிரதமர் மோடி? உறுப்பு நாடுகளுக்கு மாநாட்டிற்கான அழைப்பிதழ் வழங்குவது என்பது, தலைமையேற்கும் நாட்டின் ஒரு கடமையாகும். இது நிறுவப்பட்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) நெறிமுறையின்படி வழங்கப்படும் என்று பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) சுழற்சிமுறைத் தலைமை மற்றும் நடத்தும் ஏற்பாடுகளின் கீழ், 2027-ஆம் ஆண்டுக்கான உச்சிமாநாட்டை பாகிஸ்தான் நடத்தவுள்ளது. இந்த உச்சிமாநாடு, பிராந்தியப் பாதுகாப்பு, பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் பிற மூலோபாயப் பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்காக உறுப்பு நாடுகளின் தலைவர்களை ஒன்றிணைக்கும், அந்த அமைப்பின் மிக முக்கியமான வருடாந்திரக் கூட்டங்களில் ஒன்றாகும். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) முழு உறுப்பினராக இருப்பதால், அந்நிறுவனம் பின்பற்றும் வழக்கமான ராஜதந்திர செயல்முறையின் ஒரு பகுதியாக இந்தியாவுக்கு அழைப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையேற்று பிரதமர் மோடி பங்கேற்பாரா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். ஆப்ரேஷன் சிந்தூருக்குப் பிறகு பாகிஸ்தான் உடனான இந்தியாவின் உறவு என்பது மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஜெய்சங்கருடன் ஆலோசனை? இதனிடையே, மணிலாவில் நடைபெறும் ஆசியான் கூட்டங்களின் இடையே, வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சருக்கும் இடையே சந்திப்பு நடைபெறுவதற்கான சாத்தியக்கூறு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அத்தகைய சந்திப்புக்காக இந்தியா தரப்பில் எந்தக் கோரிக்கையும் வந்ததாக இஸ்லாமாபாத்துக்குத் தெரியாது என்று பாகிஸ்தான் செய்தித் தொடர்பாளர் பதிலளித்துள்ளார். பிராந்தியக் கூட்டத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை தொடர்பாக எந்த தகவலும் வெளியாகவில்லை. இதையும் படியுங்கள்: Skoda Kylaq Rivals: ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் வரப்போகும் 3 SUV-விக்கள் - இல்லாத வசதிகளே இல்லை, கைலாக்கிற்கு சவால் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் தற்போது சீனா, ரஷ்யா, இந்தியா, பாகிஸ்தான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், ஈரான் மற்றும் பெலாரஸ் ஆகிய 10 உறுப்பு நாடுகள் உள்ளன. பிராந்தியம் முழுவதும் அமைதி, பாதுகாப்பு, நிலைத்தன்மை மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன், இந்த அமைப்பு 2001 ஆம் ஆண்டு ஜூன் 15 ஆம் தேதி பீஜிங்கில் நிறுவப்பட்டது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சிமாநாடு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. மேலும் இதனை நடத்தும் நாடு, அந்த அமைப்பால் ஒப்புக்கொள்ளப்பட்ட கட்டமைப்புக்கு ஏற்ப உறுப்பு நாடுகளிடையே சுழற்சி முறையில் அமைகிறது.  

abplive
ஜூலை 31, 05:30 AM
Tamil Thai Vazhthu:கடும் எதிர்ப்பு; 3ஆம் இடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. சர்ச்சை
கல்வி

Tamil Thai Vazhthu:கடும் எதிர்ப்பு; 3ஆம் இடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. சர்ச்சை

நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் தலைமை தாங்கும் நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாகப் பாடப்பட்டது சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது. திருநெல்வேலியில் உள்ள இந்த பல்கலைக்கழகத்தில் இன்று (ஜூலை 28) ஆளுநர் அர்லேகர் தலைமையில் 33ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. சுமார் 45 நிமிடங்கள் தாமதமாகத் தொடங்கிய பட்டமளிப்பு விழாவில் முதலில் வந்தே மாதம் பாடப்பட்டது. தொடர்ந்து தேசிய கீதம் பாடப்பட்ட நிலையில் மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. தமிழ் ஆர்வலர்கள் புறக்கணிப்பு நம் மாநிலத்தின் தமிழ்த்தாய் வாழ்த்தை, மனோன்மணீயம் சுந்தரனார் எழுதிய நிலையில், அவரின் பெயரில் உள்ள பல்கலைக்கழகத்திலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தமிழ் ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் காரணமாக உயர் கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன், பட்டமளிப்பு விழாவைப் புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது. மார்க்சிஸ்ட் கண்டனம் ஏற்கெனவே இதுதொடர்பான அறிவிப்பு வெளியானபோது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்து இருந்தது. ‘’ஆளுநர் பங்கேற்கிறார் என்பதற்காகவே ஒரு மாநிலத்தின் மாநிலப் பாடலை பின் வரிசைக்கு தள்ளுவது ஏற்புடையதல்ல. மாநில அரசின் கீழ் செயல்படும் ஒரு பல்கலைக்கழகத்தில் மாநிலப் பாடல் முதலில் பாடப்பட வேண்டும் என்பது இயல்பான எதிர்பார்ப்பு ஆகும். இந்நிலையில் ஆளுநர் அலுவலக சுற்றறிக்கை விரும்பத்தகாத சூழ்நிலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது அநீதியானது. மேலும் தமிழ்த்தாய் வாழ்த்தை இயற்றிய மனோன்மணியம் சுந்தரனார் பெயரில் இயங்குகிற ஒரு பல்கலைக்கழகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்திற்கு மூன்றாவது இடம் என்பது அவருக்கு இழைக்கப்படுகிற அவமரியாதை’’ என்று கூறி இருந்தது.  அதேபோல அமைச்சர் நிர்மல் குமார் உள்ளிட்ட பலர் தமிழ்த்தாய் வாழ்த்து பின்னுக்கு தள்ளப்பட்டது குறித்து கண்டனம் தெரிவித்து இருந்தனர்.  எனினும் எல்லோரின் எதிர்ப்பையும் மீறி, ஆளுநரின் உத்தரவுக்கு இணங்க மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வந்தே மாதரம், தேசிய கீதம் ஆகியவை பாடப்பட்டதற்குப் பிறகே தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டுள்ளது. 

abplive
ஜூலை 31, 05:30 AM

சமீபத்திய செய்திகள்

சமீபத்திய புதுப்பித்தல்கள்

புதுச்சேரியில் எகிறிய MBBS அரசு சீட்டுகள்: 429 ஆக உயர்வு - முதல்வர் ரங்கசாமி அதிரடி!
கல்வி

புதுச்சேரியில் எகிறிய MBBS அரசு சீட்டுகள்: 429 ஆக உயர்வு - முதல்வர் ரங்கசாமி அதிரடி!

abplive
Jul 313 நிமிடம் படிக்க
மருத்துவ இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு; வாய்பொத்தி நின்ற அரசு வழக்கறிஞர்கள்- ஸ்டாலின் கடும் கண்டனம்
கல்வி

மருத்துவ இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு; வாய்பொத்தி நின்ற அரசு வழக்கறிஞர்கள்- ஸ்டாலின் கடும் கண்டனம்

abplive
Jul 313 நிமிடம் படிக்க
கல்லூரி மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை பெற அரியர் இல்லா தேர்ச்சி அவசியமா? புதிய வழிகாட்டுதல்..
கல்வி

கல்லூரி மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை பெற அரியர் இல்லா தேர்ச்சி அவசியமா? புதிய வழிகாட்டுதல்..

abplive
Jul 313 நிமிடம் படிக்க
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
கல்வி

தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?

பழைய ஓய்வூதிய திட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும், தொகுப்பூதிய பணிக்காலம் என்பன உள்ளிட்ட 18 வகையான கோரிக்கைகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சருக்கு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.  என்னென்ன கோரிக்கைகள்? 1.பழைய ஓய்வூதிய திட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் தமிழ்நாட்டில் கடந்த 01.01.2026 முதல் உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்த அரசாணையில் 1.1.2026க்கு முன்பு புதிய ஓய்வு திட்டத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கு கருணைத்தொகை வழங்கப்படும் என்றும் பணிக்கொடை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதுவரை முழுமையான அரசாணை வெளியிடப்படாததால் 1.1.2026க்கு முன்பும் பின்பும் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள் அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை முழுமையாக அமல்படுத்த தங்களை கேட்டுக்கொள்கிறோம் 2.தொகுப்பூதிய பணிக்காலம் 2004, 2005 மற்றும் 2006 ஆம் ஆண்டுகளில் ஏறக்குறைய ஐம்பதாயிரம் ஆசிரியர்கள் தொகுப்பூதிய பணிக்காலத்தில் நியமனம் செய்யப்பட்டு 16-2006 முதல் காலமுறை ஊதியத்தில் கொண்டுவரப் பட்டுள்ளார்கள். ஆனால் அவர்களுடைய தொகுப்பூதிய பணிக்காலம் பணி முறிவு காலமாகவே உள்ளது. தொகுப்பூதிய பணிக்காலத்திலும் முழுமையான பணி ஆற்றியதை கருத்தில் கொண்டு தொகுப்பூதிய பணிக்காலத்தை பதவி உயர்வு மற்றும் தேர்வு நிலைக்கு கருத்தில் கொள்ளும் வகையில் தொகுப்பூதிய பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். 3.உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் அரசாணை நிலை எண் 37 பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த (அவி. ஐஏ) த்துறை நாள் 10.3.2020 மற்றும் அரசாணை நிலை எண் 116 பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த(அவி. ஐஏ) த்துறை ன்படி தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் பணியாற்றும் ஆசிரியர்கள் / அரசு ஊழியர்களுக்கான ஊக்க ஊதியம் வழங்கும் முறை நிறுத்தி ஆணையிடப்பட்டுள்ளது. 10.3.2020க்கு முன்னர் உயர்கல்வி பெற்றர்வகளின் பட்டியல் துறை வாரியாக கோரப்பட்டு அவர்களுக்கு 31.03.2021 முன்பாக ஊக்க ஊதிய ஆணை சம்பந்தப்பட்ட துறைகள் வாயிலாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது பிற துறைகளில் 10.03.2020க்கு முன் உயர்கல்வி முடித்தவர்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் 10.03.2020 க்கு உயர்கல்வி முடித்தவர்களுக்கும் இன்றுவரை ஊக்க ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை. 10.03.2020க்கு முன் உயர்கல்வி முடித்தவர்களுக்கு விரைவில் ஊக்க ஊதிய உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன். ஏற்கனவே உயர்கல்வியை முடித்து ஆசிரியர்கள் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பணப்பலன்கள் பெறாமல் காத்திருக்கிறார்கள் எனவே அவர்களுக்கான ஊக்க ஊதியம் பெற நடவடிக்கை எடுக்க தங்களை கேட்டுக்கொள்கிறேன். அரசாணை 243 எவ்வித பாதிப்பும் இன்றி தொடர ஆவண செய்ய வேண்டும் தொடக்கக் கல்வித் துறையில், உயர்நீதிமன்ற அறிவுறுத்தல் மற்றும் நீண்ட கால கோரிக்கையின் படி வட்டார முன்னுரிமை ரத்து செய்யப்பட்டு மாநில முன்னுரிமையிலான அரசாணை 243 பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது காலத்தின் தேவையும் கட்டாயமும் ஆகும். இதனால் தொடக்க கல்வித்துறையில் பணியாற்றும் அனைத்து வகை ஆசிரியர்களும் முன்னுரிமை பாதிப்பின்றி, இடமாறுதல் பெறவும் மாநில முழுவதும் ஒரே மாதிரியான பதவி உயர்வு வாய்ப்புகளும் பெற வாய்ப்பு உள்ளது. ஆகவே இந்த அரசாணை எவ்வித பாதிப்பும் இன்றி தொடர ஆவண செய்ய வேண்டும் என தங்களை பணிவோடு கேட்டுக்கொள்கிறோம். அலகு மாறுதல் மற்றும் பணிஈர்ப்பு பட்டதாரி ஆசிரியர்களுக்கு TRB தர எண் அடிப்படையில் முன்னுரிமை வழங்க வேண்டும். நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் போது ஈர்த்துக் கொள்ளப்பட்டும் மற்றும் அலகு விட்டு அலகு மாறுதல் மூலமும் தொடக்கக்கல்வி இயக்ககத்தில் இருந்து பள்ளிக் கல்வி இயக்ககத்திற்கு மாறுதல் பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் முன்னுரிமை இன்றி இளையோராக உள்ளனர். தொடக்கக்கல்வி இயக்ககத்தில் இருந்து பள்ளிக்கல்வி இயக்ககத்திற்கு வந்த நாள் தான் பணி மூப்புக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. பள்ளிக் கல்வித் துறையில் பட்டதாரி ஆசிரியர்களின் பதவி உயர்விற்கு (முதுகலை ஆசிரியர் பதவி மற்றும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி) 2019 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு பணியாளர்கள் (பணி நிபந்தனைகள்) சட்டம் 2016 விதி 40(2),ன் படி (ஒரு பதவியில் பணிமூப்பு நிர்ணயம் செய்யும்போது ஒன்றுக்கும் மேற்பட்ட முறையிலான நியமன முறை இருப்பின் (நேரடி நியமனம், பதவி உயர்வு, கருணை அடிப்படை, துறை மாறுதல் மற்றும் பிற) அப்பதவியில் பணியில் சேர்ந்த நாளை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயம் செய்யப்பட வேண்டும்) வழக்கு எண்கள் W.P.NO.28133/2017 தீர்ப்பு ஆணையின்படி ஈர்த்துக் கொள்ளப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு TRB தர எண் அடிப்படையில் பதவி உயர்வு வழங்க முன்னுரிமை வழங்க வேண்டும். 6.போராட்ட காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி உத்தரவிட வேண்டும் கடந்த ஆட்சி காலத்தில் போராட்டத்தில் கலந்து கொண்டமைக்காக ஆசிரியர்களுக்கு பின்வரும் நாட்களுக்குரிய ஊதிய பிடித்தம் செய்யப்பட்டது. இந்தப் போராட்ட நாட்கள் முறைப்படுத்தப்படாமல் உள்ளது. போராட்ட நாட்கள் முறைப்படுத்தப்படாத காரணத்தினால் தேர்வு நிலை சிறப்பு நிலை மற்றும் பதவி உயர்வுக்கு செல்லும் ஆசிரியர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த காலங்களில் போராட்டம் சார்ந்து நடைபெற்ற வேலை நிறுத்த போராட்டங்கள் பணி வரன்முறை செய்யப்பட்டதை கருத்தில் கொண்டு 4.10.2018, 9.07.2025, 28-03-2022, 29-03-2022, 18.11.2025 ஆகிய வேலை நிறுத்த காலத்தில் ஊதிய பிடித்தம் செய்யப்பட்டுள்ள போராட்ட காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி உத்தரவிட வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம். 7.கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்பாக அப்போதைய நடைமுறைப்படி முறையாக பணியில் சேர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் தகுதித்தேர்வு தேவையில்லை என்ற சட்ட திருத்தத்தினை தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றுவதுடன் இந்திய நாடாளுமன்றத்திலும் அவ்வகையான திருத்தத்தை மேற்கொள்ள ஆவண செய்ய வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறோம். 8.தொடக்கக் கல்வித் துறையில் பட்டதாரி ஆசிரியர்களின் 20 ஆண்டுகால கோரிக்கையான முதுகலை ஆசிரியர் பணி வாய்ப்பினை பெற்று தரும் வகையில், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி சிறப்பு பணி விதிகளில் (SPECIAL RULES) திருத்தம் செய்து முதுகலை ஆசிரியர் பணி நியமனத்தில் 50 சதவீத நேரடி நியமனத்தில் 8% தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்கியமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். 20 ஆண்டுகளுக்கு மேலாக பட்டதாரி ஆசிரியர்கள் பணியாற்றி நேரடி நியமனத்தில் செல்லும் போது ஊதிய இழப்பு ஏற்படாத வகையில் உரிய திருத்தங்கள் செய்து ஊதியபாதுகாப்புடன் (Pay protection) முதுகலை ஆசிரியர் பணியினை வழங்கிட ஆவண செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 9.மாணவர்களின் கல்வி நலன் கருதி அனைத்து உயர்நிலைப் பள்ளிகளிலும் 8 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களை உறுதி செய்திட கேட்டுக்கொள்கிறோம். பள்ளிக்கல்வித்துறையில் முதுகலை ஆசிரியர்களை உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக நியமனம் செய்வதை கைவிட வேண்டும். பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டுமே உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு வழங்கிட வேண்டும். 10.EMIS பதிவேற்றம் செய்யும் பணிகளில் இருந்து ஆசிரியர்களை விடுவிக்கும் பொருட்டு தொடக்கக் கல்வித் துறையில் நியமனம் செய்யப்பட்ட AI பணியிடங்களைப் போல் பள்ளிக்கல்வித்துறையிலும் அனைத்து வகையான பள்ளிகளுக்கும் AI பணியிடங்களை நியமனம் செய்து ஆசிரியர்களை கற்பித்தல் தவிர பிற அனைத்து வகையான பணிகளில் இருந்தும் முழுமையாக விடுவித்து கற்பித்தல் பணி சிறப்பாக நடைபெற வழிவகை செய்ய வேண்டும். 11.தொடக்கக் கல்வித் துறையில் 100% பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்கும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும். 12.பள்ளிக் கல்வித்துறை அரசாணை எண் 239 படி தொடக்கக் கல்வித் துறையில் ஏற்படும் காலிப் பணியிடங்கள் 100 சதவீதமும் இடை நிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது தமிழக அரசின் எந்த துறைகளிலும் இதுபோன்ற 100 சதவீதம் பதவி உயர்வு வழங்கப்படுவது இல்லை கடந்த 12 ஆண்டுகளாக தொடக்கக் கல்வித்துறையில் நேரடி பட்டதாரி ஆசிரியர் நியமனம் செய்யப்படவில்லை. ஒன்றிய அளவில் ஏற்படும் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடம் முழுவதும் பதவி உயர்வின் மூலம் நிரப்பப்படுவதால், பல ஆண்டுகளாக பட்டதாரி ஆசிரியர்கள் ஒன்றியம் விட்டு ஒன்றியம், மாவட்டம் விட்டு மாவட்ட மாறுதலில் செல்ல இயலாத நிலை ஏற்படுகிறது. எனவே, தொடக்கக்கல்வித்துறையில் 50 சதவீதம் பதவி உயர்வு 50 சதவீதம் நேரடி நியமனம் செய்திட வேண்டும். 13 பணி நிரவல் கலந்தாய்வினை ரத்து செய்திட வேண்டும் 2021ஆம் ஆண்டு முதல் பள்ளிக் கல்வித் துறையில் பதவி உயர்வு நடைபெறாத நிலையில், கடந்த ஆண்டு பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நிரவல் நடைபெற்றது. இந்த ஆண்டும் பதவி உயர்வு நடைபெறாததால் காலிப்பணியிடங்களுக்கு மட்டுமே கலந்தாய்வு நடைபெற உள்ளது. பதவி உயர்வு நடைபெற்றால் ஆயிரக்கணக்கான பட்டதாரி காலி பணியிடங்கள் ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டு, இந்த ஆண்டு நடத்த திட்டமிடப்பட்டுள்ள பணி நிரவல் கலந்தாய்வினை ரத்து செய்திட பணிவோடு கேட்டுக்கொள்கிறோம். 14 கூடுதல் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் தற்போது கூடுதல் மாணவர்கள் உள்ள அரசு நடுநிலைப் பள்ளிகளில் 175 மாணவர்கள் அல்லது ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை ஒவ்வொரு வகுப்புக்கும் தலா 35 மாணவர்கள் உள்ள பள்ளிகளுக்கு மட்டுமே ஐந்து பட்டதாரி ஆசிரியர் பணியிடம் வழங்கப்பட்டுள்ளது. 6, 7, 8 வகுப்புகளில் 100 மாணவர்களுக்கு மேல் இருக்கும் அனைத்து பள்ளிகளுக்கும் 5 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வழங்கிட பணிவோடு கேட்டுக்கொள்கிறோம். 15.கொரோனா காலத்தில் பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்வு எழுதும் நேரம் 3 மணி நேரமாக மாற்றம் செய்தது இப்போதும் தொடர்கிறது இதனை 2. 30 மணி நேரமாக குறைக்க வேண்டும். மேலும் விடைத்தாள் திருத்தும் போது விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு மேல்நிலைக் கல்வி போல 12 விடைத்தாள்களாக குறைத்து வழங்க வேண்டும். அறைக்கண்காணிப்பாளூக்கும் விடைத்தாள் திருத்தும் பணிக்கான உழைப்பூதியத்தையும் உயர்த்தி வழங்கவேண்டும். 16.மாணவர்களின் கற்றல் மேம்பாடு கருதி ஆசிரியர் மாணவர் விகிதத்தினை 6 முதல் 8 வகுப்புகளுக்கு 1 20 எனவும் 9 மற்றும் 10 வகுப்புகளுக்கு 1: 25 எனவும் நிர்ணயம் செய்திட வேண்டுகிறோம். பணியிட நிர்ணயத்தின் போது ஓர் ஆசிரியருக்கு 20 பாட நிர்ணயம் செய்திட வேளைகளை கருத்தில் கொண்டு பணியிடங்கள் கேட்டுக்கொள்கிறோம். 17.பட்டதாரி ஆசிரியர்களின் கற்றல் கற்பித்தல் பணிகளை ஆய்வு செய்யும் பள்ளிக்கல்வி துணை ஆய்வாளர் மற்றும் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனர் பணியிடங்களை முதுகலை ஆசிரியர் பணியிடங்களாக தரம் உயர்த்திட வேண்டும். 18.தொடக்கக் கல்வித் துறையில் மாவட்ட கல்வி அலுவலகங்களில் துணை ஆய்வாளர் பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும்.

abplive
Jul 31, 05:30 AM
5 நிமிடம் படிக்க

விளம்பர இடம்

உங்கள் விளம்பரத்தை இங்கே காட்சி செய்யலாம்

மேலும் செய்திகள்

தமிழ்நாடு முழுவதும் மற்றும் அதற்கு அப்பால் இருந்து சமீபத்திய கதைகளுடன் புதுப்பித்த நிலையில் இருங்கள்

IIT Madras: ஐஐடி சென்னை, கான்பூர் வெப்சைட்டை ஹேக் செய்த மாணவன்: அங்கேயே சேர்ந்து படிக்க அரிய வாய்ப்பு!
கல்வி

IIT Madras: ஐஐடி சென்னை, கான்பூர் வெப்சைட்டை ஹேக் செய்த மாணவன்: அங்கேயே சேர்ந்து படிக்க அரிய வாய்ப்பு!

புகழ்பெற்ற ஐஐடி கான்பூர் கல்வி நிறுவனத்தில் தமக்குச் சேர்க்கை கிடைக்கவில்லை என்ற ஏமாற்றத்திலும் விரக்தியிலும், அந்த நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தையே மாணவர் ஒருவர் ஹேக் செய்த சம்பவம் சமீபத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இருப்பினும், அந்த மாணவரின் தொழில்நுட்பத் திறமையைக் கண்டு வியந்த ஐஐடி கான்பூர் நிர்வாகம், அவர் மீது கடுமையான காவல் துறை நடவடிக்கை எடுப்பதைத் தவிர்த்து, அவருக்கு வாழ்க்கையில் இரண்டாவது வாய்ப்பு வழங்க முன்வந்துள்ளது. இந்தச் சம்பவம் கல்வியாளர்கள் மத்தியிலும் பேசுபொருளாக மாறியுள்ளது. கிடைக்காத சேர்க்கை வாய்ப்பு பொறியியல் படிப்பில் சேர விரும்பும் லட்சக்கணக்கான மாணவர்களின் கனவுக் கல்வி நிறுவனமாக ஐஐடி கான்பூர் திகழ்கிறது. அந்த வகையில், நுழைவுத்தேர்வில் பங்கேற்ற மாணவர் ஒருவருக்கு அங்கு படிப்பதற்கான சேர்க்கை வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கும் விரக்திக்கும் ஆளான அந்த மாணவர், தனது கணினித் திறனைப் பயன்படுத்தி ஐஐடி கான்பூர் இணையதளத்தின் அதிநவீனப் பாதுகாப்பு வளையங்களை உடைத்து உள்ளே நுழைந்துள்ளார். இணையதளம் ஹேக் செய்யப்பட்டதை அறிந்ததும் அதிர்ச்சியடைந்த ஐஐடி கான்பூர் தகவல் தொழில்நுட்பப் பிரிவு அதிகாரிகள், உடனடியாகச் செயல்பட்டு இணையதளத்தை மீட்டனர். பின்னர், சைபர் பாதுகாப்பு நிபுணர்களின் உதவியுடன் ஹேக் செய்த நபரின் ஐபி முகவரியைக் கண்டறிந்து, அவர் சேர்க்கை கிடைக்காத விரக்தியில் இருந்த ஒரு மாணவர் என்பதை உறுதி செய்தனர். மனிதாபிமான அணுகுமுறை பொதுவாக இதுபோன்ற சைபர் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டு, கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவது வழக்கம். ஆனால், ஐஐடி கான்பூர் நிர்வாகம் இந்த விவகாரத்தில் சற்று வித்தியாசமான, மனிதாபிமான அணுகுமுறையைக் கையாண்டுள்ளது. அந்த மாணவர் செய்த செயல் சட்டப்படி குற்றமாக இருந்தாலும், அவர் பயன்படுத்திய ஹேக்கிங் தொழில்நுட்பம் மற்றும் அவரது அபாரமான கணினி அறிவைக் கண்டு நிர்வாகத்தினர் ஆச்சரியமடைந்தனர். இந்தியாவின் முன்னணி கல்வி நிறுவனத்தின் இணையதளத்தையே ஹேக் செய்யும் அளவுக்குத் திறமை வாய்ந்த ஒரு மாணவரின் எதிர்காலத்தை, ஒரு வழக்கின் மூலம் இருட்டுக்குள் தள்ள நிர்வாகம் விரும்பவில்லை. எத்திக்கல் ஹேக்கர் எனவே, அவரை நேரில் அழைத்து அறிவுரை வழங்கவும், அவரது அசாத்தியமான சைபர் பாதுகாப்புத் திறனை நல்வழியில் பயன்படுத்தத் தேவையான வழிகாட்டுதல்களை வழங்கவும் ஐஐடி நிர்வாகம் பரிசீலித்து வருகிறது. தவறான வழியில் சென்ற அந்த மாணவரின் திறமையை அங்கீகரித்து, அவரை ஒரு சிறந்த எத்திக்கல் ஹேக்கராக மாற்றுவதற்கான பயிற்சிகளையோ அல்லது வேறு வகையிலான வாய்ப்புகளையோ வழங்கி, அவருக்கு இரண்டாவது வாய்ப்பளிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. தண்டனைக்கு பதிலாகத் திருந்துவதற்கான வாய்ப்பை வழங்கும் ஐஐடி கான்பூர் நிர்வாகத்தின் இந்த முற்போக்கான முடிவு, பல தரப்பிலிருந்தும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. மாணவரின் எதிர்கால நலன் கருதி அவரது அடையாளம் மற்றும் பிற தனிப்பட்ட விவரங்களை நிர்வாகம் ரகசியமாக வைத்துள்ளது.

abplive
ஜூலை 31
3 நிமிடம் படிக்க
Govt School Admission: அரசுப் பள்ளிகளில் குவியும் மாணவர்கள்: சேர்க்கை 4 லட்சத்தை தாண்டியது- முழு விவரம்!
கல்வி

Govt School Admission: அரசுப் பள்ளிகளில் குவியும் மாணவர்கள்: சேர்க்கை 4 லட்சத்தை தாண்டியது- முழு விவரம்!

2026-2027 ஆம் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 4 லட்சத்தைக் கடந்து 4,23,955 ஆக உள்ளது என்று தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், புதிதாகச் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தைக் கடந்துள்ளது. இதுவரை ஒட்டுமொத்தமாக 4,23,955 மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளதாகத் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 2026-2027 ஆம் கல்வியாண்டில், குறிப்பாக தொடக்க கல்வித் துறையில்  1 ஆம் வகுப்பு - 2,94,209 2 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை - 88,515 ஆக மொத்தம்- 4,23,955 மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளனர் கடந்த சில ஆண்டுகளாக மார்ச் 1ஆம் தேதி முதல் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. கோடை விடுமுறைக்கு முன்பாகவே மார்ச் மாதத்தில் தொடங்கிய மாணவர் சேர்க்கை முகாம், பள்ளிகள் திறக்கப்பட்ட பின்பும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசுப் பள்ளி ஆசிரியர்கள் வீடு வீடாகச் சென்று நடத்திய விழிப்புணர்வுப் பிரச்சாரத்திற்கு தற்போது நல்ல பலன் கிடைத்துள்ளது. எந்தெந்த வகுப்பில் எவ்வளவு? பள்ளிக் கல்வித்துறை தரவுகளின் அடிப்படையில், தொடக்கக் கல்வியான ஒன்றாம் வகுப்பில்தான் பெற்றோர்கள் அதிக அளவில் தங்கள் குழந்தைகளைச் சேர்த்துள்ளனர். ஒன்றாம் வகுப்பு: அதிகபட்சமாக சுமார் 2 லட்சத்து 94 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் சேர்ந்துள்ளனர். 2 முதல் 8ஆம் வகுப்பு வரை: தொடக்கக் கல்வி முதல் நடுநிலைக் கல்வியான 8ஆம் வகுப்பு வரை 88,000-க்கும் அதிகமான மாணவர்கள் இணைந்துள்ளனர். பிற வகுப்புகள்: மீதமுள்ள சேர்க்கையானது எல்.கே.ஜி, யு.கே.ஜி (அங்கன்வாடி இணைந்த பள்ளிகளில்), வகுப்புகளைப் பொறுத்தவரை 41,231 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.  காரணம் என்ன? கடந்த சில ஆண்டுகளாகவே அரசுப் பள்ளிகளை நோக்கி வரும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதற்குத் தமிழக அரசின் திட்டங்களே முக்கியக் காரணம் எனலாம். குறிப்பாக, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், உயர் கல்விக்குச் செல்லும் மாணவ, மாணவிகளுக்கான 'புதுமைப் பெண்' மற்றும் 'தமிழ்ப் புதல்வன்' திட்டங்கள், தொழில்முறை மற்றும் மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீடு போன்றவை ஏழை, நடுத்தரப் பெற்றோர்களை அரசுப் பள்ளிகள் பக்கம் ஈர்த்துள்ளன. மாணவர் சேர்க்கை தொடர்ந்து நடைபெற்று வருவதால், வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

abplive
ஜூலை 31
3 நிமிடம் படிக்க
கட்டுவிரியன் பாம்பால் தவெக நிர்வாகி இறந்தாரே! பாம்பை கண்டால் படையே நடுங்குவது ஏன்? டாக்டர் விளக்கம்
சுகாதாரம்
சென்னையில் டமால் டுமீல்.. கொட்டி தீர்க்கும் கனமழை! உஷார் மக்களே!
வானிலை

சென்னையில் டமால் டுமீல்.. கொட்டி தீர்க்கும் கனமழை! உஷார் மக்களே!

Chennai Rain Update: Heatwave conditions are prevailing across various parts of Tamil Nadu. Meanwhile, widespread heavy rain is lashing Chennai. This sudden rainfall, arriving amidst the scorching heat, has brought some relief to the people.

oneindia
ஜூலை 31
3 நிமிடம் படிக்க
சென்னையில் மாலை மற்றும் இரவு நேரங்களில் நடக்கப்போகும் மாற்றம்! வெளியான முக்கிய அறிவிப்பு!
வானிலை

சென்னையில் மாலை மற்றும் இரவு நேரங்களில் நடக்கப்போகும் மாற்றம்! வெளியான முக்கிய அறிவிப்பு!

Chennai Weather Update: Despite the onset of the Southwest Monsoon, the intensity of the heat in Tamil Nadu has not yet subsided. Against this backdrop, the Meteorological Department has announced a possibility of rain in Chennai tomorrow during the evening and night hours.

oneindia
ஜூலை 31
3 நிமிடம் படிக்க
சென்னையில் இன்னைக்கும் மழை வெளுக்கும்.. வானிலை மையம் ஜில் அப்டேட்!
வானிலை

சென்னையில் இன்னைக்கும் மழை வெளுக்கும்.. வானிலை மையம் ஜில் அப்டேட்!

Chennai is likely to witness rainfall again today as favourable weather conditions persist. Residents have been advised to stay alert for intermittent showers, while commuters are urged to plan their travel carefully in view of possible waterlogging and traffic congestion.

oneindia
ஜூலை 31
3 நிமிடம் படிக்க
கோயம்புத்தூரில் கொட்டப்போகும் கனமழை.. ஆரஞ்சு அலர்ட் கொடுத்த வானிலை மையம்!
வானிலை

கோயம்புத்தூரில் கொட்டப்போகும் கனமழை.. ஆரஞ்சு அலர்ட் கொடுத்த வானிலை மையம்!

Coimbatore Nilgiris Get Orange Alert: Although the Southwest Monsoon has set in, its impact in Tamil Nadu remains minimal. Amidst this, an 'Orange Alert' for heavy rainfall has been issued for Coimbatore and its surrounding districts.

oneindia
ஜூலை 31
3 நிமிடம் படிக்க
ஆடி மாதம்.. அம்மிக்கல்லை பறக்கவிடும் காற்று.. வானிலை மையம் கொடுத்த வார்னிங்! உஷார் மக்களே!
வானிலை

ஆடி மாதம்.. அம்மிக்கல்லை பறக்கவிடும் காற்று.. வானிலை மையம் கொடுத்த வார்னிங்! உஷார் மக்களே!

Tamil Nadu Weather Alert: Unlike last year, the monsoon in Tamil Nadu has not been intense this year; nevertheless, rainfall has been heavy in a few areas. Against this backdrop, the Chennai Regional Meteorological Centre has issued a warning of rain accompanied by strong winds, thunder, and lightning today.

oneindia
ஜூலை 31
3 நிமிடம் படிக்க
சென்னையில் கொட்டிய கனமழை! தரையிறங்க முடியாமல்.. வானத்தில் வட்டமடித்த விமானங்கள்!
வானிலை

சென்னையில் கொட்டிய கனமழை! தரையிறங்க முடியாமல்.. வானத்தில் வட்டமடித்த விமானங்கள்!

Flight operations in Chennai have been delayed due to heavy rainfall. Flights arriving in Chennai from various locations, as well as those departing from the city, have been delayed.

oneindia
ஜூலை 31
3 நிமிடம் படிக்க
ஒரு வாரத்திற்கு நிம்மதி! இஷ்டம் போல பெய்யும்.. தென்மேற்கு பருவமழை! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம்
வானிலை

ஒரு வாரத்திற்கு நிம்மதி! இஷ்டம் போல பெய்யும்.. தென்மேற்கு பருவமழை! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம்

Tamil Nadu Weather: The Southwest Monsoon has not yielded the expected amount of rainfall in Tamil Nadu over the past few days. Against this backdrop, the Chennai Regional Meteorological Centre has forecast widespread rainfall for the districts adjoining the Western Ghats over the coming week, starting today.

oneindia
ஜூலை 31
3 நிமிடம் படிக்க
திடீரென இரவில் குளிர்வித்த மழை.. சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை!
வானிலை

திடீரென இரவில் குளிர்வித்த மழை.. சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை!

Widespread rain is occurring across many parts of Chennai. Rain is falling in various areas of the city, including Tambaram, Pallavaram, Madippakkam, Vadapalani, Kodambakkam, Mambalam, Egmore, Mylapore, Nungambakkam, Chetpet, and Marina Beach.

oneindia
ஜூலை 31
3 நிமிடம் படிக்க
இன்று நள்ளிரவு 1 மணி வரை.. 6 மாவட்டங்களில் மழை பிரிச்சு எடுக்கப்போகுது.. வானிலை மையம் அலர்ட்!
வானிலை

இன்று நள்ளிரவு 1 மணி வரை.. 6 மாவட்டங்களில் மழை பிரிச்சு எடுக்கப்போகுது.. வானிலை மையம் அலர்ட்!

Chennai Meteorological Department has stated that rain is likely in six districts of Tamil Nadu until 1 AM tonight. Accordingly, rainfall is expected in the districts of Chennai, Thiruvallur, Chengalpattu, Kancheepuram, Coimbatore, and Nilgiris.

oneindia
ஜூலை 31
3 நிமிடம் படிக்க
Iran Vs Ukraine: இது என்னடா புது தலைவலி.?! வர்த்தக கப்பல் மீது தாக்குதல்; உக்ரைனுக்கு ஈரான் எச்சரிக்கை; நடந்தது என்ன.?
உலகம்

Iran Vs Ukraine: இது என்னடா புது தலைவலி.?! வர்த்தக கப்பல் மீது தாக்குதல்; உக்ரைனுக்கு ஈரான் எச்சரிக்கை; நடந்தது என்ன.?

காஸ்பியன் கடலில் ஈரானிய வர்த்தகக் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, ஈரான் மற்றும் உக்ரைன் இடையேயான பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த சம்பவம், சர்வதேசச் சட்டம் மற்றும் ஐக்கிய நாடுகள் சாசனத்தின் மீறல் என்று கூறி, ஈரான் உக்ரைனுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்றும், இது தண்டிக்கப்படாமல் போகாது என்றும் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெளிவாகக் கூறியுள்ளார். உக்ரைன் மீது ஈரான் குற்றச்சாட்டு சனிக்கிழமையன்று காஸ்பியன் கடலில் தனது வர்த்தகக் கப்பல்களில் ஒன்றை உக்ரைன் குறிவைத்ததாக ஈரான் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளது. வெளியுறவு அமைச்சகத்தின்படி, சனிக்கிழமை அதிகாலையில் நடந்த இந்தத் தாக்குதலால், கப்பலில் வெடிப்பு ஏற்பட்டது. இதில் ஒரு மாலுமி உயிரிழந்தார், மற்றொருவர் படுகாயம் அடைந்தார். ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ரஷ்யாவிடமும் முறையீடு இந்த சம்பவம் தொடர்பாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைத் தலைவர் காஜா கல்லாஸ் மற்றும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் ஆகியோருடன் தனித்தனியாகப் பேச்சுவார்த்தை நடத்தியதாக, ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்தார். உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி ஒரு ஈரானிய வர்த்தகக் கப்பலைத் தாக்கி, அதில் இருந்த மாலுமியைக் கொன்றதாக அராக்சி தனது எக்ஸ் தளத்தில் எழுதியுள்ளார். இது ஐ.நா. சாசனத்தின் அப்பட்டமான மீறல் என்று விவரித்த அவர், ஐரோப்பாவைப் போரில் மேலும் ஆழமாக இழுப்பதற்காக இஸ்ரேலின் தூண்டுதலின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டினார். இரு தலைவர்களுடனான பேச்சுவார்த்தையின்போது, ​​கீவ் எடுத்துள்ள இந்த நடவடிக்கைக்கு பதில் அளிக்கப்படாமல் விடப்படாது என்பதைத் தாம் தெளிவுபடுத்தியதாக அவர் கூறினார். ரஷ்யா-உக்ரைன் போரில் எங்களுக்கு எந்த பங்கும் இல்லை - ஈரான் தாக்குதலுக்குப் பிறகு கப்பல் வெடித்ததில், கப்பல் பணியாளர்கள் உயிரிழந்ததாகவும் காயமடைந்ததாகவும் ஈரான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், ரஷ்யா-உக்ரைன் போரில் ஈரான் இஸ்லாமியக் குடியரசு தலையிடவில்லை என்றும் அந்த அமைச்சகம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இந்த மோதலில் எந்தவொரு தரப்புக்கும் ஈரான் கூட்டாளியாக இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளையும் அது நிராகரித்துள்ளது. தொலைதூரத் தாக்குதல்களை உறுதிப்படுத்திய ஜெலென்ஸ்கி இதற்கிடையே, காஸ்பியன் கடலில் உக்ரைன் ஒரு நீண்ட தூர ராணுவ நடவடிக்கையை நடத்தியதாக உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்தார். சர்வதேச தடைகளுக்கு உட்பட்டதும், ஈரான் மற்றும் ரஷ்யாவிற்கு இடையே ராணுவப் பொருட்களைக் கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்டதுமான சரக்குக் கப்பல்களை இந்த ட்ரோன் தாக்குதல்கள் குறிவைத்ததாக உக்ரைனிய உளவு அமைப்புகள் டெலிகிராமில் தெரிவித்தன. உக்ரேனிய தூதர் வரவழைத்து எச்சரித்த ஈரான் இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, சனிக்கிழமையன்று உக்ரைனின் தற்காலிக தூதரை (சார்ஜ் டி அஃபயர்ஸ்) வெளியுறவு அமைச்சகம் அழைத்ததாக ஈரான் அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது. இந்தத் தாக்குதலை ஒரு விரோதமான மற்றும் குற்றச் செயல் என்று குறிப்பிட்ட ஈரான், தனது கடுமையான தூதரக எதிர்ப்பைப் பதிவுசெய்ததுடன், அதிகாரப்பூர்வ வழிகள் மூலமாகவும் உக்ரைனுக்குத் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியது. இரு நாடுகளுமே தனித்தனியாக ஒரு போரில் ஈடுபட்டுள்ள நிலையில், தற்போது ஈரான்-உக்ரைன் இடையேயும் பதற்றம் ஏற்பட்டுள்ளது, உலக நாடுகள் இடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.  

abplive
ஜூலை 30
3 நிமிடம் படிக்க
US Iran War: “நிறுத்தி இருக்கோம், ஆனா நிறுத்தல“ ஈரான் மீதான தாக்குதல் குறித்து வெள்ளை மாளிகை முக்கிய அறிக்கை
உலகம்

US Iran War: “நிறுத்தி இருக்கோம், ஆனா நிறுத்தல“ ஈரான் மீதான தாக்குதல் குறித்து வெள்ளை மாளிகை முக்கிய அறிக்கை

அமெரிக்கா தொடர்ந்து மூன்று இரவுகளாக ஈரான் மீது எந்த புதிய தாக்குதல்களையும் நடத்தவில்லை. ஆனால், இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் முழுமையாகத் தணியவில்லை. ராணுவ நடவடிக்கைக்கான வாய்ப்பு திறந்தே உள்ளது என்றும், தேவைப்பட்டால் அமெரிக்கா மீண்டும் நடவடிக்கை எடுக்கக்கூடும் என்றும் வெள்ளை மாளிகை கூறியதாக ஃபாக்ஸ் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்க அதிகாரிகளின் கூற்றுப்படி, நேரடி ராணுவத் தாக்குதல்களுக்கு மாற்றாக வாஷிங்டன் தற்போது மாற்று வழிகளை பரிசீலித்து வருகிறது. இவற்றுள், ராஜதந்திரப் பேச்சுவார்த்தைகள், அதிகரித்த பொருளாதார அழுத்தம் மற்றும் கடல்வழி முற்றுகை ஆகியவை அடங்கும். ஊடக அறிக்கைகளின்படி, இந்த கடல்வழி முற்றுகையால், ஈரானுக்கு ஒவ்வொரு நாளும் மில்லியன் கணக்கான டாலர் பொருளாதார இழப்பு ஏற்படுவதோடு, அதன் பொருளாதாரம் மீது கூடுதல் அழுத்தமும் உண்டாகிறது. ஈரானுக்கு இஸ்ரேல் விடுத்த எச்சரிக்கை இஸ்ரேலும் உயர் எச்சரிக்கை நிலையில் உள்ளது. இஸ்ரேல் மீதான எந்தவொரு தாக்குதலுக்கும் வலுவான பதிலடி கொடுக்கப்படும் என்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்துள்ளார். இந்த அறிக்கை, அப்பகுதியில் பாதுகாப்பு குறித்த கவலைகளை மேலும் அதிகரித்துள்ளது. இதற்கிடையே, உக்ரைன் தொடர்பாக ஒரு புதிய சர்ச்சை எழுந்துள்ளது. காஸ்பியன் கடலில் ஈரானிய ராணுவ உபகரணங்களை ஏற்றிச் சென்ற கப்பல்களைத் தாக்கியதாக உக்ரைன் கூறியுள்ளது. இந்தக் கூற்று பிராந்திய பதட்டங்களை மேலும் அதிகரித்துள்ளது. ஈரான் இந்த விஷயத்தை தீவிரமாக எடுத்துக்கொண்டு, நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. மத்திய கிழக்கில் நிலைமை பதற்றமாக உள்ளது அமெரிக்கா, ஈரான் மற்றும் அவற்றின் நட்பு நாடுகளுக்கு இடையேயான நிலைமை மிகவும் பதற்றமானதாகவே உள்ளது. தற்போது பெரிய அளவிலான ராணுவ நடவடிக்கை எதுவும் இல்லை என்றாலும், எந்தவொரு புதிய சம்பவமும் நிலைமையை விரைவாக மாற்றிவிடக்கூடும். இதன் விளைவாக, அமெரிக்கா, ஈரான், இஸ்ரேல் மற்றும் உக்ரைன் சம்பந்தப்பட்ட அடுத்தகட்ட நிகழ்வுகள் மீது உலகின் கவனம் குவிந்துள்ளது. முன்னதாக, ஈரான் மீதான தாக்குதலை அமெரிக்கா நிறுத்தியதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டன. அதில் ஒரு முக்கிய காரணம், அமெரிக்காவிடம் ஏவுகணை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதுதான் என கூறப்பட்டது. அத்தகைய சூழலில் தான் அமெரிக்கா தாக்குதலை நிறுத்தியுள்ளது. சில நாட்களுக்கு முன் பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தாக்குதல் நடத்த அமெரிக்கா முழுமையாக தயாராக உள்ளதாகவும், ஆனால், ஈரானுடன் ஒரு ஒப்பந்தத்தை எட்டுவதே மிகவும் விவேகமான பாதையாக இருக்கும் என்று தான் நம்புவதாகவும் கூறினார். மேலும், அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் தொடர்வதாகவும், காலம் செல்லச் செல்ல ஈரான் பேச்சுவார்த்தைகளில் அதிக தீவிரம் காட்டி வருவதாகவும் அவர் நம்புவதாகக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.    

abplive
ஜூலை 30
3 நிமிடம் படிக்க
Trump Netanyahu Plan: ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
உலகம்

Trump Netanyahu Plan: ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோர் வெள்ளை மாளிகையில் 90 நிமிடங்கள் நடந்த ஒரு முக்கிய சந்திப்பை நடத்தினர். இந்த சந்திப்பில், ஈரானின் அணுசக்தித் திட்டம், பிராந்திய பாதுகாப்பு மற்றும் எதிர்கால வியூகம் ஆகியவை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இஸ்ரேலிய அதிகாரிகளின் கூற்றுப்படி, அமெரிக்காவை போருக்குத் தள்ளுவது இந்த சந்திப்பின் நோக்கமல்ல, மாறாக ராஜதந்திரம், பொருளாதார அழுத்தம் மற்றும் ராணுவ நடவடிக்கை உள்ளிட்ட அனைத்து வழிகளையும் பரிசீலிப்பதே ஆகும். ஈரானை கையாள்வதற்கான 3 வழிமுறைகள் குறித்த ஆலோசனை அறிக்கையின்படி, கூட்டத்தில் ஈரான் தொடர்பான 3 சாத்தியமான உத்திகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. முதல் வழிமுறை, ஒரு ராஜதந்திரத் தீர்வு ஆகும். அமெரிக்க பிரதிநிதிகளான ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோர், ஈரானிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், இரு தரப்பினருக்கும் இடையே குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் நீடிக்கின்றன. ஈரானின் அணுசக்தி லட்சியங்களை முழுமையாக கட்டுப்படுத்தும் ஒரு ஒப்பந்தத்தை அது எட்டாது என்று நெதன்யாகு கவலை தெரிவித்தார். இரண்டாவது வழி, பொருளாதாரத் தடைகளை கடுமையாக்கியவாறே ஈரானுக்கு எதிரான கடற்படை முற்றுகையை தொடர்வதாகும். பேச்சுவார்த்தைகளும் தடைகளும் பலனளிக்காத பட்சத்தில், ராணுவ நடவடிக்கையை மீண்டும் தொடங்கி, அதன் வீச்சை விரிவுபடுத்துவது மூன்றாவது வழியாகும். கூட்டத்திற்குப் பின் அதிகரித்த பதற்றம் கூட்டம் முடிந்து சில மணிநேரங்களுக்குப் பிறகு, ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவத் தளம் மீது ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது. இதைத் தொடர்ந்து, ஈரானுக்கு எதிராக கடுமையான ராணுவ பதிலடி கொடுக்கப்படும் என்று ட்ரம்ப் எச்சரித்தார். இருப்பினும், ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின்படி, இறுதி முடிவு அமெரிக்காவின் கையில்தான் உள்ளது என்று கூறிய நெதன்யாகு, உடனடியாக தாக்குதல் நடத்துமாறு ட்ரம்புக்கு அழுத்தம் கொடுக்கவில்லை. உலக பொருளாதாரம் குறித்து ட்ரம்ப் கவலை இந்த கூட்டத்தில் ராணுவ நடவடிக்கைகள் மற்றும் உலகப் பொருளாதாரம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. நீடித்த மோதல், எரிசக்தி விலைகள் உயர்வதற்கும், உலகப் பொருளாதார ஸ்திரத்தன்மை இழப்பதற்கும் வழிவகுக்கும் என்று ட்ரம்ப் கூறினார். இதற்கிடையே, அமெரிக்காவிற்கு அழுத்தம் கொடுப்பதற்கான கடைசி முயற்சியாக, ஈரான் தற்போது ஹார்முஸ் ஜலசந்தியை பயன்படுத்துவதாகவும், எனவே, பொருளாதார அழுத்தத்தை அதிகரிப்பது அவசியம் என்றும் நெதன்யாகு கருதினார். சிரியா மற்றும் சவுதி அரேபியா குறித்தும் விவாதம் இந்த சந்திப்பில், சிரியாவின் நிலைமை குறித்தும் விவாதிக்கப்பட்டது. சிரியாவின் பெரும்பகுதியில் துருக்கிக்கு செல்வாக்கு இருப்பதாகவும், இஸ்ரேல் எல்லைப் பாதுகாப்பு மண்டலத்தில் மட்டுமே இருப்பதாகவும் விளக்கி, நெதன்யாகு ட்ரம்பிடம் ஒரு வரைபடத்தை காட்டினார். ஜிஹாதி அமைப்புகளின் அச்சுறுத்தல் நீடிக்கும் வரை, தெற்கு சிரியாவில் உள்ள பாதுகாப்பு மண்டலத்தில் இஸ்ரேல் தனது இருப்பைத் தக்க வைத்துக் கொள்ளும் என்றும் அவர் கூறினார். அமெரிக்க-சவுதி அணுசக்தி ஒப்பந்தம் மற்றும் சவுதி அரேபியா-இஸ்ரேல் உறவுகளை இயல்பாக்குவது குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்தனர். இந்த சந்திப்பின் போது, ​​அடுத்த 10 ஆண்டுகளில் அமெரிக்க ராணுவ உதவியைச் சார்ந்திருப்பதை படிப்படியாகக் குறைக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதாக நெதன்யாகு அமெரிக்காவிடம் தெரிவித்தார். இதில் புதிய பாதுகாப்பு கூட்டாண்மைகள், ஏவுகணை பாதுகாப்பு திட்டங்கள் மற்றும் மேம்பட்ட ஆயுதங்களின் கூட்டு வளர்ச்சி ஆகியவை அடங்கும். மேலும், இஸ்ரேல் தனது சொந்த அடுத்த தலைமுறை போர் விமானங்களை உருவாக்கும் திட்டப் பணிகளைத் தொடங்கியுள்ளது. இது எதிர்காலத்தில் அமெரிக்காவின் F-35 ரக விமானங்களை சார்ந்திருப்பதை குறைக்கும்.  

abplive
ஜூலை 30
3 நிமிடம் படிக்க

அதிகம் படிக்கப்பட்டது

எங்கள் வாசகர்கள் பேசும் பிரபலமான கதைகள்