தமிழ் டைம்ஸ் logo
நாமக்கல்: பட்டியல் மற்றும் பிற சாதி குழந்தைகளுக்கு அருகருகே தனித்தனி அங்கன்வாடி மையங்களா?
பொதுவான

நாமக்கல்: பட்டியல் மற்றும் பிற சாதி குழந்தைகளுக்கு அருகருகே தனித்தனி அங்கன்வாடி மையங்களா?

நாமக்கல் அருகே பட்டியல் மற்றும் பிற சாதி குழந்தைகளுக்கென அருகருகே தனித்தனி அங்கன்வாடி மையங்கள் செயல்படுவதாக சர்ச்சை எழுந்துள்ளது. 'பிரச்னைகளைப் பேசுவோம்' என்ற புதிய முயற்சியில் பிபிசி தமிழுக்கு கிடைத்த தகவலின் பேரில் அங்கே எங்களது குழு கள ஆய்வு செய்தது.

bbci
30 மார்., 05:30 AM
பிரிட்டனுக்கு சூயஸ் போல அமெரிக்காவுக்கு ஹோர்மூஸ் முடிவுரை எழுதுமா? வரலாற்றில் 3 முக்கிய தருணங்கள்
பொதுவான

பிரிட்டனுக்கு சூயஸ் போல அமெரிக்காவுக்கு ஹோர்மூஸ் முடிவுரை எழுதுமா? வரலாற்றில் 3 முக்கிய தருணங்கள்

இரான் போர் தொடங்கிய வாரங்களில், வல்லுநர்கள் இந்தக் கொந்தளிப்பைப் புரிந்துகொள்ளவும், அது எந்தத் திசையில் செல்லக்கூடும் என்று கணிக்கவும் கடந்த கால நிகழ்வுகளை அதிகளவில் ஆதாரமாகக் கொண்டுள்ளனர். அவற்றில், மூன்று முக்கிய தருணங்கள் தனித்து நிற்கின்றன. பிரிட்டனுக்கு சூயஸ் போல அமெரிக்காவுக்கு ஹொர்முஸ் நெருக்கடி அமையுமா?

bbci
30 மார்., 05:30 AM
இரான் போருக்கு மத்தியில் பாலத்தீன கிராமங்களை இஸ்ரேலிய குடியேறிகள் தாக்கியது ஏன்?
பொதுவான

இரான் போருக்கு மத்தியில் பாலத்தீன கிராமங்களை இஸ்ரேலிய குடியேறிகள் தாக்கியது ஏன்?

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள பாலத்தீனக் கிராமங்கள் மீது தீவிரவாத யூதக் குடியேறிகள் தொடர் தாக்குதல்களை நடத்தி, வீடுகள், வாகனங்கள் மற்றும் விவசாய வயல்களுக்குத் தீ வைத்துள்ளனர்.

bbci
30 மார்., 05:30 AM
தினசரி காலையில் வெந்நீர் குடிப்பது உடல் நலனுக்கு உகந்தது என்பது உண்மையா?
சுகாதாரம்

தினசரி காலையில் வெந்நீர் குடிப்பது உடல் நலனுக்கு உகந்தது என்பது உண்மையா?

வெதுவெதுப்பான அல்லது சூடான நீரை அருந்துவது உடல் நலனுக்கு நல்லது என்று ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நம்பப்படுகிறது. இது பாரம்பரிய சீன மருத்துவம், ஆயுர்வேதம் போன்ற பாரம்பரிய மருத்துவ முறைகளின் ஒரு பகுதியாக உள்ளது. அது பற்றி அறிவியல் கூறுவது என்ன?

bbci
30 மார்., 05:30 AM
இரானுடன் ஒப்பந்தம் செய்வது பற்றி டிரம்ப் கூறியது என்ன?
விளையாட்டு

இரானுடன் ஒப்பந்தம் செய்வது பற்றி டிரம்ப் கூறியது என்ன?

தமிழ்நாடு, இந்தியா, இலங்கை, உலகம் மற்றும் விளையாட்டு தொடர்பான சமீபத்திய நிகழ்வுகள் பற்றிய தகவல்களை இந்த பக்கத்தில் பார்க்கலாம்.

bbci
30 மார்., 05:30 AM
இரான் தாக்குதலில் அமெரிக்க ராணுவ விமானம் தகர்ப்பா? புகைப்படத்தின் பின்னுள்ள உண்மை
பொதுவான

இரான் தாக்குதலில் அமெரிக்க ராணுவ விமானம் தகர்ப்பா? புகைப்படத்தின் பின்னுள்ள உண்மை

சௌதி அரேபியாவில் உள்ள ஒரு விமானப்படை தளத்தில், அமெரிக்காவின் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு விமானம் ஒன்று அழிக்கப்பட்டதை சரிபார்க்கப்பட்ட புகைப்படங்கள் காட்டுகின்றன.

bbci
30 மார்., 05:30 AM
குவைத்தில் 'இரான்' தாக்குதல் - ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு
பொதுவான

குவைத்தில் 'இரான்' தாக்குதல் - ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு

குவைத்தில் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் இந்தியர் ஒருவர் உயிரிழந்ததாக இந்திய தூதரகம் உறுதி செய்துள்ளது.

bbci
30 மார்., 05:30 AM
Share Market: 'இவர்கள்' எல்லாம் இப்போது பங்குகளை விற்கலாம்!
உலகம்

Share Market: 'இவர்கள்' எல்லாம் இப்போது பங்குகளை விற்கலாம்!

"ஈரானுக்கும், எங்களுக்குப் பேச்சுவார்த்தை நடக்கிறது. கடந்த இரண்டு நாள்களாக நன்றாக சென்று கொண்டிருக்கிறது. அதனால், இன்னும் ஐந்து நாள்களுக்கு ஈரான் எரிசக்தி கட்டமைப்புகள் மீது ராணுவ தாக்குதல் கூடாது என்று ஆணையிட்டிருக்கிறேன்" என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியிருக்கிறார். இதனால், அமெரிக்கா, ஆசிய சந்தைகள் பாசிட்டிவாகவே உள்ளது. இந்திய சந்தையிலும் ஏற்றத்தை எதிர்பார்க்கலாம். இந்த நேரத்தில், முதலீட்டாளர்கள் பங்குகளை விற்க வேண்டும் என்று கூறுகிறார் பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ். அது ஏன் என்று பார்க்கலாம்.பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்ஏப்ரல் 1 முதல் புதிய வருமான வரிச் சட்டம் அமல் : என்னென்ன மாற்றங்கள் இடம்பெறுகின்றன? A டு Z பட்டியல்!"போர் தொடங்கியதில் இருந்து சந்தைகள் ஏற்ற, இறக்கத்தில் தான் உள்ளன. 'Sell on Rise' என்பது சந்தையின் இப்போதைய ஸ்ட்ரேட்டஜி. போரினால் சந்தை இறங்கியிருந்த போது, பங்குகளை வாங்கியவர்கள், இப்போது சந்தை ஏற்றம் காணும்போது அதை விற்கலாம். இந்த நேரத்தில் 'பிராஃபிட் புக்கிங்' செய்வது தான் சரியான அணுகுமுறை. இது ஒரு டிரேடிங் ஸ்டைல் ஆகும். இந்த ஸ்ட்ரேட்டஜியை சந்தை 22,900 - 23,450-க்குள் இருக்கும் போது பயன்படுத்தலாம். இது அப்போது தான் வர்க் அவுட் ஆகும். மீண்டும் வாங்க வேண்டுமென்றால் 22,000 - 22,300 வரும் போது வாங்க வேண்டும். அதன் பின் மேலே சொன்ன ரேஞ்ச் வரும்போது, விற்க வேண்டும். இந்த ரிப்பீட்டு தான் Sell on Rise ஸ்ட்ரேட்டஜி". Data in this section is not a buy/sell recommendation but only a compilation of information on various technical/volume-based parametersAnalyst certifies that all of the views, if any, expressed in this report reflect his personal views about the subject company or companies and its or their securities, and no part of his compensation was, is or will be, directly or indirectly related to specific recommendations or views expressed in this report. Analyst affirms that there exists no conflict of interest that can bias his views in this report. The Analyst does not hold any share(s) in the company/ies discussed.INVESTMENT IN SECURITIES MARKET ARE SUBJECT TO MARKET RISKS. READ ALL THE RELATED DOCUMENTS CAREFULLY BEFORE INVESTING. Registration granted by SEBI and certification from NISM in no way guarantee the performance of the intermediary or provide any assurance of returns to investors. For a detailed disclaimer and disclosure please visit https://www.vikatan.com/business/share-market/113898-disclaimer-disclosures. Before making an investment/trading decision on the basis of this data you need to consider, with the assistance of a qualified adviser, whether the investment/trading is appropriate in light of your particular investment/trading needs, objectives and financial circumstances.One year Price history of the daily closing price of the securities covered in this section is available at https://www.nseindia.com/report-detail/eq_security (Choose the respective symbol) /name of company/time duration)

vikatan
30 மார்., 05:30 AM
'பாட்டி தந்த கம்மல்; போரால் துயரப்படும் மக்களுக்காக' - ஈரான் மக்களுக்கு காஷ்மீர் குழந்தைகள் உதவி
உலகம்

'பாட்டி தந்த கம்மல்; போரால் துயரப்படும் மக்களுக்காக' - ஈரான் மக்களுக்கு காஷ்மீர் குழந்தைகள் உதவி

"இது எனக்கு பாட்டி கொடுத்த தங்கக் கம்மல். எனக்கு ரொம்ப பிடிக்கும்தான். ஆனால் என்ன... போரால் துயரப்படும் மக்களுக்காக இதைக் கொடுக்கிறேன்" - ஒன்பது வயது சிறுமி ஆசிர் ஃபாத்திமா பிஞ்சுக்கரங்களால் அணிந்திருந்த காதணியைக் கழற்றித் தந்திருக்கிறார்.ஈரானில் பிப்ரவரி 28-ம் தேதி தொடங்கிய போர், உலகத்தையே உலுக்கி உள்ளது... மக்களையும் வெவ்வேறு விதங்களில் பாதித்து வருகிறது. உலகத்தையே பாதித்துள்ளது என்றால், அந்தப் போர் நடக்கும் நாடான ஈரானில் மக்கள் எப்படி பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்று கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். With sincere appreciation for the support and solidarity of the esteemed people of India in providing humanitarian assistance through the Embassy’s bank account, we wish to inform you that, in response to your requests and in order to facilitate the process of aid delivery, this… pic.twitter.com/bzKAkuGpnI— Iran in India (@Iran_in_India) March 23, 2026 சமீபத்தில், இந்தியாவில் உள்ள ஈரான் தூதரகம் நிதியுதவிக்காக ஒரு QR குறியீட்டை சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தது. இதை ஸ்கேன் செய்து ஈரான் மக்களுக்கு உதவ பண செலுத்தலாம் என்பதுதான் இந்த முன்னெடுப்பின் நோக்கம்.இதற்கு இந்தியாவில் பலரும் நல்ல வரவேற்பைக் கொடுத்துள்ளனர். பலரும் பணத்தை அனுப்பி அதன் ஸ்கிரீன்ஷாட்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அப்படித்தான் ராம்பன் பகுதியைச் சேர்ந்த ஆசிர் ஃபாத்திமா தனது கம்மலைக் கழற்றி கொடுத்திருக்கிறார். இவர் மட்டுமல்ல.... அதே பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுமி மிஷா ஷாகிர் தனது உண்டியலை அப்படியே கொண்டு வந்து கொடுத்துள்ளார்."இரண்டு வருஷமா ஈத் பண்டிகைக்காக நான் சேர்த்து வைத்த காசு இது. இப்போது அங்கே இருப்பவர்களுக்குத்தான் இது ரொம்பத் தேவை" என்று மழலை மொழியில் அவர் கூறியது அங்கிருந்த தன்னார்வலர்களை நெகிழ வைத்துள்ளது.இந்த உதவிக்கரம் வெறும் குழந்தைகளோடு நின்றுவிடவில்லை. புத்காம் பகுதியைச் சேர்ந்த ஜனா பேகம் (53) தனது மகளின் திருமணத்திற்காகச் சேர்த்து வைத்திருந்த தங்க நகைகளைத் தானமாக வழங்கியுள்ளார். ஜம்மு காஷ்மீர்"என் மகளின் திருமணத்தை சில மாதங்கள் தள்ளி வைக்கலாம், ஆனால் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதலால் தவிக்கும் மக்களுக்கு உதவுவதே இப்போதைய முதற்கடமை" என்று உறுதியுடன் சொல்லியிருக்கிறார் அவர்.ஆரம்பத்தில் ஜாதிபால், ஹஸ்னாபாத் போன்ற பகுதிகளில் சிறிய அளவில் தொடங்கிய இந்த இயக்கம், இன்று காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் ஒரு பெரும் அலையாக மாறியுள்ளது. எல்லைகளைத் தாண்டி மனிதநேயம் விரிகிறது... இணைகிறது!

vikatan
30 மார்., 05:30 AM

சமீபத்திய செய்திகள்

சமீபத்திய புதுப்பித்தல்கள்

"5 நாள்களுக்குத் தாக்க மாட்டோம்" - ஈரான், அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை; ட்ரம்ப் என்ன சொல்கிறார்?
உலகம்

"5 நாள்களுக்குத் தாக்க மாட்டோம்" - ஈரான், அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை; ட்ரம்ப் என்ன சொல்கிறார்?

vikatan
Mar 303 நிமிடம் படிக்க
அமெரிக்க வரலாற்றில் முதல் முறை... டாலர் கரன்சியில் அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!
உலகம்

அமெரிக்க வரலாற்றில் முதல் முறை... டாலர் கரன்சியில் அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

vikatan
Mar 303 நிமிடம் படிக்க
இன்னும் மூன்று நாள்களில் பெட்ரோல் ஏற்றுமதிக்கு தடை விதிக்க ரஷ்யா 'அதிரடி' முடிவு? காரணம் என்ன?
உலகம்

இன்னும் மூன்று நாள்களில் பெட்ரோல் ஏற்றுமதிக்கு தடை விதிக்க ரஷ்யா 'அதிரடி' முடிவு? காரணம் என்ன?

vikatan
Mar 303 நிமிடம் படிக்க
ஹார்முஸ் டோல்கேட்: அமெரிக்காவின் ஆயுதத்தைக் கையில் எடுக்கும் ஈரான்? - உலகப் பொருளாதாரம் என்ன ஆகும்?
உலகம்

ஹார்முஸ் டோல்கேட்: அமெரிக்காவின் ஆயுதத்தைக் கையில் எடுக்கும் ஈரான்? - உலகப் பொருளாதாரம் என்ன ஆகும்?

ஹார்முஸ்பழங்காலம் முதலே பட்டு, முத்து மற்றும் வாசனை திரவியங்களின் வர்த்தக மையமாக விளங்கும் ஹார்முஸ் நீரிணை, இன்று உலகப் பொருளாதாரத்தின் 'கழுத்துப்பகுதி' என அழைக்கப்படுகிறது. ஈரானுக்கும் ஓமனுக்கும் இடையே அமைந்துள்ள இந்தச் சிறிய கடல் பகுதி, பாரசீக வளைகுடாவையும் அரபிக்கடலையும் இணைக்கும் ஒரே வழியாகும்.உலகின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் விநியோகத்தில் 20% மற்றும் எல்.என்.ஜி எரிவாயுவில் 25% இந்தப் பாதை வழியாகவே நடைபெறுகிறது. நாளொன்றுக்கு சுமார் 2 கோடி பேரல்கள் கச்சா எண்ணெய் இதன் வழியே கடக்கின்றன. குறிப்பாக இந்தியா, சீனா, ஜப்பான் மற்றும் தென் கொரியா போன்ற ஆசிய நாடுகளின் எரிசக்தி தேவையைப் பூர்த்தி செய்வதில் இந்த நீரிணை முதன்மையானது. எண்ணெய் தவிர உணவு, ரசாயனம் மற்றும் மின்னணு பொருட்களின் வர்த்தகத்திற்கும் இதுவே பிரதான வழி.ஹோர்மூஸ் நீரிணை வரைபடம்ஈரானும் - அமெரிக்காவும்ஹார்முஸ் நீரிணை முழுமையாக ஈரானுக்குச் சொந்தமானதல்ல. ஹார்முஸ் நீரிணையின் தெற்குப் பகுதி ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இருப்பினும், இப்பகுதியில் ஈரான் தனது ராணுவ பலத்தை பேரளவில் வளர்த்துள்ளது. நவீன ஏவுகணைகள், ட்ரோன்கள் போன்ற ஆயிரக்கணக்கான கண்ணிவெடிகளை ஈரான் இங்கு நிலைநிறுத்தியுள்ளது. 1980-களின் ஈரான்-ஈராக் போர் முதல், சமீபத்திய பிரிட்டிஷ் மற்றும் கிரீஸ் நாட்டு கப்பல்கள் சிறைபிடிப்பு வரை, தனது அரசியல் எதிர்ப்பைக் காட்ட இப்பாதையை ஈரான் ஆயுதமாகப் பயன்படுத்தி வருகிறது.இந்த நிலையில்தான் ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் கூட்டுத் தாக்குதல் நடத்தின. ஈரானை கட்டுக்குள் கொண்டுவந்துவிட வேண்டும் என்ற நோக்கில் இஸ்ரேலும் அமெரிக்காவும் கடுமையான தாக்குதல்களை நடத்திவருகின்றன. குறிப்பாக ஈரானின் கச்சா எண்ணெய் உற்பத்தி நிலையம் உள்ளிட்ட பல்வேறு பொருளாதாரத் தளங்கள் மீது அமெரிக்கா குறிவைத்துத் தாக்குதல் நடத்தியிருக்கிறது. இதனால் ஈரானுக்கு பேரிழப்பு ஏற்பட்டிருப்பதாக இஸ்ரேலும் அமெரிக்காவும் ஒன்றாகத் தெரிவித்தன.இஸ்ரேல் - காசா போர் நிறுத்தம்?அமெரிக்காவின் நிபந்தனை!இந்தப் போரை நிறுத்த...இதற்கிடையில், உலகப் பொருளாதாரத்தை ஸ்தம்பிக்க வைக்கும் நடவடிக்கையை ஈரான் கையில் எடுத்தது. அதுதான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடும் முடிவு. இதனால் உலக நாடுகள் கச்சா எண்ணெய், எரிவாயு பற்றாக்குறை போன்ற அத்தியாவசியப் பொருள்களுக்கு பெரும் சிரமத்தை எதிர்கொள்கின்றன. அதனால், ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்கா தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக 'இந்தப் போரை நிறுத்த வேண்டுமென்றால் என்னென்ன செய்ய வேண்டும்...' என ஈரானுக்கு 15 நிபந்தனைகள் அடங்கிய பட்டியலை அனுப்பியிருக்கிறது.அதில் 'ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரிக்கும் எண்ணத்தை கைவிடுவதில் தொடங்கி, ஹார்முஸ் நீரிணையை சுதந்திரமான கடல்வழிப் பாதையாக செயல்பட வைப்பதற்காக அதை மீண்டும் திறக்க வேண்டும். அமெரிக்கா - ஈரான் இருவரும் சேர்ந்து அதனைக் கட்டுப்படுத்தலாம்' என்பதுவரை அந்தப் பட்டியல் நீள்கிறது.ஆனால் ஈரான், "போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக தற்போது அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை; அவ்வாறு செய்யும் நோக்கமும் இல்லை" என ஹார்முஸ் கட்டுப்பாட்டுக்கான கடிவாளத்தை தன்னிடமே வைத்திருக்கிறது.ஈரான் போர்: கச்சா எண்ணெய்ஹார்முஸ் சுங்கச்சாவடி!இதற்கிடையில்தான் 'லாய்ட்ஸ்லிஸ்ட்' (Lloyds List) கப்பல் போக்குவரத்து இணையதளம் வெளியிட்டிருக்கும் செய்தி உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. ஈரானின் புரட்சிகர காவல் படை ஹார்முஸ் ஜலசந்தியில் புதிதாக 'சுங்கச்சாவடி' (Toll Booth) முறையை அமல்படுத்தியுள்ளதாக அந்தச் செய்தி தெரிவித்தது.மேலும், அந்தச் செய்தியின் அடிப்படையில், ஈரான் ஏற்கெனவே ஹார்முஸ் ஜலசந்தியில் ஒரு 'நடைமுறை சுங்கச்சாவடி' முறையை நடத்தி வருவதாகத் தெரிகிறது.ஜலசந்தியைக் கடக்கும் கப்பல்கள் அவற்றின் சரக்கு விவரங்கள் (manifests), ஊழியர் விவரங்கள் மற்றும் சேருமிடம் ஆகியவற்றை ஈரானின் புரட்சிகர காவல் படையிடம் சமர்ப்பிக்க வேண்டும். இந்தத் தகவல்கள் ஹார்முஸ்கான் மாகாணக் கட்டளைப் பிரிவுக்கு அனுப்பப்பட்டு, அங்கு தடைகள் குறித்த சோதனைகள் மற்றும் சரக்குச் சரிபார்ப்புகள் நடத்தப்படுகின்றன.மார்ச் 13 முதல் சுமார் 26 கப்பல்கள் இந்த முறையைப் பின்பற்றிச் சென்றுள்ளன. அதில் சில கப்பல்களிடம் சீனாவின் 'யுவான்' (Yuan) கரன்சியாக கட்டணம் பெறப்பட்டிருக்கிறது. மார்ச் 15-க்குப் பிறகு வழக்கமான பாதையில் பெரும்பாலான கப்பல்களால் பயணிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.ராஜேஷ் சின்ஹாஇந்தியாவின் நிலைபாடு என்ன?இந்தப் புதிய சுங்கச்சாவடி முறை விவாதமான நிலையில், அந்த வழியே பயணத்தை மேற்கொண்ட இந்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம், 'இந்தியாவை நோக்கி வந்துகொண்டிருக்கும் ஜக் வசந்த் மற்றும் பைன் கேஸ் உள்ளிட்ட ஐந்து கப்பல்கள் பாதுகாப்பாக இந்த ஜலசந்தியைக் கடந்துள்ளன. இவை வார இறுதிக்குள் இந்தியத் துறைமுகங்களை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, ஹார்முஸ் நீரிணையில் எந்தச் சுங்கச்சாவடி நடைமுறையும் இல்லை' என மறுத்துள்ளது.இது குறித்துப் பேசிய அமைச்சகத்தின் சிறப்புச் செயலாளர் ராஜேஷ் சின்ஹா, "சர்வதேச விதிகளின்படி ஹார்முஸ் ஜலசந்தி ஒரு சர்வதேச கடல்வழிப் பாதை. இதில் பயணிக்கக் கட்டணம் ஏதும் வசூலிக்க முடியாது. எனவே, இத்தகைய செய்திகள் ஆதாரமற்றவை" என்று தெரிவித்தார்.இதற்கு விளக்கமளிக்கும் வகையில் பேசிய ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி, "இந்தியா உள்ளிட்ட நட்பு நாடுகளின் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகப் பயணிக்க அனுமதி அளித்துள்ளோம்" என்று தெரிவித்தார். மும்பையில் உள்ள ஈரானிய தூதரகம் வெளியிட்டுள்ள பதிவில், 'சீனா, ரஷ்யா, இந்தியா, ஈராக் மற்றும் பாகிஸ்தான் போன்ற நட்பு நாடுகளுக்கு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது' எனக் கூறப்பட்டுள்ளது.மொஜ்தபா கமேனிபுதிய கட்டணத் திட்டம்!ஈரான்போரினால் ஈரானுக்கு ஏற்பட்ட பொருளாதார இழப்புகளை ஈடுகட்டவும், தன் நாட்டை மீட்டெடுக்கவும் இந்த நீர்வழிப் பாதையை ஈரான் ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளதாக சர்வதேச அரசியலை கூர்ந்து கவனித்து வரும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அதன் அடிப்படையில், ஈரான் புரட்சிகர காவல் படைக்கு நெருக்கமான ஃபார்ஸ் (Fars) மற்றும் தஸ்னிம் (Tasnim) செய்தி நிறுவனங்கள், ஈரானிய நாடாளுமன்ற உறுப்பினர் மொஹம்மத்ரெஜா ரெஜாயி கூச்சியை மேற்கோள் காட்டி செய்தி ஒன்றை வெளியிட்டன.அதில், "ஹார்முஸ் ஜலசந்தியின் மீது ஈரானின் இறையாண்மை, கட்டுப்பாடு மற்றும் மேற்பார்வையை அதிகாரப்பூர்வமாக சட்டமாக்கவும், அதன் மூலம் கட்டணம் வசூலித்து வருவாயை உருவாக்கவும் நாடாளுமன்றம் திட்டமிட்டுள்ளது. மற்ற போக்குவரத்து வழித்தடங்கள் வழியாகப் பொருட்கள் செல்லும்போது கட்டணம் செலுத்துவது போலவே, ஹார்முஸ் ஜலசந்தியும் ஒரு வழித்தடம்தான். இந்தப் பகுதியின் பாதுகாப்பை நாங்கள் வழங்குகிறோம், எனவே கப்பல்களும் எண்ணெய் டாங்கர்களும் கட்டணம் செலுத்துவது இயல்பானது" எனக் குறிப்பிட்டிருக்கிறது.அமெரிக்கா - ஈரான்'நியாயமான வசூல்' - ஈரான்!இதன் அடிப்படையில், ஜலசந்தியைக் கடக்கும் ஒவ்வொரு எண்ணெய் டாங்கர் கப்பலுக்கும் சுங்கவரி விதிக்க ஈரான் ஆலோசித்து வருகிறது. இதற்கான சட்ட மசோதாவை ஈரானிய நாடாளுமன்றம் தயாரித்து வருகிறது. "எங்கள் கடல் பகுதியில் பாதுகாப்பு வழங்குவதற்கு ஈடாகக் கட்டணம் வசூலிப்பது நியாயமானது" என்பது ஈரானின் வாதம். மேலும், இந்த நடைமுறை, தன் மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ள நாடுகள் மீது கட்டுப்பாடுகளை விதிக்க ஈரானுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்தும்.எனவே, ஹார்முஸ் நீரிணை மீதான தனது செல்வாக்கை வெறும் தற்காப்பு நடவடிக்கையாக மட்டுமல்லாமல், வருவாய் ஈட்டுவதற்கான ஒரு நீண்டகால புவிசார் அரசியல் கருவியாக நிறுவனமயமாக்கவும் ஈரான் முயல்கிறது.ஒருவேளை சுங்கச்சாவடி அமைந்தால்..?ஹார்முஸ் ஜலசந்தி என்பது உலக நாடுகளின் 'பொருளாதாரக் கழுத்துப்பகுதி' போன்றது. உலகின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் போக்குவரத்தில் சுமார் 20% இந்தப் பாதை வழியாகத்தான் நடக்கிறது. ஒருவேளை ஈரான் இங்கே அதிகாரப்பூர்வமாகச் சுங்கச்சாவடி அமைத்துக் கட்டணம் வசூலிக்கத் தொடங்கினால், அது உலகளவில் பெரும் விளைவுகளை ஏற்படுத்தும்.பெட்ரோல் விலைபொதுமக்களுக்கான சிக்கல்...கப்பல்களுக்குக் கட்டணம் விதிக்கப்பட்டால், அந்தச் செலவு நுகர்வோர் மீது சுமத்தப்படும். இதனால் சர்வதேச சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை அதிரடியாக உயரும். கத்தார் போன்ற நாடுகள் தங்களின் திரவ இயற்கை எரிவாயுவை (LNG) இந்தப் பாதை வழியாகத்தான் ஏற்றுமதி செய்கின்றன. இதனால் சமையல் எரிவாயு மற்றும் மின்சாரக் கட்டணங்கள் உலகெங்கும் அதிகரிக்கக்கூடும்.இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 80%-க்கும் மேல் இறக்குமதி செய்கிறது. இதில் பெரும்பகுதி ஹார்முஸ் வழியாகவே வருகிறது. ஈரானின் இந்த நடவடிக்கையால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மிகக் கடுமையாக உயரும். எரிபொருள் விலை உயர்ந்தால், அத்தியாவசியப் பொருள்களின் போக்குவரத்துச் செலவு அதிகரித்து, காய்கறிகள் முதல் மின்னணு பொருள்கள் வரை அனைத்தின் விலையும் ஏறும். இதனால் விவசாயம் மற்றும் தொழில் உற்பத்தி உலகளவில் மந்தமடையும் அபாயம் உள்ளது.ஹார்முஸ்சட்ட ரீதியான சிக்கல்...சர்வதேசக் கடல் பகுதியில் ஒரு நாடு தன்னிச்சையாகக் கட்டுப்பாடு விதிப்பது, அந்தப் பகுதியை 'ஆபத்தான பகுதி' (War Risk Zone) என அறிவிக்க வழிவகுக்கும். இதனால் கப்பல்களுக்கான காப்பீட்டுக் கட்டணம் பல மடங்கு உயரும்; இது ஒட்டுமொத்த கடல்வழி வர்த்தகத்தையும் செலவுமிக்கதாக மாற்றும்.ஐக்கிய நாடுகளின் கடல்சார் சட்ட ஒப்பந்தத்தின்படி (UNCLOS), சர்வதேச ஜலசந்திகளில் கப்பல்கள் தடையின்றிப் பயணிக்க உரிமை உண்டு (Transit Passage). ஈரான் கட்டணம் வசூலிப்பது இந்தச் சர்வதேசச் சட்டத்திற்கு எதிரானது என்பதால், ஐநா சபை மற்றும் சர்வதேச நீதிமன்றத்தில் பெரிய சட்டப் போராட்டங்கள் வெடிக்கும்.ஆதிக்கச் சிக்கல்...அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் சவுதி அரேபியா போன்ற நாடுகள் ஈரானின் இந்த ஆதிக்கத்தை ஏற்காது. கப்பல்களைப் பாதுகாக்கத் தங்களின் போர்க்கப்பல்களை அந்தப் பகுதிக்கு அனுப்பும். இது ஈரான் மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு இடையே நேரடிப் போர் மூளும் அபாயத்தை உருவாக்கும்.தற்போது சில கப்பல்களிடம் செய்வது போல ஈரான் இந்தக் கட்டணத்தைச் சீனாவின் 'யுவான்' கரன்சியில் வசூலிக்கத் தொடங்கினால், அது சர்வதேச வர்த்தகத்தில் அமெரிக்க டாலரின் ஆதிக்கத்தைச் சற்றே குறைத்து, சீனாவின் கரன்சிக்கு உலகளாவிய முக்கியத்துவத்தைக் கொடுக்கும்.ஈரான் போர்சுருக்கமாக சொல்வதானால், ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் சுங்கச்சாவடி அமைப்பது என்பது வெறும் பண வசூல் மட்டுமல்ல, அது உலகப் பொருளாதாரத்தின் சாவியைத் தன் கையில் எடுப்பதற்குச் சமம். இதனால் உலகப் பொருளாதாரம் வேறொரு பரிமாணத்தை நோக்கி நகரும்.இந்த நிகழ்வுகள் மூலம், உலக நிகழ்வுகளை வடிவமைப்பதில் ராணுவ பலத்தைப் பயன்படுத்துவதைப் போலவே பணத்தையும் பொருளாதார அழுத்தத்தையும் பயன்படுத்துவது அமெரிக்காவின் உக்தி. அதை இப்போது ஈரானும் கையில் எடுத்திருக்கிறது. இது எந்த வகையில் ஈரானுக்கு பயன்படும் என்பதற்கு காலம்தான் பதில் சொல்லும்!ஈரான் போர் நிறுத்தம்: ட்ரம்ப்-ன் 15 அமைதி பரிந்துரைகளுக்கு ஈரான் முன்வைக்கும் '5' நிபந்தனைகள் என்ன?

vikatan
Mar 30, 05:30 AM
5 நிமிடம் படிக்க

விளம்பர இடம்

உங்கள் விளம்பரத்தை இங்கே காட்சி செய்யலாம்

மேலும் செய்திகள்

தமிழ்நாடு முழுவதும் மற்றும் அதற்கு அப்பால் இருந்து சமீபத்திய கதைகளுடன் புதுப்பித்த நிலையில் இருங்கள்

Iran: மேற்கு ஆசியாவிற்குள் நுழைந்த அமெரிக்கப் போர்க்கப்பல்; ஈரான் எல்லையில் பதற்றம்?
உலகம்

Iran: மேற்கு ஆசியாவிற்குள் நுழைந்த அமெரிக்கப் போர்க்கப்பல்; ஈரான் எல்லையில் பதற்றம்?

ஈரான் மீது அமெரிக்கா தரைவழித் தாக்குதலை நடத்தக்கூடும் என்ற ஊகங்கள் வலுத்து வரும் நிலையில், அமெரிக்காவின் பிரமாண்டமான 'யுஎஸ்எஸ் திரிபோலி' (USS Tripoli) போர்க்கப்பல் மேற்கு ஆசியப் பகுதிக்கு வந்தடைந்தது. நேற்று (28-ம் தேதி) அமெரிக்க மத்திய கட்டளை அமைப்பு இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.ஜப்பானைத் தளமாகக் கொண்டு இயங்கும் இக்கப்பல், சுமார் 3,500 கடற்படை வீரர்கள் மற்றும் மாலுமிகளைக் கொண்டுள்ள ஒரு வலிமையான படைப்பிரிவின் முதன்மைக் கப்பலாகும்.யுஎஸ்எஸ் திரிபோலிஇதில் அதிநவீன F-35 போர் விமானங்கள், சீஹாக் ஹெலிகாப்டர்கள் மற்றும் வீரர்களை ஏற்றிச் செல்லும் ஆஸ்ப்ரே (Osprey) ரக விமானங்கள் எனப் பெரும் ஆயுதக் கிடங்கே தயார் நிலையில் உள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளை அமைப்பு (United States Central Command - CENTCOM) தெரிவித்துள்ளது.அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ வெள்ளிக்கிழமை, ``நவீனப் போர்முறையில் தரைப்படை வீரர்களை நேரடியாகக் களமிறக்காமல், அமெரிக்கா தனது இலக்குகளை அடைய முடியும். ஒரு நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்த அல்லது அதன் ராணுவத் திறனை முடக்கப் பல வழிகள் உள்ளன" எனத் தெரிவித்திருந்தார்.இருப்பினும், அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இது குறித்துத் தெளிவான முடிவை அறிவிக்காமல் மௌனம் காத்து வருகிறார். சுமார் 10,000 வீரர்களை மேற்கு ஆசியாவிற்கு அனுப்ப அதிபர் ஆலோசித்து வருவதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.திரிபோலி போர்க்கப்பலின் வருகை இப்பகுதியில் நிலவும் போர் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.ஈரான் போருக்கு அமெரிக்கா செலவு செய்யும் பெருந்தொகை; சிதையும் ஏழை மக்கள் - அதிர்ச்சி ரிப்போர்ட்!

vikatan
30 மார்.
3 நிமிடம் படிக்க
'கொளத்தூருக்குள் செல்லவே முடியவில்லை; வில்லிவாக்கத்தில் பிரசாரம் கேன்சல்!' - என்ன சொல்கிறது தவெக?
இந்தியா

'கொளத்தூருக்குள் செல்லவே முடியவில்லை; வில்லிவாக்கத்தில் பிரசாரம் கேன்சல்!' - என்ன சொல்கிறது தவெக?

தவெக தலைவர் விஜய் இன்று சென்னையில் மூன்று இடங்களில் பிரசாரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அதன்படி பெரம்பூர், கொளத்தூரில் பிரசாரம் செய்த விஜய், வில்லிவாக்கத்தில் பிரசாரம் செய்ய முடியாமல் கூட்டத்தை ரத்து செய்திருக்கிறார். என்ன காரணம்?Vijayதவெக தலைவர் விஜய் இன்று காலை பெரம்பூரின் அம்பேத்கர் கல்லூரியில் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். வேட்புமனுவை தாக்கல் செய்துவிட்டு வெளியே வந்த உடனேயே பிரசார வேனில் ஏறிவிட்டார். பிரசாரத்துக்கு திட்டமிடப்பட்டிருந்த முதல் ஸ்பாட்டான பெரம்பூர் விவேகானந்த ரோடை மதியம் 1 மணிக்கு மேல் எட்டினார்.வழிநெடுகும் விஜய்யின் தொண்டர்கள் சூழ்ந்ததால் விஜய்யின் வாகனம் ஊர்ந்து ஊர்ந்தே நகர்ந்தது. பெரம்பூரில் பேசி முடித்துவிட்டு கொளத்தூருக்கு விஜய் சென்றார். பெரம்பூரிலிருந்து கொளத்தூருக்கு விஜய் செல்ல 3 மணி நேரம் ஆனது. கொளத்தூரில் அளவுக்கதிகமான கூட்டம் கூடியதால், அசம்பாவிதங்களை தவிர்க்க விஜய்யை காவல்துறையினர் சீக்கிரம் பேசி முடிக்குமாறு அறிவுறுத்தினர். அதன்படி விஜய்யும் 2 நிமிடங்களில் பேசி முடித்தார்.வில்லிவாக்க கூட்டம்இதேவேளையில் மூன்றாவது ஸ்பாட்டான வில்லிவாக்கத்திலும் விஜய்யின் பிரசாரத்தை பார்க்க எக்கச்சக்கமான பேர் கூடியிருந்தனர். விஜய் கொளத்தூரை எட்டிய சமயத்திலேயே தவெகவின் முக்கிய நிர்வாகயான சி.டி.ஆர்.நிர்மல் குமாகுமார் 'காவல்துறை எங்களின் பிரசாரத்துக்கு முறையான பாதுகாப்பு வழங்கவில்லை' என தேர்தல் ஆணையத்துக்கு புகார் ஒன்றை கொடுத்தார்.இந்நிலையில் கொளத்தூரிலிருந்து விஜய் நேராக வில்லிவாக்கம் வருவார் என எதிர்பார்த்த நிலையில், பிரசாரத்தை ரத்து செய்துவிட்டு வீட்டுக்கு திரும்பியிருக்கிறார். வில்லிவாக்கம் தொகுதியின் மாவட்டச்செயலாளர் பூக்கடை குமார் பேசுகையில், 'தலைவரால் கொளத்தூருக்குள்ளேயே செல்ல முடியவில்லை. காவல்துறை முறையாக பாதுகாப்பு கொடுக்கவில்லை. வில்லிவாக்கத்தில் மாலை 6 மணி வரைதான் பிரசாரம் செய்ய அனுமதி வாங்கியிருக்கிறோம். நெரிசலில் தலைவர் வந்து சேர 8 மணி ஆகும் போல தெரிகிறது. அதனால் பிரசாரத்தை ரத்து செய்கிறோம். இன்னொரு நாள் தலைவர் உங்களை சந்திப்பார்' என்றார்.

vikatan
30 மார்.
3 நிமிடம் படிக்க
"ஆட்சி மாற்றம் நடக்கும்; ஆனால், ஈரானில் அல்ல" - ட்ரம்ப் குடும்பத்திலேயே எழும் எதிர்ப்புக் குரல்
இந்தியா

"ஆட்சி மாற்றம் நடக்கும்; ஆனால், ஈரானில் அல்ல" - ட்ரம்ப் குடும்பத்திலேயே எழும் எதிர்ப்புக் குரல்

"ஈரானில் ஆட்சி மாற்றம் வேண்டும். ஈரானின் புதிய அரசாங்கத்தோடு பேசி வருகிறேன்" என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அடிக்கடி கூறி வருகிறார். அமெரிக்கா, இஸ்ரேல் – இரண்டு நாடுகளும் ஈரான் மீது போர் தொடுத்ததற்குக் காரணம் ‘ஈரானின் ஆட்சி மாற்றத்திற்காகத்தான்’ என்பது இப்போது நன்கு தெரிகிறது. ஈரான் மீது அமெரிக்கா போர் நடத்துவது அமெரிக்காவில் இருக்கும் பலருக்குப் பிடிக்கவில்லை. அமெரிக்காவின் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ்க்கும் இந்தப் போரில் விருப்பமில்லை என்கிற செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. மேரி எல். ட்ரம்ப் பதிவுபோரை சீக்கிரம் முடிக்க நினைத்த நெதன்யாகு; 'மாஸ்டர் பிளானை' தகர்த்த ஈரான் மக்கள்! | Full Detailஇந்த நிலையில், ட்ரம்பின் சொந்த குடும்பத்தில் இருந்தே ஒரு குரல் வந்திருக்கிறது. ட்ரம்பின் அண்ணன் மகள் மேரி எல். ட்ரம்ப். இவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது…“டொனால்ட் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வரப் போகிறார்தான். ஆனால், அது ஈரானில் இல்லை. அமெரிக்காவில்” என்று பதிவிட்டுள்ளார். `UAE ஈரானை திருப்பி தாக்காதது நல்லதே; அமெரிக்காவிற்கு நண்பராக இருப்பது பேராபத்து' - ஜெஃப்ரி சாக்ஸ்

vikatan
30 மார்.
3 நிமிடம் படிக்க
`தேர்தலில் ஜெயிக்கவில்லை என்றால் சாவதைத் தவிர வேறு வழி இல்லை!' - அதிர்ச்சி கொடுத்த திமுக எம்.எல்.ஏ
இந்தியா

`தேர்தலில் ஜெயிக்கவில்லை என்றால் சாவதைத் தவிர வேறு வழி இல்லை!' - அதிர்ச்சி கொடுத்த திமுக எம்.எல்.ஏ

தமிழ்நாட்டில் ஏப்ரல் மாதம் 23-ம் தேதி நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று தொடங்குகிறது. அதற்காக தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் கடந்த இரண்டு நாட்களில் தங்கள் வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டு முடித்திருக்கின்றன. அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களுக்கு அவர்களின் தொண்டர்கள் வரவேற்பு கொடுத்து வருகின்றனர். அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஜி.ஆர்.வசந்தவேலுக்கு, பேருந்து நிலையம் அருகே நேற்று வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது ரிஷிவந்தியம் தொகுதியின் எம்.எல்.ஏ-வும், கள்ளக்குறிச்சி தி.மு.க தெற்கு மாவட்டச் செயலாளருமான வசந்தம் கார்த்திகேயனும் ஜி.ஆர்.வசந்தவேல் வந்த அந்த வாகனத்தில் இருந்தார்.வரவேற்பு நிகழ்ச்சியில் ஜி.ஆர்.வசந்தவேலுடன், வசந்தம் கார்த்திகேயன்அப்போது பேசிய வசந்தம் கார்த்திகேயன், ``எங்கள் வீட்டுப் பிள்ளையாக நிற்கும் ஜி.ஆர்.வசந்தவேல் அவர்களை சுமார் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைக்க வேண்டும். கடந்த தேர்தலில் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தவர் ஜி.ஆர்.வசந்தவேல். அவர் பணக்காரர் இல்லை. பெரிய மாட மாளிகைகள் அவரிடம் இல்லை. பல்வேறு பதவிகளில் இருந்து பணத்தை வாரிச் சுருட்டவில்லை. எதுவுமே இல்லாத அப்பாவி அவர். இந்தத் தேர்தலில் அவர் ஜெயிக்கவில்லை என்றால் சாவதைத் தவிர வேறு வழியே இல்லை. நம் வீட்டுப் பிள்ளை சாகலாமா ? அவர் உயிருக்கு நாம் உத்தரவாதம் கொடுக்க வேண்டும்தானே ? அவரை காப்பாற்ற வேண்டும்தானே ? வசந்தவேல் தோற்றால் இந்த வசந்தம் கார்த்திகேயன் செத்ததாக அர்த்தம். இந்தத் தேர்தலில் எனக்கு எந்த வேலையும் இல்லை. அண்ணன் வசந்தவேல் அவர்களின் வெற்றிக்காக உழைப்பதுதான் என் வேலை.அதனால் வசந்தவேல் உயிருடன் இருக்க வேண்டுமென்றால், 25 நாட்களுக்கு நாம் அயராது பாடுபட வேண்டும். நம் வீட்டுப் பிள்ளையின் வெற்றிக்கு நாம்தான் உழைக்க வேண்டும். நாம் அனைவரும் வசந்தவேல்தான், நாம்தான் உதயசூரியன் என்ற எண்ணத்துடன், வசந்தம் கார்த்திகேயனின் ஆதரவுடன் அவரை நாம் வெற்றிபெற வைக்க வேண்டும். நான் போட்டியிடும் ரிஷிவந்தியம் தொகுதி கூட எனக்கு முக்கியம் இல்லை. உளுந்தூர்பேட்டை தொகுதி வெற்றிதான் எனக்கு முக்கியம். உங்கள் பார்வையில் வேண்டுமானால் வசந்தவேலிடம் என்ன இருக்கிறது என்று கேட்கலாம். அதை வசந்தவேலிடம்தான் கேட்க முடியுமே தவிர, வசந்தம் கார்த்திகேயனிடம் கேட்க முடியாது. உளுந்தூர்பேட்டை தொகுதியில் வீடு பார்க்குமாறு கூறியிருக்கிறேன். அவரை சட்டமன்ற உறுப்பினராக்க நீங்கள் அயராது பாடுபட வேண்டும் என்று உங்கள் பாதம் தொட்டு கேட்டுக் கொள்கிறேன். நமக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு இதுதான்.தி.மு.க எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயன்இதை விட்டுவிட்டால் உளுந்தூர்பேட்டை தொகுதியை காப்பாற்றவே முடியாது. எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயனின் இந்தப் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், ``வசந்தம் கார்த்திகேயனின் விளம்பர மோகத்துக்கு அளவே இல்லையா ? அவரும் இந்த தேர்தலில் போட்டியிடுகிறார். அப்படி இருக்கும்போது, அவர் தொகுதியை விட்டுவிட்டு வேறு ஒரு தொகுதியில் வேலை செய்வாரா ? மேலும் உளுந்தூர்பேட்டை தொகுதி கள்ளக்குறிச்சி மேற்கு மாவட்டத்தில் வருகிறது. அதன் மாவட்டச் செயலாளர் எங்கள் எம்.எல்.ஏ உதயசூரியன்தான். அவர் இருக்கும்போது இவர் முந்திரிக் கொட்டைத்தனமாக நடந்து கொண்டதுடன், எதிர்க்கட்சிகள் கேலி செய்யுமளவுக்கும் பேசி வைத்திருக்கிறார்" என்று கடுகடுக்கின்றனர் வடக்கு மாவட்ட செயலாளர் உதயசூரியனின் ஆதரவாளர்கள்."மாணிக்கம் தாக்கூர் சொன்னது அவருடைய சொந்தக் கருத்து; திமுக-வைத் தவிர..." - செல்வப்பெருந்தகை

vikatan
30 மார்.
3 நிமிடம் படிக்க
மனோ தங்கராஜ்: `அமைச்சருக்கே சீட் இல்லியா?' - இரவு வரை போராட்டம் - நிர்வாகிகள் சொல்வது என்ன?
இந்தியா

மனோ தங்கராஜ்: `அமைச்சருக்கே சீட் இல்லியா?' - இரவு வரை போராட்டம் - நிர்வாகிகள் சொல்வது என்ன?

கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதியில் சிட்டிங் அமைச்சர் மனோ தங்கராஜிக்கு சீட் மறுக்கப்பட்டதுடன் அந்த தொகுதி சி.பி.எம் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பத்மநாபபுரம் தொகுதி கடந்த 20 ஆண்டுகளாக தி.மு.க வசம் இருந்தது. தொடர்ந்து 10 ஆண்டுகள் எம்.எல்.ஏ-வாக இருந்தார் மனோ தங்கராஜ். 2021 தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் வென்ற ஒரே தி.மு.க எம்.எல்.ஏ-வான மனோ தங்கராஜிக்கு அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டிருந்தது. இந்த முறையும் அவருக்கு போட்டியிட வாய்ப்பு கிடக்கும் என எண்ணியிருந்தார். ஆனால், அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதுடன் தொகுதியும் கூட்டணி கட்சியான சி.பி.எம்-க்கு ஒதுக்கப்பட்டது. இது மனோ தங்கராஜ் ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் நேற்று கன்னியாகுமரி மேற்கு மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளும், மனோதங்கராஜின் ஆதரவாளர்களும் கூடினர். தி.மு.க அலுவலகத்தில் நடந்த நிர்வாகிகள் கூட்டம்பின்னர் அங்கு நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றினர். அதில், மனோ தங்கராஜ் மாவட்டச் செயலாளராகவும், அமைச்சராகவும் பொறுப்பேற்றதில் இருந்து தேசிய கட்சிகளின் கோட்டையாக இருந்த குமரி மாவட்டத்தை தி.மு.க கோட்டையாக மாறி அசுர வளர்ச்சி கண்டுள்ளது. இந்த மாவட்டத்தில் ஒரு தொகுதிகூட தி.மு.க-வுக்கு ஒதுக்கப்படாதது வருத்தமளிப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், கழகத்துக்கு உண்மையாகவும், அரசுக்கு தன் துறை வழியாக நற்பெயரும் உருவாக்கியதோடு, குமரி மாவட்ட தி.மு.க-வை அரண்போல் காத்து, பல ஆயிரம் கோடி திட்டங்கள் மூலம் மாவட்டத்தை வளர்ச்சிப்பாதையில் வழிநடத்திய அமைச்சர் மனோ தங்கராஜிக்கு பத்மநாபபுரம் தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்க மறுபரிசீலனை செய்ய தி.மு.க தலைவர் ஸ்டாலினை கேட்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.பின்னர் கட்சி அலுவலகத்துக்கு வெளியே சாலை ஓரமாக நின்று மனோ தங்கராஜிக்கு சீட் ஒதுக்க வேண்டும் எனக்கேட்டு அவரது ஆதரவாளர்கள் கோஷங்கள் எழுப்பினர். நேற்று காலையில் இருந்தே கட்சி அலுவலகத்துக்கு வந்த தி.மு.க-வினர் மதியம் கலைந்து சென்றனர். பின்னர் மாலை 3 மணிக்கு மேல் சில நிர்வாகிகள் கட்சி அலுவலகத்துக்குச் சென்று இரவு சுமார் 9 மணி வரை உள்ளிருப்பு போராட்டம் செய்தனர். மனோ தங்கராஜ் சென்னையில் இருந்தாலும் அவரது ஏற்பாட்டின்படியே ஆதரவாளர்கள் மூலம் இந்த கூட்டம் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மனோ தங்கராஜ் மாவட்டச் செயலாளராக உள்ள கன்னியாகுமரி மேற்கு மாவட்டத்தில் அமைப்பு ரீதியாக 9 ஒன்றியங்கள் உள்ளன. அதில் 5 ஒன்றிய செயலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். 4 பேர் ஆப்சென்ட் ஆகினர். பத்மநாபபுரம் தொகுதியின் மையப்பகுதியான பத்மநாபபுரம் நகர முக்கிய நிர்வாகிகளும் இதில் கலந்துகொள்ளவில்லை.தி.மு.க போராட்டம்இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் ராஜ், "தேர்தல் கூட்டணி விவகாரத்தில் விளவங்கோடு தொகுதியை கம்யூனிஸ்ட் கட்சிக்கு காங்கிரஸ் விட்டு கொடுக்க மறுத்ததால் வேறு வழியின்றி பத்மநாபபுரம் தொகுதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு தி.மு.க தலைமை ஒதுக்கியது. கட்சி எடுத்த முடிவுக்கு நாம் அனைவரும் கட்டுப்பட வேண்டும். மீண்டும் திராவிட மாடல் அரசு தொடர நமது பணி இருக்க வேண்டும். இருந்தாலும் குமரி மேற்கு மாவட்டத்தில் கட்சி வளர்ச்சிக்காக தி.மு.க-வுக்கு ஏதாவது ஒரு தொகுதி ஒதுக்கப்பட வேண்டியது அவசியம். இதனை தி.மு.க தலைவர் பரிசீலனை செய்ய வேண்டும். எனவே, பத்மநாபபுரம் தொகுதியை தி.மு.க-வுக்கு ஒதுக்கி மனோ தங்கராஜை வேட்பாளராக அறிவிக்க தலைமை பரிசினை செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி கட்சி தலைமைக்கு இமெயில் மூலம் அனுப்பியுள்ளோம்" என்றார்.

vikatan
30 மார்.
3 நிமிடம் படிக்க
"அனுபவம் பார்த்து சீட் கொடுத்த காலம் போச்சு" - கொந்தளிக்கும் கரூர் திமுக; யார் இந்த ஆசி.தியாகராஜன்?
இந்தியா

"அனுபவம் பார்த்து சீட் கொடுத்த காலம் போச்சு" - கொந்தளிக்கும் கரூர் திமுக; யார் இந்த ஆசி.தியாகராஜன்?

கரூர் தொகுதி தி.மு.க வேட்பாளராக ஆசி. தியாகராஜன் அறிவிக்கப்பட்டதிலிருந்து கரூர் தி.மு.க நிர்வாகிகள் பொறுமிக்கொண்டிருக்கின்றனர். கரூர் தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டியிடாததால், இங்குள்ள தி.மு.க-வினர் சேர்வடைந்துள்ளனர் எனத் தகவல் வெளியானது. இது பற்றி விசாரிக்க களம் இறங்கினோம்... `தயவு செய்து பெயரை மட்டும் போட்டு விடாதீர்கள்' எனக் கூறிய கட்சி நிர்வாகிகள் சிலர், ``காலம் காலமாக கட்சிக்கு வேலை பார்த்து வரும் சீனியர்கள் பலர் தொகுதியில் இருக்க, 40 ஆண்டுகளுக்கு மேலாக கட்சி போராட்டங்கள், சிறைவாசம் எனக் கட்சிக்காக வாழ்க்கையே தியாகம் செய்தவர்கள் கரூர் மாவட்டத்தில் பலர் இருக்க அதில், ஒருவர் கூட கட்சி தலைமைக்குத் தெரியாமல் போய்விட்டது?முதல்வர் ஸ்டாலின் - செந்தில் பாலாஜிதி.மு.க அரசியல் வரலாற்றில் இப்படி ஒரு வேட்பாளர் தேர்வு நடந்திருக்காது. தலைவர் கருணாநிதி இருந்திருந்தால் கரூர் மாவட்ட தி.மு.க-விற்கு இப்படி ஒரு அநீதி நடந்திருக்காது" எனத் புலம்பித் தள்ளினர்.``2026 சட்டமன்றத் தேர்தலில் செந்தில் பாலாஜி கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுவது என்பது கடந்த உள்ளாட்சித் தேர்தல் முடிந்ததுமே கட்சி தலைமை முடிவு செய்து விட்டதாம்.செந்தில் பாலாஜி அனுப்பிய மெசேஜ்; கலர் மாறும் கோவை தெற்கு தொகுதி! - திமுக நிர்வாகிகள் ஷாக்!இதனால், கரூரில் இருந்து தனது ஆதரவாளர்கள் சிலரை கோவைக்கு இடம் மாற வைத்து சரியான அடித்தளத்தை அமைத்துள்ளார். கரூர் தொகுதியில் போட்டியிடப் போவதில்லை என்பது தெரிந்தும், கட்சிக்கு விசுவாசமாக, உண்மையாகப் பாடுபட்டு வரும் பலர் இருக்க அதில் யாராவது ஒருவரைத் தேர்வு செய்து நிறுத்தி இருக்கலாம். ஆனால், செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர் என்பதால், கட்சிக்குத் தொடர்பு இல்லாத ஆசி.தியாகரஜனுக்கு சீட் வாங்கி கொடுத்திருப்பது எந்த வகையில் நியாயம் எனத் தெரியவில்லை.ஆசி. தியாகராஜன்உண்மையான கட்சி நிர்வாகிகள் அனைவரும் வெளிய சொல்ல முடியாதளவிற்குக் கொதித்துப் போய் உள்ளனர். செந்தில் பாலாஜிதான் கட்சி தொண்டர்களை மறந்து விட்டார் என்றால்? தி.மு.க தலைமையுமா கரூர் நிர்வாகிகளை மறந்து விட்டது? கட்சிக்காக காலம் முழுதுவம் பாடுபடும் தொண்டர்களுக்கு தலைமை கொடுக்கும் வெகுமதி இதுதானா?" எனச் சர வெடியாய் வெடிக்கின்றனர்.யார் இந்த தியாகராஜன்?65 வயதான ஆசி. தியாகராஜன் கொங்கு வெள்ளாளர் கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். பி.எஸ்.சி பட்ட படிப்பு முடித்த இவர், விவசாய மற்றும் டெக்ஸ்டைல்ஸ் தொழில் செய்து வருகிறார். கரூர் தான்தோன்றி மலை வெங்கட்ரமண சுவாமி கோவில் அறங்காவலர் குழுத் தலைவர், உப்பிடமங்கலம் விவசாயிகள் நுண்ணுயிர் நீரேற்று பாசன சங்கத் தலைவர் இவைதான் இவரது அரசியல் அனுபவம். இவருக்கு சீட்டு கொடுத்து இருப்பதால் கரூர் தி.மு.க-வினருக்கு மத்தியில் கடும் அதிருப்தி நிலவி வருகிறது.கோவைக்கு மாறிய செந்தில் பாலாஜி; அமைச்சருக்கு இடம் இல்லை! - திமுக வேட்பாளர் பட்டியல்! முழு விவரம்

vikatan
30 மார்.
3 நிமிடம் படிக்க
"கேரளத்தில் பி.ஜே.பி-தான் ஏ டீம்; மோடியின் உத்தரவாதம்!" - பாலக்காட்டில் பிரதமர் மோடி பேசியது என்ன?
இந்தியா

"கேரளத்தில் பி.ஜே.பி-தான் ஏ டீம்; மோடியின் உத்தரவாதம்!" - பாலக்காட்டில் பிரதமர் மோடி பேசியது என்ன?

பிரதமர் மோடி கேரள மாநிலம் பாலக்காடு மற்றும் திருச்சூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். திருச்சூரில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திறந்த வாகனத்தில் ரோடு ஷோ நடத்தினார் பிரதமர் மோடி. மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி, திருச்சூர் பி.ஜே.பி வேட்பாளர் பத்மஜா வேணுகோபால், மணலூர் தொகுதி வேட்பாளர் கே.கே. அனீஷ் குமார், நாட்டிகா தொகுதி சி.பி.ஐ கட்சி எம்.எல்.ஏ-வாக இருந்து பின்னர் பா.ஜ.க-வில் இணைந்து வேட்பாளரான சி.சி.முகுந்தன் ஆகியோரும் பிரதமரின் ரோடு ஷோ வாகனத்தில் இருந்தனர். பாலக்காட்டில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, "கேரளத்தின் சிந்தனையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கேரளத்தின் இளைஞர்களும், பெண்களும், விவசாயிகளும் பி.ஜே.பி பக்கம் நிற்கிறார்கள். நமது எத்தனையோ நிர்வாகிகள் அரசியல் தாக்குதலால் உயிரை தியாகம் செய்தனர். அந்த நிர்வாகிகளை வணங்குகிறேன். கேரளத்தின் நுழைவு வாயிலாக பாலக்காடு அமைந்துள்ளது. பல தசாப்தங்களாக கேரளா இடது-வலது கட்சிகளின் வஞ்சனையில் சிக்கிக்கிடக்கிறது. ஒன்று ஊழல் கட்சி, மற்றொன்று மகா ஊழல் கட்சி. ஒன்று வகுப்புவாதம் மற்றொன்று பயங்கர வகுப்புவாதம். எல்.டி.எஃப் மற்றும் யு.டி.எஃப் ஆகிய கூட்டணிகளின் கொள்கைகள் வாக்கு வங்கி அரசியலாகும். கேரளாவின் வளர்ச்சியைப் பற்றி அவர்களுக்கு எந்த எண்ணமும் இல்லை. இங்கு அமைய உள்ள பி.ஜே.பி அரசு கேரளாவில் வேகமான வளர்ச்சிப்பணிகளை ஏற்படுத்தும். கேரளம் வளரும், மாறாதது இனி மாறும். பல தசாப்தங்களாக எல்.டி.எஃப் மற்றும் யு.டி.எஃப் ஆகியவை மாறி மாறி கேரளாவை கொள்ளையடித்து வருகிறது.பாலக்காடு பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடிகாங்கிரஸ் பி.ஜே.பி-யின் 'பி' டீம் என்று சி.பி.எம் கூறுகிறது. சி.பி.எம் கட்சி பி.ஜே.பி-யின் 'பி' டீம் என்று காங்கிரஸ் கூறுகிறது. எனவே கேரளாவில் 'ஏ' டீம் பி.ஜே.பி மட்டும்தான் என்பதை இரு கூட்டணிகளும் ஒப்புக்கொள்கின்றன. கேரளத்தில் பி.ஜே.பி-தான் ஏ டீம். இரண்டு ஊழல் கட்சிகளும் பி.ஜே.பி-யைக் கண்டு பயப்படுகின்றன. ஏனென்றால் கேரளாவில் பி.ஜே.பி ஆட்சி வந்ததும், அவர்களின் ஊழல் எல்லாவற்றையும் வெளியே கொண்டுவரும். பல ஆண்டுகளாக அவர்கள் கொள்ளையடித்தாலும், மாறி மாறி சட்ட நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். கேரளத்தில் பி.ஜே.பி அரசு அமைந்தால், சி.பி.எம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி அரசுகளின் அனைத்து ஊழல்கள் குறித்தும் விசாரணை நடத்தப்படும். மக்களுக்கு நீதியை நிலைநாட்டுவோம். இதனால்தான் சி.பி.எம் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் பி.ஜே.பி-யைப் பார்த்து பயப்படுகின்றன.வளர்ந்த கேரளம் - மோடியின் உத்தரவாதம்!ரோடு ஷோ-வில் பிரதமர் மோடியுடன் மத்திய அமைச்சர் சுரேஷ்கோபிமேற்கு ஆசியாவில் யுத்தம் நடக்கிறது. கேரளத்தில் இருந்து நிறையபேர் யுத்த பூமியில் சிக்கி உள்ள்ளனர். அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருக்க நம் நாட்டு தூதரகங்கள் அங்கு தீவிரமாக வேலைசெய்து வருகின்றன. ஆனால் காங்கிரஸ் ஆபத்தான விஷயங்களை பேசுகிறார்கள். வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள சுமார் ஒருகோடிக்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு ஆபத்து ஏற்படவேண்டும், அதன்மூலம் அரசியல் செய்ய வேண்டும் என காங்கிரஸ் நினைக்கிறது. காங்கிரஸும், சி.பி.எம் கட்சியும் நாடு முழுவதும் ஒன்றாக உள்ளன. பீகார், ஆந்திரா, மணிப்பூர், திரிபுரா, அசாம் மற்றும் தமிழ்நாட்டிலும் இவர்கள் ஒற்றுமையாக உள்ளனர். கேரளாவில் மட்டும் பரஸ்பரம் மோதிக்கொள்வார்கள். எனவே இவர்களிடம் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கேரளத்தில் சாலை, ரயில்வே வளர்ச்சி, ஜல் ஜீவன் மிஷன், பி.எம் ஆவாஸ் யோஜனா போன்ற திட்டங்களுக்காக வழங்கப்பட்ட பணம் மக்களைச் சென்றடையவில்லை. வளர்ந்த கேரளம் என்பது மோடியின் உத்தரவாதம்" என்றார்.

vikatan
30 மார்.
3 நிமிடம் படிக்க
மக்கள் தொகை கணக்கெடுப்பு: 'Live-in உறவிலிருப்பவர்கள் தம்பதியா?' - மத்திய அரசின் பதில் என்ன?
இந்தியா

மக்கள் தொகை கணக்கெடுப்பு: 'Live-in உறவிலிருப்பவர்கள் தம்பதியா?' - மத்திய அரசின் பதில் என்ன?

மத்திய அரசு அடுத்த ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்துள்ளது. இக்கணக்கெடுப்பில் லிவ் இன் முறையில் வாழ்பவர்களை எவ்வாறு கணக்கெடுப்பது என்ற கேள்வி எழுந்துள்ளது. அதற்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. நிலையான லிவ் இன் உறவில் இருக்கும் தம்பதிகளை திருமணமான தம்பதிகளாகக் கணக்கெடுக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பின் சுய-விவரப் பதிவேற்ற இணையதளத்தில் இடம்பெற்றுள்ள ஒரு கேள்விக்கு அளித்துள்ள விளக்கத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது."சுய-விவரப் பதிவேற்றத்தின் போதோ அல்லது கணக்கெடுப்பாளர் வீட்டிற்கு வரும்போதோ, ஒன்றாக வசிக்கும் (live-in relationship) ஒரு ஜோடியை திருமணமான தம்பதியாகக் கருதலாமா?" என்ற கேள்விக்கு, அதிகாரிகள் அளித்துள்ள பதிலில், ''அந்த ஜோடி தங்கள் உறவை ஒரு நிலையான பிணைப்பாகக் கருதினால், அவர்கள் திருமணமான தம்பதிகளாகவே நடத்தப்பட வேண்டும்'' என்று குறிப்பிட்டுள்ளனர். மக்கள் தொகை கணக்கெடுப்புதம்பதிகள் தாங்கள் நிலையான உறவில் இருப்பதாகத் தெரிவித்தால், அதற்கு சட்டப்பூர்வ சான்றிதழ்கள் எதுவும் தேவையில்லை. அவர்கள் அளிக்கும் தகவலின் அடிப்படையிலேயே கணக்கெடுக்கப்படுவார்கள். மக்கள் தாங்களாகவே இணையதளம் வழியாகவோ அல்லது கணக்கெடுப்பாளர் வீட்டிற்கு வரும்போதோ இந்தத் தகவலைப் பதிவு செய்யலாம். இந்த விவகாரத்தில் தற்போதுதான் முதல்முறையாகப் மத்திய அரசு வெளிப்படையாக விளக்கம் அளித்துள்ளது. குறிப்பாக, மக்கள் தாங்களாகவே விவரங்களைப் பதிவு செய்யும் முறை அறிமுகப்படுத்தப்படுவதால் இந்தத் தெளிவுபடுத்தல் அவசியமாகிறது. இருப்பினும், கடந்த கால கணக்கெடுப்புகளிலும் கூட, ஒன்றாக வாழும் திருமணதிற்கு அப்பாற்பட்ட ஜோடிகள் தங்களை "திருமணமானவர்கள்" என்று கணக்கெடுப்பாளரிடம் தெரிவித்தால், அவ்வாறே பதிவு செய்யப்பட்டதாக அதிகாரிகள் குறிப்பிட்டுட்டனர். தென்னிந்தியாவில் குறையும் இளம் மக்கள் தொகை - அரசியல், பொருளாதார தாக்கம் என்ன?மக்கள் தொகை கணக்கெடுப்பில் வீடுகள் பட்டியல், வீட்டு வசதிகள் குறித்து கேட்கப்பட்டுள்ள கட்டத்தில் கேட்கப்படவுள்ள 33 கேள்விகளில், ஒரு வீட்டில் வசிக்கும் திருமணமான தம்பதிகளின் எண்ணிக்கையும் ஒன்றாகும். இந்தக் கணக்கெடுப்புப் பணி 45 நாட்கள் நடக்க இருக்கிறது. முதல் கட்டமான வீடுகள் பட்டியல் மற்றும் வீட்டு வசதி கணக்கெடுப்பு அடுத்த மாதம் தொடங்கும். அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் முழுமையான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறும். ஒவ்வொரு மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தின் அறிவிப்பின்படி, மக்கள் தொகை கணக்கெடுப்பில் வீடுகள் பட்டியல் பணிகள் ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30 வரை நடைபெறும்.45 நாட்கள் நடக்கும் இக்கணக்கெடுப்பின் முதல் 15 நாட்கள் சுய விபர பதிவேற்றத்திற்காகவும், அதைத்தொடர்ந்து வரும் 30 நாட்களில் கணக்கெடுப்பாளர்கள் நேரில் வந்து விபரங்களைச் சேகரிப்பதாகவும் இருக்கும்.மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது, பதிலளிப்பவர்கள் தங்கள் பதில்களுக்கு எந்தவிதமான ஆவண ஆதாரங்களையும் சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை. அவர்கள் தங்களுக்குத் தெரிந்த உண்மையான தகவல்களைத் தெரிவித்தால் போதுமானது. மக்கள் தொகைபதிலளிப்பவர் அளிக்கும் தகவல்களின் அடிப்படையிலேயே விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும் என்று கணக்கெடுப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. புது டெல்லி மாநகராட்சி பகுதிகளில் ஏப்ரல் 1-ஆம் தேதி சுய விபரப் பதிவேற்றம் தொடங்குகிறது. இதில் ஒரு பிரத்யேக இணையதளம் வாயிலாக பொதுமக்கள் தங்களைப் பற்றிய தகவல்களைத் தாங்களாகவே பதிவு செய்துகொள்ளலாம்.இந்தச் சுய-விவரப் பதிவேற்ற வசதி, ஆங்கிலம் மற்றும் 15 இந்திய மொழிகளில் இருக்கும். குடும்பத் தலைவர் சுயவிபர தகவல்களைப் பதிவேற்றம் செய்யப்படலாம். குடும்பத் தலைவர் ஆண் உறுப்பினராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இது தவிர ஒடிபி அடிப்படையிலான மொபைல் சரிபார்ப்பை முடித்த பிறகு, குடும்பத்தைச் சேர்ந்த பொறுப்பான குடும்ப உறுப்பினர் எவரும் இதனைச் செய்யலாம்.கால்பந்து மைதானத்தை விடச் சிறியது; ஆனால் மக்கள் தொகை அதிகம் - உலகின் நெரிசலான தீவு பற்றி தெரியுமா?

vikatan
30 மார்.
3 நிமிடம் படிக்க
நான்காவது முறையாக கொளத்தூரில்... வேட்புமனு தாக்கல் செய்து, பிரசாரத்தைத் தொடங்கிய ஸ்டாலின்! - Album
இந்தியா

நான்காவது முறையாக கொளத்தூரில்... வேட்புமனு தாக்கல் செய்து, பிரசாரத்தைத் தொடங்கிய ஸ்டாலின்! - Album

ஸ்டாலின்ஸ்டாலின்ஸ்டாலின்ஸ்டாலின்ஸ்டாலின்ஸ்டாலின்ஸ்டாலின்

vikatan
30 மார்.
3 நிமிடம் படிக்க
`முதல்வர் தொகுதியில் பிரசாரம் செய்யக் கூடாதா? அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் ஆதரவா?' - தவெக கேள்வி
இந்தியா

`முதல்வர் தொகுதியில் பிரசாரம் செய்யக் கூடாதா? அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் ஆதரவா?' - தவெக கேள்வி

கொளத்தூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் பிரசாரம் செய்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து அந்தக் கட்சியின் இணைப் பொதுச் செயலாளர் CTR. நிர்மல் குமார் பதிவிட்டுள்ளார்."தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களின் தேர்தல் பிரசாரத்திற்கு மைக் மற்றும் பாக்ஸ் ஸ்பீக்கர்களை பயன்படுத்தத் தடை விதிப்பதா?முதலமைச்சரின் தொகுதி என்றால் மற்றக் கட்சியினர் பிரசாரம் செய்யக் கூடாதா?திமுக தலைவர் ரோட் ஷோ நடத்தலாம், ஆனால் தமிழக வெற்றிக் கழகத் தலைவர், மைக்குடன் பிரசாரம் செய்ய அனுமதி மறுப்பதா?அதிகாரிகள் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதை தேர்தல் ஆணையம் ஆதரிக்கிறதா?பிரசாரத்தில் விஜய்"அனுபவம் பார்த்து சீட் கொடுத்த காலம் போச்சு" - கொந்தளிக்கும் கரூர் திமுக; யார் இந்த ஆசி.தியாகராஜன்?கழகத் தலைவரின் பிரசாரத்திற்கு முறையாக அனுமதி பெற்றும், இன்று மதியம், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்கள் அங்கு சென்றடையும் வரைக்கும், மாலை முதலமைச்சர் வருகிறார் என்று காரணம் கூறி பிரசார இடத்தில் இரும்பாலான தடுப்புகள் கொண்டு (Barricades) பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய அனுமதிக்கவில்லை.தேர்தல் ஆணையத்திடம் முறையாக அனுமதி பெற்று நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தால், முதலமைச்சர் வருகிறார் என்று கூறி பிரசாரத்திற்கு தடை விதிப்பது கண்டனத்திற்குரியது.திமுகவின் கைப்பாவையாக அதிகாரிகள் செயல்படுகிறார்கள்.தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் போது, அதிகாரிகள் பாரபட்சமாக நடந்துகொள்வது ஏன்?ஒருதலைபட்சமாக செயல்படும் அதிகாரிகள் மீது தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.முறையாக அனுமதி பெற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களின் கொளத்தூர் தொகுதி பிரசாரத்திற்கு, கடுமையாகப் போராடி, அதிகாரிகளிடம் பலகட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்திய பிறகே மைக், ஸ்பீக்கர் பாக்ஸ் உள்ளிட்டவைகளை பயன்படுத்த அனுமதி பெறுவதுதான் முறையா?ஒருதலைபட்சமாக செயல்படும் அதிகாரிகள் மீது தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்".புகார் கடிதம்தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களின் தேர்தல் பிரசாரத்திற்கு மைக் மற்றும் பாக்ஸ் ஸ்பீக்கர்களை பயன்படுத்தத் தடை விதிப்பதா?முதலமைச்சரின் தொகுதி என்றால் மற்றக் கட்சியினர் பிரசாரம் செய்யக் கூடாதா?திமுக தலைவர் ரோட் ஷோ நடத்தலாம், ஆனால் தமிழக வெற்றிக் கழகத் தலைவர், மைக்குடன்…— CTR.Nirmalkumar (@CTR_Nirmalkumar) March 30, 2026

vikatan
30 மார்.
3 நிமிடம் படிக்க
'பெரம்பூரில் வேட்புமனுவை தாக்கல் செய்த விஜய்!' - எதிர்த்து நிற்கும் வேட்பாளர்கள் யார்? முழு விவரம்
இந்தியா

'பெரம்பூரில் வேட்புமனுவை தாக்கல் செய்த விஜய்!' - எதிர்த்து நிற்கும் வேட்பாளர்கள் யார்? முழு விவரம்

தவெக தலைவர் விஜய் பெரம்பூரிலும் திருச்சி கிழக்கிலும் போட்டியிடப் போவதாக நேற்று அறிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து பெரம்பூர் தொகுதியில் விஜய் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.விஜய்தமிழகத்தில் 234 தொகுதிகளுக்குமான சட்டமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 23 ஆம் தேதி நடக்கவிருக்கிறது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (மார்ச் 30) தொடங்கி ஏப்ரல் 6 வரை நடக்கிறது. அரசு விடுமுறைகளையெல்லாம் தவிர்த்து 4 நாட்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய முடியும்.இதனால் வேட்புமனு தாக்கலுக்கான முதல் நாளான இன்றே பலரும் தங்களின் வேட்புமனுவை தாக்கல் செய்ய திட்டமிட்டிருந்தனர். முதல்வர் ஸ்டாலினும் இன்று கொளத்தூர் தொகுதியில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அந்தவகையில் தவெக தலைவர் விஜய்யும் அவர் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்திருக்கிறார்.விஜய்பெரம்பூரில் உள்ள அம்பேத்கர் கல்லூரியில் வேட்புமனுவை தாக்கல் செய்த விஜய், நேராக தனது தொகுதியிலிருந்தே பிரசாரத்தை தொடங்குகிறார்.பெரம்பூர் விவேகானந்தர் சாலை, கொளத்தூர், வில்லிவாக்கம் என மூன்று தொகுதிகளில் பிரசாரம் செய்யவிருக்கிறார்.பெரம்பூரில் விஜய்யை எதிர்த்து திமுக சார்பில் ஆர்.டி.சேகர், அதிமுக கூட்டணியில் பாமக சார்பில் திலகபாமா, நாதக சார்பில் வெற்றி தமிழன் ஆகியோர் களமிறங்குகின்றனர்.

vikatan
30 மார்.
3 நிமிடம் படிக்க
`தூக்கு தண்டனையா... ஆயுள் தண்டனையா என முடிவு செய்ய வேண்டும்'- சாத்தான்குளம் வழக்கில் நீதிபதி காட்டம்
இந்தியா

`தூக்கு தண்டனையா... ஆயுள் தண்டனையா என முடிவு செய்ய வேண்டும்'- சாத்தான்குளம் வழக்கில் நீதிபதி காட்டம்

சாத்தன்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு, நீதிபதி முத்துகுமரன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. கடந்த 23 ஆம் தேதி 9 பேரும் குற்றவாளிகள் என நீதிபதி தெரிவித்ததோடு, அவர்களின் மனநிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டு, தீர்ப்பு விவரங்கள் மார்ச் 30-ம் தேதி வெளியாகும் எனக் கூறியிருந்தார்.இந்நிலையில் இன்று மத்திய, மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்யவில்லை. இதனால் கோபமடைந்த நீதிபதி, "மத்திய, மாநில அரசின் அறிக்கை என்ன ஆனது. சாத்தன்குளம் வழக்கு மிக முக்கியமானது. எந்தக் கருத்தாக இருந்தாலும் பதில் மனுவாகப் பதிவுசெய்யுங்கள். சாத்தன்குளம் வழக்கு மிக முக்கியமானது" என்றார்.சாத்தன்குளம் வழக்குஅதற்கு, '2 நாள்கள் அவகாசம் கொடுங்கள்' - சிபிஐ தரப்பில் தெரிவிக்கபட்டது.இதைக் கேட்ட நீதிபதி காட்டமான தொனியில், ``கடந்த 23-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்யக் கூறியும், ஏன் அறிக்கை தாக்கல் செய்யபடவில்லை. 9 பேருக்கு தூக்குத் தண்டனையா ஆயுள் தண்டனையா என நான் முடிவெடுக்க வேண்டும்... அதற்காகவே அறிக்கை கேட்கிறேன். என்ன தண்டனை கொடுக்க வேண்டும் என்பதற்காகவே அறிக்கை கேட்கிறேன்" எனச் சொன்னதோடு, வழக்கு ஏப்ரல் 2-ஆம் தேதி ஒத்திவைத்தார். இதைத் தொடர்ந்து சாத்தன்குளம் கொலை வழக்கில் தொடர்புடைய ஒன்பது குற்றவாளிகளும் நீதிபதி முன் ஆஜரானார்கள். மாலை 4.30 மணிக்குள் அறிக்கையை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார் நீதிபதி.

vikatan
30 மார்.
3 நிமிடம் படிக்க
நயினார், சண்முகம், பொன்ராஜ்: `இந்த ஆணின் மொழி...' - சொற்களில் ஒளிந்திருக்கும் பாலின அரசியல்! | ஓவியா
இந்தியா

நயினார், சண்முகம், பொன்ராஜ்: `இந்த ஆணின் மொழி...' - சொற்களில் ஒளிந்திருக்கும் பாலின அரசியல்! | ஓவியா

(பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடனின் கருத்துக்கள் அல்ல - ஆசிரியர்)களம்: சொற்களின் அரசியல்ஓவியா, பெண்ணிய செயற்பாட்டாளர்அண்மைக் காலமாக மேடைப் பேச்சுகள் மீதும் பொதுவான உரையாடல்களில் பயன்படுத்தப்படும் சொற்கள் மீதான கண்டனங்களும், அதன் மீதான தொடர் அரசியலும் முகாமையாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதில் பல்வேறு கோணங்கள் அடங்கியிருக்கின்றன. இந்த உரைகளைத் தாண்டி அவற்றிற்குள் இருக்கும் அரசியலையும் இணைத்து பார்ப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும். மனித இன தோற்றுவாய்க்கும் அதன் தொடர் பரிணாமத்திற்கும் தலைமை ஏற்று வழி நடத்திய பெண்ணினத்தை ஆண்கள் தங்களுடைய பாலின்ப தூண்டலுக்கான பொருட்களாகவும் தங்கள் பிறவிப் பணியாட்களாகவும் சுருக்கி விட்ட நிகழ்வுக்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் வரலாறு இருக்கிறது. அந்த வரலாற்றின் குழந்தையாக பிறந்து வளர்ந்து நிலை பெற்றிருக்கும் மொழி தான் இன்று வரை சமூகத்தின் மொழியாக நிலவி வருகிறது. வீட்டில் ஒரு மூலையில் அடுப்படியிலும், படுக்கையறையிலும் கொல்லைப் பக்கங்களிலும் பெண்களை உட்கார வைத்துவிட்டு வெளி உலகத்திற்கு வருகின்ற ஆண்கள் தங்களுடைய உரையாடல்களில் சுவை கூட்டும் பொருட்டாகவே பெண்களைப் பொதுவெளியில் சுட்டிப் பேசி வந்திருக்கிறார்கள். (அன்று அவ்வாறு ஆண்கள் பேசி மகிழ்ந்து கொண்ட பொதுவெளிகளில் பெண்களே இல்லை. அவ்விதமே இவர்கள் படைத்து வைத்திருந்த இலக்கியங்களை பெண்கள் வாசிக்கவும் அனுமதிக்கப்படவில்லை). ஓர் ஆணின் மொழியில் பெண்கள் இரண்டு இடங்களில்தான் அல்லது இரண்டு விதங்களில்தான் இடம் பெறுகிறார்கள். ஒன்று அவையைக் கவர்ந்து குபீர் சிரிப்பலையைத் தோற்றுவிக்கும் நகைச்சுவை கருப்பொருட்களாக... மற்றொன்று ஓர் ஆண் தனது ஆண்மையின் பெருமையிழந்து பெண்களைப் போல் அதாவது பெட்டைகளாக மாறி விடக் கூடாது என ஆண்மையின் தலைமையை வலியுறுத்தி விதந்தோதும் விதமாக. இந்த சாயல் படியாத ஆணின் உரை கிட்டத் தட்ட சாத்தியமற்ற ஒன்றாகவே வரலாறு நெடுகிலும் காணக் கிடைக்கிறது. மனித இனம் தவிர்க்கவே முடியாத ஆளுமைத் தலைவர்கள் அனைவர் உரைகளிலிருந்துமே இதற்கான உதாரணங்களை நாம் காட்ட இயலும். “கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்வேட்ப மொழிவதாம் சொல்.”என்ற வள்ளுவரின் வாக்கை, அதாவது அனைவரும் கேட்க விரும்பும் மொழி என்பதே பெண்ணை இழிவுபடுத்தி ஏளனப்படுத்தி பேசுவதுதான் என்றுதான் ஆண் மக்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள். 18ம் நூற்றாண்டு தொடங்கி 19ம் நூற்றாண்டில் தொடர்ந்து கருக் கொண்டு உருவம் கொண்டு பெண்ணியச் சிந்தனைகளின் விசாரணைகள் இந்த மொழி மீதான திறனாய்வை முன்னிறுத்தின. பேசுகின்ற மொழியே பெண்களை இழிவுபடுத்துவதாக இருக்குமேயானால் பெண்ணியச் சிந்தனைகளை மக்கள் பொதுப்புத்திக்கு எடுத்துச் செல்வது எவ்வளவு சவால் மிக்க பணியாக இருக்குமென்பதை பெண்ணியச் சிந்தனையாளர்கள் ஆழமாக உணர்ந்தார்கள். உலகின் ஈடு இணையற்ற பெண்விடுதலைச் சிந்தனையாளர் பெரியார் விதவை, விபச்சாரி, கைம்பெண் , மலடி ….போன்ற வார்த்தைகளுக்கு இணையான ஆண்பாற் சொற்கள் ஏன் இல்லை என்கின்ற கேள்வியை இந்தத் தமிழ்நாட்டின் பட்டி தொட்டி யெங்கும் நடைபெற்ற ஆயிரக்கணக்கான கூட்டங்களில் எழுப்பினார். பெரியார்ஆனால் இன்று வரை அரசியல் உரைகள் மட்டுமல்ல நீதிமன்ற தீர்ப்புகள் , அரசு அலுவலக கோப்புகள் , அரசு அலுவலகக் கூட்டங்கள், கார்ப்பரேட் போர்டு ரூம் அறைக் கூட்டங்கள் , கதா காலேட்பங்கள், புராண உரைகள், தன்னார்வ தன்னெழுச்சி போதனைகள் இவை அனைத்திலும் நம்மால் இந்த ஆணின் மொழியைக் காண இயலும். முதல் தலைமுறைப் பட்டதாரியாக, முதல் தலைமுறை படிப்பாளியாக, முதல் தலைமுறை பணிக்கு செல்பவராக, முதல் தலைமுறை அரசியல்வாதியாக வெளி வருகின்ற ஒவ்வொரு பெண்ணும் நேற்று மட்டுமல்ல இன்றும் கூட சந்திக்க வேண்டிய முதல் சவால் என்று ஒன்றை சொல்ல வேண்டும் என்று சொன்னால் அது இந்த ஆணின் மொழி தான்.இந்த வரலாற்றுப் புரிதலோடு நாம் இன்றைய காட்சிகளுக்குள் வருவோம். எப்படி அறிவியலறிஞர்கள் கண்டுபிடிக்கும் அணுகுண்டுகளை பயன்படுத்துகிறவர்களாக அரசியல்வாதிகள் இருக்கிறார்களோ அப்படித்தான் பல தியாகங்களுடன் வென்றெடுக்கப் படும் உரிமை முழக்கங்களை அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்திக் கொள்வோரும் அரசியல் வாதிகளாகதான் இருக்கிறார்கள். இதற்கு மிகச் சிறந்த உதாரணம்தான் விஜய் போன்ற ஒரு மசாலாப் பட வெற்றி நாயக நடிகர் பெண்ணினத்தை அவமானப் படுத்தி விட்டார்கள் என்று ஒரு மனுவோடு டிஜிபி அலுவலகம் செல்லும் காட்சி இப்போது அரங்கேறியிருப்பது. கடந்த ஓராண்டில் பெண்களுக்கு விரோதமாகப் பேசி விட்டார்கள் என்று குற்றம் சாட்டப்பட்ட , தண்டிக்கப் பட்ட பேச்சாளர்கள், சம்பவங்கள் நிறைய இருக்கின்றன. அத்தனையும் விரிவாகப் பேசப்படத்தான் வேண்டும். இந்தக் கட்டுரையில் சில நாட்கள் இடைவெளியில் நடைபெற்றிருக்கிற மூன்று நிகழ்வுகளை மட்டும் எடுத்துக் கொள்வோம். நயினார் நாகேந்திரன் - பாரதிய ஜனதா கட்சியின் தற்போதைய மாநிலத் தலைவர் . அவர் நடிகரும் த.வெ.க கட்சி தலைவருமான விஜய் பற்றி பேசுகையில் விஜய் முதலில் வீட்டை விட்டு வெளியே வரவேண்டும், முதலில் நடிகையை(பெயர் தவிர்க்கப்படுகிறது) விட்டு அவர் வெளியே வர வேண்டும். அப்படி வெளியே வந்தால் தான் நாட்டில் என்ன நடக்கின்றது என்பது தெரியும். இந்த பேச்சு பெண்களை இழிவுபடுத்துகிறது என்றும் விஜய் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய விமர்சனம் என்றும் கூறி கடுமையாக எதிர்க்கப் பட்டது. மேலும் இவர்களின் அரசியலுக்கே தொடர்பில்லாத நடிகை பற்றி அவர் பேசுவது தவறு என்பதும் முன்வைக்கப் பட்டது. உண்மையில் சமூக வலைத்தளங்களில் இப்பிரச்சினை அக்கு வேறு ஆணி வேறாக அலசப் பட்டுக் கொண்டுதானிருந்தது. ஆனால் கவனிக்கத் தக்க விசயம் என்னவென்றால் இங்கு நயினார் நாகேந்திரன் அவர்கள் ஒரு கட்சியின் மாநிலத் தலைவர் ஆவார். அதுவும் ஆளுங் கட்சி. ஆனால் நயினார் நாகேந்திரன் மட்டுமல்ல எந்தத் தரப்பு என்கின்ற பாகுபாடுகள் இல்லாமல் பொதுவாழ்விலிருக்கும் எந்தவொரு மனிதராக இருந்தாலும் அவர்தம் தனி வாழ்க்கை பற்றிய விமர்சனத்தை இங்கு எல்லோருமே மேற்கொண்டுதான் வருகிறார்கள். மக்களாலும் அது தவறு என்று உணரப்படுவதோ உணர்த்தப் படுவதோ இல்லை. ஆனால் இந்த பேச்சை அந்த நடிகை உடனடியாக எதிர்த்து ஒரு வழக்கறிஞர் மூலமாக அறிக்கை அளித்தார். நயினார் நாகேந்திரன் நாகேந்திரனின் கருத்து “அவமானகரமானதும் பொருத்தமற்றதும்” என்று அவர் கண்டித்ததுடன் அப்படியான கருத்து ஒரு உயர்நிலை அரசியல் தலைவரிடமிருந்து எதிர்பார்க்கவில்லை என்றும் குறிப்பிட்டார். அவர் தன்னுடைய பெயரை அரசியல் விவாதத்தில் இழுத்துச் சேர்க்காமல் என் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட மரியாதை பாதுகாக்கப்படவேண்டும் எனவும்கூறினார். பொதுவெளியில் தனது தொழிலான நடிப்பு மட்டுமே தனது அடையாளமாக இருக்க முடியும் என்று அவர் தெரிவித்திருந்தார்.உண்மையில் அந்த நடிகையின் இச்செயற்பாடு மிகுந்த வரவேற்புக்குரியது. இவருடைய உறுதியான இச்செயல் வேறு வழியின்றி நயினார் நாகேந்திரனை மன்னிப்பு கேட்க வைத்தது. தமிழக முதல்வர் இந்நாட்டின் மாணவச் செல்வங்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தார். `உங்கள் கனவை என்னிடம் சொல்லுங்கள். நான் உங்கள் தகப்பனாக நின்று அவற்றை நிறைவேற்றி தருவேன்' என்பதாக. சாதிக்க விரும்பும் இளைஞர்களுக்கான ஒரு அழைப்பு அது. இதற்கு அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான சி. வி. சண்முகம் அவர்கள் முதல்வரைப் பார்த்து ஒரு மகத்தான கேள்வியைக் கேட்டார். அது மிகக் கேவலமானது, என்னுடைய கனவில் நடிகை (பெயர் தவிர்க்கப்படுகிறது) வேண்டும் என்று நான் நினைத்தால் நீங்கள் அதற்கு ஏற்பாடு செய்வீர்களா என்று அவர் கேட்டார். வளர்ந்து வருகின்ற பெண்ணுரிமை சமூகத்தில் மட்டுமல்ல இந்த பெண்ணுரிமை சிந்தனைகளை மலராது இருந்த ஒரு சமூகத்தில் கூட இந்த பேச்சை யாரும் ஓர் நாகரீகமான பேச்சாகக் கருத முடியாது. சி.வி.சண்முகம் அவருடைய நோக்கம் திமுக அரசைத் தாக்குவது… முதல்வரைத் தாக்கி பேசுவது. ஆனால் அவர் அவமானப்படுத்திய பெண் இவருடைய கேள்விக்கும் அல்லது இந்த இவர்களுடைய இந்த அரசியலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லாத கலை துறையைச் சார்ந்த ஒரு நபர். அவருடைய பெயரை பயன்படுத்தி இப்படி ஒரு கேள்வியை கேட்க சமூகத்திற்கு எந்த விதமான உரிமையும் கிடையாது. உண்மையில் அந்த நடிகை அவர்கள் சட்டரீதியாக நடவடிக்கை எடுத்திருந்தால் மிகக் கடுமையான தண்டனையை அவர் அடைந்திருப்பார். எனினும் அவர் வருத்தம் தெரிவித்ததுடன் அப்பிரச்சினைக்கு ஒரு முற்றுப்புள்ளி விழுந்தது.அண்மையிலே முன்னாள் குடியரசுத் தலைவர், அறிவியல் அறிஞர் அப்துல் கலாம் அவர்களுடைய உதவியாளராகப் பணிபுரிந்து அதன் வழியாக சமூகப் பொதுநீரோட்டத்திற்கு அறிமுகமாகி இன்றைய தினம் சமூகப் பிரச்சனைகள் குறித்த அரசியல் குறித்த கருத்து கூறுகின்ற ஒரு கருத்துரையாளராக தன்னை வளர்த்துக் கொண்டிருப்பவர் அறிவியலறிஞர் பொன்ராஜ் அவர்கள். பொதுவாக தொலைக்காட்சி விவாதங்களில் பரபரப்பாக பேசுவது, பிறரை சீண்டுவது போல் பேசுவது , வம்புக்கிழுத்து பேசுவது, அவதூறாக பேசுவது இது போன்று பல காட்சிகளை நாம் அன்றாடம் பார்த்து வருகின்றோம். இதில் நண்பர் பொன்ராஜ் அவர்களைப் பொறுத்தவரை தனது கருத்துக்களை தான் அறிந்தவற்றை தர்க்க ரீதியாக நாகரீகமான மொழிநடையில் எடுத்து வைக்கின்ற வரிசையில் வருபவர். அவருடைய கருத்துக்கள் ஒருவருக்கு ஏற்புடையதாக இருக்கலாம். ஏற்புடையதாக இல்லாமலும் இருக்கலாம். ஆனால் அவர் தனது கருத்துக்களை மிக நாகரீகமான மொழியிலே அவையை மதித்து உரையாடக் கூடியவர் என்பதில் இரண்டு கருத்துக்கள் இருக்க முடியாது. இன்னும் சொல்லப் போனால் அவர் தீவிரமான அரசியல் நிலைப்பாடு கொண்டவருமில்லை. எனவே கடுமையான கருத்துக்கள் அவரிடமிருந்து வராது. இவ்வாறிருக்க இப்போது அவர் ஒரு சிக்கலில் மாட்டிக் கொண்டு விட்டார். தவெக கட்சியை பற்றி பேசுகின்ற பொழுது அக்கட்சியினரை அதில் குறிப்பாக அக்கட்சிப் பெண்களை விபச்சாரிகள் கூட்டம் என்று கூறினார். பொன்ராஜ் ஒரு கட்சியை ஏற்றுக் கொள்ளாத எவரும் அக்கட்சியைப் பின்பற்றுகிறவர்களையும் சேர்த்து விமர்சிக்கதான் செய்வார்கள். ஆனால் அப்பெண்களை விபசாரிகள் என்று சொன்னதுதான் இப்போது நம்மை இது குறித்து பேச வேண்டிய நிலையை ஏற்படுத்தியிருக்கிறது.முதலில் விபச்சாரி என்கின்ற சொல் தடை செய்யப்பட வேண்டிய சொல் என்பதனை நாம் இங்கு அழுத்தமாகக் குறிப்பிட வேண்டும், எப்படி சாதியைச் சொல்லி இழிவு படுத்துவது குற்றம் என்று இன்று எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறதோ அதுபோல்தான் பெண்களை விபச்சாரிகள் என்று சொல்லி இழிவுபடுத்துவது தடை செய்யப்பட வேண்டிய ஒரு செயலாகும், எனவே இந்த பிரச்சனைக்குள் ஆழமாக உள்ளே போவதற்கு முன்னால் முதல் நிலையிலேயே இந்தச் சொல்லை நண்பர் பொன்ராஜ் அவர்கள் பயன்படுத்தியிருக்கக் கூடாது என்பதனை அவருக்கு நாம் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறோம். ஒரு அறிவியலறிஞராக தொடங்கி சமூகக் கருத்தியலாளராக தன்னை வளர்த்துக் கொண்டிருக்கும் திரு.பொன்ராஜ் அவர்கள் மனித உரிமைகள், மனித குல விடுதலை பெண்ணுரிமை ஆகிய தளங்களில் வரலாற்று ரீதியாக நிகழ்ந்து கொண்டிருப்பவற்றை உள்வாங்கி இந்த இடத்தில் விபச்சாரி என்கிற சொல்லை பயன்படுத்தியது ஏன் தவறு என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஏன் இதை சொல்லுகிறேன் என்றால் அந்த வார்த்தையை பின் வாங்கிக் கொள்ள அவர் கடுமையாக மறுப்பு தெரிவித்தார். அவருடைய கோபம் வேறு. அவர் குறிப்பிடும் விசயங்களுக்கு நான் வருகிறேன். ஆனால் அதற்கு முன்னதாக சமூகக் கருத்துரையாளர்களாக, அரசியல்வாதிகளாக, பொது மனிதர்களாக தங்களை முன்னிறுத்தக்கூடிய யாரும் இச்சொல்லை பயன்படுத்துவது தவறுதான் என்பதனை நண்பர் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன் அடுத்தபடியாக நயினார் நாகேந்திரனாக இருக்கட்டும், சிவி சண்முகமாக இருக்கட்டும், அவர்கள் உரை வெளிப்படையாக பெண்களை ஒரு போகப் பொருளாக பார்க்கின்ற அவர்களுடைய சொந்த மதிப்பீட்டை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. மேலும் அக்கூற்றுக்கள் நான் இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் கூறியுள்ள ஆண்களின் மனநிலையை (பெண்களைப் பற்றி பேசி கூட்டத்தை உற்சாகப்படுத்துவது. அதாவது தங்கள் உரைகளின் வெற்றிக்காக பாலியல் இன்பப் பொருட்களாகப் பெண்ணை நினைவூட்டுவது) வெளிப்படுத்துபவை. ஆனால் நண்பர் பொன்ராஜ் முன்னவர்கள் போல் எள்ளல் ஏளனத்திலிருந்து இக்கூற்றுக்களைப் பேசவில்லை. மாறாக அவருடைய அரசியல் நிலைப்பாடு சார்ந்து எழும் கோபத்திலிருந்து பேசுகிறார். அதனாலேயே அவர் மன்னிப்பு கேட்கவும் முதலில் மறுத்தார். பிறகு வருத்தம் தெரிவித்த நிலையிலும் கூட தன் கோபத்தை மீண்டும் நியாயப்படுத்தியே கருத்து கூறினார். இப்போது நாம் அவரின் அந்த கோபத்திற்குள் வருவோம். அவர் குறிப்பிட்டது விஜய் கூறுவது போல் ஒட்டு மொத்த பெண் சமுதாயத்தைப் பற்றியல்ல. விஜய் ரசிகைகள் அல்லது தவெக தொண்டர்கள் என்று தங்களை பொதுவெளியில் அறிமுகப்படுத்திக் கொண்டு பேசுகின்ற பெண்கள் என்ன பேசினார்கள் என்பதிலிருந்து இதனைத் தொடங்க வேண்டும். நான் காண நேர்ந்த சில உரைகளைக் குறிப்பிடுகிறேன்.தவெக விஜய் கரூர் தவெக கூட்ட நெரிசலில் சிக்கி தனது குழந்தையை பறிகொடுத்த பெண் கூறினார். எங்கள் பையன் விஜயை பார்க்கும் வாய்ப்பை எங்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்து விட்டு சென்றிருக்கிறான்.ஒரு அரசுப் பள்ளி தலைமையாசிரியர் தவெக மேடையில் திரையிசப் பாடலுக்குக் குத்தாட்டம் ஆடுகிறார்வாழ்க்கை இலட்சியம் விஜயைப் பார்க்கணும் நான் செத்தா அவர் புகைப்படத்துடன்தான் புதைக்கனும் எங்க அண்ணன் எத்தனை பொண்ணுகளை வேண்டுமானாலும் வைச்சுக்குவாரு குப்பை பொறுக்குறவனே நாலு பொண்டாட்டி வைச்சுக்கும் போது எங்க அண்ணன் வைச்சுகிட்டா என்ன தப்பு……விஜய் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம், பெண்களோடு அவர் ஏற்படுத்திக் கொள்கின்ற உறவு என்பது இந்த சமூகத்தில் கேள்விகளுக்கு அப்பாற்பட்டது. ஒரு ராஜாவுக்கு அந்தப்புரத்தில் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் வைத்துக் கொள்வதற்கு இந்த சமூகம் எந்த அடிப்படையில் அனுமதி வழங்கியதோ கிட்டத்தட்ட அதே மனநிலையில் இருந்து வரக்கூடிய வார்த்தைகள். இந்த ரீதியில் பல வீடியோக்கள் சமுக வலைத்தளத்தில் உலா வந்தன. உண்மையில் அரசியல் உரையாடல்களுக்கு மத்தியில் வீசியெறியப்பட்ட கற்களாய் வந்து விழுந்த இத்தகைய காட்சிகளும் குரல்களும் அனைவருக்கும் ஒரு பெரிய திகைப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தின. ஏதோ அந்த காலத்து இராஜ பவனிகளும் அவரைப் பார்க்க ஏங்கும் கன்னியர் கூட்டமும் ஓர் அரசனுக்கு எண்ண முடியாத அளவில் குவிக்கப் பட்டிருந்த ஆசை நாயகிகள் கூட்டமும் கொண்ட சமுதாய அமைப்பை இந்தக் குரல்கள் மீட்டெழுதுவது போலிருக்கிறது. அனைத்து அடிமைத் தனங்களும் அடிமைகளின் உழைப்பையும் உணர்வையும் பயன்படுத்திதான் எழுதப்படுகிறது. இன்னொரு கோணத்தில் உண்மையில் விஜய் பெண்களை அழைப்பது பற்றியோ அல்லது பல பெண்கள் அவர் மீது பெருவிருப்பம் கொண்டு அவரோடு போவது பற்றியோ கூட நமக்கு எந்த பிரச்சனையும் இல்லை. நமக்கு மட்டுமல்ல வேறு யாருக்கும் எந்த பிரச்சினையும் இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. ஒரு சினிமா நடிகர் மீதான சினிமா ரசிகைகளின் உரையாடலாக இருந்திருக்குமேயானால் நமக்கு பிரச்சனை இல்லை. ஆனால் இங்கு இந்த உரையாடல்கள் ஒரு அரசியல் களத்தில் நிகழ்த்தப்படுகின்றன. ஒரு அரசியல் மொழியாக முன்வைக்கப்படுகின்றன. விபச்சாரம் என்கின்ற சொல் குறிக்கின்ற சமூக நிலைகள் என்ன என்பதையும் நாம் சிந்திக்க வேண்டாமா? விபச்சாரம் என்கின்ற சொல்லை ஒழிப்பதில் இருக்கக்கூடிய அக்கறை விபச்சார தன்மையை ஒழிக்க வேண்டும் என்பதிலும் இருக்க வேண்டும் அல்லவா? ஒரு ஆணின் போகப் பொருளாக ஆணை மையப்படுத்தி வாழ்பவளாக, ஆண்களுக்கு அவர்களுடைய இன்பத்திற்கும் பயன்பாட்டுக்கும் மட்டுமே தான் பிறந்திருப்பதாகப் பெண்களைக் கருத வைப்பதுதான் பெண்ணடிமைத்தனத்தின் ஆணிவேர். விபச்சாரமாக இருந்தாலும் சரி விதவைத்தன்மையாக இருந்தாலும் சரி ஏன் பத்தினித் தன்மையாக இருந்தாலும் சரி இந்த நிலைகளில்தான் வேர் பிடித்து நிற்கிறது. சமூகத்தில் அந்த நிலைகளின் வேர்களை அறிந்து கண்டிக்க வேண்டிய கடமை உண்மையான சிந்தனையாளர்களுக்கு உண்மையான சமூக செயற்பாட்டாதவர்களுக்குக் கண்டிப்பாக இருக்கிறது. பெண்ணிய செயற்பாட்டாளர் ஓவியாஆனால் பொன்ராஜ் மீது கண்டனைக் குரல்களை எழுப்ப பாய்ந்து வந்த சமுக வலைத்தளப் புரட்சியாளர்களில் எத்தனை பேர் இந்தப் பெண்களின் இந்தத் திடீர் அரசியல் பிரவேசம் குறித்தும் அவை வெளிப்படுத்தப் பட்ட தன்மைகள் மற்றும் அவற்றின் அரசியல் கூறுகள் குறித்தும் கேள்ளவிகள் எழுப்பினார்கள்……? எந்தவொரு வார்த்தையின் பொருளும் அதனைப் பிறப்பித்த சூழல் சார்ந்ததில்லையா? பொதுத்தளத்தில் இந்தப் பெண்களுடைய இவர்கள் தெரிவிக்கும் கருத்துக்கள், அதை தெரிவிக்கும் போது அவர்கள் காட்டுகின்ற அவர்களுடைய உடல் மொழிகள்... இவையெல்லாம் இதுவரை தமிழகத்தினுடைய அரசியல் பரப்பில் பார்க்காத காட்சிகள் என்கின்ற ஒரு விஷயத்தை மவுனமாக யாரேனும் கடந்து போக முடியுமா என்று கேள்வி கேட்டுப் பாருங்கள். `இந்த கேள்வியை நான் அவரவர் மனசாட்சிக்கு விட்டு விடுகிறேன்.' - ஓவியா, பெண்ணிய செயற்பாட்டாளர்.

vikatan
30 மார்.
3 நிமிடம் படிக்க
பெரம்பூர்: "அவர்கள் காதிலேயே விசிலை ஊதுங்க; GEN Z கிட்ஸுக்கு ஒன்று சொல்லிக்கொள்கிறேன்" - தவெக விஜய்
இந்தியா

பெரம்பூர்: "அவர்கள் காதிலேயே விசிலை ஊதுங்க; GEN Z கிட்ஸுக்கு ஒன்று சொல்லிக்கொள்கிறேன்" - தவெக விஜய்

வேட்புமனுத் தாக்கல் செய்த பிறகு தவெக தலைவர் விஜய் தனது தொகுதியான பெரம்பூரில் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கி இருக்கிறார். பிரசாரத்தில் பேசிய விஜய், "தாய் வீட்டில் இருந்து பரப்புரையைத் தொடங்குகிறேன். எனக்கு பிடித்த இடம் பெரம்பூர். தமிழ்நாட்டை இந்த நிலைமைக்குக் கொண்டுவர தீயசக்தி திமுகதான் காரணம். டாஸ்மாக்கில் மட்டுமே ரூ. 1000 கோடி ஊழல் செய்திருக்கிறார்கள். பெண்கள் பாதுகாப்பு இல்லாத போதைப்பொருள் அதிகமாக இருக்கும் தமிழ்நாட்டைக் காப்பாற்றியாக வேண்டும். தவெக விஜய்இது நாடா? இல்ல காடா? போலீஸ் என்ற ஒன்று இங்கு இருக்கிறதா? இல்லையா? உங்களுக்குப் பாதுகாப்பு கொடுக்காத ஸ்டாலின் அரசைத் தூக்கி வீசிடுவோமா? பல இடங்களில் அடிப்படை வசதி கூட இல்ல. தீய சக்தி திமுக ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு உள்ளதா? ஸ்டாலின் சாருக்கு மக்களைப் பற்றி கவலையே இல்லை. இந்த 5 வருடத்தில் குடும்பத்தோடு சேர்ந்து கொள்ளை அடிப்பதுதான் முக்கியம். 'நாங்க செய்ததெல்லாம் வேஸ்ட்டா கோபால்?' - நண்பரை இறக்கிய விஜய்; கொந்தளிக்கும் தூத்துக்குடி தவெக!வண்டி வண்டியாக வைத்து இருக்கும் பணத்தை என்ன செய்வது என்று தெரியாமல் இப்போது உங்களுக்குக் கொடுத்து எப்படியாவது ஜெயித்து விடலாம் என்று நினைக்கிறார்கள். நான் ஏற்கனவே சொன்ன மாதிரி அவர்கள் கொடுக்கும் பணத்தை வாங்கிக்கொண்டு அவர்கள் காதிலேயே விசிலை ஊதுங்கள். இந்த அரசுக்கு வேட்டு வைக்கணும் வைப்பீர்கள் தானே? GEN Z கிட்ஸ்க்கு ஒன்றே ஒன்று சொல்லிக்கொள்கிறேன்.தவெக விஜய்ஏப்ரல் 23 ஆம் தேதி காலையில் எழுந்து பக்காவாகக் கிளம்பி உங்கள் ஓட்டர் ஐடியை எடுத்துக்கொண்டு பூத்திற்குச் சென்று விசில் சின்னத்தில் ஓட்டு போடுங்கள். இது ஒரு தலைமுறைக்கான தேர்தல். எவ்வளவு பெரிய வசதியான வாழ்க்கை இருந்தலும் எல்லாவற்றையும் உதறி தள்ளிவிட்டு உங்களுக்காக மட்டுமே வந்திருக்கிறேன். எல்லா வலிகளையும் தாங்கிக்கொண்டு உங்களுக்காகவே மட்டுமே வந்திருக்கிறேன். உங்கள் பிள்ளையான எனக்கு ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்கள். நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம்!" என்று பேசியிருக்கிறார்.'பெரம்பூரில் வேட்புமனுவை தாக்கல் செய்த விஜய்!' - எதிர்த்து நிற்கும் வேட்பாளர்கள் யார்? முழு விவரம்

vikatan
30 மார்.
3 நிமிடம் படிக்க
"நரகத்திற்கு வரவேற்கிறோம்" - அமெரிக்காவை எச்சரிக்கும் ஈரான்; போர் முனையில் 2,500 கடற்படையினர்!
இந்தியா

"நரகத்திற்கு வரவேற்கிறோம்" - அமெரிக்காவை எச்சரிக்கும் ஈரான்; போர் முனையில் 2,500 கடற்படையினர்!

இஸ்ரேலும் - அமெரிக்காவும் கூட்டு சேர்ந்து ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28-ம் தேதி நடத்திய தாக்குதலில், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து தொடங்கிய இந்தப் போர் நாளுக்கு நாள் தீவிரமாகி வருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என சவூதி அரேபியா, துருக்கி, எகிப்து ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் பாகிஸ்தானில் சந்தித்துப் போரை நிறுத்தப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அதே வேளையில், மேற்கு ஆசியாவில் தரைவழித் தாக்குதலை நடத்த அமெரிக்கா திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியானது.யுஎஸ்எஸ் திரிபோலிஅதை உறுதிப்படுத்தும் விதமாக அமெரிக்காவின் பிரமாண்டமான 'யுஎஸ்எஸ் திரிபோலி' (USS Tripoli) போர்க்கப்பல் மேற்கு ஆசியப் பகுதிக்கு வந்தடைந்தது. அமெரிக்க மத்திய கட்டளை அமைப்பு இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. மறுபுறம், லெபனானின் தெற்குப் பகுதியில் தனது ஊடுருவலை விரிவாக்கவும், ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பைக் குறிவைக்கவும் இஸ்ரேல் திட்டமிட்டு வருகிறது.இந்த விவகாரம் தீவிரமான நிலையில், ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபாப், ``அமெரிக்கத் வீரர்கள் தரைவழியாக வருவதற்காக ஈரானியப் படைகள் காத்துக் கொண்டிருக்கின்றன. அவர்களைத் தீயிட்டுக் கொளுத்தவும், அவர்களது பிராந்தியக் கூட்டாளிகளை நிரந்தரமாகத் தண்டிக்கவும் நாங்கள் தயாராக உள்ளோம். எங்களது ஏவுகணைகள் தயார் நிலையில் உள்ளன. எங்களது உறுதியும் நம்பிக்கையும் அதிகரித்துள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.முகமது பாகர் கலிபாப்இதற்கிடையில் கடந்த சனிக்கிழமையன்று யேமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது, பாப் எல்-மண்டேப் ஜலசந்தி வழியாக நடக்கும் கடல்சார் வணிகத்திற்குப் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.மேலும், ஈரானின் 90 சதவீத எண்ணெய் ஏற்றுமதியைக் கையாளும் கார்க் தீவைக் (Kharg Island) கைப்பற்ற அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகின. இதற்குப் பதிலடியாக, ஈரானின் அரசு நாளிதழான 'தி டெஹ்ரான் டைம்ஸ்', தனது முதன்மைப் பக்கத்தில் "நரகத்திற்கு வரவேற்கிறோம்" எனத் தலைப்பிட்டு, "ஈரான் மண்ணில் கால் வைக்கும் அமெரிக்க வீரர்கள் சவப்பெட்டியில்தான் திரும்புவார்கள்" என உளவியல் ரீதியான எச்சரிக்கையை விடுத்துள்ளது.சனிக்கிழமையன்று சவூதி அரேபியாவிலுள்ள இளவரசர் சுல்தான் விமானத் தளம் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், அங்கு நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்காவின் அதிநவீன AWACS விமானம் சேதமடைந்தது. இது மேற்கு ஆசியாவில் அமெரிக்காவின் வான்வழி ஆதிக்கத்திற்குப் பலத்த அடியாகக் கருதப்படுகிறது. இப்போருக்காக அமெரிக்கத் பாதுகாப்புத் துறை, நாடாளுமன்றத்திடம் கூடுதலாக 200 பில்லியன் டாலர் நிதியைக் கோரியுள்ளது.!Iran: மேற்கு ஆசியாவிற்குள் நுழைந்த அமெரிக்கப் போர்க்கப்பல்; ஈரான் எல்லையில் பதற்றம்?

vikatan
30 மார்.
3 நிமிடம் படிக்க
வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாமக - செளமியா அன்புமணி எந்தத் தொகுதியில் நிற்கிறார்?
இந்தியா

வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாமக - செளமியா அன்புமணி எந்தத் தொகுதியில் நிற்கிறார்?

2026 ஆம் ஆண்டிற்கான சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. மே 4 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் நிலையில் வேட்பாளர் பட்டியல் மார்ச் 30-ஆம் தேதிக்குள் வேட்புமனு தாக்கல் செய்யவேண்டும். திமுக, அதிமுக போன்ற கட்சிகள் தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருக்கிறது. அன்புமணி ராமதாஸ்இந்நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவற்றில் 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 15 தொகுதிகளின் பட்டியலை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டிருக்கிறார். அதன்படி, * பெரம்பூர் – திலகபாமா * தர்மபுரி – சௌமியா அன்புமணி* விருத்தாசலம் – தமிழரசி ஆதிமூலம்* விக்கிரவாண்டி – மயிலம் சிவக்குமார்* சேலம் மேற்கு – மு.கார்த்தி * சேலம் வடக்கு - சதாசிவம்* பென்னாகரம் – பாடி வெ.செல்வம்* சோளிங்கர் – வழக்கறிஞர் க.சரவணன்* மயிலாடுதுறை – சித்தமல்லி ஏ.பழனிச்சாமி* உத்திரமேரூர் பெ.மகேஷ்குமார்அன்புமணி ராமதாஸ் * போளூர் – சி.ஆர்.பாஸ்கரன்* திருப்போரூர் – வழக்கறிஞர் கே.பாலு* ஜெயங்கொண்டம் – க.வைத்தி* ரிஷிவந்தியம் – அ.ப.செழியன்* காட்டுமன்னார்கோயில் – மருத்துவர் அன்பு.சோழன்

vikatan
30 மார்.
3 நிமிடம் படிக்க

அதிகம் படிக்கப்பட்டது

எங்கள் வாசகர்கள் பேசும் பிரபலமான கதைகள்