தமிழ் டைம்ஸ் logo
Youth Review: 'கலகல காதல்; குடும்ப எமோஷன்; ஆனாலும்...' - எப்படி இருக்கு 2கே கிட்ஸ்களின் 'யூத்'?
kollywood

Youth Review: 'கலகல காதல்; குடும்ப எமோஷன்; ஆனாலும்...' - எப்படி இருக்கு 2கே கிட்ஸ்களின் 'யூத்'?

10ம் வகுப்பு படிக்கும் பிரவீன் (கென் கருணாஸ்) பொதுத்தேர்வில் அனைத்துப் பாடங்களிலும் ஜெஸ்ட் பாஸ் மட்டுமே பெறுகிறார். பிரவீனுக்கு மிகவும் செல்லம் தந்து வளர்க்கும் தாயார் சரோஜாவுக்கு (தேவதர்ஷினி) மகன் பாஸ் ஆகிவிட்ட விஷயம் மகிழ்ச்சியைத் தந்தாலும், பேக்கரி வைத்திருக்கும் தந்தை உன்னிகிருஷ்ணனுக்கு (சுராஜ் வெஞ்சாரமூடு) கோபத்தையே உண்டாக்குகிறது. Youth Rewiew | யூத் விமர்சனம்மேல்நிலைப் படிப்புக்குச் செல்லும் பிரவீனுக்கு அங்கு அடுத்தடுத்து மூன்று காதல்கள் அரங்கேறுகின்றன. படிப்பில் கவனம் செலுத்தாமல் முழுக்க முழுக்க 'லவ் லவ் லவ்' என மூழ்கிக்கிடக்கிறார் பிரவீன். இந்தக் காதல்கள் அவருக்குள் எப்படியான தாக்கங்களையும், மாற்றங்களையும் கொண்டு வருகின்றன என்பதுதான் அறிமுக இயக்குநர் கென் கருணாஸ் இயக்கியிருக்கும் 'யூத்' திரைப்படத்தின் கதை.Youth: "எனக்கு இப்போது 24 வயது; ஆனால்..." - 'யூத்' படம் குறித்து நெகிழும் கென் கருணாஸ்பதின்வயது இளைஞனுக்குரிய உடல்மொழி, சேட்டை, நடனம், '3' காதல் ஆட்டங்கள், அவருக்குள் ஏற்படும் குற்றவுணர்வு மற்றும் மனமாற்றம் என அனைத்தையும் கச்சிதமாக நடிப்பில் புகுத்தி 'யூத்' நாயகனாகத் தடம் பதிக்கிறார் கென் கருணாஸ். படிப்போடு நடிப்பும் சூப்பர் செதம்பரம்! பள்ளி மாணவிகளாக மீனாட்சி தினேஷ், அனிஷ்மா அனில்குமார் ஆகியோர் நல்லதொரு பங்களிப்பை நல்கி, விரலில் ஹார்ட்டின் காண்பிக்க வைத்திருக்கிறார்கள்!மூன்றாவது கதாநாயகியாக வரும் ப்ரியான்ஷி யாதவிற்கு நடிப்பில் பெரியளவில் வேலை இல்லை. மகனுக்கும், மகனின் கல்விக்கும் எந்தக் குறையும், தடையும் வந்துவிடக் கூடாது என அரும்பாடுபடும் அப்பாவித் தாயாக தேவதர்ஷினி, நடிப்பின் மூலம் நம் மனதைக் கனமாக்குகிறார். மழித்த தாடி மற்றும் பருமனான மீசையுடன் ஸ்ட்ரிக்ட் தந்தையாக வருகிறார் சுராஜ் வெஞ்சராமூடு. வழக்கமான அம்சங்கள் நிறைந்த கதாபாத்திரமாக இருந்தாலும், அவருடைய ஸ்டைல் கொண்டு இனிப்பு, காரம் என அதன் சுவையை ஏற்றியிருக்கிறார். சின்ன தமிழா, ஈஸ்வர் உள்ளிட்ட கென் & கேங், மீனாட்சி தினேஷின் தோழிகளாக வருபவர்கள், இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்சர் மணிகண்டன் & குழு ஆகியோர் படத்தின் சிரிப்பொலி எபிசோடுகளை ஷார்ப்னர் கொண்டு சீவியிருக்கிறார்கள்.Youth Rewiew | யூத் விமர்சனம்சிறிய வீடு, கென்னின் அறை, பரபரப்பாக இருக்கும் பள்ளி வளாகம், ஜாலியான வகுப்பறை போன்றவற்றை கலர்ஃபுல் ரங்கோலியாக மாற்றியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் விக்கி. முதல் பாதி காமெடிக்கு, இரண்டாம் பாதி எமோஷனுக்கு எனக் கணக்குப் போட்டு காட்சிகளை அடுக்கி செண்டம் வாங்கியிருக்கிறார் படத்தொகுப்பாளர் நாஷ்.2014-ம் ஆண்டில் பயன்படுத்தப்பட்ட பட்டன் மொபைல்கள், டி.வி, பழைய ரூபாய் நோட்டுகள், பழைய கோலா பாட்டில், நெட் சென்டர்கள் என அக்காலக்கட்டத்தை நினைவூட்டி, கதைக்குப் பலம் சேர்த்திருக்கிறது கலை இயக்குநர் ராமு தங்கராஜின் கச்சிதமான கைவண்ணம்.'கடைசி வரைக்கும் நன்றியோட இருந்தா மாஸ்'ன்னு சொல்லிருக்கீங்க, நான் என்னைக்குமே!'- தனுஷ் குறித்து கென்'முட்ட கலக்கி', 'ஜில்பான்ஸோ', 'லவ்வ சொல்லிட்டாளே' ஆகிய பாடல்களில் காதலைக் கொண்டாட்டத்துடன் பரிமாறியிருக்கிறார் ஜி.வி. பிரகாஷ்குமார். அதேபோல, பின்னணி இசையிலும் காமெடி, காதல், செண்டிமெண்ட் என அனைத்துப் பாடங்களிலும் ஃப்ர்ஸ்ட் மார்க் வாங்குகிறார் ஜி.வி.படிப்பில் கவனம் செலுத்தாமல் ஜாலியாக இருக்க நினைக்கும் ஒருவனுக்குக் காதல்களாலும், குடும்பத்தாலும் கிடைக்கும் அனுபவங்கள் என்னென்ன என்பதை காமெடி, செண்டிமெண்ட் கலந்து சொல்லியிருக்கிறார் இயக்குநர் கென் கருணாஸ். பதின்வயதில் துளிர்விடும் காதல் ஆசைகள், அந்த வயது இளைஞர்களின் எண்ணவோட்டம், அப்போது முதிர்ச்சியற்ற தன்மையுடன் காதலை அணுகுவது எனப் பதின்வயது இளைஞனின் 360 டிகிரி வாழ்க்கையையும் படத்தின் முதல் பாதி திரைக்கதையில் சொல்லிவிடுகிறார்கள். Youth Rewiew | யூத் விமர்சனம்இரண்டு காதல்கள், அது ஏற்படுத்தும் குழப்பங்கள், நண்பர்களுடனான ஜாலி அரட்டைகள், அப்பாவி அம்மாவுடனான செல்லம் கொஞ்சல்கள், கறார் அப்பாவைக் கண்டால் ஏற்படும் ஜாலியான கோபம் என்பன போன்ற 'கலகல' பதில்களை எழுதி ரேங்க் ஹோல்டராக மேடை ஏறுகிறது திரைக்கதை. ஆனால், இடையிடையே உருவக்கேலிகள், பெண்களின் குரலை வைத்து கேலிகள் போன்றவை வகுப்பறையில் மாணவர்கள் செய்திருக்கும் க்ரைம் வேலைகள். அது அந்த வயதுக்குரிய இயல்பு என்றாலும், அதைத் தவறு என்று சுட்டிக்காட்டும் காட்சிகளோ, வசனங்களோ மிஸ்ஸிங்!கொலைச்சேவல் விமர்சனம்: ஆணவக்கொலைக்கு எதிரான சினிமா; மிரட்டும் க்ளைமாக்ஸ்! ஆனா மேக்கிங்?இரண்டாம் பாதியில் காதலுடன் சேர்த்து எமோஷனல் க்ளாஸையும் சேர்த்து சொல்கிறது திரைக்கதை. அம்மா மீதான அளப்பரிய பாசம், காதலை விட குடும்பமே முக்கியம் என உணரும் கிளைமேக்ஸ் நடிகர்களின் நேர்த்தியான பங்களிப்பால் நம்மை உருக்க வைத்தாலும், அவற்றை வழக்கமான திருப்பத்தைக் கொண்டு திரைக்கதையில் எழுதியிருப்பது குறைவான மதிப்பெண்களையே பெற வைத்திருக்கிறது. தெளிவாகச் சொல்லப்படாத காதல் கதைகள், முதல் பாதிக்குப் பிறகு காணாமல் போன காதலிகள் ஆகியவை இரண்டாம் பாதி திரைக்கதையில் லாங் ஆப்சென்ட் ஆகியிருக்கின்றன. பெண்களின் பார்வையில் காதல்களை அணுகாமல், அவர்களை வேண்டுமென்றே குற்றவாளிக் கூண்டில் ஏற்றும் கதாநாயகன் கதாபாத்திரம் பெரும் குழப்பம். Youth Rewiew | யூத் விமர்சனம்பள்ளிகளில் இதெல்லாம் செய்ய முடியுமா, அங்கு இப்படியான சுதந்திரங்கள் கொடுக்கப்படுமா என்பன போன்ற லாஜிக் கேள்விகளுக்குப் பதில்களை எழுதாமல் விட்டிருப்பது ஏனோ?!சில குறைகள் இருப்பினும், பதின்வயது இளைஞனின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் இந்த 'யூத்', காமெடி மற்றும் செண்டிமெண்ட் பாடங்களில் மட்டும் கவனம் செலுத்தி டீசண்ட் மார்க் வாங்குகிறது.தாய் கிழவி விமர்சனம்: ரகளையான காமெடிகளைச் சுருக்குப் பையில் கட்டி, அலப்பறையைக் கூட்டும் பவுனுத்தாயி!

vikatan
19 மார்., 05:30 AM
மேட்டூர் அணைக்கு பக்கபலமாக நின்ற காவிரிப் பாலம்; ஐரோப்பிய கர்டர்கள்.. வரலாற்றுச் சின்னம்| அணை ஓசை 10
History

மேட்டூர் அணைக்கு பக்கபலமாக நின்ற காவிரிப் பாலம்; ஐரோப்பிய கர்டர்கள்.. வரலாற்றுச் சின்னம்| அணை ஓசை 10

பரிசல் பயன்பாடு1927 வரை மேட்டூர் கிராமத்திலிருந்து காவிரியின் இடக்கரைக்கு செல்ல ஒரே வழி பரிசல் மட்டுமே. பரிசல் ஓட்டுபவர்கள் ஆற்றின் கடினமான நீரோட்டத்தையும் திறமையாகக் கடந்து சென்றனர். இந்த பரிசல்களை இயக்குபவர்கள் அந்த வேலையில் மிகவும் தேர்ச்சி பெற்றவர்களாக இருந்தனர் என்று பதிவு செய்துள்ளனர், பிரிட்டிஷ் பொறியாளர்கள்.இந்தத் திறமை, ஆற்றின் மிக கடினமான நீரோட்டத்தை கடந்து சரியாக இயக்கி குறிப்பிட்ட இடத்தை அடைவதற்கு மிகுந்த தேவையாக இருந்தது. அதேசமயம் விபத்துக்கள் நடப்பதென்பது அநேகமாக இல்லை எனலாம்! ஏனெனில், அவ்வளவு திறமை வாய்ந்தவர்களாக பரிசில் ஓட்டுபவர்கள் திறன் பெற்று இருந்தனர். ஆற்றை கடக்கவும், மீன்களைப் பிடிக்கவும் இந்த வகை பரிசல்களே பயன்படுத்தப் பட்டன!ஆற்றில் அதிக அளவு நீர் செல்லும் போது இக்கரையில் இருந்து பரிசலில் புறப்பட்டால் அக்கரையைச் சென்றடைவதற்கு முன்பாக, ஆற்றின் வேகத்தில் நீரோட்டத்தால் மெல்ல இழுக்கப்பட்டு, அநேகமாக சுமார் ஒருமைல் தூரம் தள்ளி அக்கரையில் இறங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும்! பிறகு, அங்கிருந்து பரிசலை தோளில் சுமந்தபடி, அக்கரையின் ஓரமாகவே பொடி நடையாக நடந்து வந்து சென்றடைய வேண்டிய இடத்தை அடைய நேரிடும்.கனரக கட்டுமான கருவிகள் அல்லது பொருட்களை இந்த பரிசல்கள் மூலம் அணையின் இடது புறத்திற்கு கொண்டு செல்வது என்பது இயலாத காரியம். ஓரளவு சிறிய இயந்திரங்கள் மற்றும் கருவிகளை அவசரத் தேவைக்காக மேட்டூர் கிராமத்திலிருந்து இடது புறக்கரைக்கு கொண்டு செல்ல, நான்கு பரிசல்களை ஒன்றாக நிறுத்தி, ஒன்றுடன் ஒன்று கட்டி அதற்கு மேல் மரக்கட்டைகளை வைத்து சமதளம் போல் ஏற்படுத்தி, மூங்கில் வார்களைக் கொண்டு கட்டி, பொருட்களை அதில் வைத்து மிக கவனமாக அக்கரைக்கு எடுத்துச் செல்ல வேண்டிய நிலை இருந்து வந்தது. ஆற்றின் குறுக்கே பாலம் கட்டும் வரை இந்த நிலையே நீடித்தது.காவிரி பாலம் திட்டம்கனரக கருவிகள், கட்டுமானப் பொருட்கள் போன்றவற்றை ஆற்றின் இடக்கரைக்கு பரிசல் வழியாகக் கொண்டு செல்ல முடியாததால், பாலம் கட்டும் அவசியம் உருவானது. இதற்கான முதற்கட்ட ஒதுக்கீடு ரூ.1.5 லட்சம்.முதலில், ஈரோடு காவிரிப் பாலத்தில் மீதமாக இருந்த 19 இரும்புக் கர்டர்களை வாங்கி இங்கு பயன்படுத்தி, மேலே 7 அங்குல அளவில் கான்கிரீட் போட்டு, 18 அடி அகலச் சாலை (நடைபாதையுடன் சேர்த்து 20 அடி) அமைக்கப்பட்டது. 10 டன் எடையுள்ள டிராக்டர், வண்டிகள் கூட செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டது. கடல் மட்டத்திலிருந்து +666 MSL அளவில் பாலம் அமைக்கப்பட்டது.காவிரி பாலம் கட்டுமானம் 1926 ஆம் ஆண்டு முதலில் “SITE-D” அடிப்படையில் வேலை தொடங்கினாலும், அணை “SITE-Y” என்ற இடத்துக்கு மாற்றப்பட்டதால் பாலம் அங்கு மாற்றி அமைக்கப்பட்டது. புதிய இடத்தில் பாறைகள் அடர்த்தியானவை; பெருவெள்ளத்தின் போதும் தேய்மானமில்லாமல் இருந்தன. எனவே, பாலம் கட்ட பொருத்தமாக அந்த இடம் அமைந்தது.1926 ஜூலை மாதம் மதிப்பீடு ரூ.2,68,000 ஆக அனுப்பப்பட்டு, 1927 மார்ச் மாதம் ஒப்புதல் கிடைத்தது. ஒப்பந்ததாரர் வேலை சரியாக செய்யாததால் 1927 ஆகஸ்டில் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது; பின்னர் கர்டர் பொருத்தும் பணி துறை மூலமே நடந்தது.வரலாற்றுச் சின்னமான காவிரி பாலம்அதிக கர்டர்கள் இந்தியாவில் கிடைக்காததால் ஐரோப்பாவிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டியதாகி, அனுமதி பெற்று 1927 அக்டோபர் முதல் 1928 மார்ச் வரை பொருத்தப்பட்டது. 1928 ஜூனில் பாலம் திறந்து விடப்பட்டது. ஆரம்பத்தில் சில வாகனங்களுக்கு மட்டுமே அனுமதியளிக்கப் பட்டது. 1930 முதல் டிராம்வே மூலம் அணை கட்டுமானப் பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டது. பாதசாரிகளுக்கான நடைபாதையும் அமைக்கப்பட்டது.மொத்தச் செலவு ரூ.2,63,129 மட்டுமே. பின்னாளில் இந்தப் பாலம் முக்கிய சாலையாக பயன்பட்டு, 1980களில் மேட்டூர் அனல் மின் நிலையம் உருவானபின், கூடுதலாக புதிய பாலங்கள் கட்டப்பட்டன.காவிரி பாலம் கல்வெட்டு 1928-ல் பாலம் கட்டப்பட்டதும் சேலம்–கோயம்புத்தூர் இடையே இணைப்பு ஏற்பட்டது. தொப்பூரிலிருந்து பவானிக்கு மேட்டூர் வழியாக புதிய சாலை அமைக்கப்பட்டதால், மெட்ராஸிலிருந்து கோயம்புத்தூருக்கு 14 மைல் தூரம் குறைந்தது. ஆனால் சேலம், கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகங்கள் இந்தப் பாலத்தால் வியாபார பலன் இல்லை என்று கூறி நிதி பங்களிப்பை மறுத்தன. எனவே முழுச் செலவும் மேட்டூர் திட்டத்திலிருந்தே ஒதுக்கப்பட்டது. பின்னாளில் இந்த சாலை, பாலம் ஆகியவை அதிக பயன்பாட்டை பெற்று இன்றளவும் பெரும் பயன் நல்கி வருகிறது.இவ்வாறு, 1928 இல் முடிக்கப்பட்ட காவிரிப் பாலம் மேட்டூர் அணை கட்டுமானத்திற்கும், தமிழ்நாட்டின் போக்குவரத்து வரலாற்றிற்கும் ஒரு சின்னமாக திகழ்கிறது. இந்தப்பாலத்தில் நின்று கொண்டு வடக்கு திசையில் பிரம்மாண்டமாக எழும்பி நிற்கும் அணையை கண்டு மகிழலாம். இதில் உழைத்த ஒவ்வொரு தொழிலாளர்களின் வேர்வைத் துளிகள் அணையிலிருந்து வெளியேறும் காவிரி நீரில் கலந்திருப்பதை உளமாற உணரலாம்.ஒட்டுமொத்த மேட்டூரின் கட்டமைப்பை இதை வாசித்து விட்டு ஒருமுறை நேரில் சென்று கண்டு வந்தீர்கள் என்றால் கூட்டு முயற்சியின் சின்னமாக, பொறியாளர்களின் தொலைநோக்குப் பார்வைக்கு அத்தாட்சியாக ஒவ்வொருவரின் உள்ளங்களிலும் மகிழ்ச்சி பூத்து மலரும் என்பது உறுதி!பாதுகாக்கப்பட்ட குடிநீர் 1928 ஆம் ஆண்டு ஜூன் மாதம் காவிரிப் பாலம் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்த பிறகுதான், அணையின் இடது புறக்கரையில் ஓரளவு கூறிக் கொள்ளும்படியான வேலைகள் நடக்க ஆரம்பித்தது.மிக முக்கியத் தேவையாக போதுமான அளவு பாதுகாக்கப்பட்ட நீர்த் தேவை இருந்தது. இது பெரிய அளவில் தேவைப்படுவதாகவும் அமைந்தது. அணையின் வலது புறக்கரையில் நிரந்தரமான வடிகட்டியுடன் கூடிய ஆலை மற்றும் நீர் கொள்கலன் அமைப்பதில் சில வசதி குறைபாடுகள் உணரப்பட்டன. மிகப் பொருத்தமான இடம் அணையின் இடது புறத்தில், காவிரிப் பாலத்துக்கு சற்று கீழே இயற்கையாகவே குளம் போன்று நீர் தேங்கி நிற்கும் ஒரு இடம் அமைந்தது.அந்த இடத்தில் வடிகட்டியுடன் கூடிய கொள்கலனும் மலைப்பகுதியில் (இடதுபுறம் உள்ள சீத்தாமலை) அணையின் பக்கவாட்டில் அமைந்த நீர்த் தொட்டியும், முகாம்களுக்கு மட்டுமின்றி அணையின் அதிகபட்ச உயரச்சுவர் கட்டி முடிக்கப்பட்டு அதன் மேல் புறம் பணி முடியும் வரை இந்த நீர் பயன்படுத்த வழங்கப்பட்டது.குடிநீர் நீரேற்று நிலையம் மனித உடலில் ஓடும் ரத்தக்குழாய்களைப் போல, அணை கட்டுமானத்தின் போது குறுக்கும் நெடுக்குமாக, அணை நீளம் முழுவதும் குழாய்கள் பதிக்கப்பட்டு, மேட்டூர் முகாமுக்கு முக்கியக் குழாயும், பிரித்தளிக்கும் குழாய்கள் அதிலிருந்து அணைக்கட்டுமானம் தொடர்புடைய அனைத்து பகுதிகளுக்கும் அதாவது பணிமனை, பவர் ஹவுஸ், மற்றும் வலதுபுற பக்கவாட்டு கரை வரையிலும் ஆற்றை கடந்து கொண்டு சென்று தேவையான அளவு தண்ணீர் அளிக்கப்பட்டது. ஆரம்பத்தில் ஆற்று நீரை நேரிடையாக அணை கட்டுமானப் பணிகளுக்கு பயன்படுத்துவது என்ற முடிவை எடுத்திருந்தாலும் சற்று யோசித்துப் பார்த்து அங்கு வேலையில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்கள் தன்னிச்சையாக அந்த நீரை தங்கள் தாகம் தீர்த்துக்கொள்ள அப்படியே அருந்தி விடலாம் என்ற அச்சமும், அதனால் காலரா போன்ற பெருந்தொற்று பரவும் அபாயமும் இதில் இருப்பதால் எல்லாவிதமான பயன்பாடுகளுக்கும் பாதுகாக்கப்பட்ட குளோரின் கலந்த சுத்தமான நீரை பயன்படுத்துவது என்ற முடிவு செயல்படுத்தப்பட்டது!`தாமதம் நல்லது' - பெரு வெள்ளமும் எல்லீஸ் பாலம் உருவாக்கமும்! | அணை ஓசை 09இந்த முடிவு நன்கு யோசித்து அனைவரது உடல் நலனையும் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட சிறப்பான முடிவு என்ற எண்ணத்தை இப்போது நமக்கு தோற்றுவிக்கிறது. இதனால் சுத்தமான தண்ணீர் சொந்த உபயோகம் முதல் அணை கட்டி முடிக்கப்படும் வரை அனைத்து கட்டுமான பணிகளுக்கும் அளிக்கப்பட்டு கவனத்துடன் பணிகளை முடிக்க எச்சரிக்கை நடவடிக்கையாக எடுக்கப்பட்டது பாராட்டுக்குரியது! இதனால் உடனடியாக பலன் கிடைத்தது எனலாம். நீரின் மூலமாக பரவும் வியாதிகள் உடனே அறவே இல்லாமல் போனது. சுத்தமான தண்ணீர் பொது பயன்பாட்டுக்கு வந்ததினால் காலரா மறைந்தது.இந்த ஏற்பாடுகள் குறித்து அந்த சமயத்தில் மெட்ராஸ் மாகாண சட்டமன்ற கவுன்சிலில் பெரும் விவாதம் நடந்தது. புயல் கிளப்பிய விவாதம் அது! தொடரின் பிற்பகுதியில் அதை காண்போம்.தொடர்ந்து பயணிப்போம்... காவிரி நன்னீர் சிறப்புபொருள்: பெரிய புராணத்தில் காவிரியை வளர்ப்புத் தாயாக காட்டுகிறார்.“சையமால் வரைபயில் தலைமை சான்றது செய்யபூ மகட்குதற் செவிலி போன்றது வையகம் பல்லுயிர் வளர்த்து நாள்தொறும் உய்யவே சுரந்தளித்து ஊட்டும் நீரது” - சேக்கிழார்

vikatan
19 மார்., 05:30 AM
திருட்டு பைக்; கைகொடுத்த தரவுகள்.. மாணவி கொலை வழக்கில் குற்றவாளி சிக்கியது எப்படி?- எஸ்.பி விளக்கம்!
Crime

திருட்டு பைக்; கைகொடுத்த தரவுகள்.. மாணவி கொலை வழக்கில் குற்றவாளி சிக்கியது எப்படி?- எஸ்.பி விளக்கம்!

தூத்துக்குடி மாவட்டம், வேடநத்தம் கிராமத்தில் 12-ம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், 5 பேரின் டி.என்.ஏ மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இதில், ஒருவரின் டி.என்.ஏ மாதிரி மற்றும் மாணவியின் நகத்தில் இருந்த சிறிய சதைத் துணுக்கு மூலம் நடத்தப்பட்ட பரிசோதனையில் ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் என்பவர் கொலையாளி எனக் கண்டறியப்பட்டுள்ளார். இதனையடுத்து அவர் கைதுசெய்யப்பட்டு தொடர்ந்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட எஸ்.பி., மதன், "தூத்துக்குடி மாணவி கொலை வழக்கு, போக்சோ வழக்கு என்பதால், சில தகவல்களை மட்டுமே தர முடியும். குற்றப் பின்னணி கொண்டவர்களின் தகவல்களை முழுமையாக ஆய்வு செய்தோம். டிஜிட்டல் ஆவணங்கள், சுமார் 800-க்கும் மேற்பட்டவர்களிடம் நடத்திய நேரடி விசாரணை மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.10 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. மேலும் 4 டி.எஸ்.பி-க்கள், 6 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 150 காவலர்கள் விசாரணை மற்றும் குற்றவாளிகளைத் தேடும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டனர்.புலனாய்வுப் பிரிவு, மோப்பநாய் பிரிவு என வெவ்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. சம்பவ இடத்தில் சி.சி.டி.வி கேமராக்கள் இல்லை என்ற போதிலும் அந்தப் பகுதியைச் சுற்றி பல பகுதிகளில் உள்ள 98 இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் சேகரிக்கப்பட்ட தகவல் அடிப்படையில் 2,514 தொலைபேசி தகவலும் சேகரிக்கப்பட்டன.வேறு குற்றப் பின்னணி உள்ள நபர்கள் குறித்து பார்த்து கண்காணித்து, அவர்களிடம் விசாரணை மேற்கொள்ள பல குழுவினர் விசாரணை மேற்கொண்டனர். நேரடியாக மற்றும் டிஜிட்டல் முறையில் தகவல் சேகரிக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டது.சம்பவம் தொடர்பாக அனைத்து விசாரணைகளும் அறிவியல் பூர்வமாக மேற்கொள்ளப்பட்டன. இந்தச் சம்பவத்தில் ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமியின் படத்தையும் பெயரையும் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இதுவரை அதை பயன்படுத்திய ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்தச் சம்பவத்தை தொடர்ந்து அனைத்து கிராமங்களிலும் 10 சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அனைத்து கிராமங்களிலும் பெண் போலீஸார் மூலம் ரோந்துப் பணிகள் தீவிரப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.விசாரணையின்போது, சம்பவ இடத்திற்கு அருகில் ஒரு சந்தேகத்திற்குரிய இருசக்கர வாகனம் நின்றதும், பின்னர் அது மாயமானதும் தெரியவந்தது. அருகில் இருந்த காற்றாலை (Windmill) சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தபோது, அந்த வாகனம் நடமாடியது உறுதியானது. அந்த வாகனத்தின் பதிவு எண் மாற்றப்பட்டிருந்ததும், அது ராமநாதபுரம் மாவட்டம், பார்த்திபனூர் காவல் நிலையத்தில் பதிவான 'திருட்டு பைக்' என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.சமீபத்தில் சிறையிலிருந்து விடுதலையானவர்களின் பட்டியலை அந்தத் திருட்டு பைக்கோடு ஒப்பிட்டுப் பார்த்தபோது, தர்ம முனீஸ்வரன் என்பவர் மீது சந்தேகம் வலுத்தது. இவர் ஏற்கெனவே ஒரு கடுமையான குற்றவழக்கில் தண்டனை பெற்று, கடந்த 2025 டிசம்பர் மாதம் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தலைமறைவாக இருந்த தர்ம முனீஸ்வரனை இன்று தனிப்படை போலீஸார் சுற்றி வளைத்துப் பிடித்தனர். விசாரணையில், மாணவியைத் தனிமையில் வழிமறித்துக் கடத்தி, பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றபோது மாணவி எதிர்த்ததால், அவரை கழுத்தை நெரித்துக் கொலைசெய்ததை ஒப்புக்கொண்டார். எவ்வித அழுத்தத்திற்கும் இடம் கொடுக்காமல் இந்த வழக்கு விசாரணை முறையாக நடத்தப்பட்டது. இந்த வழக்கை உயர் நீதிமன்றம் கண்காணித்து வருகிறது. குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனையை பெற்றுத் தருவோம்" என்றார்.

vikatan
19 மார்., 05:30 AM
திடீர் `மர்ம' ட்ரோன்களால் பரபரப்பு: வாஷிங்டன் ராணுவ தளம் மீதும் ஈரான் தாக்குதல் நடத்த திட்டமா?
Trending

திடீர் `மர்ம' ட்ரோன்களால் பரபரப்பு: வாஷிங்டன் ராணுவ தளம் மீதும் ஈரான் தாக்குதல் நடத்த திட்டமா?

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவது உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரான் மீது மட்டும் தாக்குதல் நடத்துகின்றன. ஆனால் ஈரான் அண்டை நாடுகளாக பஹ்ரைன், கத்தார், துபாய் போன்ற அமெரிக்க ஆதரவு நாடுகளில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இத்தாக்குதலால் மத்திய கிழக்கு நாடுகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வாஷிங்டனில் உள்ள ஃபோர்ட் லெஸ்லி ஜே. மெக்நாயர் ராணுவ தளத்திற்கு மேலே மர்ம ட்ரோன்கள் தொடர்ந்து பறப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழலில் அமெரிக்க ராணுவம் மிகுந்த எச்சரிக்கையுடன் அச்சுறுத்தல்களைத் தீவிரமாகவும் கண்காணித்து வருகிறது. கடந்த 10 நாட்களில் ஒரே இரவில் ஃபோர்ட் லெஸ்லி ஜெ.மெக்நாயர் ராணுவ தளத்திற்கு மேலே பல ட்ரோன்கள் (ஆளில்லா விமானங்கள்) பறந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.கத்தார் எண்ணெய் கிணறு எரிகிறது. இதையடுத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிக்கவும், இதற்கு எப்படிப் பதிலடி கொடுப்பது என்பது குறித்து வெள்ளை மாளிகையில் அதிகாரிகள் கூடி முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளனர். இந்த ராணுவ தளத்தில்தான் அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் பாதுகாப்புச்செயலாளர் பீட் ஹெக்சேத் ஆகியோர் வசிக்கின்றனர். ட்ரோன் எச்சரிக்கையை தொடர்ந்து இந்த இரண்டு பேரையும் வேறு பாதுகாப்பான இடத்திற்கு இடமாற்றம் செய்வது குறித்தும் வெள்ளை மாளிகையில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. ஃபோர்ட் மெக்நாயர் தளம் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகம் (National Defense University) மற்றும் பென்டகனின் மிக உயர்மட்ட ராணுவ அதிகாரிகள் தங்கும் இடமாகும். இங்கு அரசியல்வாதிகள் தங்குவது கிடையாது. ஆனால் தற்போது மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக பல அரசியல் தலைவர்கள் இங்கு வந்து தங்கி இருக்கின்றனர்.ஏற்கனவே மத்திய கிழக்கில் நடந்து வரும் போர் காரணமாக உலகம் முழுவதும் உள்ள தனது தூதரகங்கள் மற்றும் ராணுவ நிலைகளை அமெரிக்கா எச்சரித்து இருக்கிறது. சில நாடுகளில் தூதரகங்களை அமெரிக்கா மூடிவிட்டது. அதோடு இந்த வாரத்தில் புளோரிடாவில் உள்ள அமெரிக்க மத்திய தலைமையகமான மேக்டில் விமானப்படைத்தளம் இரண்டு முறை மூடப்பட்டது.அங்கு கிடந்த ஒரு சந்தேகத்திற்கிடமான பொட்டலம் காரணமாக அந்த தளத்தின் பார்வையாளர்கள் மையத்தை பல மணிநேரம் மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. புதன்கிழமை அன்று நடந்த பெயரிடப்படாத ஒரு பாதுகாப்பு சம்பவம் காரணமாக அந்த தளம் பல மணிநேரம் வீட்டிற்குள்ளேயே பாதுகாப்பாக இருங்கள் என்ற உத்தரவின் கீழ் இருந்தது. ஈரானில் உள்ள தெற்கு பார்ஸ் எரிவாயு மையத்தில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து ஈரான் கத்தாரில் உள்ள எரிவாயு மற்றும் எண்ணெய் கிணறு மீது தாக்குதல் நடத்தி இருக்கிறது.

vikatan
19 மார்., 05:30 AM
தாவூத் இப்ராகிம் குடும்ப சொத்துக்கள் : போராடி ஏலத்தில் விற்பனை செய்து முடித்த மத்திய அரசு!
Trending

தாவூத் இப்ராகிம் குடும்ப சொத்துக்கள் : போராடி ஏலத்தில் விற்பனை செய்து முடித்த மத்திய அரசு!

மும்பையில் தொடர் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்திய தாவூத் இப்ராகிம் இப்போது தனது குடும்பத்துடன் பாகிஸ்தானில் பதுங்கி இருக்கிறான். அவனுக்கும், அவனது குடும்பத்திற்கும் மும்பை மற்றும் மகாராஷ்டிராவின் ரத்னகிரி மாவட்டத்தில் நிலம், வீடு போன்ற சொத்துக்கள் இருந்தது. அந்த சொத்துக்கள் அனைத்தையும் மத்திய அரசு பறிமுதல் செய்துள்ளது. மும்பையில் உள்ள தாவூத் இப்ராகிம் குடும்ப சொத்துக்கள் இதற்கு முன்பு நடந்த ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுவிட்டது. இது தவிர தாவூத் இப்ராகிம் குடும்பத்தினர் வசித்து வந்த அவர்களது வீடும் ஏலத்தில் விடப்பட்டது. ஆனால் தாவூத் இப்ராகிமின் சொந்த ஊரான மும்பாகே என்ற இடத்தில் இருந்த 4 விவசாய நிலம் விற்பனையாகாமல் இருந்தது. இந்த நிலத்தை மத்திய அரசு இதற்கு முன்பு 2017, 2020, 2024, 2025ம் ஆண்டுகளில் ஏலம் விட்டது. கடைசியாக கடந்த நவம்பர் மாதம் இந்த சொத்துக்களின் மதிப்பை 30 சதவீதம் அளவுக்கு குறைத்து ஏலம் விட்டனர். அப்படி இருந்தும் அந்த சொத்துக்கள் ஏலம் போகவில்லை. இந்த சொத்துக்கள் அனைத்தும் தாவூத் இப்ராகிமின் தாயார் அமீனா பெயரில் இருக்கிறது. இந்த சொத்துக்களை மத்திய அரசு மீண்டும் ஏலம் விட்டது. இதில் மும்பையை சேர்ந்த தொழிலதிபர் உட்பட சிலர் மட்டும் கலந்து கொண்டனர். இந்த ஏலத்தில் 4 நிலத்தையும் மும்பை தொழிலதிபர் ஏலத்தில் எடுத்தார். இதில் ஒரு சொத்து மட்டும் ஆரம்ப விலை ரூ.9.41 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. அதனை எடுக்க மும்பை தொழிலதிபர் உட்பட இரண்டு பேர் வந்திருந்தனர். இதில் மும்பை தொழிலதிபர் ரூ.10 லட்சத்திற்கு அந்த சொத்தை ஏலத்தில் எடுத்தார். இது தவிர மற்ற 3 சொத்துக்கும் மும்பை தொழிலதிபர் மட்டும் ஏலம் கேட்டு இருந்தார். வேறு யாரும் இதில் பங்கேற்கவில்லை. இதையடுத்து 3 சொத்துக்களையும் மும்பை தொழிலதிபருக்கே விற்பனை செய்யப்பட்டது. இதற்கு ஏப்ரல் மாதத்திற்குள் முழு பணத்தையும் மும்பை தொழிலதிபர் கட்டி முடித்த பிறகு அந்த சொத்து அவருக்கு சொந்தமாகும். இதன் மூலம் தாவூத் இப்ராகிற்கு சொந்தமான அனைத்து சொத்துக்களும் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுவிட்டது. கடத்தல்காரர்கள் மற்றும் அந்நியச் செலாவணி மோசடி செய்பவர்கள் (சொத்து பறிமுதல்) சட்டத்தின் கீழ், மத்திய அரசு இந்தச் சொத்துக்களை பறிமுதல் செய்து இருந்தது.!

vikatan
19 மார்., 05:30 AM
"RR அணியின் முகமாக இருந்தவர் சஞ்சு சாம்சன்; அவரை இழந்திருப்பது அணிக்கும்..!"- ஃபாப் டு பிளெஸ்ஸிஸ்
cricket

"RR அணியின் முகமாக இருந்தவர் சஞ்சு சாம்சன்; அவரை இழந்திருப்பது அணிக்கும்..!"- ஃபாப் டு பிளெஸ்ஸிஸ்

2026 ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல் திருவிழா வரும் மார்ச் 28 ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இன்னும் சில தினங்களே இருக்கும் நிலையில், வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை அணி தனது முதல் போட்டியை மார்ச் 30 ஆம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியோடு எதிர்கொள்ள இருக்கிறது. சஞ்சு சாம்சன்ரசிகர்கள் இந்தப் போட்டியைக் காண மிகவும் ஆர்வமாக இருக்கின்றனர். காரணம் சிஎஸ்கே அணியில் இருந்த ரவீந்திர ஜடேஜா ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாட இருக்கிறார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக இருந்த சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணிக்காக களமிறங்க இருக்கிறார். இந்நிலையில் ஜியோ ஹாட்ஸ்டாருக்கு பேட்டி அளித்திருக்கும் தென்னாப்பிரிக்க வீரர் ஃபாப் டு பிளெஸ்ஸிஸ், சஞ்சு சாம்சன் குறித்து பேசியிருக்கிறார்.``நான் ஐ.பி.எல் தொடரையும், அணிகளையும் கவனித்திருக்கிறேன். அந்த லீக்கில் உள்ள அனைத்து பிரபலமான அணிகளுக்கும் பொதுவான ஒரு விஷயம் இருக்கிறது. அது என்னவென்றால் ஒவ்வொரு அணிக்கும் ஒரு வீரர் அடையாளமாக இருப்பார். அவர் நீண்ட காலமாக அந்த அணியின் முகமாகத் திகழ்வார். உதாரணமாக ரோஹித் சர்மா, எம்.எஸ். தோனி, விராட் கோலி ஆகியோரைக் கூறலாம். ஃபாப் டு பிளெஸ்ஸிஸ்அந்த வகையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு முகமாக சஞ்சு சாம்சன் இருந்தார். நான் ராஜஸ்தான் ராயல்ஸ் பற்றி நினைக்கும் போதெல்லாம், சஞ்சு சாம்சனின் முகம் தான் ஞாபகத்திற்கு வரும். ராஜஸ்தான் ராயல்ஸ் அந்த முகத்தை இழந்திருப்பது அணிக்கும், ரசிகர்களுக்கும் ஒரு வித தாக்கத்தை ஏற்படுத்தும். ஏன்னென்றால் சஞ்சு சாம்சன் முக்கிய அந்த அணிக்கு முக்கிய பங்காற்றியிருக்கிறார்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

vikatan
19 மார்., 05:30 AM
20 நாள்களாக தொடரும் ஈரான் போர்: கச்சா எண்ணெய் முதல் பங்குச்சந்தை வரை தாக்கம் என்ன? | Full Summary
உலகம்

20 நாள்களாக தொடரும் ஈரான் போர்: கச்சா எண்ணெய் முதல் பங்குச்சந்தை வரை தாக்கம் என்ன? | Full Summary

இன்றோடு ஈரான் போர் தொடங்கி 20 நாள்கள் ஆகிறது. இந்தப் போர் ஈரானைத் தாண்டியும், இந்தியா வரை எப்படி மக்களைப் பாதித்துள்ளதோ, அதே மாதிரி உலக சந்தைகளையும் பாதித்துள்ளது. கடந்த 19 நாள்களாக, ஈரான் போர் இந்திய சந்தை, உலக சந்தை மற்றும் கமாடிட்டி சந்தைகளில் என்னென்ன தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை இன்றைய Opening Bell Show-ல் விவரித்திருந்தார், பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்.பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்'அதிர்ச்சி சரிவு' 92 டாலர்களை தாண்டிய இந்திய ரூபாய் - அடுத்தடுத்த தாக்கம் என்ன?"முதலில் கமாடிட்டியை எடுத்துக்கொள்வோம். கடந்த பிப்ரவரி 27-ம் தேதி, சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் 5,200 டாலர் அளவிற்கு வர்த்தகமானது. ஈரான் போர் பிப்ரவரி 28-ம் தேதி தொடங்கியது. அது சனிக்கிழமை என்பதால், அன்று சந்தைக்கு விடுமுறை. அதனால், தங்க சந்தையில் ஈரான் போரின் தாக்கம் தெரியவில்லை. அதனால், இங்கே பிப்ரவரி 27-ன் தரவுகள் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. நேற்று சர்வதேச சந்தையில், தங்கம் விலை ஒரு அவுன்ஸிற்கு 4,844 - 4,890 டாலர்கள் அளவிற்கு வர்த்தகமானது. போருக்கு முன்னால், வெள்ளியும் ஒரு அவுன்ஸிற்கு 86 - 87 டாலர் அளவிற்கு இருந்தது. ஆனால், நேற்று 76 - 77 டாலர் அளவிற்கு வர்த்தகம் ஆகியது.ஆக, தங்கம், வெள்ளி விலை இரண்டுமே போருக்குப் பின், இறங்குமுகத்தைத் தான் சந்தித்துள்ளது.ஆனால், போருக்குப் பின், கச்சா எண்ணெய் மிகப்பெரிய விலை ஏற்றத்தைச் சந்தித்துள்ளது. ஒரு பீப்பாவிற்கு 66 - 67 டாலர்கள் என்றிருந்த கச்சா எண்ணெய் 103 - 107 வரை கூட நேற்று சென்றது.கச்சா எண்ணெய்தேர்தல் நடத்தை விதிமுறைகள் : பணத்திற்கு உள்ள கெடுபிடிகள் என்ன? தெரிந்து கொள்ளுங்கள்!போர் தொடங்கியதில் இருந்து இப்போது வரை, கச்சா எண்ணெய் உச்ச விலையாக ஒரு பீப்பாவிற்கு 119 டாலர்கள் வரை சென்றது.இயற்கை எரிவாயுவை எடுத்துக்கொண்டால், முன்பு, ஒரு MMBtu-விற்கு 2.87 டாலர் என்றிருந்தது. இப்போது 3.04 - 3.05 டாலருக்கு உள்ளது. பிப்ர்வரி 28 - நேற்று வரை உச்சமாக, 4.5 டாலர்கள் வரை சென்றுள்ளது.செம்பில் பெரியளவில் மாற்றம் நடக்கவில்லை. நிலையாகவே இருந்து வருகிறது.தங்கம், வெள்ளி விலை ஏற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், அது இறங்கி தான் உள்ளது.கச்சா எண்ணெய் கிட்டத்தட்ட 50 சதவிகித உயர்வைச் சந்தித்துள்ளது. அது நிலைத்தும் வருகிறது.இயற்கை எரிவாயும் 12 - 13 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது.நாணயம் சந்தையை இப்போது பார்க்கலாம்.பிப்ரவரி 27-ம் தேதி இந்திய ரூபாயின் மதிப்பு ஒரு டாலருக்கு ரூ.91.07 என்றிருந்தோம். இப்போது ரூ.92.7 வரைக்கும் சென்றுள்ளது. அதாவது இந்திய ரூபாய் பலவீனமடைந்துள்ளது... அமெரிக்க டாலர் வலுவடைந்துள்ளது. இதை இன்னொரு கோணத்திலும் அணுகலாம். ஜப்பான் யென்னை எடுத்துக்கொள்வோம். ஒரு அமெரிக்க டாலரின் மதிப்பு 151 - 152 ஜப்பான் யென்னாக இருந்தது. இப்போது அது 159 - 160 யென் வரையில் சென்றுள்ளது. இதுவும் அமெரிக்க டாலர் வலுவாகி உள்ளதைக் காட்டுகிறது. இந்திய ரூபாய்தங்கம், வெள்ளி, செம்புடன் சேர்த்து 'இந்த' உலோகத்தையும் கவனிங்க; அடுத்த ஹீரோ இதுதானா?அடுத்ததாக, பங்குச்சந்தை பக்கம் வரலாம்.பிப்ரவரி 27-ம் தேதி, டௌ ஜோன்ஸ் 49,800 என நிறைவடைந்திருந்தது. நேற்று 46,200 என்று நிறைவடைந்திருந்தது. இடையிடையே ஏற்றம், இறக்கம் இருந்தாலும், கிட்டத்தட்ட 3,000 புள்ளிகள் சரிவைச் சந்தித்துள்ளது டௌ ஜோன்ஸ். நிக்கேய் 225 கடந்த 27-ம் தேதி 39,000 என்றிருந்தது. இப்போது 53,000-ல் இருக்கிறது. ஜப்பான் சந்தை ஏற்றத்தை சந்தித்து இருக்கிறது. 26,700 என்றிருந்த ஹாங்காங் சந்தையான ஹேங்சென் 25,000-ல் வர்த்தகமாகி வருகிறது. இங்கே சின்ன சரிவை சந்தித்துள்ளது. தென் கொரிய சந்தை ஏற்றத்தை தான் சந்தித்துள்ளது. இந்திய சந்தையைப் பொறுத்தவரை, நிப்டி 25,128 என்று பிப்ரவரி 27-ம் தேதி நிறைவடைந்திருந்தது. இப்போது 23,777 என நேற்று முடிவடைந்திருக்கிறது.ஆனால், இடையில் நிப்டி 22,955 என 'லோ'-வை பதிவு செய்தது.ஆக, ஜப்பான், கொரியாவை தவிர, பிற உலக சந்தைகள் பெரும்பாலும் சரிவை தான் சந்தித்துள்ளன.ஹார்முஸ் ஜலசந்தியில் பல கப்பல்களின் பயணங்கள் நிறுத்தப்பட்டுள்ளதால், இப்போது சரக்கு கட்டணத்தையும் கவனிக்க வேண்டியதாக இருக்கிறது.ஹார்முஸ் ஜலசந்தி'உயிரோடு தான் இருக்கிறேன்' - நிரூபிக்க போராடும் நெதன்யாகு: வீடியோக்களும், சர்ச்சைகளும்! |Full DetailVery Large Container Ships-ன் ஒரு நாளைய விலை முன்பு 2.9 ஆயிரம் டாலர்களாக போருக்கு முன்பு இருந்தது. இப்போது 4.7 ஆயிரம் டாலர்களாக மாறி உள்ளது. இது கிட்டத்தட்ட இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது. இந்தப் போர் பணவீக்கத்தை அதிகரிப்பது, சில பொருள்களின் பற்றாக்குறையை அதிகரிப்பது போன்றவற்றைச் செய்தாலும், பல உயிர்களின் பலியை நிச்சயம் சொல்லியாக வேண்டும். இன்னும் இந்தப் போர் எதற்காக என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், அதற்குள் இந்தப் போரினால் இவ்வளவு தாக்கம் ஏற்பட்டுள்ளது". (இது இன்று காலை வரையிலான தரவுகளின் படியானது ஆகும்) Gold: பதுங்கி வரும் தங்கம் விலை; இப்போது 'இவ்வளவு' தங்கம் முதலீட்டை செய்தால் சூப்பர்!

vikatan
19 மார்., 05:30 AM
தவெக: "நான் முதல் மாநாட்டுல சொன்ன மாதிரிதான்" - கூட்டணி சர்ச்சைகளுக்கு விஜய்யின் விளக்கம் என்ன?
இந்தியா

தவெக: "நான் முதல் மாநாட்டுல சொன்ன மாதிரிதான்" - கூட்டணி சர்ச்சைகளுக்கு விஜய்யின் விளக்கம் என்ன?

தமிழக வெற்றிக் கழகத்தின் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு இன்று மகாபலிபுரத்திலுள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. குறிப்பிட்ட எண்ணிக்கையிலான அழைப்பிதழ்கள் கொடுக்கப்பட்டு, அவர்கள் பங்கேற்பதற்கு மட்டுமே அனுமதியும் அளிக்கப்பட்டிருக்கிறது. தவெகவின் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு நோன்பு திறந்த பிறகு சிறப்பு தொழுகையும் நடைபெற்றது. இந்தச் சிறப்பு தொழுகையில் விஜய்யும் கலந்துகொண்டார். இதன் பிறகு உரையாற்றிய விஜய் கொள்கையில் என்றைக்கும் சமரசம் செய்துகொள்ள மாட்டோம் எனவும், பேசப்பட்டு வந்த கூட்டணி கணக்குகள் தொடர்பாகவும் பேசியிருக்கிறார்.`90 சீட்டுகள், 50-50 என டீல் பேசினார்கள்; 'என்ன அர்ஜூன் இங்கயே ஆரம்பிச்சுரலாமா?' கேட்ட விஜய்' - ஆதவ்அவர், "நான் அரசியலுக்கு வந்ததிலிருந்து நிறைய வதந்திகள் சொல்லிக்கிட்டேதான் இருக்காங்க. இவர் அந்த டீமைச் சேர்ந்தவர், இந்த டீமைச் சேர்ந்தவர்னு சொல்லிட்டு இருக்காங்க. ஆனா, இவர் எந்த டீமும் இல்லை. இவர் மக்களுடைய டீம்னு எல்லோருக்குத் தெரிஞ்சதுக்குப் பிறகு வேற என்ன அவதூறு பரப்பலாம்னு முயற்சி பண்ணிட்டு இருக்காங்க. ஆனா, அது எதுவும் வொர்க் ஆகல. அதைத் தாண்டி, இவனை என்ன பண்ணலாம்ங்கிற முயற்சியிலதான் அந்தக் கூட்டணியில், இந்தக் கூட்டணியில் சேரப் போறார்னு பொய்யான பிரசாரத்தைப் பரப்பினாங்க. தவெகவின் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு இந்த நியூஸ் கேட்டு நீங்க குழம்பியிருப்பீங்க. நாங்க எப்போதும் மதச்சார்பற்ற கொள்கையில் சமரசம் செய்துகொள்ள மாட்டோம். நம்ம தலைமையில்தான் ஆட்சி என்பது உறுதி. நம்ம முதல் மாநாட்டுல சொன்ன மாதிரிதான் என்றைக்கும் கொள்கையில் சமரசம் செய்துகொள்ள மாட்டோம். யார் என்ன அவதூறு பரப்பினாலும் நம்பாதீங்க, இறைவனின் அருளால் நம்முடைய இலக்கை நம்மால் அடைய முடியும்" எனக் கூறியிருக்கிறார்.``தமிழ்நாடு சிறந்த மாநிலம்தான்... மேடையில் விஜய் செய்த செயல்..." - ஆற்காடு நவாப் பேட்டி

vikatan
19 மார்., 05:30 AM
பலே திட்டங்களுடன் ரீ-என்ட்ரி ஆகும் துரைமுருகன் முதல் அப்செட்டில் மணியான மாஜி வரை! | கழுகார்
இந்தியா

பலே திட்டங்களுடன் ரீ-என்ட்ரி ஆகும் துரைமுருகன் முதல் அப்செட்டில் மணியான மாஜி வரை! | கழுகார்

மீண்டும் களமிறங்கும் துரைமுருகன்!பலே திட்டங்களுடன் ரீ-என்ட்ரி...தி.மு.க பொதுச்செயலாளரும், மூத்த அமைச்சருமான துரைமுருகனின் வயது மூப்பு மற்றும் உடல்நிலையைக் காரணம் காட்டி, காட்பாடியில் அவருக்குப் பதிலாக அவரது மருமகள் சங்கீதாவுக்குத்தான் சீட் எனத் தகவல் பரவின. இந்தச் சூழலில், துரைமுருகன் மீண்டும் போட்டியிடும் முடிவுக்கு வந்திருப்பதோடு, காட்பாடியில் தனது மகனும் எம்.பி-யுமான கதிர் ஆனந்த் மூலமாகக் களப் பணிகளையும் வேகப்படுத்தியிருக்கிறாராம். துரைமுருகன்களச் சூழலும் தனக்குச் சாதகமாக இருப்பதாகக் கருதும் துரைமுருகன், `இம்முறை எப்படி பிரசாரம் செய்யலாம்... மக்களை எப்படியெல்லாம் குளிர்விக்கலாம்?’ என்ற ஆலோசனையில் இருக்கியிருக்கிறாராம். பல்வேறு பலே திட்டங்களுடன், அரசியலில் ரீ-என்ட்ரி கொடுக்க தன்னுடைய உடம்பை திடப்படுத்திக் கொண்டிருக்கிறாராம் துரைமுருகன்.இழுபறியில் இணைப்பு!மாம்பழம் டு சூரியன்ஆடுதுறை பேரூராட்சி சேர்மனாக, பா.ம.க நிறுவனர் ராமதாஸின் தீவிர ஆதரவாளரும் அவர் அணியைச் சேர்ந்த தஞ்சாவூர் வடக்கு மாவட்டச் செயலாளருமான ம.க.ஸ்டாலின் இருந்து வருகிறார். தொடர்ச்சியாக ஆளும் கட்சிக்கு எதிராகக் கடுமையாகப் பேசி பேசிவந்த அவர், சமீப காலமாக அடக்கி வாசிப்பதால், 'ம.க.ஸ்டாலின் தி.மு.க-வில் இணையப் போகிறார்' என்று பேசப்பட்டது. இந்நிலையில், ஆடுதுறையில் கட்டப்பட்ட தி.மு.க முன்னாள் அமைச்சர் மறைந்த கோ.சி.மணியின் நினைவு மண்டபத்தை அமைச்சர் கே.என்.நேரு சமீபத்தில் திறந்து வைத்தார். அதற்கான முன்னெடுப்பைச் செய்த ம.க.ஸ்டாலின், நேருவின் காலில் விழுந்து ஆசி வாங்கியதைப் பார்த்து உடன்பிறப்புகளே வாயடைத்துப் போனார்களாம். 'பா.ம.க-வில் பிளவு நிலவுவதால் தி.மு.க-வில் இணைய முட்டி மோதுகிறார் ம.க.ஸ்டாலின். அதற்கு லோக்கல் உடன்பிறப்புக்கள் முட்டுக்கட்டை போடுவதால், இணைப்பு இழுத்துக்கொண்டு போகிறது' என்கிறார்கள் டெல்டா தி.மு.க-வினர். அப்செட்டில் மணியான மாஜி!அ.தி.மு.க ஆட்சிமன்றக் குழு...அ.தி.மு.க-வில் ஒற்றைத்தலைமை பஞ்சாயத்து வெடிக்கும்வரை, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், பா.வளர்மதி, தமிழ்மகன் உசேன், ஜஸ்டின் செல்வராஜ், வேணுகோபால், கே.பி.முனுசாமி என எட்டு பேர் ஆட்சி மன்றக் குழுவில் உறுப்பினர்களாக இருந்தனர். 2022-ல் ஓ.பி.எஸ், வைத்திலிங்கம் ஆகியோர் கட்சியை விட்டு நீக்கப்பட்ட பிறகு, மற்ற ஆறு பேரும் குழுவின் உறுப்பினர்களாகத் தொடர்ந்தனர். தற்போது, எஸ்.பி.வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், இன்பதுரை ஆகிய மூவரையும் ஆட்சிமன்றக் குழுவில் புதிதாக இணைத்திருக்கிறார் எடப்பாடி.எடப்பாடி பழனிசாமிஇதன்மூலமாக, குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை ஒன்பதாக உயர்ந்திருக்கிறது. விஷயம் அதுவல்ல... அந்த அறிவிப்பு இரட்டை 'மணி'களில் மற்றொரு மணியான முன்னாள் அமைச்சருக்கு கடுமையான வருத்தத்தை உண்டாக்கியிருக்கிறதாம். ஏற்கெனவே தலைமைக் கழகப் பொறுப்பிலும் இல்லை, தற்போது ஆட்சிமன்றக் குழுவிலும் பெயர் சேர்க்கப்படாததால் கடுமையான அப்செட்டில் இருக்கிறாராம். '2017 தொடங்கி தற்போது வரை டெல்லி தொடர்பான பல்வேறு விஷயங்களில் கூடவே இருந்தவன் நான். என்னைத் தொடர்ந்து புறக்கணிப்பது சரியல்ல' என தன் ஆதரவாளர்களிடம் வருத்தப்பட்டுப் பேசியிருக்கிறார்.மாற்றப்பட்ட காக்கிகள்!ஆளுங்கட்சிக்கு நெருக்கம்?தேர்தல் ஆணையத்தால் மாற்றப்பட்ட நான்கு எஸ்.பி-க்களில் மூன்று பேரின் குடும்பத்தினர் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களாம். இன்னொருவர் மாவட்ட அமைச்சருக்குத் தீவிர விசுவாசியாக இருந்து வந்தாராம். அதுதொடர்பான ரிப்போர்ட் அடிப்படையில்தான் நான்கு எஸ்.பி-க்களையும் தேர்தல் ஆணையம் மாற்றியிருக்கிறது. இவர்கள் அனைவரும் டி.ஜி.பி அலுவலகத்தில் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த இடமாறுதலைத் தொடர்ந்து ஐ.ஜி, ஏ.டி.ஜி.பி அந்தஸ்தில் உள்ள அதிகாரிகளைத் தேர்தல் ஆணையம் மாற்றத் திட்டமிட்டுள்ளதாம். காத்திருப்போர் பட்டியலுக்குச் செல்லும் நிலை இருப்பதால், ஆளுங்கட்சிக்கு விசுவாசமாக ஐ.ஜி அந்தஸ்தில் இருந்தபடி தகவல்களைப் பார்த்துச் சொன்ன அதிகாரி ஒருவர் மெடிக்கல் லீவ் லெட்டரை இப்போதே தயாராக வைத்திருக்கிறாராம்.மிஸ்டர் கழுகு: அ.தி.மு.க கூட்டணி! - ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்... கிளப்பிவிட்ட தி.மு.க!பேசி முடித்த வேலுமணி!தே.ஜ கூட்டணியில் புதிய தமிழகம்...புதிய தமிழகம் கட்சியை தே.ஜ கூட்டணிக்கு இழுத்து வரும் இறுதிக்கட்ட பணியில் மும்முரமாகியிருக்கிறாராம் முன்னாள் அமைச்சர் வேலுமணி. அதுதொடர்பாக, டாக்டர்.கிருஷ்ணசாமியுடன் இரண்டுகட்ட பேச்சுவார்த்தைகளை வேலுமணி நடத்தி முடித்திருப்பதாகக் கூறப்படுகிறது. 'ஐந்து சீட் என்பதில் உறுதியாக இருந்த கிருஷ்ணசாமியின் மனதை மாற்றி, இரண்டு சீட்டுகளை ஏற்றுக்கொள்ள வைத்துவிட்டார் வேலுமணி. விரைவிலேயே கூட்டணி உடன்படிக்கைக் கையெழுத்தாகிவிடும்' என்கின்றன எம்.ஜி.ஆர் மாளிகை வட்டாரங்கள். அதேசமயம், புதிய தமிழகத்துக்குத் தேவையான 'உதவிகள்' அனைத்தையும் செய்வதற்கு, பா.ஜ.க-வின் முன்னணி தலைவர் ஒருவர் மனம் திறந்திருப்பதால், வரும் வாரத்திலேயே எடப்பாடியுடன் கிருஷ்ணசாமி கைக்குலுக்க வாய்ப்புகள் இருக்கின்றன.முரண்டு பிடிக்கும் சிபிஎம்; ஆப்சென்ட் ஆன விசிக! - கூட்டணி தலைவலியில் அறிவாலயம்!

vikatan
19 மார்., 05:30 AM

சமீபத்திய செய்திகள்

சமீபத்திய புதுப்பித்தல்கள்

Notary Portal: "தமிழ்நாடே இல்லையா?" - மத்திய அரசின் நோட்டரி இணையதளத்தில் நிலவும் பெரும் குளறுபடி
இந்தியா

Notary Portal: "தமிழ்நாடே இல்லையா?" - மத்திய அரசின் நோட்டரி இணையதளத்தில் நிலவும் பெரும் குளறுபடி

vikatan
Mar 193 நிமிடம் படிக்க
மனோ தங்கராஜுக்கு எதிராக புகார்; ஸ்டாலின் முன்னிலையில் கொந்தளிப்பு; நேர்காணலில் நடந்தது என்ன?
இந்தியா

மனோ தங்கராஜுக்கு எதிராக புகார்; ஸ்டாலின் முன்னிலையில் கொந்தளிப்பு; நேர்காணலில் நடந்தது என்ன?

vikatan
Mar 193 நிமிடம் படிக்க
திமுகவுக்கு டஃப் கொடுக்கும் அதிமுக + அமமுக; தவெக தருமா ட்விஸ்ட்! - புதுக்கோட்டை சமஸ்தானம் யாருக்கு?
இந்தியா

திமுகவுக்கு டஃப் கொடுக்கும் அதிமுக + அமமுக; தவெக தருமா ட்விஸ்ட்! - புதுக்கோட்டை சமஸ்தானம் யாருக்கு?

vikatan
Mar 193 நிமிடம் படிக்க
முரண்டு பிடிக்கும் சிபிஎம்; ஆப்சென்ட் ஆன விசிக! - கூட்டணி தலைவலியில் அறிவாலயம்!
இந்தியா

முரண்டு பிடிக்கும் சிபிஎம்; ஆப்சென்ட் ஆன விசிக! - கூட்டணி தலைவலியில் அறிவாலயம்!

திமுக கூட்டணியில் நிலவி வரும் இழுபறிக்கு இன்னமும் ஒரு முடிவு கிடைக்கவில்லை. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் இன்று காலை கூட்டணி ஒப்பந்தத்தை முடித்த திமுக, இன்றே விசிக மற்றும் சி.பி.எம் உடனும் கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் என எதிர்பார்க்கப்பட்டது.CPI ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 'அதிக சீட்டுகள் வேண்டும்' என்கிற தங்களின் நிலைப்பாட்டி உறுதியாக நிற்பதாலும், விசிக திடீரென முதல்வருடனான சந்திப்பை தவிர்த்ததாலும் கூட்டணியை இறுதி செய்ய முடியாமல் தலைவலியில் தவிக்கிறது அறிவாலயம்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நேற்று திமுகவுடன் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தது. பேச்சுவார்த்தையை முடித்துவிட்டு, 'அதிக தொகுதிகளில் நிற்க வேண்டும் என்கிற எங்களின் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம்' என பெ.சண்முகம் பேசியிருந்தார். இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இருவருக்கும் ஒரே எண்ணிக்கையிலான தொகுதியை ஒதுக்கும் முடிவிலேயே திமுக இருந்தது. இதனால் இரு கட்சியினரும் ஒரே நாளில் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சிபிஐ இன்று காலை திமுகவுடன் 5 தொகுதிகளில் போட்டியிட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.Shanmugamசி.பி.எம் க்கும் 5 தொகுதிகளை மட்டுமே கொடுக்க திமுக முடிவெடுத்திருப்பதாகவும் தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து சி.பி.எம் இன் மாநில நிர்வாகக் குழு இன்று கூடியது. அந்தக் கூட்டத்தில் அதிக தொகுதிகளை கேட்டுப் பெறும் தங்களின் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க சி.பி.எம் முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது. அதன்படி, '6 சீட்டுக்கு மேல் என்றால் அறிவாலயத்துக்கு பேச வருகிறோம். இல்லையென்றால் எங்களை அழைக்காதீர்கள்.' என கறாராக ஒரு செய்தியை சி.பி.எம் திமுக தரப்பு கூறிவிட்டதாகவும் தோழர்கள் வட்டத்தில் கிசுகிசுக்கின்றனர். அதிக தொகுதிகளை கொடுக்க மனமில்லாத திமுக, விட்டுப்பிடிக்கும் மைண்ட் செட்டுக்கு வந்திருப்பதாக கூறுகின்றனர் அறிவாலய வட்டாரத்தினர்.சி.பி.எம் போல விசிக முரண்டு பிடிக்கவில்லை. கடந்த முறை போட்டியிட்டதிலிருந்து சீட்டுகள் குறையாது என விசிக தரப்புக்கு திமுக உத்தரவாதமும் கொடுத்திருந்தது. இதைத் தொடர்ந்து விசிக இன்று மாலை கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதாக தகவல் வெளியானது. விசிக தரப்பிலும் மாலை 5:30 மணியளவில் அறிவாலயத்தில் முதல்வரை சந்திக்க நேரம் வாங்கப்பட்டிருந்தது.திருமாவளவன்ஆனால், திடீரென மாலை 5:10 மணிக்கு முதல்வரை சந்திக்க வரவில்லை என விசிக தரப்பில் சொல்லப்பட்டதாக கூறுகின்றனர் அறிவாலய வட்டாரத்தினர். 'சீட் குறைப்பு இல்லை' என்கிற போதும் கடைசி நிமிடத்தில் விசிக முதல்வரின் அப்பாய்ண்மெண்டை கேன்சல் செய்ததில் அறிவாலயமே குழம்பி போயிருக்கிறது.அறிவாலயத்தின் தொகுதி பங்கீடு தலைவலி என்று முடியுமோ?

vikatan
Mar 19, 05:30 AM
5 நிமிடம் படிக்க

விளம்பர இடம்

உங்கள் விளம்பரத்தை இங்கே காட்சி செய்யலாம்

மேலும் செய்திகள்

தமிழ்நாடு முழுவதும் மற்றும் அதற்கு அப்பால் இருந்து சமீபத்திய கதைகளுடன் புதுப்பித்த நிலையில் இருங்கள்

`தமிழ்நாடுக்கு 5 தலைநகரங்கள்; அன்பான சர்வாதிகார ஆட்சிமுறை !' - தேர்தல் அறிக்கையை வெளியிட்ட சீமான்
இந்தியா

`தமிழ்நாடுக்கு 5 தலைநகரங்கள்; அன்பான சர்வாதிகார ஆட்சிமுறை !' - தேர்தல் அறிக்கையை வெளியிட்ட சீமான்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். அதில் பல்வேறு திட்டங்கள் பட்டியலிட்டு பேசி வருகிறார். அதின் முக்கிய வாக்குறுதிகள் தொகுப்பு... * நாதக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு தனித்தொகுதி* தமிழக தேசிய மரமாக பனைமரம் அறிவிக்கப்படும்* தமிழ்நாட்டிற்கு 5 தலைநகரங்கள் அறிவிக்கப்படும்சீமான் * அனைவருக்கும் அரசு வேலை* பாலியல் குற்றவாளிக்கு மரண தண்டனை * தலைமை செயலகம், சட்டமன்றம் உள்ளிட்டவை திருச்சியில் இடம்பெறும் வகையில் மாற்றி அமைக்கப்படும்* அரசு பள்ளிகள், கல்லூரிகளில் படித்த மாணவர்களுக்கு வேலையில் முன்னுரிமை* நாம் தமிழர் கட்சி ஆட்சியமைத்தால் தன்னலமற்ற, அன்பான சர்வாதிகார ஆட்சிமுறை கடைப்பிடிக்கப்படும். * சமூக நீதி, வாழ்வியல், தொன்மம், ஒழுக்கம் முதலியவை தொடக்கப்பள்ளி முதலே கற்றுத்தரப்படும் * நீர்நிலைகளின் கரைகளில் மண் அரிப்பைத் தடுக்கவும், கரையை வலிமைப்படுத்தவும் ஆல், அரசு, பனை, புங்கை, பூவரசு, மூங்கில், வேம்பு, புளி போன்ற மரங்கள் நடப்படும்.* புதிய கண்மாய்கள், ஏரிகள் உருவாக்கப்படும்.* நாம் தமிழர் கட்சி தண்ணீர் வணிகத்திற்கு தடைவிதிக்கும். ஒவ்வொரு வீட்டிற்கும் அரசே தூய குடிநீர் கொடுக்கும். * குளிர்பானத் தொழிற்சாலைகளுக்கு தடை விதிக்கப்படும். * தூய குடிநீர் கட்டணமின்றி வழங்கப்படும்.சீமான் * தமிழக வேளாண் பல்கலைகழகங்களில் இயற்கைவழி, மரபு வேளாண் ஆய்வுகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். * வேளாண் பொருட்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு தொகை உயர்த்தப்படும்.* மருத்துவப்படிப்பு தூய தமிழ்மொழியில் நடத்தப்படும். அரசு மருத்துவமனைகளின் தரம் உயர்த்தப்படும்.* புதிய பல் மருத்துவக் கல்லூரிகள் மாவட்டம் தோறும் தொடங்கப்படும். * கட்டணமில்லா தங்கும் விடுதிகள் வசதி வழங்கப்படும். * ஒவ்வொரு ஊராட்சியிலும் தரம் வாய்ந்த விளையாட்டு பயிற்சி திடல்கள், பயிற்சியாளர்கள் ஊராட்சி அளவிலேயே அமர்த்தப்படுவார்கள். * விளையாட்டு பல்கலைக்கழகம் தொடங்கப்படும். * அனைத்து தொகுதிகளிலும் பெண்களுக்கு சரிபாதி வேலை வாய்ப்பு வழங்கப்படும்.* மாற்றுதிறனாளிகளுக்கு தனி அமைச்சகம் உருவாக்கப்படும்.* தமிழக மீனவர்களைப் பாதுகாக்க சிறப்பு கடலோர காவல்படை 'நெய்தல் படை' என்ற பெயரில் உருவாக்கப்படும்.* பெண் காவலர்களுக்கு 6 மணி நேர வேலை, ஆண் காவலர்களுக்கு 8 மணி நேர வேலை என்று மாற்றியமைக்கப்படும்.சீமான் * காடுகளை பாதுகாக்க சிறப்பு திட்டகங்களும், புதிய சட்டங்களும் உருவாக்கப்படும்.* சாதி ரீதியிலான இட ஒதுக்கீட்டை ஒழித்து தமிழ்குடிமக்களுக்கு இடஒதுக்கீட்டில் முன்னுரிமை.* படிப்படியாக ஓராண்டிற்குள் மது ஒழிக்கப்படும்.* ஆவணப்படுகொலைக்கு எதிராக தனிச்சட்டம் கொண்டுவரப்படும்" என்பது உள்ளிட்ட வாக்குறுதிகளை அறிவித்திருக்கிறார்.

vikatan
19 மார்.
3 நிமிடம் படிக்க
'ஈரானிடம் அணு ஆயுதம் இல்லை; கமேனி தன் இறப்பிற்கு பயப்படவில்லை!' - ஜோ கென்ட் 'பரபர' தகவல்கள்
இந்தியா

'ஈரானிடம் அணு ஆயுதம் இல்லை; கமேனி தன் இறப்பிற்கு பயப்படவில்லை!' - ஜோ கென்ட் 'பரபர' தகவல்கள்

"ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் போர் இஸ்ரேலின் அழுத்தத்தால் தொடங்கப்பட்டது... மனசாட்சிக்கு விரோதமாக ட்ரம்ப் நிர்வாகத்தின் ஈரான் போரை ஆதரிக்க முடியாது..."- என்று கூறி நேற்று முன்தினம் தனது அமெரிக்காவின் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் இயக்குநர் பதவியை ராஜினாமா செய்து பரபரப்பை ஏற்படுத்தினார் ஜோ கென்ட்.தனது ராஜினாமா குறித்து நேற்று பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார் ஜோ கென்ட். அதில் அவர் பேசியிருப்பதாவது...கமேனிஈரான் 'இதை' செய்யவில்லை என்றால், இஸ்ரேல் தாக்குதல் நடத்தாது! - ட்ரம்ப்"ஈரான் திரும்ப தாக்குதல் நடத்தும் என்று தெரிந்து தான் இஸ்ரேல் தாக்குதலைத் தொடங்கியது. தங்களால் போரை தொடங்க முடியும் என்றும், அதற்கு அமெரிக்கா எதிர்வினையாற்றினால் மட்டும் போதும் என்றும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் அரசுக்கு நன்கு தெரியும். இப்போதும் சரி... கடந்த ஜூன் மாதத்தில் அமெரிக்கா தாக்குதலை தொடங்கிய போதும் சரி... ஈரான் அணு ஆயுதத்தைத் தயாரிக்கவில்லை. கமேனிக்கு இறப்பிற்குப் பயப்படவில்லைஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியைக் கொன்றது அமெரிக்காவிற்கு சாதகமாக அமையவில்லை. அதற்குப் பதிலாக, அவருடைய ஆதரவாளர்கள் தான் இன்னும் வலுவானார்கள்.அயோதுல்லா இறப்பது குறித்து அவர்கள் பயப்படவில்லை. இது அவர் பைத்தியக்காரர் என்பதால் அல்ல. தான் கொல்லப்பட்டாலும், ஈரானில் நடக்கும் ஆட்சி தொடரும் என்று அவருக்கு தெரிந்ததால், அவர் பயப்படவில்லை" என்று கூறியுள்ளார்.'உயிரோடு தான் இருக்கிறேன்' - நிரூபிக்க போராடும் நெதன்யாகு: வீடியோக்களும், சர்ச்சைகளும்! |Full Detail

vikatan
19 மார்.
3 நிமிடம் படிக்க
கைகூடாத கூட்டணி கணக்கு! - தடுமாறும் தைலாபுரம்… தனித்துவிடப்பட்ட `ராமதாஸ்' பாமக!
இந்தியா

கைகூடாத கூட்டணி கணக்கு! - தடுமாறும் தைலாபுரம்… தனித்துவிடப்பட்ட `ராமதாஸ்' பாமக!

``தனித்துப் போட்டியிடலாம்”`அன்புமணி அணி' `ராமதாஸ் அணி' என இரண்டாக பிரிந்து கிடக்கிறது பா.ம.க. அதேசமயம் கட்சியின் சின்னமும், பெயரும் அன்புமணியிடம் இருப்பதால், பெரும்பாலான நிர்வாகிகளும், தொண்டர்களும் அவர் அணியில் தஞ்சமடைந்திருக்கிறார்கள். அதில் அப்செட்டான மருத்துவர் ராமதாஸ், தி.மு.க பக்கம் செல்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால், `பா.ம.க இருக்கும் கூட்டணியில் ஒருபோதும் வி.சி.க இருக்காது' என்று திருமாவளவன் திடமாக நின்றதால், அந்தக் கதவும் அடைக்கப்பட்டுவிட்டது. இதற்கிடையில்` `பா.ம.க-வின் பெயர் மற்றும் சின்னத்தை அன்புமணி பயன்படுத்துவதற்கும், பா.ம.க தலைவர் என அவரைக் குறிப்பிட்டு தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்திற்கும் தடை விதிக்க வேண்டும்' என்றும் மருத்துவர் ராமதாஸ் தொடர்ந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இந்த சூழலில்தான் நேற்று தைலாபுரம் தோட்டத்தில் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற்றது.தைலாபுரம் தோட்டத்தில் சந்தித்துக் கொண்ட அன்புமணி, ராமதாஸ் | கோப்புப் படம்காலை 10 மணிக்கு தொடங்கிய அந்தக் கூட்டத்தில் `ராமதாஸ் பா.ம.க அணி'யின் கௌரவத் தலைவர் ஜி.கே.மணி, செயல் தலைவர் ஸ்ரீகாந்தி, சேலம் மேற்கு தொகுதியின் எம்.எல்.ஏ அருள், பொதுச் செயலாளர் முரளி சங்கர், பொருளாளர் சையது மன்சூர் உசேன், ராமதாசின் பேரன் முகுந்தன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். அப்போது, `தி.மு.க மற்றும் அ.தி.மு.க கூட்டணிக்குச் செல்வதற்கான சூழல் இல்லாததால், நாம் தனித்துப் போட்டியிடலாம். அதன்மூலம் தங்களது வாக்கு வங்கியை நிரூபித்து சின்னவருக்கு பாடம் கற்பிக்கலாம்' என்று சிலர் ஆலோசனை கூறியிருக்கிறார்கள். ஆனால், `அப்படி செய்தால் நாம் மேலும் பலவீனமாக வாய்ப்பிருக்கிறது' என்று அதை நிராகரித்திருக்கிறார் ராமதாஸ். அதையடுத்து விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் அல்லது சசிகலாவின் அ.இ.பு.த.ம.மு.க கூட்டணியுடன் தேர்தலை சந்திக்கலாம் என்றும் ஆலோசனை செய்யப்பட்டிருக்கிறது.``ஓரிரு நாட்களில் கூட்டணியை அறிவிப்போம்”ஆனால், `அவர்களுடன் கூட்டணி வைப்பதற்கு பதிலாக, தேர்தலையே நாம் புறக்கணித்துவிடலாம்' என்று ஒரு தரப்பினர் கூறியிருக்கிறார்கள். கூட்டம் முடிவதற்கு முன்பே அங்கிருந்து வெளியேறிய எம்.எல்.ஏ அருள், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ``ஏப்ரல் 6-ம் தேதி வரை அவகாசம் இருக்கிறது. அதனால் கூட்டணி குறித்து அய்யா அறிவிப்பார். சொந்த வேலை காரணமாக அய்யாவிடம் சொல்லிவிட்டுத்தான் செல்கிறேன். வலிமையான கூட்டணி அமைக்கும் வாய்ப்பு பா.ம.க-விடம் இருக்கிறது. எங்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், எங்களில் பலரை எம்.எல்.ஏ-வாக தமிழக சட்டப்பேரவைக்குள் அனுப்பி வைப்பார். சேலம் மேற்கு தொகுதியில் உறுதியாக போட்டியிட்டு வெற்றிபெறுவேன். அது மாம்பழம் சின்னத்திலா அல்லது வேறு சின்னத்திலா என்பதை காலம் முடிவு செய்யும். தேர்தல் ஆணையத்தை ஏமாற்றியதைப் போல நீதிமன்றத்தையும் ஏமாற்ற நினைக்கிறார் அன்புமணி.சசிகலாதர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். ஆனால் இறுதியில் தர்மமே வெல்லும்" என்றார். கூட்டம் முடிந்த பிறகு மாலை 7 மணிக்கு வந்த ஜி.கே.மணி, ``கூட்டணி மற்றும் போட்டியிடும் தொகுதிகள் குறித்து நிர்வாகக் குழு உறுப்பினர்களிடம் கேட்டுத் தெரிந்துகொண்டார் அய்யா. யாருடன் கூட்டணி என்பது குறித்து இன்னும் ஓரிரு நாட்களில் தெரிவிப்போம். அந்த வகையில் இந்த ஆலோசனைக் கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. யாருடன் கூட்டணி என்று இப்போது சொல்ல முடியாது. அதேபோல எதிர்பார்த்த கூட்டணி அமையவில்லை என்றும் சொல்லிவிட முடியாது" என்றவரிடம், `தேர்தல் அரசியலில் ராமதாஸ் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறாரா?' என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, ``மருத்துவர் அய்யாவின் சக்தி என்ன என்பது மக்களுக்குத் தெரியும். கட்சியின் நிலை தற்போது சரியாக இல்லாததால் நெருக்கடியாக இருக்கிறது. இல்லையென்றால் முன்பே கூட்டணியை அறிவித்திருப்போம்" என்றார். `எங்கள் குடும்பம் இப்படி ஆனதற்கு திமுக கைக்கூலிகளும் ஒரு காரணம்..!' - அன்புமணி ராமதாஸ்

vikatan
19 மார்.
3 நிமிடம் படிக்க
சீனா நோக்கிச் சென்ற 7 ரஷ்ய கப்பல்கள்; திடீரென இந்தியாவுக்கு வருவது ஏன்?!
இந்தியா

சீனா நோக்கிச் சென்ற 7 ரஷ்ய கப்பல்கள்; திடீரென இந்தியாவுக்கு வருவது ஏன்?!

சீனாவுக்குச் செல்லவிருந்த ஏழு ரஷ்ய கச்சா எண்ணெய் கப்பல்கள், திடீரென திசைமாற்றப்பட்டு இந்தியா நோக்கி வந்து கொண்டிருக்கின்றன. மத்​திய கிழக்கு பிராந்​தி​யத்​தில் நில​வும் போர்ப் பதற்​றம் காரணமாக, ஹார்​முஸ் ஜலசந்​தி​யில் கச்சா எண்​ணெய் விநியோகம் கடுமை​யாக பாதிக்கப்பட்டிருக்கிறது.​இந்திய நோக்கி வரும் கப்பல்கள்இந்த இக்கட்டான சூழலை சமாளிக்​கும் வகை​யில் ரஷ்​யா​விடம் இருந்து முன்னெப்​போதும் இல்​லாத வகை​யில் இந்​தியா அதி​கள​வில் கச்சா எண்ணெய்யை கொள்​முதல் செய்​யத் தொடங்​கி​ இருக்கிறது.சமீபத்தில் மட்டும் நம் நாடு, 3 கோடி பேரல்கள் கச்சா எண்ணெய் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்நிலையில் சீனாவுக்கு செல்ல இருந்த ஏழு ரஷ்ய கச்சா எண்ணெய் கப்பல்கள் திடீரென திசைமாற்றப்பட்டிருக்கிறது. தற்போதைய சந்தை தேவைக்கு ஏற்ப அவை நம் நாட்டு துறைமுகங்களை நோக்கி திருப்பி விடப்பட்டுள்ளன.இந்திய நோக்கி வரும் கப்பல்கள்சமீபத்தில் ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை இந்தியா குறைத்திருந்த நிலையில், தற்போது அமெரிக்காவின் அனுமதியை தொடர்ந்து, மீண்டும் ரஷ்ய எண்ணெயை அதிகமாக கொள்முதல் செய்யத் தொடங்கி இருக்கிறது. இந்தியா தவிர ஜப்பான், தென்கொரியா போன்ற நாடுகள் ரஷ்ய எண்ணெய்யை அதிகமாக வாங்கத் தொடங்கியிருப்பதால் அதன் விலை விரைவில் உயரக் கூடும் எனும் கூறப்படுகிறது.

vikatan
19 மார்.
3 நிமிடம் படிக்க
திருச்சி: தோழர் நிர்மலா ராணியின் திடீர் மரணம்! - அதிர்ச்சியில் கம்யூனிஸ்ட்கள்
இந்தியா

திருச்சி: தோழர் நிர்மலா ராணியின் திடீர் மரணம்! - அதிர்ச்சியில் கம்யூனிஸ்ட்கள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI-M) மூத்த தலைவர்களான ஆர். உமநாத் மற்றும் பாப்பா உமநாத் ஆகியோரின் இளைய மகள் உ.நிர்மலாராணி. CPIM அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் உ.வாசுகி அவர்களின் தங்கை, திருச்சி மூத்த வழக்கறிஞர் C.K.ராஜ்குமார் அவர்களின் இணையருமான இவர், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினராகவும் இருந்து வந்தார் நிர்மலாராணி. அதோடு, வழக்கறிஞராகவும், சமூக செயற்பாட்டாளராகவும் இயங்கி வந்தார். இந்நிலையில், நலமுடன் இருந்த இவர், திடீரென்று ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு, இயற்கை எய்தியிருக்கிறார். தில்லை நகரில் உள்ள அவரது இல்லத்தில் இறுதிச்சடங்கு முடிந்திருக்கிறது.அவரது மறைவு குறித்து த.மு.எ.க.ச-வைச் சேர்ந்த எழுத்தாளர் ஆதவன் தீட்ஷண்யா செய்துள்ள பதிவில், nirmalarani'தோழர் உ.நிர்மலாராணி எனக்கு இந்திய மாணவர் சங்கத்தின் சிதம்பரம் மாநில மாநாட்டின்போது அறிமுகமானவர். நான் தேன்கனிக்கோட்டையில் பணியாற்றிய 1984-86 காலகட்டத்தில் அவர் ஜூனியர் விகடன் மாணவ நிருபர் என்ற முறையில் அங்கு வந்திருந்தார். கோலட்டியில் இயங்கிவந்த மிகப் பெரிய பட்டுவளர்ப்புப்பண்ணை பற்றிய செய்தி சேகரிப்புக்காக கமலா முருகன் என்ற தோழருடன் வந்திருந்த அவருடன் தேன்கனிக்கோட்டையில் இருந்து நானும் சென்றிருந்தேன். பிற்பகலில் பண்ணையில் இருந்து திரும்பிய நாங்கள், சாப்பிட்டுவிட்டு ஓட்டலில் இருந்து வெளியே வந்தபோது லாரி ஒன்று வனத்துறை சோதனைச்சாவடியில் கட்டப்பட்டிருந்த கனத்த தடுப்புச் சங்கிலியைத் தலைதெறிக்கும் வேகத்தில் அறுத்துக்கொண்டு எங்களைக் கடந்து பாய்ந்தது. தெறித்த சங்கிலித்துண்டு ஒன்று எங்களுக்கு சில அடிகள் தூரத்தில் வந்து விழுந்தது. சிலநொடிகள் முந்தி இருந்தாலும் எங்களில் யாராவது ஒருவர் கடுமையாக காயமடைந்து இருக்கக்கூடும். அந்தச் சங்கிலித்துண்டு வந்த வேகத்தில் பட்டிருந்தால் என்னவாகியிருப்போம் என்கிற அதிர்ச்சியிலிருந்து மீளவே எங்களுக்கு கொஞ்சம் நேரமெடுத்தது. அன்றைக்கு தப்பித்தது பெரிய விசயம்தான். ஆனால், சற்றுமுன் அவர் இறந்துவிட்டதாக செய்தி வருகிறது. இவ்வளவு சீக்கிரத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிலை எனக்கு வாய்த்திருக்கக்கூடாது' என்று குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், அவரைப்பற்றி கவிவர்மன்,"தமிழகத்தில் உள்ள லீடிங் லாயரில் ஒருவர் நிர்மலாராணி தோழர். சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதியாக கடந்த வருடம் தேர்வாக இருந்து கடைசி நேரத்தில் அந்த வாய்ப்பு போனது. மறுபடியும் அவர் நீதிபதியாக அத்தனை வாய்ப்புகளும் இருந்த நிலையில், திடீரென்று தோழர் மறைந்திருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.kavivarmanஇவரது தந்தைதான் திருச்சி காட்டூர் பகுதியில் சமத்துவ சுடுகாடு அமைய பெரும் முயற்சி எடுத்தவர். 64 வயது ஆகிறது. சட்டப் போராளியாகவும், சமூக ஆய்வாளராகவும் திகழ்ந்த அவரது மறைவு தமிழக முற்போக்கு இயக்கங்களுக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பை ஏற்படுத்தியுள்ளது. தோழர் மறைவெய்திருப்பது தாங்கமுடியாத இழப்பு" என்றார்.

vikatan
19 மார்.
3 நிமிடம் படிக்க
`வெய்ட்டா கவனிக்கணும்' - அள்ளி இறைக்கத் திட்டமிடும் அதிமுக? - அதிரும் ஆற்காடு தொகுதி!
இந்தியா

`வெய்ட்டா கவனிக்கணும்' - அள்ளி இறைக்கத் திட்டமிடும் அதிமுக? - அதிரும் ஆற்காடு தொகுதி!

ராணிப்பேட்டை மாவட்டத்தில், மொத்தம் 4 சட்டமன்றத் தொகுதிகள் இருக்கின்றன. இதில், மாவட்டத் தலைநகரை உள்ளடக்கிய ராணிப்பேட்டை சட்டமன்றத் தொகுதி சிட்டிங் எம்.எல்.ஏ-வாக தி.மு.க மாவட்டச் செயலாளரும், கைத்தறித்துறை அமைச்சருமான ஆர்.காந்தி இருக்கிறார். கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின்போது, காந்தியை எதிர்த்து அ.தி.மு.க சார்பாக ராணிப்பேட்டை மேற்கு மாவட்டச் செயலாளரான எஸ்.எம்.சுகுமார் போட்டியிட்டார். அந்தத் தொகுதியில் கணிசமாக வாழும் இஸ்லாமியர்களின் வாக்குகள் போதுமான அளவு அ.தி.மு.க-வுக்குக் கைகொடுக்காததால், காந்தியிடம் சுமார் 16 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார் எஸ்.எம்.சுகுமார்.எஸ்.எம்.சுகுமார்இந்த நிலையில், வரும் தேர்தலிலும் போட்டியிடத் தயாரான அ.தி.மு.க மாவட்டச் செயலாளர் சுகுமாருக்கு ராணிப்பேட்டையை விட பக்கத்திலுள்ள ஆற்காடு தொகுதி மீதே பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. இதனால், ஆற்காடு தொகுதிக்கும் சேர்த்தே அ.தி.மு.க தலைமையில் விருப்ப மனு கட்டி வந்திருக்கிறார் சுகுமார். இதனிடையே, கடந்த முறைபோல அ.தி.மு.க கூட்டணியில் இணைந்திருக்கும் பா.ம.க-வும், மீண்டும் ஆற்காடு தொகுதியை எதிர்பார்த்து காத்திருக்கிறது.பாட்டாளிகளின் எதிர்பார்ப்பை தகர்த்தெறியும் வகையில், அ.தி.மு.க மாவட்டச் செயலாளர் எஸ்.எம்.சுகுமார் ஆற்காடு தொகுதியில் பெரிய பட்ஜெட்டுடன் களமிறங்கி தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டாராம். பாட்டாளிகளின் குமுறல் சத்தத்தை காதில் வாங்கிக்கொள்ளாத எஸ்.எம்.சுகுமார் தரப்பினர் ஆற்காடு தொகுதி முழுவதும் வீடு, வீடாகச் சென்று ரேஷன் கார்டுக்கு வேட்டி, சட்டை, புடவை, ஜாக்கெட் துணி ஆகியவற்றை கொடுத்திருக்கிறார்களாம். தேர்தல்அதுமட்டுமல்லாமல், தொகுதியைச் சார்ந்த அ.தி.மு.க-வின் கிளைச் செயலாளர், வட்டச் செயலாளர் போன்ற நிர்வாகிகளுக்கும் தலா ஒரு சிப்பம் அரிசி மூட்டையை கொடுத்துள்ளார்களாம். எல்லாவற்றையும்விட முக்கியமானதாக, தொகுதியிலுள்ள 318 பூத்களிலும் தலா 3 பூத்களுக்கு ஒரு பொறுப்பாளரை நியமித்து, வாக்காளர்களைக் கவனிக்கவும் பட்ஜெட் ஒதுக்கப்பட்டுவிட்டதாம். ஆற்காடு தொகுதியில் மொத்தமாக 2,43,565 வாக்காளர்கள் இருக்கின்றனர். அதைக் கணக்கிட்டு, வாக்காளர்களை `வெய்ட்டாக' கவனிக்க அ.தி.மு.க தரப்பு திட்டமிட்டிருக்கிறதாம்.

vikatan
19 மார்.
3 நிமிடம் படிக்க
ECO India : வீடியோ பாருங்க... பரிசை அள்ளுங்க.! - முழு தகவல்
சுற்றுச்சூழல்

ECO India : வீடியோ பாருங்க... பரிசை அள்ளுங்க.! - முழு தகவல்

ஈகோ இந்தியா: இது DW மற்றும் விகடன் குழுமம் இணைந்து உருவாக்கி வரும் சுற்றுச்சூழல் தொடர் ஆகும். தொடர்ச்சியான புதுமைகள், நவீன விவசாய முறைகள் மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் தொழில்நுட்பங்கள் மூலம் இந்தியா சுற்றுச்சூழல் பிரச்னைகளை எவ்வாறு தீர்க்கிறது என்பதே இந்தத் தொடரின் நோக்கம்... சங்க காலம் விவசாய முறை - நெல் வயலில் மீன் வளர்க்கலாமா? வீடியோ பார்த்துட்டீங்களா? இதுவரைக்கும் பார்க்கவில்லை என்றாலும் பிரச்னை இல்லை. கீழே கொடுக்கப்பட்டிருக்கும் அந்த வீடியோவை ஒருமுறை பாருங்கள். பரிசை அள்ளுங்க...! வீடியோ பார்த்தாலே பரிசா என்று கேட்கிறீர்களா? வீடியோ பார்த்துட்டு, நாங்கள் கேட்கிற கேள்விக்கு பதில் சொன்னா, அதில் தேர்ந்தெடுக்கப்படுற மூன்று பேருக்கு கட்டாயம் பரிசுகள் உண்டு..!> வீடியோவில் இருந்து தான் நிச்சயம் கேள்விகள் இருக்கும்> வெற்றியாளர்களை விகடன் தேர்வுக்குழு தான் இறுதி செய்யும்.!> வீடியோவுக்கு கீழே கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்கு மறக்காம பதில் சொல்லிடுங்க மக்களே..! Loading…

vikatan
18 மார்.
3 நிமிடம் படிக்க
69 இனங்கள்; 21,091 பறவைகள்... பாசனக் குளங்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வலசை பறவைகள்!
சுற்றுச்சூழல்

69 இனங்கள்; 21,091 பறவைகள்... பாசனக் குளங்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வலசை பறவைகள்!

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற வரியினை வாழ்வாக்கிய பறவை, வலசை. பறவைகள் பல காரணங்களுக்காகப் பயணத்தை மேற்கொள்கின்றன.பறவைகள் வெப்பமான பகுதிக்கு நகரவும், உணவுக்காகவும், வேட்டையாடும் விலங்குகளிடமிருந்து தப்பிக்கவும் வலசை செல்கின்றன. ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் வெளிநாடுகளிலிருந்து இந்தியாவை நோக்கிப் பறவைகள் வலசை வருகின்றன.நெல்லை, தென்காசி, தூத்துக்குடி போன்ற பகுதிகளில் சுமார் 100 வகையான பறவைகள் இதுவரை பதிவுசெய்யப்பட்டுள்ளன. அவற்றில் முப்பதுக்கும் மேற்பட்டவை உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து குளிர்காலத்தில் வலசை வரும் பறவைகள் ஆகும்.சமீபத்தில் நெல்லையில் தாமிரபரணியைச் சுற்றியுள்ள பகுதிகளில் வலசை பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்றது. இந்தக் கணக்கெடுப்பில் திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள 68 பாசன குளங்களில் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. இவை பறவை நிபுணர்களின் வழிகாட்டுதல்களுடன், எட்டு குழுக்களாக 250-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களோடு நடத்தப்பட்டது.இந்த தாமிரபரணி பறவைகள் கணக்கெடுப்பு நிகழ்வினைச் சிறப்பாக நடத்திய அதன் ஒருங்கிணைப்பாளர் மு.மதிவாணனிடம் பேசினோம்." 68 பாசனக் குளங்களில் 69 இனங்களைச் சேர்த்து மொத்தம் 21,091 வலசை பறவைகள் பதிவாகியுள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கடம்பக்குளம் பகுதியில் அதிகபட்சமாக 45 இனங்களைச் சேர்ந்த 2, 292 பறவைகள் பதிவாகியுள்ளது.இதனைத் தொடர்ந்து வெள்ளூர் கஸ்பா (1,804 பறவைகள் – 39 இனங்கள்), பெருங்குளம் (1,531 பறவைகள் – 39 இனங்கள்), திருநெல்வேலி மாவட்டத்தின் கங்கை கொண்டான் (1,232 பறவைகள் – 32 இனங்கள்) மற்றும் மேல்புதுக்குடி சுனை (1,217 பறவைகள் – 35 இனங்கள்) ஆகிய பகுதிகள் முக்கியமானவையாக இருந்தன.சிறுநீர்க்காகம் (2,579), நாமக் கோழி (2,155), பழசைப் பறவையான மீசை ஆலா (1,148), சின்ன ஆன்றில் (1,107), நீளவால் இலைக் கோழி (1,095) மற்றும் வலசை பறவையான தகைவிலான் (1,093) அதிக எண்ணிக்கையில் பதிவாகியுள்ளது.birdsபதிவானவ பறவைகளில் 36 சதவிகிதம் வலசைப் பறவைகள் தான். இவை வடக்கு ஐரோப்பாவின் இனப்பெருக்க பகுதிகளை இந்தியா உட்பட தென்னாசியாவின் குளிர்கால ஈர நிலங்களுடன் இணைக்கும் மத்திய ஆசிய பறவை பரப்பு பாதையை (Central Asian Flyway) பயன்படுத்துகின்றன.தாமிரபரணி பாசனக் குளங்களே வலசை பறவைகளுக்கான மிக முக்கியமான வாழ்விடம். 2026 கணக்கெடுப்பில் மொத்தம் 8,912 வலசை பறவைகள் பதிவாகியுள்ளது. இதில் அச்சுறுத்தல் நிலையை அண்மித்த இனமான (Near Threatened) கருவால் மூக்கன், வரித்தலை வாத்து, ஊசிவால் வாத்து, நீலச்சிறகு வாத்து, நாமத்தலை வாத்து போன்ற வலசை வாத்தினங்களும் அடங்கும்.திருநெல்வேலி மாவட்டத்தின் வடக்கு கழுவூர், கங்கை கொண்டான், மானூர், மாறாந்தை மற்றும் தென்காசி மாவட்டத்தின் வாகைக்குளம் ஆகிய பாசனக் குளங்களில் கூளக்கடா, கருந்தலை அன்றில், சின்ன அன்றில், பாம்புத் தாரரா, இந்திய நீர்க்காகம், சிறிய நீர்க்காகம், நத்தைக்குத்தி நாரை போன்ற இனங்கள் இனப்பெருக்க நிலையில் காணப்பட்டன. இதன் மூலம், கூந்தன்குளம் போன்ற பாதுகாக்கப்பட்ட பறவைக் காப்பகங்களைத் தாண்டியும் பாசனக் குளங்கள் இனப்பெருக்கத்திற்கு மிக முக்கியமானவை என்பது தெளிவாகிறது.உள்நாட்டு மற்றும் வலசை பறவைகளுக்கு பெரிய பாசனக் குளங்கள் எவ்வளவு முக்கியமானவை என்பதை தூத்துக்குடி மாவட்டத்தில் பதிவாகியுள்ள 51 % பறவைகள் மற்றும் இனப் பல்வகைமையில் 80 சதவிகிதத்தையும் கொண்டு அறியலாம்.birdsதிடக் கழிவுகள் கொட்டுதல், குளக்கரைகளில் மது அருந்துதல், அயல் தாவர மற்றும் மீன் இனங்களின் ஆக்கிரமிப்பு, நகர்ப்புற குளங்களில் கழிவுநீர் கலப்பு போன்ற பல்வேறு அச்சுறுத்தல்கள் முக்கியமான வாழ்விடங்களைத் தொடர்ந்து பாதித்து வருகின்றன. இவை நீர்ப்பறவைகளின் வாழ்விடங்களுக்கு கடுமையான ஆபத்துகளை ஏற்படுத்துவதால், ஒருங்கிணைந்த மேலாண்மை நடவடிக்கைகள் அவசியமாகின்றன.அது மட்டுமன்றி பாசனக் குளங்கள் அழிவடைந்தாலோ, தரம் குறைந்தாலோ, சர்வதேச வலசைப் பறவைகள் வருகின்ற பாதைகள் பாதிக்கப்படும். எனவே நீர்ப் பறவைகளின் நீண்ட காலப் பாதுகாப்பிற்கு பாசனக் குளங்களின் பாதுகாப்பு, மீளுருவாக்கம் மற்றும் நிலைத்த மேலாண்மை மிகவும் முக்கியமானது மற்றும் அவசியமானது ஆகும்" என்று விளக்கினார்.

vikatan
18 மார்.
3 நிமிடம் படிக்க
ஊட்டி: அருகருகே மர்மமான முறையில் இறந்து கிடந்த 2 சிறுத்தைகள்; தீவிர விசாரணையில் வனத்துறை
சுற்றுச்சூழல்

ஊட்டி: அருகருகே மர்மமான முறையில் இறந்து கிடந்த 2 சிறுத்தைகள்; தீவிர விசாரணையில் வனத்துறை

சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த நீலகிரியில் வனவிலங்குகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது.வனவிலங்குகளின் இயற்கைக்கு மாறான இறப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக வனத்தை ஒட்டிய தனியார் தேயிலைத் தோட்டங்களில் புலி, சிறுத்தை போன்ற உயிரினங்கள் மர்மமான முறையில் இறந்து வருகின்றன.உயிரிழந்த சிறுத்தை இந்த நிலையில், ஊட்டி அருகில் உள்ள மஞ்சக்கொம்பை பகுதியில் சிறுத்தை ஒன்று அசைவற்றுக் கிடப்பதாக வனத்துறையினருக்கு உள்ளூர் மக்கள் நேற்று காலை தகவல் தெரிவித்துள்ளனர்.அந்தப் பகுதிக்கு வனத்துறையினர் குழுவாகச் சென்று ஆய்வு மேற்கொண்டதில் இரண்டு சிறுத்தைகள் அந்தப் பகுதியில் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.உடனடியாக உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் இரண்டு சிறுத்தைகளின் உடல்களையும் கூறாய்வு செய்து அதே இடத்தில் வைத்து தீயிட்டு எரித்துள்ளனர்.இந்தத் துயரம் குறித்து தெரிவித்த வனத்துறையினர், "குந்தா வனச்சரகத்திற்கு உட்பட்ட மஞ்சக்கொம்பை பகுதியில் உள்ள ஒரு தனியார் இடத்தில் சுமார் 2 வயது மதிக்கத்தக்க பெண் சிறுத்தை மற்றும் 6 வயது மதிக்கத்தக்க ஆண் சிறுத்தை என இரண்டு சிறுத்தைகள் அருகருகே மர்மமான முறையில் இறந்து கிடந்தன. உயிரிழந்த சிறுத்தை இதைப் பார்த்த உள்ளூர் மக்கள் எங்களுக்குத் தகவல் தெரிவித்தனர். இந்த இரண்டு சிறுத்தைகளும் விஷம் வைத்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என மக்கள் கூறினர். அது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம்.அதேவேளையில் சிறுத்தைகளை செந்நாய்கள் தாக்கியதற்கான அடையாளங்களையும் காண முடிகின்றன. அந்தக் கோணத்திலும் விசாரணை நடத்தி வருகிறோம். உடற்கூறாய்வு முடிவுகளின் அடிப்படையில் உண்மை தெரியவரும்" என்றனர்.ஊட்டி: கஞ்சா விற்கும் போலீஸ்; போதையில் சுழலும் ஸ்டேஷன் டூட்டி காவலர்கள்; கொந்தளிப்பில் மக்கள்

vikatan
18 மார்.
3 நிமிடம் படிக்க
`மசினகுடியின் அடையாளம்‌ மட்டுமல்ல எங்களின் செல்லக் குழந்தை' - ரிவால்டோ யானை மறைவால் கண்ணீரில் மக்கள்
சுற்றுச்சூழல்

`மசினகுடியின் அடையாளம்‌ மட்டுமல்ல எங்களின் செல்லக் குழந்தை' - ரிவால்டோ யானை மறைவால் கண்ணீரில் மக்கள்

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மசினகுடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடமாடி வந்த ஆண் யானை ஒன்றிற்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தும்பிக்கையில் காயம் ஏற்பட்டுள்ளது. குணப்படுத்த முடியாத அளவிற்கு நிரந்தர குறைபாடாக மாறியதால் உணவுக்காக குடியிருப்பு பகுதியில் தஞ்சமைடையும் நிலைக்கு தள்ளப்பட்டது. ரிவால்டோ காட்டு யானைரிவால்டோ ரிவால்டோ என உள்ளூர் மக்களால் பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டு வந்த அந்த ஆண் யானை, மிகவும் கம்பீரமாக தோற்றமளித்தாலும் மக்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படுத்தாமல் நட்பு பாராட்டி வந்தது. இதனை சாதகமாக்கிக் கொண்ட தனியார் தங்கும் விடுதிகள் சில, ரிவால்டோ யானையை சுற்றுலா பயணிகள் மத்தியில் காட்சிப் பொருளாக மாற்றி வேடிக்கை காண்பித்து லாபம் ஈட்டி வந்தன. தொடர்ந்து குடியிருப்பு பகுதியிலும் சாலை ஓரங்களிலும் உணவு தேடி வந்த இந்த யானையை தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமிற்கு கொண்டுச் செல்ல வனத்துறையினர் முடிவு செய்தனர். அதற்கான முயற்சியில் ஈடுபட்டு பிரத்யேக மரக்கூண்டிலும் ரிவால்டோ யானையை அடைத்தனர். இந்த விவகாரத்தில் தலையிட்ட சென்னை உயர்நீதிமன்றம், அந்த யானைக்கு சிகிச்சை அளித்து மீண்டும் வனப்பகுதிக்குள் விடுவிக்க வேண்டும் என 2021 - ம் ஆண்டு உத்தரவிட்டது. 8 பேர் கொண்ட நிபுணர்கள் குழுவினர் ரிவால்டோ யானை குறித்து ஆய்வு மேற்கொண்டு மீண்டும் வனப்பகுதிக்குள் விடுவித்தனர்.ரிவால்டோ யானைரேடியோ காலர் பொருத்தப்பட்ட அந்த யானையை 24 மணி நேரமும் வனத்துறையினர் கண்காணித்து வந்தனர். இந்த நிலையில், கடந்த அக்டோபர் மாதம் வனத்துறையினரின் கண்காணிப்பில் இருந்து மறைந்த ரிவால்டோ யானை, கடந்த சில நாள்களுக்கு முன்பு மீண்டும் தென்பட்டது. உடலின் பல இடங்களிலும் கடுமையான காயங்களுடன் காணப்பட்ட‌ அந்த யானைக்கு வனத்துறையினர் கடந்த மூன்று நாள்களாக சிகிச்சை அளித்து வந்துள்ளனர். ஆனால், சிகிச்சை பலனின்றி ரிவால்டோ யானை நேற்று மதியம் பரிதாபமாக உயிரிழந்தது. மசினகுடியின் அடையாளமாகவே வலம் வந்துக் கொண்டிருந்த 50 வயது ஆண் யானையின் மறைவு வனத்துறையின் களப்பணியாளர்கள் மட்டுமின்றி உள்ளூரைச் சேர்ந்த சாமானிய மக்களிடையேயும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.ரிவால்டோ யானை குறித்து உள்ளுர் மக்கள், " கடந்த 20 ஆண்டுகளாக ரிவால்டோ யானை மசினகுடி பகுதியில் நடமாடி வந்தது. இதுவரை யாருக்கும் எந்த தொந்தரவும் கொடுத்ததில்லை. ஒருபோதும் கோபமாக நடந்ததில்லை. மசினகுடியின் அடையாளம் மட்டுமில்லை. எங்களின் செல்லக் குழந்தை இந்த ரிவால்டோ. அதனால் தான் எல்லோரும் ரிவால்டோவிற்காக கண்ணீர் வடிக்கிறார்கள்" என்றனர். ரிவால்டோ எனும் யானையும் மார்க் எனும் மனிதனும்!

vikatan
18 மார்.
3 நிமிடம் படிக்க
கோவை: வயிற்றில் கருவுடன் உயிரிழந்த பெண் யானை; ரயில் மோதியதில் மற்றொரு யானைக்கும் சோகம்
சுற்றுச்சூழல்

கோவை: வயிற்றில் கருவுடன் உயிரிழந்த பெண் யானை; ரயில் மோதியதில் மற்றொரு யானைக்கும் சோகம்

கோவை மாவட்டம், மதுக்கரை பகுதி நவக்கரை அருகே பெண் காட்டு யானை உயிரிழந்திருப்பதாக வனத்துறைக்குத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர்.பெண் யானைமருத்துவக் குழுவினர் யானைக்குப் பிரேதப் பரிசோதனை செய்தனர். அதில் யானையின் உடலில் எந்தக் காயங்களும் இல்லை என்று தெரியவந்தது. மேலும் இறந்த பெண் யானை கருவுற்ற நிலையில் உயிரிழந்ததும் தெரியவந்துள்ளது.அந்த யானையின் வயிற்றில் இருந்து 13 மாதங்களான சிசு எனக் கண்டறியப்பட்டது. இதே யானைதான் கடந்த வாரம் குப்பனூர் பகுதியில் சேற்றில் சிக்கியது. உயிரிழந்த யானைக்குச் சுமார் 50 வயதிருக்கும். மேலும் யானையின் உடல் உறுப்புகள் பல செயலிழந்துவிட்டன.ஊட்டி: யானை - மனித எதிர்கொள்ளல்களைத் தடுக்க AI; "புதிய மைல்கல்" - வனத்துறை நம்பிக்கைகோவை அதனால்தான் கடந்த சில வாரங்களாக உணவு உட்கொள்ளாமல் இருந்துள்ளது. வயிற்றில் குட்டியுடன் பெண் யானை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தமிழ்நாடு – கேரளா எல்லையில் நடைபெற்ற மற்றொரு சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், வாளையாறு அருகே உள்ள வட்டப்பாறை பகுதியில் இன்று அதிகாலை 4 மணியளவில் யஷ்வந்த்பூர் ரயில் வேகமாகச் சென்றுள்ளது.யானைஅப்போது அந்த வழியே ஒரு யானைக் கூட்டம் தண்டவாளத்தைக் கடந்துள்ளது. இதில் சுமார் 4 வயது மதிக்கத்தக்க குட்டி ஆண் யானை மீது ரயில் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளது.தென்காசி: யானை - மனித மோதல்களைத் தடுக்க பூர்வீகத் தாவரங்கள் நடவு; வனத்துறை திட்டத்தின் பின்னணி என்ன?

vikatan
18 மார்.
3 நிமிடம் படிக்க
ECO India : இறால் பண்ணை முதல் Pizza வரை... வீடியோ பாருங்க... பரிசை அள்ளுங்க.! - இந்த வாரம் தயாரா?
சுற்றுச்சூழல்

ECO India : இறால் பண்ணை முதல் Pizza வரை... வீடியோ பாருங்க... பரிசை அள்ளுங்க.! - இந்த வாரம் தயாரா?

ஈகோ இந்தியா: இது DW மற்றும் விகடன் குழுமம் இணைந்து உருவாக்கி வரும் சுற்றுச்சூழல் தொடர் ஆகும். தொடர்ச்சியான புதுமைகள், நவீன விவசாய முறைகள் மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் தொழில்நுட்பங்கள் மூலம் இந்தியா சுற்றுச்சூழல் பிரச்னைகளை எவ்வாறு தீர்க்கிறது என்பதே இந்தத் தொடரின் நோக்கம்...இறால் பண்ணை முதல் Pizza வரை - பூச்சிகள் புரத உணவா? | Future Food | Eco India S2 EP-4 Vikatan DWஇந்த வீடியோவை பார்த்துட்டீங்களா.... அப்போ இங்க க்ளிக் பண்ணுங்க... CLICK HEREஇதுவரைக்கும் பார்க்கவில்லை என்றாலும் பிரச்னை இல்லை. கீழே கொடுக்கப்பட்டிருக்கும் அந்த வீடியோவை ஒருமுறை பாருங்கள். பரிசை அள்ளுங்க...!வீடியோ பார்த்தாலே பரிசா என்று கேட்கிறீர்களா? வீடியோ பார்த்துட்டு, நாங்கள் கேட்கிற கேள்விக்கு பதில் சொன்னா, அதில் தேர்ந்தெடுக்கப்படுற மூன்று பேருக்கு கட்டாயம் பரிசுகள் உண்டு..!> வீடியோவில் இருந்து தான் நிச்சயம் கேள்விகள் இருக்கும்> வெற்றியாளர்களை விகடன் தேர்வுக்குழு தான் இறுதி செய்யும்.!> வீடியோவுக்கு கீழே கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்கு மறக்காம பதில் சொல்லிடுங்க மக்களே..! Loading…

vikatan
18 மார்.
3 நிமிடம் படிக்க
ECO India : வீடியோ பார்த்து பரிசை வென்றவர்கள் இவர்கள்.!
சுற்றுச்சூழல்

ECO India : வீடியோ பார்த்து பரிசை வென்றவர்கள் இவர்கள்.!

ஈகோ இந்தியா: இது DW மற்றும் விகடன் குழுமம் இணைந்து உருவாக்கி வரும் சுற்றுச்சூழல் தொடர் ஆகும். தொடர்ச்சியான புதுமைகள், நவீன விவசாய முறைகள் மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் தொழில்நுட்பங்கள் மூலம் இந்தியா சுற்றுச்சூழல் பிரச்னைகளை எவ்வாறு தீர்க்கிறது என்பதே இந்தத் தொடரின் நோக்கம்...இதன் வீடியோக்களை பார்த்து, அதில் இருந்து கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளித்து அதில் வெற்றியாளர்களை தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பரிசு அளிக்கப்படும் என தெரிவித்திருந்தோம. முதல் வீடியோவான சங்க காலம் விவசாய முறை - நெல் வயலில் மீன் வளர்க்கலாமா? வீடியோவை பார்த்து அது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்து வெற்றியாளர்களாக தேர்வானவர்களை பார்க்கலாம். முன்னதாக இந்த வார போட்டியில் பங்குபெற.. CLICK HEREபரிசு...

vikatan
18 மார்.
3 நிமிடம் படிக்க
பிடிபட்ட 50 சிறுத்தை புலிகள்; அம்பானியின் வந்தாரா உயிரியல் மையத்திற்கு அனுப்பும் மகாராஷ்டிரா அரசு!
சுற்றுச்சூழல்

பிடிபட்ட 50 சிறுத்தை புலிகள்; அம்பானியின் வந்தாரா உயிரியல் மையத்திற்கு அனுப்பும் மகாராஷ்டிரா அரசு!

மகாராஷ்டிராவில் சிறுத்தை புலிகள் அடிக்கடி பொதுமக்கள் வசிக்கும் பகுதிக்குள் வந்து இரைதேடுகின்றன. இதனால் அவற்றை வனத்துறை அதிகாரிகள் பிடித்து கூண்டில் அடைத்து வைத்திருக்கின்றனர். அவ்வாறு பிடிக்கப்படும் சிறுத்தை புலிகள் பின்னர் வனப்பகுதியில் விடப்படுவது வழக்கம். ஆனால் அவ்வாறு பிடிபட்ட சிறுத்தை புலிகளை மாநில வனத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கூண்டில் அடைத்து வைத்திருக்கின்றனர். அவற்றை தொடர்ந்து பராமரிப்பதில் அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அடைத்து வைக்கப்பட்டு இருக்கும் சிறுத்தை புலிகளில் 50ஐ குஜராத்தில் இருக்கும் அம்பானியின் வந்தாரா உயிரியல் மையத்திற்கு அனுப்ப அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக மாநில வனத்துறை அமைச்சர் கணேஷ் நாயக் வெளியிட்டுள்ள எக்ஸ்தள பதிவில், ``கூண்டில் அடைக்கப்பட்டுள்ள சில சிறுத்தைபுலிகள் குஜராத்தில் உள்ள ஜாம்நகர் வந்தாரா உயிரியல் மையத்திற்கு அனுப்பப்படும்" என்று குறிப்பிட்டுள்ளார். வந்தாரா விலங்குகள் மையம்மனித-விலங்கு மோதலை குறைக்க பிடிபட்ட 67 சிறுத்தைகள் பல்வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்படும் என்றும், அவற்றில் 50 சிறுத்தைகள் வந்தாராவிற்கு மாற்றப்படும் என்றும் வனத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த முடிவை விலங்குகள் நல ஆர்வலர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர். இது குறித்து நாண்டெட்டை சேர்ந்து விலங்குகள் நல ஆர்வலர் நிதின் கூறுகையில், ''சிறுத்தைபுலிகளை இவ்வாறு உயிரியல் பூங்காவிற்கு அனுப்புவது தவறு. இந்த வேட்டையாடும் சிறுத்தை புலி இனங்களை அதன் சொந்த வன வாழ்விடங்களில் வளர அனுமதிக்கவேண்டும். அவற்றை ஒரு சிறிய மிருகக்காட்சிசாலை அல்லது வனவிலங்கு மையத்திற்கு அனுப்புவது இதற்கு தீர்வாகாது. கூண்டுகளில் அடைக்கப்பட்டுள்ள 21 சிறுத்தைபுலிகளை வனப்பகுதியில் விடும்படி கடந்த 3 மாதங்களாக வனத்துறை அதிகாரிகளிடம் கோரி வருகிறேன். ஆனால் அவர்கள் அதற்கு தயாராக இல்லை. வனப்பகுதியை மனிதர்கள் ஆக்கிரமிப்பதால் வனவிலங்குகள் வாழ போதிய இடம் கிடைப்பதில்லை''என்று தெரிவித்தார். வனசக்தி என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருபவரும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான டி.ஸ்டாலின் இது குறித்து கூறுகையில்,''மனித-விலங்கு மோதல் பிரச்சினையைத் தவிர, சிறுத்தை புலிகள் காடுகளின் இயற்கையான பாதுகாவலர்கள் என்பதால், காடுகளுக்குள் சுதந்திரமாக சுரங்க பணிகளை மேற்கொள்ள பல சிறுத்தைகள் அங்கிருந்து வெளியேற்றப்படுவதாக உணர்கிறேன். முன்னதாக, சிறுத்தைகளை கருத்தடை செய்ய ஒரு வினோதமான திட்டம் இருந்தது" என்று கூறினார்.

vikatan
18 மார்.
3 நிமிடம் படிக்க
ECO India : வீடியோ பார்த்து பரிசை வென்றவர்கள் இவர்கள்.! | EP 03
சுற்றுச்சூழல்

ECO India : வீடியோ பார்த்து பரிசை வென்றவர்கள் இவர்கள்.! | EP 03

ஈகோ இந்தியா: இது DW மற்றும் விகடன் குழுமம் இணைந்து உருவாக்கி வரும் சுற்றுச்சூழல் தொடர் ஆகும். தொடர்ச்சியான புதுமைகள், நவீன விவசாய முறைகள் மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் தொழில்நுட்பங்கள் மூலம் இந்தியா சுற்றுச்சூழல் பிரச்னைகளை எவ்வாறு தீர்க்கிறது என்பதே இந்தத் தொடரின் நோக்கம்...இதன் வீடியோக்களை பார்த்து, அதில் இருந்து கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளித்து அதில் வெற்றியாளர்களை தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பரிசு அளிக்கப்படும் என தெரிவித்திருந்தோம. மூன்றாம் வீடியோவான விவசாயிகள், மீனவர்கள் நம்பும் Weather Influencers | Pradeep John TN Weatherman | Eco India S2 EP-3 வீடியோவை பார்த்து அது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்து வெற்றியாளர்களாக தேர்வானவர்களை பார்க்கலாம். முன்னதாக இந்த வார போட்டியில் பங்குபெற.. CLICK HEREபரிசு...

vikatan
18 மார்.
3 நிமிடம் படிக்க
ECO India : வீடியோ பார்த்து பரிசை வென்றவர்கள் இவர்கள்.! | EP 04
சுற்றுச்சூழல்

ECO India : வீடியோ பார்த்து பரிசை வென்றவர்கள் இவர்கள்.! | EP 04

ஈகோ இந்தியா: இது DW மற்றும் விகடன் குழுமம் இணைந்து உருவாக்கி வரும் சுற்றுச்சூழல் தொடர் ஆகும். தொடர்ச்சியான புதுமைகள், நவீன விவசாய முறைகள் மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் தொழில்நுட்பங்கள் மூலம் இந்தியா சுற்றுச்சூழல் பிரச்னைகளை எவ்வாறு தீர்க்கிறது என்பதே இந்தத் தொடரின் நோக்கம்...இதன் வீடியோக்களை பார்த்து, அதில் இருந்து கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளித்து அதில் வெற்றியாளர்களை தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பரிசு அளிக்கப்படும் என தெரிவித்திருந்தோம. நான்காம் எபிசொடு வீடியோவை பார்த்து அது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்து வெற்றியாளர்களாக தேர்வானவர்களை பார்க்கலாம். முன்னதாக இந்த வார போட்டியில் பங்குபெற.. CLICK HEREபரிசு...ECO India

vikatan
18 மார்.
3 நிமிடம் படிக்க

அதிகம் படிக்கப்பட்டது

எங்கள் வாசகர்கள் பேசும் பிரபலமான கதைகள்