தமிழ் டைம்ஸ் logo
சென்னை: `நீ அழகாக இருப்பதால்தானே...' - மனைவி மீது ஆசிட் வீசிய கணவர்
Crime

சென்னை: `நீ அழகாக இருப்பதால்தானே...' - மனைவி மீது ஆசிட் வீசிய கணவர்

சென்னை பல்லாவரம், பாரதி நகர் துலுக்கானத்தம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சனா பாத்திமா (29). இவருக்கும் முகமது அலி (31) என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவன், மனைவிக்கு இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு இருவரும் தனித்தனியாக வசித்து வருகின்றனர். சனா பாத்திமா அவரின் அம்மா வீட்டில் வசித்து வருகிறார். கடந்த 15 -ம் தேதி சனா பாத்திமாவின் பெற்றோர் உறவினர் ஒருவரின் இல்ல நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மதுரைக்குச் சென்றுவிட்டனர். அதனால் வீட்டில் சனா பாத்திமா மட்டும் தனியாக இருந்தார். சம்பவத்தன்று இரவு வேலை முடிந்து சனா பாத்திமா பைக்கில் வீட்டுக்கு வந்தார். பின்னர் பைக்கை நிறுத்திவிட்டு வீட்டுக்குள் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த முகமது அலி, தன்னுடைய மனைவி சனா பாத்திமாவிடம் தகராறு செய்திருக்கிறார். இதில் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.ஆசிட்அதனால் ஆத்திரமடைந்த முகமது அலி, மறைத்து வைத்திருந்த ஆசிட்டை எடுத்து சனா பாத்திமாவின் முகத்தில் வீசினார். வலியால் அலறி துடித்த சனா பாத்திமா, அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். அந்த காட்சி அங்குள்ள சி.சி.டி.வி கேமராவில் பதிவானது. ஆனாலும் சனா பாத்திமாவை துரத்தியபடி முகமது அலி விரட்டிச் சென்றார். அவரிடமிருந்து தப்பிய சனா பாத்திமா அக்கம் பக்கத்தினரின் உதவியோடு உடனடியாக மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், இடது கண்ணில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து கண் மருத்துவமனைக்கு சனா பாத்திமா சென்று அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் தொடர்பாக சனா பாத்திமா பல்லாவரம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் ஆசிட் வீசியதும் சனா பாத்திமா தப்பி ஓடும் சி.சி.டி.வி காட்சி சமூகவலைதளத்தில் பரவி வருகிறது.சனா பாத்திமா பேசுகையில், ``எனக்கும் என் கணவருக்கும் இடையே பல பிரச்னைகள் இருக்கின்றன. அதனால் தனியாக அம்மா வீட்டில் வசித்து வருகிறேன். விவாகரத்து கேட்டிருக்கிறேன். சில தினங்களுக்கு முன்பு என்னுடைய கணவர் முகமது அலி என்னை தாக்கினார். அதனால் எனக்கு முகத்தில் காயம் இருந்ததால், என் தங்கையின் இல்ல நிகழ்ச்சிக்குக்கூட நான் செல்லவில்லை. வீட்டில் பூட்டு இல்லாததால் அதை வாங்க கடைக்குச் சென்றேன். அப்போது என் வீட்டின் அருகே முகமது அலி நின்றுக் கொண்டிருந்தார். அவர், என்னிடம் குழந்தையை பார்க்க வேண்டும் என்று கூறினார். உடனே நான், தங்கையின் வீட்டு நிகழ்ச்சிக்கு குழந்தை சென்றிருக்கிறாள் என்று கூறினேன். அதனால் ஆத்திரமடைந்த முகமது அலி, நீ அழகாக இருப்பதால்தானே வெளியில் வேலைக்குச் செல்கிறாய் என்று கூறியபடி ஆசீட்டை முகத்தில் வீசிவிட்டார். எரிச்சலால் வலியால் துடித்தேன். என்னுடைய இடது கண்ணில் பார்வை தெரியவில்லை. காவல் நிலையத்திலும் புகார் கொடுத்திருக்கிறேன். முகமது அலி தலைமறைவாகி விட்டதாக போலீஸார் சொல்கிறார்கள். எனக்கு பயமாக இருக்கிறது" என்றார் கண்ணீர்மல்கமெடிக்கல் ரிப்போர்ட் இதுகுறித்து பல்லாவரம் போலீஸாரிடம் கேட்டதற்கு, ``சனா பாத்திமா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவுடன் எங்களுக்கு அங்கிருந்து தகவல் வந்தது. உடனடியாக மருத்துவமனைக்கே சென்று சனா பாத்திமாவிடம் என்ன நடந்தது என்று விசாரித்ததோடு வழக்கும் பதிவு செய்திருக்கிறோம். சனா பாத்திமா தப்பி ஓடி வரும் சி.சி.டி.வி. கேமரா காட்சியை ஆதாரமாக எடுத்திருக்கிறோம். அதனால் சட்டப்படி முகமது அலி மீது நடவடிக்கை எடுக்கப்படும். கழிவறையை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் ஆசீட்டை முகமது அலி பயன்படுத்தியிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது" என்றனர்.

vikatan
17 மார்., 05:30 AM
காபூல் தாக்குதல்: "இது போர்க்குற்றம்; ரமலான் மாதத்தில் நடந்த இந்தத் தாக்குதல்.!"- ரஷீத் கான் வேதனை
cricket

காபூல் தாக்குதல்: "இது போர்க்குற்றம்; ரமலான் மாதத்தில் நடந்த இந்தத் தாக்குதல்.!"- ரஷீத் கான் வேதனை

ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலில் உள்ள மருத்துவமனை ஒன்றில் இன்று (மார்ச். 17) பாகிஸ்தான் கொடூரத் தாக்குதலை நடத்தி இருக்கிறது. இந்தத் தாக்குதலில் கிட்டத்தட்ட 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர். 250-க்கும் படுகாயமடைந்துள்ளனர். பாகிஸ்தானின் இந்தச் செயலுக்கு பலரும் கண்டங்களைத் தெரிவித்து வருகின்றனர். ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் தாக்குதல்இந்நிலையில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷீத் கான், " காபூலில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் உயிரிழந்திருப்பது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. பொதுமக்களின் வீடுகள், கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் போன்ற கட்டமைப்புகளைத் திட்டமிட்டோ, இலக்கு வைத்தோ தாக்குதல் நடத்துவது போர்குற்றமாகும். குறிப்பாக புனித மாதமான ரமலான் மாதத்தில் மக்கள் மீது காட்டப்படும் இந்த அலட்சியம் அருவருப்பானது. இது ஆழந்த கவலைக்குரியது. இது பிரிவினையையும், வெறுப்பையும் மட்டுமே வளர்க்கும். இந்த கொடூரமான செயலை ஐக்கிய நாடுகள் சபையும் பிற மனித உரிமை அமைப்புகளும் முழுமையாக விசாரித்து, இதற்கு காரணமானவர்களைக் கண்டறிந்து தண்டிக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் தாக்குதல்இந்த இக்கட்டான நேரத்தில் எனது ஆப்கானிய மக்களுடன் நான் உறுதுணையாக நிற்கிறேன். நாங்கள் இந்த காயங்களிலிருந்து மீண்டு வருவோம்" என்று வேதனைத் தெரிவித்திருக்கிறார்.

vikatan
17 மார்., 05:30 AM
தூத்துக்குடி: பைக் ரிப்பேர் செய்ய பணம் கேட்டு மதுபோதையில் தகராறு; மகனைக் கொன்ற தந்தை கைது
Crime

தூத்துக்குடி: பைக் ரிப்பேர் செய்ய பணம் கேட்டு மதுபோதையில் தகராறு; மகனைக் கொன்ற தந்தை கைது

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகிலுள்ள படர்ந்தபுளி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலச்சந்திரன். இவரது மனைவி திருகேதீஸ்வரி. இவர்களுக்கு கனகராஜ், பாலபாரதி என இரண்டு மகன்கள் உள்ளனர். பாலபாரதி, திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். மிக்சர் பாக்கெட் போட்டு கடைகளுக்கு விற்பனை செய்து வருகிறார். இவரது மூத்த மகனான கனகராஜ் மட்டும் படர்ந்தபுளியிலுள்ள தாத்தா பாண்டி, பாட்டி மாடத்தி ஆகியோருடன் வசித்து வந்துள்ளார். 12-ம் வகுப்பு வரை படித்த கனகராஜ், தொடக்கத்தில் திருவள்ளூரில் பெற்றோருடன் வசித்து வந்தார். எட்டயபுரம் காவல் நிலையம்அப்போது, மதுபோதைக்கு அடிமையாகி தினமும் தகராறு செய்து வந்ததால், திருந்தி வாழட்டும் என்ற நினைப்பில், கனகராஜை இங்கு அனுப்பி வைத்துள்ளனராம். இங்கும் கஞ்சா போதைக்கு அடிமையான கனகராஜ், அடிக்கடி பாட்டியிடம் பணம் கேட்டு தகராறு செய்து வந்துள்ளாராம். இந்த நிலையில், கடந்த 13-ம் தேதி பைக்கைச் சரி செய்ய வேண்டுமெனக் கூறி பாட்டியிடமிருந்து தங்கக்கம்மல், மோதிரத்தைப் பறித்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து மாடத்தி அம்மாள், மகன் பாலச்சந்திரனுக்கு தகவல் கூறியுள்ளார்.தூத்துக்குடி சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்: 'பாதுகாப்பு எங்கே? இப்படி ஒரு ஆட்சி தேவையா?'- விஜய் காட்டம்மறுநாள் பாலச்சந்திரனுக்கு போன் செய்த கனகராஜ், ”பைக்கைச் சரி செய்ய பணம் வேண்டும் இல்லையென்றால் பாட்டியைக் கொன்றுவிடுவேன்” என, மிரட்டியுள்ளாராம். “நாளை காலை படர்ந்தபுளிக்கு நேரில் வருகிறேன். வந்து பேசிக்கொள்வோம்” எனக் கூறியுள்ளாராம். மறுநாள் காலையில் வந்த தந்தையிடம், மது மற்றும் கஞ்சா போதையில் பணம் கேட்டு சண்டை போட்டதுடன், தந்தையைத் தாக்க முயன்றுள்ளார். எட்டயபுரம் காவல் நிலையம்ஆத்திரத்தில் இரும்புக்கம்பியால் மகனைத் தாக்கியுள்ளார் தந்தை. எனினும், கனகராஜ் மீண்டும் தந்தையைத் தாக்க முயன்றபோது, கிரைண்டர் கல்லைத் தூக்கி கனகராஜின் தலையில் தூக்கி போட்டுள்ளார். இதில், காயமடைந்த மகன் கனகராஜ் உயிரிழந்தார். இதுகுறித்து எட்டயபுரம் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த கனகராஜ் மீது எட்டயபுரம், நாலாட்டின்புதூர் காவல் நிலையங்களில் சில வழக்குகள் நிலுவையில் உள்ளது. தூத்துக்குடி மாணவி கொலை வழக்கு: 5 பேரின் டிஎன்ஏ சேகரிப்பு- `காவல்துறை மீது நடவடிக்கை..' - நீதிமன்றம்

vikatan
17 மார்., 05:30 AM
IPL 2026: `தலையாகவோ, வாலாகவோ இருக்க நான் சிஎஸ்கேவுக்கு போகலை, அங்க..!' - தோனி குறித்து சஞ்சு சாம்சன்
cricket

IPL 2026: `தலையாகவோ, வாலாகவோ இருக்க நான் சிஎஸ்கேவுக்கு போகலை, அங்க..!' - தோனி குறித்து சஞ்சு சாம்சன்

2026 ஆம் ஆண்டிற்கான ஐபில் வரும் மார்ச் 28 ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இன்னும் சில தினங்களே இருக்கும் நிலையில், வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை அணி தனது முதல் போட்டியை மார்ச் 30 ஆம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியோடு எதிர்கொள்ள இருக்கிறது. சஞ்சு சாம்சன் - ஜடேஜாரசிகர்கள் இந்தப் போட்டியைக் காண மிகவும் ஆர்வமாக இருக்கின்றனர். காரணம் சிஎஸ்கே அணியில் இருந்த ரவீந்திர ஜடேஜா ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாட இருக்கிறார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக இருந்த சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணிக்காக களமிறங்க இருக்கிறார். இந்நிலையில் PTI- க்கு பேட்டி அளித்திருக்கும் சஞ்சு சாம்சன், தோனி குறித்து பேசியிருக்கிறார். தோனி குறித்து பேசிய சாம்சன், "நான் தோனி பாயுடன் போனில் பேசியிருக்கிறேன். தவிர இந்திய அணியின் முகாம்களில் பார்த்திருக்கிறேன். அவரோடு ஒரே அணியில் விளையாடுவது இதுவே முதன்முறை. இது எனக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது. ஐபிஎல் நடைபெறும் இரண்டு மாதங்கள் ஒரே டிரெஸிங் ரூமில் இருப்பது, அவர் எப்படி போட்டிகளுக்குத் தயாராகிறார் என்பதைக் கற்றுக்கொள்ள ஒரு வாய்ப்பாக அமையும். சஞ்சு சாம்சன்தலையாக இருப்பதற்கோ, வாலாக இருப்பதற்கோ நான் சிஎஸ்கே-விற்கு செல்லவில்லை. அங்கு ஒரே தல-தான் அது சிஎஸ்கே தோனிதான். தோனியும், சிஎஸ்கே ரசிகர்களும் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை நான் காப்பாற்றுவேன்" என்று நம்பிக்கையாகப் பேசியிருக்கிறார்.

vikatan
17 மார்., 05:30 AM
IPL 2026: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து வெளியேறியது ஏன்? - மனம் திறந்த சஞ்சு சாம்சன்
cricket

IPL 2026: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து வெளியேறியது ஏன்? - மனம் திறந்த சஞ்சு சாம்சன்

2026 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் இன்னும் சில தினங்களில் தொடங்க இருக்கிறது. சிஎஸ்கே அணி மார்ச் 30 ஆம் தேதி ராஜஸ்தான் அணியை எதிர்த்து களமிறங்குகிறது. குறிப்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் கேப்டனாக இருந்த சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணிக்காக களமிறங்க இருக்கிறார். சஞ்சு சாம்சன்இந்நிலையில் PTI- க்கு பேட்டி அளித்திருக்கும் சஞ்சு சாம்சன், "ஐபிஎலில் இதுவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடினேன். தற்போது முதல் முறையாக அந்த அணிக்கு எதிராக விளையாட இருக்கிறேன். அவர்களுக்கு எதிராக விளையாடும்போது எனக்கு எந்த ஒரு எமோஷனலும் இருக்காது என நினைக்கிறேன். ஏனென்றால் அந்த ஆட்டம் வெற்றியாளர்களைத் தீர்மானிக்க போகிறது. ஆனால் போட்டிக்கு முன்பும், பின்பும் ராஜஸ்தான் அணியின் வீரர்களுடனும், பயிற்சியாளர்களுடனும் எமோஷன்ஸ் இருக்கும். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் எனக்கான நேரம் முடிவுக்கு வந்துவிட்டது. ஒவ்வொரு நபருக்கும் ஓர் அணியில் குறிப்பிட்ட நேரம் அமையும். எனக்கான நேரம் வந்துவிட்டதால், சிஎஸ்கே அணி நோக்கி வந்துவிட்டேன். அந்த அணியில் என்னுடன் விளையாடிய நிறைய இளம் வீரர்கள் இருக்கின்றனர். சஞ்சு சாம்சன்அவர்கள் மீது எனக்கு அன்பும், மரியாதையும் இருக்கிறது. தற்போது சிஎஸ்கே அணியுடன் எனது பயணத்தைத் தொடங்க இருக்கிறேன். சிஎஸ்கே ரசிகர்கள் அவர்களுள் ஒருவனாக என்னை நினைப்பார்கள் என்று நம்புகிறேன். என்னால் முடிந்த வரை சிஎஸ்கேவிற்கு சிறப்பான பங்களிப்பைக் கொடுப்பேன்" என்று தெரிவித்திருக்கிறார்.

vikatan
17 மார்., 05:30 AM
டெல்லி: துப்பாக்கியை வைத்து ரீல்ஸ்; நெஞ்சில் பாய்ந்த தோட்டா; மரணத்தில் முடிந்த வ்யூஸ் மோகம்
Trending

டெல்லி: துப்பாக்கியை வைத்து ரீல்ஸ்; நெஞ்சில் பாய்ந்த தோட்டா; மரணத்தில் முடிந்த வ்யூஸ் மோகம்

டெல்லியில் உள்ள தல்லுபுரா என்ற இடத்தில் வசித்து வந்தவர் பவன். இவர் தனது நண்பரிடம் இருந்த துப்பாக்கியைப் பயன்படுத்தி ரீல்ஸ் எடுக்க முடிவு செய்தார். இதற்காக பவன் துப்பாக்கியை கையில் எடுத்து அதற்கு தோட்டா நிரப்புவது போன்ற வேலையில் ஈடுபட்டார். அவரது நண்பர் இந்தக் காட்சியை வீடியோ எடுத்துக்கொண்டிருந்தார். அப்போது பவன் துப்பாக்கியைத் தனது நெஞ்சில் வைத்தார். அதோடு சுடும் டிரிக்கரில் தனது கைவிரல்களை வைத்தார். உடனே வீடியோ எடுத்த நபர் சுட்டுவிடாதே என்று எச்சரித்தார்.அந்நேரம் பவன் தனது நெஞ்சில் துப்பாக்கியை வைத்துக்கொண்டு சிரித்தபடி லேசாக டிரிக்கரை அழுத்தினார். அடுத்த நொடியே துப்பாக்கியிலிருந்த தோட்டா பவன் நெஞ்சில் பாய்ந்தது. இதில் பவன் அப்படியே சரிந்து விழுந்தார். உடனே அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அதற்குள் இறந்துபோனார். துப்பாக்கிக்கு லைசென்ஸ் இருக்கிறது. வீடியோ எடுத்தவர் பெயரில்தான் துப்பாக்கி இருக்கிறது. இது குறித்து போலீஸார் கூறுகையில், ''ரீல்ஸ் எடுத்துக்கொண்டிருந்தபோது துப்பாக்கி லாக் செய்யப்பட்டு இருப்பதாக நினைத்துக்கொண்டு டிரிக்கரை பவன் அழுத்திவிட்டார். ஆனால் துப்பாக்கி லாக் செய்யப்படாமல் இருந்துள்ளது. இதனால் பவன் மீது தோட்டா பாய்ந்து இறந்துவிட்டார்'' என்று தெரிவித்தனர். ரீல்ஸ் எடுக்க நினைத்த வாலிபர் பரிதாபமாக தனது உயிரை இழந்துள்ளார்.

vikatan
17 மார்., 05:30 AM
தொடர்ந்திடும் பந்தம்! - சிறுகதை
literature

தொடர்ந்திடும் பந்தம்! - சிறுகதை

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்எமிலி வகுப்பறையில் அன்று எப்போதுமில்லாதசோகத்துடன் அமர்ந்திருந்தாள். புதிதாக வந்திருந்த வகுப்பு ஆசிரியை மிஸஸ் சாரா லூயிஸ்டிஜிட்டல் போர்ட்டில் பாடம் நடத்திக் கொண்டிருக்க, எமிலியின் கவனம் பாடத்தில் இல்லை.மிகச் சமீப நாட்களில்தான் அவளிடம் இந்த மாற்றம். அதை மிஸஸ் லூயிஸும் கவனித்திருந்தாள்.( ஆசிரியர் பெயர்களின் பிற்பகுதி பெயர் surname மட்டுமே விளிக்கப்படும் என்பதால் நாமும் தேவைப்படும் இடங்களில் மிஸஸ் லூயிஸ் என்றே கூறுவோம்.)"ஏன் இந்தப் பெண் இப்படி இருக்கிறாள்?"இடையிடையே அவள் பார்வை எமிலியைத் தொட்டுத் திரும்பியது.சாரா புதிதாக வந்து சேர்ந்தவள் என்பதால் சரிவர இன்னும் குழந்தைகளிடம் பழகாததால், நேரடியாக அவளிடம் சென்று கேட்கவும் தயக்கம். ஒருவேளை மிஸஸ் எட்வர்டிடம் பேசிப் பார்க்கலாம் என நினைத்து பாடவேளை முடியட்டும் என்று காத்திருந்தாள்.துணை ஆசிரியை மிஸஸ் ரேச்சல் எட்வர்ட் ஒருபுறம் அமர்ந்து அவளுக்கு ஒதுக்கப் பட்டிருந்த பணியில் ஈடுபட்டிருந்தாள். துணை ஆசிரியர் பணியும் ஆசிரியர் பணிக்கு சற்றும் சளைத்தது அல்ல.ஆசிரியருக்கு உதவுவது, வகுப்பறை சுவர்களில் பாடத்திட்டத்தின் சில பகுதிகளை படமாக வரைந்து ஒழுங்கு படுத்தி அலங்கரிப்பது, மாணவர்களின் தனிப்பட்ட திறமைகளை ஊக்குவிப்பது, மாணவர்களின் நடத்தை மற்றும் ஒழுக்கத்தைக் கண்காணிப்பது, முக்கியமான ஒன்றாக மாணவர்களுக்கான உதவி (SEND Support) ​இங்கிலாந்தில் பல துணை ஆசிரியர்கள் Special Educational Needs and Disabilities (SEND) எனப்படும் கற்றல் குறைபாடு அல்லது மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக தனியே செயலாற்ற வேண்டும்.மிஸஸ் எட்வர்டைப் (ரேச்சலைப்) பொறுத்த மட்டில் இந்தப் பணியை அவள் மிகவும் விரும்பி ஏற்றுக் கொண்டவள். குழந்தைகளுடன் நேரம் செலவிடுவதும், அவர்களுக்குப் பாடத்தைத் தாண்டி புதிய புதிய விஷயங்களை கற்றுக் கொடுத்து அவர்களின் உலகத்தை விரிவாக்கி அவர்கள் அதில் மகிழ்ச்சியடைவதை கண்டு ரசிப்பவள்.மிஸஸ் எட்வர்டும் எமிலியிடம் ஏற்பட்டிருந்த மாற்றத்தைப் பார்த்துக் கொண்டுதான் தன்னுடைய வேலையில் ஈடுபட்டிருந்தாள்.ஆனாலும் மிஸஸ் லூயிஸின் கண்கள் எமிலியை சுட்டிக் காட்ட, மிஸஸ் எட்வர்ட் நான் பார்த்துக்கொள்கிறேன் என்பதாக தலையசைத்தாள்.ஏனென்றால் எமிலிக்கு ரேச்சலை மிகவும் பிடிக்கும். சொல்லப் போனால் எமிலிக்காகவேண்டியே இயர் டூவில் "One to One support" என்னும் விதியின் கீழ்.., ( இரண்டாம் வகுப்பு) ரேச்சல் எட்வர்ட் தேர்ந்தெடுக்கப் பட்டிருந்தாள். மூன்று வருடங்களாக அடுத்தடுத்த வகுப்புக்கும் மிஸஸ் எட்வர்ட்தான் வேண்டும் என்று பிடிவாதம் பிடித்து எமிலி கேட்க அவளுக்காகவே வழக்கமான விதிகளைத் தளர்த்தி அனுமதி அளித்திருந்தது பள்ளி நிர்வாகம். இப்போது எமிலியும் மிஸஸ் எட்வர்டும் ஐந்தாம் வகுப்பில்.சொல்லப் போனால் எமிலி எல்லோரையும் போல சாதாரணமானவள் போலத் தெரிந்தாலும் அவள் அப்படி இல்லை.எமிலிக்கு டிஸ்லெக்ஸியா பாதிப்பு. (phonics) போனிக்ஸ் உச்சரிப்பு சரியாக வராது. எழுத்துக்களை மாற்றி எழுதும் பழக்கம். ஆனால் அவள் க்ரியேட்டிவாக சிந்தித்து பேசும் நேரம் மிகுந்த ஆச்சரியம் கொள்வாள் மிஸஸ் எட்வர்ட். சொல்லப் போனால் Out - of -the - box - thinkersலிஸ்ட்டில் நிச்சயம் இடம் பெறுவாள் எமிலிஎன்று நினைத்துக் கொள்வாள்.எட்வர்ட்க்கும் எமிலியை மிகவும் பிடிக்கும். ஆனால் பள்ளி மற்றும் ஒட்டுமொத்த விதிகளின் படி இப்படி நியமிக்கப்பட்ட ஆசிரியர் மாணவரின் மீது தனிப்பட்ட முறையில் அதிகப் படியான பாசத்தையோ, நெருக்கத்தையோ காட்டக் கூடாது என்பதும் கட்டாயமாக கடைபிடிக்க வேண்டிய விதி!"லிசன் எமிலி!" பாடத்தின் இடையே ஆசிரியை லூயிஸின்அழைப்புக்கும் திரும்பவில்லை அவள்.அந்த பாட நேரம் முடிந்து விட்டதற்கான அறிகுறியோடு டிஜிட்டல் போர்ட் அணைக்கப் பட்டுவிட,மாணவர்கள் எழுந்து வெளியே செல்லத் தொடங்கினர். ஒரு சிறு இடைவேளைக்குப் பிறகு பள்ளி மைதானத்தில் விளையாட்டு வகுப்பு.விளையாட்டு ஆசிரியருடன் துணை ஆசிரியை மிஸஸ் எட்வர்ட் தன் வகுப்பு மாணவர்களை கண்காணிக்கப் போக வேண்டும். ஆனால் எமிலிக்கு என்னவானது என்று விசாரித்து அறிய வேண்டும்... என்ற தவிப்பில் இருந்தவளைத் தேற்றுவது போல சாரா லூயிஸ்,"யூ டேக் யுவர் ஓன் டைம் மிஸஸ் எட்வர்ட்...!" என்றிடவும்தான்ரேச்சல் நிம்மதியடைந்தாள்."எமிலி...!" ரேச்சல் குரலுக்கும் திரும்பவில்லை அவள்."கேன் ஐ ஹக் யூ எமிலி?""ஐ டோன்ட் வான்ட் மிஸஸ் எட்வர்ட் ...!" சற்று காட்டமாகத்தான் பேசியது போலிருந்தது எமிலி."நோ வர்ரிஸ் எமிலி! வீ கேன் டாக் வென் யூ ஆர் ரெடி ஓகே...?" எட்வர்ட் கூறியதற்கும் பதில் இல்லை அவளிடம். ஆனால் எமிலியின் கண்களின் ஓரம் இரண்டு நீர் முத்துக்கள் திரண்டிருந்தது. எப்போது வேண்டுமானாலும் தரையில் பட்டுத் தெறிக்கலாம் என்னும் நிலையில்...!எமிலியின் மௌனத்தைக் கண்டு, அவளுக்கான நேரத்தை எடுக்கட்டும் என்று அமைதி காத்து,"டு யூ லைக் திஸ் க்ரேயான்ஸ் எமிலி?"கவனத்தைத் திருப்ப கேட்டிருந்தாள் எட்வர்ட்.உடனே எமிலியிடம் மாற்றம் ஏற்பட்டிருந்தது. மிஸஸ். எட்வர்ட் கையிலிருந்த அத்தனை க்ரேயான்களையும் பிடுங்குவது போல வாங்கியவள் அவள் டெஸ்க் மீதிருந்த நோட்டுப் புத்தகத்தைப் பிரித்து விறுவிறு வென்று ஒரு படம் வரைந்து கலர் கொடுத்து நிமிர்ந்தாள்.துல்லியமான அதே சமயம் அழகான படமாகஇருந்த அது... ஒரு ஆணின் படம்.!"மிஸஸ் லூயிஸ்!" மிஸ் ரேச்சல் குரல் கொடுக்கஆசிரியை சாரா அருகே வந்து எமிலி வரைந்திருந்ததைப் பார்த்து ஆச்சரியப்பட்டு பாராட்டினாள்.மிஸஸ் லூயிஸின் பாராட்டு எமிலிக்குப் பிடிக்கவில்லை என்பது அவள் உதடுகளைக் கடித்த விதத்தில் தெரிந்தது. அவளுக்குத் தேவை மிஸஸ் எட்வர்டின் பாராட்டு மட்டுமே. அவளின் முகத்தையே இப்போது பார்த்திருந்தாள் எமிலி.ஆனால் ரேச்சல் அவள் வரைந்த அந்த ஓவியத்தையே பார்த்துக்கொண்டிருக்க, அதில் அவள் பயன்படுத்தியிருந்த அடர் வண்ணங்கள் எதையோ சொல்லாமல் சொல்வது போலிருந்தது."ஹூ ஈஸ் திஸ் மேன் எமிலி?" கேட்டவள் சாரா லூயிஸ்."வில் யூ ஹக் மி ரேச்சல்?" எமிலி ரேச்சலைப் பார்த்து இவ்வாறு கேட்டதும்,மிஸஸ் லூயிஸ் தோள்களைக் குலுக்கிக் கொண்டு அங்கிருந்து அகன்றுவிட்டாள்.எமிலியை சிறிது நேரம் அணைத்து விலகிய ரேச்சல்,"நீ வரைந்திருப்பது யாரை எமிலி?""ஐ ஹேட் திஸ் மேன்...! ஹி ஈஸ் மை மாம்ஸ் ஹஸ்பென்ட்...!"எதிர்பாராத பதிலில் திகைத்து நின்றிருந்தாள் ரேச்சல்."ஏன் பிடிக்காது? எதற்கு பிடிக்கவில்லை... என்ற பர்சனல் கேள்விகளைத் தாண்டி அவள் அம்மாவின் கணவன் என்று கூறியது, எதையோ குறிப்பால் உணர்த்துவது போலத் தெரிந்தது. இருந்தாலும் எமிலியைப் பார்த்து புன்னகைக்க செய்தாள்."மிஸஸ் எட்வர்ட்! டு யூ நோ?" எமிலியாக சொல்லட்டும் என்று அமைதி காத்தாள் அவள். "சிட் வித் மி!"எமிலி கட்டளை போலக் கூற அவள் அருகினில் அமர்ந்து கொள்ள,"வாட் ஹாப்பண்ட் மிஸஸ் எட்வர்ட்?" மீண்டும் தேடி வந்து கேட்டிருந்தாள் மிஸஸ் லூயிஸ்!எமிலியிடம் நடுக்கம் ஏற்பட்டதை உணர்ந்தாள் மிஸஸ் எட்வர்ட். சட்டென்று தான் வரைந்து வைத்திருந்த அந்த அழகான படத்தில் கண்மண் தெரியாத வகையில் கிறுக்கி கசக்கி தூர எறிந்துவிட்டாள் எமிலி.அவளின் செயல் இருவருக்கும் அதிர்ச்சி தரத் தக்கதாகத்தான் இருந்தது. ஆனாலும் எதுவும் செய்ய முடியாது நின்றனர். வார்த்தைகளால் கண்டிக்கவோ, செயலால் உணர்த்தவோ முடியாத நிலை!அதைச் செய்த பிறகு எமிலி மீண்டும் சோகத்தில் மூழ்கிப் போக, அதிகம் அவளை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று நினைத்து, ரேச்சல் அவளை பள்ளி மைதானத்துக்கு போகலாம் வருகிறாயா என்று கேட்டதும் மகிழ்ச்சியோடு எழுந்து நடந்தாள் எமிலி!அவளிடம் ஏற்பட்டிருக்கும் இந்த மாற்றம் எதனால் என்று நிறையவே குழம்பிக் கிடந்தவள் மிஸஸ் எட்வர்ட்தான். ஏனென்றால் அதிகமாக அவளுடன் நேரம் செலவிடுபவள் அவள்தானே!எழுத்துக்களை ஏறுக்கு மாறாக எமிலி எழுதினாலும் கணக்கில் புலி. மற்ற குழந்தைகள் செய்யத் திணறுவதை நொடியில் முடித்து நோட்டுப் புத்தகத்தை மூடி வைத்துவிட்டு வேடிக்கை பார்க்கத் தொடங்கி விடுவாள். அல்லது மிஸஸ் எட்வர்ட் அருகில் வந்து அமர்ந்து, அவள் மீது சாய்ந்து கொண்டு அவளைப் பற்றிய கேள்விகளைத் தொடுக்கத் தொடங்கி விடுவாள்.மிஸஸ் எட்வர்டின் மகனும் அந்தப் பள்ளியில்தான் படிக்கிறான். ஆறாவது வகுப்பில். அவ்வப்போது தாயைப் பார்க்க வருபவனிடம் எமிலி ஹாய் சொல்லி சினேகத்துடன் சிரிப்பாள்.இதெல்லாம் கூட கடந்த சில நாட்களாக வழக்கம் போல நடக்கவில்லை.ரேச்சலின் மகன் 'ஸ்டூவர்ட் எட்வர்டிடமும்' முகம் கொடுத்துப் பேச முயற்சிக்கவில்லை.தினசரி நடக்கும் இந்த நிகழ்வுகள் வகுப்பு ஆசிரியைகள் இருவரையும் கவலையில் ஆழ்த்தியிருந்தது. வீட்டில் அவளுக்கு யாராலாவது ஏதாவது துன்புறுத்தல் நிகழ்கிறதா என்பதை கண்டறிய நினைத்தார்கள். அதை எங்கிருந்து எப்படித் தொடங்குவது என்ற வினாதான் இருவருக்கும்.அன்று மாலை வகுப்பு முடிந்து டிஸ்மிஸலுக்கு நின்றார்கள் சாராவும், ரேச்சலும். ரேச்சலின் அருகே அவள் கைகளைப் பற்றியபடியே நின்றிருந்த எமிலியை அழைத்துப் போக வந்திருந்த அவளின் தந்தை "எமிலி, லெட்ஸ் கோ!" என்றதைக் கேட்டதும் அவளின் உடல் நடுங்கியதை ரேச்சலால் தெளிவாக உணர முடிந்தது. எமிலியின் விரல் நகங்கள் ரேச்சலின் கையில் அழுந்தப் பதிந்தது. ஒருவேளை தந்தையைக் கண்டு எமிலி பயப்படுகிறாள் என்றால், அது ஏன்?அவர்கள் சென்றபிறகு மிஸஸ் லூயிஸ் மெதுவாக ரேச்சலிடம் வந்தாள். "மிஸஸ் எட்வர்ட்! நீ கவனித்தாயா? தன் தந்தையைக் கண்டு அவள் அஞ்சுகிறாள் போல!""இதைப் பற்றி அவளின் தாயிடம் பேசிப் பார்க்க வேண்டும். அதற்கு முன் பள்ளியின் தலைமையிடம் இந்த விஷயத்தை தெரிவிக்க வேண்டும்.!"இருவரின் முடிவும் ஒன்றாகவே இருக்க, அவர்கள் கூறியதைக் கேட்டு பள்ளி சார்பில்எமிலியின் தாயிடம் பேசிப் பார்க்க முடிவு செய்யப்பட்டு போன் அழைப்பு விடுக்கப்படஎமிலியின் தாயிடமிருந்து எந்த பதிலும் இல்லை.பிறகு பெற்றோர் ஆசிரியர் சந்திப்புக்கு கண்டிப்பாக தாய் தந்தை இருவரையும் வரச் சொல்லி அவள் வீட்டுக்கு அழைப்பு அனுப்பப்பட்டது.அதற்கும் அவர்கள் வரவில்லை. வேலை நேரத்தில் பர்மிஷன் கிடைக்கவில்லை என்று காரணம் சொல்லப்பட்டது.இதற்கிடையே எமிலி வகுப்பில் ரேச்சலுடன் மனம் விட்டுப் பேசும் சந்தர்ப்பம் அமையும் போதெல்லாம் எப்படியாவது அவளிடமிருந்து ஒரு சிறு செய்தியையாவது அறிந்து கொள்ள முடியாதா என்று எவ்வளவோ முயற்சி செய்தாள். மிஸஸ் லூயிஸும் தன் பங்குக்கு ஏதாவது செய்ய முடியுமா என்று பார்க்க, அவளைக் கண்டாலே எமிலியிடம் தன் தந்தையைக் காணும் நேரத்தில் ஏற்படும் அத்தனை தடுமாற்றங்களும், வெறுப்பும் ஏற்பட்டதை யதேச்சையான சந்தர்ப்பத்தில் உணர்ந்து உள்ளுக்குள் தவித்தாள் ரேச்சல்.இதை எப்படிக் கையாள்வது?ஆனால் எமிலியை அழைத்துப் போக தவறாமல் அவள் தந்தை மட்டும் வந்து கொண்டிருக்க.இப்படியே தொடர்ந்தால் இதை DSL க்கு கொண்டு செல்வதைத் தவிர வேறு வழியில்லை என்று ரேச்சலிடம் மிஸஸ் லூயிஸ் சொல்ல,ரேச்சல் முடிவெடுத்து விட்டாள். இது வெறும் (learning support ) லேர்னிங் சப்போர்ட் எல்லையைத் தாண்டிவிட்டது என்று.அவள் நேராகப் பள்ளியின் safeguarding lead ன் அறைக்கு சென்றாள்."மிஸஸ் எட்வர்ட்.எமிலி விஷயத்தில் நீங்கள் சொல்வது கவலை அளிக்கிறது.அவளது தந்தை அவளை அவளை அழைத்துச் செல்லும் நேரத்தில் அவள் காட்டும் பயம் சாதாரணமானது அல்ல. நாம் (social services ) சோஷியல் சர்வீசஸ் உதவி பெற வேண்டியிருக்கும் என்று அந்த அதிகாரி சொன்னபோது ரேச்சலுக்குள் இனம் புரியாத பயம் கலந்த நிம்மதி!அன்று மதிய நேரம். எமிலி மாத்திரம் வகுப்பறையில் அவளின் வழக்கமான இடத்தில் அமர்ந்திருந்தாள். ரேச்சல் அருகே சென்று," எமிலி! என்னை உனக்குப் பிடிக்கும் என்றால் நான் கேட்பதற்கு உரிய பதில் தருவாயா? என்னைப் போலவே உனக்கு புதிய ஆசிரியை சாரா லூயிஸையும் பிடிக்கும்தானே?" அவள் கேட்டதும் தன் காதுகளைத் தன்னிரு கையால் பொத்திக் கொண்டவள், "இனியொரு முறை அந்தப் பெயரை என்னிடம் உச்சரிக்க வேண்டாம் மிஸஸ் எட்வர்ட்.!" என்று கத்திச் சொன்னாள் எமிலி.ரேச்சல் யூகித்தது சரியாகி விட்டது. இனி மெது மெதுவாகத்தான் இவளிடமிருந்து விஷயத்தை கறக்க வேண்டும் என்று திட்டமிட்டு முன்பை விட எமிலியுடனான நேரத்தை அதிகப்படுத்திக்கொண்டாள்., ஹெட் டீச்சர் அனுமதியுடனும்,சென்கோ (special educational need coordinator) சிறப்பு பொறுப்பாளர் அறிவுறுத்தலின் பேரிலும்!சொல்லப்போனால் எமிலி ரேச்சலுடன் இருக்கும் சந்தர்ப்பங்களில் மிகவும் சாதாரணமாகவே இருந்தாள்.அப்போதுதான் மெல்ல மெல்ல மனம் திறந்து பேசத் தொடங்கினாள் எமிலி. எமிலியின் தாய் எலிசாவின் இரண்டாவது கணவன்தான் இப்போது எமிலியை அழைத்துப் போக வரும் மிஸ்டர் லூயிஸ். ஆரம்ப காலங்களில் லூயிஸ் எமிலியிடம் சாதாரணமாக நடந்து கொண்டாலும் நாளாக நாளாக அவனுக்கு அவளைக் கண்டால் பிடிக்காமல் போனது.வெளியில் சாதாரணமானவனாக நடந்து கொண்டாலும், வீட்டுக்குச் சென்றதும் அவள் மீது வார்த்தை வன்முறையை பிரயோகிக்கத் தொடங்கினான். அடிக்கடி அவளின் கற்றல் குறைபாட்டை சுட்டிக் காட்டிப் பேச, அதனால் எலிசாவுக்கும் லூயிஸுக்கும் அடிக்கடி சண்டை ஏற்படத் தொடங்கியது. எமிலி வரைதலில் ஈடுபட முற்படும் போதெல்லாம் அதைப் பிடுங்கி எறிந்து அவளை ஒரு அறையில் அடைத்து வைக்கத் தொடங்கினான்.இதையெல்லாம் பார்த்து வெறுத்துப் போன தாய் எலிசா,தன் வாழ்க்கை குறித்து கவலைப்பட்டு குடிக்கத் தொடங்கிவிட்டாள். வேலைக்குப் போய் வரும் நேரம் போக மீதி நேரமெல்லாம் அவள் குடிப்பதிலேயே ஈடுபட்டிருக்க, எமிலி மேலும் திண்டாடிப் போனாள்.இதுநாள்வரை கிடைத்து வந்த தாய்ப் பாசமும் லூயிஸ் வந்த பிறகு தனக்குக் கிடைக்கவில்லை என்ற ஏமாற்றம் அவளை மேலும் மனச்சிதைவுக்கு ஆளாக்கி விட்டிருந்தது.அதற்கு தகுந்தது போல புதிய ஆசிரியையாக சாரா லூயிஸ் வந்ததும், அந்தப் பெயரைக் கேட்டதுமே அவள் பயந்து போனாள். ஏற்கனவே தாயிடமிருந்து அரவணைப்பு கிடைக்காமல் தவிக்க, மிஸஸ் லூயிஸ் தன்னை, மிஸஸ், எட்வர்ட்டிடம் இருந்து பிரித்து விடுவாளோ...? தனக்கு இருக்கும் ஒரேநெருக்கமான ஆதரவும் போய் விடுமோ என்று பயந்தாள்."மிஸஸ் எட்வர்ட்... யூ வோன்ட் ஹேட் மீ, வில் யூ...?" ஒவ்வொரு முறை அவளுடன் தன் மனதைப் பகிரும் போதும் எமிலி கேட்கும் இக் கேள்வி ரேச்சலை துயரத்தில் ஆழ்த்தும்."நெவர் எமிலி! நான் ஏன் உன்னை வெறுக்க வேண்டும்? நீ ஒரு அற்புதமான பெண். ஒருநாளும் நான் உன்னை வெறுக்க மாட்டேன். ஐ பிராமிஸ்...!" என்று சொல்லி அவளுக்கு நம்பிக்கையூட்டி அவள் முகத்தில் தெரியும் நிம்மதியைக் கண்டு நெகிழ்ச்சியடைவாள்... வெளியே காட்டிடாமல்!எமிலியின் பிரச்னை என்னவென்று ஓரளவுக்கு தெரிந்துவிட்டது. இனி அடுத்த கட்ட நடவடிக்கைக்குத் தயாரானாள் ரேச்சல். சென்கோ மேற்பார்வையாளர் எமிலி விஷயத்தைக் கையாள ரேச்சலுக்கு முழு சுதந்திரம் தந்துவிட,இப்போது, எப்போதும் போல வகுப்பறையில் எமிலி பாடங்களை ரேச்சல் துணையுடன் நல்லவிதமாகவே செய்து முடித்தாள். இடையிடையே அவள் கேள்விகளுக்கு பதில் கொடுத்தபடி."எமிலி! உனக்கு ஒன்று தெரியுமா? எனக்குக் கூட எமிலி என்ற பெயர் அவ்வளவு பிடிக்காது...! உன்னுடன் பழகும் வரை...!" என்று ரேச்சல் கூறிட, எமிலியிடம் சிறிய அதிர்வு.!"ஒய்... மிஸஸ் எட்வர்ட்?"எமிலி வருத்தத்துடன் கேட்பது தெரிந்தது."லிசன் எமிலி! உன்னைப் போலவே எனக்கும் கசப்பான நிறைய அனுபவங்கள் ஏற்பட்டது எமிலி என்ற பெயர்கொண்ட ஒருவரால்...!" கூறி நிறுத்தி எமிலி இதை எப்படி எதிர்கொள்கிறாள் என்று கவனித்த ரேச்சல், எமிலியிடம் மீண்டும் பதட்டம் உண்டாவதைக் கண்டாள்.உடனே,அவள் கைகளை ஆறுதலுடன் பற்றிய ரேச்சல், "ஆனால், அதைத் தொடர விடவில்லை என் அம்மா! நல்லதையும், கெட்டதையும் ஒருவரின் பெயர் மட்டும் தீர்மானிக்காது. அவரின் நடவடிக்கைகளே தீர்மானிக்கும் என்று நிறைய நிறைய ஆதாரங்களுடன் எனக்கு எடுத்துச் சொல்ல மெல்ல மெல்ல நான் அதிலிருந்த உண்மையைக் கண்டு கொண்டேன். பிறகு அதே பெயரில் நீ வந்து என் மீது அளவில்லா அன்பைப் பொழியவும் நான் என்னுடைய தவறான எண்ணங்களை முழுதும் மாற்றிக் கொண்டேன். நீ மிஸஸ் சாரா லூயிஸ் மீது கொண்டிருப்பதும் அப்படிப்பட்டதொரு அறியாமையால் ஏற்பட்ட தவறுதான் என்று நான் நினைக்கிறேன். நீ என்ன நினைக்கிறாய்?""மிஸஸ் எட்வர்ட்...! உங்களுக்கு இருந்தது போல என்னுடைய தாய் இல்லையே...?" இப்போது நேரடியாக கேட்டிருந்தாள் எமிலி!"நிச்சயம் உன்னுடைய பிரச்னைக்கு தீர்வு காண்போம் எமிலி.பள்ளியின் சார்பில் முயற்சி மேற்கொள்ளப் படும். அதற்கு உன்னுடைய ஒத்துழைப்பும் தேவை.!" எமிலி வேண்டா வெறுப்பாக தலையசைத்து தன் சம்மதத்தை தெரிவித்தாள்.அவ்வளவு சுலபமாக எல்லாம் நடந்துவிடவில்லை எமிலியிடம் மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சி. இருந்தாலும் விடாமல் நிறைய பேசி முயற்சியைத் தொடர்ந்தாள் ரேச்சல்.ரேச்சல், மற்றும் பள்ளி நிர்வாகத்தின் தீவிர முயற்சியால் social service இதில் நேரடியாக தலையிடுகிறது. நேரடியாக எமிலியின் வீட்டுக்கு செல்ல, அங்கு அவர்கள் கண்ட காட்சி திகைப்பை உண்டாக்குகிறது.எமிலி வரைந்து மிஸ்டர் லூயிஸால் கசக்கி ஏறியப் பட்ட ஓவியங்கள் அனைத்தையும் வைத்துக்கொண்டு அழுதுகொண்டிருக்கிறாள் எலிசா!அவள் குடிக்கத் தொடங்கியது எமிலியைப் பிடிக்காததால் அல்ல! லூயிஸின் வன்முறையில் இருந்து மகளைக் காப்பாற்ற முடியவில்லையே என்றவிரக்தியால் என்று தெரிகிறது.உதவிக்கு வந்தவர்கள் எலிசாவிடம் பேசுகிறார்கள். அவளின் நிலைமையைப் புரிந்து கொண்டு அவளுக்கும் தைரியமூட்டுகிறார்கள்.அதற்குப் பிறகு எடுக்கப்படும் நடவடிக்கைகளில் லூயிஸ் சட்டப் படியான தண்டனைக்கு ஆளாகிறான். சில மாதங்களுக்குப் பிறகு, எப்போதும் போல வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருக்கிறாள் சாரா லூயிஸ். தன் இருப்பிடத்தில் இருந்து எழுந்து சென்ற எமிலி,மிஸஸ் லூயிஸ், இது நான் வரைந்தது. எப்படி இருக்கிறது? இது உங்களுக்கு என்னுடைய பரிசு...!" என்று கூறித் தந்ததை வியப்புடன் பெற்றுக் கொண்டு எமிலிக்கு நன்றி சொல்கிறாள் மிஸஸ் லூயிஸ்.சற்று தொலைவில் இருந்தபடி பார்த்துக்கொண்டிருந்த ரேச்சல் இதைப் பார்த்து புன்னகைக்கிறாள். வழக்கம் போல சாராவின் பார்வை ரேச்சலைத் தீண்டி விலகுகிறது.எமிலி ஓடிவந்து ரேச்சலை கட்டிக் கொள்கிறாள். " மிஸஸ் எட்வர்ட்! நீங்கள் சொன்னது சரிதான். இப்போது எனக்கு மிஸஸ் லூயிஸை மிகவும் பிடிக்கிறது. உங்களைப் போலவே...!"அங்கே அழகான ஆசிரியர், மாணவர் உறவு பூத்து குலுங்கியது. அது எமிலியை எந்த உயரத்திற்கும் இனி இட்டுச் செல்லும் என்று உறுதியாக நம்பினாள் ரேச்சல் எட்வர்ட்.! -இந்திராணி நாகசுப்ரமணியம்.தேர்தல்

vikatan
17 மார்., 05:30 AM
Grandma Moses: நம்பிக்கை தந்த தூரிகை; 78 வயதில் உலகைத் திரும்பிப் பார்க்க வைத்த மூதாட்டியின் கதை!
உலகம்

Grandma Moses: நம்பிக்கை தந்த தூரிகை; 78 வயதில் உலகைத் திரும்பிப் பார்க்க வைத்த மூதாட்டியின் கதை!

ஒவ்வொரு நாளும் தொடங்கும்போது, நம் கனவுகளைத் துரத்த நமக்கு ஒரு சிறிய உத்வேகம் தேவைப்படும். "எனக்கு வயதாகிவிட்டது, இனிமேல் என்னால் புதிதாக எதையும் சாதிக்க முடியாது" என்ற எண்ணம் உங்கள் மனதில் ஒருபோதும் வரக்கூடாது என்பதற்கான ஆகச்சிறந்த உதாரணம் அன்னா மேரி ராபர்ட்சன் மோசஸ் (Anna Mary Robertson Moses). உலகமே இவரை அன்பாக `கிராண்ட்மா மோசஸ்' (Grandma Moses) என்று அழைத்தது.Grandma Moses1860, செப்டம்பர் 7-ம் தேதி, அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள கிரீன்விச் என்ற விவசாய கிராமத்தில் பிறந்தார் அன்னா மேரி ராபர்ட்சன். வறுமையான குடும்பம், பத்து பிள்ளைகள் கொண்ட பெரிய வீடு. இதனால், அன்னாவுக்கு முறையான கல்வி கிடைக்கவில்லை. தனது வாழ்நாளில் அவர் சில மாதங்கள் மட்டுமே ஒரு சிறிய பள்ளிக்கூடத்திற்குச் சென்றார்.பன்னிரண்டு வயதிலேயே, குடும்ப வறுமையைப் போக்க பக்கத்து வீடுகளில் வேலைக்குச் சேர்ந்தார். தையல், சமையல், விவசாய வேலைகள் என அவர் இளமைக்காலம் முழுவதும் கடுமையான உழைப்பிலேயே கழிந்தது. கலை, ஓவியம் என்பதெல்லாம் அவர் கற்பனையிலும் எட்டாத ஆடம்பரங்களாக இருந்தன.Grandma Moses1887-ஆம் ஆண்டு, தனது 27-வது வயதில் தாமஸ் சால்மன் மோசஸ் என்ற விவசாயியைத் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகும் வாழ்க்கை எளிதாகிவிடவில்லை. இருவரும் இணைந்து விவசாயம் செய்தனர். அன்னா மொத்தம் 10 குழந்தைகளுக்குத் தாயானார்; ஆனால், மருத்துவ வசதிகள் இல்லாத அந்தக்காலத்தில், 5 குழந்தைகளைப் பறிகொடுத்தார்.Motivation Story: `உங்கமேல உங்களுக்கு நம்பிக்கை வேணும் பாஸ்!’ - மாணவன் உணர்த்திய நம்பிக்கைப் பாடம்எத்தனையோ வலிகள், இழப்புகள், வறுமை இருந்தும், அவர் ஒருபோதும் முடங்கிப் போகவில்லை. 1927-ஆம் ஆண்டு, தனது கணவர் தாமஸையும் மாரடைப்பால் இழந்தார். அப்போது அன்னாவுக்கு வயது 67.கணவரின் மறைவிற்குப் பிறகு, அன்னாவால் தொடர்ந்து விவசாய வேலைகளைச் செய்ய முடியவில்லை. எனவே, ஓய்வு நேரத்தைக் கழிக்க கம்பளி நூல்களைக் கொண்டு எம்ப்ராய்டரி தையல் வேலைப்பாடுகளில் படங்களை உருவாக்கத் தொடங்கினார். ஆனால், விதி அங்கும் விளையாடியது. அவருக்குக் கடுமையான `கீல்வாதம்' (Arthritis) நோய் வந்து, விரல்கள் வளைந்து, ஊசியைக்கூடப் பிடிக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டார்.Grandma Mosesஅப்போது அவருடைய தங்கை, "நீ ஏன் எம்ப்ராய்டரிக்குப் பதிலாக, தூரிகையை (Brush) வைத்து ஓவியம் வரையக் கூடாது?" என்று யோசனை கூறினார். வலியில் தவித்த அந்த மூதாட்டி, தனது 78-வது வயதில், எவ்வித ஓவியப் பயிற்சியும் இல்லாமல் முதல்முறையாக தூரிகையைக் கையில் எடுத்தார்.அன்னா தனது கிராமத்து நினைவுகளை, விவசாய வாழ்க்கையை அழகிய ஓவியங்களாகத் தீட்டினார். 1938-ஆம் ஆண்டு, அவர் வசித்த ஹூசிக் ஃபால்ஸ் (Hoosick Falls) என்ற ஊரில் இருந்த ஒரு மருந்துக் கடையின் கண்ணாடியில், தனது ஓவியங்களை விற்பனைக்காக வைத்தார். ஒரு ஓவியத்தின் விலை வெறும் 3 முதல் 5 டாலர்கள் மட்டுமே.Motivation Story: நடுக்கடல்... 16 மணி நேரம் உயிருக்குப் போராட்டம்; 62 வயது முதியவர் மீண்ட கதை!அந்த வழியாக வந்த லூயிஸ் கேல்டார் (Louis J. Caldor) என்ற கலைப்பொருள் சேகரிப்பாளர், இந்த ஓவியங்களைப் பார்த்தார். அதிலிருந்த யதார்த்தமும், உயிரோட்டமும் அவரை ஈர்த்தன. உடனே அங்கிருந்த அனைத்து ஓவியங்களையும் வாங்கிய அவர், அன்னாவைத் தேடிச் சென்று அவரை உலகிற்கு அறிமுகப்படுத்தினார்.Grandma Moses ஓவியம்ஒரு சாதாரண விவசாய மூதாட்டியின் ஓவியங்கள் நியூயார்க் நகரப் கண்காட்சிகளில் இடம்பெறத் தொடங்கின. 1940, அவரது 80-வது வயதில் `ஒரு விவசாய மனைவியின் ஓவியங்கள்’ (What a Farm Wife Painted) என்ற பெயரில் அவரது முதல் தனிக் கண்காட்சி நடந்தது. 1949ல் அமெரிக்காவின் அப்போதைய அதிபர் ஹாரி எஸ். ட்ரூமன் (Harry S. Truman), அன்னாவின் கலையைப் பாராட்டி தேசிய விருதினை வழங்கினார். 1953ல் உலகப் புகழ் பெற்ற 'டைம்' (TIME) பத்திரிகையின் அட்டைப்படத்தில் அவரது புகைப்படம் வெளியாகி வரலாற்றில் இடம்பிடித்தது. அவர் தனது 78 வயதிற்குப் பிறகு சுமார் 1,500-க்கும் மேற்பட்ட ஓவியங்களை வரைந்தார். அவரது ஓவியங்கள் பல லட்சங்களுக்கு ஏலம் போயின.Motivation Story: `சுரங்கத் தொழிலாளி டு சூப்பர் ஸ்டார்!' - சார்லஸ் பிரான்சன் சாதித்தது எப்படி?கிராண்ட்மா மோசஸுக்கு வண்ணங்களைக் கலக்கவோ, வரைவதற்கான மற்ற விதிகளோ தெரியாது. தன்னிடம் இருந்த பெயிண்ட்கள், சாதாரண பலகைகள், மற்றும் தீப்பெட்டிகளைக் கொண்டே ஆரம்பத்தில் ஓவியங்கள் வரைந்தார். அவர் நேரில் பார்த்து எதையும் வரையவில்லை. தனது இளமைக்கால நினைவுகளையும், பழைய கிராமத்து வாழ்க்கையையும் மட்டுமே கற்பனையாக வரைந்தார்.அவரது 100-வது பிறந்தநாளை நியூயார்க் மாகாணம் `கிராண்ட்மா மோசஸ் தினம்’ (Grandma Moses Day) என்று அதிகாரபூர்வமாக அறிவித்துக் கொண்டாடியது. 1961-ஆம் ஆண்டு, டிசம்பர் 13-ஆம் தேதி, தனது 101-வது வயதில் அவர் இயற்கை எய்தினார்.Grandma Moses ஓவியம்தனது வாழ்க்கையின் வசந்த காலத்தை 78 வயதில்தான் மோசஸ் தொடங்கினார். வலிகளும், இழப்புகளும், தளர்ந்த உடலும் அவரது கற்பனைக்குத் தடையாக இருக்கவில்லை. எனவே, நாம் ஒரு புதிய தொழிலைத் தொடங்கவோ, படிக்கவோ, அல்லது கனவை நோக்கி ஓடவோ `காலம் கடந்துவிடவில்லை'. நம் வாழ்க்கையின் மிகச்சிறந்த அத்தியாயம் இனிமேல்தான் எழுதப்பட உள்ளது என்ற நம்பிக்கையுடன் இன்றைய நாளைத் தொடங்குவோம்!Motivation Story: `நம்பினால் வெற்றி!' உலகின் முதல் பெண் இயக்குநர்! - மறக்க முடியாத மனுஷி ஆலிஸ்!

vikatan
17 மார்., 05:30 AM
வட கொரியா திடீர் ஏவுகணை தாக்குதல்? -'அலர்ட்' ஆகும் ஜப்பான் - என்ன நடந்தது?
உலகம்

வட கொரியா திடீர் ஏவுகணை தாக்குதல்? -'அலர்ட்' ஆகும் ஜப்பான் - என்ன நடந்தது?

ஒரு பக்கம் ஈரான் போர், உக்ரைன் போர் நடந்து கொண்டிருக்கிறது.இன்னொரு பக்கம், வட கொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன் சொந்த நாட்டில் தயாரித்த ஏவுகணை, துப்பாக்கி போன்றவற்றை சோதித்து வருகிறார்.இந்த நிலையில், ஜப்பான் மீது வட கொரியா தாக்குதல் நடத்தி உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.சானே தகைச்சிகார்க் தீவை தாக்கிய அமெரிக்கா; 'அமெரிக்க தூதரகத்தின் மீதே தாக்குதல்' பலமான பதிலடி கொடுக்கும் ஈரான்இது குறித்து ஜப்பான் பிரதமர் அலுவலகம் தனது எக்ஸ் பக்கத்தில், "வட கொரியா சந்தேகப்படக் கூடிய பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதலை நடத்தி உள்ளது.இதனால், ஜப்பான் பிரதமர் அலுவலகம் அறிவுறுத்தி உள்ளதாவது...இது குறித்த தகவல்களை சேகரித்து, ஆய்வு செய்து மக்களுக்கு சரியான விதத்திலும், நேரத்திலும் தர‌ வேண்டும்.விமானங்கள், கப்பல்கள் மற்றும் பிற சொத்துகளின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்.தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்... அசாதாரண சூழலுக்கு தயாராக வேண்டும்" என்று பதிவிட்டுள்ளது.ரஷ்ய எண்ணெய்: இந்தியாவை அமெரிக்கா மிரட்டியது; ஆனால், இப்போது கெஞ்சுகிறது - ஈரான் கேலி[Emergency alert]North Korea has launched a suspected ballistic missile. More updates to follow.— PM's Office of Japan (@JPN_PMO) March 14, 2026

vikatan
17 மார்., 05:30 AM

சமீபத்திய செய்திகள்

சமீபத்திய புதுப்பித்தல்கள்

நீளும் போர்: கேஸ் சிலிண்டர் முதல் பெட்ரோல் வரை.! - என்ன பிரச்னை, எப்படி சமாளிக்கலாம்?
உலகம்

நீளும் போர்: கேஸ் சிலிண்டர் முதல் பெட்ரோல் வரை.! - என்ன பிரச்னை, எப்படி சமாளிக்கலாம்?

vikatan
Mar 173 நிமிடம் படிக்க
Chennai : 'ஸ்டாக் இல்லை' - காலியான பெட்ரோல் பங்குகள்; பதற்றமடையும் சென்னை வாகன ஓட்டிகள்!
உலகம்

Chennai : 'ஸ்டாக் இல்லை' - காலியான பெட்ரோல் பங்குகள்; பதற்றமடையும் சென்னை வாகன ஓட்டிகள்!

vikatan
Mar 173 நிமிடம் படிக்க
முதலில் தந்தை; இப்போது மகன்: மொஜ்தபா காமேனிக்கும் குறி வைக்கும் அமெரிக்கா - என்ன சொல்கிறது?
உலகம்

முதலில் தந்தை; இப்போது மகன்: மொஜ்தபா காமேனிக்கும் குறி வைக்கும் அமெரிக்கா - என்ன சொல்கிறது?

vikatan
Mar 173 நிமிடம் படிக்க
கோவில்பட்டி: போர் சூழலால் ரூ.2 கோடி மதிப்பிலான கடலை மிட்டாய்கள் தேக்கம்; தொழிலாளர்கள் பாதிப்பு
உலகம்

கோவில்பட்டி: போர் சூழலால் ரூ.2 கோடி மதிப்பிலான கடலை மிட்டாய்கள் தேக்கம்; தொழிலாளர்கள் பாதிப்பு

’கடலை மிட்டாய்’ என்றாலே தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டிதான் நினைவுக்கு வரும். கடந்த 2020-ம் ஆண்டு புவிசார் குறியீடு பெற்ற பின்னர் வெளி மாநிலங்கள், வெளி நாடுகள் எனக் கோவில்பட்டி கடலை மிட்டாய் விற்பனை அதிகரித்துள்ளது. கோவில்பட்டி சுற்று வட்டாரப் பகுதிகளில் 120 கடலை மிட்டாய் உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன. 20,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறார்கள். உற்பத்தி செய்யப்படும் கடலை மிட்டாயில் 70 சதவீதம் வளைகுடா நாடுகளுக்கே ஏற்றுமதி செய்யப்படுகிறது.கடலை மிட்டாய்இந்த நிலையில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையில் நடந்து வரும் வளைகுடா போர் காரணமாக கோவில்பட்டி கடலை மிட்டாய் ஏற்றுமதி முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவில்பட்டி கடலை மிட்டாய் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கத்தின் செயலாளர் கண்ணனிடம் பேசினோம், “சவுதி அரேபியா, கத்தார், குவைத், ஓமன், ஐக்கிய அரபு அமீர்கம் உள்ளிட்ட நாடுகளுக்கு விமானம் மூலமும், கப்பல் மூலமும் கடலை மிட்டாய் ஏற்றுமதி செய்து வருகிறோம்.மத்திய கிழக்கு போர் எதிரொலி - இந்தியாவின் இந்த 30 பங்குகள் கடும் பாதிப்பைச் சந்திக்க வாய்ப்பு!இந்தப் போர் காரணமாக கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கடலைமிட்டாய் ஏற்றுமதி செய்யப்படுவது முற்றிலும் தடைபட்டுள்ளது. அத்துடன் வெளிநாடுகளில் இருந்து எங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள ஆர்டர்களை ரத்து செய்து வருகின்றனர். இதனால், சுமார் ரூ.2 கோடி மதிப்பிலான கடலை மிட்டாய்கள் தேக்கம் அடைந்துள்ளன. கடலை மிட்டாய் உற்பத்திஅத்துடன் உற்பத்தி முடங்கும் சூழலும், தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளன. பெட்ரோலியப் பொருட்கள் கிடைப்பதில் சிரமம் இருப்பதால், பி.பி. கவர், பிளாஸ்டிக் ஜார் உள்ளிட்டவையின் விலையும் ஏற்றம் அடைந்துள்ளது. ஏற்கெனவே நிலக்கடலையின் விலை ஏற்றத்தினால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள போர் கடலை மிட்டாய் உற்பத்தியைப் பாதிக்கிறது” என்றார். "நெதன்யாகு பேசுவது போல் ஏஐ வீடியோ?" - சர்ச்சைக்கு இஸ்ரேல் அரசு சொல்லும் பதில் என்ன?

vikatan
Mar 17, 05:30 AM
5 நிமிடம் படிக்க

விளம்பர இடம்

உங்கள் விளம்பரத்தை இங்கே காட்சி செய்யலாம்

மேலும் செய்திகள்

தமிழ்நாடு முழுவதும் மற்றும் அதற்கு அப்பால் இருந்து சமீபத்திய கதைகளுடன் புதுப்பித்த நிலையில் இருங்கள்

ரஷ்ய எண்ணெய்: இந்தியாவை அமெரிக்கா மிரட்டியது; ஆனால், இப்போது கெஞ்சுகிறது - ஈரான் கேலி
உலகம்

ரஷ்ய எண்ணெய்: இந்தியாவை அமெரிக்கா மிரட்டியது; ஆனால், இப்போது கெஞ்சுகிறது - ஈரான் கேலி

இந்தியாவை ரஷ்ய எண்ணெய் வாங்க அமெரிக்கா 'அனுமதி'த்தது குறித்து ஈரான் கேலி செய்துள்ளது. ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குகிறது என்று தான் இந்தியாவிற்கு கூடுதல் 25 சதவிகித வரி விதித்தது அமெரிக்கா. இந்தியா உடனான ஒப்பந்தத்தையும் தாமதம் செய்தது.இப்போது ஈரான் போர் தொடங்கிய உடன் ரஷ்ய எண்ணெயை இந்தியா தற்காலிகமாக வாங்கிக் கொள்ளலாம் என்று அமெரிக்கா கூறியுள்ளது.இதுகுறித்து ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் சையத் அப்பாஸ் அரக்ச்சி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது...சையத் அப்பாஸ் அரக்ச்சிKharg Island: ஈரான் மகுடக் கல்லில் தாக்குதல்; "நாகரிகத்திற்காக 'இதை' மட்டும் செய்யவில்லை" - ட்ரம்ப் "ரஷ்ய எண்ணெயை இறக்குமதி செய்வதால் அமெரிக்க பல மாதங்களாக இந்தியாவை மிரட்டியது.ஆனால், ஈரான் உடனான போர் தொடங்கிய இரண்டு வாரங்களில், இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளிடம் ரஷ்ய எண்ணெயை வாங்க சொல்லி அமெரிக்கா கெஞ்சுகிறது.ஈரான் மீதான சட்டத்திற்குப் புறம்பான அமெரிக்காவின் போருக்கு ஆதரவளித்தால் ரஷ்யாவிற்கு எதிராக அமெரிக்காவின் ஆதரவு கிடைக்கும் என்று ஐரோப்ப நாடுகள் நினைத்தன. பாவம்" என்று குறிப்பிட்டுள்ளார்.ஈரான் தாக்குகிறதுதான்; ஆனாலும், மோதாமல் 'சைலன்ட்டாக' இருக்கும் வளைகுடா நாடுகள் - என்ன காரணம்?The U.S. spent months on bullying India into ending oil imports from Russia. After two weeks of war with Iran, White House is now begging the world—incl India—to buy Russian crude.Europe thought backing illegal war on Iran would win U.S. support against Russia.Pathetic. pic.twitter.com/fbkrXpXa9P— Seyed Abbas Araghchi (@araghchi) March 13, 2026

vikatan
17 மார்.
3 நிமிடம் படிக்க
ஐநா: ஈரானுக்கு எதிராக வாக்களித்த இந்தியா; வெளிநடப்பு செய்த ரஷ்யா, சீனா! - என்ன நடந்தது!
உலகம்

ஐநா: ஈரானுக்கு எதிராக வாக்களித்த இந்தியா; வெளிநடப்பு செய்த ரஷ்யா, சீனா! - என்ன நடந்தது!

அமெரிக்கா- இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது போர் தொடங்கி இன்று 13 நாள்கள் ஆகிவிட்டது. ஈரான் மீதான இஸ்ரேலிய தாக்குதல்களைத் தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு ஆதரவாக இருக்கும் வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதல்களை நடத்தியது. பிப்ரவரி 28 முதல் ஆறு Gulf Cooperation Council (ஜிசிசி) நாடுகள் மீதும் ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளது. ஈரான் வரலாற்றில் முதன் முறையாக முழு வளைகுடா பிராந்தியத்தையும் நேரடியாக குறிவைப்பது இதுவே முதல் முறை.இந்தியா - இஸ்ரேல் உறவுஇந்த தாக்குதலின்போது விமான நிலையங்கள், அமெரிக்காவின் இராணுவ தளங்கள், எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள், துறைமுகங்கள் என அமெரிக்காவுக்கு உதவிகள் செல்லும் அனைத்துத் வாய்ப்புகளையும் குறிவைத்தது. இந்த தாக்குதல்களில் ஆறு பேர் கொல்லப்பட்டனர், 122 பேர் காயமடைந்தனர். குவைத்தில், ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் அலி அல் சேலம், கேம்ப் புஹ்ரிங் தளங்கள், குவைத் சர்வதேச விமான நிலையம் மற்றும் அமெரிக்க தூதரகம் ஆகியவை தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டது.இந்த தாக்குதலில் ஆறு அமெரிக்க வீரர்கள் மற்றும் இரண்டு காவலர்கள் கொல்லப்பட்டனர். மூன்று F-15 போர் விமானங்களும் சுட்டு வீழ்த்தப்பட்டன. இதனால் வளைகுடா நாடுகளில் போர் பதற்றம் நீடிக்கிறது. இந்த நிலையில், வளைகுடா நாடுகள் மற்றும் ஜோர்டானுக்கு எதிரான ஈரானின் தாக்குதல்களைக் கண்டித்து ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் ஒரு தீர்மானம் கொண்டுவந்தது. அந்த தீர்மானத்தில், ``ஈரானின் அனைத்து தாக்குதல்களையும் உடனடியாக நிறுத்த வேண்டும். ஹார்முஸ் ஜலசந்தி அச்சுறுத்தல்களைக் கைவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டிருக்கிறது.அமெரிக்கா - சீனாதற்போது அமெரிக்காவின் தலைமையில் உள்ள 15 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் புதன்கிழமை இந்தத் தீர்மானத்தை ஏற்றுக்கொண்டது. இந்த தீர்மானத்தை ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, பங்களாதேஷ், பூட்டான், கனடா, எகிப்து, பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், இத்தாலி, ஜப்பான், குவைத், மலேசியா, மாலத்தீவுகள், மியான்மர், நியூசிலாந்து, நோர்வே, ஓமன், பாகிஸ்தான், கத்தார், சவுதி அரேபியா, சிங்கப்பூர், ஸ்பெயின், உக்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா, ஏமன், சாம்பியா இந்தியா உள்ளிட்ட 130 க்கும் மேற்பட்ட நாடுகளுடன் இணைந்து ஈரானுக்கு எதிராக வாக்களித்திருக்கிறது. அதே நேரத்தில் ஐ.நா-வின் நிரந்தர உறுப்பினர்களான சீனாவும் ரஷ்யாவும் வாக்களிக்காமல் வெளிநடப்பு செய்தன.`கப்பலை மூழ்கடிப்பது தான் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்' - ஈரான் கப்பலை தாக்கியது குறித்து ட்ரம்ப்

vikatan
17 மார்.
3 நிமிடம் படிக்க
இந்தியா வந்துகொண்டிருந்த சரக்குக் கப்பல் மீது தாக்குதல்: ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் போரால் பதற்றம்!
உலகம்

இந்தியா வந்துகொண்டிருந்த சரக்குக் கப்பல் மீது தாக்குதல்: ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் போரால் பதற்றம்!

ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் இணைந்து போர் தொடுத்த நிலையில், மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் நீடிக்கிறது. 10 நாள்களைக் கடந்து போர் தொடர்ந்துவரும் நிலையில், உலகின் பல்வேறு பகுதிகளில் எரிவாயு, எண்ணெய் உள்ளிட்ட பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இதற்கிடையில், மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து ஹார்மூஸ் ஜலசந்தி வழியே சரக்கு கப்பல்கள் பயணிக்க வேண்டிய சூழலில், ஈரான் ஹார்முஸ் பகுதியை மூடுவதாக அறித்தது. தற்போது ஏற்பட்டிருக்கும் எரிவாயு உள்ளிட்ட எண்ணெய் பொருள்களின் தட்டுப்பாடுக்கு இதுவும் ஒரு காரணம்.தாக்கப்பட்ட கப்பல்இதற்கிடையில், ஹார்மூஸ் பகுதியை மூடுவதாகவும், அந்தப் பகுதிக்குள் அத்துமீறி நுழையும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் எனவும் ஈரான் அறிவித்திருந்தது. இந்த நிலையில், இன்று ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள ஒரு துறைமுகத்திலிருந்து தாய்லாந்து கொடியுடன் புறப்பட்ட சரக்குக் கப்பல் ஒன்று ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகே தாக்கப்பட்டதாக ராயல் தாய் கடற்படை தெரிவித்துள்ளது.தாய்லாந்து நிறுவனமான பிரீசியஸ் ஷிப்பிங் பிஎல்சிக்குச் சொந்தமான மயூரி நரீ என்ற சரக்கு கப்பல், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள கலீஃபா துறைமுகத்திலிருந்து புறப்பட்டு, இந்தியாவில் உள்ள கண்ட்லா துறைமுகத்திற்கு வந்துகொண்டிருந்தது. அப்போது ​​ஹார்முஸ் ஜலசந்தியைக் கடக்கும்போது அந்தக் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இந்தக் கப்பலில் பயணித்த 20 மாலுமிகள் மீட்கப்பட்டுள்ளனர். ஆனால் மூன்று பேரின் நிலை குறித்து எந்த தகவலும் இல்லை.தாக்கப்பட்ட கப்பல்ராயல் தாய் கடற்படை வெளியிட்ட அறிக்கையில், ``தாக்குதலுக்கான கப்பல் குறித்த குறிப்பிட்ட விவரங்கள் மற்றும் காரணம் தற்போது விசாரணையில் உள்ளது. ஓமானி கடற்படை 20 மாலுமிகளை மீட்டுள்ளனர். மீதமுள்ள மூன்று பணியாளர்களை மீட்பதற்கான முயற்சிகள் தற்போது நடந்து வருகிறது. நேற்று வளைகுடாவில் மூன்று வணிகக் கப்பல்கள் தாக்கப்பட்டதாக ஐக்கிய இராச்சிய கடல்சார் வர்த்தக செயல்பாட்டு மையம் தெரிவித்தது. இந்த தாக்குதலுக்கு பின்னணியில் ஈரான் இருக்கலாம் எனக் கருதப்படுகிறது" எனக் குறிப்பிட்டிருக்கிறது.`ஈரானும் இஸ்ரேலும் எப்படியான நண்பர்கள் தெரியுமா?’ - நட்பு, பகையான பின்னணி | Iran vs Israel

vikatan
17 மார்.
3 நிமிடம் படிக்க
"உயிருடன் இருந்தால் விடமாட்டோம்" - நெதன்யாகுவுக்கு ஈரான் இராணுவம் நேரடி கொலை மிரட்டல்!
உலகம்

"உயிருடன் இருந்தால் விடமாட்டோம்" - நெதன்யாகுவுக்கு ஈரான் இராணுவம் நேரடி கொலை மிரட்டல்!

கடந்த பிப்ரவரி 28 அன்று, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய கூட்டுத் தாக்குதலில் ஈரானின் அப்போதைய உச்சத் தலைவர் அலி காமேனி கொல்லப்பட்டார். இந்தத் தாக்குதலில் காமேனியின் மகள், மருமகன் மற்றும் 14 மாதப் பேத்தி ஆகியோரும் உயிரிழந்தனர். 'இந்தக் கொடூரக் கொலைக்கு பழிவாங்குவோம்' எனக் குறிப்பிட்ட ஈரான், தொடர்ந்து அமெரிக்கா, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இருக்கும் பகுதிகள் குறிவைத்து தாக்கப்பட்டது. இதற்கிடையில், 'ஈரான் தாக்குதலில் நெதன்யாகு கொல்லப்பட்டுவிட்டார்' என ஈரான் தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டது.6 விரலுடன் நெதன்யாகுஇந்தக் கூற்றை முழுமையாக மறுத்த இஸ்ரேல், நெதன்யாகு உரையாற்றுவது போன்ற ஒரு வீடியோவை வெளியிட்டது. இந்த வீடியோ குறித்து கருத்து தெரிவித்த ஈரான், ``இந்த வீடியோவில் நெதன்யாகுவுக்கு 6 விரல் இருப்பது போல காட்சிகள் வருகின்றன. இது ஏஐ வீடியோ" எனக் குறிப்பிட்டது. ஆனால், இஸ்ரேல் பிரதமர் அலுவலகம், ``பிரதமர் நெதன்யாகு நலமாக இருக்கிறார். இவை அனைத்தும் முற்றிலும் வதந்திகள்" என விளக்கம் அளித்துள்ளது.இதற்கு பதிலளித்திருக்கும் ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரக் காவல்படை' (IRGC) ``நெதன்யாகு குழந்தைகளைக் கொல்லும் குற்றவாளி... எங்கள் தலைவரின் குடும்பத்தைச் சிதைத்த அவரை வேட்டையாடாமல் விடமாட்டோம். ஒருவேளை அவர் கொல்லப்படவில்லை என்றால். அவரை தேடி வேட்டையாடுவோம்" என பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்திருக்கிறது.ஈரானின் இந்த நேரடி கொலை மிரட்டல் மத்திய கிழக்கு நாடுகளில் பெரும் போர் மேகங்களாகச் சூழ்ந்துள்ளதோடு, இரு நாடுகளுக்கும் இடையிலான மோதலை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்றுள்ளது."நெதன்யாகு பேசுவது போல் ஏஐ வீடியோ?" - சர்ச்சைக்கு இஸ்ரேல் அரசு சொல்லும் பதில் என்ன?

vikatan
17 மார்.
3 நிமிடம் படிக்க
Trump: "பொழுதுபோக்கிற்காக மீண்டும் தாக்குவோம்" - ஈரான் மீதான தாக்குதலைத் தீவிரப்படுத்தும் ட்ரம்ப்
உலகம்

Trump: "பொழுதுபோக்கிற்காக மீண்டும் தாக்குவோம்" - ஈரான் மீதான தாக்குதலைத் தீவிரப்படுத்தும் ட்ரம்ப்

ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தாக்குதல் நடத்திய நிலையில், அதற்கு பதில் தாக்குதல் தொடுத்துவருகிறது ஈரான். கடந்த பிப்ரவரி 28 முதல் தொடங்கி நடந்து வரும் இந்த வான்வழிப் போரில் இதுவரை 2,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரானின் இஸ்ஃபஹான் நகரில் உள்ள தொழிற்சாலை ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 15 பேர் பலியாகினர். அமெரிக்காவின் இந்த நடவடிக்கைகள் மத்திய கிழக்கில் பெரும் பதற்றமான சூழலை ஏற்படுத்தியிருக்கிறது.ட்ரம்ப்இந்த நிலையில் அதிபர் ட்ரம்ப் NBC செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ``ஈரானின் கர்க் தீவில் (Kharg Island) உள்ள பெரும்பாலான ராணுவ இலக்குகள் ஏற்கனவே அமெரிக்கத் தாக்குதலில் நிர்மூலமாக்கப்பட்டுவிட்டன. தேவைப்பட்டால் பொழுதுபோக்கிற்காக இன்னும் சில முறை அங்கு தாக்குதல் நடத்துவோம் ஈரான் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருக்கிறது. ஆனால் அவர்கள் முன்வைக்கும் நிபந்தனைகள் ஏற்புடையதாக இல்லை.ஈரானுடனான இந்த மோதலால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. எனவே, உலகின் முக்கிய எண்ணெய் வழித்தடமான ஹார்முஸ் நீரிணையின் பாதுகாப்பை உறுதி செய்ய சீனா, பிரான்ஸ், ஜப்பான், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் தங்கள் போர்க்கப்பல்களை அனுப்ப வேண்டும். அந்தப் பகுதியின் பாதுகாப்பிற்கு அமெரிக்கா முழு ஒத்துழைப்பு வழங்கும்" எனக் குறிப்பிட்டார்.ஈரான் போர்இதற்கு பதிலடி கொடுத்திருக்கும் ஈரான், ``அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்கள் நிறுத்தப்படும் வரை போர் நிறுத்தத்திற்கு வாய்ப்பில்லை. துபாய், அபுதாபி மற்றும் புஜைரா (Fujairah) போன்ற ஐக்கிய அரபு அமீரகத்தின் முக்கிய துறைமுகப் பகுதிகளிலிருந்து பொதுமக்கள் வெளியேறுமாறு எச்சரிக்கிறோம்" எனத் தெரிவித்திருக்கிறது. இதற்கிடையில், ஈரானிலிருந்து அமீரகத்தை நோக்கி ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டதால், அங்குள்ள முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் உலகளவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு பெருமளவில் ஏற்பட வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.ஈரான் யுத்தம்... அத்துமீறலுக்கு இன்னொரு பெயர் அமெரிக்கா!

vikatan
17 மார்.
3 நிமிடம் படிக்க
`என்னதிது.?' போரால் நேரடியாக பாதிக்கும் அபுதாபி, ஓமன், குவைத் நாடுகளின் சந்தை ஏற்றம் - அது எப்படி?
உலகம்

`என்னதிது.?' போரால் நேரடியாக பாதிக்கும் அபுதாபி, ஓமன், குவைத் நாடுகளின் சந்தை ஏற்றம் - அது எப்படி?

மேற்காசிய போர் தொடங்கியதில் இருந்து இந்தியப் பங்குச்சந்தை ஏற்றம், இறக்கம் என்று தான் இருந்து வருகிறது. ஆனால், அந்தப் போர் நடக்கும் பிராந்தியமான இஸ்ரேல், துபாய், அபுதாபி ஆகிய நாடுகளில் பங்குச்சந்தை எப்படி இருக்கிறது என்பதைக் கூறுகிறார் பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்.பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்ஆட்டோவுக்கு பயன்படுத்தும் LPGயை வீட்டு சிலிண்டர்களில் நிரப்பலாமா? பிரச்னை இல்லையா? | Explains"அபுதாபி, துபாய், ஓமன், குவைத் போன்ற நாடுகள் ஏதோ ஒரு வகையில் ஈரான் போரின் தாக்கத்தைச் சந்தித்து இருக்கின்றன. ஆனால், இந்த நாடுகளின் சந்தைகள் பெரியளவில் சரிவுகளைச் சந்திக்கவில்லை.நேற்றைய தின நிலவரத்தின் படி, அபுதாபி சந்தை (ADX General) வெறும் 133 புள்ளிகள் மட்டுமே இறங்கியுள்ளது. ஒரு மாதத் தரவுகளை எடுத்துப் பார்த்தாலும், 7 சதவிகிதம் மட்டுமே வீழ்ச்சியடைந்துள்ளது. இஸ்ரேல் சந்தை (Tel Aviv 125 Index) நேற்று 9 புள்ளிகள் ஏற்றத்துடன் முடிந்திருக்கிறது. ஓமன் (Muscat Stock Exchange (MSX)) சந்தையும் 9 புள்ளிகள் ஏற்றத்துடனேயே முடிந்திருக்கிறது. துபாய் (Dubai Financial Market (DFM)) சந்தை 140 புள்ளிகள் வீழ்ச்சியிலும், குவைத் (Boursa Kuwait) சந்தை 113 புள்ளிகள் ஏற்றத்துடனும் முடிந்திருக்கிறது.இந்தச் சந்தைகளின் முடிவு அனைத்துமே கலவையாக இருக்கின்றன... பெரியளவில் வீழ்ச்சியும் இல்லை.ஏன் அந்தச் சந்தைகள் வலுவாக உள்ளன? துபாய், அபுதாபி, குவைத் ஆகிய நாடுகளின் சந்தை, 'Shallow Market'. அதாவது இந்தச் சந்தைகளில் அவர்களுடைய சொந்த நாட்டு முதலீட்டாளர்களே குறைவாகத் தான் இருப்பார்கள். அப்போது அந்நிய முதலீட்டாளர்களின் எண்ணிக்கையைக் கேட்கவே வேண்டாம். ஈரான் போர்ஈரான் போருக்குப் பின், உலோகங்களில் நடக்க உள்ள மாற்றங்கள்; இப்போதே கவனிங்க முதலீட்டாளர்களே!மேலே சொன்ன நாடுகளில் உள்ள பெரிய முதலீட்டாளர்கள் கூட வெளிநாடுகளில் தான் அதிகம் முதலீடு செய்கிறார்கள். மேலும், அங்கே அந்நிய முதலீட்டாளர்கள் குறைவு. ஆக, அங்கிருக்கும் சிறிய எண்ணிக்கையிலான முதலீட்டாளர்கள் மட்டுமே அங்கே முதலீடு செய்வதால், அந்த நாடுகளின் சந்தை பெரியளவில் வீழ்ச்சியைக் காணவில்லை. ஒருவேளை, அந்த நாடுகளில் முதலீடு செய்திருக்கும் பணத்தை வேறு எங்கு கொண்டு செல்வது என்று அந்தந்த நாட்டு முதலீட்டாளர்களுக்குத் தெரியாமல் கூட இருக்கலாம். அதனால், அந்த சந்தைகள் பெரியளவில் வீழ்ச்சியைச் சந்திக்காமல் இருக்கலாம்". என்றார். அமெரிக்காவிற்கு பெரும் சிக்கலாகும் ஈரான் 'டிரோன்கள்' - உக்ரைனுக்கு 'நோ' சொன்ன விளைவு இது!

vikatan
17 மார்.
3 நிமிடம் படிக்க
'தனி ரூட்டில் ஆதவ்; அப்செட் ஆன விஜய்; ரஜினி வழி 'செக்' ! - குஷியில் ஆனந்த்!
தமிழ்நாடு

'தனி ரூட்டில் ஆதவ்; அப்செட் ஆன விஜய்; ரஜினி வழி 'செக்' ! - குஷியில் ஆனந்த்!

மேடை இலக்கணம் தெரியாமல் ரஜினியை எக்குத்தப்பாக சீண்டி பேசி ரஜினி ரசிகர்களை கோபப்படுத்தி, இப்போது ரஜினியே 'காலம் காத்திருந்து பதில் சொல்லும்' என தவெகவுக்கு எதிராக அரசியல் நெடி வீச அறிக்கை வெளியிடும் அளவுக்கு செய்திருக்கிறார் ஆதவ் அர்ஜூனா. அவரின் பேச்சும் அதற்கான எதிர்வினைகளும் தவெக தலைமையையே அப்செட் ஆக செய்திருப்பதாக கிசுகிசுக்கின்றனர் பனையூர் வட்டாரத்தினர். Aadhav Arjuna'ஆதவ் தலைமையை தர்ம சங்கடத்துக்கு உள்ளாக்குறது இது ஒன்னும் முதல் முறை இல்லைங்க...' என பேசத் தொடங்கும் தலைமைக்கு நெருக்கமான நிர்வாகிகள், 'அவர் கட்சியில் சேர்ந்த புதிதிலேயே, 'இந்த கட்சியில் கட்டமைப்பே இல்லை. கட்சியின் கட்டமைப்பை நான் தான் முறைப்படுத்தப் போகிறேன்' என கொஞ்சம் துடுக்காக இருந்தார்.விசிக-வில் செய்ததை போல தவெகவிலும் தனியாக ஒரு ரூட் எடுக்க நினைத்தார். ஆனால், ஆனந்தும் ஜானும் அதற்கான இடத்தை கொடுக்கவில்லை என்கிறார்கள். அதிலேயே இவர்களுக்குள் முட்டல் மோதல் தொடங்கிவிட்டது. ஆக்டிவாக வேலை செய்யக்கூடியவர், தேர்தல் அனுபவம், வைட்டமின் வசதிகள் உண்டு என்பதால் தலைவருக்கு ஆதவ்வின் மீது கொஞ்சம் நம்பிக்கை உண்டு. அதனால்தான் விஜய்யை விட ஆதவ் தான் அதிகமாக பேசுகிறார் என்கிற விமர்சனங்களுக்கெல்லாம் தலைவர் காது கொடுத்ததே இல்லை.ஆதவ்ஆனால், கரூருக்கு பிறகான சிறப்புப் பொதுக்குழு ஒன்றில் அத்தனை சேனல்களிலும் லைவ் ஓடிக்கொண்டிருக்கையிலேயே, '2021 இல் கருப்பு சிவப்பு சைக்கிளை ஓட்டி தலைவர் திமுகவுக்கு ஆதரவு கொடுத்தார்' எனப் பேசி தலைவரையே சங்கடப்படுத்தினார். ஆதவ் பேசியதை ஆமோதிக்கவும் முடியாமல் மறுக்கவும் முடியாமல் தலைவர் தர்ம சங்கடத்தில் ஆழ்ந்தார். அதன்பிறகு ஆதவ் செங்கோட்டையனை கட்சிக்குள் சேர்க்க காய்களை நகர்த்தி வெற்றிகரமாக அதை செய்து முடிக்கையில்தான் தலைவர் கொஞ்சம் கூல் ஆனார். ஆனால், ஆனந்த், ஆதவ் மீது இருந்த மன மாச்சர்யங்கள் மட்டும் அப்போதும் குறையவில்லை' என்கின்றனர். 'சமீபத்தில் தேர்தல் கண்காணிப்பாளர்களை விஜய் நியமித்திருந்தார். அதில் முதன்மை கண்காணிப்பாளராக ஆனந்த், ஆதவ், செங்கோட்டையன் ஆகியோருக்கு பொறுப்பு வழங்கியிருந்தார். மூவரில் ஆதவ்வுக்கு மட்டும் கூடுதலாக சென்னை உட்பட 4 மாவட்டங்களுக்கான பொறுப்பையும் வழங்கியிருந்தார். உடனே ஆதவ் டீம் 'ஆனந்துக்கு கொடுக்கப்படாத கூடுதல் பொறுப்பு ஆதவ்வுக்கு கொடுக்கப்படுகிறது. தளபதியின் நம்பிக்கையை பெற்று கட்சிக்குள் பவர் சென்டராக ஆதவ் மாறுகிறார்' என ஒரு செய்தியை முக்கியமானவர்களுக்கு ஃபார்வர்ட் செய்தனர்.Aadhavஆனந்த் இதில் ஏகத்துக்கும் கடுப்பாகிவிட்டார். அது தெரிந்தும் ஆதவ் தரப்பு நிறுத்தவில்லை. விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட திட்டமிடப்பட்டிருப்பதால் அங்கே முதலில் செயல் வீரர்களை கூட்டத்தை நடத்தினர். பேசிய அத்தனை நிர்வாகிகளும் தொகுதியை தலைவரே அறிவித்தால்தான் நன்றாக இருக்கும் என்பதால் பூடகமாக மட்டுமே பேசினார். ஆனால், ஆதவ் மைக்கை பிடித்த உடனேயே முந்தி கொண்டு தலைவர் பெரம்பூரில் போட்டியிடுகிறார் என மொத்தமாக போட்டுடைத்தார். ஸ்கூப் நியூஸை ஆதவ் இறக்கிவிட்டதால் ஆனந்தின் பேச்சுக்கு அந்த நிர்வாகிகள் கூட்டத்தில் முக்கியத்துவமே இல்லாமல் போனது. அதில் ஆனந்த் கடும் அப்செட். சென்னை மாவட்ட தேர்தல் கண்காணிப்பாளர் என்பதால் விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியை மொத்தமாக கையிலெடுத்துவிட்டார் ஆதவ். தொகுதியில் ஆனந்தை மிஞ்சி நிர்வாகிகள் கூட்டத்தையும் நடத்தி வருகிறார். அதேமாதிரி, ஆதவ் போட்டியிடவிருக்கும் வில்லிவாக்கம் தொகுதியில் அவரின் தங்கை சீதா லெட்சுமியும் வீடு வீடாக பரப்புரை செய்வார் என மேடையிலேயே அறிவித்திருந்தார். குடும்ப அரசியலுக்கு எதிராக பேசிவிட்டு நாமே இப்படி செய்தால் எப்படி என அதிலும் ஆனந்த் கடும் அப்செட். ஆதவ் மீதான புகார்களை லிஸ்ட் போட்டு வைத்துக் கொண்டு தலைவரின் காதில் போட சரியான சமயம் பார்த்து காத்திருந்தார். அதற்குள் ரஜினியை பற்றி பேசி அவரே சிக்கிக்கொண்டார். இப்போது ரஜினியே ஆதவ்வுக்கு எதிராக அறிக்கை விட்டிருப்பதால் தலைவரே அவரை பேச்சுக்கு செக் வைப்பார் என்கிற குஷியில் இருக்கிறார் ஆனந்த்' என்கின்றனர் தவெகவின் உள் விவகாரம் அறிந்தவர்கள்.Aadhav'காலம் காத்திருந்து பதில் சொல்லும்' என்கிற ரஜினியின் அறிக்கைக்கு ஆதவ்வை வைத்தே பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி சுமுகமாக பிரச்னையை முடிக்க விஜய் திட்டமிட்டிருக்கிறார். ஆனால், பத்திரிகையாளர் சந்திப்பில் மீண்டும் எதையாவது பேசி புதிய பூதத்தை ஆதவ் கிளப்பிடக்கூடாது என்பதற்காக இப்போது அந்த பத்திரிகையாளர் சந்திப்பையும் ரத்து செய்திருப்பதாக கிசுகிசுக்கின்றனர்.'தேர்தல் நேரத்தில் இன்னொரு நடிகரின் ரசிகர்களை எதிரிகளாக மாற்றும் வகையில் இப்படியான விவகாரமெல்லாம் தேவையா..' என தவெக நிர்வாகிகளும் அதிருப்தியில் இருக்கின்றனர்.

vikatan
17 மார்.
3 நிமிடம் படிக்க
கரூர் : 2021-ல் 4/4 பெற்ற செந்தில் பாலாஜி; தவெக வருகைக்குப் பின்.! | இப்போது முந்துவது யார்?
தமிழ்நாடு

கரூர் : 2021-ல் 4/4 பெற்ற செந்தில் பாலாஜி; தவெக வருகைக்குப் பின்.! | இப்போது முந்துவது யார்?

முந்துவது யார்?பரபரப்புக்கு பஞ்சமில்லாத கரூர் மாவட்ட தேர்தல் களம்... அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி:பரப்பளவில் 2-வது பெரிய தொகுதி அரவக்குறிச்சி. டிஎன்பிஎல் காகித ஆலை, புகளுர் சர்க்கரை ஆலை முதலியவை தொகுதியின் அடையாளமாக இருந்து வருகிறது.சாயக்கழிவால் முழுமையாக பாதிக்கப்பட்டு நாசமாகி கிடக்கும் நொய்யல் ஆறு, காவிரி, அமராவதி, குடகனாறு, நல்காஞ்சி என பஞ்ச நதிகள் ஓடியும் 70 சதவீதம் விவசாயம் வானம் பார்த்த பூமியாய் மானாவாரி விவசாயத்தை நம்பியே உள்ளது.பரமத்தி ஒன்றியத்தில் 100 க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் உள்ளன. அதிக அளவு வெடி மருந்து பயன்படுத்தி மிக ஆழமாக வெட்டி எடுக்கப்படும் பாறைகளால் கரூர் மாவட்டம் வெப்ப மண்டலமாக மாறி வருகிறது எனும் குற்றச்சாட்டும் உள்ளது . 360 ஏக்கர் பரப்பளவு கொண்ட தாதம்பாளையம் ஏரியை தூர்வாரி மழைக்காலங்களில் காவிரி மற்றும் அமராவதியில் செல்லும் தண்ணீரை இராட்சச குழாய் மூலம் எரிக்கு தண்ணீர் கொண்டு வர வேண்டும் என்ற 35 ஆண்டுகால கோரிக்கை இன்றுவரை விவசாயிகளின் கனவாக இருந்து வருகிறது. இதனால், பல கிராமங்களில் மக்கள் குடிக்க தண்ணீர் இல்லாமல், ஆடு, மாடுகளுக்கு தண்ணீரின்றி வறட்சியின் கோரப்பிடியில் சிக்கி தவிக்கின்றனர் இத்தொகுதி மக்கள். அரவக்குறிச்சிகவுண்டர்கள், பட்டியலின மக்கள், மூன்றாவதாக நாயக்கர் சமுதாய மக்கள் என பல்வேறு பிரிவு சார்ந்த மக்கள் தொகுதி முழுதும் பரவி காணப்பட்டாலும், பள்ளப்பட்டி நகராட்சியில் உள்ள சுமார் 30 ஆயிரம் இஸ்லாமிய வாக்காளர்களின் வாக்குகள் அரவக்குறிச்சி தொகுதியின் வெற்றி தோல்வியை நிர்ணையம் செய்வதாக உள்ளது.கடந்த 2021 தேர்தலில் அதிமுக கூட்டணி கட்சியான பாஜக-வில் போட்டியிட்ட முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையை வீழ்த்தி எம்எல்ஏ ஆனார் இளங்கோ.மீண்டும் அவர் கட்சியில் சீட் கேட்க, இவருக்கு போட்டியாக நொய்யல் குணசேகரன், பரமத்தி ஒன்றியம் கருணாநிதி உள்ளிட்ட பலர் கட்சியில் சீட் கேட்டு களம் இறங்க தயாராகி வருகின்றனர். கூட்டணிக்கு தொகுதி கைமாறும் பட்சத்தில் புதிய திராவிட கழகம் சார்பில் ராஜ்கவுண்டர், மதிமுக நிர்வாகி ஆசை சிவா என பலர் ரேஸ் ஓட தயார் நிலையில் நிற்கினர்.அதிமுகவில் கரூர் மேற்கு ஒன்றிய செயலாளர் கமலக்கண்ணன், மாவட்ட இளைஞரணி இணை செயலாளர் வழக்கறிஞர் கரிகாலன், அரவக்குறிச்சி கிழக்கு ஒன்றிய செயலாளர் கோ. கலையரசன் மாவட்ட மாணவர் அணி செயலாளர் சரவணன் ஆகியோர் சீட் கேட்டு தலைமையிடம் அழுத்தம் கொடுத்த வருகின்றனர். திமுகவில் நிறுத்தப்படும் வேட்பாளர்கள் யார்? என்பதை பொறுத்து நால்வரில் ஒருவருக்கு சீட் என முடிவு செய்யப்பட்டுள்ளதாம் கட்சி தலைமை .தவெகவில் பெயர் சொல்லும் அளவிற்கு மக்கள் அறிமுகம் செல்வாக்கு கொண்டவர்கள் யாரும் இல்லையென்றாலும், தொகுதியில் உள்ள இளைஞர்கள், இளம் பெண்கள் மற்றும் முதல் வாக்காளர்கள் என விஜய் பெறும் கனிசமான வாக்குகள் திராவிட கட்சிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார்கள். கட்சிக் கட்டமைப்பு, கூட்டணிக் கட்சிகளின் ஒருங்கிணைப்பு, சிறுபான்மையினரின் வாக்கு உள்ளிட்ட விஷயங்களால், தற்போதைக்குத் தொகுதியில் உதயசூரியன் கூடுதலாகப் பிரகாசிக்கிறது எனலாம். எனினும் வேட்பாளர் தேர்வும், தவெக பிரிக்கும் வாக்குகளும் களத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. கரூர் சட்டமன்ற தொகுதி: தமிழகத்தின் மையப் பகுதியில் உள்ள கரூர், வரலாற்றுச் சிறப்புமிக்க தொகுதியாகும். சேர மன்னர்களின் தலைநகராக விளங்கிய வஞ்சி மாநகரத்தின் மறு பெயர் கரூர்.சமூக ரீதியாக கொங்கு வேள்ளாளக் கவுண்டர், அதற்கு அடுத்து முதலியார், சோழிய வேளாளர், முத்தரையர், ஆதிதிராவிடர் மக்கள் என பரவலாக காணப்படுகின்றனர்.ஆதிதிராவிடர், முத்தரையர் மற்றும் முதலியார் சமூகத்தினர் தேர்தல் முடிவை தீர்மானிக்கும் சக்தியாக உள்ளனர். நகர்ப் புறங்களில் சிறுபான்மையினர் வாக்குகளும் முக்கியப் பங்கு வகிக்கிறது.செந்தில் பாலாஜி மக்களின் நீண்டகாலக் கோரிக்கைகள் மற்றும் சவால்களாக இருப்பது, சுற்றுச்சூழல் பிரச்சினை, ஜவுளித் தொழிலால் நிலத்தடி நீர் பாதிப்பு, அமராவதி மற்றும் காவிரி ஆறுகளில் சாயக்கழிவு கலப்பதைத் தடுக்க பொதுச் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கை நீண்டகாலக் கோரிக்கையாக இருந்து வருகிறது.போக்குவரத்து நெரிசல்கரூர் நகரின் மையப்பகுதிகளில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க கூடுதல் மேம்பாலங்கள் மற்றும் புறவழிச்சாலைத் திட்டங்களை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாகும். கைத்தறி மற்றும் ஜவுளி தொழில்ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளுக்குத் தேவையான திரைச்சீலைகள், மேஜை விரிப்புகள் உள்ளிட்ட வீட்டு உபயோக ஜவுளி ஏற்றுமதியில் கரூர் முன்னணியில் உள்ளது. ஆண்டு தோறும் 10 ஆயிரம் கோடிக்கு மேல் ஏற்றுமதி வர்த்தகம் செய்யப்பட்டு அந்நியச் செலாவணியை ஈட்டும் ஏற்றுமதி மையமாக உள்ளது.கொசுவலை உற்பத்திஆசியாவிலேயே கொசு வலை உற்பத்தியில் முதலிடம் பிடித்த நகரம் என்பது குறிப்பிடத்தக்கது.தென்னிந்தியாவின் “Bus Body Building” தலைநகரம் எனப் போற்றப்படும் கரூர், பேருந்து கூண்டு கட்டும் தொழிலில் தேசிய அளவில் பெயர் பெற்றுள்ளது.எம்.ஆர் விஜயபாஸ்கர் கரூர் தொகுதி அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாகவே உள்ளது. இத் தொகுதியில் இந்திய தேசிய காங்கிரஸ், திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகள் மாறி மாறி வெற்றி பெற்றுள்ளன.2021 தேர்தலில் திமுகவில் களம் கண்ட செந்தில் பாலாஜி, 12,446 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் எம்ஆர் விஜயபாஸ்கரை வீழ்த்தி எம்எல்ஏ ஆனார். திராவிட கட்சிகளில் பங்காளிகள் இருவருமே மீண்டும் களம் காண்பதால் பெரிய அளவில் இவர்களுக்கு கட்சியில் போட்டியில்லை களத்தில் தான் இவர்களுக்கு போட்டி என்கிறார்கள்.TVK - விஜய்யுடன் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் கரூர் மாவட்டத்தின் ராசியோ என்னவோ இங்குள்ள மாவட்ட செயலாளர்கள் எதாவது ஒரு வகையில் கட்சி தலைமையில் நெருக்கமாகி விடுகின்றனர்.கரூர் மாவட்ட தவெக தலைவர் மதியழகன் கட்சி மேல்மட்டத்தில் மிக நெருக்கமாகி விட்டார். இதனால், இவருக்கே சீட் என தெரிகிறது. கட்சிக் கட்டமைப்பு, சிறுபான்மை வாக்குகள், கூட்டணிக் கட்சிகளின் அரவணைப்பு உள்ளிட்ட விஷயங்களால், தற்போதைய சூழலில் தொகுதியில் உதயசூரியன் பிரகாசிக்கிறது.எனினும் கரூர் தொகுதியில் விஜய்க்கு கணிசமான ஓட்டுகள் கனிந்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஓட்டுகளால் பின்னுக்கு தள்ளப்படும் திராவிட கட்சி எது? என்பது தான் விஷயமே என்கிறார்கள். மல்லுக்கட்டும் கழகங்கள்; விஜய் குறிவைக்கும் தொகுதியில்.! - திருச்சி மாவட்ட நிலவரம் | முந்துவது யார்?கிருஷ்ணராயபுரம் (தனி) சட்டமன்ற தொகுதி1967-ம் ஆண்டு முதல் தனித் தொகுதியாக இருந்து வரும் கிருஷ்ணராயபுரம் (தனி), 1952-ல் முதல் 2021 வரை 16 சட்டமன்றத் தேர்தல்களை சந்தித்துள்ளது.பட்டியலினத்தோர், முத்தரையர், ஊராளி கவுண்டர், குரும்ப கவுண்டர், நாயக்கர் மற்றும் ரெட்டியார் சமூகத்தினர் அதிக அளவில் உள்ளனர். விவசாயம் கூலி வேலை, கால்நடை வளர்ப்பு, கட்டட தொழில், வாழை, வெற்றிலை, நெல், கரும்பு, கடலை, எள், சூரியகாந்தி போன்ற விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.அதிமுகவில் சீட் கேட்பவர்கள் பட்டியல் பெரிய அளவில் நீண்டுள்ள போதும், கரூர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற இளைஞரணி செயலாளராக உள்ள தானேஷ் (எ) முத்துக்குமார் கடந்த 2021 தேர்தலில் போட்டியிட்டு 31,625 வாக்கு வித்தியாசத்தில் திமுகவிடம் தோல்வியை சந்தித்தார். இம்முறையும் மீண்டும் தனக்கு சீட் வேண்டும் போராடி வருகிறார்.கிருஷ்ணராயபுரம் இந்த நிலையில் தொகுதியில் பிரபல டாக்டர் திவ்யா என்பவர் மக்களை களத்தில் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். அதிமுகவில் இந்த இருவருக்கும் இடையே போட்டி நிலவி வருகிறது. திமுக சிட்டிங் எம்எல்ஏ சிவகாம சுந்தரிக்கும் மாவட்ட துணைச் செயலாளர் பூவை.ரமேஷ் பாபு ஆகியோருக்கும் இடையே தான் போட்டி. இருவரும் ரேஸில் உள்ளனர்.தவெக சார்பில் மண்டல இணை ஒருங்கிணைப்பாளர் டி. அரசு, மற்றும் சித்தார்த் ஆகிய இருவரும் ரேஸில் தயார் நிலையில் உள்ளனர்.கட்சிக் கட்டமைப்பு, கூட்டணிக் கட்சிகளின் ஒருங்கிணைப்பு உள்ளிட்ட விஷயங்களால், தற்போதைக்கு உதயசூரியன் தொகுதியில் பிரகாசிக்கிறது. தவெக வாக்குகள் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றே தெரிகிறது. ஆளும் கட்சி மீதான எதிர்ப்பு வாக்குகளை தவெக பிரிப்பதும் திமுக கூட்டணிக்கு சாதகமாக அமைக்கிறது. முட்டிமோதும் வேலுமணி, செந்தில் பாலாஜி; குறிவைக்கும் பாஜக! - கோவை மாவட்ட களநிலவரம் | முந்துவது யார்? குளித்தலை சட்டமன்ற தொகுதி: குளித்தலை தொகுதியில் ரெட்டியார், முத்தரையர், சோழியவெள்ளார், பட்டியலின மக்கள் கணிசமாக உள்ளனர். இத்தொகுதி அரசியல் வரலாற்றில் சிறப்புமிக்க தொகுதியாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் 1957 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் மறைந்த திமுக முன்னாள் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி முதன் முதலாக போட்டியிட்டு வென்ற தொகுதியாகும். நன்செய் மற்றும் புன்செய் நிலங்கள் நிறைந்த விவசாயம் நிறைந்த பூமியாகும்.காவிரி ஆறு மற்றும் பாசன வாய்க்கால்கள் மூலம் விவசாயிகள் பலரும் நெல் கரும்பு வாழை வெற்றிலை முருங்கை பயிர்களை பயிரிட்டும் வருகின்றனர். குளித்தலை பகுதிகளில் வாழைத்தார்கள் மற்றும் முருங்கையை பதனிட செய்ய சேமிப்புக் கிடங்கு வேண்டுமென்றும் விவசாயிகள் கோரிக்கை கிடப்பில் கிடக்கிறது. குளித்தலை2021 தேர்தலில் திமுக வேட்பாளர் இரா.மாணிக்கம், 23,540வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் என். ஆர். சந்திரசேகரை வீழ்த்தி எம்எல்ஏ ஆனார்.சிட்டிங் எம்எல்ஏ மாணிக்கம் உடல் நிலை சரியில்லாமல் சிகிச்சையில் இருந்து வருகிறார்.இந்நிலையில், குளித்தலையில் சீட் கேட்டு முன்னாள் நகராட்சி தலைவர் பல்லவிராஜா, மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. ராமர் உள்ளிட்ட பலர் போட்டி போட்டுக் கொண்டு கேட்டு ரேஸில் இருந்து வருகின்றனர்.அதிமுகவில் மேற்கு ஒன்றிய செயலாளர் விஜய விநாயகம், நான்கு முறை எம்எல்ஏ வாக இருந்த பாப்பா சுந்தரம் மகன் ஒன்றிய செயலாளர் கருணாகரன், கரூர் மாவட்ட பொருளாளர் கண்ணதாசன் ஆகியோர் தீவிரமாக சீட் கேட் களத்தில் போட்டா போட்டியில் உள்ளனர்.தவெக சார்பில் பலர் சீட் கேட்டுள்ள நிலையில், கரூர் கிழக்கு மாவட்ட பொருளாளர் பாலசுப்பிரமணிக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து களத்தில் தயார் நிலையில் இருந்து வருகிறார். தவெக வாங்கும் வாக்குகள் தான் திராவிட கட்சிகளின் வெற்றி தோல்வி தலையெழுத்தை நிர்ணையிக்கும் நிலை காணப்படுகிறது. களம் திமுக அதிமுக என இரு கூட்டணிகளுக்குமே சவாலானதாக தான் உள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளிலும் திமுக, அதிமுக சம பலத்தில் இருந்தது. கடந்த 2021 தேர்தலில் நான்கு தொகுதியையும் திமுக வசமாகியது. ஒவ்வொரு தொகுதியிலும் திமுக வெற்றியின் வாக்கு வித்தியாசம் 20 முதல் 30 ஆயிரம் வாக்குகள். கூட்டணி பலத்தையும் மீறி இம்முறை தவெக ஒவ்வொரு தொகுதியிலும் கணிசமான வாக்குகளை பெற்று தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் எனத் தெரிகிறது. ஆக, திமுக, அதிமுக இரு கட்சிகளின் கரூர் ஆட்டம், தவெக பெறும் வாக்குகளை மையப்படுத்தி உள்ளது.!

vikatan
17 மார்.
3 நிமிடம் படிக்க
`அப்செட்டான ரஜினி; டெல்லி கொடுத்த சிக்னல்' - அறிக்கைக்கு பின்னால் நடந்த அரசியல்!
தமிழ்நாடு

`அப்செட்டான ரஜினி; டெல்லி கொடுத்த சிக்னல்' - அறிக்கைக்கு பின்னால் நடந்த அரசியல்!

“காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்”என்கிற வரிகளோடு ரஜினி வெளியிட்ட அறிக்கைக்கு பின்னால் பல்வேறு அரசியல் நகர்வுகள் சத்தமில்லாமல் நடந்துள்ளது. ஆதவ் அர்ஜூனா கடந்த வாரம் நடந்த போராட்டத்தில் ரஜினியை பற்றி விமர்சித்தது தான், அரசியல் விளையாட்டுக்கு மையப்புள்ளியாக மாறியுள்ளது.த.வெ.க சார்பில் கடந்த வாரம் நடந்த போராட்டத்தில் அந்த கட்சியின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா பேசும் போதும் “ரஜினிகாந்த் அரசியலுக்கு வர நினைத்தார். ஆனால் திமுகவின் அழுத்தம் வந்ததால் பின்வாங்கினார். ஆனால் விஜய் அப்படி இல்லை" என்று பேசினார். இந்த பேச்சிற்கு ஆரம்பத்தில் ரஜினி ரசிகர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். மற்றொருபுறம் தி.மு.க-வை சேர்ந்த தமிழக அமைச்சர்களும் இதே விவகாரத்தில் ஆதவ் அர்ஜூனாவிற்கு எதிராக கருத்து தெரிவித்தனர். ஆதவ் அர்ஜூனாஇந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் த.வெ.க இணையும் என்று கடந்த ஒருவாரமாக செய்திகள் கசிந்து வந்தது. ஆனால்,நேற்று காலை “வதந்திகளை நம்பவேண்டாம். பா.ஜ.க, உள்ளிட்ட யாருடனும் கூட்டணி பேச்சுவார்த்தையை நாங்கள் நடத்தவில்லை” என்று அறிக்கை ஒன்றை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்தார் த.வெ.க இணை பொதுச்செயலாளர் சி.டிஆர் நிர்மல் குமார். இதனால் த.வெ.க தனித்து நிற்கும் முடிவுக்கு வந்ததாக அடுத்து செய்திகள் வெளியானது. இந்த செய்தி வெளியானதை தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் வரிசையாக ஆதவ் அர்ஜூனாவுக்கு எதிராக கருத்துக்களை முன்வைத்தனர். பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், “தமிழக அரசியலின் வரலாறு தெரியாமல் பேசுகிறார் ஆதவ் அர்ஜூனா. அவர் மீது விஜய் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். எடப்பாடி பழனிசாமியும் அதே போல் கண்டனத்தை பதிவு செய்தார். ஒரே நாளில் அடுத்தடுத்து ஆதவ் அர்ஜூனா மீது கண்டனங்களை பதிவு செய்ததற்கு பின்னால் டெல்லி மேலிடம் இருப்பதாக செய்திகள் இப்போது கசிந்துள்ளது. இது குறித்து ரஜினிக்கு நெருக்கமானவர்கள் நம்மிடம் பேசும் போது, “ விஜய் குறித்து எந்தவித எதிர்மறையான கருத்தையும் ரஜினி பேசியது கிடையாது. ஆனால் ஆதவ் அர்ஜூனா பேசியது ரஜினிக்கு வருத்ததை ஏற்படுத்தியது. பயந்து போனார் என்று சொல்வதை ரஜினி எப்போது ஏற்றுக் கொள்வதில்லை. இந்த விவகாரத்தை அப்போது தனக்கு நெருக்கமான பா.ஜ.க டெல்லி பிரமுகர்களிடம் சொல்லி வருத்தப்பட்டார் ரஜினிகாந்த். விஜய்யுடன் கூட்டணி வரும் என்கிற நம்பிக்கையில் இந்த விவகாரத்தை கொஞ்சம் ஆறப்போட்டது டெல்லி. இப்போது விஜய்க்கு எதிராக தேர்தல் களத்தில் நிற்க போவதால், ரஜினி ரசிகர்களை தங்கள் பக்கம் கொண்டுவர பா.ஜ.க திட்டமிட்டது. நேற்று டெல்லியிலிருந்து வந்த உத்தரவுக்கு பிறகுதான், ரஜினிக்கு ஆதரவாக ஒரே நாளில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் எல்லாம் வரிசையாக அறிக்கை விட்டு ஆதவ் அர்ஜூனாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளார்கள். அதோடு, ரஜினி ரசிகர்களையும் தங்களுக்கு ஆதரவாக ஒன்று சேர்க்கும் அரசியலை கையில் எடுத்துள்ளார்கள். ரஜினி ரஜினி இன்று வெளியிட்ட அறிக்கையிலும் “காலம் காத்திருந்து பதில் சொல்லும்“ என்று குறிப்பிட்டிருக்கிறார். ஒரு வாரத்திற்கு முன்பாக பேசிய பேச்சுக்கு இப்போது கண்டனங்கள் வெடிக்க ஆரம்பித்துள்ளது. ஆதவ் அர்ஜூனாவிற்கான நெருக்கடி இனிதான் துவங்கும் என்பதை குறிப்பிடும் வகையில் தான், ரஜினி காலத்தை குறிப்பிட்டு சொல்லியுள்ளார். இந்த மொத்த ஆக்ஷனக்கும் பின்னால் பா.ஜ.க வின் ப்ளானே உள்ளது.தேர்தல் அரசியல் களத்தில் ரஜினியை வைத்து ஒரு ஆட்டத்தை ஆட பா.ஜ.்க முடிவெடுத்துள்ளது” என்கிறார்கள் விரிவாக. த.வெ.க தரப்பிலும் திடீரென இந்த விவகாரம் வெடித்ததில் அப்செட்டாகியிருக்கிறார்கள். இதை எப்படி சரிகட்டுவது என்கிற ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்கள். ரஜினி ரசிகர்களை தேர்தல் நேரத்தில் துாண்டிவிட்டு தங்களுக்கு எதிராக அரசியல் செய்ய வைக்கும் யுக்தியை பா.ஜ.க கையில் எடுத்துவிட்டது என்பதை ஒப்புக்கொள்கிறாரகள் த.வெ.க-வினர். ஆதவ் அர்ஜூனாவை வைத்து அடுத்த அரசியலை ஆட ஆரம்பித்துவிட்டது டெல்லி தலைமை.Rajinikanth: 'காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்' - ஆதவ் அர்ஜுனாவுக்கு ரஜினிகாந்த் பதில்

vikatan
17 மார்.
3 நிமிடம் படிக்க
தமிழ்நாட்டுக்கு கூடுதல் செலவின பார்வையாளர்கள்! - நெருக்கடி கொடுக்க திட்டமா?
தமிழ்நாடு

தமிழ்நாட்டுக்கு கூடுதல் செலவின பார்வையாளர்கள்! - நெருக்கடி கொடுக்க திட்டமா?

அமலுக்கு வந்த தேர்தல் நடைமுறை:தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட ஐந்து மாநில தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் தமிழகத்துக்கு வரும் ஏப்ரல் 23-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறும். மற்ற அனைத்து இடங்களையும் சேர்த்து மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. தேர்தல் நடத்தை வரும் மே 6-ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும். இந்த காலகட்டத்தில் 50,000 ரூபாய் மேல் பணம் கொண்டு செல்லக் கூடாது என்பது தொடங்கி பல்வேறு கட்டுப்பாடுகளை அமலுக்குக் கொண்டுவந்திருக்கிறது இந்தியத் தேர்தல் ஆணையம். பறக்கும் படை சோதனை 234 தொகுதிகளில், தொகுதிக்கு ஒன்பது பறக்கும் படை, ஒன்பது நிலை கண்காணிப்புக் குழு என 2,160 பறக்கும்படை மற்றும் 2,160 நிலை கண்காணிப்புக் குழு தமிழ்நாடு முழுவதும் தீவிர கண்காணிப்பில் இருக்கின்றன. தேர்தல் நடைமுறை அமலுக்கு வந்த 15-ம் தேதி மாலை 4.27 முதல் 17-ம் தேதி வரை 23.28 கோடி ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் பொருள்களைக் கைப்பற்றித் தேர்தல் அலுவலர்கள் விசாரணையில் இருக்கிறார்கள்.தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்:சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன் பிரதேசம் மற்றும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள ஆறு மாநிலங்களுக்கு 1,111 மத்திய பார்வையாளர்களைத் தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. தேர்தல் நடைபெறவுள்ள 832 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு 557 பொதுப் பார்வையாளர்களும், 188 காவல்துறை பார்வையாளர்களும், 366 செலவினப் பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவற்றில் தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கு 136 பொது பார்வையாளர்களும், 40 காவல்துறை பார்வையாளர்களும் 151 செலவினப் பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். பார்வையாளர்கள் நியமனம்புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளுக்கு 17 பொதுப் பார்வையாளர்களும், 4 காவல்துறை பார்வையாளர்களும், 17 செலவினப் பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் 2026 மார்ச் 18-க்குள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளுக்குச் செல்லுமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. பார்வையாளர்கள் அங்குச் சென்றதும், தங்களுடைய தொடர்பு விவரங்களைப் பொதுமக்களுக்குத் தெரியப்படுத்துவார்கள். மேலும், வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் அல்லது அவற்றின் பிரதிநிதிகள், அல்லது பொதுமக்கள் என யாரேனும் ஒருவரைச் சந்தித்து, தேர்தல் தொடர்பான அவர்களின் குறைகளைக் கேட்டறிய, நாள்தோறும் ஒரு குறிப்பிட்ட நேரத்தையும் அவர்கள் நிர்ணயிப்பார்கள் என்றும் இந்தியத் தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்திருக்கிறது. கடந்த முறையை விட அதிகம்:கடந்த 2021 சட்டமன்ற தேர்தலைக் காட்டிலும் கூடுதல் தேர்தல் பார்வையாளர்கள் அதிலும் குறிப்பாகச் செலவின பார்வையாளர்களைத் (Expenditure Observers) தமிழகத்துக்கு நியமித்திருக்கிறது தேர்தல் ஆணையம். இந்த எண்ணிக்கை அதிகரிப்பு பின்னல் கெடுபிடிகளை அதிகப்படுத்தத் திட்டமிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து ஓய்வுபெற்ற தேர்தல் ஆணையர்கள் சிலரிடம் பேசினோம், "தேர்தல் பார்வையாளர்களில் செலவின பார்வையாளர்களின் பணி ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிகளிலும் வேட்பாளர் ஒருவர் தொகுதியின் அளவை பொறுத்து 28 முதல் 40 லட்சம் வரையிலும் செலவு செய்ய அனுமதி உள்ளது. இந்த குறிப்பிட்ட அளவுக்குள் ஒரு வேட்பாளர் பிரசார கூட்டங்கள், வாகனங்கள், விளம்பரங்கள் செய்யப்படுகின்றனவா என்பதையும், வேட்பாளர்களின் செலவுப் பதிவேடுகளைக் கண்காணிக்கும் பொறுப்பு தேர்தல் செலவின பார்வையாளருடையது. செலவின பார்வையாளர்கள்கடந்த சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டுக்கு 118, மேற்கு வங்கத்துக்கு 122 செலவின பார்வையாளர்களை நியமித்திருந்த நிலையில், இம்முறை மேற்கு வங்கத்துக்கு 100, தமிழ்நாட்டுக்கு 151 செலவின பார்வையாளர்களை நியமித்திருக்கிறது. தொகுதி அதிகமான மேற்கு வங்கத்துக்குக் குறைவாகவும், தமிழ்நாட்டுக்கு மிக அதிகமாகவும் அதிகாரிகளை நியமித்திருப்பதைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. பலமுனை போட்டி நிலவப்போகும் இந்த தேர்தலில் பல்வேறு தொகுதிகளின் பணம், பரிசுப்பொருள் இஷ்டத்துக்கு விளையாடும். தேர்தலுக்கு முன்பாகவே ஆளும் தரப்பில் பரிசுப் பொருள்கள் வாரி இரைக்கப்பட்ட நிலையில் அது தேர்தலில் இன்னும் அதிகரிக்கக் கூடம். அதனைக் கட்டுப்படுத்தி இறுக்கிப் பிடிக்கவும், ஆளும் தரப்புக்கு நெருக்கடி கொடுக்கவும் ஒரு ஆயுதத்தை எடுத்திருக்கிறதா என்ற சந்தேகம் தன்னிசையாகவே எழுகிறது. ஆளும் தரப்பை மட்டுமின்றி அனைத்து தரப்பினரையும் இறுக்கிப் பிடித்துத் தேர்தலை நியாயமான முறையில் நடைபெறுவதை உறுதி செய்யவேண்டும்... செய்வார்களா... என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்." என்றார்கள் விளக்கமாக.

vikatan
17 மார்.
3 நிமிடம் படிக்க
`இரவுக்குள் ஒரு முடிவு; அதிக தொகுதிகள் கிடைக்கவில்லையென்றால்.!' - அறிவாலயத்தில் பெ.சண்முகம் கறார்!
தமிழ்நாடு

`இரவுக்குள் ஒரு முடிவு; அதிக தொகுதிகள் கிடைக்கவில்லையென்றால்.!' - அறிவாலயத்தில் பெ.சண்முகம் கறார்!

திமுக - சி.பி.எம் இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இழுபறியாக நீடிக்கும் நிலையில், இன்று அறிவாலயத்தில் இருதரப்புக்கும் இடையே மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தை நடந்திருந்தது. திமுகவின் தொகுதிப் பங்கீடு குழுவுடன் பேசிவிட்டு சி.பி.எம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் பத்திரிகையாளர்களிடம் பேசியவை.சண்முகம்பெ.சண்முகம் பேசியதாவது, 'மூன்றாம் கட்டமாக பேசி முடித்திருக்கிறோம். கடந்த முறையை விட அதிக சீட்டுகள் வேண்டும் என வலியுறுத்தியிருக்கிறோம். நிறைய கட்சிகள் கூட்டணியில் இருப்பதால் ஒரு முடிவை எடுப்பதில் சிரமமாக இருக்கிறது. எல்லா கட்சிகளின் தேவையையும் பூர்த்தி செய்ய வேண்டிய தேவை திமுகவுக்கு இருக்கிறது. எங்களின் கோரிக்கைகளை முதல்வரிடம் பேசிவிட்டு இன்று இரவுக்குள் ஒரு முடிவை சொல்வதாக கூறியிருக்கிறார்கள். ஓரிரு நாட்களில் சுமுகமாக முடியுமென நினைக்கிறேன்.நிறைய கட்சிகள் இருப்பதால் எங்களையும் சீட்டுகளை குறைக்க சொன்னார்கள். அதை நாங்கள் ஏற்கவில்லை. அவரவர் கட்சிக்கு ஏற்ப தகுதிக்கு ஏற்ப தொகுதிகளை பெறுவது உரிமை. காங்கிரஸ் இதில் வருத்தப்படுவதில் ஒன்றுமில்லை. பேச்சுவார்த்தையில் எந்த தடையும் இல்லை. இன்று இரவோ அல்லது காலையிலோ கூட அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை நடக்கலாம். சண்முகம் கூடுதல் தொகுதிகள் ஒதுக்கப்படாவிட்டால் மாநிலக் குழுவை கூட்டி முடிவெடுப்போம். நாங்கள் ஒன்றும் தேர்தலை புறக்கணிக்கும் கட்சி அல்ல' என்றார்.

vikatan
17 மார்.
3 நிமிடம் படிக்க
கன்னியாகுமரி: "மானம் உள்ளவர்கள் திமுக-வுக்கு ஓட்டு போடலாமா?" - ஆர்ப்பாட்டத்தில் கொந்தளித்த பொன்னார்!
தமிழ்நாடு

கன்னியாகுமரி: "மானம் உள்ளவர்கள் திமுக-வுக்கு ஓட்டு போடலாமா?" - ஆர்ப்பாட்டத்தில் கொந்தளித்த பொன்னார்!

தமிழகத்தில் அதிகரித்து வரும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், சட்ட ஒழுங்கு சீர்கேடு மற்றும் போதைப்பொருள் கடத்தல், போதை புழக்கத்தால் இளைஞர்கள் இளம்பெண்கள் வாழ்க்கை சீரழிவை கட்டுப்படுத்த தவறியகாக, தி.மு.க அரசைக் கண்டித்து தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க எம்.எல்.ஏ தளவாய்சுந்தரம் பேசுகையில், "இந்தப் பகுதியில் இருக்கும் மக்களுக்கு இரண்டு பாலங்கள் அமைத்து தந்த பெருமை பொன்.ராதாகிருஷ்ணனைச் சேரும். அதேபோல நாகர்கோவில் நகராட்சியை மாநகராட்சியாக மாற்றிய பெருமை எடப்பாடியாரை சேரும். குமரி மாவட்டத்தில் பா.ஜ.க, அ.தி.மு.க சாதனைகளை சொன்னால் காலம் போதாது. தி.மு.க ஆட்சி காலத்தில் எந்த திட்டமும் கொண்டு வந்தது கிடையாது. தமிழக முதல்வர் நாகர்கோவில் வந்தபோது தி.மு.க மாவட்டச் செயலாளரை பாராட்டவில்லை. எங்கிருந்தோ வந்த மாவட்ட கலெக்டரை பாராட்டுகிறார் என்றால், அவரின் செயல்பாடு எப்படி இருக்கிறது என்று பாருங்கள். இன்று காலையில் 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்த போலீஸார் அனுமதியளித்தனர். ஆனால் கலெக்டர் கோப்புகளை கையில் வைத்துக் கொண்டு 10.30 மணிக்கு பிறகுதான் அனுமதியளித்தார். எனவே, இந்த ஆர்ப்பாட்டம் மாவட்ட கலெக்டருக்கு எதிரான ஆர்ப்பாட்டமாக மாறிவிடக் கூடாது என்பதுதான் எங்களுடைய கோரிக்கை. அரசியல்வாதிகள் தவறு செய்தால் மக்கள் தண்டனை கொடுப்பார்கள், ஆட்சி மாற்றம் வரும். அதிகாரிகள் தவறு செய்தால் அவர்களுக்கு தண்டனை இறைவன் கொடுப்பார். உங்களுக்குக் கீழே இருக்கக்கூடிய அத்தனை அதிகாரிகளும் உங்கள் மேல் வெறுப்பிலே இருக்கிறார்கள். அனைத்து வி.ஏ.ஓ-க்களும் இந்த மாவட்ட ஆட்சியர் மாவட்டத்தை விட்டுச் செல்லமாட்டாரா என்று கதறிக்கொண்டிருக்கிறார்கள். இந்த லட்சணத்தில் நீங்கள் முதலமைச்சரிடம் சிறப்புப் பரிசு பெற்றதாக நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். கடந்த கால ஆட்சியில் நீங்கள் எங்கு வேலை பார்த்தீர்கள், யாருடைய தயவில் இருந்தீர்கள் என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும். எந்த அதிகாரியாக இருந்தாலும் நேர்மையான அதிகாரியாக இருக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய எண்ணம். இங்கே இருக்கக்கூடிய காவல்துறைக் கண்காணிப்பாளர் கட்சி பார்க்காமல், சாதி பார்க்காமல், மதம் பார்க்காமல் வேகமாகச் செயல்படுகிறார். அவருக்கு இணையாக இதுவரை எந்தக் கண்காணிப்பாளரும் இங்கே வந்ததே கிடையாது. மாவட்ட ஆட்சியரின் லட்சணத்தைப் பாருங்கள். தானாக முந்திக்கொண்டு, இங்குள்ள தி.மு.க மாவட்டச் செயலாளரை ஒதுக்கிவிட்டு, மாவட்டச் செயலாளர்போல் அவர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். எஸ்.ஐ.ஆர் பணியின்போது வி.ஏ.ஓ முகத்தில் செல்போனை வீசி எறிந்து மன்னிப்பு கேட்டீர்கள். விரைவில் இந்த மாவட்ட மக்களிடம் மன்னிப்பு கேட்கும் நிலையை உருவாக்கிவிடாதீர்கள். மீண்டும் இது தொடருமானால் மாவட்ட ஆட்சியரை மாற்ற வேண்டும் என கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். டெல்லி தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு ஏற்கெனவே புகார் அனுப்பியிருக்கிறோம்" என்றார்.ஆர்ப்பாட்டத்தில் பேசிய தளவாய் சுந்தரம்முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசுகையில், "சில நாள்களுக்கு முன்பாக தி.மு.க தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் குமரி மாவட்டத்திற்கு வந்தபோது, அவர் இந்த மாவட்ட ஆட்சியரைப் புகழ்ந்து பேசிய விஷயம் எல்லாப் பத்திரிகைகளிலும் வந்தது. அவர் பேசிய தோரணையும் அங்கிருந்தவர்கள் கேட்ட விதத்தையும் பார்த்தால் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைவர் ஸ்டாலின் தனது மாவட்டத்தினுடைய செயலாளரைப் புகழ்ந்து பேசியது போன்ற ஒரு தோற்றம் அங்கே இருந்தது. மாவட்ட ஆட்சியரே உங்களுக்கு வேண்டுகோள் வைக்கின்றோம். 15-ம் தேதி தேர்தல் அறிவிப்பு வந்தாகிவிட்டது, இப்போது மாவட்டத்தினுடைய தேர்தல் அதிகாரி நீங்கள். உங்கள் இரண்டு கண்ணிலும் வெண்ணெய் இருக்க வேண்டும். இரண்டு பார்வைகளும் ஒன்றாக இருக்க வேண்டும். அது தவிர்த்து நீங்கள் செயல்படுவீர்கள் என்று சொன்னால், இந்த மேடையை மாவட்டத்தினுடைய தேர்தல் அதிகாரியை மாற்றக் கோரிக்கை வைக்கக்கூடிய இடமாக நாங்கள் பயன்படுத்துவோம். தேர்தல் அதிகாரி என்று கடவுளுக்குச் சமமாக இருந்து நீங்கள் நீதி பரிபாலனம் செய்யவில்லை என்று சொன்னால், அந்த இடத்தில் இருப்பதற்கு நீங்கள் அருகதை அற்றவர்கள்.கன்னியாகுமரி மாவட்டத்திலே மலைகள் காணாமல் போய்க்கொண்டிருக்கின்றன. குளங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு கொண்டிருக்கின்றன. வடிவேலு காமெடி சீனில் வருவதுபோன்று மலையை காணோம். அந்த அளவுக்குக் கேவலமான நிலையிலே அமைச்சர் மனோ தங்கராஜ் இருக்கிறார். அவரை அப்புறப்படுத்துவதற்கான தேர்தல் இந்தத் தேர்தல். கன்னியாகுமரி மாவட்டத்தினுடைய மலைகளைக் காப்பதற்கான தேர்தல் இந்தத் தேர்தல். சில ஆண்டுகளுக்கு முன்பாக நான் அமைச்சராக இருந்தபோது பார்வதிபுரத்திலே ஒரு ரயில் நிலையம் கொண்டு வர வேண்டும் என்று விரும்பினோம். அதிகாரிகள் அங்குள்ள 12 ஏக்கர் இடத்தை பார்த்தார்கள். ஆனால், அந்த 12 ஏக்கர் இடத்தை யாருக்கும் கொடுக்கக் கூடாது என்று சொல்லி அரசாங்கம் முடிவெடுத்தது. ரயில் நிலையம் அமைப்பதற்கான இடம் அங்கே இல்லை என்று சொல்லிவிட்டார்கள். இன்னைக்கு அதே இடம் ஆக்கிரமிக்கப்பட்டு ரியல் எஸ்டேட்டுக்கு விடப்பட்டு கட்டடங்கள் கட்டப்பட்டு கொண்டிருக்கின்றன. அது யாருடைய அப்பன் வீட்டுச் சொத்து. ஒரு ரயில் நிலையம் வந்தால் உங்களுக்கு மகிழ்ச்சி, உங்களுடைய சந்ததிகள் அத்தனை பேருக்கும் பயன்பட வேண்டிய ஒரு இடத்தில் இன்றைக்கு பார்வதிபுரத்தில் ரியல் எஸ்டேட் போட்டு விற்றுக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் போராட்டம் கன்னியாகுமரி மாவட்டத்தையும் காப்பதற்கான ஒரு போராட்டம். தேங்காய்ப்பட்டணத்தில் 28 மீனவர்கள் கொல்லப்பட்டபோது ஒரு மீன்பிடி துறைமுகத்தைச் சரி செய்வதற்கு வக்கற்ற நிலையிலே இருந்த சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.ஆர்ப்பாட்டத்தில் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன்இதை நம்முடைய தேர்தலாக நாம் கருதக் கூடாது. நம்முடைய சந்ததிகளுடைய தேர்தலாகக் கருதி இதிலே நாம் பணிபுரிய வேண்டும். நான்கு வழிச்சாலை ஒன்றரை வருடத்துக்கு முன்பே வேலை முடிந்திருக்க வேண்டும். இன்னும் முடியவில்லை. ஏற்கனவே போடப்பட்ட 4000 கோடிக்கும் மேலாக மீண்டும் 1400 கோடி ரூபாய் நரேந்திர மோடியினுடைய அரசாங்கத்திலிருந்து நாம் பெற்றுக் கொடுத்திருக்கின்றோம். இன்னும் வேகம் காட்ட முடியவில்லை ஏன்? கன்னியாகுமரி மாவட்டத்திலே சாலைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய மனநிலை இங்கிருக்கக்கூடிய அரசாங்கத்திற்கு கிடையாது. நெல்லை எங்கள் எல்லை, குமரி எங்கள் தொல்லை என்பதுதான் அவர்கள் மனநிலை. கன்னியாகுமரி மாவட்டத்தில் மானம் உள்ளவர்கள் தி.மு.க-வுக்கு ஓட்டு போடலாமா? மாற்றங்கள் வந்தாக வேண்டும். சொரணையுள்ளவர்களாக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மாறியாக வேண்டும். குமரியின் ஆறு சட்டமன்ற தொகுதிகளையும் தேசிய ஜனநாயக கூட்டணி வென்றது என்ற சரித்திரத்தை ஏற்படுத்த வேண்டும்" என்றார்.

vikatan
17 மார்.
3 நிமிடம் படிக்க
`தாமரை மலர்ந்துவிட்டது… உங்கள் தயவு எங்களுக்கு தேவையில்லை!’ – முதல்வர் ரங்கசாமியை ஓரம் கட்டும் பாஜக
தமிழ்நாடு

`தாமரை மலர்ந்துவிட்டது… உங்கள் தயவு எங்களுக்கு தேவையில்லை!’ – முதல்வர் ரங்கசாமியை ஓரம் கட்டும் பாஜக

`லாட்டரி சார்லஸ் மார்ட்டின் வேண்டாம்’புதுச்சேரி 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க கூட்டணியுடன் தேர்தலை சந்தித்த என்.ஆர்.காங்கிரஸ், ஆட்சியைக் கைப்பற்றியது. தொடர்ந்து முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அமைச்சரவையில் கறார் காட்டி இடம்பிடித்தது பா.ஜ.க. அந்த தேர்தலைப் போல 2026 சட்டமன்றத் தேர்தலிலும் கூட்டணியைத் தொடர நினைத்தது பா.ஜ.க. ஆரம்பத்தில் அதற்கு பிடி கொடுக்காமல் இருந்த முதல்வர் ரங்கசாமி, அதன்பிறகு காரைக்காலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த பிறகு கூட்டணி தொடர்வதாக அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க-வின் மேலிடப் பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, `எங்கள் கூட்டணியில் முக்கியமான கட்சி என்.ஆர்.காங்கிரஸ். அது தவிர பிற கட்சிகளை ஒருங்கிணைத்து தேர்தலை சந்திக்க இருக்கிறோம்.பிரதமர் மோடி, முதல்வர் ரங்கசாமிஅந்த வகையில் ல.ஜ.க எங்கள் கூட்டணிக்குள் வருகிறது. முதல்வர் ரங்கசாமி அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இந்த தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், கூட்டணி கட்சிகளுடன் பா.ஜ.க 14 தொகுதிகளிலும் போட்டியிடும்" என்று கூறியிருந்தார். ஆனால் அதன்பிறகும் கூட்டணிப் பேச்சுவார்த்தை முடிவுக்கு வரவில்லை. காரைக்காலில் மத்திய அமைச்சரை சந்தித்த முதல்வர் ரங்கசாமி, `என்னுடைய துறை சார்ந்த மாற்றங்களைச் செய்வதற்குக் கூட, ஆளுநர் மற்றும் அதிகாரிகளின் ஒப்புதலுக்காக காத்திருக்க வேண்டியிருக்கிறது. மாநில அந்தஸ்துக்காகவே ஆரம்பிக்கப்பட்ட கட்சி என்.ஆர்.காங்கிரஸ். அதனால் தேர்தலுக்கு முன்பே அதுகுறித்து நீங்கள் அறிவிக்க வேண்டும். அத்துடன் `லாட்டரி' ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் கூட்டணிக்குள் வருவதில் எனக்கு விருப்பமில்லை' என்று தெரிவித்திருந்தார்.`நம்மையே ஓரம் கட்ட நினைக்கிறார்கள்...’அதற்கு, `புதுச்சேரி வரும் பிரதமர் மாநில அந்தஸ்துக்கு நிகரான அதிகாரங்களை அறிவிப்பார். மற்றபடி சார்லஸ் உங்களுக்கு உதவியாகத்தான் இருப்பார்' என்று பதில் கூறி அனுப்பி வைத்தார் அமித் ஷா. ஆனால் புதுச்சேரி வந்த பிரதமர் அதுகுறித்த எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. அதில் கடுப்பான முதல்வர் ரங்கசாமி, பா.ஜ.க-வுடனான தொகுதி உடன்பாடு குறித்த பேச்சைத் தவிர்த்து வந்தார். இந்த நிலையில்தான் புதுச்சேரியில் ஏப்ரல் 9-ம் தேதி வாக்குப்பதிவு என்று அறிவிப்பு வெளியானது. அத்துடன் மார்ச் 16-ம் தேதி தொடங்கும் மனு தாக்கல் 23-ம் தேதி முடிவடையும் என்றும் அறிவித்தது தேர்தல் ஆணையம். நாட்கள் மிகவும் குறைவாக இருப்பதால், தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் வேகம் காட்டி வருகின்றன அரசியல் கட்சிகள்.பா.ஜ.க தேர்தல் குழுஇந்த நிலையில் நேற்று இரவு ஏனாமில் இருந்து திரும்பிய முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் லட்சுமி நாராயணன், அரசு கொறடா ஏ.கே.டி ஆறுமுகம், என்.ஆர்.காங்கிரஸ் பொதுச் செயலாளர் என்.எஸ்.ஜே ஜெயபால் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை செய்தார். அப்போது, `மாநில அந்தஸ்து பா.ஜ.க-வினர் வாயைத் திறக்கவில்லை. கூட்டணியில் `லாட்டரி' சார்லஸ் குரூப் வேண்டாம் என்று நாம் வெளிப்படையாகக் கூறியும், அவர்கள் மௌனமாக இருக்கிறார்கள். இந்த முறை மாநில அந்தஸ்து குறித்த அறிவிப்பு இல்லாமல் தேர்தலை எதிர்கொண்டால் மக்கள் நம்மை நம்ப மாட்டார்கள். நம் மூலமாக புதுச்சேரியில் காலூன்றிவிட்டு நம்மையே ஓரம் கட்ட நினைக்கிறார்கள். `லாட்டரி' மார்ட்டின் குரூப்தான் பா.ஜ.க-வுக்கு முக்கியம் என்றால் நாம் தனித்துப் போட்டியிடுவோம். மக்கள் உண்மையை தெரிந்து கொள்ளட்டும்' என்று புலம்பித் தீர்த்திருக்கிறார்.`முதல்வரை மாற்றுவதுதான் திட்டம்...’அதைக் கேட்டுக் கொண்ட நிர்வாகிகள், இரவு சுமார் 10.30 மணியளவில் காமராஜ் சாலையிலுள்ள தனியார் விடுதியில் பா.ஜ.க - என்.ஆர்.காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர். மத்திய அமைச்சர் மான்சுவிக் மாண்டவியா தலைமையில் நடைபெற்ற அந்தக் கூட்டத்தில் முதல்வர் ரங்கசாமியின் அதிருப்தியை என்.ஆர்.காங்கிரஸ் தேர்தல் குழு தெரிவித்தனர். அதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த பா.ஜ.க தரப்பினர், `எங்களுக்கு ஜோஸ் சார்லஸ் மார்ட்டினும், லட்சிய ஜனநாயகக் கட்சிதான் முக்கியம். புதுச்சேரியில் தாமரை மலர்ந்து விட்டது. உங்கள் தயவு எங்களுக்குத் தேவையில்லை. உங்கள் விருப்பத்திற்கெல்லாம் நாங்கள் வர முடியாது. விருப்பமில்லை என்றால் கூட்டணியை விட்டு நீங்கள் வெளியேறலாம்' என்றனர். அதற்கு, `நாங்களும் அந்த முடிவில்தான் இருக்கிறோம். என்.ஆர்.காங்கிரஸ் எங்களுடன் இல்லை என்று நீங்களே அறிவித்துவிட்டு தேர்தலை சந்தியுங்கள்.மக்கள் யார் பக்கம் நிற்கிறார்கள் என்பது அப்போது தெரியும்' என்று ஆவேசமாகக் கூறிவிட்டு அங்கிருந்து வெளியேறினார்கள் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியினர். இதுகுறித்து நம்மிடம் பேசிய என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், ``ல.ஜ.க-வை ஏ.டி.எம் ஆகப் பார்க்கிறார்கள். அதனால்தான், `முதல்வர் ரங்கசாமி தயவு எங்களுக்கு தேவையில்லை என்று கூறுகிறார்கள். கூட்டணியில் இரண்டு சீட்களை வாங்கிக் கொண்டு, அவர் ஏற்கெனவே வளைத்து வைத்திருக்கும் சுயேச்சை எம்.எல்.ஏ-க்களை தனியாக நிறுத்த திட்டமிட்டிருக்கிறார் லாட்டரி சார்லஸ். அதன்பிறகு ரங்கசாமியை முதல்வர் பதவியில் இருந்து இறக்குவதுதான் பா.ஜ.க-வின் பிளான். அப்படி ஒரு கூட்டணி தேவையில்லை என்பதில் முதல்வர் ரங்கசாமி தெளிவாக இருக்கிறார். ல.ஜ.க-வை கூட்டணியில் வைத்துக் கொண்டு 30 தொகுதிகளில் கூட பா.ஜ.க போட்டியிடட்டும். அவர்களை எதிர்கொள்வதற்கு நாங்கள் தயாராகவே இருக்கிறோம்" என்கிறனர். மோடி அடித்த பல்டி... முகம் கறுத்த ரங்கசாமி... சிக்கலில் என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க கூட்டணி!

vikatan
17 மார்.
3 நிமிடம் படிக்க
தேர்தல் நடத்தை விதிமுறைகள் : பணத்திற்கு உள்ள கெடுபிடிகள் என்ன? தெரிந்து கொள்ளுங்கள்!
தமிழ்நாடு

தேர்தல் நடத்தை விதிமுறைகள் : பணத்திற்கு உள்ள கெடுபிடிகள் என்ன? தெரிந்து கொள்ளுங்கள்!

வரும் ஏப்ரல் 23-ம் தேதி தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக தற்போது தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் ஒருவர் பணம் கொண்டு சென்றால், அதை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துவிடுவார்கள். நேற்று கூட, திருப்பூர் பல்லடத்தில் இப்படியான சம்பவம் ஒன்று நடந்துள்ளது.ஈரோட்டை சேர்ந்தவர் நந்தினி. அவரது அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லாததால் அவரை கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்திருக்கிறார். சிகிச்சைக்காக தன்னுடன் ரூ.2 லட்சம் எடுத்து சென்றிருக்கிறார் நந்தினி.தேர்தல்Rajinikanth: 'காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்' - ஆதவ் அர்ஜுனாவுக்கு ரஜினிகாந்த் பதில்இவர்களைப் பல்லடம் அருகே நிறுத்திய பறக்கும் படையினர், கார் முழுவதும் சோதனையிட்டுள்ளனர். அப்போது சிகிச்சைக்கு கொண்டு சென்ற ரூ.2 லட்சத்தை பறிமுதல் செய்திருக்கின்றனர் பறக்கும் படையினர். நந்தினி 'சிகிச்சை'க்காக என்று எவ்வளவோ எடுத்துக்கூறியும் பறக்கும் படையினர் செவி சாய்க்கவில்லை. தேர்தல் சமயத்தில் பொதுமக்கள் இந்த மாதிரியான சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியதாக இருக்கிறது. இப்படி பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் என்னென்ன தேர்தல் நடத்தை விதிமுறைகள் உள்ளன என்றும், எந்தச் சிக்கலிலும் மாட்டாமல் இருப்பது எப்படி என்பதையும் இங்கே பார்க்கலாம்...தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் போது, பொதுவாகவே ரூ.50,000-க்கு மேல் கையில் ரொக்கமாக தனிநபர் எடுத்து செல்லக்கூடாது. மேலே சொன்ன சம்பவத்தில் நந்தினி, அவரது அம்மா மற்றும் கணவர் ஆகிய மூவர் காரில் பயணம் செய்திருக்கின்றனர். பணம்'மனிதநேயமற்ற குற்றம்' - ஆப்கானிஸ்தான் மருத்துவமனை மீது பாகிஸ்தான் தாக்குதல்; 400 பேர் உயிரிழப்புஆளுக்கு ரூ.50,000 என்றாலும், மொத்தமாக ரூ.1.5 லட்சம் எடுத்து செல்லலாமே என்கிற கேள்வி எழுவது நியாயம் தான். மூவரும் ஒன்றாக சென்றிருக்கின்றனர்... அவர்களது கையில் ரூ.2 லட்சம் இருக்கிறது என்கிற போது, தானாக பறக்கும் படையினருக்கு சந்தேகம் எழும். அதனால், அவர்கள் அந்தப் பணத்தைப் பறிமுதல் செய்திருக்கின்றனர். ஒரே வாகனத்தில் செல்லும் 3 - 4 நபர்கள் ஆளுக்கு ரூ.50,000 எடுத்து செல்ல முடியுமென்றால், தேர்தல் நேரத்தில் இதை பயன்படுத்தி பல லட்சங்கள் கைமாற்றப்படும். இதை தடுக்கவே, பறக்கும் படையினர் இவ்வளவு கெடுபிடி செய்கின்றனர். அதற்காக, தேர்தல் நேரத்தில் கல்யாணம், வீட்டில் விசேஷங்கள், மருத்துவ செலவு, அவசர செலவு என எதுவும் வராமல் இருக்காது. இந்தச் சூழல்களில் ரூ.50 ஆயிரத்திற்கும் மேல் பணம் எடுத்து செல்லும் நிலை ஏற்பட்டால், அந்தப் பணத்திற்கான உரிய ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களை வைத்துக்கொள்ளுங்கள். ஒருவேளை, உங்கள் கையில் இருக்கும் பணத்தை வங்கியில் இருந்து எடுத்திருந்தீர்கள் என்றால், அதற்கான ரசீதை கூடவே எடுத்து செல்லுங்கள். இது உதாரணத்திற்குத் தான். உங்கள் கையில் இருக்கும் பணம் உங்களுக்கு எப்படி கிடைத்தது என்பதற்கான ஆதாரங்கள் இருந்தால், உடனே பணம் உங்களுக்கே கொடுக்கப்பட்டுவிடும். அர்ச்சனா பட்நாயக்ஈரான் போரால் குறையும் இந்திய ரூபாயின் மதிப்பு; இரண்டு முக்கிய காரணங்கள் என்னென்ன?வங்கி பரிவர்த்தனைகள் கூட... தமிழ்நாட்டின் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கூறுகையில், "வங்கியில் நடக்கும் பணப் பரிவர்த்தனைகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. கூகுள் பே, போன் பே போன்ற டிஜிட்டல் பண பரிவர்த்தனை ஆப்கள் கூட கண்காணிக்கப்பட்டு வருகின்றன" என்று தெரிவித்திருக்கிறார். இதனால், வழக்கத்திற்கு மாறாக, ஒரு பெரிய தொகை வங்கிக் கணக்கிற்கு கிரெடிட் ஆனால், நிச்சயம் கேள்வி எழுப்பப்படும். அதனால், அந்தப் பணம் யாரிடம் இருந்து எதற்காக வந்தது என்கிற தரவுகளைக் கட்டாயம் வைத்துக்கொள்ளுங்கள். இது உங்களைத் தேவையில்லாத கெடுபிடிகள்... நடவடிக்கைகளில் இருந்து காக்கும். பறக்கும் படையினரின் கெடுபிடி பணமோடு மட்டும் முடிந்துவிடாது. தங்க நகைகள், விலை உயர்ந்த (பரிசுப்) பொருள்களுக்குக் கூட நீளலாம். அதனால், பணம் அல்லது விலை உயர்ந்த பொருள்கள் எதையும் எடுத்தோ, கொண்டோ செல்கிறீர்கள் என்றால், அவைகளுக்குத் தகுந்த ஆவணங்களை வைத்திருப்பது சால சிறந்தது. RSS, R&AW-ஐ தடை விதிக்க அமெரிக்க ஆணையம் பரிந்துரை; 'முதலில் அமெரிக்கவைப் பாருங்கள்' - மத்திய அரசு

vikatan
17 மார்.
3 நிமிடம் படிக்க
`யம்மா... தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு மத்திய அரசு வேலை எங்கே?'- தமிழிசையிடம் கேள்வி எழுப்பிய மூதாட்டி!
தமிழ்நாடு

`யம்மா... தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு மத்திய அரசு வேலை எங்கே?'- தமிழிசையிடம் கேள்வி எழுப்பிய மூதாட்டி!

சட்டம்-ஒழுங்கு பிரச்னையால் தமிழ்நாடு மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதைக் கண்டித்தும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வருவதை கண்டித்தும் அதிமுக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அ.தி.மு.க., பா.ஜ.க உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் சார்பாக நடந்த ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கலந்துகொண்டு பேசினார்.தமிழிசை சௌந்தர்ராஜன்அப்போது பேசிய அவர், ``தமிழ்நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. ஆனால் அதை கண்டிக்க வேண்டிய கட்சிகள் தி.மு.க-வுடன் கைகோத்து நிற்கின்றன. `பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத நிலை இருப்பதால் கூட்டணியில் இருந்து வெளியேறுகிறோம்' என்று சொல்லும் துணிச்சல் அந்த கூட்டணியில் உள்ள யாருக்காவது இருக்கிறதா? கொடுப்பதைக் கொடுங்கள் வாங்கிக் கொள்கிறோம் என்று இருக்கிறார்கள். அதை விடவும், அண்ணா அறிவாலயம் பக்கத்தில் யாராவது நிழலுக்காக ஒருங்கினால்கூட, 'கூட்டணிக்கு வாங்க' என்று அழைக்கும் அவல நிலையில் தி.மு.க இருக்கிறது" என்று தமிழிசை பேசிக்கொண்டிருந்தார். அப்போது கூட்டத்தில் நின்று கொண்டிருந்த மூதாட்டி ஒருவர் சத்தமாக, "யம்மா ஒரு நிமிஷம்... தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலை எங்கே? சென்ட்ரல் கவெர்மென்ட் வேலை எங்கே?" என்று தமிழிசையை நோக்கி கேள்வி எழுப்பினார். அதைக் கேட்காததுபோல தமிழிசை சௌந்தர்ராஜன் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார். ஆனால் அந்தப் பெண்மணி விடாமல் கேள்வி கேட்டுக் கொண்டே இருந்ததால், ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பலரது கவனமும் அவர் பக்கமாகத் திரும்பியது. அப்போது அங்கே நின்றுகொண்டிருந்த அ.தி.மு.க ஆண் நிர்வாகிகள் சிலர், அந்த மூதாட்டியை கூட்டத்தை விட்டு அப்புறப்படுத்தும் நோக்கத்தில் தள்ளினார்கள். ஆனால் அவரோ விடாமல் தனது கேள்வியை தமிழிசை நோக்கி முன்வைத்தார்.ஆர்ப்பாட்டத்தினரின் கவனம் திசைதிரும்பிவதைப் புரிந்துகொண்ட தமிழிசை, "அதாவது தமிழ்நாட்டில் வேலை கொடுக்க வேண்டும். அதற்கு ஸ்டாலின் வேலை செய்ய வேண்டும். இன்னொன்று பிரதமரோடு சேர்ந்து ஒன்றாக இருக்க வேண்டும். நமது தமிழ்நாட்டின் அடிப்படைத் தன்மை என்னவென்றால்... அம்மா முதலில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. அம்மா ஒரு பெண் குழந்தை செத்துக் கிடக்குது. அதை முதலில் பாருங்கன்னு நான் சொல்றேன். அப்படி ஒன்னா இருந்து பார்க்காததால் தான் அவர்கள் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்" என்று அவர் பேசிக்கொண்டிருந்தபோதே, அந்த மூதாட்டி அங்கிருந்த கட்சியினரால் வெளியேற்றப்பட்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன், "விளாத்திகுளம் கொடூரச் சம்பவத்தின் குற்றவாளி இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. காவல்துறை அதிகாரிகள் போராட்டம் நடத்திய மக்களிடம் கிண்டல் கேலி பேசியுள்ளார்கள். தமிழகத்தில் பாதுகாப்பு இல்லாதது குறித்து கவலைப்படாமல் ரீல்ஸ் செய்து விளையாடிக் கொண்டிருக்கிறார், முதல்வர். மக்கள் அவர்களை மன்னிக்க மாட்டார்கள். பெண்களுக்கு பாதுகாப்பு தராத ஸ்டாலின் அரசு வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும்.59% போக்சோ வழக்குகள் அதிகரித்துள்ளது.129% பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன. ஆனால் தண்டனை 10% குற்றவாளிகளுக்கு மட்டுமே கிடைத்துள்ளது. பெண்கள் எங்கெல்லாம் பாதிக்கப்படுகிறார்களோ அங்கு தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சியினர் துணை நிற்பார்கள். இந்த ஆர்ப்பாட்டம் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தும்."தம்பி நல்லா பேசுனாரு; கேள்விகள் நியாயமா கேட்டாரு.!" - விஜய் பேச்சு குறித்து தமிழிசை தமிழகத்தில் ஸ்டாலின் ஆட்சியில் 8690 கொலைகள் நடந்துள்ளன. குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு பெண் இயற்கை உபாதை கழிக்கக்கூட வெளியே செல்ல முடியாத நிலை இருந்து வருவது வேதனை அளிக்கிறது. பெண்களுக்கு 5000 ரூபாய் வழங்கி விட்டோம் என்ற திமிரில் தி.மு.க ஆட்சி இருந்து வருகிறது. பெண்கள் இந்த ஆட்சிக்கு எதிராக திமிரி எழுந்து வருகிறார்கள். தமிழகம் முழுவதும் கொலைகளும் குற்றச் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. ஸ்டாலின் ஆட்சியை விரைவில் வீட்டுக்கு அனுப்ப தமிழக மக்கள் முடிவு செய்துவிட்டார்கள்" என்றார்.

vikatan
17 மார்.
3 நிமிடம் படிக்க
அலி கமேனி கொல்லப்பட்ட தாக்குதலில் நூலிழையில் தப்பிய மொஜ்தபா; `அன்று' நடந்தது என்ன? - வெளியான தகவல்!
தமிழ்நாடு

அலி கமேனி கொல்லப்பட்ட தாக்குதலில் நூலிழையில் தப்பிய மொஜ்தபா; `அன்று' நடந்தது என்ன? - வெளியான தகவல்!

இஸ்ரேல் மற்றும் அமெரிக்க கூட்டுப்படை கடந்த மாதம் 28ம் தேதி காலை நேரத்தில் ஈரானில் நடத்திய தாக்குதலில் அந்நாட்டு உச்ச தலைவர் அலிகமேனி மற்றும் அவரது குடும்பத்தில் முக்கிய தலைவர்கள் உயிரிழந்துவிட்டனர். அலி கமேனி உட்பட முக்கிய தலைவர்களை ஒரே தாக்குதலில் கொலைசெய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இத்தாக்குதல் நடத்தப்பட்டது. வெனிசுலாவில் அந்நாட்டு அதிபரை உயிரோடு பிடித்துச் சென்றது போன்று அலி கமேனியைப் பிடிக்க முடியாது என்பதாலும், ஈரானுக்குள் சென்று தாக்குதல் நடத்துவது முடியாத காரியம் என்பதாலும் அவர்கள் மீது குண்டு வீசி கொலை செய்து அழித்துவிட வேண்டும் என்று நினைத்து இஸ்ரேலும், அமெரிக்காவும் இத்தாக்குதலை நடத்தின.ஆனால் இத்தாக்குதலில் அலி கமேனியின் மகன் மொஜ்தபா கமேனி அதிர்ஷ்டவசமாக சிறிய காயத்துடன் உயிர் தப்பிவிட்டார். அவரது காலில் மட்டும் காயம் ஏற்பட்டுள்ளது. இத்தாக்குதல் குறித்து பேசப்பட்ட ஆடியோ ஒன்று இப்போது வெளியாகி இருக்கிறது.டெலிகிராப் இதழுக்குக் கிடைத்த ஆடியோவின் படி, அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதலில் இருந்து ஈரானின் புதிதாக நியமிக்கப்பட்ட உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி, குண்டுவெடிப்பு நிகழ்வதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, சில வேலைகளுக்காக அவர் தங்கி இருந்த வளாகத்தை விட்டு வெளியே வந்ததால் உயிர் பிழைத்ததாக தெரியவந்துள்ளது.இருப்பினும், இந்தத் தாக்குதலில் அவரது தந்தை அலி கமேனி மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த பிற உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர். ஈரானின் ராணுவத் தலைவர் உடல் சிதறி, வெறும் சில கிலோ சதைத்துண்டுகளே கிடைத்தது. அவர் உடல் உறுப்புகள் பல மீட்டர் தூரத்திற்கு சென்றுவிழுந்தது. அயதுல்லா அலி கமேனியின் மருமகனின் தலை இரண்டாக பிளந்து கிடந்ததாகவும், அந்த ஆடியோவில் கூறப்பட்டிருக்கிறது. மறைந்த அயதுல்லா அலி கமேனியின் அலுவலகத்தில் பணியாற்றும் ஓர் உயர் அதிகாரி அந்த ஆடியோவில் பேசி இருந்தார். பிப்ரவரி 28ம் தேதி அன்று நடந்த அந்தத் தாக்குதல் குறித்த விரிவான தகவல்கள் அந்த ஆடியோவில் இடம் பெற்றுள்ளது.அலி கமேனியின் அலுவலகத்தில் நெறிமுறைத் தலைவராக பணியாற்றும் மஸாஹர் ஹொசைனி சமீபத்தில் டெஹ்ரானில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசிய அந்த ஆடியோ படி, பிப்ரவரி 28ம் தேதி உள்ளூர் நேரப்படி காலை 9.32 மணிக்கு கமேனியின் குடியிருப்பு வளாகம் தாக்கப்பட்டது. கமேனி குடும்பத்தினரையும், ஈரானின் உயர்மட்டத் தலைவர்களையும் ஒரே நேரத்தில் ஒட்டுமொத்தமாக அழிப்பதற்காக திட்டமிடப்பட்டு இத்தாக்குதல் நடத்தப்பட்டது.இத்தாக்குதலை தொடர்ந்து ஈரான் தொடர்ந்து அமெரிக்காவின் நட்பு நாடுகள் மீதும், அமெரிக்க ராணுவ நிலைகள் மீதும் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது. தோஹா, துபாய், அபுதாபியில் இத்தாக்குதல் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.ஆனால் 56 வயதான மொஜ்தபா கமேனி, தாக்குதலுக்குச் சில நிமிடங்களுக்கு முன்புதான் வீட்டிற்கு வெளியில் வந்து அங்குள்ள தோட்டத்திற்குச் சென்றிருந்தார். தோட்டத்தில் இருந்து மீண்டும் வீட்டிற்குச் செல்ல கட்டடத்தின் படிக்கட்டில் ஏறியபோதுதான் அக்கட்டடத்தில் குண்டு விழுந்தது. இந்தத் தாக்குதலில் அவரது காலில் மட்டும் சிறு காயம் ஏற்பட்டது. ஆனால், அவரது மனைவி ஜஹ்ரா மற்றும் மகன் ஆகிய இருவரும் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். அலி கமேனியின் மற்றொரு மகனான முஸ்தபா கமேனி தாக்குதல் நடந்த இடத்திற்கு அருகிலேயே இருந்தார். இருப்பினும், அவரும் அவர் மனைவியும் காயமின்றி உயிர் தப்பினர்.

vikatan
17 மார்.
3 நிமிடம் படிக்க

அதிகம் படிக்கப்பட்டது

எங்கள் வாசகர்கள் பேசும் பிரபலமான கதைகள்