தமிழ் டைம்ஸ் logo
ECO India : வீடியோ பாருங்க... பரிசை அள்ளுங்க.! - முழு தகவல்
சுற்றுச்சூழல்

ECO India : வீடியோ பாருங்க... பரிசை அள்ளுங்க.! - முழு தகவல்

ஈகோ இந்தியா: இது DW மற்றும் விகடன் குழுமம் இணைந்து உருவாக்கி வரும் சுற்றுச்சூழல் தொடர் ஆகும். தொடர்ச்சியான புதுமைகள், நவீன விவசாய முறைகள் மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் தொழில்நுட்பங்கள் மூலம் இந்தியா சுற்றுச்சூழல் பிரச்னைகளை எவ்வாறு தீர்க்கிறது என்பதே இந்தத் தொடரின் நோக்கம்... சங்க காலம் விவசாய முறை - நெல் வயலில் மீன் வளர்க்கலாமா? வீடியோ பார்த்துட்டீங்களா? இதுவரைக்கும் பார்க்கவில்லை என்றாலும் பிரச்னை இல்லை. கீழே கொடுக்கப்பட்டிருக்கும் அந்த வீடியோவை ஒருமுறை பாருங்கள். பரிசை அள்ளுங்க...! வீடியோ பார்த்தாலே பரிசா என்று கேட்கிறீர்களா? வீடியோ பார்த்துட்டு, நாங்கள் கேட்கிற கேள்விக்கு பதில் சொன்னா, அதில் தேர்ந்தெடுக்கப்படுற மூன்று பேருக்கு கட்டாயம் பரிசுகள் உண்டு..!> வீடியோவில் இருந்து தான் நிச்சயம் கேள்விகள் இருக்கும்> வெற்றியாளர்களை விகடன் தேர்வுக்குழு தான் இறுதி செய்யும்.!> வீடியோவுக்கு கீழே கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்கு மறக்காம பதில் சொல்லிடுங்க மக்களே..! Loading…

vikatan
18 மார்., 05:30 AM
69 இனங்கள்; 21,091 பறவைகள்... பாசனக் குளங்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வலசை பறவைகள்!
சுற்றுச்சூழல்

69 இனங்கள்; 21,091 பறவைகள்... பாசனக் குளங்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வலசை பறவைகள்!

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற வரியினை வாழ்வாக்கிய பறவை, வலசை. பறவைகள் பல காரணங்களுக்காகப் பயணத்தை மேற்கொள்கின்றன.பறவைகள் வெப்பமான பகுதிக்கு நகரவும், உணவுக்காகவும், வேட்டையாடும் விலங்குகளிடமிருந்து தப்பிக்கவும் வலசை செல்கின்றன. ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் வெளிநாடுகளிலிருந்து இந்தியாவை நோக்கிப் பறவைகள் வலசை வருகின்றன.நெல்லை, தென்காசி, தூத்துக்குடி போன்ற பகுதிகளில் சுமார் 100 வகையான பறவைகள் இதுவரை பதிவுசெய்யப்பட்டுள்ளன. அவற்றில் முப்பதுக்கும் மேற்பட்டவை உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து குளிர்காலத்தில் வலசை வரும் பறவைகள் ஆகும்.சமீபத்தில் நெல்லையில் தாமிரபரணியைச் சுற்றியுள்ள பகுதிகளில் வலசை பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்றது. இந்தக் கணக்கெடுப்பில் திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள 68 பாசன குளங்களில் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. இவை பறவை நிபுணர்களின் வழிகாட்டுதல்களுடன், எட்டு குழுக்களாக 250-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களோடு நடத்தப்பட்டது.இந்த தாமிரபரணி பறவைகள் கணக்கெடுப்பு நிகழ்வினைச் சிறப்பாக நடத்திய அதன் ஒருங்கிணைப்பாளர் மு.மதிவாணனிடம் பேசினோம்." 68 பாசனக் குளங்களில் 69 இனங்களைச் சேர்த்து மொத்தம் 21,091 வலசை பறவைகள் பதிவாகியுள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கடம்பக்குளம் பகுதியில் அதிகபட்சமாக 45 இனங்களைச் சேர்ந்த 2, 292 பறவைகள் பதிவாகியுள்ளது.இதனைத் தொடர்ந்து வெள்ளூர் கஸ்பா (1,804 பறவைகள் – 39 இனங்கள்), பெருங்குளம் (1,531 பறவைகள் – 39 இனங்கள்), திருநெல்வேலி மாவட்டத்தின் கங்கை கொண்டான் (1,232 பறவைகள் – 32 இனங்கள்) மற்றும் மேல்புதுக்குடி சுனை (1,217 பறவைகள் – 35 இனங்கள்) ஆகிய பகுதிகள் முக்கியமானவையாக இருந்தன.சிறுநீர்க்காகம் (2,579), நாமக் கோழி (2,155), பழசைப் பறவையான மீசை ஆலா (1,148), சின்ன ஆன்றில் (1,107), நீளவால் இலைக் கோழி (1,095) மற்றும் வலசை பறவையான தகைவிலான் (1,093) அதிக எண்ணிக்கையில் பதிவாகியுள்ளது.birdsபதிவானவ பறவைகளில் 36 சதவிகிதம் வலசைப் பறவைகள் தான். இவை வடக்கு ஐரோப்பாவின் இனப்பெருக்க பகுதிகளை இந்தியா உட்பட தென்னாசியாவின் குளிர்கால ஈர நிலங்களுடன் இணைக்கும் மத்திய ஆசிய பறவை பரப்பு பாதையை (Central Asian Flyway) பயன்படுத்துகின்றன.தாமிரபரணி பாசனக் குளங்களே வலசை பறவைகளுக்கான மிக முக்கியமான வாழ்விடம். 2026 கணக்கெடுப்பில் மொத்தம் 8,912 வலசை பறவைகள் பதிவாகியுள்ளது. இதில் அச்சுறுத்தல் நிலையை அண்மித்த இனமான (Near Threatened) கருவால் மூக்கன், வரித்தலை வாத்து, ஊசிவால் வாத்து, நீலச்சிறகு வாத்து, நாமத்தலை வாத்து போன்ற வலசை வாத்தினங்களும் அடங்கும்.திருநெல்வேலி மாவட்டத்தின் வடக்கு கழுவூர், கங்கை கொண்டான், மானூர், மாறாந்தை மற்றும் தென்காசி மாவட்டத்தின் வாகைக்குளம் ஆகிய பாசனக் குளங்களில் கூளக்கடா, கருந்தலை அன்றில், சின்ன அன்றில், பாம்புத் தாரரா, இந்திய நீர்க்காகம், சிறிய நீர்க்காகம், நத்தைக்குத்தி நாரை போன்ற இனங்கள் இனப்பெருக்க நிலையில் காணப்பட்டன. இதன் மூலம், கூந்தன்குளம் போன்ற பாதுகாக்கப்பட்ட பறவைக் காப்பகங்களைத் தாண்டியும் பாசனக் குளங்கள் இனப்பெருக்கத்திற்கு மிக முக்கியமானவை என்பது தெளிவாகிறது.உள்நாட்டு மற்றும் வலசை பறவைகளுக்கு பெரிய பாசனக் குளங்கள் எவ்வளவு முக்கியமானவை என்பதை தூத்துக்குடி மாவட்டத்தில் பதிவாகியுள்ள 51 % பறவைகள் மற்றும் இனப் பல்வகைமையில் 80 சதவிகிதத்தையும் கொண்டு அறியலாம்.birdsதிடக் கழிவுகள் கொட்டுதல், குளக்கரைகளில் மது அருந்துதல், அயல் தாவர மற்றும் மீன் இனங்களின் ஆக்கிரமிப்பு, நகர்ப்புற குளங்களில் கழிவுநீர் கலப்பு போன்ற பல்வேறு அச்சுறுத்தல்கள் முக்கியமான வாழ்விடங்களைத் தொடர்ந்து பாதித்து வருகின்றன. இவை நீர்ப்பறவைகளின் வாழ்விடங்களுக்கு கடுமையான ஆபத்துகளை ஏற்படுத்துவதால், ஒருங்கிணைந்த மேலாண்மை நடவடிக்கைகள் அவசியமாகின்றன.அது மட்டுமன்றி பாசனக் குளங்கள் அழிவடைந்தாலோ, தரம் குறைந்தாலோ, சர்வதேச வலசைப் பறவைகள் வருகின்ற பாதைகள் பாதிக்கப்படும். எனவே நீர்ப் பறவைகளின் நீண்ட காலப் பாதுகாப்பிற்கு பாசனக் குளங்களின் பாதுகாப்பு, மீளுருவாக்கம் மற்றும் நிலைத்த மேலாண்மை மிகவும் முக்கியமானது மற்றும் அவசியமானது ஆகும்" என்று விளக்கினார்.

vikatan
18 மார்., 05:30 AM
ஊட்டி: அருகருகே மர்மமான முறையில் இறந்து கிடந்த 2 சிறுத்தைகள்; தீவிர விசாரணையில் வனத்துறை
சுற்றுச்சூழல்

ஊட்டி: அருகருகே மர்மமான முறையில் இறந்து கிடந்த 2 சிறுத்தைகள்; தீவிர விசாரணையில் வனத்துறை

சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த நீலகிரியில் வனவிலங்குகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது.வனவிலங்குகளின் இயற்கைக்கு மாறான இறப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக வனத்தை ஒட்டிய தனியார் தேயிலைத் தோட்டங்களில் புலி, சிறுத்தை போன்ற உயிரினங்கள் மர்மமான முறையில் இறந்து வருகின்றன.உயிரிழந்த சிறுத்தை இந்த நிலையில், ஊட்டி அருகில் உள்ள மஞ்சக்கொம்பை பகுதியில் சிறுத்தை ஒன்று அசைவற்றுக் கிடப்பதாக வனத்துறையினருக்கு உள்ளூர் மக்கள் நேற்று காலை தகவல் தெரிவித்துள்ளனர்.அந்தப் பகுதிக்கு வனத்துறையினர் குழுவாகச் சென்று ஆய்வு மேற்கொண்டதில் இரண்டு சிறுத்தைகள் அந்தப் பகுதியில் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.உடனடியாக உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் இரண்டு சிறுத்தைகளின் உடல்களையும் கூறாய்வு செய்து அதே இடத்தில் வைத்து தீயிட்டு எரித்துள்ளனர்.இந்தத் துயரம் குறித்து தெரிவித்த வனத்துறையினர், "குந்தா வனச்சரகத்திற்கு உட்பட்ட மஞ்சக்கொம்பை பகுதியில் உள்ள ஒரு தனியார் இடத்தில் சுமார் 2 வயது மதிக்கத்தக்க பெண் சிறுத்தை மற்றும் 6 வயது மதிக்கத்தக்க ஆண் சிறுத்தை என இரண்டு சிறுத்தைகள் அருகருகே மர்மமான முறையில் இறந்து கிடந்தன. உயிரிழந்த சிறுத்தை இதைப் பார்த்த உள்ளூர் மக்கள் எங்களுக்குத் தகவல் தெரிவித்தனர். இந்த இரண்டு சிறுத்தைகளும் விஷம் வைத்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என மக்கள் கூறினர். அது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம்.அதேவேளையில் சிறுத்தைகளை செந்நாய்கள் தாக்கியதற்கான அடையாளங்களையும் காண முடிகின்றன. அந்தக் கோணத்திலும் விசாரணை நடத்தி வருகிறோம். உடற்கூறாய்வு முடிவுகளின் அடிப்படையில் உண்மை தெரியவரும்" என்றனர்.ஊட்டி: கஞ்சா விற்கும் போலீஸ்; போதையில் சுழலும் ஸ்டேஷன் டூட்டி காவலர்கள்; கொந்தளிப்பில் மக்கள்

vikatan
18 மார்., 05:30 AM
`மசினகுடியின் அடையாளம்‌ மட்டுமல்ல எங்களின் செல்லக் குழந்தை' - ரிவால்டோ யானை மறைவால் கண்ணீரில் மக்கள்
சுற்றுச்சூழல்

`மசினகுடியின் அடையாளம்‌ மட்டுமல்ல எங்களின் செல்லக் குழந்தை' - ரிவால்டோ யானை மறைவால் கண்ணீரில் மக்கள்

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மசினகுடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடமாடி வந்த ஆண் யானை ஒன்றிற்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தும்பிக்கையில் காயம் ஏற்பட்டுள்ளது. குணப்படுத்த முடியாத அளவிற்கு நிரந்தர குறைபாடாக மாறியதால் உணவுக்காக குடியிருப்பு பகுதியில் தஞ்சமைடையும் நிலைக்கு தள்ளப்பட்டது. ரிவால்டோ காட்டு யானைரிவால்டோ ரிவால்டோ என உள்ளூர் மக்களால் பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டு வந்த அந்த ஆண் யானை, மிகவும் கம்பீரமாக தோற்றமளித்தாலும் மக்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படுத்தாமல் நட்பு பாராட்டி வந்தது. இதனை சாதகமாக்கிக் கொண்ட தனியார் தங்கும் விடுதிகள் சில, ரிவால்டோ யானையை சுற்றுலா பயணிகள் மத்தியில் காட்சிப் பொருளாக மாற்றி வேடிக்கை காண்பித்து லாபம் ஈட்டி வந்தன. தொடர்ந்து குடியிருப்பு பகுதியிலும் சாலை ஓரங்களிலும் உணவு தேடி வந்த இந்த யானையை தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமிற்கு கொண்டுச் செல்ல வனத்துறையினர் முடிவு செய்தனர். அதற்கான முயற்சியில் ஈடுபட்டு பிரத்யேக மரக்கூண்டிலும் ரிவால்டோ யானையை அடைத்தனர். இந்த விவகாரத்தில் தலையிட்ட சென்னை உயர்நீதிமன்றம், அந்த யானைக்கு சிகிச்சை அளித்து மீண்டும் வனப்பகுதிக்குள் விடுவிக்க வேண்டும் என 2021 - ம் ஆண்டு உத்தரவிட்டது. 8 பேர் கொண்ட நிபுணர்கள் குழுவினர் ரிவால்டோ யானை குறித்து ஆய்வு மேற்கொண்டு மீண்டும் வனப்பகுதிக்குள் விடுவித்தனர்.ரிவால்டோ யானைரேடியோ காலர் பொருத்தப்பட்ட அந்த யானையை 24 மணி நேரமும் வனத்துறையினர் கண்காணித்து வந்தனர். இந்த நிலையில், கடந்த அக்டோபர் மாதம் வனத்துறையினரின் கண்காணிப்பில் இருந்து மறைந்த ரிவால்டோ யானை, கடந்த சில நாள்களுக்கு முன்பு மீண்டும் தென்பட்டது. உடலின் பல இடங்களிலும் கடுமையான காயங்களுடன் காணப்பட்ட‌ அந்த யானைக்கு வனத்துறையினர் கடந்த மூன்று நாள்களாக சிகிச்சை அளித்து வந்துள்ளனர். ஆனால், சிகிச்சை பலனின்றி ரிவால்டோ யானை நேற்று மதியம் பரிதாபமாக உயிரிழந்தது. மசினகுடியின் அடையாளமாகவே வலம் வந்துக் கொண்டிருந்த 50 வயது ஆண் யானையின் மறைவு வனத்துறையின் களப்பணியாளர்கள் மட்டுமின்றி உள்ளூரைச் சேர்ந்த சாமானிய மக்களிடையேயும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.ரிவால்டோ யானை குறித்து உள்ளுர் மக்கள், " கடந்த 20 ஆண்டுகளாக ரிவால்டோ யானை மசினகுடி பகுதியில் நடமாடி வந்தது. இதுவரை யாருக்கும் எந்த தொந்தரவும் கொடுத்ததில்லை. ஒருபோதும் கோபமாக நடந்ததில்லை. மசினகுடியின் அடையாளம் மட்டுமில்லை. எங்களின் செல்லக் குழந்தை இந்த ரிவால்டோ. அதனால் தான் எல்லோரும் ரிவால்டோவிற்காக கண்ணீர் வடிக்கிறார்கள்" என்றனர். ரிவால்டோ எனும் யானையும் மார்க் எனும் மனிதனும்!

vikatan
18 மார்., 05:30 AM
கோவை: வயிற்றில் கருவுடன் உயிரிழந்த பெண் யானை; ரயில் மோதியதில் மற்றொரு யானைக்கும் சோகம்
சுற்றுச்சூழல்

கோவை: வயிற்றில் கருவுடன் உயிரிழந்த பெண் யானை; ரயில் மோதியதில் மற்றொரு யானைக்கும் சோகம்

கோவை மாவட்டம், மதுக்கரை பகுதி நவக்கரை அருகே பெண் காட்டு யானை உயிரிழந்திருப்பதாக வனத்துறைக்குத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர்.பெண் யானைமருத்துவக் குழுவினர் யானைக்குப் பிரேதப் பரிசோதனை செய்தனர். அதில் யானையின் உடலில் எந்தக் காயங்களும் இல்லை என்று தெரியவந்தது. மேலும் இறந்த பெண் யானை கருவுற்ற நிலையில் உயிரிழந்ததும் தெரியவந்துள்ளது.அந்த யானையின் வயிற்றில் இருந்து 13 மாதங்களான சிசு எனக் கண்டறியப்பட்டது. இதே யானைதான் கடந்த வாரம் குப்பனூர் பகுதியில் சேற்றில் சிக்கியது. உயிரிழந்த யானைக்குச் சுமார் 50 வயதிருக்கும். மேலும் யானையின் உடல் உறுப்புகள் பல செயலிழந்துவிட்டன.ஊட்டி: யானை - மனித எதிர்கொள்ளல்களைத் தடுக்க AI; "புதிய மைல்கல்" - வனத்துறை நம்பிக்கைகோவை அதனால்தான் கடந்த சில வாரங்களாக உணவு உட்கொள்ளாமல் இருந்துள்ளது. வயிற்றில் குட்டியுடன் பெண் யானை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தமிழ்நாடு – கேரளா எல்லையில் நடைபெற்ற மற்றொரு சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், வாளையாறு அருகே உள்ள வட்டப்பாறை பகுதியில் இன்று அதிகாலை 4 மணியளவில் யஷ்வந்த்பூர் ரயில் வேகமாகச் சென்றுள்ளது.யானைஅப்போது அந்த வழியே ஒரு யானைக் கூட்டம் தண்டவாளத்தைக் கடந்துள்ளது. இதில் சுமார் 4 வயது மதிக்கத்தக்க குட்டி ஆண் யானை மீது ரயில் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளது.தென்காசி: யானை - மனித மோதல்களைத் தடுக்க பூர்வீகத் தாவரங்கள் நடவு; வனத்துறை திட்டத்தின் பின்னணி என்ன?

vikatan
18 மார்., 05:30 AM
ECO India : இறால் பண்ணை முதல் Pizza வரை... வீடியோ பாருங்க... பரிசை அள்ளுங்க.! - இந்த வாரம் தயாரா?
சுற்றுச்சூழல்

ECO India : இறால் பண்ணை முதல் Pizza வரை... வீடியோ பாருங்க... பரிசை அள்ளுங்க.! - இந்த வாரம் தயாரா?

ஈகோ இந்தியா: இது DW மற்றும் விகடன் குழுமம் இணைந்து உருவாக்கி வரும் சுற்றுச்சூழல் தொடர் ஆகும். தொடர்ச்சியான புதுமைகள், நவீன விவசாய முறைகள் மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் தொழில்நுட்பங்கள் மூலம் இந்தியா சுற்றுச்சூழல் பிரச்னைகளை எவ்வாறு தீர்க்கிறது என்பதே இந்தத் தொடரின் நோக்கம்...இறால் பண்ணை முதல் Pizza வரை - பூச்சிகள் புரத உணவா? | Future Food | Eco India S2 EP-4 Vikatan DWஇந்த வீடியோவை பார்த்துட்டீங்களா.... அப்போ இங்க க்ளிக் பண்ணுங்க... CLICK HEREஇதுவரைக்கும் பார்க்கவில்லை என்றாலும் பிரச்னை இல்லை. கீழே கொடுக்கப்பட்டிருக்கும் அந்த வீடியோவை ஒருமுறை பாருங்கள். பரிசை அள்ளுங்க...!வீடியோ பார்த்தாலே பரிசா என்று கேட்கிறீர்களா? வீடியோ பார்த்துட்டு, நாங்கள் கேட்கிற கேள்விக்கு பதில் சொன்னா, அதில் தேர்ந்தெடுக்கப்படுற மூன்று பேருக்கு கட்டாயம் பரிசுகள் உண்டு..!> வீடியோவில் இருந்து தான் நிச்சயம் கேள்விகள் இருக்கும்> வெற்றியாளர்களை விகடன் தேர்வுக்குழு தான் இறுதி செய்யும்.!> வீடியோவுக்கு கீழே கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்கு மறக்காம பதில் சொல்லிடுங்க மக்களே..! Loading…

vikatan
18 மார்., 05:30 AM
ECO India : வீடியோ பார்த்து பரிசை வென்றவர்கள் இவர்கள்.!
சுற்றுச்சூழல்

ECO India : வீடியோ பார்த்து பரிசை வென்றவர்கள் இவர்கள்.!

ஈகோ இந்தியா: இது DW மற்றும் விகடன் குழுமம் இணைந்து உருவாக்கி வரும் சுற்றுச்சூழல் தொடர் ஆகும். தொடர்ச்சியான புதுமைகள், நவீன விவசாய முறைகள் மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் தொழில்நுட்பங்கள் மூலம் இந்தியா சுற்றுச்சூழல் பிரச்னைகளை எவ்வாறு தீர்க்கிறது என்பதே இந்தத் தொடரின் நோக்கம்...இதன் வீடியோக்களை பார்த்து, அதில் இருந்து கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளித்து அதில் வெற்றியாளர்களை தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பரிசு அளிக்கப்படும் என தெரிவித்திருந்தோம. முதல் வீடியோவான சங்க காலம் விவசாய முறை - நெல் வயலில் மீன் வளர்க்கலாமா? வீடியோவை பார்த்து அது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்து வெற்றியாளர்களாக தேர்வானவர்களை பார்க்கலாம். முன்னதாக இந்த வார போட்டியில் பங்குபெற.. CLICK HEREபரிசு...

vikatan
18 மார்., 05:30 AM
பிடிபட்ட 50 சிறுத்தை புலிகள்; அம்பானியின் வந்தாரா உயிரியல் மையத்திற்கு அனுப்பும் மகாராஷ்டிரா அரசு!
சுற்றுச்சூழல்

பிடிபட்ட 50 சிறுத்தை புலிகள்; அம்பானியின் வந்தாரா உயிரியல் மையத்திற்கு அனுப்பும் மகாராஷ்டிரா அரசு!

மகாராஷ்டிராவில் சிறுத்தை புலிகள் அடிக்கடி பொதுமக்கள் வசிக்கும் பகுதிக்குள் வந்து இரைதேடுகின்றன. இதனால் அவற்றை வனத்துறை அதிகாரிகள் பிடித்து கூண்டில் அடைத்து வைத்திருக்கின்றனர். அவ்வாறு பிடிக்கப்படும் சிறுத்தை புலிகள் பின்னர் வனப்பகுதியில் விடப்படுவது வழக்கம். ஆனால் அவ்வாறு பிடிபட்ட சிறுத்தை புலிகளை மாநில வனத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கூண்டில் அடைத்து வைத்திருக்கின்றனர். அவற்றை தொடர்ந்து பராமரிப்பதில் அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அடைத்து வைக்கப்பட்டு இருக்கும் சிறுத்தை புலிகளில் 50ஐ குஜராத்தில் இருக்கும் அம்பானியின் வந்தாரா உயிரியல் மையத்திற்கு அனுப்ப அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக மாநில வனத்துறை அமைச்சர் கணேஷ் நாயக் வெளியிட்டுள்ள எக்ஸ்தள பதிவில், ``கூண்டில் அடைக்கப்பட்டுள்ள சில சிறுத்தைபுலிகள் குஜராத்தில் உள்ள ஜாம்நகர் வந்தாரா உயிரியல் மையத்திற்கு அனுப்பப்படும்" என்று குறிப்பிட்டுள்ளார். வந்தாரா விலங்குகள் மையம்மனித-விலங்கு மோதலை குறைக்க பிடிபட்ட 67 சிறுத்தைகள் பல்வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்படும் என்றும், அவற்றில் 50 சிறுத்தைகள் வந்தாராவிற்கு மாற்றப்படும் என்றும் வனத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த முடிவை விலங்குகள் நல ஆர்வலர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர். இது குறித்து நாண்டெட்டை சேர்ந்து விலங்குகள் நல ஆர்வலர் நிதின் கூறுகையில், ''சிறுத்தைபுலிகளை இவ்வாறு உயிரியல் பூங்காவிற்கு அனுப்புவது தவறு. இந்த வேட்டையாடும் சிறுத்தை புலி இனங்களை அதன் சொந்த வன வாழ்விடங்களில் வளர அனுமதிக்கவேண்டும். அவற்றை ஒரு சிறிய மிருகக்காட்சிசாலை அல்லது வனவிலங்கு மையத்திற்கு அனுப்புவது இதற்கு தீர்வாகாது. கூண்டுகளில் அடைக்கப்பட்டுள்ள 21 சிறுத்தைபுலிகளை வனப்பகுதியில் விடும்படி கடந்த 3 மாதங்களாக வனத்துறை அதிகாரிகளிடம் கோரி வருகிறேன். ஆனால் அவர்கள் அதற்கு தயாராக இல்லை. வனப்பகுதியை மனிதர்கள் ஆக்கிரமிப்பதால் வனவிலங்குகள் வாழ போதிய இடம் கிடைப்பதில்லை''என்று தெரிவித்தார். வனசக்தி என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருபவரும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான டி.ஸ்டாலின் இது குறித்து கூறுகையில்,''மனித-விலங்கு மோதல் பிரச்சினையைத் தவிர, சிறுத்தை புலிகள் காடுகளின் இயற்கையான பாதுகாவலர்கள் என்பதால், காடுகளுக்குள் சுதந்திரமாக சுரங்க பணிகளை மேற்கொள்ள பல சிறுத்தைகள் அங்கிருந்து வெளியேற்றப்படுவதாக உணர்கிறேன். முன்னதாக, சிறுத்தைகளை கருத்தடை செய்ய ஒரு வினோதமான திட்டம் இருந்தது" என்று கூறினார்.

vikatan
18 மார்., 05:30 AM
ECO India : வீடியோ பார்த்து பரிசை வென்றவர்கள் இவர்கள்.! | EP 03
சுற்றுச்சூழல்

ECO India : வீடியோ பார்த்து பரிசை வென்றவர்கள் இவர்கள்.! | EP 03

ஈகோ இந்தியா: இது DW மற்றும் விகடன் குழுமம் இணைந்து உருவாக்கி வரும் சுற்றுச்சூழல் தொடர் ஆகும். தொடர்ச்சியான புதுமைகள், நவீன விவசாய முறைகள் மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் தொழில்நுட்பங்கள் மூலம் இந்தியா சுற்றுச்சூழல் பிரச்னைகளை எவ்வாறு தீர்க்கிறது என்பதே இந்தத் தொடரின் நோக்கம்...இதன் வீடியோக்களை பார்த்து, அதில் இருந்து கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளித்து அதில் வெற்றியாளர்களை தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பரிசு அளிக்கப்படும் என தெரிவித்திருந்தோம. மூன்றாம் வீடியோவான விவசாயிகள், மீனவர்கள் நம்பும் Weather Influencers | Pradeep John TN Weatherman | Eco India S2 EP-3 வீடியோவை பார்த்து அது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்து வெற்றியாளர்களாக தேர்வானவர்களை பார்க்கலாம். முன்னதாக இந்த வார போட்டியில் பங்குபெற.. CLICK HEREபரிசு...

vikatan
18 மார்., 05:30 AM

சமீபத்திய செய்திகள்

சமீபத்திய புதுப்பித்தல்கள்

திருப்பத்தூர் மாவட்டப் பறவையாக இந்திய `சாம்பல் நிற இருவாச்சி' அறிவிப்பு!
சுற்றுச்சூழல்

திருப்பத்தூர் மாவட்டப் பறவையாக இந்திய `சாம்பல் நிற இருவாச்சி' அறிவிப்பு!

vikatan
Mar 183 நிமிடம் படிக்க
'தண்ணீர் பாட்டிலில் மைக்ரோ பிளாஸ்டிக்'- உணவுப் பாதுகாப்பு ஆணையம் தகவல்; நீதிமன்றத்தின் உத்தரவு என்ன?
சுற்றுச்சூழல்

'தண்ணீர் பாட்டிலில் மைக்ரோ பிளாஸ்டிக்'- உணவுப் பாதுகாப்பு ஆணையம் தகவல்; நீதிமன்றத்தின் உத்தரவு என்ன?

vikatan
Mar 183 நிமிடம் படிக்க
நீலகிரி: பள்ளத்தில் சரிந்த யானை; இரண்டு தந்தங்களை மட்டும் மீட்ட வனத்துறை; என்ன நடந்தது?
சுற்றுச்சூழல்

நீலகிரி: பள்ளத்தில் சரிந்த யானை; இரண்டு தந்தங்களை மட்டும் மீட்ட வனத்துறை; என்ன நடந்தது?

vikatan
Mar 183 நிமிடம் படிக்க
ECO India : வீடியோ பார்த்து பரிசை வென்றவர்கள் இவர்கள்.! | EP 04
சுற்றுச்சூழல்

ECO India : வீடியோ பார்த்து பரிசை வென்றவர்கள் இவர்கள்.! | EP 04

ஈகோ இந்தியா: இது DW மற்றும் விகடன் குழுமம் இணைந்து உருவாக்கி வரும் சுற்றுச்சூழல் தொடர் ஆகும். தொடர்ச்சியான புதுமைகள், நவீன விவசாய முறைகள் மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் தொழில்நுட்பங்கள் மூலம் இந்தியா சுற்றுச்சூழல் பிரச்னைகளை எவ்வாறு தீர்க்கிறது என்பதே இந்தத் தொடரின் நோக்கம்...இதன் வீடியோக்களை பார்த்து, அதில் இருந்து கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளித்து அதில் வெற்றியாளர்களை தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பரிசு அளிக்கப்படும் என தெரிவித்திருந்தோம. நான்காம் எபிசொடு வீடியோவை பார்த்து அது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்து வெற்றியாளர்களாக தேர்வானவர்களை பார்க்கலாம். முன்னதாக இந்த வார போட்டியில் பங்குபெற.. CLICK HEREபரிசு...ECO India

vikatan
Mar 18, 05:30 AM
5 நிமிடம் படிக்க

விளம்பர இடம்

உங்கள் விளம்பரத்தை இங்கே காட்சி செய்யலாம்

மேலும் செய்திகள்

தமிழ்நாடு முழுவதும் மற்றும் அதற்கு அப்பால் இருந்து சமீபத்திய கதைகளுடன் புதுப்பித்த நிலையில் இருங்கள்

சிங்கம் கூட சாதுதான்; 'இந்த 4' விலங்குகள் கிட்ட மனிதர்கள் மாட்டுனா அவ்வளவுதான்!
சுற்றுச்சூழல்

சிங்கம் கூட சாதுதான்; 'இந்த 4' விலங்குகள் கிட்ட மனிதர்கள் மாட்டுனா அவ்வளவுதான்!

ஒரு காட்டிற்குள் செல்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். திடீரென்று நம் முன் ஒரு விலங்கு வருகிறது. என்ன செய்வோம்? 'அல்லுவிட்ரும்' அல்லவா... ஆனால், எல்லா வனவிலங்குகள் பார்த்தும் பயப்பட வேண்டாம் என்றும், வெறும் 4 விலங்குகள் தான் மனிதனை வேட்டையாடக் கூடும் என்று கூறுகிறார்கள். 'ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா?' என்ன சேதி என்று தெரிந்துகொள்வோம். வாங்க...பொதுவாக வனவிலங்குகள் இயற்கையாகவே வேட்டையாடும் குணம் கொண்டவை. ஆனால் எல்லா விலங்குகளும் எப்போதும் மனிதர்களைத் தாக்குவதில்லை - பயந்து ஓடிவிடும் அல்லது கண்டுகொள்ளாமல் சென்றுவிடும். Forrest Galanteஈரான்: `இந்திய விருந்தாளி மீது தாக்குதல்; இருந்தும் மோடி மௌனம்' - கார்கேயின் `3' கேள்விகள்!அவற்றைத் தொந்தரவு செய்தாலோ, அதற்குப் பசி மிகுந்தாலோ, வேறு உணவு கிடைக்காத நிலையிலோ மட்டுமே மனிதர்களை இரையாக்கும். ஆனால் இந்த நான்கு விலங்குகள் மட்டும் வேறு - இவை மனிதர்களை தங்கள் உணவுப் பட்டியலில் இயல்பாகவே சேர்த்து வைத்திருக்கின்றன. இவை மனிதர்களைப் பார்த்தால் கண்டிப்பாக வேட்டையாடும். ஏனெனில் இவை மனிதர்களை இரையாகப் பார்க்கின்றன.இதை ஆராய்ச்சி செய்து தெளிவாகக் கூறியவர் Forrest Galante - அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல வனவியல் ஆராய்ச்சியாளர், சாகசப் பயணி மற்றும் வனவிலங்கு பாதுகாப்பாளர். அவர் Extinct or Alive என்ற நிகழ்ச்சி மூலம் அழிந்துவிட்டதாகக் கருதப்படும் உயிரினங்களைத் தேடி உலகின் மிக ஆபத்தான பகுதிகளுக்குச் சென்றுள்ளார். பல நேர்காணல்களில் மனிதர்களை தீவிரமாக இரையாகக் கருதும் நான்கு விலங்குகள் மட்டுமே உள்ளன என்று அவர் கூறியுள்ளார். இந்தக் கருத்து, அவர் நேரடியாகக் கள ஆய்வுகளில் பெற்ற அனுபவங்கள் மற்றும் பார்வைகளின் அடிப்படையிலானது என்பதும் குறிப்பிடத்தக்கது.அந்த நான்கு விலங்குகள்... நைல் முதலை (Nile Crocodile) — ஆப்பிரிக்காவின் ஆறுகள் மற்றும் ஏரிகளில் வாழும் இது மிகவும் ஆபத்தான முதலைகளில் ஒன்று. மனிதர்களை ஸ்டாக் (stalk) செய்து காத்திருந்து தாக்கும். நைல் முதலைசிறுத்தைஅலோபதி, சித்தா மருந்துகளை ஒன்றாக சாப்பிடலாமா? - சிறுநீரகம், கல்லீரலுக்கு பாதிப்பு ஏற்படுமா? | Q&Aஒரே இடத்தில் தண்ணீரை மீண்டும் மீண்டும் பயன்படுத்தினால் கண்டிப்பாகத் தாக்குதல் நடத்தும். இது ஆண்டுக்கு நூற்றுக்கணக்கான மனித உயிரிழப்புகளுக்குக் காரணமாகிறதாம்.சிறுத்தை (Leopard) — மிகவும் தந்திரமானவை. இரவில் மரங்களில் ஏறி ஒளிந்து கொண்டு மனிதர்களை எளிதாக வேட்டையாடும். இந்தியா, ஆப்பிரிக்கா போன்ற இடங்களில் 'மேன்-ஈட்டர்' சிறுத்தைகள் பல உள்ளன - மனிதர்களை எளிதான இரையாகக் கருதித் தொடர்ந்து தாக்குமாம்.புலி (Tiger) — உலகின் மிகப்பெரிய பூனை வகை விலங்கு. சில புலிகள் (குறிப்பாக இந்தியாவின் சண்டீர் புலிகள் போன்றவை) மனிதர்களை வேட்டையாடிப் பழக்கப்பட்டுள்ளன. அவை மனிதர்களை எதிரியாக அல்ல, உணவாகவே பார்க்கிறதாம்.பனிக்கரடி (Polar Bear) — ஆர்க்டிக் பகுதியில் வாழும் இது மிகக் கொடூரமான வேட்டையாடி. உணவுக் குறைபாடு உள்ள இடங்களில் மனிதர்களை இயல்பான இரையாகப் பார்க்கும். இதனிடம் மாட்டிக்கொண்டால் அதைவிட மோசமான மரணம் இல்லை. புலிபனிக்கரடிSpain: ஈரான் போரில் அமெரிக்காவிற்கு 'நோ' சொல்லும் ஒரே ஐரோப்ப நாடு - காரணமோ 'சூப்பர்'ஏனெனில் இது மிகப்பெரிய வலிமை, வேகம் மற்றும் கொடூரமான வேட்டை முறையைக் கொண்டது.இந்த நான்கு விலங்குகள் மட்டுமே மனிதர்களை தீவிரமாகத் தேர்ந்தெடுத்து வேட்டையாடும் என்று கலாண்டே கூறுகிறார். மற்ற விலங்குகள் (சிங்கம், ஹைனா, உப்புநீர் முதலை போன்றவை) வாய்ப்பு கிடைத்தால் தாக்கலாம். ஆனால் இவைபோல மனிதர்களைத் தொடர்ந்து இரையாகக் கருதுவதில்லை. ஆஹா... அலர்ட் ஆகுடா ஆறுமுகம்!IRIS Dena: '2-ம் உலகப்போருக்கு பின் முதன்முறை' இந்தியா வந்து திரும்பிய ஈரான் கப்பலை அழித்த அமெரிக்கா

vikatan
18 மார்.
3 நிமிடம் படிக்க
விருதுநகர்: நிலநடுக்கத்தால் வீதிக்கு வந்த மக்கள்; ரிக்டர் அளவுகோளில் 3.0 ஆகப் பதிவு; என்ன நடந்தது?
சுற்றுச்சூழல்

விருதுநகர்: நிலநடுக்கத்தால் வீதிக்கு வந்த மக்கள்; ரிக்டர் அளவுகோளில் 3.0 ஆகப் பதிவு; என்ன நடந்தது?

தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், கிருஷ்ணன் கோவில், கம்மாபட்டி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று (29்-ம் தேதி) இரவு திடீரென நில அதிர்வு ஏற்பட்டது. இதன் காரணமாக வீடுகள், கட்டடங்கள் குலுங்கியதால், பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சம் அடைந்துள்ளனர்.நிலநடுக்கம்பெரும்பாலான பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறி வீதியில் வந்து அச்சத்துடன் நிற்கும் சூழல் ஏற்பட்டது. சில வீடுகளில் பாத்திரங்கள் கீழே விழுந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. சிவகாசி நகரில் இருந்து மேற்கே 2.3 கிமீ தொலைவில் 10 கிமீ ஆழத்தில் ரிக்டர் அளவில் 3.0 ஆக நில அதிர்வு பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கம், சிவகாசி நகரை மையமாகக் கொண்டு பதிவானதாகக் கூறப்படுகிறது.விருதுநகர்: பொன்மஞ்சள் விரிப்பாய் பூத்துக் குலுங்கும் சூரியகாந்தி மலர்கள்! - Scenic Photo Album

vikatan
18 மார்.
3 நிமிடம் படிக்க
விஐடி மொரீஷியஸ் சார்பில் தொழில்நுட்ப ஐடியாத்தான் போட்டி! - 5 நாடுகளை சேர்ந்த 1600 பேர் பங்கேற்பு
Trending

விஐடி மொரீஷியஸ் சார்பில் தொழில்நுட்ப ஐடியாத்தான் போட்டி! - 5 நாடுகளை சேர்ந்த 1600 பேர் பங்கேற்பு

வேலூர் விஐடி மொரீஷியஸ் சார்பில் தொழில்நுட்ப ஐடியாத்தான் போட்டி இணையவழியில் நடத்தப்பட்டது.இந்த நிகழ்வு பொறியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் நிறுவனத்துடன் இணைந்து நடத்தப்பட்டது. இதில், உலகம் முழுவதும் இருந்து 3,500-க்கும் மேற்பட்ட புதுமை யோசனைகள் சமர்ப்பிக்கப்பட்டன.இரண்டு நாள் நிகழ்வில் மொரீஷியஸ், இந்தியா, மலேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய 5 நாடுகளைச் சேர்ந்த 297 கல்வி நிறுவனங்களில் இருந்து 1,612 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர்.உலகளாவிய ஒத்துழைப்பு, புத்தாக்கத்தையும் ஊக்குவிக்கும் வகையில் நடைபெற்ற ஐடியாத்தான் போட்டியில் இறுதிச் சுற்றில் 200 அணிகள் தொழில்முறை வல்லுநர்கள் மற்றும் கல்வியாளர்களைக் கொண்ட நடுவர் குழுவிடம் தங்கள் படைப்புகளை வழங்கினர். விஐடி மொரீஷியஸ் சார்பில் இணையவழியில் நடைபெற்ற தொழில்நுட்ப ஐடியாத்தான் நிகழ்வில் “நவீன மழை உணர் தானியங்கி நீர்ப்பாசன முறை” குறித்த புதுமை படைப்பை சமர்ப்பித்த மாணவிகள். மேலும், 2026 ஆம் ஆண்டுக்கான இளநிலை பொறியியல் (B.Eng. Hons) பட்ட படிப்புகளுக்கான கல்வி உதவித்தொகை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

vikatan
18 மார்.
3 நிமிடம் படிக்க
ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் அறிமுகப்படுத்துகிறது ஸ்வர்ண யுகாதி! - தங்கத்தின் பிரகாசமான புதிய தொடக்கம்!
Trending

ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் அறிமுகப்படுத்துகிறது ஸ்வர்ண யுகாதி! - தங்கத்தின் பிரகாசமான புதிய தொடக்கம்!

1964 முதல் பாரம்பரியத்தில் வேரூன்றிய ஜிஆர்டி ஜூவல்லர்ஸ், தலைமுறைகளை கடந்து வந்த நம்பிக்கையின் சின்னமாக திகழ்கிறது. நுணுக்கமான கைவினைத் திறனும், நிலையான மதிப்புகளுக்கு காரணமாக புகழ்பெற்ற இந்த நிறுவனம்... தங்கம், வைரம், பிளாட்டினம், வெள்ளி மற்றும் நத்தின நகைகளின் நேர்த்தியான கலெக்க்ஷன்களை வழங்குகிறது. இந்தியாவில் ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் மற்றும் சிங்கப்பூரில் ஒரு சர்வதேச ஷோரூம் என 66-க்கும் மேம்பட்ட ஷோரூம்களை ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் கொண்டுள்ளது. தொடர்ந்த கலையழகும் நம்பகத்தன்மையும் கொண்ட பாரம்பரியத்தை கொண்டாடி, ஒவ்வொரு ஆண்டும் சிறப்பான திருவிழா சலுகைகளால் வாடிக்கையாளர்களை மகிழ்வித்து வருகிறது.தனது நீண்டகால பண்டிகை பாரம்பரியத்தை தொடர்ந்து, தன்னளிந்திய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான நன்மைகளுடன் புதிய தொடக்கங்களின் பருவத்தை கொண்டு வரும் வகையில், ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் அதன் சிறப்பு யுகாதி திருவிழாவான 'ஸ்வர்ண யுகாதி' என்னும் பிரசாரத்தை அறிவித்துள்ளது. செழிப்பு மற்றும் புதிய தொடக்கங்களை குறிக்கும் பண்டிகையாக பரவலாக கொண்டாடப்படும் யுகாதி, தங்கத்தில் முதலீடு செய்தல் தொடங்கி கொண்டாட ஒரு சிறப்பு நேரமாக கருதப்படுகிறது. இந்த 'ஸ்வர்ண யுகாதி' சலுகைகளின் ஒரு பகுதியாக, தங்க நகை வாங்கும் போது ஒரு கிராமுக்கு ரூ 250 குறைவும், வாடிக்கையாளர்கள் தங்களுடைய பழைய தங்கத்தை மாற்றும்போது ஒரு கிராமுக்கு ரூ 100 கூடுதலாக பெறுவார்கள். மேலும் வாடிக்கையாளர்கள் வைரம் மற்றும் அன்கட் டைமண்ட் மதிப்பில் (சால்டிட்டேர்களை தவிர)* 12.5% தள்ளுபடியும், வெள்ளி பொருட்களின் சேதாரத்தில் (VA) 25% தள்ளுபடியும், மற்றும் நகைகளின் MRP-யில் 10% தள்ளுபடியும் பெறுவார்கள். இந்த சலுகைகள் ஒரு குறிய காலத்திற்கு மட்டுமே வழங்கப்படுகிது என்பது குறிப்பிடத்தக்கது.ஜிஆர்டி ஜூவல்லர்ஸின் நிர்வாக இயக்குநர் திரு. ஜி.ஆர். 'ஆனந்த்' அனந்தப்பத்மநாபன் அவர்கள், இது குறித்து கூறுகையில்:"எங்கள் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்காக இந்த யுகாதி தினத்தையொட்டி 'ஸ்வர்ண யுகாதி' என்னும் திருவிழாவை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மிகுந்த மகிழ்சி அடைகிறோம். இந்த சிறப்பு நிகழ்வை முன்னிட்டு, சிறந்த மதிப்பை வழங்கும் வகையில் பிரத்யேக பண்டிகை சலுகைகளை நாங்கள் அறிமுகப்படுத்தியுள்ளோம். யுகாதி போன்ற திருவிழாகளின் மூலம், எங்கள் வாடிக்கையாளர்களுடன் எங்கள் அன்பான சேவையை மனமார பகிர்ந்து கொள்ளும் உறவை, நாங்கள் தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறோம்." மேலும், மற்றொரு நிர்வாக இயக்குநர் திரு. ஜி.ஆர். ராதாகிருஷ்ணன் அவர்கள் இது குறித்து கூறுகையில்: "இந்த யுகாதியை எங்களுடன் 'ஸ்வர்ண யுகாதி' யாகக் கொண்டாடவும், செழிப்பை உங்களின் இல்லங்களில் வரவேற்கவும், எங்கள் அன்பான வாடிக்கையாளர்கள் அனைவரையும் அழைக்கிறோம். இந்த உற்சாகமான தருணத்தில், எங்கள் ஷோரூம்களில் உங்களின் நேரடி அல்லது லைவ் வீடியோ ஷாப்பிங் மூலம், grtjewels.com வழியாக, நீங்கள் வீட்டிலிருந்தே உங்களுக்கு பிடித்தமான நகைகளை தேர்ந்தெடுத்து வாங்கலாம் என்பதை நினைவு கூற நான் கடமைப்பட்டுள்ளேன். மேலும், இன்றைய டிஜிட்டல் காலத்திற்கு ஏற்ப, பாதுகாப்பாக நீங்கள் தங்கத்தில் முதலீடு செய்ய 'ஜிஆர்டி - இன்ஸ்டாகோல்ட்' என்ற ஸ்மார்ட் டிஜிட்டல் தங்க சேமிப்பு திட்டத்தையும் நாங்கள் அறிமுகப்படுத்தியுள்ளோம் என்பதை மகிழ்சியுடன் தெரிவித்து கொள்கிறேன். அனைவருக்கும் யுகாதி நல்வாழ்த்துகள். " என்றார்.

vikatan
18 மார்.
3 நிமிடம் படிக்க
CSK: `தோனி சொன்ன அட்வைஸ்; நான் அடுத்த ஜடேஜாவா?' - ரூ.14.2 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட பிரசாந்த் வீர்
cricket

CSK: `தோனி சொன்ன அட்வைஸ்; நான் அடுத்த ஜடேஜாவா?' - ரூ.14.2 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட பிரசாந்த் வீர்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சமீபத்தில் நடைபெற்ற 2026 ஐபிஎல் ஏலத்தில் 20 வயதுடைய இளம் வீரர் பிரசாந்த் வீரை சுமார் 14.2 கோடி ரூபாய்க்கு வாங்கியது. இவ்வளவு பெரிய தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட பிரசாந்த் வீர், தோனியுடனான தனது முதல் சந்திப்பு குறித்து சுவாரஸ்யமான தகவலைப் பகிர்ந்திருக்கிறார். தோனி கொடுத்த அட்வைஸ்'Sports Star'-ன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பிரசாந்த் வீர், "மஹி பாய் என்னை முதலில் சந்தித்தப்போது கிரிக்கெட் பற்றி அதிகம் பேசவில்லை. ஐபிஎல் ஒப்பந்தம் செய்த பிறகு எனக்கு கிடைத்த பணத்தை 'தேவையில்லாமல் செலவு செய்யாதே சேமித்து வை' என்று அட்வைஸ் செய்தார்" என்றிருக்கிறார். பிரசாந்த் வீர் ஜடேஜா இடத்தை பிடிப்பீர்களா?தொடர்ந்து அந்த நிகழ்ச்சியில் நீங்கள் ஜடேஜா இடத்தை பிடிப்பீர்களா? என்று கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலளித்த அவர், " ஜடேஜாவின் இடத்தை நான் பிடிக்க வேண்டும் என நினைத்தால், அது எனக்கு அழுத்தத்தை தான் அதிகம் கொடுக்கும். அவர் சிஎஸ்கே அணிக்காகவும், இந்திய அணிக்காகவும் செய்ததை ஈடுசெய்வது அவ்வளவு எளிதான விசயம் கிடையாது. நான் என்னிடம் என்ன இருக்கிறதோ, எது என்னை இந்த இடத்திற்கு அழைத்துவந்ததோ அதை சரியாக செய்யவே முயற்சிக்கிறேன்" என்று கூறியிருக்கிறார். எந்த சூழ்நிலையிலும் பேட்டிங் செய்ய முடியும்!என்னால் எந்த சூழ்நிலையிலும் பேட்டிங் செய்ய முடியும். நான் ஓப்பனிங் செய்ய வேண்டிய அவசியம் இல்லாத வரை, வேறு எந்த இடத்திலும் என்னால் சிறந்ததைச் செய்ய முடியும். எனக்கு இது முதல் ஐபிஎல் என்பதால் இதற்கு முன்பு நான் இதுபோன்ற பயிற்சி அமர்வுகளில் ஈடுபட்டதில்லை.பிரசாந்த் வீர், கார்த்திக் சர்மா இங்குள்ள சூழலும் தீவிரமும் வித்தியாசமாக இருக்கிறது. ஆனால் அணியில் இருக்கும் வீரர்கள் அனைவரும் ஆதரவாக இருக்கின்றனர். நான் இங்கே இருப்பது, எனக்கும், என் குடும்பத்திற்கும், என் கிராமத்திற்கும் கிடைத்த பாக்கியம்" என்று பேசியிருக்கிறார்.

vikatan
18 மார்.
3 நிமிடம் படிக்க
UPSC / TNPSC: கோயம்புத்தூரில் இலவசப் பயிற்சி முகாம் - அனுமதி இலவசம்!
Career

UPSC / TNPSC: கோயம்புத்தூரில் இலவசப் பயிற்சி முகாம் - அனுமதி இலவசம்!

'UPSC/TNPSC குரூப் -1, 2 -தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில் ஆனந்த விகடனும் King Makers IAS அகாடமியும் இணைந்து கோயம்புத்தூரில் ஓர் இலவசப் பயிற்சி முகாமை நடத்தத் திட்டமிட்டிருக்கிறது. 'நீங்களும் ஆகலாம் IAS' என்ற தலைப்பிலான இந்த இலவசப் பயிற்சி முகாம் வருகிற ஏப்ரல் 5 ஆம் தேதி கோயம்புத்தூர் அவிநாசி சாலையில் உள்ள SITRA ஆடிட்டோரியத்தில் நடக்க இருக்கிறது. அதனுடன் ஒரு வருட இலவசப் பயிற்சிக்கான ஸ்காலர்ஷிப் தேர்வும் நடக்கிறது. UPSC / TNPSC இலவசப் பயிற்சி முகாம் இந்த நிகழ்வில் திரு. ஆதில் பெய்க் (சிவில் சர்வீஸஸ் தேர்வு பயிற்சியாளர் - King Makers IAS அகாடமி), King Makers IAS அகாடமியின் இயக்குநர் சத்யஶ்ரீ பூமிநாதன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு போட்டித் தேர்வுகள் குறித்த ஆலோசனைகளை வழங்க உள்ளார்கள். இதில் டாக்டர். சி. சைலேந்திர பாபு, (ஐபிஎஸ் (ஓய்வு) தமிழ்நாடு முன்னாள் டிஜிபி/ காவல் துறை தலைவர்) சிறப்புரை ஆற்றயிருக்கிறார். ஆனந்த விகடன், King Makers IAS அகடாமி நிறுவனத்துடன் இணைந்து தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இதுபோன்ற இலவசப் பயிற்சி முகாமினைப் பல ஆண்டுகளாக நடத்தி வருவதன் மூலம் எண்ணற்ற போட்டித் தேர்வாளர்கள் பயனடைந்து வருகிறார்கள். UPSC / TNPSC இலவசப் பயிற்சி முகாம் இந்தப் பயிற்சி முகாமிற்கு முன்பதிவு செய்ய 044- 66802997 என்ற எண்ணிற்கு மிஸ்ட்கால் கொடுக்கவும். அப்படி இல்லையென்றால் இந்த முகாமில் கலந்துகொள்ள விரும்புகின்றவர்கள் கீழ்க்கண்ட விண்ணப்பத்தில் பதிவு செய்து பயன்பெறலாம்.Loading…

vikatan
18 மார்.
3 நிமிடம் படிக்க
தேர்தல் 2026 - கோவையில் கொட்டும் பரிசுகள் - Vikatan Exclusive! | Photo Album
இந்தியா

தேர்தல் 2026 - கோவையில் கொட்டும் பரிசுகள் - Vikatan Exclusive! | Photo Album

திமுக,அதிமுக அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு வழங்கியுள்ள பரிசுகள்திமுக,அதிமுக அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு வழங்கியுள்ள பரிசுகள்திமுக,அதிமுக அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு வழங்கியுள்ள பரிசுகள்திமுக,அதிமுக அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு வழங்கியுள்ள பரிசுகள்திமுக,அதிமுக அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு வழங்கியுள்ள பரிசுகள்திமுக,அதிமுக அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு வழங்கியுள்ள பரிசுகள்திமுக,அதிமுக அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு வழங்கியுள்ள பரிசுகள்திமுக,அதிமுக அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு வழங்கியுள்ள பரிசுகள்திமுக,அதிமுக அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு வழங்கியுள்ள பரிசுகள்திமுக,அதிமுக அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு வழங்கியுள்ள பரிசுகள்திமுக,அதிமுக அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு வழங்கியுள்ள பரிசுகள்திமுக,அதிமுக அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு வழங்கியுள்ள பரிசுகள்திமுக,அதிமுக அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு வழங்கியுள்ள பரிசுகள்திமுக,அதிமுக அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு வழங்கியுள்ள பரிசுகள்திமுக,அதிமுக அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு வழங்கியுள்ள பரிசுகள்

vikatan
18 மார்.
3 நிமிடம் படிக்க
தண்டனையை நிறுத்திவைக்க மறுத்த ஐகோர்ட்; தேர்தலில் போட்டியிட முடியாமல் தவிக்கும் முன்னாள் அமைச்சர்!
இந்தியா

தண்டனையை நிறுத்திவைக்க மறுத்த ஐகோர்ட்; தேர்தலில் போட்டியிட முடியாமல் தவிக்கும் முன்னாள் அமைச்சர்!

ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த ஆண்ட்ரூ ஸால்வதோர் என்பவர் 1990-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4-ம் தேதி விமானம் மூலம் கேரளா சென்றார். திருவனந்தபுரம் விமானநிலையத்தில் அவரை பரிசோதித்தபோது உள்ளாடையில் மறைத்து வைத்து 2 பாக்கெட் போதைப்பொருட்கள் கடத்தி வந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வழக்கு திருவனந்தபுரம் செஷன்ஸ் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள், அதை மறைத்துவைத்த உள்ளாடை ஆகியவை ஆதாரங்களாக கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தன. ஆண்ட்ரூ ஸால்வதோர் தரப்புக்கு ஆதரவாக ஆஜரான வழக்கறிஞரின் ஜூனியர் வழக்கறிஞராக இருந்த ஆண்டனி ராஜூ, கோர்ட்டில் உதவியாளராக பணிபுரிந்த ஜோஸ் என்பவரின் உதவியுடன் கோர்ட் கஸ்டடியில் இருந்த உள்ளாடையை வெளியே எடுத்துவந்து, அதை வெட்டி சின்ன அளவில் தைத்து மறுபடியும் அதை கோர்ட் கஷ்டடியில் வைத்துவிட்டார். அந்த வழக்கில் உள்ளாடையின் அளவில் வித்தியாசம் இருந்ததாகக்கூறி ஆண்ட்ரூ ஸால்வதோர் விடுவிக்கப்பட்டார். மற்றொரு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆண்ட்ரூ ஸால்வதோர், அவருடன் சிறையில் இருந்த சக கைதியிடம் நட்பாக பழகிய நிலையில், கோர்ட் கஸ்டடியில் இருந்த உள்ளாடையை வெட்டி சின்னதாக்கி தண்டனையில் இருந்து தப்பித்த விவரத்தையும் கூறினார். இந்த தகவல் வெளியே கசிந்ததை அடுத்து ஆதாரங்களை அழித்ததாக விசாரணை அதிகாரி அளித்த புகாரின் அடிப்படையில் கோர்ட் ஊழியரான ஜோஸ் மற்றும் ஆண்டனி ராஜூ ஆகியோர் மீது 1994-ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு நெடுமங்காடு ஜூடீசியல் ஃபஸ்ட் கிளாஸ் கோர்ட்டில் நடந்துவந்த நிலையில் பலகட்டங்களை கடந்து 13 ஆண்டுகளுக்குப்பிறகு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.பினராயி விஜயன்இதற்கிடையே ஆண்டனி ராஜூ ஜனாதிபத்திய கேரளா காங்கிரஸ் கட்சியில் இணைந்து அதன் துணைத் தலைவராகவும் ஆகிவிட்டார். ஜனாதிபத்திய கேரளா காங்கிரஸ் கட்சி சி.பி.எம் தலைமையிலான எல்.டி.எஃப் கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. இதையடுத்து கடந்த 2021 சட்டசபை தேர்தலில் திருவனந்தபுரம் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனதுடன் பினராயி 2.0 ஆட்சியில் முதல் இரண்டரை ஆண்டுகள் போக்குவரத்துத் துறை அமைச்சராகவும் பதவி வகித்தார் ஆண்டனி ராஜூ. இதற்கிடையேதான் கடந்த ஜனவரி மாதம் 3-ம் தேதி நெடுமங்காடு ஃபஸ்ட் கிளாஸ் கோர்ட் அளித்த தீர்ப்பில், கோர்ட் கஸ்டடியில் இருந்த ஆதாரங்களை அழித்ததாக முன்னாள் அமைச்சர் ஆண்டனி ராஜூ மற்றும் ஜோஸ் ஆகியோருக்கு தலா 3 ஆண்டு சிறைத்தண்டனையும், 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்திருந்தது. எம்.பி, எம்.எல்.ஏ போன்ற மக்கள் பிரதிநிதிகளாக இருப்பவர்கள் குற்ற வழக்கில் கோர்ட் மூலம் 2 ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை பெற்றால் அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என மக்கள் பிரதிநிதிகளுக்காக 2013-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் அளித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. மேலும், தண்டனை காலம் முடிவடைந்த தேதியில் இருந்து ஆறு ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடக்கூடாது எனவும் அந்த சட்டம் கூறுகிறது. அதன்படி ஆண்டனி ராஜூ-வை எம்.எல்.ஏ பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து கடந்த ஜனவரி 5-ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ஆண்டனி ராஜூஇதற்கிடையே ஜாமீனில் வெளியே வந்த ஆண்டனி ராஜூ, இந்த வழக்கில் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என மாவட்ட செஷன்ஸ் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். அங்கு மனு நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார். ஆண்டனி ராஜூவின் மனுவை ஐகோர்ட் நேற்று நிராகரித்தது. எனவே ஆண்டனி ராஜூ இந்த தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆண்டனி ராஜூ போட்டியிடுவதற்காக திருவனந்தபுரம் தொகுதிக்கு இதுவரை வேட்பாளர் அறிவிக்கப்படாமல் இருந்தது. ஆண்டனி ராஜூ-வுக்கு தேர்தலில் போட்டியிடமுடியாத நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் பரிந்துரைக்கும் வேட்பாளரை நிறுத்தலாம் என எல்.டி.எஃப் கூட்டணி தீர்மானித்துள்ளது. இன்று நடைபெறும் ஜனாதிபத்திய கேரளா காங்கிரஸ் கூட்டத்தில் அதுகுறித்த விவாதித்து முடிவு எடுக்கப்பட உள்ளது. இக்கூட்டத்தில் முடிவு எட்டாமல் இருந்தால் சுயேச்சையாக பொது வேட்பாளரை நிறுத்தலாமா எனவும் எல்.டி.எஃப் கூட்டணி தலைவர்கள் ஆலோசித்து வருகின்றனர்.

vikatan
18 மார்.
3 நிமிடம் படிக்க
`90 சீட்டுகள், 50-50 என டீல் பேசினார்கள்; 'என்ன அர்ஜூன் இங்கயே ஆரம்பிச்சுரலாமா?' கேட்ட விஜய்' - ஆதவ்
இந்தியா

`90 சீட்டுகள், 50-50 என டீல் பேசினார்கள்; 'என்ன அர்ஜூன் இங்கயே ஆரம்பிச்சுரலாமா?' கேட்ட விஜய்' - ஆதவ்

தவெக சார்பில் சென்னை கொளத்தூர் தொகுதியில் இன்று கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடந்திருந்தது. செங்கோட்டையன், ஆதவ் அர்ஜூனா போன்ற கட்சியின் மூத்த நிர்வாகிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர். நடிகர் ரஜினியை பற்றி ஆதவ் அர்ஜூனா பேசிய விவகாரம் பெரிதாகி ரஜினியே அறிக்கை வெளியிட்டிருக்கும் நிலையில், அதுகுறித்தும் ஆதவ் அர்ஜூனா இந்நிகழ்வில் பேசியிருந்தார்.Aadhav ஆதவ் அர்ஜூனா பேசியதாவது, 'தலைவர் சிபிஐ விசாரணைக்கு சென்று விட்டு வரும் போது தேர்தல் தேதியை அறிவித்து விட்டார்கள். அண்ணனின் காரில் பின்னால்தான் உட்காந்திருந்தேன். வெளியில் 2000 பேர் இருந்தார்கள். திடீரென ராயப்பன் கேரக்டரை போல மேல க்ளாஸ ஓபன் பண்ணுங்க என்றார். 'என்ன அர்ஜூன் இங்க இருந்தே ஆரம்பிச்சுரலாமா?' எனக் கேட்டார். தலைவர் அங்கிருந்தே பிரசாரத்தை தொடங்கிவிட்டார். ஒரு மாதமாக திமுக செட் செய்த நரேட்டிவை தலைவர் உடைத்துவிட்டார். Aadhavநம்முடைய தலைவரே ரஜினி ரசிகர் என கூறுபவர். கடந்த ஒரு வாரமாக நானும் தலைவரும் கடும் மனவலியில் இருக்கிறோம். தூத்துக்குடி மாணவியின் கொலையை மறைக்கத்தான் ஒரு வாரமாக வேறுவிதமான பிரசாரத்தை முன்னெடுத்தார்கள். அந்த வீட்டுக்கு முதல்வர் ஏன் செல்லவில்லை? என்கிற ஆதங்கத்தில்தான் முட்டாள் முதல்வர் எனப் பேசியிருந்தேன். ரஜினிகாந்த் மீது எங்களுக்கு எந்த வெறுப்பும் கிடையாது. ரஜினி மீது எங்களுக்கு அன்பு மட்டுமே இருக்கிறது. இந்த நோன்பு மாதத்தில் சொல்கிறேன், தவெக தனித்துதான் போட்டியிடுகிறது. 90 சீட்டுகள், 50-50 என எவ்வளவோ டீல் பேசினார்கள். ஆனால், தலைவர் மக்களுக்காக தனித்து நிற்க வருகிறார்.Aadhavரஜினி கட்சி ஆரம்பிப்பதாக சொன்னபோது நான் திமுகவில் தேர்தல் வேலை செய்து கொண்டிருந்தேன். அப்போது எடுத்த சர்வேயில் ரஜினிக்கு 18% வாக்கு இருந்தது. அதனால்தான் திமுக அவர் மீது போலி பிரசாரங்களை முன்னெடுத்தது. அதைத்தான் அன்று சொல்ல வந்தேன். அது ரஜினி சாரின் மனதை புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.' என்றார்.

vikatan
18 மார்.
3 நிமிடம் படிக்க
நேபாளத்தின் புதிய விடியல்: இளைஞர் கைகளில் ஒரு தேசத்தின் கனவு
இந்தியா

நேபாளத்தின் புதிய விடியல்: இளைஞர் கைகளில் ஒரு தேசத்தின் கனவு

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்இமயமலையின் சிகரங்களுக்கு இடையே அமைதியான தேசம் நேபாளம், இன்று ஒரு மிகப்பெரிய அரசியல் மாற்றத்தின் மையப்புள்ளியாக மாறியுள்ளது. இந்தியா மற்றும் சீனா என இரு பெரும் நாடுகளுக்கு இடையே நிலப்பரப்பால் சூழப்பட்டிருந்தாலும், நேபாளம் எப்போதும் தனது தனித்துவமான அடையாளத்தை விட்டுக் கொடுத்ததில்லை.பல ஆண்டுகளாக மன்னராட்சி, உள்நாட்டுப் போர் மற்றும் அரசியல் குழப்பங்களில் சிக்கித் தவித்த இந்த நாடு, தற்போது 'மாற்றம்' என்ற ஒற்றைச் சொல்லின் பின்னால் அணிவகுத்து நின்று இளைஞர்களின் கைகளுக்கு அதிகாரம் நகரத் தொடங்கியிருக்கிறது.நேபாளத்தின் வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால், அதன் வீரமும் துணிச்சலும் நமக்குப் புரியும். பிரிட்டிஷ் காலனி ஆதிக்கம் தெற்காசியாவையே ஆக்கிரமித்திருந்த காலத்தில், தனது இறையாண்மையை விட்டுக் கொடுக்காத மிகச் சில நாடுகளில் நேபாளமும் ஒன்று. 1768-ல் மன்னர் பிரித்வி நாராயண் ஷாவால் ஒருங்கிணைக்கப்பட்ட நேபாளம், சுமார் 240 ஆண்டுகள் ஷா வம்சத்தின் ஆட்சியின் கீழ் இருந்தது. இமயமலையின் கடினமான நிலப்பரப்பும், உலகப்புகழ் பெற்ற கூர்க்கா வீரர்களின் அசாத்திய துணிச்சலும் அந்நாட்டைப் பிற சக்திகளிடம் இருந்து பாதுகாத்தன.இருப்பினும், நேபாளத்தின் உள்நாட்டு அரசியல் எப்போதும் சீராக இருந்ததில்லை. மன்னர்களுக்குத் தெரியாமல் 'ராணா' குடும்பத்தைச் சேர்ந்த ஜங் பகதூர் ராணா அதிகாரத்தைக் கைப்பற்றி, பல ஆண்டுகள் ராணாக்கள் நாட்டைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.1951-ல் மக்கள் நடத்திய பெரும் புரட்சி ராணாக்களின் பிடியை உடைத்து, மீண்டும் மன்னருக்கே அதிகாரம் கிடைக்கச் செய்தது. ஆனால், மக்களாட்சி மலர்வதில் தொடர்ந்து தடைகள் ஏற்பட்டன. 1960-களில் மன்னர் மகேந்திரா நாடாளுமன்றத்தைக் கலைத்து 'பஞ்சாயத்து' முறையைக் கொண்டுவந்தார். இதனால் ஜனநாயகம் என்பது நீண்ட காலத்திற்கு எட்டாக்கனியாகவே இருந்தது.1990-களின் இறுதியில் நேபாளத்தில் ஒரு பெரிய ரத்த சரித்திரம் தொடங்கியது. மாவோயிஸ்ட் அமைப்பினர் முன்னெடுத்த ஆயுதப் போராட்டம் சுமார் பத்தாண்டுகள் நீடித்தது. இந்த உள்நாட்டுப் போரில் 17,000-க்கும் மேற்பட்ட மக்கள் உயிர் இழந்தனர். நேபாளத்தின் மன்னராக இருந்த பிரேந்திரா 2001 சூன் முதல்நாளில் நடைபெற்ற அரச குடும்ப படுகொலையின் போது மன்னர் பிரேந்திரா உள்ளிட்ட பல அரச குடும்பத்தினர் கொல்லப்பட்டனர். அவரை தொடர்ந்து நேபாளத்தின் மன்னராக ஞானேந்திரா பதவியேற்றார், வறுமையும், வேலையில்லாத் திண்டாட்டமும், மன்னராட்சியின் மீதான அதிருப்தியும் மக்களை வீதிக்கு வரவழைத்தன. இறுதியாக 2006-ல் மக்கள் நடத்திய பிரம்மாண்ட போராட்டத்தின் விளைவாக மன்னராட்சி வீழ்த்தப்பட்டது. 2008-ல் நேபாளம் முறைப்படி ஒரு குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டது.குடியரசு மலர்ந்த பிறகு நேபாளம் முன்னேற்றப் பாதையில் செல்லும் என்று மக்கள் பெரிதும் நம்பினார்கள். ஆனால், பழைய அரசியல் கட்சிகளான நேபாளி காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடையிலான அதிகாரப் போட்டியும், ஊழலும் மக்களின் நம்பிக்கையைச் சிதைத்தன. தலைமுறை தலைமுறையாக அதே முகங்களைப் பார்த்துச் சலித்துப் போன இளைஞர்கள், புதிய ரத்தத்தை அரசியலில் எதிர்பார்க்கத் தொடங்கினார்கள். இந்த ஏக்கத்தின் வெளிப்பாடாகத்தான் 2022-ல் ஒரு அதிசயம் நிகழ்ந்தது. பாலேந்திர ஷாபாலாந்திர ஷா, சுருக்கமாக 'பாலென்' ஷா என்று அழைக்கப்படும் ஒரு இளைஞர் காத்மாண்டு மாநகராட்சித் தேர்தலில் போட்டியிட்டார். இவர் ஒரு ராப் இசைக்கலைஞர் மற்றும் சிவில் இன்ஜினியர். எந்தப் பெரிய அரசியல் பின்னணியும் இல்லாமல், ஒரு சுயேச்சையாகப் போட்டியிட்ட இவர், பல தசாப்தங்களாக அரசியலில் ஊறிப்போன ஜாம்பவான்களை வீழ்த்தி வெற்றி பெற்றார். அவர் மேயராகப் பதவியேற்ற பிறகு மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகள், குறிப்பாகச் சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்றியது மற்றும் குப்பை மேலாண்மையில் காட்டிய வேகம், நேபாள இளைஞர்களிடம் "நம்மாலும் மாற்றத்தைக் கொண்டுவர முடியும்" என்ற பெரும் தன்னம்பிக்கையை விதைத்தது.இந்த எழுச்சி மாநகராட்சித் தேர்தலோடு நின்றுவிடவில்லை. ரபி லமிச்சானே தலைமையிலான 'ராஷ்ட்ரிய ஸ்வதந்திர கட்சி' (RSP) என்ற புதிய கட்சி தேசிய அளவில் உருவெடுத்தது. ஊழல் ஒழிப்பு, வெளிப்படையான நிர்வாகம் மற்றும் தகுதியானவர்களுக்கு வேலைவாய்ப்பு போன்ற இவர்களது முழக்கங்கள், குறிப்பாக 'ஜென் Z' என்று அழைக்கப்படும் இன்றைய தலைமுறை இளைஞர்களை வெகுவாகக் கவர்ந்தன. சமூக ஊடகங்கள் மூலம் இவர்கள் முன்னெடுத்த பிரசாரங்கள் பழைய அரசியல் அமைப்பையே அதிர வைத்தன.சமீபத்தில் நேபாள அரசு சமூக ஊடகங்களுக்குத் தடை விதித்தபோது, இளைஞர்களின் கோபம் உச்சக்கட்டத்தை எட்டியது. இது வெறும் ஒரு செயலி மீதான தடைக்கான போராட்டமாக மட்டும் இல்லாமல், அரசின் ஒட்டுமொத்த நிர்வாகத் தோல்விக்கு எதிரான இயக்கமாக மாறியது. மாணவர்கள் வீதிகளில் இறங்கிப் போராடினர். அரசு அலுவலகங்கள் மற்றும் முக்கியக் கட்டடங்களைச் சூழ்ந்தனர். மக்களின் கடும் எதிர்ப்பைச் சமாளிக்க முடியாமல் பிரதமர் K.P. சர்மா ஒலி தனது பதவியை ராஜினாமா செய்யும் சூழல் உருவானது.தற்போது நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தல்கள் நேபாளத்தின் எதிர்காலத்தை இளைஞர்களே தீர்மானிப்பார்கள் என்பதை உறுதிப்படுத்தியுள்ளன. பழைய கட்சிகள் இன்னும் செல்வாக்குடன் இருந்தாலும், புதிய கட்சிகளின் வரவு அவர்களைத் தற்காத்துக் கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளியுள்ளது. நேபாள இளைஞர்களுக்கு இன்று இருக்கும் மிகப்பெரிய கவலை பொருளாதார மந்தநிலை மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம். போதிய வாய்ப்புகள் இல்லாததால் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்கின்றனர். இந்த நிலையை மாற்றி, தாய்நாட்டிலேயே கௌரவமான வாழ்வாதாரத்தை உருவாக்க வேண்டும் என்பதே இந்தப் புதிய தலைமுறை அரசியல்வாதிகளின் முன் உள்ள சவால்.நேபாளம் இப்போது ஒரு சந்திப்பில் நிற்கிறது. ஒருபுறம் பாரம்பரியமான பழைய அரசியல் சக்திகள், மறுபுறம் மாற்றத்தை விரும்பும் துடிப்பான இளைஞர்கள். பல நூற்றாண்டுகால மன்னராட்சி முடிவுக்கு வந்துவிட்டாலும், உண்மையான ஜனநாயகம் என்பது மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில்தான் இருக்கிறது. இமயமலையின் அடிவாரத்தில் இப்போது வீசும் இந்த மாற்றத்தின் காற்று, நேபாளத்தை ஒரு நவீன மற்றும் வளமான நாடாக மாற்றும் என்று உலகம் உற்று நோக்குகிக் கொண்டிருக்கிறது. புதிய தலைமுறைத் தலைவர்கள் தங்கள் வாக்குறுதிகளைச் செயலில் காட்டினால், நேபாளத்தின் புதிய விடியல் என்பது வெறும் கனவாக இல்லாமல் நிஜமாக மாறும்.இந்திய மற்றும் நேபாள நாடுகளுக்கு இடையில் சுமார் 1,700 கி.மீ. நீளமான திறந்த எல்லை உள்ளது. இதன் மூலம் இரு நாடுகளின் குடிமக்களும் விசா இல்லாமல் பயணம் செய்து, வாழ்ந்து, வேலை செய்யலாம். பல நேபாள குடிமக்கள் இந்தியாவில் வேலை செய்கிறார்கள்; சிலர் இந்திய ராணுவத்தின் கோர்கா படைப்பிரிவில் பணியாற்றுகின்றனர். இது இரு நாடுகளின் நெருங்கிய உறவை காட்டுகிறது. நேபாளத்தின் அரசியல் எழுச்சி, அந்த நாட்டின் வெளியுறவுக் கொள்கையில் ஒரு அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு வல்லரசுகளுக்கு இடையே சிக்கியிருக்கும் நேபாளம், இனி ஒரு தரப்பிற்கு மட்டும் சாதகமாகச் செயல்படாது என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளது. இளைஞர்களின் ஆதரவைப் பெற்ற புதிய தலைவர்கள், 'நேபாளத்தின் நலன் முதலில்' (Nepal First) என்ற கொள்கையை முன்னெடுக்கின்றனர். இந்தியாவுடனான நீண்டகால கலாச்சார மற்றும் திறந்த எல்லை உறவை மதிக்கும் அதேவேளை, எல்லைப் பிரச்சனைகளில் சமரசமற்ற போக்கையும், பொருளாதார ரீதியாக இந்தியாவை மட்டுமே சார்ந்திருக்கும் நிலையை மாற்றவும் அவர்கள் விரும்புகின்றனர். மற்றொருபுறம், சீனாவின் உள்கட்டமைப்பு உதவிகளை வரவேற்றாலும், இலங்கையைப் போன்ற 'கடன் பொறி'களில் சிக்கிவிடக் கூடாது என்பதில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுகின்றனர். சுருக்கமாகச் சொன்னால், புதிய நேபாளம் என்பது உணர்ச்சிகரமான அரசியலைக் கடந்து, தேசத்தின் இறையாண்மை மற்றும் பொருளாதார வளர்ச்சியை மட்டுமே மையமாகக் கொண்ட ஒரு யதார்த்தமான, நடுநிலையான வெளியுறவுக் கொள்கையை நோக்கிப் பயணிக்கிறது. இது தெற்காசியாவின் அதிகாரச் சமநிலையில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது.தேர்தல்

vikatan
18 மார்.
3 நிமிடம் படிக்க
நெல்லை: காருக்குள் தாயை கட்டியணைத்தபடி கருகிக்கிடந்த குழந்தைகள்; 4 பேர் உயிரிழப்பின் பகீர் பின்னணி!
இந்தியா

நெல்லை: காருக்குள் தாயை கட்டியணைத்தபடி கருகிக்கிடந்த குழந்தைகள்; 4 பேர் உயிரிழப்பின் பகீர் பின்னணி!

குடும்பத்துடன் உயிரிழப்பதற்கு சற்று நேரத்துக்கு முன்பு ஆற்றங்கரை பள்ளிவாசல் பகுதியில் உள்ளவர்களுக்கு உணவு அளித்துள்ளனர். அத்துடன், ஏழைகள் மாற்றுத் திறனாளிகளுக்காக புத்தாடை வாங்கி வந்து கொடுத்து மகிழ்ந்துள்ளனர்.நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே ஆற்றங்கரை பள்ளிவாசல் உள்ளது. இங்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாமல் கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் வந்து வழிபட்டுச் செல்வது வழக்கம். இந்த நிலையில், பெட்டைக்குளத்திலிருந்து ஆற்றங்கரை பள்ளிவாசல் செல்லும் சாலையில் இருந்து 300 மீட்டர் உள்பகுதியில் கார் ஒன்று எரிந்து கிடந்துள்ளது. சம்பவ இடத்திற்குச் சென்று போலிஸார் பார்த்தபோது காரில் உள்ளே நான்கு பேர் உடல் கருகிய நிலையில் கிடந்தனர். இது பற்றி அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற நெல்லை மாவட்ட எஸ்.பி-யான பிரசன்னகுமார் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினார். எரிந்து கிடந்த காரின் அருகே காலியான தண்ணீர் பாட்டில்கள் கிடந்தன. அதில் பெட்ரோல் கொண்டுவரப்பட்டு காரின் வெளி மற்றும் உள்பகுதியில் ஊற்றப்பட்டு தீவைக்கப்பட்டு இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். காரின் பதிவு எண் எரிந்து விட்டதால் கண்டுபிடிக்க முடியவில்லை அதனால் காரின் 'சேஸ்' எண்ணைக் கொண்டு உரிமையாளர் யார் என்பதை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். கடன் தொல்லையால் விபரீத முடிவு!எரிந்து கிடந்த காரின் உரிமையாளர் சென்னை நந்தம்பாக்கம் பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த முகம்மது ரபி (45) என்பது தெரியவந்தது. அவருடன் காருக்குள்ள அவரது மனைவி நஸ்ரின் பாத்திமா (40), மகள் ஆப்பரின் பாத்திமா (15), மகன் முஹம்மது காஜா (13) ஆகியோர் இருந்தது தெரியவந்தது. முகமது ரபி சென்னையில் உள்ள கார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்துள்ளார். கடன் பிரச்சனையில் சிக்கி அவர் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு வேலையை விட்டுள்ளார். அதன் பின்னர், நந்தம்பாக்கத்தில் உள்ள சொந்த வீட்டை விட்டு விட்டு குடும்பத்துடன் நெல்லைக்கு குடி பெயர்ந்துள்ளார். இந்த நிலையில் நேற்று குடும்பத்தோடு ஆற்றங்கரை பள்ளிவாசல் சென்ற அவர் குடும்பத்தோடு தற்கொலை செய்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். இரு தினங்களுக்கு முன்னர் அவர் குடும்பத்துடன் நாகர்கோயில் சென்று அங்குள்ள ஹோட்டலில் அறை எடுத்து தங்கியுள்ளார். இவர்கள் கடந்த சில வாரங்களில் மட்டும் ஆற்றங்கரை பள்ளிவாசலுக்கு அடிக்கடி வந்து சென்றதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. நெல்லை: காட்டுச் சாலையில் எரிந்து கிடந்த கார் - கருகிக் கிடந்த 4 உடல்களால் அதிர்ச்சிஏழைகளுக்கு உதவி; தாயின் அரவணைப்பில் கருகிய குழந்தைகள்!குடும்பத்தோடு தற்கொலை செய்ய முடிவு செய்த பின் நாகர்கோவிலில் உள்ள துணிக்கடையில் ஏழை மக்களுக்காக துணிமணிகள் வாங்கியுள்ளனர். அவற்றைக் கொண்டு வந்து ஆத்தங்கரை பள்ளிவாசலில் உள்ள ஆதரவற்றவர்களிடம் கொடுத்துவிட்டு, உணவையும் அளித்த பின்னரே தற்கொலை செய்தது அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் மூலம் தெரிய வந்துள்ளது. காருக்குள் முகமது ரபி டிரைவர் சீட்டில் அமர்ந்துள்ள நிலையில், அவரது மனைவி மற்றும் குழந்தைகள் பின் சீட்டில் இருந்துள்ளனர். கார் தீப்பற்றி எரிந்ததும் குழந்தைகள் இருவரும் தாய் நஸ்ரின் பாத்திமாவை கட்டிப் பிடித்துள்ளனர். அதனால் அவர்களது உடல் எரிந்த நிலையிலும் கட்டிப் பிடித்தபடி இருந்தது காண்போரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. கடல் தொல்லைக்காக முகமது ரபி குடும்பத்தினரை யாராவது மிரட்டி தற்கொலைக்குத் தூண்டி இருக்கிறார்களா என்பது குறித்தும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

vikatan
18 மார்.
3 நிமிடம் படிக்க
"நான் எம்.ஜி.ஆர் காலத்தில் அமைச்சராக இருந்தேன்; எனக்கு எம்எல்ஏ ஆக விருப்பமில்லை!" - திருநாவுக்கரசர்
இந்தியா

"நான் எம்.ஜி.ஆர் காலத்தில் அமைச்சராக இருந்தேன்; எனக்கு எம்எல்ஏ ஆக விருப்பமில்லை!" - திருநாவுக்கரசர்

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் திருநாவுக்கரசர், திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில்,"விஜய் NDA கூட்டணியில் சேருவாரா என்பது எனக்கு தெரியாது. தெரியாமல் கருத்து கூற முடியாது. தி.மு.க தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது. இந்த கூட்டணி மாபெரும் வெற்றி பெறும். ஆனால், விஜய் NDA கூட்டணியில் சேராத நிலையில் அது குறித்து கருத்து கூற முடியாது. தி.மு.க -காங்கிரஸ் கூட்டணியில் எந்த மாற்றமும் வராது. ஏற்கனவே, கூட்டணி முடிவு செய்யப்பட்டு, எத்தனை தொகுதிகள் என்பது இறுதி செய்யப்பட்டு விட்டது. எனவே, மாற்றங்களுக்கு வாய்ப்பில்லை. கோவையில் காவல் நிலையத்தில் பெண் காவலருக்கு நேர்ந்த பாலியல் கொடுமை குறித்து கேட்கிறீர்கள். இது போன்ற சம்பவங்கள் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் நடக்கிறது. ஆனால், தமிழகத்தில் நடந்த அந்த சம்பவம் பெரும் கண்டனத்திற்குரியது. இந்த ஒரு சம்பவத்தை வைத்து தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சரி இல்லை என்று கூறக்கூடாது.thirunavukarasarநான் எம்.ஜி.ஆர் காலத்தில் அ.தி.மு.க-வில் அமைச்சராக இருந்தேன். பா.ஜ.க-வில் மத்திய மந்திரி ஆக இருந்தேன். எனக்கு எம்.எல்.ஏ ஆக விருப்பமில்லை. ஆனாலும் ,காங்கிரஸ் தலைமை, தொண்டர்கள் விரும்பினால் போட்டியிடுவேன். எனது மகன் ராமச்சந்திரன் ஏற்கனவே அறந்தாங்கி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். அந்த தொகுதி காங்கிரஸூக்கு ஒதுக்கப்பட்டால் மீண்டும் அதே தொகுதியில் ராமச்சந்திரன் போட்டியிட வாய்ப்பு உள்ளது" என்றார்.

vikatan
18 மார்.
3 நிமிடம் படிக்க
``திமுக-வினர் வேண்டுகோள் விடுத்தார்களே தவிர கட்டளையிடவில்லை.!' - இந்திய கம்யூனிஸ்ட் வீரபாண்டியன்
இந்தியா

``திமுக-வினர் வேண்டுகோள் விடுத்தார்களே தவிர கட்டளையிடவில்லை.!' - இந்திய கம்யூனிஸ்ட் வீரபாண்டியன்

நான்காம் கட்ட பேச்சுவார்த்தைக்கு பின் இந்திய கம்யூனிஸ்ட்- திமுக இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்தவகையில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் குறிக்கோள் என்பது..!திமுக உடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன், "ரஜினிகாந்த் குறித்து ஆதவ் அர்ஜுனா கூறிய கருத்தை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். திமுக கூட்டணி கட்சிகளை எப்போதும் மிரட்டியது இல்லை. பிரபல தலைவர்களையோ, நடிகர்களையோ மிரட்டிய வரலாறு இல்லை. எனவே ரஜினி காந்தை திமுக மிரட்டியது என்று சொல்வது ஏற்புடையது அல்ல.இந்திய கம்யூனிஸ்ட்- திமுக தொகுதி பங்கீடு ஒப்பந்தம்பாஜக தான் கூட்டணி கட்சிகளை மிரட்டி கூட்டணிக்குள் சேர்க்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். அதேபோல அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் பெண் நடிகை குறித்து பேசியது பண்பல்ல, கண்ணியம் அல்ல. இதனை முதலில் நாங்கள் கண்டிக்கிறோம். இன்று முதல்வரை சந்தித்து பேசினோம். இது சாதாரண தேர்தல் அல்ல. பாஜக அமைதியான தமிழக மண்ணை சீர்குழைக்கத் துடிக்கிறது. எனவே இந்தத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் குறிக்கோள் என்பது பாஜகவையும், அதன் கூட்டணியையும் வீழ்த்துவது தான். கம்யூனிஸ்ட்கள் தங்களது உரிமைகளை, அரசியல் கடமைகளைக் கடந்து சென்றது இல்லை. அந்தவகையில் சட்டமன்றத்தில், நாடாளுமன்றத்தில் இடம் வேண்டும் என்று நாங்கள் கூற காரணம் உழைக்கும் மக்களின் குரல் அங்கு ஒலிக்க வேண்டும். திமுகவுடன் மூன்று கட்ட பேச்சுவர்த்தைகளை நாங்கள் நடத்தினோம். கடந்த முறை 6 இடங்களில் போட்டியிட்டோம். அதைவிட கூடுதல் தொகுதியை நாங்கள் கேட்டோம். ஆனால் பல்வேறு கட்சிகள் இணைந்திருக்கின்ற காரணத்தினால் குறைத்துகொண்டோம். முதல்வர் ஒத்துழையுங்கள் என்று கேட்டுகொண்டார். அதற்கு இணங்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 5 இடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறோம்.இந்திய கம்யூனிஸ்ட்- திமுக தொகுதி பங்கீடு ஒப்பந்தம் 5, 6 இடங்கள் என்ற எண்ணிக்கை கட்சியை சோர்வடைய செய்யும். ஆனால் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்பதால் எங்களுக்கான இடங்களைக் கூட குறைத்துக்கொள்கிறோம். அதற்காவே நாங்கள் அணி சேர்ந்திருக்கிறோம். அதற்கான கையெழுத்து தான் இது. எங்களிடம் திமுக ஒத்துழைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்களே தவிர கட்டளையிடவில்லை" என்று கூறியிருக்கிறார்.

vikatan
18 மார்.
3 நிமிடம் படிக்க
தவெக-வுடன் கூட்டணிக்கு தயாராகும் என்.ஆர்.காங்கிரஸ்? - ரங்கசாமியின் `கிரீன்’ சிக்னலால் தவிக்கும் பாஜக
இந்தியா

தவெக-வுடன் கூட்டணிக்கு தயாராகும் என்.ஆர்.காங்கிரஸ்? - ரங்கசாமியின் `கிரீன்’ சிக்னலால் தவிக்கும் பாஜக

`கோதாவரி கோட்டைக் கிழி...’புதுச்சேரி 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து வெற்றிபெற்ற பா.ஜ.க, முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அமைச்சரவையிலும் பங்கெடுத்தது. அடுத்து வந்த 2024 நாடாளுமன்றத் தேர்தல் வரை பா.ஜ.க-வுடன் இணக்கமாக இருந்த முதல்வர் ரங்கசாமி, அதன்பிறகு `கோதாவரி கோட்டைக் கிழி… நீங்க நல்லா இருக்கீங்களா, நாங்களும் நல்லா இருக்கோம்…' என்ற ரீதியில் இடைவெளியை கடைப்பிடிக்க ஆரம்பித்தார். அதற்குக் காரணம் ஆளுநர் மூலம் `செக்' வைக்கும் பா.ஜ.க ஃபார்முலா. நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த உடனேயே முதல்வர் ரங்கசாமியிடம் சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சுவார்த்தையை தொடங்க முயற்சித்தது பா.ஜ.க. ஆனால் அதற்கு சிறிதும் பிடி கொடுக்காமல் பா.ஜ.க தரப்பை இழுத்தடித்து வந்தார் ரங்கசாமி.ரங்கசாமி, மோடிஎப்படியாவது கூட்டணியை இறுதி செய்துவிட வேண்டும் என்று கடந்த ஆண்டு இறுதியில் புதுச்சேரிக்கு படையெடுத்த மத்திய அமைச்சர்களை, `கோதாவரி' பாணியிலேயே டீல் செய்தார் முதல்வர் ரங்கசாமி. அதன்பிறகு கடந்த பிப்ரவரி மாதம் காரைக்கால் வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துவிட்டு வெளியே வந்த முதல்வர் ரங்கசாமி அங்கிருந்த செய்தியாளர்களிடம், `தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடர்கிறோம்' என்று கூறிவிட்டுச் சென்றார். அதையடுத்து புதுச்சேரியில் நடைபெற்ற என்.டி.ஏ கூட்டணி ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க-வின் மேலிடப் பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, `எங்கள் கூட்டணியில் முக்கியமான கட்சி என்.ஆர்.காங்கிரஸ்தான். அதேசமயம், இன்னும் சில கட்சிகளை ஒருங்கிணைத்து தேர்தலை சந்திக்க இருக்கிறோம்.`ரங்கசாமிக்கு என்ன பிரச்னை ?’அந்த வகையில் லட்சிய ஜனநாயகக் கட்சி எங்கள் கூட்டணிக்குள் வருகிறது. அவர்கள் கூட்டணிக்கு வருவதற்கு முதல்வர் ரங்கசாமி அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இந்த தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், கூட்டணி கட்சிகளுடன் பா.ஜ.க 14 தொகுதிகளிலும் போட்டியிடும்" என்று கூறியிருந்தார். ஆனால் பா.ஜ.க-வின் இந்தக் கருத்தை என்.ஆர்.காங்கிரஸ் உறுதிப்படுத்தவில்லை. குறிப்பாக, தேர்தலுக்கு முன்பே மாநில அந்தஸ்து குறித்த அறிவிப்பு இருக்க வேண்டும். அத்துடன் `லாட்டரி' ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் கூட்டணிக்குள் வருவதில் எனக்கு விருப்பமில்லை' என்று பா.ஜ.க தரப்பில் அழுத்தமாக தெரிவித்திருந்தார் முதல்வர் ரங்கசாமி. ஆனால், `எங்களுக்கான 14 தொகுதிகளில்தான் ல.ஜ.க-வுக்கு ஒதுக்கப் போகிறோம்.தமிழக வெற்றிக் கழகம் விஜய்அதில் உங்களுக்கு என்ன பிரச்னை?' என்ற ரீதியில் கேள்வி எழுப்பிய பா.ஜ.க, மாநில அந்தஸ்து குறித்த பேச்சை கவனமாக தவிர்த்தது. இந்த நிலையில்தான் நேற்று முன் தினம் இரவு ஏனாமில் இருந்து திரும்பிய முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் லட்சுமி நாராயணன், அரசு கொறடா ஏ.கே.டி ஆறுமுகம், என்.ஆர்.காங்கிரஸ் பொதுச் செயலாளர் என்.எஸ்.ஜே ஜெயபால் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை செய்தார். அப்போது, `மாநில அந்தஸ்து பற்றி அவர்கள் எதையும் பேச மறுக்கிறார்கள். ல.ஜ.க கூட்டணிக்குள் வருவதற்கு நாம் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று அவர்களாகவே கூறுகிறார்கள். இவர்கள் சொன்னதை நம்பி புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்றுத் தருவோம் என்று கடந்த தேர்தலில் மக்களுக்கு வாக்குறுதி கொடுத்தோம்.`என்.டி.ஏ கூட்டணியில் இருந்து ரங்கசாமி வெளியேறினால்...’அடுத்த தேர்தலே வந்துவிட்டது. மக்களை நாம் எப்படி எதிர்கொள்வது ? அவர்களுக்கு `லாட்டரி' மார்ட்டின் குரூப் முக்கியம் என்றால் நாம் தனித்துப் போட்டியிடுவோம்' என்று புலம்பித் தீர்த்திருக்கிறார். அதையடுத்து இரவோடு இரவாக தனியார் விடுதியில் காத்திருந்த பா.ஜ.க-வினரை சந்தித்த என்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகிகள், முதல்வரின் கருத்தைக் கூறினார்கள். ஆனால், `லட்சிய ஜனநாயகக் கட்சி எங்கள் கூட்டணியில்தான் இருக்கும்' என்று ஆவேசமாகக் கூறியது பா.ஜ.க தரப்பு. அதனால் கூட்டணிப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கு இன்னும் ஒருசில நாட்களே இருக்கும் நிலையில், கூட்டணிப் பேச்சுவார்த்தை முடியாததால் இரண்டு தரப்பும் ஏக டென்ஷனில் இருக்கின்றன.என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக ஆலோசனை கூட்டத்தில் ரங்கசாமிஇந்த நிலையில், `பா.ஜ.க-வுடனான கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என்ன ? கூட்டணியில் தொடர்கிறீர்களா ?' என்ற கேள்வியுடன் என்.ஆர்.காங்கிரஸின் பொதுச் செயலாளர் என்.எஸ்.ஜே ஜெயபாலிடம் பேசினோம். அதற்கு, `தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் ல.ஜ.க வருவதை என்.ஆர்.காங்கிரஸ் விரும்பவில்லை. பா.ஜ.க அந்த விவகாரத்தில் உறுதியாக இருந்தால், எங்கள் தலைவருடன் ஆலோசனை செய்து அடுத்தக்கட்டம் குறித்து முடிவெடுப்போம்' என்றார். தொடர்ந்து, `த.வெ.க-வுடன் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி அமைக்குமா ?' என்று நாம் எழுப்பிய கேள்விக்கு, `அதற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன' என்று முடித்துக் கொண்டார். இதுகுறித்துப் பேச பா.ஜ.க மாநிலத் தலைவர் வி.பி.ராமலிங்கத்தை தொடர்பு கொண்டோம். ஆனால், `அவர் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதாக' கூறியது அவரது செல்போன்.என்.ஆர்.காங்கிரஸுடனான மோதலால், `என்.டி.ஏ கூட்டணியில் இருந்து ரங்கசாமி வெளியேறினார் என்றால் நாங்கள் போட்டியிடவே மாட்டோம்' என்று பா.ஜ.கவின் முக்கிய நிர்வாகிகள் சிலரே வெளிப்படையாக கூறியிருக்கின்றனர். அதையடுத்து ரங்கசாமியை சமாதானப்படுத்த முயற்சி செய்து வருகிறது பா.ஜ.க தரப்பு. மோடி அடித்த பல்டி... முகம் கறுத்த ரங்கசாமி... சிக்கலில் என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க கூட்டணி!

vikatan
18 மார்.
3 நிமிடம் படிக்க
ஹார்முஸில் 5,000 பவுண்ட் வெடிகுண்டு: யாரும் உதவிக்கு வரவில்லை; 'தானே' களத்தில் இறங்கிய அமெரிக்கா
இந்தியா

ஹார்முஸில் 5,000 பவுண்ட் வெடிகுண்டு: யாரும் உதவிக்கு வரவில்லை; 'தானே' களத்தில் இறங்கிய அமெரிக்கா

அமெரிக்காவும், இஸ்ரேலும் தங்களுக்கு எதிராக தொடுத்துள்ள போருக்கு ஈரானின் முக்கிய எதிர்வினை 'ஹார்முஸ் ஜலசந்தி' மூடல். இந்த ஜலசந்தி மூடலால் உலகளவில் பல வர்த்தகங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதை சரிசெய்ய அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சீனா, ஜப்பான், நேட்டோ உள்ளிட்ட நாடுகளை ஹார்முஸ் ஜலசந்திக்கு போர்க் கப்பல்களை அனுப்ப சொல்லி கேட்டிருந்தார். ஆனால், எந்த நாடும் இதற்கு சம்மதிக்கவில்லை. ஹார்முஸ் ஜலசந்தி'மனசாட்சிக்கு விரோதமான ஈரான் போர்?' ட்ரம்பின் 'டாப்' அதிகாரி ராஜினாமா; உள்ளுக்குள்ளேயே புகைச்சலா?அமெரிக்காவின் சம்பவம் இந்த நிலையில், அமெரிக்காவே ஹார்முஸ் ஜலசந்தி அருகே இருக்கும் ஈரானின் ஏவுகணைகள் மீது தாக்குதல் நடத்தி உள்ளது. இதுகுறித்து அமெரிக்கா தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது..."ஹார்முஸ் ஜலசந்தியின் கடற்கரை ஓரம் ஈரான் நிறுவியிருந்த ஏவுகணைகளை அமெரிக்க படை 5,000 பவுண்ட் எடை கொண்ட பல ஆழ்துளை வெடிகுண்டுகளை வீசி தகர்த்துள்ளது" என்று குறிப்பிட்டுள்ளது. ஏற்கெனவே ஈரானின் கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் பலமான எதிர்வினை ஆற்றப்படும் என்று ஈரான் எச்சரித்திருந்தது. தற்போதைய அமெரிக்காவின் செயலுக்கு ஈரான் எப்படிப் பதிலடி கொடுக்கப்போகிறதோ?Ali Larijani: ட்ரம்பை தொடர்ந்து சாடி வந்த ஈரான் தலைவர் லரிஜானியைக் கொன்ற இஸ்ரேல் - யார் இவர்?

vikatan
18 மார்.
3 நிமிடம் படிக்க
'மனசாட்சிக்கு விரோதமான ஈரான் போர்?' ட்ரம்பின் 'டாப்' அதிகாரி ராஜினாமா; உள்ளுக்குள்ளேயே புகைச்சலா?
இந்தியா

'மனசாட்சிக்கு விரோதமான ஈரான் போர்?' ட்ரம்பின் 'டாப்' அதிகாரி ராஜினாமா; உள்ளுக்குள்ளேயே புகைச்சலா?

அமெரிக்காவின் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் இயக்குநர் ஜோ கென்ட். இவர் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த ராஜினாமாவிற்கு இவர் சொன்ன காரணம் அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கே நிச்சயம் அதிர்ச்சியாக தான் இருந்திருக்கும். அப்படி அவர் சொன்ன காரணம் என்ன? "ஈரான் நமது தேசத்திற்கு அச்சுறுத்தல் இல்லை. இந்தப் போர் இஸ்ரேலின் அழுத்தத்தாலும், அமெரிக்காவில் சக்திவாய்ந்த லாபியாலும் தான் தொடங்கப்பட்டிருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. என்னால் மனசாட்சிக்கு விரோதமாக ட்ரம்ப் நிர்வாகத்தின் ஈரான் போரை ஆதரிக்க முடியாது" என்று தனது சமூக வலைதளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ஈரான் போர்Gold: பதுங்கி வரும் தங்கம் விலை; இப்போது 'இவ்வளவு' தங்கம் முதலீட்டை செய்தால் சூப்பர்!அதிருப்தி..? ஏற்கெனவே ட்ரம்ப் அரசாங்கத்தில் பல்வேறு அதிகாரிகளுக்கு ஈரான் போரில் உடன்பாடில்லை என்கிற தகவல்கள் வெளியாகிக் கொண்டே இருந்தன. ஆனால், ஒரு அதிகாரி நேரடியாக இந்தக் காரணத்தை வெளியிட்டிருப்பது இதுவே முதல் முறை. இதில் இவர் தனது பதவியை ராஜினாமா வேறு செய்துள்ளார். ஆக, இது ட்ரம்ப் அரசாங்கத்திற்குள்ளேயே ஈரான் போர் அதிருப்தியைக் கிளப்பியுள்ளதா என்கிற கேள்வி இப்போது வலுவாக எழுகிறது. மேலும், ட்ரம்ப் இப்போதைக்கு இந்தப் போரை முடிப்பதாகவும் இல்லை.தேர்தல் நடத்தை விதிமுறைகள் : பணத்திற்கு உள்ள கெடுபிடிகள் என்ன? தெரிந்து கொள்ளுங்கள்!

vikatan
18 மார்.
3 நிமிடம் படிக்க

அதிகம் படிக்கப்பட்டது

எங்கள் வாசகர்கள் பேசும் பிரபலமான கதைகள்