தமிழ் டைம்ஸ் logo
இன்ஸ்டாகிராமில் கலக்கிய அமலா ஷாஜி.. இப்ப ஹீரோயின்.. அதுவும் விக்ரம் பிரபுவுடன்.. என்ன படம் தெரியுமா?
பொழுதுபோக்கு

இன்ஸ்டாகிராமில் கலக்கிய அமலா ஷாஜி.. இப்ப ஹீரோயின்.. அதுவும் விக்ரம் பிரபுவுடன்.. என்ன படம் தெரியுமா?

Amala Shaji Rose to Fame on Instagram.. Now She's a Heroine, Paired With Vikram Prabhu.. Guess Which Movie?

oneindia
செப். 18, 12:00 AM
அருவியில் கவர்ச்சி காட்சி.. 21 வயதில் நடிகை தற்கொலை! உச்சத்தில் இருந்த விஜயஸ்ரீக்கு நடந்தது என்ன?
பொழுதுபோக்கு

அருவியில் கவர்ச்சி காட்சி.. 21 வயதில் நடிகை தற்கொலை! உச்சத்தில் இருந்த விஜயஸ்ரீக்கு நடந்தது என்ன?

Vijayasree entered cinema at 13 and became a leading Malayalam actress within a few years(உச்சத்தில் இருந்த மலையாள நடிகை திடீர் தற்கொலை): All things to know about Vijayasree death.

oneindia
செப். 18, 12:00 AM
நைட்டு முழுக்க பிச்சு உதறப் போகுது மழை.. இரவோடு இரவாக 15 மாவட்டங்களுக்கு அலர்ட் விடுத்த வானிலை மையம்
வானிலை

நைட்டு முழுக்க பிச்சு உதறப் போகுது மழை.. இரவோடு இரவாக 15 மாவட்டங்களுக்கு அலர்ட் விடுத்த வானிலை மையம்

The Regional Meteorological Centre in Chennai has stated that there is a possibility of rain accompanied by thunder and lightning in 15 districts of Tamil Nadu—including Salem, Nellai, Thoothukudi, and Ramanathapuram—tonight. The Centre also indicated that light to moderate rain is likely in Chennai tonight.

oneindia
செப். 18, 12:00 AM
ஏஐ தான் எதிர்காலம்.. தமிழக அரசின் பட்ஜெட்டில் சூப்பர் திட்டம்.. கல்லூரி மாணவர்கள் அறிய வேண்டியவை
செயற்கை நுண்ணறிவு

ஏஐ தான் எதிர்காலம்.. தமிழக அரசின் பட்ஜெட்டில் சூப்பர் திட்டம்.. கல்லூரி மாணவர்கள் அறிய வேண்டியவை

TN Finance Minister Maria Wilson announced in the budget that Artificial Intelligence skill training would be provided to 500,000 youths studying in engineering colleges, polytechnic colleges, and industrial training institutes by the year 2031.

oneindia
செப். 18, 12:00 AM
Emmy 2026: கோலாகலமாக நடந்து முடிந்த 78வது எம்மி விருதுகள்; வெற்றியாளர்கள் யார் யார்... முழு பட்டியல்
பொழுதுபோக்கு

Emmy 2026: கோலாகலமாக நடந்து முடிந்த 78வது எம்மி விருதுகள்; வெற்றியாளர்கள் யார் யார்... முழு பட்டியல்

78-வது எம்மி விருதுகள் வழங்கும் விழா லாஸ் ஏஞ்சலஸிலுள்ள பீகாக் தியேட்டரில் (Peacock Theater) நடைபெற்றது. அதில் பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. விருது வென்ற வெற்றியாளர்களின் பட்டியலைப் பின்வருமாறு பார்க்கலாம்.Emmy Awardsசிறந்த நாடகத் தொடர் (Drama Series):ஆர். ஸ்காட் ஜெம்மில் இயக்கிய 'தி பிட்' (The Pitt) சிறந்த நாடகத் தொடருக்கான விருதினை வென்றது. 'தி பிட்' தொடர்ச்சியாக 2-வது ஆண்டாகச் சிறந்த நாடகத் தொடருக்கான விருதை வென்றது கூடுதல் சிறப்பாகப் பார்க்கப்பட்டது.சிறந்த நகைச்சுவைத் தொடர் (Comedy Series):கேட்டி டிப்போல்ட் இயக்கிய `விடோஸ் பே' (Widow’s Bay) என்ற தொடருக்குச் சிறந்த நகைச்சுவைத் தொடருக்கான விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது. நாடகத் தொடர் – சிறந்த நடிகர்: நாடகத் தொடரில் சிறந்த நடிகருக்கான விருதினை 'தி பிட்' தொடரில் நடித்த 'நோவா வைல்' (Noah Wyle) வென்றார். நாடகத் தொடர் – சிறந்த நடிகை: நாடகத் தொடரில் சிறந்த நடிகைக்கான விருதினை 'ப்ளூரிபஸ்' (Pluribus) தொடரில் நடித்த 'ரியா சீஹார்ன்' (Rhea Seehorn) வென்றார்.நாடகத் தொடர் – சிறந்த துணை நடிகர்:'டாஸ்க்' (Task) நாடகத் தொடரில் நடித்ததற்காகச் சிறந்த துணை நடிகருக்கான விருதினை 'டாம் பெல்ஃப்ரி' (Tom Pelphrey) வென்றார்.நாடகத் தொடர் – சிறந்த துணை நடிகை:'தி டிப்ளமேட்' (The Diplomat) நாடகத் தொடரில் நடித்ததற்காகச் சிறந்த துணை நடிகைக்கான விருதினை அல்லிசன் ஜேனி (Allison Janney) வென்றார்.Allison Janney - The Diplomatநகைச்சுவைத் தொடர் – சிறந்த நடிகர்:நகைச்சுவைத் தொடரில் சிறந்த நடிகருக்கான விருதினை மேத்யூ ரைஸ்' (Matthew Rhys) விடோஸ் பே' (Widow’s Bay) தொடரில் நடித்ததற்காக வென்றார்.நகைச்சுவைத் தொடர் – சிறந்த நடிகை:நகைச்சுவைத் தொடரில் சிறந்த நடிகைக்கான விருதினை ஜீன் ஸ்மார்ட்' (Jean Smart) ஹேக்ஸ்' (Hacks) தொடரில் நடித்ததற்காக வென்றார். ஹேக்ஸ் தொடருக்காகத் தொடர்ச்சியாக 5-வது முறையாக நகைச்சுவைத் தொடரில் சிறந்த நடிகைக்கான விருதினை வென்றார்.நகைச்சுவைத் தொடர் – சிறந்த துணை நடிகர்:'ஸ்டீபன் ரூட்' (Stephen Root) நகைச்சுவைத் தொடரில் சிறந்த துணை நடிகருக்கான விருதினை `விடோஸ் பே' (Widow’s Bay) தொடரில் நடித்ததற்காக வென்றார்.நகைச்சுவைத் தொடர் – சிறந்த துணை நடிகை:'கேட் ஓ’ஃப்ளின்' (Kate O’Flynn) நகைச்சுவைத் தொடரில் சிறந்த துணை நடிகைக்கான விருதினை `விடோஸ் பே' (Widow’s Bay) தொடரில் நடித்ததற்காக வென்றார்.சிறந்த ஆந்தாலஜி/ லிமிடெட் தொடர்:`டி.டி.எஃப் செயிண்ட் லூயிஸ்' (DTF St. Louis) என்ற தொடருக்குச் சிறந்த லிமிடெட் மற்றும் ஆந்தாலஜி தொடர் என்ற பிரிவின் கீழ் விருது வழங்கப்பட்டது.ஆந்தாலஜி / லிமிடெட் தொடர் – சிறந்த நடிகர்:`தி பீஸ்ட் இன் மீ' (The Beast in Me) தொடரில் நடித்ததற்காக மேத்யூ ரைஸுக்கு (Matthew Rhys) லிமிடெட் தொடரில் சிறந்த நடிகர் என்ற பிரிவின் கீழ் விருது வழங்கப்பட்டது.ஆந்தாலஜி தொடர் – சிறந்த நடிகை:'ரிமார்க்கப்ளி பிரைட் க்ரீச்சர்ஸ்' (Remarkably Bright Creatures) தொடரில் நடித்ததற்காகச் சாலி ஃபீல்ட் (Sally Field) லிமிடெட் தொடரில் சிறந்த நடிகை என்ற பிரிவின் கீழ் விருது வழங்கப்பட்டது.சிறந்த நாடகத் தொடர் இயக்குநர்:சிறந்த நாடகத் தொடர் இயக்குநர் என்ற விருதினை 'சவுல் மெட்ஸ்ஸ்டைன்' (Saul Metzstein) 'ஸ்லோ ஹார்ஸஸ்' (Slow Horses) என்ற தொடரை இயக்கியதற்காக வென்றார்.Matthew Rhys சிறந்த நகைச்சுவைத் தொடர் இயக்குநர்:சிறந்த நகைச்சுவைத் தொடர் இயக்குநர் என்ற விருதினை 'ஹிரோ முராய்' (Hiro Murai) 'விடோஸ் பே' (Widow’s Bay) என்ற தொடரை இயக்கியதற்காக வென்றார்.சிறந்த நாடகத் தொடர் எழுத்தாளர்:சிறந்த நாடகத் தொடர் எழுத்தாளர் என்ற விருதினை 'வின்ஸ் கில்லிகன்' (Vince Gilligan) 'ப்ளூரிபஸ்' (Pluribus) என்ற தொடரை எழுதியதற்காக வென்றார்.சிறந்த நகைச்சுவைத் தொடர் எழுத்தாளர்:சிறந்த நகைச்சுவைத் தொடர் எழுத்தாளர் என்ற விருதினை 'கேட்டி டிப்போல்ட்' (Katie Dippold) 'விடோஸ் பே' (Widow’s Bay) என்ற தொடரை எழுதியதற்காக வென்றார்.பாப் ஹோப் மனிதாபிமான விருது:மைக்கேல் ஜே. ஃபாக்ஸுக்கு (Michael J. Fox) பாப் ஹோப் மனிதாபிமான விருது (Bob Hope Humanitarian Award) வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.

vikatan
செப். 18, 12:00 AM
selena gomez: காதலரைக் கரம்பிடித்த செலினா கோம்ஸ் - வைரலாகும் திருமணப் புகைப்படங்கள்!
பொழுதுபோக்கு

selena gomez: காதலரைக் கரம்பிடித்த செலினா கோம்ஸ் - வைரலாகும் திருமணப் புகைப்படங்கள்!

ஹாலிவுட்டில் மிகவும் பிரபலமானவர் செலினா கோம்ஸ். நடிகை, பாப் பாடகி, தயாரிப்பாளர், தொழிலதிபர் என பன்முகத் தன்மை கொண்ட இவர், 400 மில்லியன் பாலோயர்ஸைப் பெற்ற முதல் பெண் பிரபலம் என்ற பெருமையைப் பெற்றிருந்தார். தற்போது இன்ஸ்டாகிராமில் 417 மில்லியன் பாலோயர்ஸைக் கொண்டிருக்கிறார். செலினா கோம்ஸ் - பென்னி பிளாங்கோசமீபத்தில் அமெரிக்காவின் இளம் பெண் கோடீஸ்வரர்கள் பட்டியலிலும் இவரது பெயர் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில் காதலர் பென்னி பிளாங்கோவை கரம் பிடித்திருக்கிறார். கடந்த 27 ஆம் தேதி நடைபெற்ற இந்த பிரமாண்டமான திருமண விழாவில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் பல ஹாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டிருக்கின்றனர். இவர்களின் திருமணப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. செலினா கோம்ஸும், பென்னி பிளாங்கோவும் 'same old love', 'i can't get enough', 'single soon' போன்ற ஆல்பங்களில் இணைந்து பணியாற்றி இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஹாலிவுட் பிரபலம் செலினா கோம்ஸ் - பென்னி பிளாங்கோ திருமணப் புகைப்படங்கள் | Photo Album

vikatan
செப். 18, 12:00 AM
The Odyssey: 'உலகமெங்கும் 41 திரையரங்குகளில் மட்டுமே' - படம் உருவான விதம் குறித்து கிறிஸ்டோபர் நோலன்
பொழுதுபோக்கு

The Odyssey: 'உலகமெங்கும் 41 திரையரங்குகளில் மட்டுமே' - படம் உருவான விதம் குறித்து கிறிஸ்டோபர் நோலன்

ஹாலிவுட் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான கிறிஸ்டோபர் நோலன் இயக்கியிருக்கும் 'தி ஒடிஸி' திரைப்படம் அடுத்த மாதம் 17-ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்தப் படத்தை ஐமேக்ஸ் திரைக்காகவே பிரத்யேகமாகப் படம் பிடித்திருக்கிறார் கிறிஸ்டோபர் நோலன். இவரும் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தின் மீது அதிக ஆர்வம் கொண்டவர். தன்னுடைய 'தி டார்க் நைட்' திரைப்படம் தொடங்கி, ஒவ்வொரு படங்களிலும் ஐமேக்ஸ் ஃபிலிம் கேமராவைப் பயன்படுத்தி சில பகுதிகளைப் படமாக்கிவிடுவார். தற்போது இந்த 'தி ஒடிஸி' படத்தை முழுமையாகவே ஐமேக்ஸ் ஃபிலிம் கேமராவைப் பயன்படுத்திப் படமாக்கியிருக்கிறார். இந்தக் கேமராவை முழுமையாகப் பயன்படுத்திப் படம்பிடிக்கப்பட்டிருக்கும் முதல் திரைப்படமும் இதுதான்.The Odyssey - Movieஐமேக்ஸ் ஃபிலிம் ரோல்களை எப்படி காட்சிகளாகக் கொண்டு வந்தார்கள் என்பதை இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் காணொளியின் மூலமாக விவரித்திருக்கிறார். அவர், "படப்பிடிப்புத் தளத்திலிருந்து ஐமேக்ஸ் ஃபிலிமை நாங்கள் லேபுக்குக் கொண்டுச் செல்வோம். அப்படி லேபுக்கு வந்ததும், அது பிராசஸர் (Processor), டெவலப்பர் (Developer) மற்றும் ஃபிக்ஸர் (Fixer) ஆகியவற்றின் வழியாகச் செலுத்தப்படும். அதன்பின் காயவைக்கும் (Drying process) முறைக்கு உட்படுத்தப்படும். அதற்குப் பிறகு, தயாரிப்பின் இறுதிக்கட்டத்தில், எடிட்டிங்கிற்கு கொண்டுச் செல்வோம். எங்களுக்காக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட அந்த ஃபிலிம் சுருள்களை எடுத்து, டிஜிட்டல் முறையில் எடிட் செய்வோம்.எடிட்டிங்கில் கட் செய்ய வேண்டிய வேலைகள் முழுமையாக முடிந்ததும், கணினியிலிருந்து சில எண்களின் பட்டியல் எங்களுக்குக் கிடைக்கும். அந்த எண்கள், நாங்கள் படம்பிடித்த ஃபிலிமின் ஓரங்களில் இருக்கும் எண்களோடு ஒத்துப்போகக்கூடியவை. அந்த எண்களின் பட்டியலை மீண்டும் லேபுக்கு அனுப்புவோம். அவர்கள் நெகட்டிவைக் கைகளால் நேரடியாக வெட்டுவார்கள். பின்னர் அதை ஒன்றாக ஒட்டுவார்கள். அதன்பின்பு, தகுந்த கலர் கரெக்ஷன்களுடன் அது ஒரு பாசிட்டிவ் பிரின்ட்டாக அச்சிடப்படும்.Christopher Nolan - The Odysseyஅந்தப் பாசிட்டிவ் பிரின்ட்டுகள் பிரத்யேக ஐமேக்ஸ் திரையரங்குகளில் (மிகத் துல்லியமாக ஃபிலிம் வடிவில் ஐமேக்ஸ் படங்களைத் திரையிடும் திறன் கொண்ட திரையரங்குகள்) திரையிடப்படும். உலகெங்கிலும் இது போன்ற 41 திரையரங்குகள் மட்டுமே உள்ளன.இந்த திரையங்குகளில் ஒரிஜினல் நெகட்டிவிலிருந்து உருவாக்கப்பட்ட 'ஃபர்ஸ்ட் ஜெனரேஷன் பிரின்ட்' (First generation print) திரையிடப்படுவதால், நாங்கள் அதை எப்படிப் படம்பிடித்தோமோ, அதே தரத்தில் பார்வையாளர்கள் படத்தை பார்க்க முடியும். அதாவது, ஐமேக்ஸில் படம்பிடிக்கப்பட்டு, ஐமேக்ஸ் வடிவத்திற்கு மாற்றப்பட்டு, ஐமேக்ஸிலேயே காண்பிக்கப்படுகிறது. இது முழுக்க முழுக்க மனித உழைப்பால் நடக்கும் ஒரு செயல்முறை. இதில் ஏராளமான மனிதர்கள் ஈடுபட்டுள்ளனர்" எனக் கூறியிருக்கிறார்.

vikatan
செப். 18, 12:00 AM
The Odyssey: " 'தி ஒடிஸி' ஓர் அழுத்தமான காதல் கதை!" - கிறிஸ்டோபர் நோலன்
பொழுதுபோக்கு

The Odyssey: " 'தி ஒடிஸி' ஓர் அழுத்தமான காதல் கதை!" - கிறிஸ்டோபர் நோலன்

ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'தி ஒடிஸி' திரைப்படம் இந்த வாரம் வெளியாகிறது. ஐமேக்ஸ் ஃபிலிம் கேமராவில் பிரத்யேகமாகப் படம்பிடிக்கப்பட்ட இந்தச் சினிமா மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியாகிறது. The Odyssey - Movieஇப்படத்தின் பிரீமியர் காட்சி கடந்த சில தினங்களுக்கு முன்பு மும்பையில் திரையிடப்பட்டிருந்தது. அதற்காக இந்தியா வந்திருந்த இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் ஊடகங்களைச் சந்தித்துப் பேட்டியளித்திருக்கிறார்.அந்த வரிசையில் ஹாலிவுட் ரிப்போர்டர் ஊடகத்திற்கு அளித்திருக்கும் பேட்டியில் அவர், " 'தி ஒடிஸி' என்பது சாகசப் பயணம். இவ்வளவு பெரிய பிரமாண்டமான கதையைத் திரையில் கொண்டுவரும்போது, ரசிகர்களை ஒரு த்ரில்லான சவாரிக்கு அழைத்துச் செல்லவே நாம் விரும்புவோம். ஆனால், அடிப்படையில் இது ஓர் அழுத்தமான காதல் கதை. இந்த பிரமாண்டமான சாகசங்களுக்கும் ஆக்ஷன் காட்சிகளுக்கும் பின்னால் இருக்கும் கதாபாத்திரங்களின் உணர்வுகளை ரசிகர்கள் தங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போதுதான், அந்த ஆக்ஷன் காட்சிகளுக்கான மதிப்பு இன்னும் கூடும். Christopher Nolan - The Odysseyஆறு நாடுகளில், 90 நாள்களாக, சுமார் 20 லட்சம் அடி நீளமுள்ள ஐமேக்ஸ் (IMAX) ஃபிலிம் ரோல்களைப் பயன்படுத்தி இந்தப் படத்தை எடுத்திருக்கிறோம். படப்பிடிப்பில் ஒவ்வொரு ஷாட்டையும் துண்டு துண்டாகத்தான் எடுப்போம். படம் சிறியதோ பெரியதோ, எந்த அளவிலான திரைப்படமாக இருந்தாலும் சரி, அதன் படப்பிடிப்பின்போது நம்மை நிலைகுலையச் செய்யும் அளவுக்குச் சவாலான, அழுத்தமான தருணங்கள் வரத்தான் செய்யும். அது எல்லா படங்களுக்கும் பொதுவான ஒன்றுதான்" எனப் பேசியிருக்கிறார்.

vikatan
செப். 18, 12:00 AM
The Super Mario Galaxy Review: `ஆடினே இருப்பேன்' - அசத்தல் விஷுவல் ட்ரீட்; அனிமேஷனில் மேரியோ எப்படி?
பொழுதுபோக்கு

The Super Mario Galaxy Review: `ஆடினே இருப்பேன்' - அசத்தல் விஷுவல் ட்ரீட்; அனிமேஷனில் மேரியோ எப்படி?

கேலக்சியில் பல லூமாக்களை (நட்சத்திரங்கள் போல உருவம் கொண்டவை) தத்தெடுத்து வளர்க்கும் இளவரசி ரோசலினாவை ஜூனியர் பவுசர் கடத்துகிறார். ரோசலினாவின் சக்தி அனைத்தையும் உறிஞ்சி எடுத்து கேலக்சியை தன்வசப்படுத்த வேண்டுமென அவர் நினைக்கிறார். மஷ்ரூம் கிங்டமில் இருக்கும் மேரியோவும், லூயிஜியும் இளவரசி பீச்சுடன் இருக்கிறார்கள். The Super Mario Galaxy Movie Reviewதன்னுடைய பெற்றோர் யார் என்கிற கேள்விக்கு பீச்சுக்கு விடை தெரியாமல் இருக்கிறது. அப்படியான சமயத்தில், அவரின் சகோதரி ரோசலினாவை பவுசர் கடத்தி வைத்திருப்பதாக கேலக்சியிலிருந்து வந்த ஒரு லூமா தகவல் சொல்கிறது. சகோதரியைக் காப்பாற்ற கேலக்சிக்குப் புறப்படுகிறார் பீச்.அங்கு அவர் ரோசலினாவை காப்பாற்றினாரா, இதற்கு மேரியோ எப்படி உதவி செய்கிறார் என்பதுதான் இந்த 3டி அனிமேஷன் படத்தின் கதை.பிரபல ஹாலிவுட் நடிகர்களான கிறிஸ் பிராட், சார்லி டே, அன்யா டைலர் ஜாய், ஜாக் பிளாக் உள்ளிட்ட பலர்தான் இந்த 'தி சூப்பர் மேரியோ கேலக்சி' படத்தின் அனிமேஷன் கேரக்டர்களுக்கு குரல் கொடுத்திருக்கிறார்கள்.குழந்தைகளைக் கவரக்கூடிய கார்ட்டூன் தொனிக்கேற்ப அனைவரும் இந்த அனிமேஷன் உலகத்திற்கு உயிரூட்டியிருக்கிறார்கள். சூப்பர் மேரியோ வீடியோ கேம் கதாபாத்திரம் இதற்கு முந்தைய திரைப்பட பாகத்திலேயே நம்மைக் கவர்ந்திருந்தது.The Super Mario Galaxy Movie Reviewஆட்டம், கொண்டாட்டம், சூப்பர் ஹீரோத்தனம் என இந்த பாகத்தையும் சூப்பர் மேரியோ கதாபாத்திரம் முன் நின்று நகர்த்திச் செல்கிறது. லூயிஜி கதாபாத்திரமும், டைனோசர் கதாபாத்திரமும் மேரியோ செய்யும் சம்பவங்களுக்குப் பக்கபலமாக உடனிருக்கின்றன.சூப்பர் மேரியோ, ஸ்டார் ஃபாக்ஸ் உள்ளிட்ட நம்முடைய ஃபேவரைட் வீடியோ கேம் கதாபாத்திரங்கள் இந்த 'சூப்பர் மேரியோ கேலக்சி' படத்தில் ரகளைகள் செய்வது நாஸ்டால்ஜியா நினைவுகளையும் நம் கண் முன் நிறுத்துகிறது. தூரிகை மூலம் சூப்பர் பவர் கொண்ட பவுசர் கதாபாத்திரமும் சுவாரஸ்யமாகவே வடிவமைக்கப்பட்டிருக்கிறது.நீளிரா விமர்சனம்: போர் குறித்த முக்கியமான அரசியல் படைப்பு - இது பதைபதைக்க வைக்கும் ஈழத்து சினிமா!கண்கவர் விஷூவல்களை படைத்திட, 3டி அனுபவத்திற்காகவே பிரத்யேகமாக ஷாட்களை கம்போஸ் செய்திருக்கிறார்கள். அந்த திட்டத்திற்கு இலுமினேஷன் ஸ்டுடியோவும் கைகொடுத்து, இந்த முழு அனிமேஷன் உலகத்தையும் உயிர் பெறச் செய்திருக்கிறது.ரோசலினாவை காப்பாற்றச் செல்லும் படலத்தை படத்தொகுப்பாளர் எரிஸ் ஆஸ்மாண்ட் விறுவிறுவென கோத்திருக்கிறார். ஆனால், க்ளைமாக்ஸ் மட்டுமே தனி திரைப்படம்போல நீள்வது பார்வையாளர்களைக் கொட்டாவி விட வைக்கிறது.காட்சிகளுக்கு இடையில் கேம் வடிவத்தையும் ஆங்காங்கே இணைத்தது பரபர உணர்வைக் கூட்டும் நல்லதொரு யுக்தி. பின்னணி இசையில் இசையமைப்பாளர் ப்ரையன் டைலர் தட்டியிருக்கும் 'கீ'களும் க்ளிக் ஆகியிருக்கின்றன. சூப்பர் மேரியோவின் தீம் இசைக்கு புதிய வடிவம் கொடுத்த ஐடியாவுக்கும் 'ஃபிங்கர் ஹார்ட்ஸ்'!The Super Mario Galaxy Movie Reviewகடந்த 2023-ம் ஆண்டு வெளிவந்த 'தி சூப்பர் மேரியோ ப்ரோஸ்' படத்தின் சீக்குவலே இந்த `தி சூப்பர் மேரியோ கேலக்சி' திரைப்படம்.தன்னுடைய பின்னணி பற்றி அறியாமல் இருக்கும் இளவரசி, உதவி செய்ய அவர் களத்தில் குதிப்பது, அவருக்கு மேரியோ பக்கபலமாக இருப்பது என திரைக்கதையாசிரியர் மேத்யூ ஃபாகெல் எழுதிய சாதாரண கதையைக் கொண்டு இயக்குநர்கள் ஆரன் ஹார்வத் & மைக்கேல் ஜெலெனிக் இந்த உலகத்தை உருவாக்கியிருக்கிறார்கள். பெரியளவில் மஷ்ரூம் கிங்டமில் கதையை அமைத்திடாமல் முதல் அரை மணி நேரத்திலேயே கேலக்சிக்குப் பறக்கிறது திரைக்கதை.காளிதாஸ் 2 விமர்சனம்: காணாமல் போகும் குழந்தை; த்ரில் சேர்க்கிறதா இந்த பரபர போலீஸ் விசாரணை?கேலக்சிக்கு தூக்கிச் செல்லப்படும் அரண்மனையைக் காப்பாற்ற மரியோ & கோ படும் பாடுகள், அரண்மனையை இரண்டாக்கி அலப்பறை செய்யும் ஜூனியர் பவுசரின் காட்சிகள் போன்றவை சுவாரஸ்யம் குறையாமல் நகர்கின்றன.கேலக்சியில் இளவரசி பீச்சுக்கு வரும் சோதனைகள், 'ஆடினே இருப்பேன்' என அதனை அவர் அடித்துப் பறக்கவிடும் காட்சிகளும் விறுவிறுப்புக்குப் பஞ்சமின்றி நகர்கின்றன.ஆனால், ஸ்டார் ஃபாக்ஸ் வருகைக்குப் பிறகான காட்சிகள் 'ப்ரேக்டவுன்' ஆகிக் கதையை வேறு பக்கம் திருப்புகின்றன. இளவரசியைக் காப்பாற்றும் மிஷனிலிருந்து மாறி லூட்டி அடிக்கும் இந்தக் காட்சிகள் நம் பொறுமையைச் சோதிக்கின்றன.The Super Mario Galaxy Movie Reviewநாம் கணிக்கும் விஷயங்களே க்ளைமாக்ஸில் அடுத்தடுத்து திரையில் தோன்றுகின்றன. அந்த க்ளைமேக்ஸ் காட்சியும் நம்மைச் சுற்றலில்தான் விடுகிறது. வில்லனை அழிக்கச் சென்ற மேரியோ, பிறகு அவரையே காப்பாற்றும் க்ளைமாக்ஸ் எல்லாம் தொன்று தொட்டு வரும் பல அனிமேஷன் படங்களின் முடிவுகள் பாஸ்!சூப்பர் மேரியோ கேமை உருவாக்கிய நிண்டெண்டோ (Nintendo) நிறுவனத்தின் மற்ற கேம் கதாபாத்திரங்களும் இதில் ஆங்காங்கே கேமியோவாக வருகின்றன. ஆனால், அவை பெரியளவில் தாக்கத்தைக் கொடுக்கவில்லை.கதையாக நம்மை ஏமாற்றினாலும், அசரவைக்கும் விஷூவல்கள் மூலம் முழுமையான 3டி அனுபவத்தைத் தந்து சூப்பர் ரேங்க் வாங்குகிறார் மேரியோ!

vikatan
செப். 18, 12:00 AM

சமீபத்திய செய்திகள்

சமீபத்திய புதுப்பித்தல்கள்

Tom Holland: `ஸ்பைடர் மேனுக்கு கல்யாணம்' - நீண்ட நாள் காதலியான நடிகையை கரம்பிடித்தார்!
பொழுதுபோக்கு

Tom Holland: `ஸ்பைடர் மேனுக்கு கல்யாணம்' - நீண்ட நாள் காதலியான நடிகையை கரம்பிடித்தார்!

vikatan
Sep 183 நிமிடம் படிக்க
Oscar Stories 2: 'இது ஜோக் இல்ல...' - ஆஸ்கர் மேடையில் தவறாக அறிவிக்கப்பட்ட வின்னர்!
பொழுதுபோக்கு

Oscar Stories 2: 'இது ஜோக் இல்ல...' - ஆஸ்கர் மேடையில் தவறாக அறிவிக்கப்பட்ட வின்னர்!

vikatan
Sep 183 நிமிடம் படிக்க
Tom Cruise: "சினிமா எனக்கு தொழில் அல்ல, வாழ்க்கை" - முதல் ஆஸ்கரை வென்ற நாயகன்!
பொழுதுபோக்கு

Tom Cruise: "சினிமா எனக்கு தொழில் அல்ல, வாழ்க்கை" - முதல் ஆஸ்கரை வென்ற நாயகன்!

vikatan
Sep 183 நிமிடம் படிக்க
Insidious: Out of the Further Review: அதிரடி க்ளைமாக்ஸும் அமானுஷ்யமும்! புதிய `இன்சிடியஸ்' எப்படி?
பொழுதுபோக்கு

Insidious: Out of the Further Review: அதிரடி க்ளைமாக்ஸும் அமானுஷ்யமும்! புதிய `இன்சிடியஸ்' எப்படி?

ஹாலிவுட்டின் புகழ்பெற்ற `இன்சிடியஸ்' (Insidious) ஹாரர் யுனிவர்ஸில் ஆறாவது பாகமாக வந்திருக்கிறது `இன்சிடியஸ்: அவுட் ஆஃப் தி ஃபர்தர்'. `தி ரெட் டோர்' படத்துக்குப் பிறகு நடக்கும் இந்தக் கதை, லேம்பர்ட் குடும்பத்தைத் தாண்டி வேறொரு குடும்பத்தின் கதையைப் பேசுகிறது.Insidious: Out of the Further Reviewதாயின் துர்மரணத்துக்குப் பின், தன் பழைய வீட்டிலேயே மகள் மாயாவுடன் வசிக்கிறார் பல் மருத்துவர் ஜெம்மா. அங்கே அந்த வீட்டில் அமானுஷ்ய நிகழ்வுகள் அரங்கேற, மறைந்த அமானுஷ்ய ஆராய்ச்சி நிபுணர் எலிஸின் (Elise) ஆன்மாவின் உதவியுடன் தன்னைப் பற்றிய உண்மையை அறிகிறார். அதாவது ஆன்மாக்களின் உலகத்திற்கு (The Further) சென்று வருவது மட்டுமன்றி, நிஜ உலகத்திலிருந்து அங்கும், அங்கிருந்து நிஜ உலகிற்கும் எந்தப் பொருட்களையும் எடுத்துவரும் 'கூரியர்' (Courier) என்ற அபூர்வ சக்தி தனக்கு இருப்பதை உணர்கிறார் ஜெம்மா. அவரின் இந்தச் சக்தியைப் பயன்படுத்தி நிஜ உலகைக் கைப்பற்றத் துடிக்கும் அசுர ஆன்மாக்களிடமிருந்து ஜெம்மாவும் அவரது மகளும் தப்பித்தார்களா, அவர்களுக்கு எலிஸ் எப்படித் துணையாக நிற்கிறார் என்பதே திகில் நிறைந்த திரைக்கதை.Pyaar Prema Kalyanam Review: ஆணாதிக்கத்தைக் கேள்வி கேட்கும் படைப்பில் இதையும் கவனித்திருக்கலாமே?கதாநாயகியாக அமிலியா ஈவ் மற்றும் அவரது மகளாக நடித்திருக்கும் ஐலேண்ட் ஆஸ்டின் ஆகிய இருவரும் பயத்தையும் எமோஷனையும் உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தி முழுப் படத்தையும் தாங்கிப் பிடிக்கிறார்கள். வழக்கம்போல 'எலிஸ்' பாத்திரத்தில் வரும் லின் ஷே, தனது அனுபவமிக்க கம்பீர நடிப்பால் தோன்றும் இடங்களிலெல்லாம் சிலிர்க்க வைக்கிறார். அதேசமயம், நாயகியின் காதலனாக வரும் போலீஸ் அதிகாரி பாத்திரம், வழக்கமான ஹாலிவுட் சினிமாக்களின் டெம்ப்ளேட் எல்லைக்குள்ளேயே நின்றுவிடுகிறது. கிளேராக இவர்களுக்கு உதவும் மைஸி ரிச்சர்ட்ஸன்-செல்லர்ஸ் ஆறுதல்!Insidious: Out of the Further Reviewஒலி வடிவமைப்பு (Sound Editing) மற்றும் பேய்களுக்கான விஷுவல் எஃபெக்ட்ஸ் (Ghost SFX) படத்திற்கு மிகப்பெரிய பலம். வெறும் சத்தங்களால் மட்டும் மிரட்டாமல், சூழலின் நிசப்தத்தைக் கொண்டே பயத்தை மெல்ல மெல்ல ரசிகர்களிடம் கடத்தும் யுக்தியை இயக்குநர் ஜேக்கப் சேஸ் திறம்படக் கையாண்டிருக்கிறார்.Bethlehem Kudumba Unit Review: க்யூட் நிவின் பாலி, ஸ்வீட் மமிதா - மற்றுமொரு அடிபொலி மலையாள சினிமா!`இன்சிடியஸ்' உலகத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்ல உதவியிருக்கிறது இந்தப் பாகம். ஆன்மாக்களின் உலகத்திற்குச் சென்று வருபவர்களை (Travellers) மட்டுமே பார்த்த நமக்கு, இரு உலகங்களுக்கும் இடையே பொருட்களைப் பரிமாறும் `கூரியர்' கான்செப்ட் புதுமையான அனுபவம்.Insidious: Out of the Further Reviewதலையணை கோட்டைக்குள் விரிவடையும் அந்த ஹாரர் சேஸிங், நாய்க்கும் பேய்க்குமான அந்த 'ஸ்விட்ச்', நாயகி சந்திக்கும் முதல் திடுக்கிடல் எனத் திகில் காட்சிகள் அட்டகாசமாக ஒர்க்-அவுட் ஆகியுள்ளன. குறிப்பாக, எதிர்பாராத திருப்பங்களுடன் முடியும் அந்தப் பரபர க்ளைமாக்ஸ் திரையரங்கில் ஒரு நிறைவான ஹாரர் விருந்தைப் படைக்கிறது. துர் ஆன்மாவைச் சமாளிக்க ஜெம்மா எடுக்கும் அந்த முடிவு எதிர்பாராத மாஸ் சினிமா ட்விஸ்ட்!அதே சமயம், சிங்கிள் மதர், இருண்ட குடும்ப வரலாறு என வழக்கமான ஹாலிவுட் டெம்ப்ளேட் பின்னணிக் கதையே இதிலும் தொடர்கிறது. ஜெம்மாவின் அம்மாவின் பார்வையில் வெளிப்படும் ட்விஸ்ட் நன்றாக இருந்தாலும், அதை எளிதில் யூகித்துவிட முடிகிறது. சில சுவாரஸ்யமான திருப்புமுனை காட்சிகள் சிறப்பாக எழுதப்பட்டிருந்தாலும், அவற்றை வழக்கமான பாணியிலேயே படமாக்கியுள்ளனர். Insidious: Out of the Further Reviewபல் மருத்துவமனை காட்சிகளும், அதீத ரத்தம் தெறிக்கும் கோரமான காட்சிகளும் தேவையற்ற "ஃபில்லர்"களாகவே தோன்றுகின்றன. பேய்க்குத் துணைநிற்கும் மூன்று மனிதர்களின் பாத்திரம் வழக்கமானது என்றாலும், கடைசி அரை மணிநேரத்தில் அவர்களைச் சரியாகப் பயன்படுத்தி த்ரில்லைக் கூட்டியுள்ளனர்.இன்சிடியஸ் ஃபிரான்சைஸுக்குப் புதியதொரு பாதையைக் காட்டி, அதை உயிர்ப்புடன் இருக்க வைத்திருக்கும் ஒரு மிரட்டலான ஹாரர் அனுபவம் இது!

vikatan
Sep 18, 12:00 AM
5 நிமிடம் படிக்க

விளம்பர இடம்

உங்கள் விளம்பரத்தை இங்கே காட்சி செய்யலாம்

மேலும் செய்திகள்

தமிழ்நாடு முழுவதும் மற்றும் அதற்கு அப்பால் இருந்து சமீபத்திய கதைகளுடன் புதுப்பித்த நிலையில் இருங்கள்

Lee Cronin's The Mummy Review: `மம்மி'தான், ஆனால் இது `பாடி ஹாரர்' சினிமா! அச்சுறுத்துகிறதா படம்?
பொழுதுபோக்கு

Lee Cronin's The Mummy Review: `மம்மி'தான், ஆனால் இது `பாடி ஹாரர்' சினிமா! அச்சுறுத்துகிறதா படம்?

90ஸ் கிட்ஸின் ஃபேவரைட் படத்தொடர்களில் ஒன்றான `தி மம்மி'-யை 2017-ல் டாம் க்ரூஸை வைத்து ரீபூட் செய்தது ஹாலிவுட். ஆனால் படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. இப்போது மீண்டும் ஒரு `மம்மி'. `ஈவில் டெட் ரைஸ்' இயக்குநர் லீ குரோனின் இந்த முறை `மம்மி'யை சாகசப் படமாக அணுகாமல் முழு நீள ஹாரர் படமாக மாற்றியிருக்கிறார். இந்த `மம்மி' டெரர் காட்டுகிறதா?Lee Cronin's The Mummy Reviewஎகிப்தின் கைரோவில் டிவி நிருபராக பணியாற்றுகிறார் சார்லி கேனன் (ஜேக் ரெய்னோர்). மனைவி லரிசா (லையா கோஸ்டா), மகள் மற்றும் மகனுடன் வாழ்ந்து வருகிறார். இதனிடையே ஒருநாள் வீட்டுத் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த மகள் கேட்டி காணாமல் போகிறாள். எங்குத் தேடியும் கிடைக்காத நிலையில், சார்லியின் குடும்பம் மெக்ஸிக்கோவுக்கு மாற்றலாகிறது. எட்டு வருடங்களுக்குப் பிறகு கேட்டி கிடைத்துவிட்டாள் என்ற செய்தி எகிப்திலிருந்து வருகிறது. ஆனால் இப்போதிருக்கும் கேட்டி சுயநினைவின்றி மனநலச் சிக்கலோடு இருக்கிறாள். உண்மையில் கேட்டிக்கு என்ன நடந்தது, அவளால் வரும் ஆபத்துகள் என்ன என்பதை ஹாரர் விருந்தாக முன்வைக்கிறது படம்.சார்லியாக ஜேக் ரெய்னோருக்கு அப்பாவாக, குடும்பத்தலைவராகப் பொறுப்பான வேடம். துப்பறியும் காட்சிகள், அப்பாவாகப் போராட எழுந்துநிற்கும் க்ளைமாக்ஸ் காட்சி போன்றவற்றில் தேவையான நடிப்பு. அவரின் மனைவியாக லையா கோஸ்டா, எமோஷனலான வேடத்துக்கு நியாயம் சேர்த்திருக்கிறார். மகள் இங்கேதான் இருக்கவேண்டும் என வெடிக்கும் இடத்தில் நல்லதொரு நடிப்பு! சிறுவயது கேட்டியாக எமிலி மிட்செல் க்யூட் என்றால், பதின்பருவ கேட்டியாக நடாலி கிரேஸ் மிரட்டல்! ஹாரர் காட்சிகளில் அவர் காட்டியிருக்கும் பாய்ச்சல் கதிகலங்கச் செய்கிறது. விருதுகள் நடாலி வசம்! மகனாக சைலோ மொலினா, இரண்டாவது மகளாக பில்லி ராய் சிறப்பான பங்களிப்பு. பல்செட்டை மாட்டும் காட்சியில் பில்லி திகிலில் உறைய வைக்கிறார். விசாரணை அதிகாரியாக மே கலாமவே, பாட்டியாக வெரோனிகா ஃபால்குன் கொடுக்கப்பட்ட வேடங்களை நிறைவாகச் செய்திருக்கிறார்கள்.Lee Cronin's The Mummy Reviewபெரும்பாலும் வீட்டின் உட்புறங்களிலேயே படமாக்கப்பட்ட ஹாரர் காட்சிகளுக்கு அமானுஷ்யத்தைக் கூட்டிருக்கிறது டேவ் கார்பெட்டின் ஒளிப்பதிவு. கேட்டி சம்பந்தப்பட்ட ஹாரர் காட்சிகளில் வெளிப்படும் ஒலியமைப்பு, 'பாடி ஹாரர்' வகையறா காட்சிகளுக்கு நம்பகத்தன்மை கூட்டும் மேக்கப் மற்றும் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ், அதன் வீரியத்தைப் பாதுகாக்கும் பிரையன் ஷாவின் படத்தொகுப்பு எனத் தொழில்நுட்ப ரீதியாகச் சிறந்ததொரு படைப்பாக மிளிர்கிறது இந்த 'தி மம்மி'.காணாமல் போகும் சிறுமி, வெளிச்சமே படாமல் கல்லறைக்குள் கிடந்து வெளியே வருவது, வந்தவுடன் விநோதமாக, அமானுஷ்யத் தன்மையோடு செயல்படுவது, அதனால் அவளின் குடும்பம் சந்திக்கும் ஆபத்துகள் என ஹாலிவுட் ஹாரர் டெம்ப்ளேட் கதைதான். அதை மறைக்கவும், புதுமை சேர்க்கவும் 'மம்மி' பெயரைக் கடன் வாங்கியிருக்கிறார்கள். அதே சமயம், இதுவரை பார்த்த 'மம்மி' ரூட்டை எடுக்காமல், அதற்குள் 'பாடி ஹாரர்' எனப்படும் 'உடல் வதை' காட்சிகளை ஏகத்துக்கும் சேர்த்திருக்கிறார்கள்.Lee Cronin's The Mummy Reviewமுதன்முதலில் கேட்டியைக் குளிப்பாட்டும் காட்சியில் நடக்கும் அசம்பாவிதம், கேட்டியால் பாட்டிக்கு ஆகும் சேதாரம், இறப்பு வீட்டில் நடக்கும் அச்சுறுத்தும் கலாட்டா, அதிரடிக்கும் க்ளைமாக்ஸ் என நிறையக் காட்சிகள் எழுதப்பட்ட விதமும் எடுக்கப்பட்ட விதமும் படத்தைச் சுவாரஸ்யமானதாய் மாற்றிவிடுகின்றன. துல்லியமான ஒலியமைப்பு ஒவ்வொரு ஹாரர் காட்சியையும் மறக்க முடியாத அனுபவமாய் மாற்றியிருக்கிறது.Mr. X Review: ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல், ஸ்பை த்ரில்லர் - புதிய களம் படமாக வலுப்பெறுகிறதா?கேட்டிக்கு என்னவானது என்பதற்குக் கொடுக்கப்பட்ட ஏகத்துக்கும் அதிகமான பில்டப்புக்கு நியாயம் செய்யாத பின்கதை ஏமாற்றமே! எகிப்து வரலாற்றோடு பின்னிப் பிணைந்த பழங்கதைகள் அதன் அடிப்படை என்றாலும் அவை அனைத்துமே பிற படங்களில் பார்த்தவை என்பதுதான் இந்த ஏமாற்றத்துக்கான காரணம். இப்படி நிறையப் படங்களிலிருந்து ஒவ்வொரு கொத்தாக எடுத்தே மூட்டையைக் கட்டியிருப்பதுதான் இந்த 'மம்மி'யின் மைனஸ்!Lee Cronin's The Mummy Review`பாடி ஹாரர்' அனுபவத்துக்காகவும், `மம்மி' காட்சிகளுக்காகவும், தொழில்நுட்ப ரீதியிலான மிரட்டலுக்காகவும் வேண்டுமானால் இந்தப் படத்தை ரசிக்கலாம். ஆனால், `ஸ்ட்ரிக்ட்லி அடல்ட்ஸ் ஒன்லி!'

vikatan
செப். 18
3 நிமிடம் படிக்க
Micheal: மேஜிக் ஷூ ரகசியம்; ஸ்பைடர் மேனாக நடிக்க ஆசை - மைக்கேல் ஜாக்சன் பற்றி அறிந்திடாத தகவல்கள்!
பொழுதுபோக்கு

Micheal: மேஜிக் ஷூ ரகசியம்; ஸ்பைடர் மேனாக நடிக்க ஆசை - மைக்கேல் ஜாக்சன் பற்றி அறிந்திடாத தகவல்கள்!

ஹாலிவுட் நடிகர் டென்சில் வாஷிங்டனின் 'தி ஈக்குவலைசர்' படத்தை இயக்கிய இயக்குநர் ஆண்டனி ஃபுகுவா, இப்போது மைக்கேல் ஜாக்சனின் பயோபிக் திரைப்படமான 'மைக்கேல்' படத்தை இயக்கியிருக்கிறார். மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகிறது. Micheal Jackson Biopicஇந்தப் படத்தில் மைக்கேல் ஜாக்சனாக அவருடைய அண்ணன் மகனான ஜாஃபர் ஜாக்சன் நடித்திருக்கிறார். மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கையை மையப்படுத்தி ஒரு திரைப்படம் வெளிவந்திருக்கும் இந்த நேரத்தில், அவரைப் பற்றிப் பெரியளவில் அறியப்படாத சில தகவல்களை இங்கே பார்ப்போம்.படப்பிடிப்பில் நேர்ந்த விபத்து: 1984-ம் ஆண்டு 'பெப்சி' குளிர்பான விளம்பரப் படப்பிடிப்பின்போது ஏற்பட்ட வெடி விபத்தில் மைக்கேல் ஜாக்சனின் தலைமுடியில் தீப்பற்றியது. அப்போது அவருடைய தலையில் கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டன. இதனால் அவர் தலையில் அறுவை சிகிச்சை செய்துகொள்ளும் சூழல் ஏற்பட்டது. தனது பிந்தைய காலங்களில் அவர் விக் பயன்படுத்தத் தொடங்கியதற்குக் காரணமும் இந்த விபத்துதான்.அந்த மாயாஜால நடனத்தின் ரகசியம்: 'ஸ்மூத் கிரிமினல்' (Smooth Criminal) பாடலில் மைக்கேல் ஜாக்சன் சாய்ந்து ஆடும் நடனத்திற்குப் பின்னால் எந்தவொரு கேமரா தந்திரங்களும் கிடையாது. இதற்காக அவர் ஒரு பிரத்யேக ஷூவை வடிவமைத்தார். அந்த ஷூ மேடையுடன் லாக் ஆகி, அவர் கீழே விழாமல் சாய்ந்து ஆட உதவியது.Micheal Jackson at Cannes Film Festivalமார்வெல் காமிக்ஸ் நிறுவனத்தை வாங்க விரும்பிய மைக்கேல் ஜாக்சன்:1990-களின் இறுதியில் 'மார்வெல்' காமிக்ஸ் நிறுவனம் நிதி நெருக்கடியைச் சந்தித்தது. அந்த நேரத்தில் மைக்கேல் ஜாக்சன் அந்நிறுவனத்தை வாங்கத் தீவிரமாக முயன்றார். அந்த காமிக்ஸ் நிறுவனத்தை வாங்கி, லைவ் ஆக்ஷன் திரைப்படத்தில் 'ஸ்பைடர் மேன்' கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பது அவருடைய ஆசையாக இருந்திருக்கிறது. அதற்கான பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டு, நிறைவேறாமல் போனது.கறுப்பு நிறத்தை மைக்கேல் ஜாக்சன் வெறுத்தாரா?கறுப்பு நிறத்தின் மீது வெறுப்புக் கொண்டு மைக்கேல் ஜாக்சன் தனது நிறத்தை மாற்றிக்கொண்டார் என இன்றும் சொல்லப்படுகிறது. ஆனால், அவருக்கு 'விடிலிகோ' (Vitiligo) எனும் தோல் நோய் இருந்திருக்கிறது. அவரின் மரணத்திற்குப் பின் நடந்த உடற்கூறாய்வில் இந்த நோய் இருந்தது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தோலில் ஆங்காங்கே ஏற்பட்ட வெள்ளை திட்டுக்களைத் சீராகக் காட்டுவதற்கே அவர் சிகிச்சை எடுத்துக்கொண்டார். அவர் கறுப்பின மக்களின் முன்னேற்றத்திற்காகவும், இசைத்துறைகளில் அவர்களுக்கு சமமான உரிமை கிடைத்திடவும் அவர் குரல் கொடுத்திருக்கிறார்.Micheal Jackson - Chimpanzeeதனிமையைப் போக்க மனிதச் சிலைகள்: கோடிக்கணக்கான ரசிகர்கள் இருந்தாலும், நிஜ வாழ்க்கையில் மைக்கேல் ஜாக்சன் அதிகமாகத் தனிமையைத்தான் அனுபவித்திருக்கிறார். அந்தத் தனிமையைப் போக்க அவருடைய பண்ணை வீட்டில் நிஜ மனிதர்களைப் போலவே இருக்கும் சிலைகளை (Mannequins) ஒரு அறை முழுவதும் வைத்திருந்தார். அந்தச் சிலைகள் மனிதர்கள் சூழ்ந்திருப்பது போன்ற உணர்வைத் தருவதாக ஒரு பேட்டியில் அவர் பகிர்ந்திருக்கிறார்.மைக்கேல் ஜாக்சனின் சிம்பன்சி : மைக்கேல் ஜாக்சனின் செல்லப் பிராணியான 'பப்பிள்ஸ்' (Bubbles) எனும் சிம்பன்சி, அவர் எங்கு சென்றாலும் அவருடனேயே செல்லும் உற்ற துணையாக இருந்தது. இன்று அந்தச் சிம்பன்சி, 'சென்டர் ஃபார் கிரேட் ஏப்ஸ்' (Center for Great Apes) எனப்படும் குரங்குகள் காப்பகத்தில் இருக்கிறது. இதற்கு இப்போது 43 வயதாகிறது.புத்தகக் காதலன் மைக்கேல் ஜாக்சன்: மைக்கேல் ஜாக்சனுக்குப் புத்தகங்கள் வாசிப்பதன் மீது அலாதி காதல். அவருடைய பண்ணை வீட்டில் 10,000-க்கும் மேற்பட்ட புத்தகங்களைக் கொண்ட நூலகத்தை அவர் அமைத்திருந்தார். அதுமட்டுமல்ல, பொது நூலகங்களுக்குப் புத்தகங்களைத் தானமாகவும் அவர் கொடுத்திருக்கிறார்.Micheal Jackson - Grammy Awardsஒரே மேடையில் 8 விருதுகள்:1984 கிராமி விருதுகளில் ஒரே இரவில் 8 விருதுகளை வென்று சாதனை படைத்தார். அவர் தனது வாழ்நாளில் மொத்தம் 13 கிராமி விருதுகளை வென்றுள்ளார். 1993-ல் அவர் பங்கேற்ற சூப்பர் பவுல் நிகழ்ச்சி இன்றும் உலக அளவில் அதிகம் பார்க்கப்பட்ட நிகழ்ச்சிகளில் ஒன்றாக உள்ளது. இந்த நிகழ்ச்சிக்காக அவர் ஊதியம் பெறவில்லை. அதற்குப் பதிலாக, அவருடைய 'Heal the World' அறக்கட்டளைக்கு நிதி உதவி செய்ய வேண்டும் எனவும் அதற்கான விளம்பரத்தை ஒளிபரப்ப வேண்டும் எனவும் நிபந்தனை விதித்தார்.

vikatan
செப். 18
3 நிமிடம் படிக்க
Kriti Sanon: "நான் என் கருமுட்டையை உறையவைத்துள்ளேன்!" - கீர்த்தி சனூன்
பொழுதுபோக்கு

Kriti Sanon: "நான் என் கருமுட்டையை உறையவைத்துள்ளேன்!" - கீர்த்தி சனூன்

பாலிவுட் நடிகை கீர்த்தி சனூன் தனது கருமுட்டைகளைச் சேமித்து வைத்திருப்பதாகச் சமீபத்திய பேட்டியில் பகிர்ந்திருக்கிறார். சமீபத்தில் ஒரு பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியவர், இந்த தகவலைப் பகிர்ந்துள்ளார்.Kriti Sanonஇதுகுறித்து அவர் பேசுகையில், "நான் என் கருமுட்டைகளை உறையவைத்துள்ளேன். அதை மிகவும் புத்திசாலித்தனமாக ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் திட்டமிட்டுச் செய்தேன். 'மீமி' (Mimi) திரைப்படத்திற்காக நான் உடல் எடையை அதிகரிக்க வேண்டியிருந்த அந்தச் சமயத்தில்தான் இந்தச் சிகிச்சையையும் மேற்கொண்டேன். பொதுவாக, கருமுட்டை சேமிப்புச் சிகிச்சையின் போது உடலில் கடுமையான வீக்கம் ஏற்படும். எப்படியும் 'மீமி' படத்திற்காக நான் குண்டாகத்தான் வேண்டும் என்பதால், அந்த இரண்டு மாத ஷூட்டிங் பிரேக் இடைவெளியை இதற்குச் சரியான நேரமாகப் பயன்படுத்திக் கொண்டேன். என் நெருங்கிய நண்பர் ஒருவர் தான், 'உனக்காக நீயே கொடுத்துக் கொள்ளும் மிகச்சிறந்த பரிசு இதுதான்' என்று கூறி இந்த ஐடியாவைக் கொடுத்தார். Kriti Sanonஒரு கர்ப்பிணிப் பெண் எந்த மாதிரியான உடல் உபாதைகளைச் சந்திப்பாரோ, அதே போன்ற ஒரு ரோலர் கோஸ்டர் உணர்வுதான் எனக்கும் இருந்தது. இருந்தாலும், இந்த முடிவை எடுத்ததில் எனக்கு முழு மன அமைதி கிடைத்துள்ளது. என்னுடைய கரியரில் தேவையற்ற பதற்றமும் அழுத்தமும் என் மனதிற்குள் இருக்கக் கூடாது என்று நான் விரும்பினேன். அதனால் தான் இந்த ஸ்மார்ட் பிளானிங்" எனக் கூறியிருக்கிறார்.

vikatan
செப். 18
3 நிமிடம் படிக்க
Nimisha Sajayan: "தூக்கமின்மை, கடுமையான மனநிலை மாற்றங்கள்..." - உடல் எடை குறைப்பு பற்றி நிமிஷா சஜயன்
பொழுதுபோக்கு

Nimisha Sajayan: "தூக்கமின்மை, கடுமையான மனநிலை மாற்றங்கள்..." - உடல் எடை குறைப்பு பற்றி நிமிஷா சஜயன்

நடிகை நிமிஷா சஜயன், தான் நடித்திருக்கும் 'பாபிதா சிங் ரிப்போர்ட்டிங்' திரைப்படத்திற்காக மேற்கொண்ட கடினமான உடல் எடை குறைப்பு குறித்துப் பகிர்ந்திருக்கிறார். Babita Singh Reporting இந்தப் படத்தின் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக அவர் சுமார் 14 கிலோ எடையை அதிகரித்துள்ளாராம். இது குறித்தும், ஏற்றிய எடையை குறைப்பதற்கும், அதற்கிடையில் இவர் சந்தித்த விஷயங்கள் குறித்தும் பதிவிட்டிருக்கிறார்.இது குறித்து அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் நிமிஷா சஜயன், "இந்தக் கதாபாத்திரத்திற்காக நான் கிட்டத்தட்ட 14 கிலோகிராம் எடையைக் கூட்டினேன் (58 கிலோகிராமிலிருந்து 72 கிலோகிராம் வரை). உண்மையிலேயே, அதற்குப் பிறகு நான் மேற்கொண்ட எடையைக் குறைக்கும் பயணம் முற்றிலும் வேறொரு கதையாக இருந்தது. முதல் 10 நாட்கள் மிகவும் கடினமாக இருந்தன. சரியான தூக்கமின்மை, கடுமையான மனநிலை மாற்றங்கள், சோர்வு, விரக்தி என "என்னால் இதைச் செய்யவே முடியாது" என்று உண்மையிலேயே தோன்றிய தருணங்கள் ஏராளம். சில நாட்களில் என் உடற்பயிற்சியாளரின் முன்னால் அமர்ந்து "என்னால் இனிமேல் முடியாது" என்று கூறி அழுதிருக்கிறேன். View this post on Instagram A post shared by NIMISHA BINDU SAJAYAN (@nimisha_sajayan) அவர் மட்டும் இல்லையென்றால், நான் உண்மையிலேயே இதனைப் பாதியிலேயே கைவிட்டிருப்பேன். இந்த முழுப் பயணத்திலும் அவர்தான் என் பக்கபலமாக இருந்தார். எனக்கு ஊக்கம் தேவைப்பட்ட நேரத்தில் என்னை ஊக்கப்படுத்தினார்; நான் கைவிட நினைத்தபோது உற்சாகப்படுத்தினார். ஒவ்வொரு நாளும் அவர் எனக்கு உறுதுணையாக இருந்தார். நான் விரக்தியடைந்து, களைப்புற்று, பயிற்சியை நிறுத்திவிடலாம் என்று நினைத்த நாட்கள் எத்தனையோ உண்டு. ஆனால் ஏதோ ஒரு வழியில், என்னை அடுத்த நாள் மீண்டும் வரவைத்து, முயற்சி செய்ய வைத்தார். திரும்பிப் பார்க்கும்போதுதான் எனக்குப் புரிகிறது, இந்தப் பயணம் வெறும் எடையைக் குறைப்பதைப் பற்றியது மட்டும் அல்ல; அது பொறுமை, சரியான வழிமுறையை நம்புவது, எல்லாவற்றிற்கும் மேலாகச் சரியான நபர் உங்களுடன் இருப்பது பற்றியதாகும்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

vikatan
செப். 18
3 நிமிடம் படிக்க
``அமீர் கானைக் கொல்பவருக்கு ரூ.5 கோடி பரிசு" - பகிரங்க மிரட்டல் விடுக்கும் பரம்ஹன்ஸ் ஆச்சார்யா
பொழுதுபோக்கு

``அமீர் கானைக் கொல்பவருக்கு ரூ.5 கோடி பரிசு" - பகிரங்க மிரட்டல் விடுக்கும் பரம்ஹன்ஸ் ஆச்சார்யா

பாலிவுட்டின் பிரபல நடிகர் அமீர்கான் கடந்த சில தினங்களுக்கு முன்பு அழகுக் கலை நிபுணரான கௌரி ஸ்ப்ராட் என்பவரை மூன்றாவதாகத் திருமணம் செய்துகொண்டார். மும்பையில் பாந்த்ராவில் உள்ள அவரது இல்லத்தில் எளிமையான முறையில், இந்தத் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், இந்தத் திருமணத்திற்கு பா.ஜ.க மற்றும் சிவசேனா உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கடுமையான விமர்சனங்களை முன் வைத்துவருகின்றனர்.அமீர் கான் - Aamir Khanஅதன் தொடர்ச்சியாக அயோத்தி தபஸ்வி சாவனியின் தலைவரான ஜெகத்குரு பரம்ஹன்ஸ் ஆச்சார்யா செய்தியாளர்களிடம் பேசியபோது, ``அமீர் கான் இந்து பெண்களைத் திருமணம் செய்ததன் நோக்கம் 'லவ் ஜிகாத்'தை ஊக்குவிப்பதே. நடிகர் அமீர் கானைக் கொலை செய்பவர்களுக்கு 5 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும். இந்தத் தொகையானது அந்தச் செயலைச் செய்பவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும். மேலும், இதற்கான சட்டப்பூர்வ செலவுகளையும் நானே ஏற்கிறேன். இத்தகைய நடவடிக்கைகள் 'லவ் ஜிகாத்' என்று கூறப்படும் செயல்களைத் தடுக்கும். இந்துp பெண்களை வலைவீசிப் பிடிக்கும் நபர்களை சும்மா விடக்கூடாது.அயோத்தி ராமர் கோவில் நன்கொடை முறைகேடு விவகாரத்தில் நடைபெற்று வரும் சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) விசாரணை நேர்மையாக நடந்து வருகிறது. ராமர் மீது பற்று இல்லாதவர்கள் தொடர்ந்து இந்த விவகாரத்தில் சர்ச்சைகளை உருவாக்குவார்கள். எனவே, கவனமாக இருங்கள்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்."விஜய் படத்தில் விஜய்யை மட்டும்தான் ரசிகர்கள் பார்ப்பார்கள்; அதை மாற்றியது இந்த இருவர்தான்" - அமீர்

vikatan
செப். 18
3 நிமிடம் படிக்க
Premalu: தயாராகும் 'ப்ரேமலு' இந்தி ரீமேக்; விமர்சிக்கும் நெட்டிசன்கள்! - மாற்றப்பட்ட விஷயங்கள் என்ன?
பொழுதுபோக்கு

Premalu: தயாராகும் 'ப்ரேமலு' இந்தி ரீமேக்; விமர்சிக்கும் நெட்டிசன்கள்! - மாற்றப்பட்ட விஷயங்கள் என்ன?

பாலிவுட் தற்போது மற்றுமொரு ஹிட் படத்தை இந்தியில் ரீமேக் செய்து வருகிறது. இயக்குநர் கிரிஷ் ஏ.டி இயக்கத்தில், நஸ்லென், மமிதா பைஜூ ஆகியோர் நடிப்பில் வெளியான 'ப்ரேமலு' திரைப்படம் சென்சேஷனல் ஹிட் ஆகியிருந்தது. Prem Keetanu Movie'ஜென்-ஜி'களின் கதையை, 'ஜென்-ஜி'களுக்காகக் குறிவைத்து எடுக்கப்பட்டிருந்தது அந்தப் படம். இந்தப் படம் 2024-ம் ஆண்டு வெளியாகி, அந்த ஆண்டின் அதிகம் வசூலித்த படங்களின் பட்டியலில் இடம்பெற்றது.இப்படியான பெரிய ஹிட் படங்களைக் கண்டதும், பாலிவுட் செய்யும் விஷயம் ரீமேக்தான். ஆனால், சில நேரங்களில் பாலிவுட் செய்த ரீமேக்குகள் வெற்றிப் படங்களாகவும் மாறியிருக்கின்றன. பல நேரங்களில் தோல்விப் படங்களாகவும் மாறியிருக்கின்றன. 'ப்ரேமலு' படத்தின் இந்தி ரீமேக் படம் 'ப்ரேம் கீட்டனு' என்கிற தலைப்பில் உருவாகியிருக்கிறது. இந்த ரீமேக் படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் எதிர்மறையான விமர்சனங்களையே சந்தித்து வருகிறது. Premalu'ப்ரேமலு' படத்தின் கதையிலிருந்து சில விஷயங்களை மாற்றியிருக்கிறார்கள். அந்தப் படத்தின் கதை ஹைதராபாத் பின்னணி, ஐடி பணிச்சூழல் என்பதாக நகரும். ஆனால், இந்த இந்தி ரீமேக்கான 'ப்ரேம் கீட்டனு' படத்தில், கதையைக் கல்லூரி பின்னணியில் அமைத்திருக்கிறார்கள். அத்தோடு காட்சிகளும் அதற்கேற்ப மாற்றப்பட்டதால், ரசிகர்கள் வருத்தமடைந்து பதிவிட்டு வருகிறார்கள்.நஸ்லென் நடித்த கதாபாத்திரத்தில் நடிகர் வீர் பஹாரியா நடிக்கிறார். இவர் மகாராஷ்டிர மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சுஷில்குமார் ஷிண்டேவின் பேரன். மமிதா பைஜூ கதாபாத்திரத்தில் நடிகை ஆசிஃபா சையத் நடிக்கிறார். இந்த இந்தி ரீமேக் அக்டோபர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்திக்கு ரீமேக் வெர்ஷன் வருவதால், ஜியோ சினிமா தளத்திலிருந்து 'ப்ரேமலு' படத்தைத் தற்காலிகமாக நீக்கியிருக்கிறார்கள்.

vikatan
செப். 18
3 நிமிடம் படிக்க
72nd National Awards: 'பாஜக பிரசார படமாக இருந்தால் தேசிய விருது வழங்கப்படுமா?' - வலுக்கும் கண்டனம்!
பொழுதுபோக்கு

72nd National Awards: 'பாஜக பிரசார படமாக இருந்தால் தேசிய விருது வழங்கப்படுமா?' - வலுக்கும் கண்டனம்!

72ஆவது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இந்த வருடமும் பாஜகவுக்கு ஆதரவான அரசியல் பேசும் படத்திற்கு விருதுகள் வழங்கப்பட்டிருக்கிறது.கடந்த 2024ஆம் ஆண்டு இயக்குநர் ஆதித்யா சுஹாஸ் ஜம்பாலே இயக்கத்தில் யாமி கௌதம், பிரியாமணி ஆகியோர் நடிப்பில் வெளியாகியிருந்த 'ஆர்டிக்கிள் 370' படத்திற்கு மூன்று தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இப்படம் வெளியான சமயத்தில் பாஜகவின் அரசியலுக்கு ஆதரவளிக்கும் படம் என விமர்சிக்கப்பட்டிருந்தது.The Kerala Story Movieமேலும், ''பாஜக அரசின் கொள்கைகளுக்கு ஆதரவாக இருக்கும் படங்களுக்குத்தான் தேசிய விருதுகள் கொடுக்கப்படுமா?'' என்கிற கேள்விதான் இப்போது சமூக வலைதளப் பக்கங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. கடந்த சில வருடங்களாகவே பாஜக பிரசார படங்கள் என விமர்சிக்கப்பட்ட பாலிவுட் படங்களுக்குத் தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்தப் பட்டியலைப் பார்ப்போம்.தி காஷ்மீர் ஃபைல்ஸ் (The Kashmir Files - 69ஆவது தேசியத் திரைப்பட விருதுகள்)இந்தப் படம் தேசிய ஒருமைப்பாட்டைப் பேசும் சிறந்த திரைப்படம் - நர்கிஸ் தத் விருதைப் பெற்றது. அத்தோடு இப்படத்தில் நடித்திருந்த நடிகை பல்லவி ஜோஷிக்குச் சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதும் வழங்கப்பட்டது. 1990களில் காஷ்மீரில் வாழ்ந்த பண்டிட்டுகள் துயரத்தை எதிர்கொண்டதாக இப்படத்தின் கதையை இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி அமைத்திருந்தார். ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரைத் தவறாகச் சித்தரித்திருப்பதாகவும் கடுமையான விமர்சனங்களையும் இத்திரைப்படம் எதிர்கொண்டது.The Kerala Story Movieதி கேரளா ஸ்டோரி (The Kerala Story - 71ஆவது தேசியத் திரைப்பட விருதுகள்)இந்தப் படத்திற்குச் சிறந்த இயக்குநருக்கான விருது மற்றும் சிறந்த ஒளிப்பதிவுக்கான தேசிய விருதும் வழங்கப்பட்டது.கேரளாவைச் சேர்ந்த இந்துப் பெண்களை இஸ்லாமியர்களாக மதமாற்றம் செய்து, அவர்களை நாடுகடத்தி ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் சேர்க்கப்படுவதுபோல இப்படத்தில் காட்சிப்படுத்தியிருந்தார்கள். "உண்மைச் சம்பவம் என்கிற பதாகையைப் படத்தில் போட்டுக்கொண்டு, எவ்வித ஆதாரமும் இல்லாமல் இப்படத்தில் இப்படியாகக் கதாபாத்திரங்களைப் படக்குழு சித்தரித்திருக்கிறது" எனவும் இப்படம் விமர்சிக்கப்பட்டது.ஆர்டிக்கிள் 370 (Article 370 - 72ஆவது தேசியத் திரைப்பட விருதுகள்)இந்தப் படத்திற்கு மூன்று தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இப்படத்திற்குச் சிறந்த நடிகை (யாமி கௌதம்), சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த பாடல்களுக்கான இசையமைப்பு என மூன்று பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை (Article 370) மத்திய அரசு ரத்து செய்ததைப் பற்றி இப்படத்தின் கதையை அமைத்திருந்தார்கள். காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது மோடி அரசின் மிகவும் புத்திசாலித்தனமான, வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை என்ற ஒற்றைப் பார்வையில் மட்டுமே படம் நகர்கிறது என இப்படம் விமர்சிக்கப்பட்டது. இப்படியான ஒரு திரைப்படத்திற்கு மூன்று தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டிருப்பதற்குப் பலரும் கண்டனங்களைத் தெரிவித்து வருகிறார்கள்.Yami Gautam - Article 370இந்த மூன்று திரைப்படங்களுமே வெளியான காலகட்டத்தில் பாஜகவிற்கான ஆதரவான அரசியலை முன்னிறுத்தும் படம் என்ற விமர்சனங்களைப் பெற்றன. குறிப்பாக, 'ஆர்டிக்கிள் 370' திரைப்படம் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே திட்டமிட்டு வெளியிடப்பட்டது என்றும், அது தேர்தலுக்கான அரசியல் மைலேஜைப் பெறவே பயன்படுத்தப்பட்டது என்றும் நெட்டிசன்கள் குற்றம் சாட்டினர்.மேலும், பாஜக ஆளும் மாநிலங்களில் 'ஆர்டிக்கிள் 370' படத்திற்கான டிக்கெட் விலையும் குறைப்பட்டது. அந்த மாநிலங்களில், மாநிலப் பொழுதுபோக்கு வரி (State Entertainment Tax) விலக்கு போன்ற சலுகைகளும் அளிக்கப்பட்டன. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கதாபாத்திரங்களும் இப்படத்தில் வரும். 'இப்படம் பாஜக அரசின் மாபெரும் வரலாற்றுச் சாதனை' என மோடி தொடங்கி அக்கட்சியின் முக்கியத் தலைவர்கள் பலரும் பாராட்டியிருந்தனர்.இந்தச் சூழலில், இந்த ஆண்டும் அது போன்ற பிரசார படங்களுக்குத் தேசிய விருதுகள் வழங்கப்பட்டிருப்பதற்குச் சமூக வலைதளங்களில் பலரும் கண்டனத்தையும் விமர்சனத்தையும் பதிவு செய்து வருகிறார்கள்.

vikatan
செப். 18
3 நிமிடம் படிக்க
Ramayana: "முழுமையான நேர்மையோடு அணுகுவதே எனது பொறுப்பாக இருந்தது" - ராமாயணா இயக்குநர்
பொழுதுபோக்கு

Ramayana: "முழுமையான நேர்மையோடு அணுகுவதே எனது பொறுப்பாக இருந்தது" - ராமாயணா இயக்குநர்

ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் ஆகியோர் நடித்திருக்கும் 'ராமாயணா' படத்தின் முதல் பாகம் இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகை ரிலீஸாக வருகிறது. திட்டமிடல்களுடன் உலகமெங்கும் இப்படத்தை ரிலீஸ் செய்திடவும் படக்குழுவினர் ஆயத்தமாகி வருகிறார்கள். Ramayana Movieஇந்தப் படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகியிருக்கிறது. இந்தப் படத்தின் டிரெய்லர் குறித்தும், இந்தத் திரைப்படம் உருவான விதம் குறித்தும், இப்படத்தின் இயக்குநர் நிதேஷ் திவாரி பகிர்ந்திருக்கிறார்.அவர், "ராமாயணம் என்பது மிகவும் மகத்தான ஒன்று. அது பிரமாண்டத்தால் மட்டுமல்ல, 'ராமாயணம்' காலத்தைக் கடந்தும் உயரிய மதிப்புகளைச் சொல்கிறது. ஒரு திரைப்படப் படைப்பாளியாக, இதை உலகளாவிய ஒன்றாக மாற்ற வேண்டும் என்ற பொறுப்பு எனக்கு எப்போதும் தோன்றியதில்லை.ஏனெனில் அது ஏற்கெனவே உலகளாவிய ஒன்றுதான். முழுமையான நேர்மையோடும், உண்மைத்தன்மையோடும், பேரன்பு மற்றும் மரியாதையோடும் அணுகுவதே எனது பொறுப்பாக இருந்தது. எழுத்து, நடிகர்களின் பங்களிப்பு, கலை, இயக்கம், இசை, கிராபிக்ஸ் என இந்த மகத்தான பாரம்பர்யத்தை அதற்குரிய கண்ணியத்தோடும் மரியாதையோடும் சமர்ப்பிக்க வேண்டும் என்பதே எங்களின் விருப்பமாக இருந்தது. Nitesh Tiwariஇந்தத் தொலைநோக்குப் பார்வையைத் திரையில் நிஜமாக்க, உலகின் மிகச்சிறந்த கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் கதையாசிரியர்களுடன் இணைந்து பணியாற்றியிருக்கிறோம். இது என் வாழ்நாளில் கிடைத்த மிகப்பெரிய பாக்கியம். உலகம் முழுவதிலும் உள்ள பார்வையாளர்கள் ராமாயணத்தின் பிரமாண்டத்தை மட்டுமல்லாமல், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அதை நிலைத்திருக்கச் செய்த அதன் உணர்ச்சிகளையும், மனிதநேயத்தையும், காலத்தால் அழியாத ஆன்மாவையும் உணர்வார்கள் என்று நம்புகிறேன்" எனப் பகிர்ந்திருக்கிறார்.

vikatan
செப். 18
3 நிமிடம் படிக்க
Spotify: முதல் முயற்சி; ஸ்பாட்டிஃபையில் வெளியாகும் முதல் குறும்படம்! - பிஜாய் நம்பியார் மனைவி பேட்டி
பொழுதுபோக்கு

Spotify: முதல் முயற்சி; ஸ்பாட்டிஃபையில் வெளியாகும் முதல் குறும்படம்! - பிஜாய் நம்பியார் மனைவி பேட்டி

ஆடியோ வடிவத்திற்கு என பிரத்யேகமாக இயங்கி வந்த 'ஸ்பாட்டிஃபை' தளத்தில், இப்போது குறும்படங்களும் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன. 'டுயட்' என்ற குறும்படத்தை ஸ்பாட்டிஃபை தளத்தில் வெளியிட்டிருக்கிறார்கள். இந்த ஷார்ட் ஃபிலிமை இயக்குநர் பிஜாய் நம்பியாரின் மனைவியும், நடிகையுமான ஷீத்தல் மேனன் இயக்கியிருக்கிறார். நடிகையாகப் படங்கள், விளம்பரப் படங்கள் என இயங்கி வந்தவர் இப்போது டைரக்ஷனில் கவனம் செலுத்துகிறார். Sheetal Menonமற்றொரு பக்கம் டைரக்ஷனில் அடுத்தடுத்த படங்களுக்கான வேலைகளில் பிஜாய் நம்பியார் இயங்கி வந்தாலும், இந்த 'டுயட்' குறும்படத்தை அவரே தயாரித்திருக்கிறார். ஷீத்தல் மேனனிடம் தொடர்பு கொண்டு பேசினோம். இந்தக் குறும்படத்திற்கான ஐடியா, ஸ்பாட்டிஃபை தளத்தில் வெளியிடக் காரணம் என்ன, இன்றைய குறும்படங்களை வெளியிடுவதற்கு எப்படியான தளங்கள் இருக்கின்றன என உரையாடல் நீண்டது.பேசத் தொடங்கியவர், "கொரோனா சமயத்தில்தான் இத்திரைப்படத்திற்கான ஐடியா எனக்குள் தோன்றியது. அது வெறும் யோசனையாக மட்டுமே இருந்தது. பின்னர், அதனை ஒரு கதை வடிவமாக்க எனக்குச் சிறிது காலம் ஆனது. பிறகு அதை ஏன் ஒரு குறும்படமாக உருவாக்கக் கூடாது என்ற எண்ணம் வந்தது. பிறகுதான் அதற்கான வேலைகளைக் கவனித்து நான் இந்தக் குறும்படத்தைத் தொடங்கினேன். தன்னுடைய வீட்டில் தனிமையில் வாழும் ஒரு பியானோ இசைக்கலைஞனைப் பற்றியதுதான் இந்தக் குறும்படத்தின் கதை. அவர் வாழ்வில் மிக முக்கியமென நினைத்த ஒருவரை இழந்த மீளா சோகத்தில் இருக்கிறார். வலி, குற்றவுணர்ச்சி, மன அழுத்தம் என கொரோனா காலத்தில் பெரும் மனப்போராட்டத்தில் சிக்கித் தவிப்பவருக்கு இசை மட்டுமே நம்பிக்கை தருகிறது. இதனை மையமாக வைத்துதான் இந்தக் குறும்படத்தை எடுத்து, இப்போது வெளியிட்டிருக்கிறேன்.Sheetal Menonநான் சில படங்களில் நடித்து வந்தேன். ஆனால், எனது நடிப்பு வாழ்க்கையில் நான் நினைத்தது போன்ற நல்ல வாய்ப்புகள் கிடைக்காமல் நான் தடுமாறிய போது, எனக்குள் இருந்த இயக்குநரை நான் கண்டறிந்தேன். அடுத்தது என்ன செய்வதென்று தெரியாமல் நீண்ட காலம் கடந்துபோனது. எனவே, நடிப்பிலிருந்து விலகி வேறேதேனும் துறையில் கவனத்தைச் செலுத்த முடிவெடுத்தேன். ஆயினும், திரையுலகை விட்டு முழுமையாக விலக என்னால் முடியவில்லை. 'நாம் ஏதேனும் படைப்பை உருவாக்க வேண்டும்' என்று தோன்றியது. அந்த ஆசைதான் என்னை அடுத்தடுத்து நகர வைத்தது. முதலில் சிறிய கதையைக் கையிலெடுத்து, 'சிப்ளிங்க்ஸ்' (Siblings) என்கிற குறும்படத்தை எடுத்தேன். எழுதி, ஒரு படத்தை இயக்கும் அனுபவமும் எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது. அது எனக்குத் தன்னம்பிக்கையை அளித்ததால், தொடர்ந்து டைரக்ஷன் செய்ய வேண்டும் என இறங்கிவிட்டேன். ஆனால், இது எனக்கு எளிதாக அமையவில்லை. பல சவால்கள் நிறைந்த பயணமாகத்தான் இருந்தன. வழக்கமாக, ஒருவர் இயக்குநராக விரும்பினால், திரைப்படத் தொழில்நுட்பங்களைக் கற்றுக் கொள்வார்கள். பல திரைப்படங்களைப் பார்த்துத் திரைமொழிக்குத் தேவையான நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வார்கள். Sheetal Menonஆனால், எவ்விதத் திட்டமும் இன்றித் திடீரென ஒரு வாய்ப்பு அமையும்போது, நாம் பல விஷயங்களுக்குத் தயாராக இருக்க வேண்டியிருந்தது. அது பல சவால்களைத் தந்தாலும், அந்தப் பயணத்தை நான் பெரிதும் ரசித்தேன்." என்றவர், அவருடைய கணவர் இயக்குநர் பிஜாய் நம்பியார் பற்றி, "தொடக்கத்தில் இருந்து என் கணவர் மட்டும்தான் எனக்கு நம்பிக்கை ஊட்டினார். "நடிப்பு, டைரக்ஷன் என இரண்டையுமே செய்ய வேண்டும். அனைத்தையும் கற்றுக் கொள்ளலாம்" என்றார்.இந்த 'டுயட்' குறும்படத்திற்கு அவர்தான் தயாரிப்பாளர். ஒரு தயாரிப்பாளராக அவருடன் பணியாற்றியது நல்ல அனுபவமாக இருந்தது. நான் யோசிப்பதை எடுப்பதற்கான சுதந்திரத்தைத் தந்தார். எந்த நேரத்திலும் என்னுடைய கதையில் அவர் தலையிடவே இல்லை. படப்பிடிப்புத் தளத்திற்கு வந்து என்ன நடக்கிறது என்று கூடப் பார்வையிடவில்லை. அதுபோல, எனக்கு வழிகாட்டலும் ஆலோசனைகளும் தேவைப்பட்டபோது கணவராக அவர் உடனிருந்தார். டைரக்ஷனைப் பொறுத்தவரையிலும் நான் அனைத்தையும் அவரிடமிருந்துதான் கற்றுக் கொண்டேன். ஒரு படப்பிடிப்புத் தளத்தை எப்படி வழிநடத்துவது, படப்பிடிப்பிற்கு முன் எத்தனை கவனமாகவும், அனைத்திற்கும் தயாரான சூழலிலும் இருக்க வேண்டும் என அனைத்தையும் அவரிடமிருந்தே கற்றுக் கொண்டேன்." என மகிழ்வோடு பகிர்ந்தவரிடம் அடுத்தடுத்த கேள்விகளைக் கேட்டோம்.Sheetal Menon & Bejoy Nambiarமியூசிக் பிளாட்ஃபார்மான ஸ்பாட்டிஃபையில் வெளியாகும் முதல் குறும்படம் இதுதான். பாடல்களைக் கேட்டு வந்த தளத்தில் இப்போது விஷுவல் வடிவங்கள் வரவிருக்கின்றன. அதற்கு ஷீத்தல் மேனனின் குறும்படம்தான் தொடக்கம். இது குறித்துப் பேசியவர், "குறும்படங்களை வெளியிடுவதற்குச் சரியான தளங்கள் இல்லை என்பதே உண்மை. இந்தியாவைப் பொறுத்தவரை யூடியூப் தவிர்த்து, குறும்படங்களை வெளியிடுவதற்குச் சரியான தளங்கள் எதுவும் இல்லை. என்னுடைய குறும்படத்தை வெளியிடுவதற்கு ஒரு சரியான இடத்தைத் தேடுவது மிகவும் கடினமாக உள்ளது. அதற்கான சூழலும் இங்குக் குறைவாகவே உள்ளன. என்னுடைய இந்தக் குறும்படத்தில் இசைக்கு முக்கியப் பங்கு உண்டு.பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள் இதில் பணியாற்றியுள்ளனர். எனவே, ஸ்பாட்டிஃபை வழியாக இத்திரைப்படத்தை வெளியிடுவது ஒரு சுவாரஸ்யமான முயற்சியாக இருக்கும் என்று அனைவரும் உணர்ந்தோம். இசைக்கு முக்கியத்துவம் உள்ள இந்தக் குறும்படத்திற்கு ஸ்பாட்டிஃபை ஒப்பந்தம் சரியாக அமைந்தது. ஸ்பாட்டிஃபை இதற்குமுன் இதுபோன்றதொரு முயற்சியை மேற்கொண்டதில்லை. இதுவே அவர்கள் வெளியிடும் முதல் குறும்படம். இந்த வித்தியாசமான முயற்சி ஒரு பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியது. Sheetal Menon'ஸ்பாட்டிஃபை தளத்தில் குறும்படமா?' என்று பலரும் வியப்பாகக் கேட்டனர். அது ஒரு புதிய அனுபவமாக அமைந்தது." என்றவர், "இத்திரைத்துறையில் நடிகராக இருந்தாலும், இயக்குநராக இருந்தாலும், வாய்ப்புகளைத் தேடுவது மிகவும் கடினமானது. அப்படி ஒவ்வொருவரும் பல போராட்டங்களைச் சந்தித்து வருகிறார்கள். பிறகு நான் யோசிக்கும் கதைக்கேற்ற நடிகர்கள் கிடைக்க வேண்டும், தயாரிப்பிற்கு பட்ஜெட் கிடைக்க வேண்டும். இவை அனைத்துமே பெரிய பிராசஸ். நிச்சயமாக எனக்கு அடுத்ததாக ஒரு முழுநீளத் திரைப்படத்தை இயக்க வேண்டும் எனும் விருப்பம் உள்ளது. தற்போது அதில்தான் கவனம் செலுத்தி வருகிறேன். பார்ப்போம்!" என முடித்தார் நம்பிக்கையுடன்.

vikatan
செப். 18
3 நிமிடம் படிக்க
டெல்லி மாணவர் போராட்டம்: "தடியடி தேவையில்லை; அரவணைக்கும் கைகள்தாம் தேவை" - நடிகர் சோனு சூட்
பொழுதுபோக்கு

டெல்லி மாணவர் போராட்டம்: "தடியடி தேவையில்லை; அரவணைக்கும் கைகள்தாம் தேவை" - நடிகர் சோனு சூட்

நீட் தேர்வு முறைகேடு, கல்வியில் சீர்திருத்தம் மற்றும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா உட்பட பல்வேறு அம்சங்களை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டம் நடத்தி வருகிறது. இப்போராட்டத்தில் நாடு முழுவதுமிருந்து ஆயிரக்கணக்கான மாணவர்களும் கலந்துகொண்டுள்ளனர். மழைக்காலக் கூட்டத் தொடரின் தொடக்க நாளன்று, பலத்த மழையையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான மாணவர்களும் ஆதரவாளர்களும் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாகச் சென்றனர்.அவர்கள் மீது நேற்று போலீஸார் தடியடி நடத்தினர். மாணவர்களின் இப்போராட்டத்திற்கு பாலிவுட் பிரபலங்கள் ஆதரவு கொடுத்து வருகின்றனர். இப்போராட்டம் குறித்து பாலிவுட் நடிகர் சோனு சூட் விடுத்துள்ள அறிக்கையில், மாணவர்களிடம் மிகவும் இரக்கமான அணுகுமுறைக்கு அழைப்பு விடுத்துள்ளார்.ஹேமாமாலினிசமூக ஊடத்தில் சோனு சூட் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "நமது மாணவர்களுக்குத் தடியடி தேவையில்லை, அவர்களை அரவணைக்கும் கரங்களே தேவை" என்று அவர் மேலும் கூறினார்.இப்போராட்டம் குறித்து பா.ஜ.க எம்.பி.ஹேமாமாலினி அளித்த பேட்டியில், ''ஒரு பிரச்னை என்றால், அதை முறையாக விவாதிக்க வேண்டும். இந்த முறையில் போராட்டம் நடத்துவதால் எதையும் சாதிக்க முடியாது. நாட்டின் இளைஞர்கள் மற்றும் கல்வி முறையைப் பொறுத்தவரை, நமது மோடி அரசாங்கம் எப்போதும் அவர்களுக்குத் துணையாக நின்று, பெரும் பணியைச் செய்யும். அப்படி இருக்கையில், இப்போது நீங்கள் நடத்தும் போராட்டங்களில் அர்த்தமே இல்லை. இந்த விவகாரம் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்றுதான் நான் கூறுவேன். அவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும்'' என்றார். மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கை குறித்து பதிலளிக்க மறுத்துவிட்டார்.இதற்கிடையே இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கிசான் மகாபஞ்சாயத்தில் பங்கேற்பதற்காக பஞ்சாப்பிலிருந்து டெல்லியை நோக்கி பேரணியாகச் சென்ற நூற்றுக்கணக்கான விவசாயிகள், ஹரியானாவின் நுழைவு வாயிலான ஷம்பு எல்லையில் ஹரியானா காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். ஆனாலும் பஞ்சாப் மாநிலம் அம்பாலா, குருக்ஷேத்ரா மற்றும் அண்டை மாவட்டங்கள் உட்பட ஹரியானாவைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லிக்குத் தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர். ஒரே நேரத்தில் மாணவர்கள், விவசாயிகள் டெல்லியில் கூட இருப்பது பதட்டத்தை அதிகரித்துள்ளது.நட்டா உடன் CJP சந்திப்பு; அமித் ஷாவை சந்தித்த தர்மேந்திர பிரதான்! நடந்தது என்ன?

vikatan
செப். 18
3 நிமிடம் படிக்க
"சுருள் முடி கொண்ட சீதையைப் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை!" - சாய் பல்லவி பற்றி பாலிவுட் நடிகை
பொழுதுபோக்கு

"சுருள் முடி கொண்ட சீதையைப் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை!" - சாய் பல்லவி பற்றி பாலிவுட் நடிகை

ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் நடிப்பில் உருவாகிவரும் 'ராமாயணா' படத்தின் முதல் பாகத்தை இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகைக்குத் திரைக்குக் கொண்டுவரத் திட்டமிட்டு வருகிறார்கள். சமீபத்தில் இப்படத்தின் பிரத்யேக டிரெய்லர் திரையிடல் நிகழ்வு நடைபெற்றது. Sai Pallavi - Ramayanaஅங்கு படக்குழுவினர் கலந்துகொண்டு படம் தொடர்பாகப் பல தகவல்களைப் பகிர்ந்துகொண்டனர். இந்நிலையில் சாய் பல்லவி சீதையாக நடிப்பது பற்றிப் புகழ்பெற்ற ராமாயணம் (இந்தியில் வெளிவந்த தொடர் இது) தொலைக்காட்சி தொடரில் சீதையாக நடித்திருந்த தீபிகா சிக்லியா பேசியிருக்கிறார்.அவர், "நான் சாய் பல்லவியின் நடிப்பைப் பார்த்திருக்கிறேன். அவர் மிகவும் அற்புதமான கலைஞர். ஆனால், சீதையாக அவர் திரையில் எப்படித் தெரிவார் என்று எனக்கு இப்போது தெரியாது. திரையில் பார்த்த பிறகுதான் அதை முடிவு செய்ய முடியும். ராமாயணத்தில் சீதையின் தோற்றம் பற்றிய தெளிவான வர்ணனைகள் உள்ளன. பாதாம் போன்ற கண்கள், குறிப்பிட்ட உயரம், கூந்தல் மற்றும் மேனி நிறம் என அதில் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது. எங்களுடைய ராமாயண சீரியலின் இயக்குநர் ராமநந்த் சாகர் அந்த அம்சங்களைத்தான் தேடினார். deepika chikhalia அதை என்னிடம் கண்டறிந்து நடிக்க வைத்தார். அதுமட்டுமல்லாமல், ராமாயணத்தில் சுருள் முடி கொண்ட சீதையைப் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை. கொரோனா லாக்டவுன் காலத்தில் எங்களது பழைய ராமாயணம் சீரியல் மீண்டும் ஒளிபரப்பப்பட்டு, இன்றைய புதிய தலைமுறையினரின் மனதிலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால், அந்தப் பிம்பத்தை மக்கள் மனதிலிருந்து எளிதில் அழித்துவிட முடியாது," எனக் கூறியுள்ளார்.

vikatan
செப். 18
3 நிமிடம் படிக்க
நடிகை அனன்யா ராஜ் திடீர் மரணம்; ஒரு மாதம் கடந்து குடும்பத்தினர் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்
பொழுதுபோக்கு

நடிகை அனன்யா ராஜ் திடீர் மரணம்; ஒரு மாதம் கடந்து குடும்பத்தினர் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்

இந்தியத் திரைத்துறையில் தன் தனித்துவமான நடிப்பாலும் உழைப்பாலும் வளர்ந்து வந்த இளம் நடிகை அனன்யா ராஜ், தனது 35-வது வயதில் காலமானார் என்ற செய்தி திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பிரபல இயக்குநர் விக்ரம் பட்டின் கோஸ்ட் (Ghost) உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் பரவலான கவனத்தைப் பெற்ற இவர், ஜூலை 15, 2026 அன்று அதிகாலையில் தூக்கத்திலேயே உயிரிழந்தார். அனன்யா ராஜின் மரணம் கடந்த ஜூலை 15-ம் தேதியே நிகழ்ந்திருந்தாலும், அவரது குடும்பத்தினர் ஒரு மாதத்திற்குப் பிறகே சமூக வலைத்தளங்களின் வாயிலாக இந்தச் சோகச் செய்தியைப் பகிர்ந்துகொண்டனர். இறுதிச் சடங்குகள் அமைதியான முறையில் குடும்ப உறுப்பினர்களால் செய்து முடிக்கப்பட்டுள்ளன.அனன்யா ராஜ்குடும்பத்தினர் வெளியிட்ட அறிக்கையில், "கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக அவர் கடுமையான உடல், மனநலச் சிக்கல்களை எதிர்கொண்டு வந்தார். அதிலிருந்து மீண்டு வர ஒரு வீராங்கனையைப் போலப் போராடினார்" எனக் குறிப்பிட்டுள்ளனர். குறிப்பிட்ட மருத்துவக் காரணத்தை அவர்கள் வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை என்றாலும், அவரது ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திக்குமாறும், தங்கள் குடும்பத்தின் தனிமையை மதிக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.மும்பையில் பிறந்து வளர்ந்த அனன்யா ராஜ், மாடலிங் துறையில் தன் கவனத்தைச் செலுத்திப் பின்னர் திரைப்படத் துறைக்குள் நுழைந்தார். 2016-ம் ஆண்டு வெளியான 7 ஹவர்ஸ் டு கோ (7 Hours to Go) திரைப்படத்தின் மூலம் இந்தி சினிமாவில் அறிமுகமானார். 2017-ல் வெளியான தி ஃபைனல் எக்சிட் (The Final Exit) திரைப்படத்திலும், 2019-ல் புகழ்பெற்ற இயக்குநர் விக்ரம் பட் இயக்கிய கோஸ்ட் (Ghost) படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துப் பாராட்டுகளைப் பெற்றார்.இந்தி மட்டுமின்றி, தெலுங்கில் நவீன் சந்திரா நடித்த தக்கதேலே (Thaggede Le - 2022) திரைப்படத்தில் நடித்தார். மேலும் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மும்மொழிகளில் உருவான மதராஸி கேங் (Madrasi Gang) படத்திலும் முக்கியப் பங்களிப்பை வழங்கினார். டி-சீரிஸ், ஜீ மியூசிக், டைம்ஸ் மியூசிக் போன்ற முன்னணி நிறுவனங்களின் பல புகழ்பெற்ற சுயாதீன இசை வீடியோக்களிலும் தோன்றி ரசிகர்களைக் கவர்ந்தார்.அனன்யா ராஜ்அனன்யாவின் மறைவுச் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, அகில இந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல திரையுலக அமைப்புகளும், சக நடிகர்களும், ரசிகர்களும் சமூக வலைத்தளங்கள் வாயிலாகத் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துவருகின்றனர். வாழ்க்கையிலும் திரையிலும் சாதிக்க வேண்டிய ஒரு இளம் பெண், உடல் மற்றும் மனநலப் போராட்டங்களால் இவ்வளவு சீக்கிரம் மறைந்தது திரைத்துறைக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு எனப் பலரும் பதிவிட்டுவருகின்றனர். கனவுகளோடும் திறமையோடும் திரையுலகில் தன் வழியை அமைத்துக்கொண்ட அனன்யா ராஜ், இப்பூலவிகில் இல்லாமல் போனாலும் ரசிகர்கள் மனதில் என்றும் நிலைத்திருப்பார்.

vikatan
செப். 18
3 நிமிடம் படிக்க
டெல்லி மாணாவர்கள் போராட்டம்: "இந்தியாவின் எதிர்காலத்திற்காக வாங்சுக் போராடுகிறார்" - பிரீத்தி ஜிந்தா
பொழுதுபோக்கு

டெல்லி மாணாவர்கள் போராட்டம்: "இந்தியாவின் எதிர்காலத்திற்காக வாங்சுக் போராடுகிறார்" - பிரீத்தி ஜிந்தா

நீட் உள்ளிட்ட அரசுத் தேர்வுகளின் வினாத்தாள் கசிவு, தேர்வு குளறுபடி என மத்திய அரசின் செயல்பாடுகள் தொடர்ந்து விமர்சனத்துக்குள்ளாகின.இந்த நிலையில், காக்ரோச் ஜனதா பார்ட்டி எனும் இளைஞர் அமைப்பு, அரசுத் தேர்வுகள் குளறுபடி தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க வேண்டும், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளுடன் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தைத் தொடங்கியது. இந்தப் போராட்டத்தைக் கலைக்கும் வகையில் ஆளும் பா.ஜ.க அரசு மாணவர்கள் மீது கண்ணீர் புகைகுண்டு, தடியடி தாக்குதல் எனக் வன்முறை சம்பவங்களை நிகழ்த்தியிருக்கிறது. cjp protestபா.ஜ.க அரசின் இந்த நடவடிக்கை சமூக ஊடகங்களில் வீடியோவாக வெளியான நிலையில், மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில், சமூக ஊடகங்களில் அரசியல் தலைவர்களும், திரைப்பிரபலங்களும் பா.ஜ.க அரசின் நடவடிக்கை குறித்து விமர்சித்து வருகின்றனர். அதன் அடிப்படையில், பாலிவுட் நடிகை பிரீத்தி ஜிந்தா,``சோனம் வாங்சுக் மற்றும் மாணவர் அமைப்புகளுடன் நமது அரசாங்கம் ஒரு அர்த்தமுள்ள பேச்சைத் தொடங்கும் என்றும், அதனால் அவருடைய உடல்நலம் மேலும் மோசமடையாது என்றும் நம்புகிறேன்!சோனம், தயவுசெய்து உங்கள் உண்ணாநோன்பை முடியுங்கள். இந்தப் போராட்டத்தைப் போலவே உங்கள் ஆரோக்கியமும் முக்கியமானது. நீங்களும் மாணவர்களும் இந்தியாவின் எதிர்காலத்திற்காகவும் நமது இளைஞர்களுக்காகவும் போராடுகிறீர்கள். நமது கல்வி முறையை உயர்த்தவும் மேம்படுத்தவும் நடக்கும் இந்தப் போராட்டத்தில் ஒவ்வொரு மாணவருக்கும், சோனமிற்கும் எனது மனமார்ந்த மற்றும் உறுதியான ஆதரவு உண்டு. உங்கள் அனைவருக்கும் மேலும் வலிமை சேரட்டும். ஜெய் ஹிந்த்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.நட்டா உடன் CJP சந்திப்பு; அமித் ஷாவை சந்தித்த தர்மேந்திர பிரதான்! நடந்தது என்ன?

vikatan
செப். 18
3 நிமிடம் படிக்க
Sonam Wangchuk: "'3 இடியட்ஸ்' ராஞ்சோ கதாபாத்திரம் சோனம் வாங்சுக்தானா?' - நடிகர் ஆமீர் கான் விளக்கம்
பொழுதுபோக்கு

Sonam Wangchuk: "'3 இடியட்ஸ்' ராஞ்சோ கதாபாத்திரம் சோனம் வாங்சுக்தானா?' - நடிகர் ஆமீர் கான் விளக்கம்

நீட் தேர்வு முறைகேடுகள், கல்விச் சீர்திருத்தம், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா போன்றவற்றை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் கல்வி சீர்திருத்தவாதியும், பொறியியலாளரும், சமூக ஆர்வலருமான சோனம் வாங்சுக் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். அவரது இந்தக் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் 20 நாள்களைக் கடந்துள்ள நிலையில், உடல்நிலை மிகவும் மோசமடைந்து வருகிறது. இந்நிலையில் அவர் குறித்த பல்வேறு தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. சோனம் வாங்சுக்அந்த வகையில் பாலிவுட்டில் ஆமீர் கான் நடிப்பில் வெளியாகி உலகளவில் பிளாக்பஸ்டர் ஹிட்டடித்த '3 இடியட்ஸ்' படத்தில் வரும் ராஞ்சோ கதாபாத்திரம், சோனம் வாங்சுக்கின் வாழ்க்கையைத் தழுவி உருவாக்கப்பட்டது என்று சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. கூடங்குளம் தரவுகள் கசிவு: 'நாட்டின் பாதுகாப்பு குறித்த கவலையை எழுப்பியுள்ளது'- மாணிக்கம் தாகூர்இந்நிலையில் நடிகர் ஆமீர் கான் இதுதொடர்பாக விளக்கம் அளித்திருக்கிறார். "ராஞ்சோ கதாபாத்திரம் சோனம் வாங்சுக் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கவில்லை. இது தவறான புரிதல். '3 இடியட்ஸ்' திரைப்படத்தை எடுக்கும்போது எனக்கு சோனம் வாங்சுக் யாரென்றே தெரியாது. படத்தின் இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி, கதையாசிரியர் அபிஜத் ஜோஷி ஆகியோருக்கும் அவரைப் பற்றி அப்போது தெரியாது. 3 இடியட்ஸ்சோனம் வாங்சுக் செய்து வரும் சமூகப் பணிகள் தனித்துவமானவை. அதை நாம் மதிக்க வேண்டும். அவர் மேற்கொண்டு வரும் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் விரைவில் முடிவுக்கு வர வேண்டும்" என்று தெரிவித்திருக்கிறார்."நான் திருமணம் செய்த பெண்கள் மதம் மாறவில்லை" - பாஜக அமைச்சரின் சர்ச்சை பேச்சுக்கு ஆமீர் கான் பதிலடி

vikatan
செப். 18
3 நிமிடம் படிக்க
`பத்து லட்சத்தில் ஒன்று; 256 மணிநேரம்,131 ஊழியர்களின் உழைப்பு' - மனைவிக்கு ஆமீர் கான் கொடுத்த பரிசு
பொழுதுபோக்கு

`பத்து லட்சத்தில் ஒன்று; 256 மணிநேரம்,131 ஊழியர்களின் உழைப்பு' - மனைவிக்கு ஆமீர் கான் கொடுத்த பரிசு

பாலிவுட் நடிகர் அமீர்கான் தனது நீண்ட நாள் துணையான கெளரி ஸ்ப்ராட் என்பவரை கடந்த 5ம் தேதி மும்பை பந்த்ராவில் உள்ள தனது இல்லத்தில் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டார். இத்திருமணத்தில் அமீர்கானின் முன்னாள் மனைவிகள் ரீனா தத் மற்றும் கிரண் ராவ் மற்றும் அவர்களது மகன்கள் கலந்து கொண்டனர். திருமணத்தில் இருவரும் ஒரே மாதிரியான பாரம்பரிய ஆடைகளைத் அணிந்திருந்தனர். அமீர் கான் தந்த நிற தோத்தி-குர்தாவையும், கௌரி அதே நிறத்திலான லெஹங்காவையும் அணிந்திருந்தனர். அமீர் கான் தனது காதல் மனைவி கௌரி ஸ்ப்ராட்டிற்கு திருமணத்தில் பரிசளித்த ரூபி (மாணிக்க) திருமண மோதிரம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. கிவீன்(QWEEN) என்ற ஆடம்பர நகை பிராண்ட் நிறுவனத்தால் இந்த மோதிரம் வடிவமைக்கப்பட்டது. இதன் நடுவில் மிக அரிய வகையான, இயற்கையான மடகாஸ்கர் மாணிக்க கல் பதிக்கப்பட்டுள்ளது. இந்த ஒரு கல்லை மட்டும் தேடி எடுப்பதற்கு அந்த நிறுவனத்திற்கு மூன்று மாதங்களுக்கும் மேலாகிவிட்டது. பத்து லட்சத்தில் ஒன்று என வர்ணிக்கும் அளவுக்கு இது மிகவும் அரியது. அந்த மாணிக்க மோதிரம் அதன் அரிய ரத்தினக் கல் மற்றும் நேர்த்தியான கைவினைத்திறனுக்காக அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. இந்த மோதிரத்தை வடிவமைத்த கிவீன் நிறுவனத்தின் இணை நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான அமித் குமார், இந்த மோதிரம் தயாரிக்கப்பட்ட விதம் குறித்த சுவாரசியமான தகவல்களை பகிர்ந்துள்ளார். அவர் தனது பேட்டியில், ''இந்த குறிப்பிட்ட ரூபி (மாணிக்க) கல்லைத் தேடி எடுப்பதற்கு மட்டுமே மூன்று மாதங்களுக்கும் மேலாகிவிட்டது. இது மடகாஸ்கர் நாட்டு மாணிக்க கல் ஆகும். இது பத்து லட்சத்தில் ஒன்று என்ற விகிதத்தில் மட்டுமே கிடைக்கக்கூடிய மிக அரிய வகை கல்லாகும். இந்த திருமண மோதிரம், பார்ப்பதற்கு அப்படியே ஒரு அரச குடும்பத்து நகையைப் போன்ற தோற்றத்தைத் தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 256 மணி நேர உழைப்புமோதிரத்தின் வடிவமைப்பு மேம்பாடு கல் பதித்தல் மற்றும் இறுதி மெருகூட்டல் என அனைத்து வேலைகளையும் சேர்த்து, இந்த மோதிரத்தை உருவாக்க 256 மணி நேரத்திற்கும் மேலான உழைப்பு தேவைப்பட்டுள்ளது. கிவீன் நிறுவனத்தின் 131 திறமையான கைவினைக் கலைஞர்களின் கூட்டு உழைப்பால் இந்த மோதிரம் முழுமையாக வடிவம் பெற்றுள்ளது. வழக்கமான ரத்தின மோதிரங்களைப் போலல்லாமல், இந்த மோதிரத்தின் வடிவமைப்பு முற்றிலும் வித்தியாசமாகவும், அரச குடும்பத்து நகையைப் போன்ற கம்பீரத்துடனும் உருவாக்கப்பட்டுள்ளது''என்றார். சாதாரண மோதிரங்களில் கல் நேரடியாக ஒரு எளிய வளையத்தின் மீது பொருத்தப்பட்டிருக்கும். ஆனால், இந்த மோதிரத்தில் ரூபி கல் ஒரு நேர்த்தியான, தங்கத்தாலான கிரீட வடிவ அமைப்பிற்குள் உயர்த்தி வைக்கப்பட்டுள்ளது.இந்த மடகாஸ்கர் ரூபி கல்லிற்கு பட்டை தீட்டப்பட்ட வடிவம் தரப்படவில்லை. அதற்குப் பதிலாக, மென்மையான மற்றும் குவிந்த வடிவத்தைக் கொடுக்கும் 'கேபோச்சான் கட்' (smooth and domed polish) கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மோதிரம் சமூக ஊடகங்களில் வைரலாகி இருக்கிறது. ஆமீர் கான் கடந்த ஆண்டுதான் கெளரியை வெளியுலகிற்கு அறிமுகம் செய்து வைத்தார். ஒரு ஆண்டு திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்த பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

vikatan
செப். 18
3 நிமிடம் படிக்க
Ramayana: "ராமாயணா முதல் பாகத்தின் பட்ஜெட் மட்டும் ரூ.4000 கோடி கிடையாது!" - கணக்கு சொல்லும் யஷ்
பொழுதுபோக்கு

Ramayana: "ராமாயணா முதல் பாகத்தின் பட்ஜெட் மட்டும் ரூ.4000 கோடி கிடையாது!" - கணக்கு சொல்லும் யஷ்

நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி வரும் 'ராமாயணம்' திரைப்படம், இந்திய சினிமாவிலேயே அதிக பட்ஜெட் முதலீட்டில் தயாரிக்கப்படும் திரைப்படமாகப் பேசப்பட்டு வருகிறது. Ramayana Movieஇப்படத்தின் தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா, இரண்டு பாகங்களாக உருவாகும் இந்தப் படத்தின் பட்ஜெட் சுமார் ரூ. 4,000 கோடி எனத் தெரிவித்திருந்தார். "இந்தப் படம் எப்படி இவ்வளவு பெரிய வசூலைச் செய்து லாபம் ஈட்டும்?" என்ற கேள்விக்குச் சமீபத்திய பேட்டியில் நடிகர் யாஷ் விளக்கமளித்திருக்கிறார்.அவர், "ரூ. 4,000 கோடி என்பது 'ராமாயணம் பாகம் 1' படத்திற்கான பட்ஜெட் மட்டும் கிடையாது. இது பலருக்கும் இருக்கும் ஒரு தவறான புரிதல். இரண்டு பாகங்களுக்கும் சேர்த்து. இந்த ரூ. 4,000 கோடி என்பது இரண்டு பாகங்களுக்குமான தயாரிப்புச் செலவு மற்றும் விளம்பரத்திற்கான செலவுகளை உள்ளடக்கியது. ஹாலிவுட்டில் ஒரு படத்தின் தயாரிப்புச் செலவிற்கு நிகராகவோ அல்லது அதைவிட அதிகமாகவோ உலகளவில் விளம்பரம் செய்யச் செலவழிப்பார்கள். நடிகர் யஷ்ஏனென்றால், அது உலக சந்தையைக் குறிவைக்கிறது. அதேபோலத்தான் இதிலும் செலவிடப்படுகிறது. இதன் மூலம் கிடைக்கப்போகும் வருவாயும் உலகளாவிய அளவில்தான் இருக்கும். நாம் முயற்சி செய்யாவிட்டால் வேறு யாராவது இதைச் செய்துவிடுவார்கள். 'ராமாயணம்' மற்றும் எனது அடுத்த படமான 'டாக்ஸிக்' என இரண்டு படங்களுமே இந்திய சினிமாவை சர்வதேச தளத்திற்கு எடுத்துச் செல்வதற்கான முயற்சிகள் தான்," என்று பகிர்ந்துகொண்டார்.

vikatan
செப். 18
3 நிமிடம் படிக்க

அதிகம் படிக்கப்பட்டது

எங்கள் வாசகர்கள் பேசும் பிரபலமான கதைகள்