

தோழமை தொடர்வோம், களத்தினில் வெல்வோம்
234 தொகுதிகளும் நம்முடைய தொகுதிகள் தான், கவனம் சிதறாது இலக்கை வெல்வோம் என்று, முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.நேர்காணல் நிறைவு இதுகுறித்து தொண்டர்களுக்கு, மு.க.ஸ்டாலின் எழுதி உள்ள மடலில் கூறி இருப்பதாவது;2026 சட்டமன்றத் தேர்தல் களத்திற்கான தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தோழமைக் கட்சிகள் உடனான தொகுதிப் பங்கீடும், விருப்ப மனு அளித்தவர்கள் உடனான நேர்காணலையும் நிறைவு செய்துவிட்டு, அன்பு உடன்பிறப்புகளாம் உங்களுக்கு இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.ஜனநாயகப்பூர்வ பேச்சுவார்த்தை பத்தாண்டுகால படுமோசமான அ.தி.மு.க. ஆட்சியினால் தமிழ்நாட்டின் அனைத்து துறைகளிலும் ஏற்பட்ட சீரழிவுகளைச் சரிசெய்து, கடந்த ஐந்தாண்டுகால திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சியை இந்திய அளவில் உயர்த்திக் காட்டி இருக்கிறோம். இந்தப் பெரும் முயற்சிக்கும் சாதனைக்கும் துணை நின்ற கொள்கைவழித் தோழமை இயக்கத்தினரின் பங்களிப்பு மிக மிக முக்கியமானது. அதனை மதித்து உணர்ந்தே இந்த முறையும் திமுக சார்பில் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை, ஜனநாயகப்பூர்வமாக நடைபெற்றன.தொகுதி பங்கீடு, ஒப்பந்தம் நமது கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ள காரணத்தால், உரிய அளவில் தொகுதிகளைப் பங்கிட்டுக் கொள்ள வேண்டிய சூழலும் தேவையும் இருப்பதை நம்முடன் தொடர்ந்து பயணிக்கும் தோழமைக் கட்சிகளான விடுதலைச் சிறுத்தைகள், இ.கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், ம.தி.மு.க, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட அனைத்து இயக்கங்களின் தலைவர்களுடனும் ஆலோசித்தே தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை நடைபெற்று, ஒப்பந்தங்கள் நிறைவேறியுள்ளன.நேரில் விளக்கம் தந்தேன் கம்யூனிஸ்ட் தலைவர்களிடமும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் சகோதரர் திருமாவளவன், ம.தி.மு.க பொதுச்செயலாளர் அண்ணன் வைகோ, மற்ற இயக்கத் தலைவர்களிடமும் தொகுதிப் பங்கீட்டு நிலவரங்களை உங்களில் ஒருவனான நான் நேரில் விளக்கினேன். அவர்கள் எதிர்பார்க்கின்ற எண்ணிக்கையில் உள்ள நியாயத்தை மதித்து, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி மகத்தான வெற்றி பெறுவதற்கேற்ப எண்ணிக்கையை நிர்ணயிக்க வேண்டிய சூழல் இருப்பதையும் அவர்களிடம் விளக்கமாகச் சொன்னேன்.உறுதி செய் உத்தரவாதம்எப்போதும் என் மீது அன்பும், திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும் என்ற உறுதியும் கொண்ட நமது தோழமை இயக்கத் தலைவர்களும், தங்கள் இயக்க நிர்வாகிகளுடன் தொடர்ந்து ஆலோசித்து, உரிய அவகாசம் எடுத்துக்கொண்டு, பல சுற்று பேச்சுவார்த்தைகளுக்குப் பின் மனப்பூர்வமாக எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் தான் தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. கூட்டணியின் தலைவர் என்ற முறையில் தோழமைக் கட்சிகளை நம்முடைய அங்கமாகத் தான் பார்க்கிறேன். அவர்களுக்கான தொகுதிகளில் முழுமையான வெற்றியை உறுதி செய்ய அவர்களின் சகோதரனாக என் உத்தரவாதத்தையும் வழங்கி இருக்கிறேன்.கூட்டணி வலிமைக்கு சான்று தேர்தல் களத்தில் ஒவ்வொரு அரசியல் கட்சியும் தங்களுக்குத் தேவைப்படும் தொகுதிகளை உரிமையுடன் கேட்பதும், அவற்றைப் பரிசீலித்து எந்தளவுக்கு வழங்க முடியுமோ அவற்றை வழங்குவதும் கூட்டணிக்கான நடைமுறை. அதனை ஜனநாயகத் தன்மையுடன் நிறைவேற்றியிருக்கிறது தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி.கூட்டணியின் வெற்றியே பெரிது என்பதை எடுத்துரைத்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவரான நண்பர் கமல்ஹாசன், தனது மனம் திறந்து வெளியிட்டிருக்கும் அறிக்கையை மனதார வரவேற்கிறேன். அதுபோலவே விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள், ம.தி.மு.க. உள்ளிட்ட தோழமைக் கட்சித் தலைவர்களும் மனப்பூர்வமாகத் தெரிவித்திருக்கும் கருத்துகள், 2019 முதல் தொடர்ந்திடும் நமது கூட்டணியின் வலிமைக்குச் சான்றாகும்.சதிகாரர்களின் எண்ணங்கள்... தமிழ்நாட்டைத் தொடர்ந்து வஞ்சிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் மதவாத அரசியலைத் துணிவுடன் எதிர்த்து நிற்கும் திமுகவுக்கு, தோளோடு தோள் நிற்பவை நம் தோழமை இயக்கங்கள். மதச்சார்பின்மை - மாநில உரிமை – சமூகநீதி - சமத்துவம் இவற்றை அடித்தளமாகக் கொண்ட கொள்கைக் கூட்டணி தான் நம்முடையது. இதில் ஏதாவது விரிசல் ஏற்படாதா, பிளவு உருவாகாதா, தி.மு.க. கூட்டணியின் வெற்றியைத் தடுத்திட வழி ஏற்படாதா என நினைத்த சதிகாரர்களின் எண்ணங்கள் தவிடுபொடியானதால், தி.மு.க கூட்டணியின் தொகுதிப் பங்கீடு குறித்து தங்கள் கற்பனைக்கேற்ப விமர்சனங்களைப் பரப்பிட முயற்சி செய்கின்றனர். திசை திருப்ப நினைக்கும் வதந்திகளை உடன்பிறப்புகள் கண்டுகொள்ளாமல் புறக்கணித்து, தோழமைக் கட்சியினருடன் இணைந்து களத்தில் பணியாற்றி, வெற்றியை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.16,500 பேருடன் நேர்காணல்தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகளை திமுக குழு நடத்தி வந்த நிலையில், தி.மு.க.வின் சார்பில் தேர்தல் களத்தில் போட்டியிட விருப்பமனு அளித்திருந்த ஆயிரக்கணக்கான உடன்பிறப்புகளை ஒவ்வொரு நாளும் சந்தித்து, நேர்காணலையும் நடத்தி முடித்திருக்கிறேன். மார்ச் 17ஆம் தேதி தொடங்கி, 23ஆம் தேதி வரை, இடையில் ரமலான் திருநாள் விடுமுறை தவிர்த்து, 6 நாட்கள் இந்த நேர்காணல் நடைபெற்று உள்ளது.நேர்காணல் என்பது தலைமைக்கும் தொண்டர்களுக்குமான உறவின் வெளிப்பாடு. இந்த முறை 16 ஆயிரத்து 500 உடன்பிறப்புகள் கலந்துகொண்ட கொள்கை உறவுத் திருவிழா. மாரத்தான் ஓட்டத்தைப்போல ஒவ்வொரு நாளும் 10 மணி நேரத்திற்குக் குறையாமல் நேர்காணல் நடைபெற்றது. விருப்பமனு அளித்த உடன்பிறப்புகளின் முகம் கண்டபோது எனக்குள் ஏற்பட்ட உற்சாகத்தினால் அடுத்தடுத்த நாட்களும் தொடர்ந்து ஊக்கமுடன் பணியாற்ற முடிந்தது.இந்த மு.க.ஸ்டாலின் தான் நிற்கிறேன்அண்ணா அறிவாலயம் - கலைஞர் அரங்கில் தலைமை நிர்வாகிகள் முன் தங்களுக்கான நேர்காணல் ‘சீட்’ ஒதுக்கப்பட்டிருந்ததில் விருப்பமனு செய்திருந்த ஒவ்வொருவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அவர்களிடம், “உங்கள் தொகுதியில் தலைமை யாருக்கு சீட் கொடுத்தாலும் நீங்கள் இதே மகிழ்ச்சியுடன் களத்தில் பணியாற்ற வேண்டும்” என்று தெரிவித்தேன். தோழமைக் கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளும் தி.மு.க.வின் தொகுதிகள் தான் என்பதால், 234 தொகுதிகளிலும், இந்த மு.க.ஸ்டாலின்தான் நிற்கிறேன் என்ற உணர்வுடன் வேலை செய்ய வேண்டும் என்று சொன்னபோது, உடன்பிறப்புகள் அனைவரும், வெற்றி ஒன்றுதான் எங்கள் இலக்கு என்ற உறுதியை அளித்தனர்.175 இடங்களில் உதயசூரியன்உடன்பிறப்புகள் தந்த உறுதியில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. தமிழ்நாட்டு மக்களிடமும் தி.மு.க தலைமையிலான கூட்டணிக்குப் பெரும் செல்வாக்கு இருக்கிறது. நம்பிக்கையும் செல்வாக்கும் வெற்றியாக விளைவதற்கு நாம் அடுத்த 4 வாரங்களும் அயராமல் உழைத்திட வேண்டும். மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தொகுதிப் பங்கீட்டு நிறைவில், தங்கள் கட்சி சின்னத்தில் போட்டியிடும் தோழமைக் கட்சிகளின் தொகுதிகள் போக, தி.மு.க வேட்பாளர்கள் மற்றும் தி.மு.க. சின்னத்தில் போட்டியிடும் தோழமைக் கட்சி வேட்பாளர்களுமாக இணைந்து 2026 சட்டமன்றத் தேர்தல் களத்தில், 175 இடங்களில் உதயசூரியன் களம் காண்கிறது.கவனம் சிதறாது இலக்கை வெல்வோம்உதயசூரியனும் நமது சின்னம்தான். கை, முரசு, கதிர் அரிவாள், அரிவாள் சுத்தியல் நட்சத்திரம், பானை, ஏணி ஆகியவையும் நமது சின்னங்கள்தான். 234 தொகுதிகளும் நம்முடைய தொகுதிகள்தான். மதவாத அரசியலையும், தமிழ்நாட்டை வஞ்சிக்கும் துரோகத்தையும் எதிர்த்து நின்று, எல்லார்க்கும் எல்லாம் என்கிற ஆட்சி தொடர்ந்திடவும், இந்தியாவின் ஜனநாயகத்தைக் காத்திடவும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கான வெற்றிக் களத்தில் தோழமைக் கட்சிகளுடன் இணைந்து நின்று, விரைந்து பணியாற்றுவீர். கவனம் சிதறாது இலக்கை வெல்வோம்.இவ்வாறு மடலில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. The post தோழமை தொடர்வோம், களத்தினில் வெல்வோம் appeared first on https://www.newstamil.tv.

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகள்
எதிர் வரும் சட்டசபை தேர்தலில், அதிமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிடும் பாஜகவுக்கு, ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் பட்டியலை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். 1. மைலாப்பூர் (25)2. தளி (56)3. மொடக்குறிச்சி (100)4. உதகமண்டலம் (108)5. அவினாசி (தனி) (112)6. திருப்பூர் (தெற்கு) (114)7. கோயம்புத்தூர் வடக்கு (118)8. கந்தர்வகோட்டை (தனி) (178)9. புதுக்கோட்டை (180)10. திருப்பத்தூர் (185)11. மதுரை தெற்கு (192)12. சாத்தூர் (204)13. திருச்செந்தூர் (215)14. வாசுதேவநல்லூர் (தனி) (220)15. ராதாபுரம் (228)16. நாகர்கோவில் (230)17. விளவன்கோடு (233)18. ஆவடி (6)19. திருவண்ணாமலை (63)20. தஞ்சாவூர் (174)21. திருவாரூர் (168)22. அறந்தாங்கி (183)23. மானாமதுரை (தனி) (187)24. ராமநாதபுரம் (211)25. குளச்சல் (231)26. பத்மநாபபுரம் (232)27. ராசிபுரம் (தனி) (92) The post அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகள் appeared first on https://www.newstamil.tv.

சர்பராஸ் கானின் குழந்தையுடன் விளையாடிய தோனி
குழந்தையுடன் விளையாடிய தோனி : சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் பயிற்சி முகாமில் எம்.எஸ். தோனி, சர்பராஸ் கானின் குழந்தையுடன் பாசமாக விளையாடும் வீடியோ வைரலாகியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரீ யூனியன் நிகழ்ச்சி சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு முன்னதாக சர்பராஸ் கானின் குழந்தையை எம்.எஸ். தோனி தூக்கி கொஞ்சினார். ஐபிஎல் ஏலத்தில் சர்பராஸ் கானை 75 லட்சம் ரூபாய்க்கு அந்த அணி ஏலத்தில் எடுத்தது குறிப்பிடதக்கது. Related Link காயம் காரணமாக போர்ச்சுகல் வீரர் ரொனால்டோ விலகல் The post சர்பராஸ் கானின் குழந்தையுடன் விளையாடிய தோனி appeared first on https://www.newstamil.tv.

இந்திய வீராங்கனை கொனேரு ஹம்பி விலகுவதாக அறிவிப்பு
கொனேரு ஹம்பி விலகுவதாக அறிவிப்பு : மேற்கு ஆசியாவில் நிலவும் போர் சூழல் காரணமாக சைப்ரஸில் நடைபெறவுள்ள 2026-ம் ஆண்டு ஃபிடே மகளிர் கேண்டிடேட்ஸ் சதுரங்க போட்டியில் இருந்து விலகுவதாக இந்திய வீராங்கனை கொனேரு ஹம்பி அறிவித்துள்ளார். எந்த ஒரு போட்டியும், அது எவ்வளவு முக்கியமானதாக இருந்தாலும், தனிப்பட்ட பாதுகாப்பை விட மேலானது இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து அவருக்கு பதிலாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த அன்னா முசிச்சுக் இந்தப் போட்டியில் பங்கேற்பார் என்று சர்வதேச சதுரங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது. Related Link மிரட்டலுக்கு மத்தியில் பாகிஸ்தான் சென்றடைந்த ஸ்மித் The post இந்திய வீராங்கனை கொனேரு ஹம்பி விலகுவதாக அறிவிப்பு appeared first on https://www.newstamil.tv.

கிரெவெண்டிக் ஐரோப்பிய தொடரில் அஜித்குமார் ரேஸிங் அணி
ஐரோப்பிய தொடரில் அஜித்குமார் ரேஸிங் அணி : கிரெவெண்டிக் ஐரோப்பிய தொடரில் கலந்து கொண்ட அஜித் குமாரின் ரேஸிங் அணி தங்களின் திறமையை வெளிப்படுத்தி 9ஆம் இடத்தை பிடித்தது. குட் பேட் அக்லி திரைப்படத்துக்கு பின் ரேசிங்கில் அதிக கவனம் செலுத்தி வரும் அஜித்குமார் தனது அணியுடன் கிரெவெண்டிக் ஐரோப்பிய தொடரில் பங்கேற்றார். இப்போட்டியின் இறுதி சுற்று 12 மணிநேரம் நடைபெற்ற நிலையில், அஜித்குமார் அணி 13 ஆவது இடத்திலிருந்து முன்னேறி 9ஆம் இடத்தை பிடித்தது. Related Link சர்பராஸ் கானின் குழந்தையுடன் விளையாடிய தோனி The post கிரெவெண்டிக் ஐரோப்பிய தொடரில் அஜித்குமார் ரேஸிங் அணி appeared first on https://www.newstamil.tv.

காயம் காரணமாக போர்ச்சுகல் வீரர் ரொனால்டோ விலகல்
போர்ச்சுகல் வீரர் ரொனால்டோ விலகல் : FIFA கால்பந்து உலகக் கோப்பை தொடரை முன்னிட்டு நடைபெறும் நட்புறவு போட்டியில், காயம் காரணமாக போர்ச்சுகல் நட்சத்திர வீரர் ரொனால்டோ பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. ஜூன்-ஜூலை மாதங்களில் உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறும் நிலையில், போர்ச்சுகல் அணி வரும் 28ஆம் தேதி மெக்சிகோவுடனும், 31ஆம் தேதி அமெரிக்காவுடனும் நட்புறவு ஆட்டத்தில் விளையாடுகிறது. தசைப்பிடிப்பு காரணமாக அவதிப்பட்டு வரும் ரொனால்டோ,விரைவில் உடற் தகுதியை எட்டுவார் என நம்பப்படுகிறது. Related Link மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களுக்கு உறுதியளித்த ரோகித் ஷர்மா The post காயம் காரணமாக போர்ச்சுகல் வீரர் ரொனால்டோ விலகல் appeared first on https://www.newstamil.tv.

திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு
தமிழ்நாடு, இந்தியா, இலங்கை, உலகம் மற்றும் விளையாட்டு தொடர்பான சமீபத்திய நிகழ்வுகள் பற்றிய தகவல்களை இந்த பக்கத்தில் பார்க்கலாம்.

'அனைவரும் குற்றவாளிகள்' - சாத்தான்குளம் ஜெயராஜ் பென்னிக்ஸ் வழக்கின் தீர்ப்பு கூறுவது என்ன?
சாத்தான்குளம் "பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் மரணம் கொலை" என தீர்மானிக்கப்படுவதாக கூறிய மதுரை மாவட்ட அமர்வு நீதிபதி, தண்டனை விவரங்கள் மார்ச் 30-ம் தேதி அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

அமெரிக்கா - இரான் இடையே மத்தியஸ்தராக பாகிஸ்தான் உருவெடுக்கிறதா? புதிய தகவல்
அமெரிக்கா மற்றும் இரானின் மூத்த தலைவர்களின் சந்திப்பை இஸ்லாமாபாத்தில் நடத்தலாம் என்று பாகிஸ்தான் முன்மொழிந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து அமெரிக்காவோ அல்லது இரானோ இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. என்ன நடக்கிறது?
சமீபத்திய செய்திகள்
சமீபத்திய புதுப்பித்தல்கள்


இந்திய அணி பாகிஸ்தான் சென்றிருந்த போது முஷாரஃப் செய்த டெலிபோனால் கங்குலி அஞ்சியது ஏன்?

துரந்தர்: இந்திய உளவாளியாக நடித்த ரண்வீர் சிங் உண்மையில் பாகிஸ்தானை பூர்வீகமாகக் கொண்டவரா?

கோவையை ஒட்டி கட்சிக்கொடி, போஸ்டர், சுவர் விளம்பரமே தென்படாத கிராமம் - 1991ல் என்ன நடந்தது?
கோவை மாநகராட்சியை ஒட்டி அமைந்துள்ள சோமையம்பாளையம் கிராம ஊராட்சிக்குட்பட்ட காளப்பநாயக்கன்பாளையம் கிராமத்தில் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் அடையாளங்கள் தொடர்பான கட்டுப்பாடு, ஊர் மக்களால் ஒருங்கிணைந்து கடைபிடிக்கப்படுகிறது.
விளம்பர இடம்
உங்கள் விளம்பரத்தை இங்கே காட்சி செய்யலாம்
மேலும் செய்திகள்
தமிழ்நாடு முழுவதும் மற்றும் அதற்கு அப்பால் இருந்து சமீபத்திய கதைகளுடன் புதுப்பித்த நிலையில் இருங்கள்

போர் எப்போது முடியும்? அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் இரானின் விருப்பம் என்ன?
பெரும்பாலான மக்கள் இந்தப் போர் சீக்கிரம் முடிவடைய வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால் எந்த நிபந்தனைகளின் கீழ்? அங்குதான் நிலைப்பாடுகள் வேறுபடுகின்றன. அமெரிக்கா, இஸ்ரேல், இரான் மூன்றும் இந்த போர் எவ்வாறு முடிய விரும்புகின்றன?

அமெரிக்கா 7000 இலக்குகளை தாக்கிய பிறகும் இரான் தொடர்ந்து பதிலடி கொடுப்பது எப்படி?
அமெரிக்கப் படைகளால் மட்டுமே சுமார் 7,000-க்கும் மேற்பட்ட இலக்குகள் தாக்கப்பட்ட போதிலும், இரானிய ஏவுகணைகளும் டிரோன்களும் இன்னும் அண்டை நாடுகளைத் தாக்கி வருகின்றன.

திகில் படம் பார்ப்பது நிஜத்தில் சவாலை சமாளிக்க உதவுமா? இக்கட்டான சூழலை சமாளிக்க 9 யோசனைகள்
சில நேரங்களில் நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள் கையாள முடியாத அளவுக்கு அதீதமாகத் தோன்றலாம். இது உலகம் முழுவதும் தொடர்ந்து வரக்கூடிய கெட்ட செய்திகள் மற்றும் பெரிய மாற்றங்கள், தனிப்பட்ட சோகம் அல்லது வாழ்வை நிர்வகிப்பதில் அன்றாடம் இருக்கும் போராட்டம் காரணமாக இருக்கலாம். விஷயங்கள் நிச்சயமற்றதாக இருக்கையில், கவலை, பதற்றம் அல்லது மன அழுத்தத்தை உணர்வது பொதுவானது.

மாதாந்திர ஊதிய ஆவணம்(Pay slip) இல்லாதவர்கள் வீட்டுக்கடன் பெறுவது எப்படி?
சிறிய அல்லது பெரிய தொழில் நடத்துபவர்கள், முறைசாரா துறையில் கைவினைஞர்களாகப் பணிபுரிபவர்கள், விவசாயிகள் அல்லது கடை நடத்துபவர்களுக்கு, வேலைக்குச் செல்பவர்களைப் போல ஒவ்வொரு மாதமும் சம்பளச் சீட்டு கிடைப்பதில்லை. அப்படியென்றால் அத்தகையவர்கள் என்ன செய்ய வேண்டும்? சம்பளச் சீட்டு இல்லாமல் அவர்கள் எவ்வாறு வீட்டுக் கடன் பெற முடியும்?

சென்னையில் சீர்திருத்த திருமணத்தை பதிவு செய்ய மறுத்ததாக குற்றச்சாட்டு - பதிவுத்துறை கூறியது என்ன?
சென்னையில் நிகழ்ந்த சீர்திருத்த திருமணம் ஒன்றை சார்பதிவாளர் பதிவு செய்ய மறுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சீர்திருத்தத் திருமணங்களுக்கு தமிழ்நாட்டில் சட்டப்பூர்வ அங்கீகாரம் இருக்கும் நிலையில், அதன் பதிவுக்கான கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு விவாதப் பொருளாகியுள்ளது.

இரான் தாக்குதலுக்கு மத்தியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 19 இந்தியர்கள் கைது ஏன்?
சமூக ஊடகங்களில் மத்திய கிழக்கு போர் தொடர்பான பதற்றத்தைத் தூண்டும் மற்றும் தவறான தகவல்களை பரப்பியதாக 19 இந்தியர்கள் உட்பட 35 பேர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையில் 'கியூஆர்' முறையில் பெட்ரோல், டீசல் விநியோகம் - எந்த வண்டிக்கு எவ்வளவு கிடைக்கும்?
'எரிபொருள் இருப்பைப் பாதுகாக்கும் நோக்கில்' முந்தைய அரசாங்கத்தின் பதவிக்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட கியூஆர் (QR) முறையை மார்ச் 15 முதல் மீண்டும் நடைமுறைப்படுத்த இலங்கை எரிசக்தி அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் போர்களில் இரான் யாரை ஆதரித்தது? இரு நாட்டு உறவு பற்றிய ஒரு பார்வை
"இந்தியாவும் இரானும் புதிய நண்பர்கள் அல்ல. நமது நட்பு வரலாற்றைப் போன்றே பழமையானது. பல நூற்றாண்டுகளாக நமது சமூகங்கள் கலை மற்றும் கட்டடக்கலை, கருத்துகள் மற்றும் மரபுகள், கலாசாரம் மற்றும் வர்த்தகம் ஆகியவற்றின் மூலம் பிணைக்கப்பட்டுள்ளன."

இரான் போரில் அமெரிக்கா, இஸ்ரேல் இடையே முரண்பாடு உள்ளதா? - டிரம்ப் பற்றி பேசிய நெதன்யாகு
தற்போதைய இரான் போரில் இஸ்ரேல் அமெரிக்காவை 'கட்டாயப்படுத்தியது' என்ற கருத்தை பெஞ்சமின் நெதன்யாகு மறுத்துள்ளார்.

Youth Review: 'கலகல காதல்; குடும்ப எமோஷன்; ஆனாலும்...' - எப்படி இருக்கு 2கே கிட்ஸ்களின் 'யூத்'?
10ம் வகுப்பு படிக்கும் பிரவீன் (கென் கருணாஸ்) பொதுத்தேர்வில் அனைத்துப் பாடங்களிலும் ஜெஸ்ட் பாஸ் மட்டுமே பெறுகிறார். பிரவீனுக்கு மிகவும் செல்லம் தந்து வளர்க்கும் தாயார் சரோஜாவுக்கு (தேவதர்ஷினி) மகன் பாஸ் ஆகிவிட்ட விஷயம் மகிழ்ச்சியைத் தந்தாலும், பேக்கரி வைத்திருக்கும் தந்தை உன்னிகிருஷ்ணனுக்கு (சுராஜ் வெஞ்சாரமூடு) கோபத்தையே உண்டாக்குகிறது. Youth Rewiew | யூத் விமர்சனம்மேல்நிலைப் படிப்புக்குச் செல்லும் பிரவீனுக்கு அங்கு அடுத்தடுத்து மூன்று காதல்கள் அரங்கேறுகின்றன. படிப்பில் கவனம் செலுத்தாமல் முழுக்க முழுக்க 'லவ் லவ் லவ்' என மூழ்கிக்கிடக்கிறார் பிரவீன். இந்தக் காதல்கள் அவருக்குள் எப்படியான தாக்கங்களையும், மாற்றங்களையும் கொண்டு வருகின்றன என்பதுதான் அறிமுக இயக்குநர் கென் கருணாஸ் இயக்கியிருக்கும் 'யூத்' திரைப்படத்தின் கதை.Youth: "எனக்கு இப்போது 24 வயது; ஆனால்..." - 'யூத்' படம் குறித்து நெகிழும் கென் கருணாஸ்பதின்வயது இளைஞனுக்குரிய உடல்மொழி, சேட்டை, நடனம், '3' காதல் ஆட்டங்கள், அவருக்குள் ஏற்படும் குற்றவுணர்வு மற்றும் மனமாற்றம் என அனைத்தையும் கச்சிதமாக நடிப்பில் புகுத்தி 'யூத்' நாயகனாகத் தடம் பதிக்கிறார் கென் கருணாஸ். படிப்போடு நடிப்பும் சூப்பர் செதம்பரம்! பள்ளி மாணவிகளாக மீனாட்சி தினேஷ், அனிஷ்மா அனில்குமார் ஆகியோர் நல்லதொரு பங்களிப்பை நல்கி, விரலில் ஹார்ட்டின் காண்பிக்க வைத்திருக்கிறார்கள்!மூன்றாவது கதாநாயகியாக வரும் ப்ரியான்ஷி யாதவிற்கு நடிப்பில் பெரியளவில் வேலை இல்லை. மகனுக்கும், மகனின் கல்விக்கும் எந்தக் குறையும், தடையும் வந்துவிடக் கூடாது என அரும்பாடுபடும் அப்பாவித் தாயாக தேவதர்ஷினி, நடிப்பின் மூலம் நம் மனதைக் கனமாக்குகிறார். மழித்த தாடி மற்றும் பருமனான மீசையுடன் ஸ்ட்ரிக்ட் தந்தையாக வருகிறார் சுராஜ் வெஞ்சராமூடு. வழக்கமான அம்சங்கள் நிறைந்த கதாபாத்திரமாக இருந்தாலும், அவருடைய ஸ்டைல் கொண்டு இனிப்பு, காரம் என அதன் சுவையை ஏற்றியிருக்கிறார். சின்ன தமிழா, ஈஸ்வர் உள்ளிட்ட கென் & கேங், மீனாட்சி தினேஷின் தோழிகளாக வருபவர்கள், இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்சர் மணிகண்டன் & குழு ஆகியோர் படத்தின் சிரிப்பொலி எபிசோடுகளை ஷார்ப்னர் கொண்டு சீவியிருக்கிறார்கள்.Youth Rewiew | யூத் விமர்சனம்சிறிய வீடு, கென்னின் அறை, பரபரப்பாக இருக்கும் பள்ளி வளாகம், ஜாலியான வகுப்பறை போன்றவற்றை கலர்ஃபுல் ரங்கோலியாக மாற்றியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் விக்கி. முதல் பாதி காமெடிக்கு, இரண்டாம் பாதி எமோஷனுக்கு எனக் கணக்குப் போட்டு காட்சிகளை அடுக்கி செண்டம் வாங்கியிருக்கிறார் படத்தொகுப்பாளர் நாஷ்.2014-ம் ஆண்டில் பயன்படுத்தப்பட்ட பட்டன் மொபைல்கள், டி.வி, பழைய ரூபாய் நோட்டுகள், பழைய கோலா பாட்டில், நெட் சென்டர்கள் என அக்காலக்கட்டத்தை நினைவூட்டி, கதைக்குப் பலம் சேர்த்திருக்கிறது கலை இயக்குநர் ராமு தங்கராஜின் கச்சிதமான கைவண்ணம்.'கடைசி வரைக்கும் நன்றியோட இருந்தா மாஸ்'ன்னு சொல்லிருக்கீங்க, நான் என்னைக்குமே!'- தனுஷ் குறித்து கென்'முட்ட கலக்கி', 'ஜில்பான்ஸோ', 'லவ்வ சொல்லிட்டாளே' ஆகிய பாடல்களில் காதலைக் கொண்டாட்டத்துடன் பரிமாறியிருக்கிறார் ஜி.வி. பிரகாஷ்குமார். அதேபோல, பின்னணி இசையிலும் காமெடி, காதல், செண்டிமெண்ட் என அனைத்துப் பாடங்களிலும் ஃப்ர்ஸ்ட் மார்க் வாங்குகிறார் ஜி.வி.படிப்பில் கவனம் செலுத்தாமல் ஜாலியாக இருக்க நினைக்கும் ஒருவனுக்குக் காதல்களாலும், குடும்பத்தாலும் கிடைக்கும் அனுபவங்கள் என்னென்ன என்பதை காமெடி, செண்டிமெண்ட் கலந்து சொல்லியிருக்கிறார் இயக்குநர் கென் கருணாஸ். பதின்வயதில் துளிர்விடும் காதல் ஆசைகள், அந்த வயது இளைஞர்களின் எண்ணவோட்டம், அப்போது முதிர்ச்சியற்ற தன்மையுடன் காதலை அணுகுவது எனப் பதின்வயது இளைஞனின் 360 டிகிரி வாழ்க்கையையும் படத்தின் முதல் பாதி திரைக்கதையில் சொல்லிவிடுகிறார்கள். Youth Rewiew | யூத் விமர்சனம்இரண்டு காதல்கள், அது ஏற்படுத்தும் குழப்பங்கள், நண்பர்களுடனான ஜாலி அரட்டைகள், அப்பாவி அம்மாவுடனான செல்லம் கொஞ்சல்கள், கறார் அப்பாவைக் கண்டால் ஏற்படும் ஜாலியான கோபம் என்பன போன்ற 'கலகல' பதில்களை எழுதி ரேங்க் ஹோல்டராக மேடை ஏறுகிறது திரைக்கதை. ஆனால், இடையிடையே உருவக்கேலிகள், பெண்களின் குரலை வைத்து கேலிகள் போன்றவை வகுப்பறையில் மாணவர்கள் செய்திருக்கும் க்ரைம் வேலைகள். அது அந்த வயதுக்குரிய இயல்பு என்றாலும், அதைத் தவறு என்று சுட்டிக்காட்டும் காட்சிகளோ, வசனங்களோ மிஸ்ஸிங்!கொலைச்சேவல் விமர்சனம்: ஆணவக்கொலைக்கு எதிரான சினிமா; மிரட்டும் க்ளைமாக்ஸ்! ஆனா மேக்கிங்?இரண்டாம் பாதியில் காதலுடன் சேர்த்து எமோஷனல் க்ளாஸையும் சேர்த்து சொல்கிறது திரைக்கதை. அம்மா மீதான அளப்பரிய பாசம், காதலை விட குடும்பமே முக்கியம் என உணரும் கிளைமேக்ஸ் நடிகர்களின் நேர்த்தியான பங்களிப்பால் நம்மை உருக்க வைத்தாலும், அவற்றை வழக்கமான திருப்பத்தைக் கொண்டு திரைக்கதையில் எழுதியிருப்பது குறைவான மதிப்பெண்களையே பெற வைத்திருக்கிறது. தெளிவாகச் சொல்லப்படாத காதல் கதைகள், முதல் பாதிக்குப் பிறகு காணாமல் போன காதலிகள் ஆகியவை இரண்டாம் பாதி திரைக்கதையில் லாங் ஆப்சென்ட் ஆகியிருக்கின்றன. பெண்களின் பார்வையில் காதல்களை அணுகாமல், அவர்களை வேண்டுமென்றே குற்றவாளிக் கூண்டில் ஏற்றும் கதாநாயகன் கதாபாத்திரம் பெரும் குழப்பம். Youth Rewiew | யூத் விமர்சனம்பள்ளிகளில் இதெல்லாம் செய்ய முடியுமா, அங்கு இப்படியான சுதந்திரங்கள் கொடுக்கப்படுமா என்பன போன்ற லாஜிக் கேள்விகளுக்குப் பதில்களை எழுதாமல் விட்டிருப்பது ஏனோ?!சில குறைகள் இருப்பினும், பதின்வயது இளைஞனின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் இந்த 'யூத்', காமெடி மற்றும் செண்டிமெண்ட் பாடங்களில் மட்டும் கவனம் செலுத்தி டீசண்ட் மார்க் வாங்குகிறது.தாய் கிழவி விமர்சனம்: ரகளையான காமெடிகளைச் சுருக்குப் பையில் கட்டி, அலப்பறையைக் கூட்டும் பவுனுத்தாயி!

மேட்டூர் அணைக்கு பக்கபலமாக நின்ற காவிரிப் பாலம்; ஐரோப்பிய கர்டர்கள்.. வரலாற்றுச் சின்னம்| அணை ஓசை 10
பரிசல் பயன்பாடு1927 வரை மேட்டூர் கிராமத்திலிருந்து காவிரியின் இடக்கரைக்கு செல்ல ஒரே வழி பரிசல் மட்டுமே. பரிசல் ஓட்டுபவர்கள் ஆற்றின் கடினமான நீரோட்டத்தையும் திறமையாகக் கடந்து சென்றனர். இந்த பரிசல்களை இயக்குபவர்கள் அந்த வேலையில் மிகவும் தேர்ச்சி பெற்றவர்களாக இருந்தனர் என்று பதிவு செய்துள்ளனர், பிரிட்டிஷ் பொறியாளர்கள்.இந்தத் திறமை, ஆற்றின் மிக கடினமான நீரோட்டத்தை கடந்து சரியாக இயக்கி குறிப்பிட்ட இடத்தை அடைவதற்கு மிகுந்த தேவையாக இருந்தது. அதேசமயம் விபத்துக்கள் நடப்பதென்பது அநேகமாக இல்லை எனலாம்! ஏனெனில், அவ்வளவு திறமை வாய்ந்தவர்களாக பரிசில் ஓட்டுபவர்கள் திறன் பெற்று இருந்தனர். ஆற்றை கடக்கவும், மீன்களைப் பிடிக்கவும் இந்த வகை பரிசல்களே பயன்படுத்தப் பட்டன!ஆற்றில் அதிக அளவு நீர் செல்லும் போது இக்கரையில் இருந்து பரிசலில் புறப்பட்டால் அக்கரையைச் சென்றடைவதற்கு முன்பாக, ஆற்றின் வேகத்தில் நீரோட்டத்தால் மெல்ல இழுக்கப்பட்டு, அநேகமாக சுமார் ஒருமைல் தூரம் தள்ளி அக்கரையில் இறங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும்! பிறகு, அங்கிருந்து பரிசலை தோளில் சுமந்தபடி, அக்கரையின் ஓரமாகவே பொடி நடையாக நடந்து வந்து சென்றடைய வேண்டிய இடத்தை அடைய நேரிடும்.கனரக கட்டுமான கருவிகள் அல்லது பொருட்களை இந்த பரிசல்கள் மூலம் அணையின் இடது புறத்திற்கு கொண்டு செல்வது என்பது இயலாத காரியம். ஓரளவு சிறிய இயந்திரங்கள் மற்றும் கருவிகளை அவசரத் தேவைக்காக மேட்டூர் கிராமத்திலிருந்து இடது புறக்கரைக்கு கொண்டு செல்ல, நான்கு பரிசல்களை ஒன்றாக நிறுத்தி, ஒன்றுடன் ஒன்று கட்டி அதற்கு மேல் மரக்கட்டைகளை வைத்து சமதளம் போல் ஏற்படுத்தி, மூங்கில் வார்களைக் கொண்டு கட்டி, பொருட்களை அதில் வைத்து மிக கவனமாக அக்கரைக்கு எடுத்துச் செல்ல வேண்டிய நிலை இருந்து வந்தது. ஆற்றின் குறுக்கே பாலம் கட்டும் வரை இந்த நிலையே நீடித்தது.காவிரி பாலம் திட்டம்கனரக கருவிகள், கட்டுமானப் பொருட்கள் போன்றவற்றை ஆற்றின் இடக்கரைக்கு பரிசல் வழியாகக் கொண்டு செல்ல முடியாததால், பாலம் கட்டும் அவசியம் உருவானது. இதற்கான முதற்கட்ட ஒதுக்கீடு ரூ.1.5 லட்சம்.முதலில், ஈரோடு காவிரிப் பாலத்தில் மீதமாக இருந்த 19 இரும்புக் கர்டர்களை வாங்கி இங்கு பயன்படுத்தி, மேலே 7 அங்குல அளவில் கான்கிரீட் போட்டு, 18 அடி அகலச் சாலை (நடைபாதையுடன் சேர்த்து 20 அடி) அமைக்கப்பட்டது. 10 டன் எடையுள்ள டிராக்டர், வண்டிகள் கூட செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டது. கடல் மட்டத்திலிருந்து +666 MSL அளவில் பாலம் அமைக்கப்பட்டது.காவிரி பாலம் கட்டுமானம் 1926 ஆம் ஆண்டு முதலில் “SITE-D” அடிப்படையில் வேலை தொடங்கினாலும், அணை “SITE-Y” என்ற இடத்துக்கு மாற்றப்பட்டதால் பாலம் அங்கு மாற்றி அமைக்கப்பட்டது. புதிய இடத்தில் பாறைகள் அடர்த்தியானவை; பெருவெள்ளத்தின் போதும் தேய்மானமில்லாமல் இருந்தன. எனவே, பாலம் கட்ட பொருத்தமாக அந்த இடம் அமைந்தது.1926 ஜூலை மாதம் மதிப்பீடு ரூ.2,68,000 ஆக அனுப்பப்பட்டு, 1927 மார்ச் மாதம் ஒப்புதல் கிடைத்தது. ஒப்பந்ததாரர் வேலை சரியாக செய்யாததால் 1927 ஆகஸ்டில் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது; பின்னர் கர்டர் பொருத்தும் பணி துறை மூலமே நடந்தது.வரலாற்றுச் சின்னமான காவிரி பாலம்அதிக கர்டர்கள் இந்தியாவில் கிடைக்காததால் ஐரோப்பாவிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டியதாகி, அனுமதி பெற்று 1927 அக்டோபர் முதல் 1928 மார்ச் வரை பொருத்தப்பட்டது. 1928 ஜூனில் பாலம் திறந்து விடப்பட்டது. ஆரம்பத்தில் சில வாகனங்களுக்கு மட்டுமே அனுமதியளிக்கப் பட்டது. 1930 முதல் டிராம்வே மூலம் அணை கட்டுமானப் பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டது. பாதசாரிகளுக்கான நடைபாதையும் அமைக்கப்பட்டது.மொத்தச் செலவு ரூ.2,63,129 மட்டுமே. பின்னாளில் இந்தப் பாலம் முக்கிய சாலையாக பயன்பட்டு, 1980களில் மேட்டூர் அனல் மின் நிலையம் உருவானபின், கூடுதலாக புதிய பாலங்கள் கட்டப்பட்டன.காவிரி பாலம் கல்வெட்டு 1928-ல் பாலம் கட்டப்பட்டதும் சேலம்–கோயம்புத்தூர் இடையே இணைப்பு ஏற்பட்டது. தொப்பூரிலிருந்து பவானிக்கு மேட்டூர் வழியாக புதிய சாலை அமைக்கப்பட்டதால், மெட்ராஸிலிருந்து கோயம்புத்தூருக்கு 14 மைல் தூரம் குறைந்தது. ஆனால் சேலம், கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகங்கள் இந்தப் பாலத்தால் வியாபார பலன் இல்லை என்று கூறி நிதி பங்களிப்பை மறுத்தன. எனவே முழுச் செலவும் மேட்டூர் திட்டத்திலிருந்தே ஒதுக்கப்பட்டது. பின்னாளில் இந்த சாலை, பாலம் ஆகியவை அதிக பயன்பாட்டை பெற்று இன்றளவும் பெரும் பயன் நல்கி வருகிறது.இவ்வாறு, 1928 இல் முடிக்கப்பட்ட காவிரிப் பாலம் மேட்டூர் அணை கட்டுமானத்திற்கும், தமிழ்நாட்டின் போக்குவரத்து வரலாற்றிற்கும் ஒரு சின்னமாக திகழ்கிறது. இந்தப்பாலத்தில் நின்று கொண்டு வடக்கு திசையில் பிரம்மாண்டமாக எழும்பி நிற்கும் அணையை கண்டு மகிழலாம். இதில் உழைத்த ஒவ்வொரு தொழிலாளர்களின் வேர்வைத் துளிகள் அணையிலிருந்து வெளியேறும் காவிரி நீரில் கலந்திருப்பதை உளமாற உணரலாம்.ஒட்டுமொத்த மேட்டூரின் கட்டமைப்பை இதை வாசித்து விட்டு ஒருமுறை நேரில் சென்று கண்டு வந்தீர்கள் என்றால் கூட்டு முயற்சியின் சின்னமாக, பொறியாளர்களின் தொலைநோக்குப் பார்வைக்கு அத்தாட்சியாக ஒவ்வொருவரின் உள்ளங்களிலும் மகிழ்ச்சி பூத்து மலரும் என்பது உறுதி!பாதுகாக்கப்பட்ட குடிநீர் 1928 ஆம் ஆண்டு ஜூன் மாதம் காவிரிப் பாலம் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்த பிறகுதான், அணையின் இடது புறக்கரையில் ஓரளவு கூறிக் கொள்ளும்படியான வேலைகள் நடக்க ஆரம்பித்தது.மிக முக்கியத் தேவையாக போதுமான அளவு பாதுகாக்கப்பட்ட நீர்த் தேவை இருந்தது. இது பெரிய அளவில் தேவைப்படுவதாகவும் அமைந்தது. அணையின் வலது புறக்கரையில் நிரந்தரமான வடிகட்டியுடன் கூடிய ஆலை மற்றும் நீர் கொள்கலன் அமைப்பதில் சில வசதி குறைபாடுகள் உணரப்பட்டன. மிகப் பொருத்தமான இடம் அணையின் இடது புறத்தில், காவிரிப் பாலத்துக்கு சற்று கீழே இயற்கையாகவே குளம் போன்று நீர் தேங்கி நிற்கும் ஒரு இடம் அமைந்தது.அந்த இடத்தில் வடிகட்டியுடன் கூடிய கொள்கலனும் மலைப்பகுதியில் (இடதுபுறம் உள்ள சீத்தாமலை) அணையின் பக்கவாட்டில் அமைந்த நீர்த் தொட்டியும், முகாம்களுக்கு மட்டுமின்றி அணையின் அதிகபட்ச உயரச்சுவர் கட்டி முடிக்கப்பட்டு அதன் மேல் புறம் பணி முடியும் வரை இந்த நீர் பயன்படுத்த வழங்கப்பட்டது.குடிநீர் நீரேற்று நிலையம் மனித உடலில் ஓடும் ரத்தக்குழாய்களைப் போல, அணை கட்டுமானத்தின் போது குறுக்கும் நெடுக்குமாக, அணை நீளம் முழுவதும் குழாய்கள் பதிக்கப்பட்டு, மேட்டூர் முகாமுக்கு முக்கியக் குழாயும், பிரித்தளிக்கும் குழாய்கள் அதிலிருந்து அணைக்கட்டுமானம் தொடர்புடைய அனைத்து பகுதிகளுக்கும் அதாவது பணிமனை, பவர் ஹவுஸ், மற்றும் வலதுபுற பக்கவாட்டு கரை வரையிலும் ஆற்றை கடந்து கொண்டு சென்று தேவையான அளவு தண்ணீர் அளிக்கப்பட்டது. ஆரம்பத்தில் ஆற்று நீரை நேரிடையாக அணை கட்டுமானப் பணிகளுக்கு பயன்படுத்துவது என்ற முடிவை எடுத்திருந்தாலும் சற்று யோசித்துப் பார்த்து அங்கு வேலையில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்கள் தன்னிச்சையாக அந்த நீரை தங்கள் தாகம் தீர்த்துக்கொள்ள அப்படியே அருந்தி விடலாம் என்ற அச்சமும், அதனால் காலரா போன்ற பெருந்தொற்று பரவும் அபாயமும் இதில் இருப்பதால் எல்லாவிதமான பயன்பாடுகளுக்கும் பாதுகாக்கப்பட்ட குளோரின் கலந்த சுத்தமான நீரை பயன்படுத்துவது என்ற முடிவு செயல்படுத்தப்பட்டது!`தாமதம் நல்லது' - பெரு வெள்ளமும் எல்லீஸ் பாலம் உருவாக்கமும்! | அணை ஓசை 09இந்த முடிவு நன்கு யோசித்து அனைவரது உடல் நலனையும் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட சிறப்பான முடிவு என்ற எண்ணத்தை இப்போது நமக்கு தோற்றுவிக்கிறது. இதனால் சுத்தமான தண்ணீர் சொந்த உபயோகம் முதல் அணை கட்டி முடிக்கப்படும் வரை அனைத்து கட்டுமான பணிகளுக்கும் அளிக்கப்பட்டு கவனத்துடன் பணிகளை முடிக்க எச்சரிக்கை நடவடிக்கையாக எடுக்கப்பட்டது பாராட்டுக்குரியது! இதனால் உடனடியாக பலன் கிடைத்தது எனலாம். நீரின் மூலமாக பரவும் வியாதிகள் உடனே அறவே இல்லாமல் போனது. சுத்தமான தண்ணீர் பொது பயன்பாட்டுக்கு வந்ததினால் காலரா மறைந்தது.இந்த ஏற்பாடுகள் குறித்து அந்த சமயத்தில் மெட்ராஸ் மாகாண சட்டமன்ற கவுன்சிலில் பெரும் விவாதம் நடந்தது. புயல் கிளப்பிய விவாதம் அது! தொடரின் பிற்பகுதியில் அதை காண்போம்.தொடர்ந்து பயணிப்போம்... காவிரி நன்னீர் சிறப்புபொருள்: பெரிய புராணத்தில் காவிரியை வளர்ப்புத் தாயாக காட்டுகிறார்.“சையமால் வரைபயில் தலைமை சான்றது செய்யபூ மகட்குதற் செவிலி போன்றது வையகம் பல்லுயிர் வளர்த்து நாள்தொறும் உய்யவே சுரந்தளித்து ஊட்டும் நீரது” - சேக்கிழார்

திருட்டு பைக்; கைகொடுத்த தரவுகள்.. மாணவி கொலை வழக்கில் குற்றவாளி சிக்கியது எப்படி?- எஸ்.பி விளக்கம்!
தூத்துக்குடி மாவட்டம், வேடநத்தம் கிராமத்தில் 12-ம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், 5 பேரின் டி.என்.ஏ மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இதில், ஒருவரின் டி.என்.ஏ மாதிரி மற்றும் மாணவியின் நகத்தில் இருந்த சிறிய சதைத் துணுக்கு மூலம் நடத்தப்பட்ட பரிசோதனையில் ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் என்பவர் கொலையாளி எனக் கண்டறியப்பட்டுள்ளார். இதனையடுத்து அவர் கைதுசெய்யப்பட்டு தொடர்ந்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட எஸ்.பி., மதன், "தூத்துக்குடி மாணவி கொலை வழக்கு, போக்சோ வழக்கு என்பதால், சில தகவல்களை மட்டுமே தர முடியும். குற்றப் பின்னணி கொண்டவர்களின் தகவல்களை முழுமையாக ஆய்வு செய்தோம். டிஜிட்டல் ஆவணங்கள், சுமார் 800-க்கும் மேற்பட்டவர்களிடம் நடத்திய நேரடி விசாரணை மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.10 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. மேலும் 4 டி.எஸ்.பி-க்கள், 6 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 150 காவலர்கள் விசாரணை மற்றும் குற்றவாளிகளைத் தேடும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டனர்.புலனாய்வுப் பிரிவு, மோப்பநாய் பிரிவு என வெவ்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. சம்பவ இடத்தில் சி.சி.டி.வி கேமராக்கள் இல்லை என்ற போதிலும் அந்தப் பகுதியைச் சுற்றி பல பகுதிகளில் உள்ள 98 இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் சேகரிக்கப்பட்ட தகவல் அடிப்படையில் 2,514 தொலைபேசி தகவலும் சேகரிக்கப்பட்டன.வேறு குற்றப் பின்னணி உள்ள நபர்கள் குறித்து பார்த்து கண்காணித்து, அவர்களிடம் விசாரணை மேற்கொள்ள பல குழுவினர் விசாரணை மேற்கொண்டனர். நேரடியாக மற்றும் டிஜிட்டல் முறையில் தகவல் சேகரிக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டது.சம்பவம் தொடர்பாக அனைத்து விசாரணைகளும் அறிவியல் பூர்வமாக மேற்கொள்ளப்பட்டன. இந்தச் சம்பவத்தில் ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமியின் படத்தையும் பெயரையும் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இதுவரை அதை பயன்படுத்திய ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்தச் சம்பவத்தை தொடர்ந்து அனைத்து கிராமங்களிலும் 10 சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அனைத்து கிராமங்களிலும் பெண் போலீஸார் மூலம் ரோந்துப் பணிகள் தீவிரப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.விசாரணையின்போது, சம்பவ இடத்திற்கு அருகில் ஒரு சந்தேகத்திற்குரிய இருசக்கர வாகனம் நின்றதும், பின்னர் அது மாயமானதும் தெரியவந்தது. அருகில் இருந்த காற்றாலை (Windmill) சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தபோது, அந்த வாகனம் நடமாடியது உறுதியானது. அந்த வாகனத்தின் பதிவு எண் மாற்றப்பட்டிருந்ததும், அது ராமநாதபுரம் மாவட்டம், பார்த்திபனூர் காவல் நிலையத்தில் பதிவான 'திருட்டு பைக்' என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.சமீபத்தில் சிறையிலிருந்து விடுதலையானவர்களின் பட்டியலை அந்தத் திருட்டு பைக்கோடு ஒப்பிட்டுப் பார்த்தபோது, தர்ம முனீஸ்வரன் என்பவர் மீது சந்தேகம் வலுத்தது. இவர் ஏற்கெனவே ஒரு கடுமையான குற்றவழக்கில் தண்டனை பெற்று, கடந்த 2025 டிசம்பர் மாதம் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தலைமறைவாக இருந்த தர்ம முனீஸ்வரனை இன்று தனிப்படை போலீஸார் சுற்றி வளைத்துப் பிடித்தனர். விசாரணையில், மாணவியைத் தனிமையில் வழிமறித்துக் கடத்தி, பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றபோது மாணவி எதிர்த்ததால், அவரை கழுத்தை நெரித்துக் கொலைசெய்ததை ஒப்புக்கொண்டார். எவ்வித அழுத்தத்திற்கும் இடம் கொடுக்காமல் இந்த வழக்கு விசாரணை முறையாக நடத்தப்பட்டது. இந்த வழக்கை உயர் நீதிமன்றம் கண்காணித்து வருகிறது. குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனையை பெற்றுத் தருவோம்" என்றார்.

திடீர் `மர்ம' ட்ரோன்களால் பரபரப்பு: வாஷிங்டன் ராணுவ தளம் மீதும் ஈரான் தாக்குதல் நடத்த திட்டமா?
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவது உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரான் மீது மட்டும் தாக்குதல் நடத்துகின்றன. ஆனால் ஈரான் அண்டை நாடுகளாக பஹ்ரைன், கத்தார், துபாய் போன்ற அமெரிக்க ஆதரவு நாடுகளில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இத்தாக்குதலால் மத்திய கிழக்கு நாடுகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வாஷிங்டனில் உள்ள ஃபோர்ட் லெஸ்லி ஜே. மெக்நாயர் ராணுவ தளத்திற்கு மேலே மர்ம ட்ரோன்கள் தொடர்ந்து பறப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழலில் அமெரிக்க ராணுவம் மிகுந்த எச்சரிக்கையுடன் அச்சுறுத்தல்களைத் தீவிரமாகவும் கண்காணித்து வருகிறது. கடந்த 10 நாட்களில் ஒரே இரவில் ஃபோர்ட் லெஸ்லி ஜெ.மெக்நாயர் ராணுவ தளத்திற்கு மேலே பல ட்ரோன்கள் (ஆளில்லா விமானங்கள்) பறந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.கத்தார் எண்ணெய் கிணறு எரிகிறது. இதையடுத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிக்கவும், இதற்கு எப்படிப் பதிலடி கொடுப்பது என்பது குறித்து வெள்ளை மாளிகையில் அதிகாரிகள் கூடி முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளனர். இந்த ராணுவ தளத்தில்தான் அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் பாதுகாப்புச்செயலாளர் பீட் ஹெக்சேத் ஆகியோர் வசிக்கின்றனர். ட்ரோன் எச்சரிக்கையை தொடர்ந்து இந்த இரண்டு பேரையும் வேறு பாதுகாப்பான இடத்திற்கு இடமாற்றம் செய்வது குறித்தும் வெள்ளை மாளிகையில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. ஃபோர்ட் மெக்நாயர் தளம் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகம் (National Defense University) மற்றும் பென்டகனின் மிக உயர்மட்ட ராணுவ அதிகாரிகள் தங்கும் இடமாகும். இங்கு அரசியல்வாதிகள் தங்குவது கிடையாது. ஆனால் தற்போது மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக பல அரசியல் தலைவர்கள் இங்கு வந்து தங்கி இருக்கின்றனர்.ஏற்கனவே மத்திய கிழக்கில் நடந்து வரும் போர் காரணமாக உலகம் முழுவதும் உள்ள தனது தூதரகங்கள் மற்றும் ராணுவ நிலைகளை அமெரிக்கா எச்சரித்து இருக்கிறது. சில நாடுகளில் தூதரகங்களை அமெரிக்கா மூடிவிட்டது. அதோடு இந்த வாரத்தில் புளோரிடாவில் உள்ள அமெரிக்க மத்திய தலைமையகமான மேக்டில் விமானப்படைத்தளம் இரண்டு முறை மூடப்பட்டது.அங்கு கிடந்த ஒரு சந்தேகத்திற்கிடமான பொட்டலம் காரணமாக அந்த தளத்தின் பார்வையாளர்கள் மையத்தை பல மணிநேரம் மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. புதன்கிழமை அன்று நடந்த பெயரிடப்படாத ஒரு பாதுகாப்பு சம்பவம் காரணமாக அந்த தளம் பல மணிநேரம் வீட்டிற்குள்ளேயே பாதுகாப்பாக இருங்கள் என்ற உத்தரவின் கீழ் இருந்தது. ஈரானில் உள்ள தெற்கு பார்ஸ் எரிவாயு மையத்தில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து ஈரான் கத்தாரில் உள்ள எரிவாயு மற்றும் எண்ணெய் கிணறு மீது தாக்குதல் நடத்தி இருக்கிறது.

தாவூத் இப்ராகிம் குடும்ப சொத்துக்கள் : போராடி ஏலத்தில் விற்பனை செய்து முடித்த மத்திய அரசு!
மும்பையில் தொடர் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்திய தாவூத் இப்ராகிம் இப்போது தனது குடும்பத்துடன் பாகிஸ்தானில் பதுங்கி இருக்கிறான். அவனுக்கும், அவனது குடும்பத்திற்கும் மும்பை மற்றும் மகாராஷ்டிராவின் ரத்னகிரி மாவட்டத்தில் நிலம், வீடு போன்ற சொத்துக்கள் இருந்தது. அந்த சொத்துக்கள் அனைத்தையும் மத்திய அரசு பறிமுதல் செய்துள்ளது. மும்பையில் உள்ள தாவூத் இப்ராகிம் குடும்ப சொத்துக்கள் இதற்கு முன்பு நடந்த ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுவிட்டது. இது தவிர தாவூத் இப்ராகிம் குடும்பத்தினர் வசித்து வந்த அவர்களது வீடும் ஏலத்தில் விடப்பட்டது. ஆனால் தாவூத் இப்ராகிமின் சொந்த ஊரான மும்பாகே என்ற இடத்தில் இருந்த 4 விவசாய நிலம் விற்பனையாகாமல் இருந்தது. இந்த நிலத்தை மத்திய அரசு இதற்கு முன்பு 2017, 2020, 2024, 2025ம் ஆண்டுகளில் ஏலம் விட்டது. கடைசியாக கடந்த நவம்பர் மாதம் இந்த சொத்துக்களின் மதிப்பை 30 சதவீதம் அளவுக்கு குறைத்து ஏலம் விட்டனர். அப்படி இருந்தும் அந்த சொத்துக்கள் ஏலம் போகவில்லை. இந்த சொத்துக்கள் அனைத்தும் தாவூத் இப்ராகிமின் தாயார் அமீனா பெயரில் இருக்கிறது. இந்த சொத்துக்களை மத்திய அரசு மீண்டும் ஏலம் விட்டது. இதில் மும்பையை சேர்ந்த தொழிலதிபர் உட்பட சிலர் மட்டும் கலந்து கொண்டனர். இந்த ஏலத்தில் 4 நிலத்தையும் மும்பை தொழிலதிபர் ஏலத்தில் எடுத்தார். இதில் ஒரு சொத்து மட்டும் ஆரம்ப விலை ரூ.9.41 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. அதனை எடுக்க மும்பை தொழிலதிபர் உட்பட இரண்டு பேர் வந்திருந்தனர். இதில் மும்பை தொழிலதிபர் ரூ.10 லட்சத்திற்கு அந்த சொத்தை ஏலத்தில் எடுத்தார். இது தவிர மற்ற 3 சொத்துக்கும் மும்பை தொழிலதிபர் மட்டும் ஏலம் கேட்டு இருந்தார். வேறு யாரும் இதில் பங்கேற்கவில்லை. இதையடுத்து 3 சொத்துக்களையும் மும்பை தொழிலதிபருக்கே விற்பனை செய்யப்பட்டது. இதற்கு ஏப்ரல் மாதத்திற்குள் முழு பணத்தையும் மும்பை தொழிலதிபர் கட்டி முடித்த பிறகு அந்த சொத்து அவருக்கு சொந்தமாகும். இதன் மூலம் தாவூத் இப்ராகிற்கு சொந்தமான அனைத்து சொத்துக்களும் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுவிட்டது. கடத்தல்காரர்கள் மற்றும் அந்நியச் செலாவணி மோசடி செய்பவர்கள் (சொத்து பறிமுதல்) சட்டத்தின் கீழ், மத்திய அரசு இந்தச் சொத்துக்களை பறிமுதல் செய்து இருந்தது.!

"RR அணியின் முகமாக இருந்தவர் சஞ்சு சாம்சன்; அவரை இழந்திருப்பது அணிக்கும்..!"- ஃபாப் டு பிளெஸ்ஸிஸ்
2026 ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல் திருவிழா வரும் மார்ச் 28 ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இன்னும் சில தினங்களே இருக்கும் நிலையில், வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை அணி தனது முதல் போட்டியை மார்ச் 30 ஆம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியோடு எதிர்கொள்ள இருக்கிறது. சஞ்சு சாம்சன்ரசிகர்கள் இந்தப் போட்டியைக் காண மிகவும் ஆர்வமாக இருக்கின்றனர். காரணம் சிஎஸ்கே அணியில் இருந்த ரவீந்திர ஜடேஜா ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாட இருக்கிறார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக இருந்த சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணிக்காக களமிறங்க இருக்கிறார். இந்நிலையில் ஜியோ ஹாட்ஸ்டாருக்கு பேட்டி அளித்திருக்கும் தென்னாப்பிரிக்க வீரர் ஃபாப் டு பிளெஸ்ஸிஸ், சஞ்சு சாம்சன் குறித்து பேசியிருக்கிறார்.``நான் ஐ.பி.எல் தொடரையும், அணிகளையும் கவனித்திருக்கிறேன். அந்த லீக்கில் உள்ள அனைத்து பிரபலமான அணிகளுக்கும் பொதுவான ஒரு விஷயம் இருக்கிறது. அது என்னவென்றால் ஒவ்வொரு அணிக்கும் ஒரு வீரர் அடையாளமாக இருப்பார். அவர் நீண்ட காலமாக அந்த அணியின் முகமாகத் திகழ்வார். உதாரணமாக ரோஹித் சர்மா, எம்.எஸ். தோனி, விராட் கோலி ஆகியோரைக் கூறலாம். ஃபாப் டு பிளெஸ்ஸிஸ்அந்த வகையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு முகமாக சஞ்சு சாம்சன் இருந்தார். நான் ராஜஸ்தான் ராயல்ஸ் பற்றி நினைக்கும் போதெல்லாம், சஞ்சு சாம்சனின் முகம் தான் ஞாபகத்திற்கு வரும். ராஜஸ்தான் ராயல்ஸ் அந்த முகத்தை இழந்திருப்பது அணிக்கும், ரசிகர்களுக்கும் ஒரு வித தாக்கத்தை ஏற்படுத்தும். ஏன்னென்றால் சஞ்சு சாம்சன் முக்கிய அந்த அணிக்கு முக்கிய பங்காற்றியிருக்கிறார்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

20 நாள்களாக தொடரும் ஈரான் போர்: கச்சா எண்ணெய் முதல் பங்குச்சந்தை வரை தாக்கம் என்ன? | Full Summary
இன்றோடு ஈரான் போர் தொடங்கி 20 நாள்கள் ஆகிறது. இந்தப் போர் ஈரானைத் தாண்டியும், இந்தியா வரை எப்படி மக்களைப் பாதித்துள்ளதோ, அதே மாதிரி உலக சந்தைகளையும் பாதித்துள்ளது. கடந்த 19 நாள்களாக, ஈரான் போர் இந்திய சந்தை, உலக சந்தை மற்றும் கமாடிட்டி சந்தைகளில் என்னென்ன தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை இன்றைய Opening Bell Show-ல் விவரித்திருந்தார், பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்.பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்'அதிர்ச்சி சரிவு' 92 டாலர்களை தாண்டிய இந்திய ரூபாய் - அடுத்தடுத்த தாக்கம் என்ன?"முதலில் கமாடிட்டியை எடுத்துக்கொள்வோம். கடந்த பிப்ரவரி 27-ம் தேதி, சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் 5,200 டாலர் அளவிற்கு வர்த்தகமானது. ஈரான் போர் பிப்ரவரி 28-ம் தேதி தொடங்கியது. அது சனிக்கிழமை என்பதால், அன்று சந்தைக்கு விடுமுறை. அதனால், தங்க சந்தையில் ஈரான் போரின் தாக்கம் தெரியவில்லை. அதனால், இங்கே பிப்ரவரி 27-ன் தரவுகள் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. நேற்று சர்வதேச சந்தையில், தங்கம் விலை ஒரு அவுன்ஸிற்கு 4,844 - 4,890 டாலர்கள் அளவிற்கு வர்த்தகமானது. போருக்கு முன்னால், வெள்ளியும் ஒரு அவுன்ஸிற்கு 86 - 87 டாலர் அளவிற்கு இருந்தது. ஆனால், நேற்று 76 - 77 டாலர் அளவிற்கு வர்த்தகம் ஆகியது.ஆக, தங்கம், வெள்ளி விலை இரண்டுமே போருக்குப் பின், இறங்குமுகத்தைத் தான் சந்தித்துள்ளது.ஆனால், போருக்குப் பின், கச்சா எண்ணெய் மிகப்பெரிய விலை ஏற்றத்தைச் சந்தித்துள்ளது. ஒரு பீப்பாவிற்கு 66 - 67 டாலர்கள் என்றிருந்த கச்சா எண்ணெய் 103 - 107 வரை கூட நேற்று சென்றது.கச்சா எண்ணெய்தேர்தல் நடத்தை விதிமுறைகள் : பணத்திற்கு உள்ள கெடுபிடிகள் என்ன? தெரிந்து கொள்ளுங்கள்!போர் தொடங்கியதில் இருந்து இப்போது வரை, கச்சா எண்ணெய் உச்ச விலையாக ஒரு பீப்பாவிற்கு 119 டாலர்கள் வரை சென்றது.இயற்கை எரிவாயுவை எடுத்துக்கொண்டால், முன்பு, ஒரு MMBtu-விற்கு 2.87 டாலர் என்றிருந்தது. இப்போது 3.04 - 3.05 டாலருக்கு உள்ளது. பிப்ர்வரி 28 - நேற்று வரை உச்சமாக, 4.5 டாலர்கள் வரை சென்றுள்ளது.செம்பில் பெரியளவில் மாற்றம் நடக்கவில்லை. நிலையாகவே இருந்து வருகிறது.தங்கம், வெள்ளி விலை ஏற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், அது இறங்கி தான் உள்ளது.கச்சா எண்ணெய் கிட்டத்தட்ட 50 சதவிகித உயர்வைச் சந்தித்துள்ளது. அது நிலைத்தும் வருகிறது.இயற்கை எரிவாயும் 12 - 13 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது.நாணயம் சந்தையை இப்போது பார்க்கலாம்.பிப்ரவரி 27-ம் தேதி இந்திய ரூபாயின் மதிப்பு ஒரு டாலருக்கு ரூ.91.07 என்றிருந்தோம். இப்போது ரூ.92.7 வரைக்கும் சென்றுள்ளது. அதாவது இந்திய ரூபாய் பலவீனமடைந்துள்ளது... அமெரிக்க டாலர் வலுவடைந்துள்ளது. இதை இன்னொரு கோணத்திலும் அணுகலாம். ஜப்பான் யென்னை எடுத்துக்கொள்வோம். ஒரு அமெரிக்க டாலரின் மதிப்பு 151 - 152 ஜப்பான் யென்னாக இருந்தது. இப்போது அது 159 - 160 யென் வரையில் சென்றுள்ளது. இதுவும் அமெரிக்க டாலர் வலுவாகி உள்ளதைக் காட்டுகிறது. இந்திய ரூபாய்தங்கம், வெள்ளி, செம்புடன் சேர்த்து 'இந்த' உலோகத்தையும் கவனிங்க; அடுத்த ஹீரோ இதுதானா?அடுத்ததாக, பங்குச்சந்தை பக்கம் வரலாம்.பிப்ரவரி 27-ம் தேதி, டௌ ஜோன்ஸ் 49,800 என நிறைவடைந்திருந்தது. நேற்று 46,200 என்று நிறைவடைந்திருந்தது. இடையிடையே ஏற்றம், இறக்கம் இருந்தாலும், கிட்டத்தட்ட 3,000 புள்ளிகள் சரிவைச் சந்தித்துள்ளது டௌ ஜோன்ஸ். நிக்கேய் 225 கடந்த 27-ம் தேதி 39,000 என்றிருந்தது. இப்போது 53,000-ல் இருக்கிறது. ஜப்பான் சந்தை ஏற்றத்தை சந்தித்து இருக்கிறது. 26,700 என்றிருந்த ஹாங்காங் சந்தையான ஹேங்சென் 25,000-ல் வர்த்தகமாகி வருகிறது. இங்கே சின்ன சரிவை சந்தித்துள்ளது. தென் கொரிய சந்தை ஏற்றத்தை தான் சந்தித்துள்ளது. இந்திய சந்தையைப் பொறுத்தவரை, நிப்டி 25,128 என்று பிப்ரவரி 27-ம் தேதி நிறைவடைந்திருந்தது. இப்போது 23,777 என நேற்று முடிவடைந்திருக்கிறது.ஆனால், இடையில் நிப்டி 22,955 என 'லோ'-வை பதிவு செய்தது.ஆக, ஜப்பான், கொரியாவை தவிர, பிற உலக சந்தைகள் பெரும்பாலும் சரிவை தான் சந்தித்துள்ளன.ஹார்முஸ் ஜலசந்தியில் பல கப்பல்களின் பயணங்கள் நிறுத்தப்பட்டுள்ளதால், இப்போது சரக்கு கட்டணத்தையும் கவனிக்க வேண்டியதாக இருக்கிறது.ஹார்முஸ் ஜலசந்தி'உயிரோடு தான் இருக்கிறேன்' - நிரூபிக்க போராடும் நெதன்யாகு: வீடியோக்களும், சர்ச்சைகளும்! |Full DetailVery Large Container Ships-ன் ஒரு நாளைய விலை முன்பு 2.9 ஆயிரம் டாலர்களாக போருக்கு முன்பு இருந்தது. இப்போது 4.7 ஆயிரம் டாலர்களாக மாறி உள்ளது. இது கிட்டத்தட்ட இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது. இந்தப் போர் பணவீக்கத்தை அதிகரிப்பது, சில பொருள்களின் பற்றாக்குறையை அதிகரிப்பது போன்றவற்றைச் செய்தாலும், பல உயிர்களின் பலியை நிச்சயம் சொல்லியாக வேண்டும். இன்னும் இந்தப் போர் எதற்காக என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், அதற்குள் இந்தப் போரினால் இவ்வளவு தாக்கம் ஏற்பட்டுள்ளது". (இது இன்று காலை வரையிலான தரவுகளின் படியானது ஆகும்) Gold: பதுங்கி வரும் தங்கம் விலை; இப்போது 'இவ்வளவு' தங்கம் முதலீட்டை செய்தால் சூப்பர்!
அதிகம் படிக்கப்பட்டது
எங்கள் வாசகர்கள் பேசும் பிரபலமான கதைகள்