தமிழ் டைம்ஸ் logo
கோவை: பள்ளி மாணவர்களுக்காகத் தயாராகும் வண்ணமயமான சாலைகள்! | Photo Album
இந்தியா

கோவை: பள்ளி மாணவர்களுக்காகத் தயாராகும் வண்ணமயமான சாலைகள்! | Photo Album

வண்ணமயமான கோவை சாலைவண்ணமயமான கோவை சாலைவண்ணமயமான கோவை சாலைவண்ணமயமான கோவை சாலைவண்ணமயமான கோவை சாலைவண்ணமயமான கோவை சாலைவண்ணமயமான கோவை சாலைவண்ணமயமான கோவை சாலைவண்ணமயமான கோவை சாலைவண்ணமயமான கோவை சாலைகோவை தெற்கு தொகுதியைக் கைகழுவும் பா.ஜ.க... கொந்தளிக்கும் இந்து இயக்கங்கள்!

vikatan
16 மார்., 05:30 AM
`முதலமைச்சராவதற்கு தான் விஜய் அரசியலுக்கு வந்துள்ளார்!"- கூட்டணி குறித்த கேள்விக்கு செங்கோட்டையன்
இந்தியா

`முதலமைச்சராவதற்கு தான் விஜய் அரசியலுக்கு வந்துள்ளார்!"- கூட்டணி குறித்த கேள்விக்கு செங்கோட்டையன்

தவெக நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், “டெல்லி சிபிஐ விசாரணை தொடர்பாக தவெக தலைவர் விஜய் அவரது பாணியில் நேற்று உரிய பதிலை கொடுத்துவிட்டார். செங்கோட்டையன்விஜய் செல்லும் இடமெல்லாம் அவருக்கு மக்கள் அதிக அளவில் திரண்டு வந்து வரவேற்கிறார்கள். தமிழ்நாட்டில் மாற்றம் வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள் என்பது நன்றாக தெரிகிறது.தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு எந்த இடத்திலும் பாதுகாப்பு இல்லை. பொதுமக்கள் பயத்துடன் வாழும் சூழ்நிலை நிலவுகிறது. அதனால் திமுக மீண்டும் ஆட்சிக்கு வரக் கூடாது என்கிற மன நிலையில் மக்கள் உள்ளனர்.சட்டம் ஒழுங்கு பாதிப்புஅந்த மாற்றத்தை கொண்டு வரக் கூடிய திறன் விஜய்க்கு மட்டுமே உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் போட்டியிடக் கூடிய சிறந்த வேட்பாளர்கள் தவெகவில் உள்ளனர்.தவெக - தேசிய ஜனநாயக கூட்டணி குறித்து தற்போதுவரை எந்த கருத்து பரிமாற்றமும் நடைபெறவில்லை. விஜய் முதலமைச்சராக வேண்டும் என்கிற நோக்கத்துடன் தான் அனைத்தையும் விட்டு அரசியலுக்கு வந்துள்ளார். துணை முதலமைச்சர் பதவியை எல்லாம் ஏற்பதற்கான வாய்ப்பே இல்லை.விஜய்எங்கள் தலைவரை முதலமைச்சராக ஏற்பவர்களுடன் கூட்டணி என்று ஏற்கெனவே அறிவித்துவிட்டோம். தேர்தல் அறிவிப்பு வெளியான பிறகு மக்கள் அதிகளவு ஆர்ப்பரிக்கிறார்கள். இப்படிப்பட்ட எழுச்சியை நான் பார்த்ததில்லை” என்றார்.

vikatan
16 மார்., 05:30 AM
நெல்லை: மறைக்கப்படும் முதல்வர் ஸ்டாலின் படங்கள்! உடனடியாக அமலுக்கு வந்த தேர்தல் விதிகள்!
இந்தியா

நெல்லை: மறைக்கப்படும் முதல்வர் ஸ்டாலின் படங்கள்! உடனடியாக அமலுக்கு வந்த தேர்தல் விதிகள்!

நெல்லை: மறைக்கப்படும் முதல்வர் ஸ்டாலின் படங்கள்! உடனடி அமலுக்கு வந்த தேர்தல் விதிகள்!

vikatan
16 மார்., 05:30 AM
தேர்தல் தேதி, வாக்கு எண்ணிக்கை... எதற்காக இந்த நீண்ட இடைவெளி?
இந்தியா

தேர்தல் தேதி, வாக்கு எண்ணிக்கை... எதற்காக இந்த நீண்ட இடைவெளி?

தேர்தல் அறிவிப்பு :தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய நான்கு மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கும் தேர்தல் தேதியை அறிவித்திருக்கிறது இந்தியத் தேர்தல் ஆணையம். அதன்படி, ஒரே கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 23-ம் தேதிக்கும், அசாமில் ஏப்ரல் 9-ம் தேதியிலும், கேரளாவிலும் ஏப்ரல் 9-ம் தேதியிலும், புதுச்சேரியில் ஏப்ரல் 9-ம் தேதியிலும், மேற்குவங்கத்தில் ஏப்ரல் 23, ஏப்ரல் 29 என இரண்டு கட்டங்களிலும் தேர்தல் நடைபெறுகிறது. இந்த நான்கு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்துக்கும் தேர்தல் முடிவுகளை மே நான்காம் தேதி அறிவிக்கப்படுவதாகக் கூறப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு தேர்தல் தேதிதமிழ்நாட்டைப் பொறுத்தவரை வேட்புமனு தாக்கல் 30.03.2026 தொடங்கி 06.04.2026 தேதி வரை நடைபெறுகிறது. அடுத்ததாக வேட்புமனு பரிசீலனை 07.04.2026 தேதி நடைபெறுகிறது. வேட்புமனுக்களைத் திருப்பப் பெறுவதற்கான கடைசி நாள் 09.04.2026. இதனைத் தொடர்ந்து 23.04.2026 தேதி வாக்குப் பதிவு நடைபெற்று, வாக்கு எண்ணிக்கை தமிழ்நாடு உள்பட மற்ற மாநிலம் மற்றும் புதுச்சேரியைச் சேர்த்து மே 04-ம் தேதி நடைபெறவுள்ளது. மூன்று இடங்களுக்கு வெகு சீக்கிரம் தேர்தலை நடத்திவிட்டு, தமிழ்நாடு, மேற்கு வங்கத்துக்கு மிகவும் தாமதமாகத் தேர்தலை நடத்துவதிலும், ஐந்து நாள்கள் இடைவெளிக்குப் பிறகு வாக்கு எண்ணிக்கையை நடத்துவதிலும் பல்வேறு சந்தேகங்கள் எழுந்திருக்கின்றன. முன்-பின்னாக தேர்தல் தேதி:இரண்டு மாநிலம் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்துக்கு ஒரு தேதியிலும் பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மற்ற இரண்டு மாநில தேர்தலையும் நடத்துவது தொடர்பாகவும். வாக்கு எண்ணிக்கையை ஐந்து நாள்களுக்குப் பிறகு நடத்துவது தொடர்பாகவும் விவரமறிந்த வட்டாரத்தில் விசாரித்தோம். "வழக்கமாகப் புதுச்சேரி, தமிழ்நாடு, கேரளா ஆகிய இடங்களுக்கு ஒரே நாளில் தான் தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். ஆனால், அசாம், கேரளா, புதுச்சேரிக்கு ஒன்பதாம் தேதியே தேர்தலை வைத்துவிட்டு, பின்னர் நீண்ட இடைவெளி விட்டு 23-ம் தேதி தமிழ்நாட்டுக்கும் நடைபெறுகிறது.வாக்காளர்கள்இந்த விவகாரத்தில் அலசி ஆராய்வதற்கு முன்பாகவே தேதியே பார்த்தாலே பற்பல சந்தேகங்களை எழுப்புகிறது. அசாம், கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் இப்போதுவரை உட்கட்சி பூசல் தொடங்கி காங்கிரஸ் உள்ளிட்ட பிரதான கட்சிகள் தேர்தலுக்கு முழுவதுமாக தயாராகவில்லை. அதேநேரத்தில், தமிழ்நாட்டில் பாஜகவுடன் இப்போதுவரை விஜய் கூட்டணிக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தை முழு வீச்சில் நடந்து வருகிறது. இங்கு அவர்களுக்கு நாட்கள் தேவைப்படுவதால் பின்னரும், மற்ற இடங்களில் முன்னதாகவும் தேர்தல் தேதியை அறிவித்திருப்பதாகவே கருத முடிகிறது" என்றார்கள் விளக்கமாக. ஐந்து நாள் இடைவெளி:தேர்தல் நடைபெறுவது ஒருபுறமிருக்க, தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கும் ஐந்து நாள்கள் இடைவெளி இருப்பது தொடர்பாகத் தேர்தல் ஆணைய வட்டாரத்தில் விசாரித்தோம். "வாக்கு எண்ணிக்கைக்குச் சிறிய இடைவெளி இருப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலை எடுத்துக்கொண்டால் தமிழ்நாட்டில் ஏப்ரல் 06-ம் தேதியே தேர்தல் முடிந்துவிட்டது. ஆனால், தேர்தல் முடிவுகள் மே 2-ம் தேதியே வெளியானது. அதே நேரத்தில் மேற்கு வங்கத்தில் கடந்த முறை எட்டு சுற்றுகளாக நடைபெற்ற தேர்தல் இம்முறை இரண்டே இரண்டு சுற்றுகளாக மட்டுமே நடைபெறுகிறது. 294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்கத்துக்கும், 234 தொகுதிகளைக் கொண்ட தமிழ்நாட்டுக்கும் மற்ற மூன்று இடங்களில் தேர்தல் நடத்துவதைப் போல நடத்திவிட முடியாது. வாக்கு எண்ணிக்கை நடக்கும் இடம்தொகுதிகள் அதிகமிருக்கும் மாநிலங்களுக்குக் கூடுதல் அவகாசம் என்பது கட்சிகளுக்கும், தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கும் அவசியம். அதே நேரத்தில் முக்கியமாக இம்முறை மேற்கு வங்கத்தில் இரண்டு கட்டமாகத் தேர்தல் நடத்தும்போது ஒரு சில இடங்களில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டு அங்கே மறு வாக்குப் பதிவு நடத்தவேண்டிய சூழல் ஏற்பட்டால் அதற்கான நேரமாகவே இந்த ஐந்து நாள்களைப் பார்க்க வேண்டும். அப்படிப் பார்த்தால், மற்ற மூன்று இடங்களில் ஏப்ரல் தொடக்கத்திலேயே தேர்தல் முடிவடைந்துவிடுகிறது. 140 தொகுதிகளைக் கொண்ட கேரளாவையும், 126 தொகுதிகளைக் கொண்ட அசாமையும், 30 தொகுதிகளைக் கொண்ட புதுச்சேரியையும், தமிழ்நாடு, மேற்கு வங்கத்தையும் ஒன்றாகப் பார்க்க முடியாது" என்கிறார்கள்.

vikatan
16 மார்., 05:30 AM
`RSS-க்குத் தடை விதிக்க வேண்டும்' - அமெரிக்க USCIRF அறிக்கை; காங்கிரஸ் விமர்சனமும் அரசின் பதிலும்!
government and politics

`RSS-க்குத் தடை விதிக்க வேண்டும்' - அமெரிக்க USCIRF அறிக்கை; காங்கிரஸ் விமர்சனமும் அரசின் பதிலும்!

சர்வதேச மதச் சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் (USCIRF), ஆர்.எஸ்.எஸ் (RSS) மற்றும் இந்தியாவின் உளவு அமைப்பான 'ரா' (R&AW) ஆகியவற்றிற்கு எதிராகத் தடைகளை விதிக்கப் பரிந்துரைத்துள்ள நிலையில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்குத் தடை விதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது.அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ அமைப்பான USCIRF வெளியிட்டுள்ள 2025-ம் ஆண்டிற்கான வருடாந்திர அறிக்கையில், இந்தியாவில் மதச் சுதந்திரம் கவலைக்கிடமாக உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. மகாராஷ்டிரா, ஒடிசா மற்றும் உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் நடந்த வகுப்புவாத மோதல்களுக்கு ஆர்.எஸ்.எஸ்-ன் துணை அமைப்பான விஷ்வ ஹிந்து பரிஷத் போன்ற அமைப்புகளே காரணம் என்று அந்த அமெரிக்க அறிக்கை குற்றம் சாட்டியுள்ளது.USCIRFமேலும், இந்தியாவில் கொண்டு வரப்பட்ட கட்டாய மதமாற்றத் தடைச் சட்டங்கள் மற்றும் வக்ஃப் வாரிய சட்டத் திருத்தங்கள் ஆகியவற்றையும் அந்த அறிக்கை கடுமையாக விமர்சித்துள்ளது. இந்த விவகாரத்தை முன்னிறுத்தி இந்தியாவுடனான ஆயுத விற்பனை மற்றும் வர்த்தக உறவுகளை அமெரிக்கா மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அந்த ஆணையம் கோரியுள்ளது. குறிப்பாக, அமெரிக்கக் குடிமக்கள் மற்றும் சிறுபான்மையினர் மீதான அச்சுறுத்தல்களைக் காரணம் காட்டி, இந்தியாவுக்கான ஆயுத விற்பனையை நிறுத்த வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.குறிப்பாக, ஆர்.எஸ்.எஸ் அமைப்பு மதச் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலாக விளங்குவதாகக் கூறி, அதன் மீது இலக்கு நிர்ணயிக்கப்பட்ட தடைகளை விதிக்குமாறு டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க நிர்வாகத்திற்குப் பரிந்துரைத்துள்ளது.இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "அரசியலமைப்புச் சட்டத்தை எதிர்க்கும் மற்றும் மனுஸ்மிருதியின் படி நாட்டை நடத்தத் துடிக்கும் ஓர் அமைப்பான ஆர்.எஸ்.எஸ், இந்த தேசத்தின் ஒற்றுமைக்கும் சகோதரத்துவத்திற்கும் விஷம் போன்றது. மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகு, சர்தார் வல்லபாய் படேல் ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்குத் தடை விதித்தார்.ஆர்.எஸ்.எஸ்தற்போது அமெரிக்க ஆணையமும் இந்த அமைப்பு மதச் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் என எச்சரித்துள்ளது. எனவே, ஆர்.எஸ்.எஸ்-க்குத் தடை விதிக்கப்பட வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளது.இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்திருக்கும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், ``அமெரிக்க ஆணையத்தின் மதிப்பீடுகள் ஒருதலைப்பட்சமானவை மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்டவை. இந்தியாவின் பன்முகத்தன்மை கொண்ட சமூக அமைப்பைக் கொச்சைப்படுத்தும் நோக்கில் இது போன்ற அறிக்கைகள் வெளியிடப்படுகிறது" என விளக்கம் அளித்துள்ளது.தேசிய கீதத்துக்கும் மேலாக வந்தே மாதரம்? ஆர்.எஸ்.எஸ், அமித் ஷா, மோடி அரசின் உள்நோக்கம் என்ன?

vikatan
16 மார்., 05:30 AM
எதிர்நீச்சல் தொடரில் ஸ்ரீஜா! கனிகா வெளியேறி 8 மாதம் கழித்து புதிய ஈஸ்வரி! தாமதத்துக்கு காரணம் என்ன?
television

எதிர்நீச்சல் தொடரில் ஸ்ரீஜா! கனிகா வெளியேறி 8 மாதம் கழித்து புதிய ஈஸ்வரி! தாமதத்துக்கு காரணம் என்ன?

ச‌ன் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் தொடர் `எதிர்நீச்சல்'. முதல் சீசன் ஹிட் ஆனதை தொடர்ந்து தற்போது இரண்டாவது சீசன் போய்க் கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த நிலையில் 10 மணிக்கு மாற்றப்பட்டது.முதல் சீசனில் நடிகர் மாரிமுத்து கேரக்டருக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்த நிலையில் திடீரென அவர் மரணமடைய, ஆதி குணசேகரன் என்ற அந்த கேரக்டருக்கு நடிகரும் எழுத்தாளருமான வேல ராமமூர்த்தி வந்தார். இவரது மனைவியாக நடித்து வந்தார் நடிகை கனிகா.இரண்டாவது சீசன் தொடங்கி விறுவிறுப்பாகப்போய்க் கொண்டிருந்த‌ சூழலில் கனிகா சீரியலில் இருந்து வெளியேறிவிட்டதாக செய்திகள் கசியத் தொடங்கின.அப்போதே நாம் இது தொடர்பாக விசாரித்து 'எதிர்நீச்சல் 2 சீரியலில் இருந்து வெளியேறினார் கனிகா - பின்னணியில் நடந்தது என்ன?' என்கிற டைட்டிலில் விகடன் தளத்தில் செய்தி வெளியிட்டோம்.பர்சனல் காரணங்களால் வெளியேறியதாகச் சிலரும், வெளிநாட்டில் செட்டில் ஆகப் போவதால் விலகினார் எனச் சிலரும் சொன்னார்கள்.தொடரில் ஆதி குணசேகரன் கேரக்டருக்குத் தரப்படும் அளவுக்கு தன் கேரக்டருக்கு முக்கியத்துவம் தரப்படாததாலேயே வெளியேறினார் என்றும் சில தகவல்கள் றெக்கை கட்டின. Actress Kanika with her sonஅவர் சீரியலில் இருந்து வெளியேறி விட்ட போதும், மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருப்பது போலவே சுமார் எட்டு மாதங்கள் வரை காட்டி வந்தார்கள். ஆனால் கனிகாவே இந்த சீரியலில் இருந்து வெளியேறிய சூட்டோடு வேறொரு சேனலின் ரியாலிட்டி ஷோ ஒன்றில் நடுவராக போய் அமர்ந்து விட்டார்.இது குறித்து நாம் கேட்டதற்கு அவரிடம் சமாதானம் பேசி திரும்பவும் அவரை சீரியலுக்குள் கொண்டுவரும் முயற்சி நடப்பதாகவவும் அதனாலேயே இப்படி காட்டப்பட்டு வருவதாகவும் சீரியலுடன் தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவித்தன. sreejaஅந்த முயற்சிகள் பலனளிக்கவில்லையா எனத் தெரியவில்ல, தற்போது கனிகாவின் கேரக்டருக்கு புதிய ஆர்ட்டிஸ்ட் கமிட் ஆகி விட்டதாக உறுதிபடுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.'பொம்மலாட்டம்' உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்திருக்கும் நடிகை ஸ்ரிஜா கனிகாவுக்குப் பதில் ஈஸ்வரி கேரக்டரில் நடிக்க கமிட் செய்யப்பட்டு ஷூட்டிங்கிலும் கலந்து கொள்ளத் தொடங்கி விட்டாராம்.எனவே ஸ்ரிஜாவை புதிய ஈஸ்வரியாக அடுத்த சில தினங்களிலிருந்து பார்க்கலாம் என்கிறார்கள்.!

vikatan
16 மார்., 05:30 AM
சிலுவம்பாளையம் டு சி.எம். நாற்காலி - எடப்பாடிக்கு ஏற்றம் தந்த 1989 தேர்தல்! | முதல் களம் 10
government and politics

சிலுவம்பாளையம் டு சி.எம். நாற்காலி - எடப்பாடிக்கு ஏற்றம் தந்த 1989 தேர்தல்! | முதல் களம் 10

எடப்பாடிக்கு ஏற்றம் தந்த 1989 தேர்தல்!முதல் களம் 101989-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற்றபோது, சேலம் மாவட்டத்தின் ஒரு சிறிய ஊரிலிருந்து ஒருவர் தேர்தல் களத்தில் குதித்தார். அவர் பெயர் எடப்பாடி பழனிசாமி. அப்போது பெரும்பாலானோருக்கு அவர் பெயர் கூடத் தெரியாது. ஆனால் அந்தத் தேர்தலில், எடப்பாடி தொகுதியில் அவருக்கு கிடைத்த வெற்றி, திராவிட அரசியல் வரலாற்றில் மிகவும் எதிர்பாராத ஒரு அத்தியாயத்துக்கான தொடக்கமாக அமைந்து, முதலமைச்சர் பதவியிலும் அவரை அமர வைத்தது.தமிழ்நாட்டு அரசியல் அரங்கில் மக்களை ஈர்க்கும் கவர்ச்சியும், உரத்த பேச்சும், ஆளுமையும்தான் பெரும்பாலும் ஒருவரை தலைவராக உயர்த்தும். ஆனால், எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்த உயர்வு, ஒரு வித்தியாசமான எளிமையால் தனித்து நிற்கிறது. இன்று அதிமுக பொதுச் செயலாளராகவும் எதிர்க்கட்சித் தலைவராகவும் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள காத்திருக்கும் எடப்பாடி பழனிசாமியின் அரசியல் வாழ்க்கைக்கான தொடக்க புள்ளி, அவரது முதல் தேர்தல் வெற்றியிலிருந்துதான் துவங்கியது. எடப்பாடி பழனிசாமிசிலுவம்பாளையத்தில் தொடங்கிய அரசியல் வாழ்க்கை1954-ல் சேலம் மாவட்டம், எடப்பாடிக்கு அருகேயுள்ள சிலுவம்பாளையம் கிராமத்தில், விவசாயக் குடும்பம் ஒன்றில் பிறந்த பழனிசாமி, சாதாரண வெல்லமண்டி வியாபாரியாக வாழ்க்கையைத் தொடங்கினார். எடப்பாடி பழனிசாமிஅதிமுக-வில் அடிப்படை உறுப்பினர் என்பதிலிருந்து சிலுவம்பாளையம் அதிமுக கிளைச் செயலாளர் பதவிக்கு உயர்ந்தார். தொடர்ந்து ஊராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர், எம்ஜிஆர் மறைவைத் தொடர்ந்து, அதிமுக இரண்டாக உடைந்தபோது, ஜெயலலிதா அணியில் செங்கோட்டையனுடன் இருந்தார். ஒரு வகையில் சொல்லப்போனால், செங்கோட்டையன்தான் பழனிசாமியின் அரசியல் தொடக்கத்தை வடிவமைத்தவர்களில் முக்கியமானவர். எடப்பாடி முதல் சேலம் மாவட்டம் வரையிலான அமைப்பு பொறுப்புகளை அவரிடம் ஒப்படைத்தார் செங்கோட்டையன். அந்தப் பணிகளை எல்லாம் அமைதியாகவும், துல்லியமாகவும், முழுமையாகவும் செய்து முடிக்கும் திறன்தான், பின்னாளில் அவரது அடையாளச் சின்னமாக மாறியது.கோட்டையாக மாறிய எடப்பாடி தொகுதி1987-ல் எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு, அதிமுக ஜெயலலிதா ஆதரவு அணி, ஜானகி அணி என இரண்டாக உடைந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட குழப்பமே, பழனிசாமியைத் தேர்தல் அரசியலுக்குள் இழுத்தது. கட்சி பிளவுபட்டபோது அவர் ஜெயலலிதா பக்கமே நின்றார். அந்த விசுவாசத்துக்கு பலனாக, 1989 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி தொகுதிக்கான அதிமுக சீட் அவருக்கே கிடைத்தது. அதிமுகவில் அடிமட்டத் தொண்டராக, கிளைக்கழகச் செயலாளராக பல ஆண்டுகள் உழைத்த எடப்பாடிக்கு, அந்தத் தேர்தலில் கிடைத்த வெற்றி, சிறிய அளவிலான வாக்கு வித்தியாசத்தில்தான் கிடைத்தது. வெறும் 1,299 வாக்குகள் வித்தியாசத்திலேயே, அவர் திமுக வேட்பாளர் கே.ஆர். நடராஜனை வீழ்த்தினார். இருப்பினும், முதல் முறை போட்டியிட்டு, பெரிதாக அறியப்படாத பின்னணியிலிருந்து வந்த ஒருவருக்கு, அது சாதாரண வெற்றி அல்ல. அதைவிட முக்கியம், எடப்பாடி தொகுதி அன்று முதல், பழனிசாமியின் கோட்டையாக மாறியது. முதல் வெற்றிக்குப் பிறகு அவர் திரும்பவும் 1991-ல் அதே எடப்பாடி தொகுதியில் வென்றார்.1996 தேர்தலின்போது காணப்பட்ட்ட மாநிலம் தழுவிய அதிமுக எதிர்ப்பு அலையில் தோற்றாலும், 2011-ல் மிகப் பெரிய வித்தியாசத்துடனும், 2016-ல் இன்னும் பெரிய வெற்றியுடனும் திரும்பி வந்தார். அதற்கு அவர் பயன்படுத்தியது உரத்த பிரசாரங்களோ திரைப்பட நட்சத்திரக் கவர்ச்சியோ அல்ல. தொகுதிக்குள்ளேயே தங்கி, மக்களோடு மக்களாக நடத்திய அமைதியான அரசியல்தான். எடப்பாடி பழனிசாமிஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய அமைச்சர்பிரம்மாண்டமில்லாமல் வாக்குகளைத் திரட்டும் அவரது திறமை, ஜெயலலிதாவின் கண்களில் படத் தொடங்கியது. 2000-களின் தொடக்கத்திலேயே மேற்கு மாவட்டங்களின் கட்சி அமைப்பின் ஒருங்கிணைப்புக்கு அவர் நம்பிக்கைக்குரியவராக உருவெடுத்தார். கட்சிக்குள் சத்தமில்லாமல் வேலையை முடிக்கும் திறன் அவருக்கு அமைச்சரவையிலும் இடத்தைப் பெற்றுத் தந்தது. 2001-ல் பொதுப்பணித் துறை அமைச்சரானார். அந்தப் பொறுப்பையும் சர்ச்சையோ சத்தமோ இல்லாமல் நிர்வகித்தார். அந்த அமைதியான நம்பகத்தன்மைதான் அவரை ஜெயலலிதாவுக்கு அருகில் நெருக்கமாக்கியது. கட்சி விவகாரங்களைக் கவனிக்கும் ஐவர் குழுவில் ஒருவராகவும் அவர் இடம்பிடித்தார். காமராஜர் : அடித்தளமிட்ட சாத்தூர்; `முதல்’ தேர்தலிலேயே அன்னபோஸ்ட்டாக வென்றது எப்படி? | முதல் களம் 06அமைச்சரவையில் அசைக்க முடியாத இடம்எடப்பாடி பழனிசாமியின் அரசியல் பயணத்தில் அடுத்த பெரிய பாய்ச்சல் 2011-ல் வந்தது. அதிமுக மாபெரும் வெற்றியுடன் ஆட்சிக்கு வந்தபோது, ஜெயலலிதா அவரை நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சராக நியமித்தார். அந்தப் பொறுப்பு அவரது அரசியல் பிம்பத்தின் மையமாக மாறியது. எடப்பாடி தொகுதியில் தொடர்ந்து பெற்ற வெற்றிகளும், அவரை ஜெயலலிதாவின் மிகவும் நம்பகமான அமைச்சர்களில் ஒருவராக்கின. மாவட்ட அளவிலான உத்தி, தேர்தல் திட்டமிடல் போன்றவற்றில் அவர் கையாளும் பொறுப்புகள் படிப்படியாக அதிகரித்தன. 2016-ல் அதிமுக மீண்டும் ஆட்சியைப் பிடித்த பின்னர், பொதுப்பணித் துறை உட்பட முக்கிய இலாகாக்களுக்கான அமைச்சராக பொறுப்புகளை ஏற்றபோது, ஜெயலலிதாவின் அமைச்சரவையில் நான்காவது இடம் அவருடையதாக மாறியது. மேலும் மேலிடத்துக்கான 'ஸ்வீட் பாக்ஸ்' சப்ளையில், ஒழுங்கான கணக்கு வழக்குகளுடன் மிக நேர்மையாக(?) நடந்துகொண்டார் எனவும், இதில் பிற அமைச்சர்களைக் காட்டிலும் எடப்பாடிக்கு மிக நல்ல பெயர் என்கிற பேச்சும் அப்போது கட்சி மட்டத்தில் நிலவியது. இதுவே அவரை ஜெயலலிதாவின் உள் வட்டத்திற்குள் நிரந்தரமாக இழுத்துச் சென்றது. எடப்பாடி பழனிசாமிஜெயலலிதாவின் மறைவும் முதலமைச்சர் வாய்ப்பும்2016 டிசம்பர் 5 அன்று ஜெயலலிதா மறைந்தபோது, அதிமுக முழுக்க குழப்பமும் பிளவும் சூழ்ந்தன. கட்சியின் கட்டுப்பாட்டை ஜெயலலிதாவின் தோழி சசிகலா ஏற்ற நிலையில், சில மாதங்களிலேயே முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர் செல்வத்துக்கும் சசிகலா குடும்பத்தினருக்கும் இடையே மோதல் வெடித்தது. அதனைத் தொடர்ந்து, கூவத்தூரில் நடைபெற்ற பரபரப்பான அத்தியாயத்துக்குப் பின்னர்தான் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரானார். சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பினால் சசிகலா சிறைக்கு செல்லும் சூழல் உருவான நிலையில், அதிமுக எம்.எல்.ஏ-க்களிடம் பேசி புதிய அதிமுக சட்டசபைத் தலைவராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்தார் சசிகலா. சொல்லப்போனால், முதலில் இந்தப் பதவிக்கு பரிசீலிக்கப்பட்டவர் செங்கோட்டையன்தான். ஆனால், பின்னர் நடந்த பல அரசியல் ஆட்டங்களை தொடர்ந்து அந்த வாய்ப்பு எடப்பாடிக்குப் போனது. அந்தத் தேர்வு அதிமுக வட்டாரத்திலேயே ஏராளமானோருக்கு ஆச்சரியத்தை அளித்தது. 2017 பிப்ரவரி 14 அன்று அவர் முதலமைச்சராக அறிவிக்கப்பட்டார். பிப்ரவரி 18 அன்று, சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் 122 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுடன் வென்றார். ஸ்டாலின்: முதல் தேர்தலிலே தோல்வி... தோற்ற தொகுதியிலே வென்றது எப்படி? | முதல் களம் 08அதன்பின்னர், ஓ.பன்னீர் செல்வத்தையும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ-க்களையும் சமாதானப்படுத்தி, எஞ்சிய நான்கு ஆண்டுக்கால ஆட்சியையும் பல்வேறு அச்சுறுத்தல்கள் மற்றும் அழுத்தங்களுக்கு இடையேதான் கொண்டு சென்றார் எடப்பாடி பழனிசாமி. இன்னொருபுறம் அதுவரை அதிமுக கட்சியிலும் அதிமுக ஆட்சியிலும் மறைமுக அதிகார மையமாக கோலோச்சிய சசிகலா குடும்பத்தினரின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து, அவர்களை முற்றிலும் ஓரங்கட்டினார். அடுத்ததாக 2021 தேர்தலுக்குப் பின்னர், தனக்கு அச்சுறுத்தலாக இருந்த ஓ.பன்னீர் செல்வத்தையும் கட்சியிலிருந்து சாமர்த்தியமாக வெளியேற்றி, அதிமுகவை முற்றிலும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டார். இன்றுவரை இந்த இருதரப்பும், மீண்டும் அதிமுகவுக்குள் நுழைய டெல்லி பாஜக மூலம் எவ்வளவோ அழுத்தம் கொடுத்தும், அசைந்து கொடுக்காமல், கட்சியின் தலைமை பீடத்தில் வலுவுடன் அமர்ந்திருக்கிறார் எடப்பாடி. அந்த வகையில், 1989-தேர்தலில், வெறும் 1,299 வாக்குகள் வித்தியாசத்தில் தொடங்கிய ஒரு சிறிய வெற்றிதான் எடப்பாடி பழனிசாமியை சட்டமன்ற உறுப்பினராக்கியது மட்டுமல்ல, முதலமைச்சராகவும், அதிமுகவின் ஒரே ஆளுமையாகவும் உயர்த்தியது. சிலுவம்பாளையத்து அடிமட்ட அதிமுக தொண்டனுக்கு அன்று திறந்த கதவு இன்று வரை மூடப்படவே இல்லை!(தொடரும்)தமிழகத்தின் தவிர்க்க முடியாத சக்தியாக திருமாவளவனை மாற்றிய முதல் தேர்தல் வெற்றி! | முதல் களம் 09

vikatan
16 மார்., 05:30 AM
கூட்டணிக்கு தனி ரூட் பிடித்த ஆனந்த்; கடுப்பான விஜய்! தவெக - NDA கூட்டணி(?) நிலவரம் என்ன?
government and politics

கூட்டணிக்கு தனி ரூட் பிடித்த ஆனந்த்; கடுப்பான விஜய்! தவெக - NDA கூட்டணி(?) நிலவரம் என்ன?

தவெக - NDA இடையே தீவிரமாக கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியிருந்தது. ஆனால், கடந்த இரண்டு நாட்களாக நடந்த சம்பவங்களின் அடிப்படையில் தவெக - NDA வுக்கு செல்ல வாய்ப்பே இல்லை என அடித்து கூறுகின்றனர் அக்கட்சியின் சீனியர் நிர்வாகிகள். நிலவரம் என்னவென இறங்கி விசாரித்தோம்.TVK Vijay - தவெக விஜய்கடந்த வெள்ளிக்கிழமை அன்று தவெகவின் பொதுச்செயலாளர் ஆனந்த் கட்சியின் மா.செக்களுடன் வீடியோ வழி ஒரு அவசர கூட்டத்தை நடத்தியிருந்தார். அதில்தான், 'நாம் கூட்டணிக்கு செல்லலாமா வேண்டாமா?, கூட்டணிக்கு சென்றால் உங்களில் பல பேருக்கு சீட் கிடைக்காதே?' போன்ற கேள்விகளை ஆனந்த் கேட்டிருந்தார். மாவட்டச் செயலாளர்களில் பெரும்பாலானோர் கூட்டணிக்கு செல்ல வேண்டுமென்றே விருப்பம் தெரிவித்திருந்தனர்.இந்தத் தகவல் வெளியான பிறகுதான் தவெக - NDA கூட்டணி என்கிற செய்தி தீயாக பரவத் தொடங்கியது. அரசியல் வட்டாரமே பரபரப்பானது. இப்போது தவெக - NDA கூட்டணிக்கு வாய்ப்பே இல்லை எனக் கூறும் சீனியர்கள் சிலரிடம் ஆனந்த் நடத்திய மா.செக்கள் கூட்டத்தைப் பற்றி கேட்டோம். 'ஆனந்த் அந்த கூட்டத்தை நடத்தி முடித்துவிட்டு நேராக சென்று தலைவரைத்தான் சந்தித்தார். அவர் அலுவலகத்துக்கு வரும் முன்பே தவெக - NDA கூட்டணி என்கிற செய்தி எல்லா பக்கமும் பரவி விட்டது. அதை கண்டு தலைவரே டென்ஷனாகிவிட்டார்.Bussy Anand 'ஏன் இவ்வளவு அவசரப்படுறீங்க. அவங்கதான் நம்ம கூட கூட்டணிக்கு விரும்புறாங்க. நாம ஒண்ணும் கூட்டணிக்கு விருப்பப்படல. கூட்டத்துல பேசுற விஷயங்கள் அப்படியே நியூஸ் ஆகுற அளவுக்குதான் ஒரு கூட்டத்தை நடத்துவீங்களா? இனிமே நீங்களா எதுவும் செய்ய வேணாம்...' என ஆனந்திடம் தலைவர் உஷ்ணமாகிவிட்டார். அதனால்தான் மறுநாளே தி.நகரில் 'மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் விஜய்!' என்பதை பிரதானப்படுத்தி நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வை நடத்தினார். அதில் மைக் பிடித்து தலைவர்தான் தமிழகத்தின் அடுத்த முதல்வர் என்றும் பேசினார்.' என்கின்றனர் அந்த சீனியர்கள்.ஆனந்த் ஆட்டத்தின் பின்னணிஆனந்த் கூட்டணிக்கு தனி ரூட் பிடிக்க காரணம் என்னவென்பதை அறிய கட்சியின் உள் விவகாரங்கள் அறிந்த சிலரிடம் பேசினோம். 'கட்சிக்குள் நிலவும் கோஷ்டி மோதல்தான் இதற்கு முக்கிய காரணம். ஜான், ஆதவ் போன்றோருக்கு NDA வுடன் கூட்டணி செல்ல விரும்பவில்லை. ஆனால், ஆனந்துக்கு அந்த தேவை இருக்கிறது. கட்சிக்குள் ஆதவ்வுக்கு கிடைக்கும் முக்கியத்துவம் அவருக்கு உறுத்தலாக இருக்கிறது. ஆதவ் தனி ஆவர்த்தனம் செய்வதாக ஆனந்த் தரப்பு நினைக்கிறது. போதாக்குறைக்கு விஜய் போட்டியிடவிருக்கும் பெரம்பூர் தொகுதியின் முழு பொறுப்பையும் ஆதவ் ஏற்றுக்கொண்டு விட்டார். அத்தோடு சேர்த்து பெரம்பூருக்கு அருகேயே இருக்கும் வில்லிவாக்கம் தொகுதியையும் கேட்டு வாங்கிவிட்டார்.Aadhav Arjunaதலைவர் பெரம்பூரில் உண்டாக்கும் தாக்கத்திலேயே வில்லிவாக்கத்தில் தன்னால் வென்றுவிட முடியுமென ஆதவ் கணக்கு போடுகிறார். ஆதவ் வென்று நாம் தோற்றால் அது கௌரவக் குறைச்சல் என ஆனந்த் நினைக்கிறார். அதனால்தான் தி.நகர் தொகுதியில் எப்படியாவது வெல்ல வேண்டுமென எல்லா வழிகளிலும் முயல்கிறார். தி.நகரில் பாஜகவுக்கான வாக்குவங்கி கணிசமாக இருக்கிறது. பாஜக நிர்வாகிகளின் உதவியை நாடினால் தன்னால் வெல்ல முடியுமென ஆனந்த் நினைக்கிறார். புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வழியே அதற்கான முயற்சியிலும் இறங்கினார்.முதல்வர் ரங்கசாமி, விஜய் | கோப்புப் படம்அந்த லைனில்தான் தவெக - NDA கூட்டணியையும் முன்னெடுக்க முயன்றிருக்கிறார் ஆனந்த். ஆனால், தலைவர் ஆனந்தையெல்லாம் தாண்டி அவருடன் நெருக்கமாக இருக்கும் ஒரு சிலருடன்தான் கூட்டணி பற்றி பேசி காய்களை நகர்த்தி வருகிறார். அது புரியாமல் ஈகோ மோதலில் ஆனந்த் அவசரகதியில் நடத்திய மா.செக்கள் கூட்டம்தான் அத்தனை சர்ச்சைக்கும் காரணம்' என்கின்றனர்.தலைவருக்கே விருப்பமில்லை'இப்படியொரு கூட்டணிக்கு செல்ல தலைவருக்கே விருப்பமில்லை. குறுகிய காலத்தில் அந்த கூட்டணி நல்ல பலனை கொடுப்பதாக இருந்தாலும், நீண்டகால அடிப்படையில் தன்னுடைய அரசியலுக்கே அது பிரச்னையாக அமையும் என தலைவர் நினைக்கிறார்' எனக் கூறும் விஜய்க்கு நெருக்கமான நிர்வாகிகள், 'சூழலை உணர்ந்து நெளிவு சுழிவு அறிந்தே காய்களை நகர்த்த வேண்டும் என்பதால்தான் NDA வுக்கு நேரடியாக 'நோ' சொல்லவில்லை. மாறாக, 90 சீட்டுகள் முதல்வர் பதவி என்றுதான் எங்களின் டிமாண்டையே முன்வைத்தோம். அதனால்தான் டெல்லி எங்களை கூட்டணிக்குள் இழுக்க முயன்றும் எடப்பாடி அதற்கான முன்னெடுப்புகள் எதையும் செய்யாமல் இருக்கிறார். 90 சீட்டுகள் + முதல்வர் பதவி என்பதே சுருக்கமாக 'நோ' தான் எடப்பாடி உணர்ந்திருக்கிறார்' என்கின்றனர் அந்த நிர்வாகிகள்.TVK Vijay | விஜய் எப்படியும் கூட்டணிக்கு செல்லப்போவதில்லை என்பதை தன்னுடைய தொண்டர்களுக்கு கடத்தும் விதமாகத்தான் சிபிஐ அலுவலகத்தில் இருந்து வெளியேறும்போதே கார் மேல் ஏறி கையசைத்து வெற்றி முத்திரையை விஜய் காட்டி சென்றதாக கிசுகிசுக்கின்றனர் பனையூர் வட்டாரத்தினர்.விஜய் தலையை சுற்றி மூக்கை தொட்டு 'நோ' சொன்னாலும் டெல்லி மேலிடம் இன்னும் இந்த கூட்டணியை சாத்தியப்படுத்தி விட வேண்டுமென துடித்துக் கொண்டிருக்கிறது. 'மார்ச் 30' தான் தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் ஆரம்பமாகிறது. அதுவரை விஜய்யை தங்கள் பக்கம் இழுக்க நேரமிருப்பதாக நினைக்கிறது பாஜக!`முதலமைச்சராவதற்கு தான் விஜய் அரசியலுக்கு வந்துள்ளார்!"- கூட்டணி குறித்த கேள்விக்கு செங்கோட்டையன்Loading…

vikatan
16 மார்., 05:30 AM
Trump: "ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்க சீனா உதவ வேண்டும்" - ட்ரம்ப்பின் நிபந்தனையும் சீனாவின் பதிலும்
government and politics

Trump: "ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்க சீனா உதவ வேண்டும்" - ட்ரம்ப்பின் நிபந்தனையும் சீனாவின் பதிலும்

அமெரிக்கா - ஈரான் போரினால் உலகளவில் கச்சா எண்ணெய் விலை விண்ணை முட்டியுள்ள நிலையில், "ஈரானால் முடங்கியுள்ள ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எண்ணெய் போக்குவரத்தை மீண்டும் சீரமைக்க சீனா உதவ வேண்டும்" என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார். ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களால் கடந்த இரண்டு வாரங்களில் உலக அரசியல் சூழல் பரபரப்பாக மாறியுள்ளது. அமெரிக்காவில் இடைத்தேர்தல் நெருங்கும் வேளையில், பெட்ரோல் விலை உயர்வு ட்ரம்ப் நிர்வாகத்திற்குப் பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. தொடக்கத்தில் அமெரிக்கப் போர் கப்பல்கள் மட்டுமே பாதுகாப்பு அளிக்கும் என்று கூறிய ட்ரம்ப், தற்போது சுமார் ஏழு நாடுகளிடம் ராணுவ உதவி கோரியுள்ளார்.ட்ரம்ப்ஒருபுறம் ட்ரம்ப் இத்தகைய முயற்சிகளை முன்னெடுக்கும் நிலையில், மறுபுறம் பாரிஸ் நகரில் அமெரிக்க நிதித்துறை செயலாளர் ஸ்காட் பெசென்ட் மற்றும் சீன துணைப் பிரதமர் ஹி லிஃபெங் ஆகியோர் வர்த்தகப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். ட்ரம்ப்பின் சீனப் பயணத்திற்கு முன்கூட்டியே ஒரு சுமூகமான சூழலை உருவாக்கவே இந்தப் பேச்சுவார்த்தை திட்டமிடப்பட்டிருந்தது.இந்த நிலையில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) 'பைனான்சியல் டைம்ஸ்' இதழுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அளித்திருந்த பேட்டியில், ``மத்திய கிழக்கிலிருந்து வரும் கச்சா எண்ணெய்யைச் சீனா பெரிதும் சார்ந்துள்ளது. எனவே, ஹார்முஸ் ஜலசந்தியைத் திறந்து எண்ணெய் கப்பல்களின் போக்குவரத்தை உறுதி செய்ய நாங்கள் உருவாக்கும் புதிய கூட்டணியில் சீனா இணைய வேண்டும். எனது சீனப் பயணத்திற்கு முன்பாகவே அவர்களின் நிலைப்பாட்டை நாங்கள் அறிய விரும்புகிறோம். ஒருவேளை அவர்கள் ஒத்துழைக்காவிட்டால், எனது பயணம் தள்ளிவைக்கப்படலாம்.அமெரிக்கா Vs சீனாட்ரம்ப்பின் இந்தக் கோரிக்கை குறித்து அமெரிக்காவிலுள்ள சீனத் தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர், ``ஹார்முஸ் ஜலசந்தி சர்வதேச வர்த்தகத்திற்கு மிக முக்கியமானது. இப்பகுதியை அமைதியாக வைத்திருப்பது சர்வதேச சமூகத்தின் கூட்டுப் பொறுப்பு. அமைதியை நிலைநாட்ட தொடர்புடைய நாடுகளுடன் சீனா தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தும்" எனப் பொதுவாகக் குறிப்பிட்டார்.ஏற்கனவே வர்த்தகப் போரினால் அமெரிக்கா - சீனா இடையே சுங்க வரி மோதல் நிலவி வருகிறது. 2026-ம் ஆண்டிற்கான தனது பொருளாதார வளர்ச்சி இலக்கைச் சீனா 4.5% - 5% ஆகக் குறைத்துள்ள நிலையில், எண்ணெய் விநியோகத் தடை நீடித்தால் அது சீனாவிற்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.சீனாவின் மௌனம் ஏன்? பெய்ஜிங்கில் இயங்கும் அந்த ரகசிய வங்கி! அமெரிக்கா - ஈரான் போரில் ஒரு ட்விஸ்ட்!

vikatan
16 மார்., 05:30 AM

சமீபத்திய செய்திகள்

சமீபத்திய புதுப்பித்தல்கள்

சாகித்ய அகாதமி: `இந்த' நூலுக்காக எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு விருது!
Arts

சாகித்ய அகாதமி: `இந்த' நூலுக்காக எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு விருது!

vikatan
Mar 163 நிமிடம் படிக்க
150 அறைகள் கொண்ட கவடியார் அரண்மனை... ரூ.2 கோடி மதிப்புள்ள மதிப்புமிக்க நகைகள் கொள்ளை - நடந்தது என்ன?
Crime

150 அறைகள் கொண்ட கவடியார் அரண்மனை... ரூ.2 கோடி மதிப்புள்ள மதிப்புமிக்க நகைகள் கொள்ளை - நடந்தது என்ன?

vikatan
Mar 163 நிமிடம் படிக்க
பேராவூரணி தொகுதியை கூட்டணிக்கு தரமாட்டார் எடப்பாடி! - அதிமுக வேட்பாளர் ரேஸில் முந்துவது யார்?
government and politics

பேராவூரணி தொகுதியை கூட்டணிக்கு தரமாட்டார் எடப்பாடி! - அதிமுக வேட்பாளர் ரேஸில் முந்துவது யார்?

vikatan
Mar 163 நிமிடம் படிக்க
தூத்துக்குடி மாணவி கொலை வழக்கு: 5 பேரின் டிஎன்ஏ சேகரிப்பு- `காவல்துறை மீது நடவடிக்கை..' - நீதிமன்றம்
Crime

தூத்துக்குடி மாணவி கொலை வழக்கு: 5 பேரின் டிஎன்ஏ சேகரிப்பு- `காவல்துறை மீது நடவடிக்கை..' - நீதிமன்றம்

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 12-ம் வகுப்பு படித்து வந்த மாணவி, கடந்த 10-ம் தேதி மாலை சுமார் 6 மணியளவில் இயற்கை உபாதை கழிப்பதற்காக, வீட்டின் அருகிலுள்ள காட்டுப் பகுதிக்குச் சென்றார். நீண்டநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. மறுநாள் மதியம் சுமார் 2 மணியளவில் அந்த மாணவி கொடூரமாகக் கொலைசெய்யப்பட்டு சடலமாகக் கிடந்தார். தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மதன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இத்தனிப்படையினர் சம்பவம் நடந்த இடம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விளாத்திகுளம்இந்த வழக்கில் மாணவியுடன் படித்தவர்கள், நண்பர்கள், உறவினர்கள் உள்ளிட்ட சந்தேகப்படும் வகையிலான 20-க்கும் மேற்பட்ட நபர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அவர்களிடமிருந்து பல்வேறு கோணங்களில் தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் முக்கிய குற்றவாளிகளைக் கைதுசெய்ய முடியாமல் போலீஸார் திணறி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாணவி, மர்மமான முறையில் கொலைசெய்யப்பட்ட வழக்கில் 6 நாள்கள் ஆகியும் கொலையாளிகள் குறித்த துப்பு துலங்கவில்லை.இந்த நிலையில், இந்த வழக்கினை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றிடக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் அ.தி.மு.க தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு, இன்று (16-ம் தேதி) நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதி ராமன் ஆகியோர் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “மாணவிக்கு நன்கு தெரிந்த நபரே இந்தக் குற்றத்தில் ஈடுபட்டுள்ளார். மாணவியின் வீட்டிலிருந்து 200 மீட்டர் தொலைவிலேயே அவரின் உடல் மீட்கப்பட்டது. தற்போது சந்தேகப்படும் 5 நபர்களின் டி.என்.ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆய்வக பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளது. செல்போன் டவர்கள் செல்போன் அழைப்புகளை பரிசோதனை செய்து கண்காணித்து வருகிறோம். ஊர்மக்கள் சாலை மறியல்அருகிலுள்ள சி.சி.டி.வி காட்சிகளைக் கொண்டு சந்தேகத்துக்கிடமானவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்றனர். இதற்கு பதிலளித்த நீதிபதிகள், “மாணவி காணவில்லை என்பது முக்கியமான புகார். அதில் காவல்துறையினர் அலட்சியத்துடன் செயல்பட்டிருக்கக் கூடாது. காவல்துறையினர் அப்போதே புகாரை பெற்று ஜீரோ எஃப்.ஐ.ஆர் பதிவு செய்திருந்தால் இந்த விவகாரம் இவ்வளவு தூரம் போயிருக்காது. நடவடிக்கை எடுக்காத காவல்துறையினர்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மாணவியின் பெற்றோர் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும். வாக்குமூலத்தை வீடியோ, ஆடியோவாக பதிவுசெய்ய வேண்டும். இந்த வழக்கினை காவல்துறையினர் அறிவியல் பூர்வமாக விசாரிக்க வேண்டும்” எனக் கூறி, இந்தக் கொலை வழக்கு விசாரணையை வரும் ஏப்ரல் 2-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

vikatan
Mar 16, 05:30 AM
5 நிமிடம் படிக்க

விளம்பர இடம்

உங்கள் விளம்பரத்தை இங்கே காட்சி செய்யலாம்

மேலும் செய்திகள்

தமிழ்நாடு முழுவதும் மற்றும் அதற்கு அப்பால் இருந்து சமீபத்திய கதைகளுடன் புதுப்பித்த நிலையில் இருங்கள்

`மயிலாடுதுறையில் மல்லுக்கட்டும் திமுக, அதிமுக மா.செ.க்கள்; தவெக ஆதரவு?' மாவட்டத்தில் முந்துவது யார்?
government and politics

`மயிலாடுதுறையில் மல்லுக்கட்டும் திமுக, அதிமுக மா.செ.க்கள்; தவெக ஆதரவு?' மாவட்டத்தில் முந்துவது யார்?

முந்துவது யார்?தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. தற்போதைய நிலவரப்படி, யார் களத்தில் முந்துகிறார்கள் என்பது குறித்து விவரிக்கும் பக்கம் தான் `முந்துவது யார்?'மாவட்ட கள நிலவரம்!மயிலாடுதுறைமயிலாடுதுறை சட்டமன்ற தொகுதிமயிலாடுதுறை தொகுதியில் வன்னியர், பட்டியலினத்தவர், இஸ்லாமியர், செட்டியார், வேளாளர், நாயுடு உள்ளிட்ட சமூகத்தினர் வசிக்கின்றனர். விவசாயம் தொகுதியில் முக்கிய தொழில். தி.மு.க கூட்டணியில் கடந்த முறை காங்கிரஸ் கட்சிக்கு தொகுதி ஒதுக்கப்பட்டது. அக்கட்சியைச் சேர்ந்த எஸ்.ராஜ்குமார் சிட்டிங் எம்.எல்.ஏ. தி.மு.க-வை பொறுத்தவரை முன்னாள் எம்.எல்.ஏ குத்தாலம் அன்பழகன், ஆர்.அருள்செல்வன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் எம்.கே.மருது, ஜெகவீரபாண்டியன், வக்கீல் இராம.சேயோன் என பலர் ரேஸில் உள்ளனர். இந்த முறையும் தொகுதி காங்கிரஸ்க்கு செல்வதற்கு வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள். இதில் எஸ்.ராஜ்குமார், மாவட்டத் தலைவர் பானுசேகர் இருவரும் சீட்டுக்கு மல்லு கட்டி வருகின்றனர். தொகுதியை தக்கவைத்துக் கொள்வதற்காக ராஜ்குமார் டெல்லியிலேயே முகாமிட்டுள்ளார், பானு சேகருக்கு செல்வப்பெருந்தகையின் ஆசி இருப்பதால் தெம்பாக வலம் வருகிறார் என்கிறார்கள். இதற்கிடையே மக்கள் நீதி மய்யம் கட்சியும் மயிலாடுதுறையைக் குறிவைத்துள்ளது. அக்கட்சியைச் சேர்ந்த மண்டலச் செயலாளரான நகை கடை அதிபர் ரவிச்சந்திரன் பசைக்கு பஞ்சமில்லாதவர். இவருக்காக கமல்ஹாசன் தொகுதியைக் கேட்கிறாராம். மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜ்குமார்அ.தி.மு.க-வில் முன்னாள் எம்.எல்.ஏ ராதாகிருஷ்ணன், சந்தோஷ்குமார், வி.ஜி.கே.செந்தில்நாதன், நாஞ்சில் கார்த்தி, கோமல் அன்பரசன் ஆகியோர் ரேஸில் உள்ளனர். அ.தி.மு.க கூட்டணியில் தொகுதி பா.ம.க-வுக்குச் சென்றால் மீண்டும் சித்தமல்லி பழனிசாமி (அன்புமணி அணி) போட்டியிடுவார் என்கிறார்கள். நாம் தமிழர் கட்சியில் கடந்த முறை போட்டியிட்ட காசிராமன் இந்த முறையும் வேட்பாளர். த.வெ.க-வை பொறுத்தவரை செலவுக்கு கட்சியை எதிர்பார்க்காத நபருக்கே சீட்டாம். பசைக்கு குறையில்லாமல் வலம் வரும் மாவட்ட பொருளாளர் நவீன் மற்றும் நகரச் செயலாளர் ராஜ்குமார் ஆகியோர் ரேஸில் உள்ளனர். தி.மு.க, அதிமுக நேரடியாக மோதினால் போட்டி பலமாக இருக்கும். கூட்டணி வலுவாக இருப்பது திமுக-விற்கு ப்ளஸ். பாஜக எதிர்ப்பு அதிமுக-விற்கு மைனஸ். பா.ம.க-வில் நிலவும் பிளவு, சிறுபான்மையினர் வாக்குகள் போன்றவற்றால் தற்போதைய நிலவரப்படி தொகுதியில் தி.மு.க கூட்டணி முந்துவதற்கான வாய்ப்புள்ளது. நாகர்கோவிலை வட்டமிடும் `பொன்னார்' - குமரி மாவட்டத்தின் 6 தொகுதிகள் கள நிலவரம்! முந்துவது யார்?பூம்புகார் சட்டமன்ற தொகுதிபூம்புகார் தொகுதியில் வன்னியர், பட்டியலினத்தவர், இஸ்லாமியர், மீனவர்கள் உள்ளிட்ட இதர சமூகத்தினர் வசிக்கின்றனர். விவசாயம், மீன்பிடி போன்றவை முக்கிய தொழில்கள். கட்டடத் கூலி தொழிலாளர்கள் நிறைந்திருக்கின்றனர். திமுக-வைச் சேர்ந்த நிவேதா முருகன் சிட்டிங் எம்.எல்.ஏ. தி.மு.க-வில் நிவேதா எம்.முருகன், மாவட்ட துணை செயலாளர் ஞானவேலன், மேலையூர் தேவேந்திரன் ஆகியோர் சீட்டுக்கான ரேஸில் உள்ளனர். அ.தி.மு.க-வில் மாவட்ட செயலாளர், முன்னாள் எம்.எல்.ஏ பவுன்ராஜ் வேட்பாளர் என்பது உறுதியாகி விட்டதாக சொல்கிறார்கள். நாம் தமிழர் கட்சியில் இளைய நகுலன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தவெக-வில் ஒன்றிய செயலாளர் வசந்த் போட்டியிடுவதற்கான வாய்ப்பே அதிகமிருப்பதாக சொல்கிறார்கள். ஒருவேளை தவெக கூட்டணி அமைக்கும் பட்சத்தில் மாற்றமிருக்கலாம். நிவேதா முருகன்- திமுக2021 தேர்தலில் 3,200 வாக்கு வித்யாசத்தில் தோல்வியை தழுவிய பவுன்ராஜ் இம்முறை முன்பே திட்டமிட்டு வியூகம் வகுத்து பிரச்சார வேலையை தொடங்கி விட்டார். கட்சி பாகுபாடின்றி வீடு தவறாமல் ஹாட்பாக்ஸ் கொடுத்திருக்கிறார். அதிமுக ஆட்சியில் தொகுதியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை குறிப்பிட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டு வருகிறார். சொந்தக் கட்சியினரை அனுசரிக்கவில்லை என்கிற குறை நிவேதா முருகன் மீது நிலவுகிறது. தனக்கு சீட் பெறுவதே நிவேதா முருகனுக்கு போராட்டமாக இருக்கிறது. பண பலம் படைத்த பவுன்ராஜ், நிவேதா முருகன் இருவரும் மோதினால் போட்டி கடுமையாக இருக்கும். நிவேதா முருகன் மீது சொந்தக் கட்சியினரே அதிருப்தியில் இருப்பதால் தற்போதைய நிலவரப்படி தொகுதியில் அ.தி.மு.க கூட்டணி முந்துவதற்கான வாய்ப்புள்ளது. சீர்காழி (தனி) சட்டமன்ற தொகுதிசீர்காழி தனி தொகுதியில் பட்டியலினத்தவர், வன்னியர், மீனவர், இஸ்லாமியர், கிறிஸ்தவர், முக்குலத்தோர் உள்ளிட்ட இதர சமூகத்தினரும் வசிக்கின்றனர். விவசாயம், மீன்பிடி ஆகியவை முக்கியத் தொழில்கள். முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலினின் சொந்த தொகுதி என்பதால் அரசியல் களத்தில் கவனம் பெற்றுள்ள தொகுதியாகியிருக்கிறது. அக்கட்சியைச் சேர்ந்த மு.பன்னீர்செல்வம் சிட்டிங் எம்.எல்.ஏ. தி.மு.க-வை பொறுத்தவரை மு.பன்னீர்செல்வம், பஞ்சு.குமார், மலர்விழி திருமாவளவன், வழக்கறிஞர் சிவதாஸ் ஆகியோர் ரேஸில் உள்ளனர். பவுன்ராஜ்- அதிமுகஅதிமுக-வில் முன்னாள் எம்.எல்.ஏ பாரதி, சந்திரமோகன், சக்தி, பாலாஜி ஆகியோர் சீட்டுக்காக கடுமையாக மெனக்கெடுகின்றனர். நாம் தமிழர் கட்சியில் சுபாஷ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தவெக-வில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் குட்டி கோபி போட்டியிடுவதற்கான வாய்ப்புள்ளதாக தெரிகிறது. கூட்டணி பலம், சிறுபான்மையினர் வாக்குகள் சாதகமாக இருப்பதால் தற்போதைய நிலவரப்படி தொகுதியில் தி.மு.க முந்துவதற்கான வாய்ப்புள்ளது. மயிலாடுதுறை மாவட்டம்:மூன்று தொகுதிகளை உள்ளடக்கிய மயிலாடுதுறை மாவட்டத்தை பொறுத்தவரையில், மயிலாடுதுறை தொகுதியில் திமுக கூட்டணி முந்துவதற்கான சூழல் உள்ளது. பூம்புகார் சட்டமன்ற தொகுதியை பொறுத்தவரையில் அதிமுக கூட்டணி முந்துவதற்கான வாய்ப்பு தற்போது உள்ளது. தனி தொகுதியான சீர்காழி சட்டமன்ற தொகுதியை பொறுத்தமட்டில், கூட்டணி பலத்துடன் சிறுபான்மையினர் வாக்குகளும் சாதகமாக இருப்பதால் திமுக கூட்டணி முந்துவதற்கான வாய்ப்பு உள்ளது. !

vikatan
16 மார்.
3 நிமிடம் படிக்க
`ரீல்ஸ் போடும் முதல்வருக்கு வேடநத்தத்தின் கதறல் கேட்டிருக்க வேண்டாமா?' - குமுறும் கிராமத்தினர்!
government and politics

`ரீல்ஸ் போடும் முதல்வருக்கு வேடநத்தத்தின் கதறல் கேட்டிருக்க வேண்டாமா?' - குமுறும் கிராமத்தினர்!

கடந்த 10 ஆம் தேதி மாணவி மர்ம முறையில் கொல்லப்பட்ட அதிர்ச்சியிலும் துயரத்திலும் இருந்து இன்னமும் அந்த விளாத்திகுளத்தின் வேடநத்தம் கிராமம் மீளவில்லை. சம்பவம் நடந்த ஆறாவது நாளில் நாம் அந்த கிராமத்துக்கு நேரில் சென்றிருந்தோம்.போராடிய வேடநத்தம் மக்கள்கிராமத்துக்கு உள்ளேயும் வெளியேயும் என 15 இடங்களில் பாய்ன்ட் அமைத்து போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்தனர். சில இடங்களில் உள்ளூர் இளைஞர்களிடம் விசாரணை நடத்தி அதை நோட்ஸ் எடுத்துக் கொண்டிருந்தனர். உளவுத்துறையினரும் ஊருக்குள் சுற்றித் திரிந்து நிலைமையை அசைபோட்டுக் கொண்டிருந்தனர்.முழுக்க முழுக்க காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருந்ததால் ஊரே கொஞ்சம் பதைபதைப்பாகத்தான் இருந்தது. 'உள்ளூர் ஆட்கள் யாரையும் தெரியாமல் உள்ளே செல்ல வேண்டாம். மக்கள் கொதிப்போடு இருக்கிறார்கள்' என்கிற செய்தி முன்பே நமக்கு கிடைக்கப் பெற்றதால், உள்ளூர் நபர் ஒருவரை தொடர்புகொண்டு அவரின் வழிகாட்டலின்படிதான் வேடநத்தத்துக்குச் சென்றோம். மாணவியின் உடலை இன்னும் குடும்பத்தினர் வாங்காததால், கிராமம் இயல்புநிலைக்குத் திரும்பாமலேயே இருந்தது.கொல்லப்பட்ட மாணவியின் வீடு``இந்த கிராமத்துல மொத்தம் 18 சாதிக்காரங்க இருக்கோம். இறந்த பொண்ணோட சாதிக்காரங்க மொத்தமே 4 குடும்பம்தான் இருக்காங்க. இந்த ஊருக்குள்ள இப்போ வரைக்கு சாதி மதத்தால ஒரு சண்டை நடந்தது இல்ல. அதனாலதான் அந்த புள்ளை கொல்லப்பட்ட சம்பவம் கேள்விப்பட்ட உடனே, எந்த வேற்றுமையும் பார்க்காம எல்லாரும் ஒண்ணா கூடிட்டோம். ஒரு நாள் முழுக்க சுட்டெரிக்குற வெயில்ல குறுக்குச்சாலையில உட்காந்து போராடுன பிறகுதான் அமைச்சர் கீதா ஜீவன் எங்களை பார்க்க வந்தாங்க. ரெண்டு நாள் கழிச்சுதான் கனிமொழி வந்தாங்க. நாங்க மட்டும் இறங்கி போராடலன்னா யாரும் கண்டுக்காம போயிருப்பாங்க. அவங்க வீட்டு புள்ளைக்கு நடந்தது. எங்க வீட்டு புள்ளைங்களுக்கு நடக்காதுன்னு என்ன நிச்சயம்?" என, கொதிக்கின்றனர் கிராமத்தினர். கிராமத்தினர் வழிகாட்டவே ஒரு பெருமாள் கோயிலின் தெப்பக்குளத்திலிருந்து சில மீட்டர்கள் தள்ளியிருந்த பலியான அந்த மாணவியின் வீட்டுக்குச் சென்றோம். வீடு முழுக்க வெறுமை சூழ்ந்திருந்தது. மாணவியின் இறப்பை இன்னமும் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால் இறந்து போன மாணவியின் படத்தை வைத்து விளக்குகூட ஏற்றாமல் இருந்தார்கள். 'எலும்பும் தோலுமாதான் இருப்பா, ஆனா எப்பவுமே சிரிச்ச மூஞ்சியா இருப்பா. தெரியாதவங்ககிட்ட அவ்வளவு லேசுல பேசிடமாட்டா, நல்லா படிக்கக் கூடியவ, பத்தாம் க்ளாஸ்ல ஸ்கூல்லயே ரெண்டாவது இடம் பிடிச்சிருந்தா..' பேத்தியின் நினைவை பகிர்ந்து கொண்டார் அவரின் தாத்தா.மாணவியின் தந்தைமாணவியின் தந்தையின் கரத்தைப் பற்றி ஆறுதல் சொன்னோம், 'இப்போ போயி ஊருக்குள்ள இவ்வளவு போலீஸூ போட்ருக்காங்க. நாங்க புகார் கொடுக்க போனப்போவே விசாரிச்சிருந்தா என் புள்ளைய உசுரோடயாச்சு காப்பாத்திருக்கலாமே. புள்ளையை காணோம்னு நைட்டு பதறியடிச்சு போயி குளத்தூர் ஸ்டேஷன்ல நிக்கோம். அங்க பொண்ணுக்கு 17 வயசுதான் ஆகுது. அதனால நீங்க விளாத்திக்குளம் மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு போங்கணு சொல்லிட்டாங்க. நைட்டு முழுசும் நாங்களே தேடிட்டு காலையில விளாத்திகுளம் ஸ்டேஷனுக்கு போனோம். அங்க 4 மணி நேரம் எங்களை அலையவிட்டு காத்திருக்க வச்சாங்க. கடைசியில, 'பொண்ணு எவனயாச்சு லவ் பண்ணி ஓடியிருக்கும். போயி நீங்களே ஒழுங்கா தேடிப் பாருங்க'னு அவ்வளவு மோசமா லேடி இன்ஸ்பெக்டர் பேசுச்சு. என் பொண்ணை நான் அப்படியா வளர்த்திருக்கேன். ஒரு போன் கூட அனுமதி இல்லாம பேசாது கொள்ளாது. என் புள்ள மேல பழி போட்டு பேசுனாங்க. கடைசியில நாங்கதான் முள்ளு காட்டுக்கு நடுவுல கிடந்து புள்ளையோட உடம்ப கண்டுபிடிச்சோம். கை, கால், முகம்னு எல்லா பக்கமும் ஒரே காயம். இப்படி தூக்கி கொடுக்குறதுக்கா இத்தனை வருசம் வளர்த்து ஆள் ஆக்குனேன்...2 மாசம் முன்னாடி கூட அப்பா நான் கப்பல்ல வேலைக்கு போகணும். உன்னால படிக்க வைக்க முடியுமான்னு அத்தனை அருமையா கேட்டா...மகராசி...இன்னைக்கு அந்த புள்ள எங்க கூட இல்லையே..' என குமுறுகின்றார் மாணவியின் தந்தை.குளத்தூர் காவல் நிலையம்அவருடைய கண்ணீரெல்லாம் வற்றிப்போய் ஒரு மூலையில் சுருண்டிருந்தார்.'புள்ளையே போயிருச்சு. முறையா புகார் கொடுக்குறப்போ போலீஸ் ஒண்ணும் செய்யல. வர வேண்டிய அரசியல்வாதிங்க உடனே வரல. இப்போ அவ்வளவு பணம் கொடுக்கறோம், இவ்வளவு கொடுக்குறோம்னு சமாதானம் பேசுறாங்க. ஒரு புள்ள போயிருச்சு இன்னொரு புள்ள இருக்குல்ல. அதுக்காச்சு உதவும் பணத்தை வாங்கிக்கோங்கனு சொல்றாங்க. அப்படி சொல்றவங்க வீட்டில இப்டி ஒரு புள்ளையை தூக்கி கொடுத்துட்டு பணம் வாங்குவாங்களா? எங்களுக்கு பொண்ணை இப்படி சீரழிச்சது யாருன்னு தெரியனும். சனிக்கிழமை காலையில 10 மணிக்குள்ள குற்றவாளியை பிடிக்கிறோம்னு சொன்னாங்க. இப்போ வரை ஒரு துப்பு கூட கிடைக்கல போலீஸூக்கு. இவ்வளவு அலட்சியமான ஒரு போலீஸை பார்த்ததே இல்லை.Tamilnadu CM MK Stalinமக்கள்தான் எங்க பொண்ணுக்காக குரல் கொடுக்கணும். இன்னைக்கு எங்க வீடு பத்திக்கிட்டு எரியுது. நாளைக்கு இங்க இருந்து ஒரு கொள்ளிய எடுத்து உங்க வீட்டையும் கொளுத்துவாங்க...மக்கள்தான் இதையெல்லாம் தட்டிக் கேட்கணும்" என்கின்றனர் துக்கம் விசாரிக்க வந்திருந்த உறவினர்கள்.'முறையா புகார் கொடுத்தப்போ உதாசீனப்படுத்திட்டு, இப்போ எதுவுக்கு இவ்வளவு போலீஸூ?' என்கிற கிராமத்தினரின் குமுறலில் அத்தனை நியாயம் இருக்கிறது. ஓர் அரசு இயந்திரத்தின் அலட்சியமும் மெத்தனப்போக்கும் எத்தகைய இழப்பை ஏற்படுத்தும் என்பதற்கு வேடநத்தமே சாட்சி. 'காவல்துறையைக் கையில் வைத்துக் கொண்டு தேர்தலுக்காக ரீல்ஸ் போட்டுக் கொண்டிருந்த முதல்வர், இந்தக் குடும்பத்தின் குமுறலுக்கு என்ன பதில் வைத்திருக்கிறார்?'சம்பவம் நடந்து ஏழாவது நாள் இன்று. இப்போது வரை காவல்துறை குற்றவாளிகளை கண்டுபிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதுதூத்துக்குடி மாணவி கொலை வழக்கு: 5 பேரின் டிஎன்ஏ சேகரிப்பு- `காவல்துறை மீது நடவடிக்கை..' - நீதிமன்றம்

vikatan
16 மார்.
3 நிமிடம் படிக்க
`ஐபோன் இல்லை, பிளே-ஸ்டேஷன் இல்லை - தந்தை மகனுக்குக் கொடுத்தது அதை விட பெரிய பொக்கிஷம்! Viral video
Trending

`ஐபோன் இல்லை, பிளே-ஸ்டேஷன் இல்லை - தந்தை மகனுக்குக் கொடுத்தது அதை விட பெரிய பொக்கிஷம்! Viral video

இன்றைய டிஜிட்டல் யுகத்தில், ஒரு கிளிக்கிலேயே உலகமே நம் கைகளுக்குள் வந்துவிடுகிறது. ஆனால், 90-களில் வளர்ந்த குழந்தைகளுக்கு அந்த ஒரு ரூபாய் காமிக்ஸ் புத்தகமும், அதில் வரும் சித்திரங்களும்தான் உலகமாக இருந்தன. அத்தகைய ஒரு பொற்காலத்தை மீண்டும் கண்முன்னே கொண்டு வந்துள்ளார் சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரைச் சேர்ந்த ஒரு தந்தை.தனது சிறுவயது முதல் உயிராக நேசித்துச் சேகரித்து வைத்திருந்த 30 ஆண்டுகள் பழமையான காமிக்ஸ் புத்தகங்களை, தனது மகனுக்கு அவர் அறிமுகப்படுத்திய வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி, பலரது கண்களைக் குளமாக்கியுள்ளது.சாதாரணமாக ஒரு பழைய இரும்புப் பெட்டியைத் திறப்பதில் தொடங்கும் அந்த வீடியோ, பெட்டிக்குள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பொக்கிஷங்களைக் கண்டதும் நெகிழ்ச்சியில் உறைய வைக்கிறது. அதில் 90-களின் சூப்பர் ஹீரோக்களான நாகராஜ் (Nagraj), சூப்பர் கமாண்டோ துருவ் (Super Commando Dhruva), டோகா (Doga) மற்றும் குழந்தைகளின் எக்காலத்து விருப்பமான டிங்கிள் (Tinkle) மற்றும் சச்சா சவுத்ரி (Chacha Chaudhary) போன்ற நூற்றுக்கணக்கான புத்தகங்கள் தாள்கள் கூட நைந்து போகாமல் மிகக் கவனமாகப் பாதுகாக்கப்பட்டிருந்தன.அந்தத் தந்தை தனது மகனிடம் ஒவ்வொரு புத்தகத்தையும் காட்டும் விதம், அவர் தனது சொத்தை விட மேலான தனது "குழந்தைப் பருவத்தையே" மகனுக்குப் பரிசளிப்பது போல இருந்தது.இந்த நெகிழ்ச்சியான காட்சியைப் பகிர்ந்த டாக்டர் பூமிகா திவாரி, "இது வெறும் காகிதங்கள் அல்ல, 30 ஆண்டுகால காதல் மற்றும் அர்ப்பணிப்பு" என்று குறிப்பிட்டுள்ளார். இன்றைய குழந்தைகள் கோடை விடுமுறையை டேப்லெட்களிலும் ஸ்மார்ட்போன்களிலும் கழிக்கும் நிலையில், இந்தச் சிறுவன் தனது தந்தையின் பால்ய காலக் கதைகளுடன் நேரத்தைச் செலவிடுவது ஒரு அழகான தலைமுறை மாற்றத்தைக் காட்டுகிறது. View this post on Instagram A post shared by Dr. Bhumika Tiwari (@bhumi.tiwari603) ஒரு தந்தை தனது பழைய நினைவுகளைத் தூசு தட்டி எடுத்து, அதைத் தனது வாரிசுக்குக் கடத்துவது என்பது அந்தப் புத்தகங்களுக்கு அவர் கொடுக்கும் மிகப்பெரிய மரியாதை.இந்தச் செய்தி சமூக வலைதளங்களில் வெளியானவுடன் 90-ஸ் கிட்ஸ் பலரும் தங்கள் பழைய நினைவுகளைப் பகிர்ந்து வருகின்றனர். "இன்றைய ஐபோன்களும் பிளேஸ்டேஷன்களும் அந்த ஒரு காமிக்ஸ் புத்தகத்தின் வாசனைக்கு ஈடாகாது" என்றும், "அந்தத் தந்தைதான் உலகின் மிகப்பெரிய பணக்காரர்" என்றும் கருத்துகள் குவிந்து வருகின்றன. ஒரு சிறிய இரும்புப் பெட்டிக்குள் முடங்கிக் கிடந்த அந்தப் பழைய புத்தகங்கள், இன்று தந்தைக்கும் மகனுக்கும் இடையே ஒரு புதிய உணர்வுப் பாலத்தை அமைத்துள்ளன. நீங்கள் இது போல், உங்கள் குழந்தைகளுக்காக சேமித்த ஒரு பொருள் என்ன என்று கமென்ட்டில் சொல்லுங்க வாசகர்களே..!

vikatan
16 மார்.
3 நிமிடம் படிக்க
அதிகாலை துயரம்: ஒடிசா மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் தீப்பிடித்து 10 நோயாளிகள் உயிரிழப்பு
Accidents

அதிகாலை துயரம்: ஒடிசா மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் தீப்பிடித்து 10 நோயாளிகள் உயிரிழப்பு

ஒடிசா மாநிலம் கட்டாக் என்ற இடத்தில் செயல்பட்டு வரும் எஸ்.சி.பி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இன்று அதிகாலை மூன்று மணிக்கு அவசர சிகிச்சை பிரிவில் தீப்பிடித்துக்கொண்டது. அதிகாலை நேரம் என்பதால் அனைத்து நோயாளிகளும் உறக்கத்தில் இருந்தனர். இதனால் தீ மளமளவென பரவியது. இதில் நோயாளிகளால் தப்பித்து செல்ல முடியவில்லை. தீவிபத்து குறித்து கேள்விப்பட்டதும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து நோயாளிகளை மீட்டனர். ஆனாலும் 10 நோயாளிகள் தீவிபத்தில் சிக்கி உயிரிழந்தனர். இது தவிர மருத்துவமனை ஊழியர்கள் 11 பேரும், 7 நோயாளிகளும் காயம் அடைந்தனர். மருத்துவமனையில் முதல்வர் மோகன்தீவிபத்தின் போது நோயாளிகளை காப்பாற்ற முயன்றதால் மருத்துவமனை ஊழியர்கள் காயம் அடைந்ததாக மாநில முதல்வர் மோகன் தெரிவித்தார். முதல்வர் மோகன் அமைச்சர்களுடன் சென்று தீவிபத்து நடந்த மருத்துவனையை பார்வையிட்டார். அதோடு காயம் அடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 23 நோயாளிகள் மற்ற பிரிவுக்கு மாற்றப்பட்டனர். அவர்களை மாற்றும் போது 7 பேர் உயிரிழந்ததாகவும், 3 பேர் மாற்றிய பிறகு இறந்ததாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மாநில அரசால் இந்த மருத்துவ கல்லூரி மருத்துவமனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் வழங்கப்படும் என்று முதல்வர் மோகன் தெரிவித்துள்ளார். ஆரம்பக்கட்ட விசாரணையில் ஏ.சி.யில் மின்கசிவு ஏற்பட்டு இத்தீவிபத்து நடந்ததாக தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தீவிபத்து குறித்து உயர்மட்ட விசாரணைக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

vikatan
16 மார்.
3 நிமிடம் படிக்க
BCCI: 'பெருமையாக இருக்கிறது; சிறுவனாக 15 வயதில் என்.!' - வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற டிராவிட்
cricket

BCCI: 'பெருமையாக இருக்கிறது; சிறுவனாக 15 வயதில் என்.!' - வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற டிராவிட்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியத்தின் (பிசிசிஐ) 2026-ம் ஆண்டிற்கான நமன் விருது விழா நேற்று( மார்ச்.15) நடைபெற்றிருக்கிறது. இதில் இந்திய அணியின் முன்னாள் வீரரும், பயிற்சியாளருமான ராகுல் டிராவிட்டிற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டிருக்கிறது. விருதை வாங்கியப் பிறகு மேடையில் பேசியிருக்கும் ராகுல் டிராவிட் , " இந்த விருதைப் பெறுவது மிகவும் பெருமையாக இருக்கிறது. ராகுல் டிராவிட்நான் இதற்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். கிரிக்கெட் விளையாடத் தொடங்கிய காலம் முதல் இன்று வரையிலானத் தனது நீண்ட பயணத்தை இது பிரதிபலிக்கிறது. ஒரு சிறுவனாக, முதன்முதலில் 15 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட்டில் விளையாடத் தொடங்கினேன். அன்று முதல் இன்று வரை எனக்குக் கிடைத்த வாய்ப்புகளுக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். தன்னுடைய சிறப்பான பங்களிப்பை இந்திய அணிக்கு நான் செய்திருக்கிறேன். விளையாட்டில் நம் ஒவ்வொருவருக்கும் ஒரு காலம் இருக்கிறது, அதில் நாம் நம் பங்கைச் சிறப்பாக செய்ய வேண்டும். அசாதாரண திறமையாளர்களையும், சிறந்த நிர்வாகிகளையும், பயிற்சியாளர்களையும் கொண்டது தான் இந்திய அணி. ராகுல் டிராவிட் உள்நாட்டு கிரிக்கெட்டும், ஜூனியர் கிரிக்கெட்டும் சிறந்த முறையில் செயல்பட்டு வருவதால், திறமை வாய்ந்த வீரர்கள் வருகின்றனர். இதனால் தான் இந்திய அணி வெல்கிறது" என்று டிராவிட் பேசியிருக்கிறார்.

vikatan
16 மார்.
3 நிமிடம் படிக்க
ஈரான் போரால் குறையும் இந்திய ரூபாயின் மதிப்பு; இரண்டு முக்கிய காரணங்கள் என்னென்ன?
Economy

ஈரான் போரால் குறையும் இந்திய ரூபாயின் மதிப்பு; இரண்டு முக்கிய காரணங்கள் என்னென்ன?

ஏற்கெனவே சில மாதங்களாகச் சரிவைச் சந்தித்து வந்தது இந்திய ரூபாயின் மதிப்பு. இந்த நிலையில், ஈரான் போர் தொடங்கியதும் ஒரு அமெரிக்க டாலரின் மதிப்பு ரூ.92-ஐ கடந்தது. அது விரைவில் ரூ.93-ஐ தொட்டுவிடுமோ என்கிற அச்சம் கூட நிலவி வருகிறது. ஈரானிலிருந்து கிட்டத்தட்ட 2,800 கிலோ மீட்டர் தள்ளி இருக்கிறது இந்தியா. ஆனால், அங்கே நடக்கும் போரின் தாக்கம்தான் இந்திய ரூபாய் மதிப்பைத் தற்போது வீழ்ச்சியில் தள்ளி உள்ளது. பொதுவாகப் பார்த்தால், இந்திய ரூபாய் வீழ்ச்சிக்குக் காரணங்கள்...ஈரான் Vs அமெரிக்கா, இஸ்ரேல் போர்ஹார்முஸ் ஜலசந்திக்கு போர் கப்பலை அனுப்புங்கள் - சீனா, ஜப்பானை அழைக்கும் ட்ரம்ப் - ஏன்? எதற்கு?> ஈரான் போர் தொடங்கியதும், எரிசக்திகளின் விலை கூடி வருகிறது... இன்னும் இதன் விலை கூடுமோ என்கிற அச்சம் வேறு இருந்து வருகிறது.உலக வர்த்தகத்திற்குத் தேவை அமெரிக்க டாலர்கள். அதனால், உலக நாடுகளும், முதலீட்டாளர்களும் எரிசக்திகளை வாங்கவும், பாதுகாப்பான முதலீடாகவும் அமெரிக்க டாலர்கள் மீது கவனம் செலுத்தி வருகின்றன.இதனால், அமெரிக்க டாலரின் மதிப்பு சற்று வலுவடைந்து வருகிறது. அமெரிக்க டாலரின் மதிப்பு வலுவடையும்போது, இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைகிறது. இதற்கு இந்திய ரூபாயின் மதிப்பைக் கூட்டுவதுபோல எந்த விஷயமும் இப்போது நடக்கவில்லை என்பதும் ஒரு காரணம். > எரிசக்திகளைப் பெருமளவில் இந்தியா இறக்குமதி செய்கிறது என்பது உலகம் அறிந்த சேதி. எரிசக்திகளுக்கு இந்தியா பிற நாடுகளைச் சார்ந்து இருப்பதால் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு நம் சந்தை மீதோ, நம் நாணயத்தின் மீது அவ்வளவாக நம்பிக்கை இல்லை. இதனால், இந்தப் போர் தொடங்கியதில் இருந்து அவர்கள் தொடர்ந்து தங்களது முதலீடுகளை வெளியேற்றி வருகிறார்கள். இப்போது சொல்லப்போகும் காரணம் மிக முக்கியமானது...கச்சா எண்ணெய்ஹார்முஸ் ஜலசந்தி: இந்தியாவுக்கு வர இரண்டு கப்பல்களை ஈரான் அனுமதித்தது எப்படி? - ஜெய்சங்கர் பதில்மேலே சொன்னதுதான் - இந்தியா எரிசக்தி இறக்குமதிகளுக்குப் பிற நாடுகளைத்தான் சார்ந்துள்ளது. இப்போது கச்சா எண்ணெய், எல்.பி.ஜி உள்ளிட்ட எரிசக்தி விலை சர்வதேச சந்தையில் விலையேறி போய் கிடக்கிறது. அவற்றை வாங்க இந்தியாவிற்கு அமெரிக்க டாலர்கள் வேண்டும். அமெரிக்க டாலர்கள் வலுவாக உள்ளது என்பதை முன்னரே பார்த்தோம். அது அப்படி வலுவாகி உள்ளதால், அதிக இந்திய ரூபாய்களைக் கொடுத்துதான் அமெரிக்க டாலர்களை வாங்க வேண்டியதாக இருக்கிறது. அப்படி அதிக இந்திய ரூபாயைக் கொடுக்கும் போதே, அங்கே இந்திய ரூபாயின் மதிப்பு அடிபடுகிறது அல்லவா... இதனால்தான், தற்போது இந்திய ரூபாயின் மதிப்பு இறங்குமுகம் பக்கமாக உள்ளது.இந்திய ரூபாயின் மதிப்பு ஓரளவு நிலையாக, ஈரான் போர் முடிய வேண்டும். அது எப்போது முடியும் என்பது அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் கையில் உள்ளது.ட்ரம்பை நெருக்கும் அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள்: தயாராக இருக்கும் அமெரிக்கா; ஒத்துவராத ஈரான்

vikatan
16 மார்.
3 நிமிடம் படிக்க
Tanushree Dutta: "சிலர் பாலியல் தொழிலுக்​குத் தள்ளப்படு​கிறார்​கள்"- பாலிவுட் குறித்து தனுஸ்ரீ தத்தா
bollywood

Tanushree Dutta: "சிலர் பாலியல் தொழிலுக்​குத் தள்ளப்படு​கிறார்​கள்"- பாலிவுட் குறித்து தனுஸ்ரீ தத்தா

பாலிவுட் நடிகையான தனுஸ்ரீ தத்தா சினிமா கனவு​களுடன் வரும் இளம்​பெண்​கள் பாலிவுட்டில் எப்​படிச் சுரண்​டப்​படு​கிறார்​கள் என்​பது குறித்து பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் ஒன்றில் பேசியிருக்கிறார்.“பு​தி​தாக சினிமாவிற்கு வருபவர்களைப் பார்த்ததும், ‘நீங்​கள் மிகவும் அழகாக இருக்​கிறீர்​கள், பெரிய கதா​நாயகி​யாக வரு​வீர்​கள்’ என்று முதலில் ஆசை வார்த்தைகளைக் கூறுவார்கள்.தனுஸ்ரீ தத்தாஉங்​கள் திறமை​யைப் பாராட்டுவதுபோல் வந்து, ‘அவரைப் போய் பாருங்​கள், இவரைச் சந்​தி​யுங்​கள்’ என்று கூறி தவறான வழிகளில் திசை திருப்​பு​வார்​கள். இது​தான் பாலிவுட்டில் நடக்கிறது.அறி​முகம் இல்​லாதவர்​கள் சாக்​லேட் கொடுத்தால் வாங்​கக் கூடாது என்று சிறு​வய​தில் பெற்றோர் சொல்​லிக் கொடுத்​ததை நினை​வில் கொள்ளுங்​கள்.இங்கே கொடுக்​கப்​படு​வது உண்​மை​யான சாக்​லேட் அல்ல, அது உங்​கள் லட்​சியங்​களை​யும், ஆசைகளை​யும் முதலீ​டாகக் கொண்டு வீசப்​படும் வலை. ஏராளமான ஆண்​களும் பெண்​களும் பாலிவுட்டை நம்பி வருகிறார்கள். அவர்கள் பயன்​படுத்​தப்​பட்​டு, துஷ்பிரயோகம் செய்​யப்​பட்​டு, பின்​னர் தூக்கி வீசப்படுகிறார்​கள்.தனுஸ்ரீ தத்தாஅப்​படி வீசப்​படும்​போது, சிலர் மீள முடி​யாத பாதிப்​புக்கு உள்​ளாகிறார்​கள். சிலர் பாலியல் தொழிலுக்​குத் தள்ளப்படு​கிறார்​கள். இன்​னும் சிலர் மனரீ​தி​யாக உடைந்து, சொந்த ஊருக்​கே திரும்பி விடு​கிறார்​கள்" என்று பாலிவுட் குறித்து பேசியிருக்கிறார். ``வீட்டில் என்னை துன்புறுத்துகிறார்கள், யாராவது உதவுங்கள்'' - கதறி அழுத பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா

vikatan
16 மார்.
3 நிமிடம் படிக்க
தொகுதி மாறி மம்தாவுக்கு `குறி'; எதிர்த்து களமிறங்கும் சுவேந்து அதிகாரி - பரபர மே.வங்க தேர்தல் களம்!
government and politics

தொகுதி மாறி மம்தாவுக்கு `குறி'; எதிர்த்து களமிறங்கும் சுவேந்து அதிகாரி - பரபர மே.வங்க தேர்தல் களம்!

மேற்கு வங்க சட்டமன்றத்திற்கு இரண்டு கட்டமாக தேர்தல் நடக்கவிருக்கிறது. கடந்த முறை 4 கட்டங்களாக தேர்தல் நடந்த நிலையில், இப்போது ஏப்ரல் 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலுக்கு பா.ஜ.க தனது முதல் வேட்பாளர் பட்டியலை அறிவித்து இருக்கிறது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி, பா.ஜ.க-வில் சேர்ந்த சுவேந்து அதிகாரி முதல்வர் மம்தா பானர்ஜியின் பாபானிபூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இது தவிர நந்திகிராம் தொகுதியிலும் சுவேந்து அதிகாரி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். 2021ம் ஆண்டு நடந்த மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலில் மம்தா பானர்ஜி பாபானிபூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அத்தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் தலைமைக்கு அதன் சொந்த மண்ணில் சவால் விடும் நோக்கில் அதிகாரியை அங்கு பாஜ.க வேட்பாளராக அறிவித்து இருக்கிறது. அதேசமயம் கடந்த முறை நடந்த தேர்தலில் நந்திகிராம் சட்டமன்றத் தொகுதியில் சுவேந்து அதிகாரி முதல்வர் மம்தா பானர்ஜியை தோற்கடித்து அதிர்ச்சி கொடுத்தார். இப்போது பாபானிபூர் தொகுதியில் மம்தா பானர்ஜியை எதிர்த்து சுவேந்து அதிகாரி போட்டியிடுகிறார். இது மம்தா பானர்ஜிக்கு நெருக்கடியை கொடுத்து இருக்கிறது. இதனால் இம்முறையும் மம்தா பானர்ஜி இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. பாஜக-வின் 144 வேட்பாளர்கள் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் ராஷ்பெஹாரி தொகுதியில் முன்னாள் ராஜ்ய சபா எம்.பி ஸ்வபன் தாஸ்குப்தா போட்டியிடுகிறார். கலிகஞ்சில் இருந்து பாபன் கோஷ், டயமண்ட் ஹார்பரில் இருந்து தீபக் குமார் ஹல்டர், அசன்சோல் தக்ஷினில் இருந்து அக்னிமித்ரா பால், அசன்சோல் உத்தரில் கிருஷ்ணேர்ஜேந்துவும், ஹன்சனில் நிகில் பானர்ஜியும், கூச்பெஹார் உத்தரில் சுகுமார் ராய் மற்றும் சிலிகுரியில் சங்கர் கோஷ் ஆகியோர் போட்டியிடுகின்றனர். முன்னதாக வேட்பாளர் பட்டியல் தொடர்பாக பிரதமர் இல்லத்தில் சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ஜே.பி.நட்டா, மேற்கு வங்க கட்சியின் தேர்தல் பொறுப்பாளர் பிப்லப் தேப் மற்றும் வங்காள பாஜக தலைவர் சாமிக் பட்டாச்சார்யா, எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி, மாநில பாஜக முன்னாள் தலைவர் சுகந்தா மஜூம்தார் உள்ளிட்ட மாநிலப் பிரிவைச் சேர்ந்த பல மூத்த தலைவர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் மத்திய அமைச்சர் சாந்தனு தாக்கூர், பாஜக எம்பி மனோஜ் திக்கா ஆகியோர் கலந்து கொண்டனர்.

vikatan
16 மார்.
3 நிமிடம் படிக்க
"தேர்தல் முடிந்ததும் பாஜக அதிமுகவை விழுங்கி துப்பிவிடும்" - உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்
government and politics

"தேர்தல் முடிந்ததும் பாஜக அதிமுகவை விழுங்கி துப்பிவிடும்" - உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்

திருப்பத்தூரில் நேற்று (மார்ச்.15) திமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின் பாஜகவையும், எடப்பாடியையும் கடுமையாக விமர்சித்து பேசியிருக்கிறார். பாஜக தமிழ்நாட்டில் நேர்வழியில் உள்ளே நுழைய முடியாது என்பதால் பல குறுக்கு வழிகளை தேர்ந்தெடுத்து வருகிறது. ஆனால் அது பலிக்காது. பாஜக சிபிஐ, அமலாக்கத்துறை, தேர்தல் ஆணையம் இதையெல்லாம் வைத்து மிரட்டி அதிமுக கூட்டணியை உருவாகி இருக்கிறது. மோடி, எடப்பாடி பழனிசாமிஇரண்டு நாட்களுக்கு முன்பு பிரதமர் திருச்சி வந்திருந்தார். 10 நாட்களுக்கு முன்பு மதுரை வந்திருந்தார். தேர்தல் நேரத்தில் மட்டும்தான் தமிழ்நாட்டுக்கு வருவார். ஆனால் எந்த நிதியும் தமிழ்நாட்டுக்கு வழங்கமாட்டார். பீகாரில் நிதீஷ்குமார் 10 முறை முதலமைச்சராக இருந்துள்ளார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் அவர்தான் வெற்றி பெற்று முதலமைச்சரானார். இன்று அவரை ஓரம் கட்டிவிட்டு பாஜக ஆட்சியை பிடித்துள்ளது. 10 முறை முதலமைச்சராக இருந்த பீகார் முதல்வருக்கு இந்த நிலைமை என்றால் காலில் ஊர்ந்து சென்று போய் பதவியை பிடித்த எடப்பாடி பழனிசாமிக்கு என்ன நிலைமை என்று நீங்கள் யோசித்துப் பார்க்க வேண்டும். தேர்தல் முடிந்ததும் பாஜக அதிமுகவை விழுங்கி துப்பிவிடும். பாஜகவை எதிர்க்க வேண்டும் என்றால் ஒரு முதுகெலும்புள்ள முதல்வர் இருக்க வேண்டும். அது எடப்பாடியால் நிச்சயமாக முடியாது. எடப்பாடி பழனிசாமி - பிரதமர் மோடிபாஜகவை எதிர்க்க கூடிய சக்தி நமது தலைவருக்கு மட்டும்தான் உள்ளது. மக்களும் அதை உணர்ந்துள்ளனர். ஒரு பழமொழி உள்ளது ஜாடிக்கேத்த மூடி என்று. இப்போது மோடிக்கு ஏற்ற ஒரு அடிமையாக எடப்பாடி இருந்து வருகிறார். நிச்சயம் இந்த தேர்தலில் திமுக மாபெரும் வெற்றி பெறும்" என்று பேசியிருக்கிறார்.

vikatan
16 மார்.
3 நிமிடம் படிக்க
"விஜய்யை NDA கூட்டணியில் இணைய சொல்லி பேச்சுவார்த்தை நடத்தினேனா?"- பவன் கல்யாண் விளக்கம்
government and politics

"விஜய்யை NDA கூட்டணியில் இணைய சொல்லி பேச்சுவார்த்தை நடத்தினேனா?"- பவன் கல்யாண் விளக்கம்

2026 ஆம் ஆண்டிற்கான தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலில் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, தவெக என்ற நான்குமுனை போட்டி நிலவுகிறது. இதில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், அமமுக, புரட்சி பாரதம், புதிய நீதிக்கட்சி போன்ற கட்சிகள் இணைந்திருக்கிறது. தவெக தலைவர் விஜய்இப்படியான நிலையில் திமுக கூட்டணியில் 19 கட்சிகள் இணைந்திருக்கிறது. இதனால் திமுகவை வீழ்த்த விஜய்யின் தவெகவை தங்கள் பக்கம் இழுக்க தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக டெல்லி மேலிடம் தீவிரம் காட்டி வருவதாகத் தகவல் வெளியாகி வருகின்றன. இதனிடையே தவெக தலைவர் விஜய்யுடன் திரைத்துறையில் அவரது நண்பரும், ஆந்திர துணை முதலமைச்சருமான பவன் கல்யாண் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியானது.இந்நிலையில் நீங்கள் விஜய்யை தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய சொல்லி பேச்சுவார்த்தை நடத்தினீர்களா? என்று பவன் கல்யாணிடம் கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலளித்த அவர், “அப்படியெல்லாம் இல்லை. நான் விஜய்யிடம் பேசவில்லை. நானும் அந்த செய்தியை கேள்விப்பட்டேன். எதற்கு இப்படி பரப்பினார்கள் என்பது தெரியவில்லை. நான் விஜயை சந்தித்து 20 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. சமீபத்தில் நான் விஜயிடம் பேச வில்லை. எங்களுக்குள் எந்தவித தொடர்பும் இல்லை” என்று தெரிவித்திருக்கிறார். பவன் கல்யாண்தொடர்ந்து, " தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணி தான் விஜய்க்கு சரியான இடமா? என்ற கேள்விக்கு, “எனக்கு தெரியவில்லை. கூட்டணி என்பது கட்சி தலைவர்களை மட்டும் கொண்டது கிடையாது. அது அவர்களின் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களின் ஆதரவால் அமைவது. அது தனிப்பட்ட விஷயம் கிடையாது” என்று கூறியிருக்கிறார்.

vikatan
16 மார்.
3 நிமிடம் படிக்க
இந்தியா - வங்கதேசம் உறவை மேம்படுத்த 'டீசல் ராஜதந்திரம்' உதவுமா?
பொதுவான

இந்தியா - வங்கதேசம் உறவை மேம்படுத்த 'டீசல் ராஜதந்திரம்' உதவுமா?

மத்திய கிழக்கில் வெடித்துள்ள போரினால், வங்கதேசமும் எரிபொருள் நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. இந்தியா 5000 மெட்ரிக் டன் டீசலை வங்கதேசத்திற்கு வழங்கியுள்ளது. நெருக்கடியைச் சமாளிக்க மேலும் 50,000 மெட்ரிக் டன் டீசலை தந்து உதவுமாறு இந்தியாவிடம் வங்கதேசம் கேட்டுள்ளது,

bbci
16 மார்.
3 நிமிடம் படிக்க
நெதன்யாகு மரணமா? 'உயிருடன் இருந்தால்' என்ற இரானின் கூற்றை தொடர்ந்து அவரே வெளியிட்ட வீடியோ
பொதுவான

நெதன்யாகு மரணமா? 'உயிருடன் இருந்தால்' என்ற இரானின் கூற்றை தொடர்ந்து அவரே வெளியிட்ட வீடியோ

பெஞ்சமின் நெதன்யாகுவின் மரணம் குறித்த வதந்திகளை இஸ்ரேல் மறுத்துள்ள நிலையில், அவர் உயிருடன் இருந்தால் தேடிக் கொல்வோம் என இரான் புரட்சிகர காவல் படை எச்சரிக்கை விடுத்துள்ளது.

bbci
16 மார்.
3 நிமிடம் படிக்க
தமிழ்நாட்டில் வாக்குப்பதிவுக்கு ஒரு மாதத்திற்கும் கூடுதல் அவகாசம் இருப்பது யாருக்கு சாதகம்?
அரசியல்

தமிழ்நாட்டில் வாக்குப்பதிவுக்கு ஒரு மாதத்திற்கும் கூடுதல் அவகாசம் இருப்பது யாருக்கு சாதகம்?

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் பரப்புரைக்கு ஒரு மாதத்திற்கும் அதிகமான அவகாசம் உள்ளது. இது களத்தில் யாருக்கு சாதகமாக இருக்கும்?

bbci
16 மார்.
3 நிமிடம் படிக்க
'சிக்னல் அணைப்பு' - 2 இந்திய கப்பல்கள் ஹோர்மூஸ் நீரிணையை கடந்தது எப்படி?
பொதுவான

'சிக்னல் அணைப்பு' - 2 இந்திய கப்பல்கள் ஹோர்மூஸ் நீரிணையை கடந்தது எப்படி?

இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட இரு திரவ பெட்ரோலிய எரிவாயு கப்பலான நந்தா தேவி மற்றும் சிவலிக் ஆகியவை கடந்த சனிக்கிழமை ஹோர்மூஸ் நீரிணையைக் கடந்துள்ளன.

bbci
16 மார்.
3 நிமிடம் படிக்க
இந்திய கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையை கடக்க இரான் தொடர்ந்து அனுமதிக்குமா? ஜெய்சங்கர் தகவல்
அரசியல்

இந்திய கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையை கடக்க இரான் தொடர்ந்து அனுமதிக்குமா? ஜெய்சங்கர் தகவல்

இரானுடன் நேரடியாக நடத்திய பேச்சுவார்த்தைகள் இந்தியக் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையை கடந்து வர உதவியுள்ளதாக இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இந்திய கொடியுடன் வரும் எண்ணெய், எரிவாயு கப்பல்களை இரான் தொடர்ந்து அனுமதிக்குமா?

bbci
16 மார்.
3 நிமிடம் படிக்க
ஆடம்பர நகரம் துபையின் இந்த விஷயத்துக்கு ஆபத்தா?
பொதுவான

ஆடம்பர நகரம் துபையின் இந்த விஷயத்துக்கு ஆபத்தா?

ஆடம்பரமான வாழ்க்கை முறை என்ற துபையின் பிம்பத்தால் பல வருங்கால பார்வையாளர்கள் ஈர்க்கப்படுகிறார்கள்: மேற்கூரை நீச்சல் குளங்கள், ஐந்து நட்சத்திர ஹோட்டல்களுக்கு வெளியே நிறுத்தப்பட்டுள்ள சூப்பர் கார்கள் மற்றும் தனியார் கடற்கரைகளில் வெயில் காயும் சுற்றுலாப் பயணிகளின் வீடியோக்களை இன்ஃப்ளூயன்சர்கள் இணையத்தில் பதிவிடுகின்றனர். ஆனால் அந்தப் பிம்பத்திற்குப் பின்னால் வேறொரு யதார்த்தம் மறைந்துள்ளது.

bbci
16 மார்.
3 நிமிடம் படிக்க

அதிகம் படிக்கப்பட்டது

எங்கள் வாசகர்கள் பேசும் பிரபலமான கதைகள்