தமிழ் டைம்ஸ் logo
திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு
விளையாட்டு

திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு

தமிழ்நாடு, இந்தியா, இலங்கை, உலகம் மற்றும் விளையாட்டு தொடர்பான சமீபத்திய நிகழ்வுகள் பற்றிய தகவல்களை இந்த பக்கத்தில் பார்க்கலாம்.

bbci
24 மார்., 05:30 AM
'அனைவரும் குற்றவாளிகள்' - சாத்தான்குளம் ஜெயராஜ் பென்னிக்ஸ் வழக்கின் தீர்ப்பு கூறுவது என்ன?
விளையாட்டு

'அனைவரும் குற்றவாளிகள்' - சாத்தான்குளம் ஜெயராஜ் பென்னிக்ஸ் வழக்கின் தீர்ப்பு கூறுவது என்ன?

சாத்தான்குளம் "பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் மரணம் கொலை" என தீர்மானிக்கப்படுவதாக கூறிய மதுரை மாவட்ட அமர்வு நீதிபதி, தண்டனை விவரங்கள் மார்ச் 30-ம் தேதி அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

bbci
24 மார்., 05:30 AM
அமெரிக்கா - இரான் இடையே மத்தியஸ்தராக பாகிஸ்தான் உருவெடுக்கிறதா? புதிய தகவல்
விளையாட்டு

அமெரிக்கா - இரான் இடையே மத்தியஸ்தராக பாகிஸ்தான் உருவெடுக்கிறதா? புதிய தகவல்

அமெரிக்கா மற்றும் இரானின் மூத்த தலைவர்களின் சந்திப்பை இஸ்லாமாபாத்தில் நடத்தலாம் என்று பாகிஸ்தான் முன்மொழிந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து அமெரிக்காவோ அல்லது இரானோ இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. என்ன நடக்கிறது?

bbci
24 மார்., 05:30 AM
கோவையை ஒட்டி கட்சிக்கொடி, போஸ்டர், சுவர் விளம்பரமே தென்படாத கிராமம் - 1991ல் என்ன நடந்தது?
விளையாட்டு

கோவையை ஒட்டி கட்சிக்கொடி, போஸ்டர், சுவர் விளம்பரமே தென்படாத கிராமம் - 1991ல் என்ன நடந்தது?

கோவை மாநகராட்சியை ஒட்டி அமைந்துள்ள சோமையம்பாளையம் கிராம ஊராட்சிக்குட்பட்ட காளப்பநாயக்கன்பாளையம் கிராமத்தில் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் அடையாளங்கள் தொடர்பான கட்டுப்பாடு, ஊர் மக்களால் ஒருங்கிணைந்து கடைபிடிக்கப்படுகிறது.

bbci
24 மார்., 05:30 AM
ஜிபிஎஸ் போன்ற இந்தியாவின் சொந்த வழிகாட்டும் செயற்கைக்கோள் திட்டம் செயலிழந்தது ஏன்?
விளையாட்டு

ஜிபிஎஸ் போன்ற இந்தியாவின் சொந்த வழிகாட்டும் செயற்கைக்கோள் திட்டம் செயலிழந்தது ஏன்?

ஐஆர்என்எஸ்எஸ் - 1எஃப் செயற்கைக்கோளில் இருந்த அணுக் கடிகாரம் கடந்த மார்ச் 13-ஆம் தேதி செயலிழந்ததுடன் இந்தியாவின் சொந்த 'ஜிபிஎஸ்' எனப் பெயர் பெற்ற நாவிக் (NavIC) அமைப்பின் செயல்பாடு முடங்கியது. முன்னர் இந்த அமைப்பு இந்திய பிராந்திய வழிகாட்டு செயற்கைக்கோள் அமைப்பு - ஐஆர்என்எஸ்எஸ் (Indian Regional Navigation Satellite System - IRNSS) என்று அழைக்கப்பட்டது. இந்தச் செயற்கைக்கோள் செயல் முடக்கத்துடன் இந்தியாவின் தன்னாட்சி வழிகாட்டும் திறன் முடிவுக்கு வந்துள்ளது.

bbci
24 மார்., 05:30 AM
இந்திய அணி பாகிஸ்தான் சென்றிருந்த போது முஷாரஃப் செய்த டெலிபோனால் கங்குலி அஞ்சியது ஏன்?
விளையாட்டு

இந்திய அணி பாகிஸ்தான் சென்றிருந்த போது முஷாரஃப் செய்த டெலிபோனால் கங்குலி அஞ்சியது ஏன்?

சிறையில் இருக்கும் இம்ரான் கானின் உடல்நிலை குறித்த கவலைகளுக்கு இடையே, அவரது ஆலோசனைகள் மற்றும் பாகிஸ்தான் வீரர்களின் நட்பு எவ்வாறு தனது கிரிக்கெட் வாழ்க்கையையும் அணுகுமுறையையும் மாற்றியது என்பது குறித்த சவுரவ் கங்குலியின் நெகிழ்ச்சியான நினைவுகள்

bbci
20 மார்., 05:30 AM
துரந்தர்: இந்திய உளவாளியாக நடித்த ரண்வீர் சிங் உண்மையில் பாகிஸ்தானை பூர்வீகமாகக் கொண்டவரா?
பொழுதுபோக்கு

துரந்தர்: இந்திய உளவாளியாக நடித்த ரண்வீர் சிங் உண்மையில் பாகிஸ்தானை பூர்வீகமாகக் கொண்டவரா?

ரன்வீர் சிங்கின் ‘துரந்தர்’ திரைப்படம் கடந்த ஆண்டு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது, இப்போது ‘துரந்தர் பாகம் 2’ வெளியாகியுள்ளது. இதையும் ஆதித்யா தார் இயக்கியுள்ளார்.

bbci
20 மார்., 05:30 AM
போர் எப்போது முடியும்? அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் இரானின் விருப்பம் என்ன?
பொதுவான

போர் எப்போது முடியும்? அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் இரானின் விருப்பம் என்ன?

பெரும்பாலான மக்கள் இந்தப் போர் சீக்கிரம் முடிவடைய வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால் எந்த நிபந்தனைகளின் கீழ்? அங்குதான் நிலைப்பாடுகள் வேறுபடுகின்றன. அமெரிக்கா, இஸ்ரேல், இரான் மூன்றும் இந்த போர் எவ்வாறு முடிய விரும்புகின்றன?

bbci
20 மார்., 05:30 AM
அமெரிக்கா 7000 இலக்குகளை தாக்கிய பிறகும் இரான் தொடர்ந்து பதிலடி கொடுப்பது எப்படி?
பொதுவான

அமெரிக்கா 7000 இலக்குகளை தாக்கிய பிறகும் இரான் தொடர்ந்து பதிலடி கொடுப்பது எப்படி?

அமெரிக்கப் படைகளால் மட்டுமே சுமார் 7,000-க்கும் மேற்பட்ட இலக்குகள் தாக்கப்பட்ட போதிலும், இரானிய ஏவுகணைகளும் டிரோன்களும் இன்னும் அண்டை நாடுகளைத் தாக்கி வருகின்றன.

bbci
20 மார்., 05:30 AM

சமீபத்திய செய்திகள்

சமீபத்திய புதுப்பித்தல்கள்

மாதாந்திர ஊதிய ஆவணம்(Pay slip) இல்லாதவர்கள் வீட்டுக்கடன் பெறுவது எப்படி?
பொதுவான

மாதாந்திர ஊதிய ஆவணம்(Pay slip) இல்லாதவர்கள் வீட்டுக்கடன் பெறுவது எப்படி?

bbci
Mar 203 நிமிடம் படிக்க
சென்னையில் சீர்திருத்த திருமணத்தை பதிவு செய்ய மறுத்ததாக குற்றச்சாட்டு - பதிவுத்துறை கூறியது என்ன?
பொதுவான

சென்னையில் சீர்திருத்த திருமணத்தை பதிவு செய்ய மறுத்ததாக குற்றச்சாட்டு - பதிவுத்துறை கூறியது என்ன?

bbci
Mar 203 நிமிடம் படிக்க
இரான் தாக்குதலுக்கு மத்தியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 19 இந்தியர்கள் கைது ஏன்?
குற்றம்

இரான் தாக்குதலுக்கு மத்தியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 19 இந்தியர்கள் கைது ஏன்?

bbci
Mar 203 நிமிடம் படிக்க
திகில் படம் பார்ப்பது நிஜத்தில் சவாலை சமாளிக்க உதவுமா? இக்கட்டான சூழலை சமாளிக்க 9 யோசனைகள்
பொதுவான

திகில் படம் பார்ப்பது நிஜத்தில் சவாலை சமாளிக்க உதவுமா? இக்கட்டான சூழலை சமாளிக்க 9 யோசனைகள்

சில நேரங்களில் நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள் கையாள முடியாத அளவுக்கு அதீதமாகத் தோன்றலாம். இது உலகம் முழுவதும் தொடர்ந்து வரக்கூடிய கெட்ட செய்திகள் மற்றும் பெரிய மாற்றங்கள், தனிப்பட்ட சோகம் அல்லது வாழ்வை நிர்வகிப்பதில் அன்றாடம் இருக்கும் போராட்டம் காரணமாக இருக்கலாம். விஷயங்கள் நிச்சயமற்றதாக இருக்கையில், கவலை, பதற்றம் அல்லது மன அழுத்தத்தை உணர்வது பொதுவானது.

bbci
Mar 20, 05:30 AM
5 நிமிடம் படிக்க

விளம்பர இடம்

உங்கள் விளம்பரத்தை இங்கே காட்சி செய்யலாம்

மேலும் செய்திகள்

தமிழ்நாடு முழுவதும் மற்றும் அதற்கு அப்பால் இருந்து சமீபத்திய கதைகளுடன் புதுப்பித்த நிலையில் இருங்கள்

இலங்கையில் 'கியூஆர்' முறையில் பெட்ரோல், டீசல் விநியோகம் - எந்த வண்டிக்கு எவ்வளவு கிடைக்கும்?
பொதுவான

இலங்கையில் 'கியூஆர்' முறையில் பெட்ரோல், டீசல் விநியோகம் - எந்த வண்டிக்கு எவ்வளவு கிடைக்கும்?

'எரிபொருள் இருப்பைப் பாதுகாக்கும் நோக்கில்' முந்தைய அரசாங்கத்தின் பதவிக்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட கியூஆர் (QR) முறையை மார்ச் 15 முதல் மீண்டும் நடைமுறைப்படுத்த இலங்கை எரிசக்தி அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

bbci
20 மார்.
3 நிமிடம் படிக்க
இந்தியா - பாகிஸ்தான் போர்களில் இரான் யாரை ஆதரித்தது? இரு நாட்டு உறவு பற்றிய ஒரு பார்வை
பொதுவான

இந்தியா - பாகிஸ்தான் போர்களில் இரான் யாரை ஆதரித்தது? இரு நாட்டு உறவு பற்றிய ஒரு பார்வை

"இந்தியாவும் இரானும் புதிய நண்பர்கள் அல்ல. நமது நட்பு வரலாற்றைப் போன்றே பழமையானது. பல நூற்றாண்டுகளாக நமது சமூகங்கள் கலை மற்றும் கட்டடக்கலை, கருத்துகள் மற்றும் மரபுகள், கலாசாரம் மற்றும் வர்த்தகம் ஆகியவற்றின் மூலம் பிணைக்கப்பட்டுள்ளன."

bbci
20 மார்.
3 நிமிடம் படிக்க
இரான் போரில் அமெரிக்கா, இஸ்ரேல் இடையே முரண்பாடு உள்ளதா? - டிரம்ப் பற்றி பேசிய நெதன்யாகு
பொதுவான

இரான் போரில் அமெரிக்கா, இஸ்ரேல் இடையே முரண்பாடு உள்ளதா? - டிரம்ப் பற்றி பேசிய நெதன்யாகு

தற்போதைய இரான் போரில் இஸ்ரேல் அமெரிக்காவை 'கட்டாயப்படுத்தியது' என்ற கருத்தை பெஞ்சமின் நெதன்யாகு மறுத்துள்ளார்.

bbci
20 மார்.
3 நிமிடம் படிக்க
Youth Review: 'கலகல காதல்; குடும்ப எமோஷன்; ஆனாலும்...' - எப்படி இருக்கு 2கே கிட்ஸ்களின் 'யூத்'?
kollywood

Youth Review: 'கலகல காதல்; குடும்ப எமோஷன்; ஆனாலும்...' - எப்படி இருக்கு 2கே கிட்ஸ்களின் 'யூத்'?

10ம் வகுப்பு படிக்கும் பிரவீன் (கென் கருணாஸ்) பொதுத்தேர்வில் அனைத்துப் பாடங்களிலும் ஜெஸ்ட் பாஸ் மட்டுமே பெறுகிறார். பிரவீனுக்கு மிகவும் செல்லம் தந்து வளர்க்கும் தாயார் சரோஜாவுக்கு (தேவதர்ஷினி) மகன் பாஸ் ஆகிவிட்ட விஷயம் மகிழ்ச்சியைத் தந்தாலும், பேக்கரி வைத்திருக்கும் தந்தை உன்னிகிருஷ்ணனுக்கு (சுராஜ் வெஞ்சாரமூடு) கோபத்தையே உண்டாக்குகிறது. Youth Rewiew | யூத் விமர்சனம்மேல்நிலைப் படிப்புக்குச் செல்லும் பிரவீனுக்கு அங்கு அடுத்தடுத்து மூன்று காதல்கள் அரங்கேறுகின்றன. படிப்பில் கவனம் செலுத்தாமல் முழுக்க முழுக்க 'லவ் லவ் லவ்' என மூழ்கிக்கிடக்கிறார் பிரவீன். இந்தக் காதல்கள் அவருக்குள் எப்படியான தாக்கங்களையும், மாற்றங்களையும் கொண்டு வருகின்றன என்பதுதான் அறிமுக இயக்குநர் கென் கருணாஸ் இயக்கியிருக்கும் 'யூத்' திரைப்படத்தின் கதை.Youth: "எனக்கு இப்போது 24 வயது; ஆனால்..." - 'யூத்' படம் குறித்து நெகிழும் கென் கருணாஸ்பதின்வயது இளைஞனுக்குரிய உடல்மொழி, சேட்டை, நடனம், '3' காதல் ஆட்டங்கள், அவருக்குள் ஏற்படும் குற்றவுணர்வு மற்றும் மனமாற்றம் என அனைத்தையும் கச்சிதமாக நடிப்பில் புகுத்தி 'யூத்' நாயகனாகத் தடம் பதிக்கிறார் கென் கருணாஸ். படிப்போடு நடிப்பும் சூப்பர் செதம்பரம்! பள்ளி மாணவிகளாக மீனாட்சி தினேஷ், அனிஷ்மா அனில்குமார் ஆகியோர் நல்லதொரு பங்களிப்பை நல்கி, விரலில் ஹார்ட்டின் காண்பிக்க வைத்திருக்கிறார்கள்!மூன்றாவது கதாநாயகியாக வரும் ப்ரியான்ஷி யாதவிற்கு நடிப்பில் பெரியளவில் வேலை இல்லை. மகனுக்கும், மகனின் கல்விக்கும் எந்தக் குறையும், தடையும் வந்துவிடக் கூடாது என அரும்பாடுபடும் அப்பாவித் தாயாக தேவதர்ஷினி, நடிப்பின் மூலம் நம் மனதைக் கனமாக்குகிறார். மழித்த தாடி மற்றும் பருமனான மீசையுடன் ஸ்ட்ரிக்ட் தந்தையாக வருகிறார் சுராஜ் வெஞ்சராமூடு. வழக்கமான அம்சங்கள் நிறைந்த கதாபாத்திரமாக இருந்தாலும், அவருடைய ஸ்டைல் கொண்டு இனிப்பு, காரம் என அதன் சுவையை ஏற்றியிருக்கிறார். சின்ன தமிழா, ஈஸ்வர் உள்ளிட்ட கென் & கேங், மீனாட்சி தினேஷின் தோழிகளாக வருபவர்கள், இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்சர் மணிகண்டன் & குழு ஆகியோர் படத்தின் சிரிப்பொலி எபிசோடுகளை ஷார்ப்னர் கொண்டு சீவியிருக்கிறார்கள்.Youth Rewiew | யூத் விமர்சனம்சிறிய வீடு, கென்னின் அறை, பரபரப்பாக இருக்கும் பள்ளி வளாகம், ஜாலியான வகுப்பறை போன்றவற்றை கலர்ஃபுல் ரங்கோலியாக மாற்றியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் விக்கி. முதல் பாதி காமெடிக்கு, இரண்டாம் பாதி எமோஷனுக்கு எனக் கணக்குப் போட்டு காட்சிகளை அடுக்கி செண்டம் வாங்கியிருக்கிறார் படத்தொகுப்பாளர் நாஷ்.2014-ம் ஆண்டில் பயன்படுத்தப்பட்ட பட்டன் மொபைல்கள், டி.வி, பழைய ரூபாய் நோட்டுகள், பழைய கோலா பாட்டில், நெட் சென்டர்கள் என அக்காலக்கட்டத்தை நினைவூட்டி, கதைக்குப் பலம் சேர்த்திருக்கிறது கலை இயக்குநர் ராமு தங்கராஜின் கச்சிதமான கைவண்ணம்.'கடைசி வரைக்கும் நன்றியோட இருந்தா மாஸ்'ன்னு சொல்லிருக்கீங்க, நான் என்னைக்குமே!'- தனுஷ் குறித்து கென்'முட்ட கலக்கி', 'ஜில்பான்ஸோ', 'லவ்வ சொல்லிட்டாளே' ஆகிய பாடல்களில் காதலைக் கொண்டாட்டத்துடன் பரிமாறியிருக்கிறார் ஜி.வி. பிரகாஷ்குமார். அதேபோல, பின்னணி இசையிலும் காமெடி, காதல், செண்டிமெண்ட் என அனைத்துப் பாடங்களிலும் ஃப்ர்ஸ்ட் மார்க் வாங்குகிறார் ஜி.வி.படிப்பில் கவனம் செலுத்தாமல் ஜாலியாக இருக்க நினைக்கும் ஒருவனுக்குக் காதல்களாலும், குடும்பத்தாலும் கிடைக்கும் அனுபவங்கள் என்னென்ன என்பதை காமெடி, செண்டிமெண்ட் கலந்து சொல்லியிருக்கிறார் இயக்குநர் கென் கருணாஸ். பதின்வயதில் துளிர்விடும் காதல் ஆசைகள், அந்த வயது இளைஞர்களின் எண்ணவோட்டம், அப்போது முதிர்ச்சியற்ற தன்மையுடன் காதலை அணுகுவது எனப் பதின்வயது இளைஞனின் 360 டிகிரி வாழ்க்கையையும் படத்தின் முதல் பாதி திரைக்கதையில் சொல்லிவிடுகிறார்கள். Youth Rewiew | யூத் விமர்சனம்இரண்டு காதல்கள், அது ஏற்படுத்தும் குழப்பங்கள், நண்பர்களுடனான ஜாலி அரட்டைகள், அப்பாவி அம்மாவுடனான செல்லம் கொஞ்சல்கள், கறார் அப்பாவைக் கண்டால் ஏற்படும் ஜாலியான கோபம் என்பன போன்ற 'கலகல' பதில்களை எழுதி ரேங்க் ஹோல்டராக மேடை ஏறுகிறது திரைக்கதை. ஆனால், இடையிடையே உருவக்கேலிகள், பெண்களின் குரலை வைத்து கேலிகள் போன்றவை வகுப்பறையில் மாணவர்கள் செய்திருக்கும் க்ரைம் வேலைகள். அது அந்த வயதுக்குரிய இயல்பு என்றாலும், அதைத் தவறு என்று சுட்டிக்காட்டும் காட்சிகளோ, வசனங்களோ மிஸ்ஸிங்!கொலைச்சேவல் விமர்சனம்: ஆணவக்கொலைக்கு எதிரான சினிமா; மிரட்டும் க்ளைமாக்ஸ்! ஆனா மேக்கிங்?இரண்டாம் பாதியில் காதலுடன் சேர்த்து எமோஷனல் க்ளாஸையும் சேர்த்து சொல்கிறது திரைக்கதை. அம்மா மீதான அளப்பரிய பாசம், காதலை விட குடும்பமே முக்கியம் என உணரும் கிளைமேக்ஸ் நடிகர்களின் நேர்த்தியான பங்களிப்பால் நம்மை உருக்க வைத்தாலும், அவற்றை வழக்கமான திருப்பத்தைக் கொண்டு திரைக்கதையில் எழுதியிருப்பது குறைவான மதிப்பெண்களையே பெற வைத்திருக்கிறது. தெளிவாகச் சொல்லப்படாத காதல் கதைகள், முதல் பாதிக்குப் பிறகு காணாமல் போன காதலிகள் ஆகியவை இரண்டாம் பாதி திரைக்கதையில் லாங் ஆப்சென்ட் ஆகியிருக்கின்றன. பெண்களின் பார்வையில் காதல்களை அணுகாமல், அவர்களை வேண்டுமென்றே குற்றவாளிக் கூண்டில் ஏற்றும் கதாநாயகன் கதாபாத்திரம் பெரும் குழப்பம். Youth Rewiew | யூத் விமர்சனம்பள்ளிகளில் இதெல்லாம் செய்ய முடியுமா, அங்கு இப்படியான சுதந்திரங்கள் கொடுக்கப்படுமா என்பன போன்ற லாஜிக் கேள்விகளுக்குப் பதில்களை எழுதாமல் விட்டிருப்பது ஏனோ?!சில குறைகள் இருப்பினும், பதின்வயது இளைஞனின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் இந்த 'யூத்', காமெடி மற்றும் செண்டிமெண்ட் பாடங்களில் மட்டும் கவனம் செலுத்தி டீசண்ட் மார்க் வாங்குகிறது.தாய் கிழவி விமர்சனம்: ரகளையான காமெடிகளைச் சுருக்குப் பையில் கட்டி, அலப்பறையைக் கூட்டும் பவுனுத்தாயி!

vikatan
19 மார்.
3 நிமிடம் படிக்க
மேட்டூர் அணைக்கு பக்கபலமாக நின்ற காவிரிப் பாலம்; ஐரோப்பிய கர்டர்கள்.. வரலாற்றுச் சின்னம்| அணை ஓசை 10
History

மேட்டூர் அணைக்கு பக்கபலமாக நின்ற காவிரிப் பாலம்; ஐரோப்பிய கர்டர்கள்.. வரலாற்றுச் சின்னம்| அணை ஓசை 10

பரிசல் பயன்பாடு1927 வரை மேட்டூர் கிராமத்திலிருந்து காவிரியின் இடக்கரைக்கு செல்ல ஒரே வழி பரிசல் மட்டுமே. பரிசல் ஓட்டுபவர்கள் ஆற்றின் கடினமான நீரோட்டத்தையும் திறமையாகக் கடந்து சென்றனர். இந்த பரிசல்களை இயக்குபவர்கள் அந்த வேலையில் மிகவும் தேர்ச்சி பெற்றவர்களாக இருந்தனர் என்று பதிவு செய்துள்ளனர், பிரிட்டிஷ் பொறியாளர்கள்.இந்தத் திறமை, ஆற்றின் மிக கடினமான நீரோட்டத்தை கடந்து சரியாக இயக்கி குறிப்பிட்ட இடத்தை அடைவதற்கு மிகுந்த தேவையாக இருந்தது. அதேசமயம் விபத்துக்கள் நடப்பதென்பது அநேகமாக இல்லை எனலாம்! ஏனெனில், அவ்வளவு திறமை வாய்ந்தவர்களாக பரிசில் ஓட்டுபவர்கள் திறன் பெற்று இருந்தனர். ஆற்றை கடக்கவும், மீன்களைப் பிடிக்கவும் இந்த வகை பரிசல்களே பயன்படுத்தப் பட்டன!ஆற்றில் அதிக அளவு நீர் செல்லும் போது இக்கரையில் இருந்து பரிசலில் புறப்பட்டால் அக்கரையைச் சென்றடைவதற்கு முன்பாக, ஆற்றின் வேகத்தில் நீரோட்டத்தால் மெல்ல இழுக்கப்பட்டு, அநேகமாக சுமார் ஒருமைல் தூரம் தள்ளி அக்கரையில் இறங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும்! பிறகு, அங்கிருந்து பரிசலை தோளில் சுமந்தபடி, அக்கரையின் ஓரமாகவே பொடி நடையாக நடந்து வந்து சென்றடைய வேண்டிய இடத்தை அடைய நேரிடும்.கனரக கட்டுமான கருவிகள் அல்லது பொருட்களை இந்த பரிசல்கள் மூலம் அணையின் இடது புறத்திற்கு கொண்டு செல்வது என்பது இயலாத காரியம். ஓரளவு சிறிய இயந்திரங்கள் மற்றும் கருவிகளை அவசரத் தேவைக்காக மேட்டூர் கிராமத்திலிருந்து இடது புறக்கரைக்கு கொண்டு செல்ல, நான்கு பரிசல்களை ஒன்றாக நிறுத்தி, ஒன்றுடன் ஒன்று கட்டி அதற்கு மேல் மரக்கட்டைகளை வைத்து சமதளம் போல் ஏற்படுத்தி, மூங்கில் வார்களைக் கொண்டு கட்டி, பொருட்களை அதில் வைத்து மிக கவனமாக அக்கரைக்கு எடுத்துச் செல்ல வேண்டிய நிலை இருந்து வந்தது. ஆற்றின் குறுக்கே பாலம் கட்டும் வரை இந்த நிலையே நீடித்தது.காவிரி பாலம் திட்டம்கனரக கருவிகள், கட்டுமானப் பொருட்கள் போன்றவற்றை ஆற்றின் இடக்கரைக்கு பரிசல் வழியாகக் கொண்டு செல்ல முடியாததால், பாலம் கட்டும் அவசியம் உருவானது. இதற்கான முதற்கட்ட ஒதுக்கீடு ரூ.1.5 லட்சம்.முதலில், ஈரோடு காவிரிப் பாலத்தில் மீதமாக இருந்த 19 இரும்புக் கர்டர்களை வாங்கி இங்கு பயன்படுத்தி, மேலே 7 அங்குல அளவில் கான்கிரீட் போட்டு, 18 அடி அகலச் சாலை (நடைபாதையுடன் சேர்த்து 20 அடி) அமைக்கப்பட்டது. 10 டன் எடையுள்ள டிராக்டர், வண்டிகள் கூட செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டது. கடல் மட்டத்திலிருந்து +666 MSL அளவில் பாலம் அமைக்கப்பட்டது.காவிரி பாலம் கட்டுமானம் 1926 ஆம் ஆண்டு முதலில் “SITE-D” அடிப்படையில் வேலை தொடங்கினாலும், அணை “SITE-Y” என்ற இடத்துக்கு மாற்றப்பட்டதால் பாலம் அங்கு மாற்றி அமைக்கப்பட்டது. புதிய இடத்தில் பாறைகள் அடர்த்தியானவை; பெருவெள்ளத்தின் போதும் தேய்மானமில்லாமல் இருந்தன. எனவே, பாலம் கட்ட பொருத்தமாக அந்த இடம் அமைந்தது.1926 ஜூலை மாதம் மதிப்பீடு ரூ.2,68,000 ஆக அனுப்பப்பட்டு, 1927 மார்ச் மாதம் ஒப்புதல் கிடைத்தது. ஒப்பந்ததாரர் வேலை சரியாக செய்யாததால் 1927 ஆகஸ்டில் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது; பின்னர் கர்டர் பொருத்தும் பணி துறை மூலமே நடந்தது.வரலாற்றுச் சின்னமான காவிரி பாலம்அதிக கர்டர்கள் இந்தியாவில் கிடைக்காததால் ஐரோப்பாவிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டியதாகி, அனுமதி பெற்று 1927 அக்டோபர் முதல் 1928 மார்ச் வரை பொருத்தப்பட்டது. 1928 ஜூனில் பாலம் திறந்து விடப்பட்டது. ஆரம்பத்தில் சில வாகனங்களுக்கு மட்டுமே அனுமதியளிக்கப் பட்டது. 1930 முதல் டிராம்வே மூலம் அணை கட்டுமானப் பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டது. பாதசாரிகளுக்கான நடைபாதையும் அமைக்கப்பட்டது.மொத்தச் செலவு ரூ.2,63,129 மட்டுமே. பின்னாளில் இந்தப் பாலம் முக்கிய சாலையாக பயன்பட்டு, 1980களில் மேட்டூர் அனல் மின் நிலையம் உருவானபின், கூடுதலாக புதிய பாலங்கள் கட்டப்பட்டன.காவிரி பாலம் கல்வெட்டு 1928-ல் பாலம் கட்டப்பட்டதும் சேலம்–கோயம்புத்தூர் இடையே இணைப்பு ஏற்பட்டது. தொப்பூரிலிருந்து பவானிக்கு மேட்டூர் வழியாக புதிய சாலை அமைக்கப்பட்டதால், மெட்ராஸிலிருந்து கோயம்புத்தூருக்கு 14 மைல் தூரம் குறைந்தது. ஆனால் சேலம், கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகங்கள் இந்தப் பாலத்தால் வியாபார பலன் இல்லை என்று கூறி நிதி பங்களிப்பை மறுத்தன. எனவே முழுச் செலவும் மேட்டூர் திட்டத்திலிருந்தே ஒதுக்கப்பட்டது. பின்னாளில் இந்த சாலை, பாலம் ஆகியவை அதிக பயன்பாட்டை பெற்று இன்றளவும் பெரும் பயன் நல்கி வருகிறது.இவ்வாறு, 1928 இல் முடிக்கப்பட்ட காவிரிப் பாலம் மேட்டூர் அணை கட்டுமானத்திற்கும், தமிழ்நாட்டின் போக்குவரத்து வரலாற்றிற்கும் ஒரு சின்னமாக திகழ்கிறது. இந்தப்பாலத்தில் நின்று கொண்டு வடக்கு திசையில் பிரம்மாண்டமாக எழும்பி நிற்கும் அணையை கண்டு மகிழலாம். இதில் உழைத்த ஒவ்வொரு தொழிலாளர்களின் வேர்வைத் துளிகள் அணையிலிருந்து வெளியேறும் காவிரி நீரில் கலந்திருப்பதை உளமாற உணரலாம்.ஒட்டுமொத்த மேட்டூரின் கட்டமைப்பை இதை வாசித்து விட்டு ஒருமுறை நேரில் சென்று கண்டு வந்தீர்கள் என்றால் கூட்டு முயற்சியின் சின்னமாக, பொறியாளர்களின் தொலைநோக்குப் பார்வைக்கு அத்தாட்சியாக ஒவ்வொருவரின் உள்ளங்களிலும் மகிழ்ச்சி பூத்து மலரும் என்பது உறுதி!பாதுகாக்கப்பட்ட குடிநீர் 1928 ஆம் ஆண்டு ஜூன் மாதம் காவிரிப் பாலம் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்த பிறகுதான், அணையின் இடது புறக்கரையில் ஓரளவு கூறிக் கொள்ளும்படியான வேலைகள் நடக்க ஆரம்பித்தது.மிக முக்கியத் தேவையாக போதுமான அளவு பாதுகாக்கப்பட்ட நீர்த் தேவை இருந்தது. இது பெரிய அளவில் தேவைப்படுவதாகவும் அமைந்தது. அணையின் வலது புறக்கரையில் நிரந்தரமான வடிகட்டியுடன் கூடிய ஆலை மற்றும் நீர் கொள்கலன் அமைப்பதில் சில வசதி குறைபாடுகள் உணரப்பட்டன. மிகப் பொருத்தமான இடம் அணையின் இடது புறத்தில், காவிரிப் பாலத்துக்கு சற்று கீழே இயற்கையாகவே குளம் போன்று நீர் தேங்கி நிற்கும் ஒரு இடம் அமைந்தது.அந்த இடத்தில் வடிகட்டியுடன் கூடிய கொள்கலனும் மலைப்பகுதியில் (இடதுபுறம் உள்ள சீத்தாமலை) அணையின் பக்கவாட்டில் அமைந்த நீர்த் தொட்டியும், முகாம்களுக்கு மட்டுமின்றி அணையின் அதிகபட்ச உயரச்சுவர் கட்டி முடிக்கப்பட்டு அதன் மேல் புறம் பணி முடியும் வரை இந்த நீர் பயன்படுத்த வழங்கப்பட்டது.குடிநீர் நீரேற்று நிலையம் மனித உடலில் ஓடும் ரத்தக்குழாய்களைப் போல, அணை கட்டுமானத்தின் போது குறுக்கும் நெடுக்குமாக, அணை நீளம் முழுவதும் குழாய்கள் பதிக்கப்பட்டு, மேட்டூர் முகாமுக்கு முக்கியக் குழாயும், பிரித்தளிக்கும் குழாய்கள் அதிலிருந்து அணைக்கட்டுமானம் தொடர்புடைய அனைத்து பகுதிகளுக்கும் அதாவது பணிமனை, பவர் ஹவுஸ், மற்றும் வலதுபுற பக்கவாட்டு கரை வரையிலும் ஆற்றை கடந்து கொண்டு சென்று தேவையான அளவு தண்ணீர் அளிக்கப்பட்டது. ஆரம்பத்தில் ஆற்று நீரை நேரிடையாக அணை கட்டுமானப் பணிகளுக்கு பயன்படுத்துவது என்ற முடிவை எடுத்திருந்தாலும் சற்று யோசித்துப் பார்த்து அங்கு வேலையில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்கள் தன்னிச்சையாக அந்த நீரை தங்கள் தாகம் தீர்த்துக்கொள்ள அப்படியே அருந்தி விடலாம் என்ற அச்சமும், அதனால் காலரா போன்ற பெருந்தொற்று பரவும் அபாயமும் இதில் இருப்பதால் எல்லாவிதமான பயன்பாடுகளுக்கும் பாதுகாக்கப்பட்ட குளோரின் கலந்த சுத்தமான நீரை பயன்படுத்துவது என்ற முடிவு செயல்படுத்தப்பட்டது!`தாமதம் நல்லது' - பெரு வெள்ளமும் எல்லீஸ் பாலம் உருவாக்கமும்! | அணை ஓசை 09இந்த முடிவு நன்கு யோசித்து அனைவரது உடல் நலனையும் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட சிறப்பான முடிவு என்ற எண்ணத்தை இப்போது நமக்கு தோற்றுவிக்கிறது. இதனால் சுத்தமான தண்ணீர் சொந்த உபயோகம் முதல் அணை கட்டி முடிக்கப்படும் வரை அனைத்து கட்டுமான பணிகளுக்கும் அளிக்கப்பட்டு கவனத்துடன் பணிகளை முடிக்க எச்சரிக்கை நடவடிக்கையாக எடுக்கப்பட்டது பாராட்டுக்குரியது! இதனால் உடனடியாக பலன் கிடைத்தது எனலாம். நீரின் மூலமாக பரவும் வியாதிகள் உடனே அறவே இல்லாமல் போனது. சுத்தமான தண்ணீர் பொது பயன்பாட்டுக்கு வந்ததினால் காலரா மறைந்தது.இந்த ஏற்பாடுகள் குறித்து அந்த சமயத்தில் மெட்ராஸ் மாகாண சட்டமன்ற கவுன்சிலில் பெரும் விவாதம் நடந்தது. புயல் கிளப்பிய விவாதம் அது! தொடரின் பிற்பகுதியில் அதை காண்போம்.தொடர்ந்து பயணிப்போம்... காவிரி நன்னீர் சிறப்புபொருள்: பெரிய புராணத்தில் காவிரியை வளர்ப்புத் தாயாக காட்டுகிறார்.“சையமால் வரைபயில் தலைமை சான்றது செய்யபூ மகட்குதற் செவிலி போன்றது வையகம் பல்லுயிர் வளர்த்து நாள்தொறும் உய்யவே சுரந்தளித்து ஊட்டும் நீரது” - சேக்கிழார்

vikatan
19 மார்.
3 நிமிடம் படிக்க
திருட்டு பைக்; கைகொடுத்த தரவுகள்.. மாணவி கொலை வழக்கில் குற்றவாளி சிக்கியது எப்படி?- எஸ்.பி விளக்கம்!
Crime

திருட்டு பைக்; கைகொடுத்த தரவுகள்.. மாணவி கொலை வழக்கில் குற்றவாளி சிக்கியது எப்படி?- எஸ்.பி விளக்கம்!

தூத்துக்குடி மாவட்டம், வேடநத்தம் கிராமத்தில் 12-ம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், 5 பேரின் டி.என்.ஏ மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இதில், ஒருவரின் டி.என்.ஏ மாதிரி மற்றும் மாணவியின் நகத்தில் இருந்த சிறிய சதைத் துணுக்கு மூலம் நடத்தப்பட்ட பரிசோதனையில் ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் என்பவர் கொலையாளி எனக் கண்டறியப்பட்டுள்ளார். இதனையடுத்து அவர் கைதுசெய்யப்பட்டு தொடர்ந்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட எஸ்.பி., மதன், "தூத்துக்குடி மாணவி கொலை வழக்கு, போக்சோ வழக்கு என்பதால், சில தகவல்களை மட்டுமே தர முடியும். குற்றப் பின்னணி கொண்டவர்களின் தகவல்களை முழுமையாக ஆய்வு செய்தோம். டிஜிட்டல் ஆவணங்கள், சுமார் 800-க்கும் மேற்பட்டவர்களிடம் நடத்திய நேரடி விசாரணை மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.10 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. மேலும் 4 டி.எஸ்.பி-க்கள், 6 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 150 காவலர்கள் விசாரணை மற்றும் குற்றவாளிகளைத் தேடும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டனர்.புலனாய்வுப் பிரிவு, மோப்பநாய் பிரிவு என வெவ்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. சம்பவ இடத்தில் சி.சி.டி.வி கேமராக்கள் இல்லை என்ற போதிலும் அந்தப் பகுதியைச் சுற்றி பல பகுதிகளில் உள்ள 98 இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் சேகரிக்கப்பட்ட தகவல் அடிப்படையில் 2,514 தொலைபேசி தகவலும் சேகரிக்கப்பட்டன.வேறு குற்றப் பின்னணி உள்ள நபர்கள் குறித்து பார்த்து கண்காணித்து, அவர்களிடம் விசாரணை மேற்கொள்ள பல குழுவினர் விசாரணை மேற்கொண்டனர். நேரடியாக மற்றும் டிஜிட்டல் முறையில் தகவல் சேகரிக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டது.சம்பவம் தொடர்பாக அனைத்து விசாரணைகளும் அறிவியல் பூர்வமாக மேற்கொள்ளப்பட்டன. இந்தச் சம்பவத்தில் ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமியின் படத்தையும் பெயரையும் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இதுவரை அதை பயன்படுத்திய ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்தச் சம்பவத்தை தொடர்ந்து அனைத்து கிராமங்களிலும் 10 சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அனைத்து கிராமங்களிலும் பெண் போலீஸார் மூலம் ரோந்துப் பணிகள் தீவிரப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.விசாரணையின்போது, சம்பவ இடத்திற்கு அருகில் ஒரு சந்தேகத்திற்குரிய இருசக்கர வாகனம் நின்றதும், பின்னர் அது மாயமானதும் தெரியவந்தது. அருகில் இருந்த காற்றாலை (Windmill) சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தபோது, அந்த வாகனம் நடமாடியது உறுதியானது. அந்த வாகனத்தின் பதிவு எண் மாற்றப்பட்டிருந்ததும், அது ராமநாதபுரம் மாவட்டம், பார்த்திபனூர் காவல் நிலையத்தில் பதிவான 'திருட்டு பைக்' என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.சமீபத்தில் சிறையிலிருந்து விடுதலையானவர்களின் பட்டியலை அந்தத் திருட்டு பைக்கோடு ஒப்பிட்டுப் பார்த்தபோது, தர்ம முனீஸ்வரன் என்பவர் மீது சந்தேகம் வலுத்தது. இவர் ஏற்கெனவே ஒரு கடுமையான குற்றவழக்கில் தண்டனை பெற்று, கடந்த 2025 டிசம்பர் மாதம் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தலைமறைவாக இருந்த தர்ம முனீஸ்வரனை இன்று தனிப்படை போலீஸார் சுற்றி வளைத்துப் பிடித்தனர். விசாரணையில், மாணவியைத் தனிமையில் வழிமறித்துக் கடத்தி, பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றபோது மாணவி எதிர்த்ததால், அவரை கழுத்தை நெரித்துக் கொலைசெய்ததை ஒப்புக்கொண்டார். எவ்வித அழுத்தத்திற்கும் இடம் கொடுக்காமல் இந்த வழக்கு விசாரணை முறையாக நடத்தப்பட்டது. இந்த வழக்கை உயர் நீதிமன்றம் கண்காணித்து வருகிறது. குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனையை பெற்றுத் தருவோம்" என்றார்.

vikatan
19 மார்.
3 நிமிடம் படிக்க
திடீர் `மர்ம' ட்ரோன்களால் பரபரப்பு: வாஷிங்டன் ராணுவ தளம் மீதும் ஈரான் தாக்குதல் நடத்த திட்டமா?
Trending

திடீர் `மர்ம' ட்ரோன்களால் பரபரப்பு: வாஷிங்டன் ராணுவ தளம் மீதும் ஈரான் தாக்குதல் நடத்த திட்டமா?

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவது உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரான் மீது மட்டும் தாக்குதல் நடத்துகின்றன. ஆனால் ஈரான் அண்டை நாடுகளாக பஹ்ரைன், கத்தார், துபாய் போன்ற அமெரிக்க ஆதரவு நாடுகளில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இத்தாக்குதலால் மத்திய கிழக்கு நாடுகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வாஷிங்டனில் உள்ள ஃபோர்ட் லெஸ்லி ஜே. மெக்நாயர் ராணுவ தளத்திற்கு மேலே மர்ம ட்ரோன்கள் தொடர்ந்து பறப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழலில் அமெரிக்க ராணுவம் மிகுந்த எச்சரிக்கையுடன் அச்சுறுத்தல்களைத் தீவிரமாகவும் கண்காணித்து வருகிறது. கடந்த 10 நாட்களில் ஒரே இரவில் ஃபோர்ட் லெஸ்லி ஜெ.மெக்நாயர் ராணுவ தளத்திற்கு மேலே பல ட்ரோன்கள் (ஆளில்லா விமானங்கள்) பறந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.கத்தார் எண்ணெய் கிணறு எரிகிறது. இதையடுத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிக்கவும், இதற்கு எப்படிப் பதிலடி கொடுப்பது என்பது குறித்து வெள்ளை மாளிகையில் அதிகாரிகள் கூடி முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளனர். இந்த ராணுவ தளத்தில்தான் அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் பாதுகாப்புச்செயலாளர் பீட் ஹெக்சேத் ஆகியோர் வசிக்கின்றனர். ட்ரோன் எச்சரிக்கையை தொடர்ந்து இந்த இரண்டு பேரையும் வேறு பாதுகாப்பான இடத்திற்கு இடமாற்றம் செய்வது குறித்தும் வெள்ளை மாளிகையில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. ஃபோர்ட் மெக்நாயர் தளம் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகம் (National Defense University) மற்றும் பென்டகனின் மிக உயர்மட்ட ராணுவ அதிகாரிகள் தங்கும் இடமாகும். இங்கு அரசியல்வாதிகள் தங்குவது கிடையாது. ஆனால் தற்போது மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக பல அரசியல் தலைவர்கள் இங்கு வந்து தங்கி இருக்கின்றனர்.ஏற்கனவே மத்திய கிழக்கில் நடந்து வரும் போர் காரணமாக உலகம் முழுவதும் உள்ள தனது தூதரகங்கள் மற்றும் ராணுவ நிலைகளை அமெரிக்கா எச்சரித்து இருக்கிறது. சில நாடுகளில் தூதரகங்களை அமெரிக்கா மூடிவிட்டது. அதோடு இந்த வாரத்தில் புளோரிடாவில் உள்ள அமெரிக்க மத்திய தலைமையகமான மேக்டில் விமானப்படைத்தளம் இரண்டு முறை மூடப்பட்டது.அங்கு கிடந்த ஒரு சந்தேகத்திற்கிடமான பொட்டலம் காரணமாக அந்த தளத்தின் பார்வையாளர்கள் மையத்தை பல மணிநேரம் மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. புதன்கிழமை அன்று நடந்த பெயரிடப்படாத ஒரு பாதுகாப்பு சம்பவம் காரணமாக அந்த தளம் பல மணிநேரம் வீட்டிற்குள்ளேயே பாதுகாப்பாக இருங்கள் என்ற உத்தரவின் கீழ் இருந்தது. ஈரானில் உள்ள தெற்கு பார்ஸ் எரிவாயு மையத்தில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து ஈரான் கத்தாரில் உள்ள எரிவாயு மற்றும் எண்ணெய் கிணறு மீது தாக்குதல் நடத்தி இருக்கிறது.

vikatan
19 மார்.
3 நிமிடம் படிக்க
தாவூத் இப்ராகிம் குடும்ப சொத்துக்கள் : போராடி ஏலத்தில் விற்பனை செய்து முடித்த மத்திய அரசு!
Trending

தாவூத் இப்ராகிம் குடும்ப சொத்துக்கள் : போராடி ஏலத்தில் விற்பனை செய்து முடித்த மத்திய அரசு!

மும்பையில் தொடர் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்திய தாவூத் இப்ராகிம் இப்போது தனது குடும்பத்துடன் பாகிஸ்தானில் பதுங்கி இருக்கிறான். அவனுக்கும், அவனது குடும்பத்திற்கும் மும்பை மற்றும் மகாராஷ்டிராவின் ரத்னகிரி மாவட்டத்தில் நிலம், வீடு போன்ற சொத்துக்கள் இருந்தது. அந்த சொத்துக்கள் அனைத்தையும் மத்திய அரசு பறிமுதல் செய்துள்ளது. மும்பையில் உள்ள தாவூத் இப்ராகிம் குடும்ப சொத்துக்கள் இதற்கு முன்பு நடந்த ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுவிட்டது. இது தவிர தாவூத் இப்ராகிம் குடும்பத்தினர் வசித்து வந்த அவர்களது வீடும் ஏலத்தில் விடப்பட்டது. ஆனால் தாவூத் இப்ராகிமின் சொந்த ஊரான மும்பாகே என்ற இடத்தில் இருந்த 4 விவசாய நிலம் விற்பனையாகாமல் இருந்தது. இந்த நிலத்தை மத்திய அரசு இதற்கு முன்பு 2017, 2020, 2024, 2025ம் ஆண்டுகளில் ஏலம் விட்டது. கடைசியாக கடந்த நவம்பர் மாதம் இந்த சொத்துக்களின் மதிப்பை 30 சதவீதம் அளவுக்கு குறைத்து ஏலம் விட்டனர். அப்படி இருந்தும் அந்த சொத்துக்கள் ஏலம் போகவில்லை. இந்த சொத்துக்கள் அனைத்தும் தாவூத் இப்ராகிமின் தாயார் அமீனா பெயரில் இருக்கிறது. இந்த சொத்துக்களை மத்திய அரசு மீண்டும் ஏலம் விட்டது. இதில் மும்பையை சேர்ந்த தொழிலதிபர் உட்பட சிலர் மட்டும் கலந்து கொண்டனர். இந்த ஏலத்தில் 4 நிலத்தையும் மும்பை தொழிலதிபர் ஏலத்தில் எடுத்தார். இதில் ஒரு சொத்து மட்டும் ஆரம்ப விலை ரூ.9.41 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. அதனை எடுக்க மும்பை தொழிலதிபர் உட்பட இரண்டு பேர் வந்திருந்தனர். இதில் மும்பை தொழிலதிபர் ரூ.10 லட்சத்திற்கு அந்த சொத்தை ஏலத்தில் எடுத்தார். இது தவிர மற்ற 3 சொத்துக்கும் மும்பை தொழிலதிபர் மட்டும் ஏலம் கேட்டு இருந்தார். வேறு யாரும் இதில் பங்கேற்கவில்லை. இதையடுத்து 3 சொத்துக்களையும் மும்பை தொழிலதிபருக்கே விற்பனை செய்யப்பட்டது. இதற்கு ஏப்ரல் மாதத்திற்குள் முழு பணத்தையும் மும்பை தொழிலதிபர் கட்டி முடித்த பிறகு அந்த சொத்து அவருக்கு சொந்தமாகும். இதன் மூலம் தாவூத் இப்ராகிற்கு சொந்தமான அனைத்து சொத்துக்களும் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுவிட்டது. கடத்தல்காரர்கள் மற்றும் அந்நியச் செலாவணி மோசடி செய்பவர்கள் (சொத்து பறிமுதல்) சட்டத்தின் கீழ், மத்திய அரசு இந்தச் சொத்துக்களை பறிமுதல் செய்து இருந்தது.!

vikatan
19 மார்.
3 நிமிடம் படிக்க
"RR அணியின் முகமாக இருந்தவர் சஞ்சு சாம்சன்; அவரை இழந்திருப்பது அணிக்கும்..!"- ஃபாப் டு பிளெஸ்ஸிஸ்
cricket

"RR அணியின் முகமாக இருந்தவர் சஞ்சு சாம்சன்; அவரை இழந்திருப்பது அணிக்கும்..!"- ஃபாப் டு பிளெஸ்ஸிஸ்

2026 ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல் திருவிழா வரும் மார்ச் 28 ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இன்னும் சில தினங்களே இருக்கும் நிலையில், வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை அணி தனது முதல் போட்டியை மார்ச் 30 ஆம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியோடு எதிர்கொள்ள இருக்கிறது. சஞ்சு சாம்சன்ரசிகர்கள் இந்தப் போட்டியைக் காண மிகவும் ஆர்வமாக இருக்கின்றனர். காரணம் சிஎஸ்கே அணியில் இருந்த ரவீந்திர ஜடேஜா ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாட இருக்கிறார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக இருந்த சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணிக்காக களமிறங்க இருக்கிறார். இந்நிலையில் ஜியோ ஹாட்ஸ்டாருக்கு பேட்டி அளித்திருக்கும் தென்னாப்பிரிக்க வீரர் ஃபாப் டு பிளெஸ்ஸிஸ், சஞ்சு சாம்சன் குறித்து பேசியிருக்கிறார்.``நான் ஐ.பி.எல் தொடரையும், அணிகளையும் கவனித்திருக்கிறேன். அந்த லீக்கில் உள்ள அனைத்து பிரபலமான அணிகளுக்கும் பொதுவான ஒரு விஷயம் இருக்கிறது. அது என்னவென்றால் ஒவ்வொரு அணிக்கும் ஒரு வீரர் அடையாளமாக இருப்பார். அவர் நீண்ட காலமாக அந்த அணியின் முகமாகத் திகழ்வார். உதாரணமாக ரோஹித் சர்மா, எம்.எஸ். தோனி, விராட் கோலி ஆகியோரைக் கூறலாம். ஃபாப் டு பிளெஸ்ஸிஸ்அந்த வகையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு முகமாக சஞ்சு சாம்சன் இருந்தார். நான் ராஜஸ்தான் ராயல்ஸ் பற்றி நினைக்கும் போதெல்லாம், சஞ்சு சாம்சனின் முகம் தான் ஞாபகத்திற்கு வரும். ராஜஸ்தான் ராயல்ஸ் அந்த முகத்தை இழந்திருப்பது அணிக்கும், ரசிகர்களுக்கும் ஒரு வித தாக்கத்தை ஏற்படுத்தும். ஏன்னென்றால் சஞ்சு சாம்சன் முக்கிய அந்த அணிக்கு முக்கிய பங்காற்றியிருக்கிறார்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

vikatan
19 மார்.
3 நிமிடம் படிக்க
20 நாள்களாக தொடரும் ஈரான் போர்: கச்சா எண்ணெய் முதல் பங்குச்சந்தை வரை தாக்கம் என்ன? | Full Summary
உலகம்

20 நாள்களாக தொடரும் ஈரான் போர்: கச்சா எண்ணெய் முதல் பங்குச்சந்தை வரை தாக்கம் என்ன? | Full Summary

இன்றோடு ஈரான் போர் தொடங்கி 20 நாள்கள் ஆகிறது. இந்தப் போர் ஈரானைத் தாண்டியும், இந்தியா வரை எப்படி மக்களைப் பாதித்துள்ளதோ, அதே மாதிரி உலக சந்தைகளையும் பாதித்துள்ளது. கடந்த 19 நாள்களாக, ஈரான் போர் இந்திய சந்தை, உலக சந்தை மற்றும் கமாடிட்டி சந்தைகளில் என்னென்ன தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை இன்றைய Opening Bell Show-ல் விவரித்திருந்தார், பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்.பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்'அதிர்ச்சி சரிவு' 92 டாலர்களை தாண்டிய இந்திய ரூபாய் - அடுத்தடுத்த தாக்கம் என்ன?"முதலில் கமாடிட்டியை எடுத்துக்கொள்வோம். கடந்த பிப்ரவரி 27-ம் தேதி, சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் 5,200 டாலர் அளவிற்கு வர்த்தகமானது. ஈரான் போர் பிப்ரவரி 28-ம் தேதி தொடங்கியது. அது சனிக்கிழமை என்பதால், அன்று சந்தைக்கு விடுமுறை. அதனால், தங்க சந்தையில் ஈரான் போரின் தாக்கம் தெரியவில்லை. அதனால், இங்கே பிப்ரவரி 27-ன் தரவுகள் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. நேற்று சர்வதேச சந்தையில், தங்கம் விலை ஒரு அவுன்ஸிற்கு 4,844 - 4,890 டாலர்கள் அளவிற்கு வர்த்தகமானது. போருக்கு முன்னால், வெள்ளியும் ஒரு அவுன்ஸிற்கு 86 - 87 டாலர் அளவிற்கு இருந்தது. ஆனால், நேற்று 76 - 77 டாலர் அளவிற்கு வர்த்தகம் ஆகியது.ஆக, தங்கம், வெள்ளி விலை இரண்டுமே போருக்குப் பின், இறங்குமுகத்தைத் தான் சந்தித்துள்ளது.ஆனால், போருக்குப் பின், கச்சா எண்ணெய் மிகப்பெரிய விலை ஏற்றத்தைச் சந்தித்துள்ளது. ஒரு பீப்பாவிற்கு 66 - 67 டாலர்கள் என்றிருந்த கச்சா எண்ணெய் 103 - 107 வரை கூட நேற்று சென்றது.கச்சா எண்ணெய்தேர்தல் நடத்தை விதிமுறைகள் : பணத்திற்கு உள்ள கெடுபிடிகள் என்ன? தெரிந்து கொள்ளுங்கள்!போர் தொடங்கியதில் இருந்து இப்போது வரை, கச்சா எண்ணெய் உச்ச விலையாக ஒரு பீப்பாவிற்கு 119 டாலர்கள் வரை சென்றது.இயற்கை எரிவாயுவை எடுத்துக்கொண்டால், முன்பு, ஒரு MMBtu-விற்கு 2.87 டாலர் என்றிருந்தது. இப்போது 3.04 - 3.05 டாலருக்கு உள்ளது. பிப்ர்வரி 28 - நேற்று வரை உச்சமாக, 4.5 டாலர்கள் வரை சென்றுள்ளது.செம்பில் பெரியளவில் மாற்றம் நடக்கவில்லை. நிலையாகவே இருந்து வருகிறது.தங்கம், வெள்ளி விலை ஏற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், அது இறங்கி தான் உள்ளது.கச்சா எண்ணெய் கிட்டத்தட்ட 50 சதவிகித உயர்வைச் சந்தித்துள்ளது. அது நிலைத்தும் வருகிறது.இயற்கை எரிவாயும் 12 - 13 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது.நாணயம் சந்தையை இப்போது பார்க்கலாம்.பிப்ரவரி 27-ம் தேதி இந்திய ரூபாயின் மதிப்பு ஒரு டாலருக்கு ரூ.91.07 என்றிருந்தோம். இப்போது ரூ.92.7 வரைக்கும் சென்றுள்ளது. அதாவது இந்திய ரூபாய் பலவீனமடைந்துள்ளது... அமெரிக்க டாலர் வலுவடைந்துள்ளது. இதை இன்னொரு கோணத்திலும் அணுகலாம். ஜப்பான் யென்னை எடுத்துக்கொள்வோம். ஒரு அமெரிக்க டாலரின் மதிப்பு 151 - 152 ஜப்பான் யென்னாக இருந்தது. இப்போது அது 159 - 160 யென் வரையில் சென்றுள்ளது. இதுவும் அமெரிக்க டாலர் வலுவாகி உள்ளதைக் காட்டுகிறது. இந்திய ரூபாய்தங்கம், வெள்ளி, செம்புடன் சேர்த்து 'இந்த' உலோகத்தையும் கவனிங்க; அடுத்த ஹீரோ இதுதானா?அடுத்ததாக, பங்குச்சந்தை பக்கம் வரலாம்.பிப்ரவரி 27-ம் தேதி, டௌ ஜோன்ஸ் 49,800 என நிறைவடைந்திருந்தது. நேற்று 46,200 என்று நிறைவடைந்திருந்தது. இடையிடையே ஏற்றம், இறக்கம் இருந்தாலும், கிட்டத்தட்ட 3,000 புள்ளிகள் சரிவைச் சந்தித்துள்ளது டௌ ஜோன்ஸ். நிக்கேய் 225 கடந்த 27-ம் தேதி 39,000 என்றிருந்தது. இப்போது 53,000-ல் இருக்கிறது. ஜப்பான் சந்தை ஏற்றத்தை சந்தித்து இருக்கிறது. 26,700 என்றிருந்த ஹாங்காங் சந்தையான ஹேங்சென் 25,000-ல் வர்த்தகமாகி வருகிறது. இங்கே சின்ன சரிவை சந்தித்துள்ளது. தென் கொரிய சந்தை ஏற்றத்தை தான் சந்தித்துள்ளது. இந்திய சந்தையைப் பொறுத்தவரை, நிப்டி 25,128 என்று பிப்ரவரி 27-ம் தேதி நிறைவடைந்திருந்தது. இப்போது 23,777 என நேற்று முடிவடைந்திருக்கிறது.ஆனால், இடையில் நிப்டி 22,955 என 'லோ'-வை பதிவு செய்தது.ஆக, ஜப்பான், கொரியாவை தவிர, பிற உலக சந்தைகள் பெரும்பாலும் சரிவை தான் சந்தித்துள்ளன.ஹார்முஸ் ஜலசந்தியில் பல கப்பல்களின் பயணங்கள் நிறுத்தப்பட்டுள்ளதால், இப்போது சரக்கு கட்டணத்தையும் கவனிக்க வேண்டியதாக இருக்கிறது.ஹார்முஸ் ஜலசந்தி'உயிரோடு தான் இருக்கிறேன்' - நிரூபிக்க போராடும் நெதன்யாகு: வீடியோக்களும், சர்ச்சைகளும்! |Full DetailVery Large Container Ships-ன் ஒரு நாளைய விலை முன்பு 2.9 ஆயிரம் டாலர்களாக போருக்கு முன்பு இருந்தது. இப்போது 4.7 ஆயிரம் டாலர்களாக மாறி உள்ளது. இது கிட்டத்தட்ட இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது. இந்தப் போர் பணவீக்கத்தை அதிகரிப்பது, சில பொருள்களின் பற்றாக்குறையை அதிகரிப்பது போன்றவற்றைச் செய்தாலும், பல உயிர்களின் பலியை நிச்சயம் சொல்லியாக வேண்டும். இன்னும் இந்தப் போர் எதற்காக என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், அதற்குள் இந்தப் போரினால் இவ்வளவு தாக்கம் ஏற்பட்டுள்ளது". (இது இன்று காலை வரையிலான தரவுகளின் படியானது ஆகும்) Gold: பதுங்கி வரும் தங்கம் விலை; இப்போது 'இவ்வளவு' தங்கம் முதலீட்டை செய்தால் சூப்பர்!

vikatan
19 மார்.
3 நிமிடம் படிக்க
தவெக: "நான் முதல் மாநாட்டுல சொன்ன மாதிரிதான்" - கூட்டணி சர்ச்சைகளுக்கு விஜய்யின் விளக்கம் என்ன?
இந்தியா

தவெக: "நான் முதல் மாநாட்டுல சொன்ன மாதிரிதான்" - கூட்டணி சர்ச்சைகளுக்கு விஜய்யின் விளக்கம் என்ன?

தமிழக வெற்றிக் கழகத்தின் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு இன்று மகாபலிபுரத்திலுள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. குறிப்பிட்ட எண்ணிக்கையிலான அழைப்பிதழ்கள் கொடுக்கப்பட்டு, அவர்கள் பங்கேற்பதற்கு மட்டுமே அனுமதியும் அளிக்கப்பட்டிருக்கிறது. தவெகவின் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு நோன்பு திறந்த பிறகு சிறப்பு தொழுகையும் நடைபெற்றது. இந்தச் சிறப்பு தொழுகையில் விஜய்யும் கலந்துகொண்டார். இதன் பிறகு உரையாற்றிய விஜய் கொள்கையில் என்றைக்கும் சமரசம் செய்துகொள்ள மாட்டோம் எனவும், பேசப்பட்டு வந்த கூட்டணி கணக்குகள் தொடர்பாகவும் பேசியிருக்கிறார்.`90 சீட்டுகள், 50-50 என டீல் பேசினார்கள்; 'என்ன அர்ஜூன் இங்கயே ஆரம்பிச்சுரலாமா?' கேட்ட விஜய்' - ஆதவ்அவர், "நான் அரசியலுக்கு வந்ததிலிருந்து நிறைய வதந்திகள் சொல்லிக்கிட்டேதான் இருக்காங்க. இவர் அந்த டீமைச் சேர்ந்தவர், இந்த டீமைச் சேர்ந்தவர்னு சொல்லிட்டு இருக்காங்க. ஆனா, இவர் எந்த டீமும் இல்லை. இவர் மக்களுடைய டீம்னு எல்லோருக்குத் தெரிஞ்சதுக்குப் பிறகு வேற என்ன அவதூறு பரப்பலாம்னு முயற்சி பண்ணிட்டு இருக்காங்க. ஆனா, அது எதுவும் வொர்க் ஆகல. அதைத் தாண்டி, இவனை என்ன பண்ணலாம்ங்கிற முயற்சியிலதான் அந்தக் கூட்டணியில், இந்தக் கூட்டணியில் சேரப் போறார்னு பொய்யான பிரசாரத்தைப் பரப்பினாங்க. தவெகவின் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு இந்த நியூஸ் கேட்டு நீங்க குழம்பியிருப்பீங்க. நாங்க எப்போதும் மதச்சார்பற்ற கொள்கையில் சமரசம் செய்துகொள்ள மாட்டோம். நம்ம தலைமையில்தான் ஆட்சி என்பது உறுதி. நம்ம முதல் மாநாட்டுல சொன்ன மாதிரிதான் என்றைக்கும் கொள்கையில் சமரசம் செய்துகொள்ள மாட்டோம். யார் என்ன அவதூறு பரப்பினாலும் நம்பாதீங்க, இறைவனின் அருளால் நம்முடைய இலக்கை நம்மால் அடைய முடியும்" எனக் கூறியிருக்கிறார்.``தமிழ்நாடு சிறந்த மாநிலம்தான்... மேடையில் விஜய் செய்த செயல்..." - ஆற்காடு நவாப் பேட்டி

vikatan
19 மார்.
3 நிமிடம் படிக்க
பலே திட்டங்களுடன் ரீ-என்ட்ரி ஆகும் துரைமுருகன் முதல் அப்செட்டில் மணியான மாஜி வரை! | கழுகார்
இந்தியா

பலே திட்டங்களுடன் ரீ-என்ட்ரி ஆகும் துரைமுருகன் முதல் அப்செட்டில் மணியான மாஜி வரை! | கழுகார்

மீண்டும் களமிறங்கும் துரைமுருகன்!பலே திட்டங்களுடன் ரீ-என்ட்ரி...தி.மு.க பொதுச்செயலாளரும், மூத்த அமைச்சருமான துரைமுருகனின் வயது மூப்பு மற்றும் உடல்நிலையைக் காரணம் காட்டி, காட்பாடியில் அவருக்குப் பதிலாக அவரது மருமகள் சங்கீதாவுக்குத்தான் சீட் எனத் தகவல் பரவின. இந்தச் சூழலில், துரைமுருகன் மீண்டும் போட்டியிடும் முடிவுக்கு வந்திருப்பதோடு, காட்பாடியில் தனது மகனும் எம்.பி-யுமான கதிர் ஆனந்த் மூலமாகக் களப் பணிகளையும் வேகப்படுத்தியிருக்கிறாராம். துரைமுருகன்களச் சூழலும் தனக்குச் சாதகமாக இருப்பதாகக் கருதும் துரைமுருகன், `இம்முறை எப்படி பிரசாரம் செய்யலாம்... மக்களை எப்படியெல்லாம் குளிர்விக்கலாம்?’ என்ற ஆலோசனையில் இருக்கியிருக்கிறாராம். பல்வேறு பலே திட்டங்களுடன், அரசியலில் ரீ-என்ட்ரி கொடுக்க தன்னுடைய உடம்பை திடப்படுத்திக் கொண்டிருக்கிறாராம் துரைமுருகன்.இழுபறியில் இணைப்பு!மாம்பழம் டு சூரியன்ஆடுதுறை பேரூராட்சி சேர்மனாக, பா.ம.க நிறுவனர் ராமதாஸின் தீவிர ஆதரவாளரும் அவர் அணியைச் சேர்ந்த தஞ்சாவூர் வடக்கு மாவட்டச் செயலாளருமான ம.க.ஸ்டாலின் இருந்து வருகிறார். தொடர்ச்சியாக ஆளும் கட்சிக்கு எதிராகக் கடுமையாகப் பேசி பேசிவந்த அவர், சமீப காலமாக அடக்கி வாசிப்பதால், 'ம.க.ஸ்டாலின் தி.மு.க-வில் இணையப் போகிறார்' என்று பேசப்பட்டது. இந்நிலையில், ஆடுதுறையில் கட்டப்பட்ட தி.மு.க முன்னாள் அமைச்சர் மறைந்த கோ.சி.மணியின் நினைவு மண்டபத்தை அமைச்சர் கே.என்.நேரு சமீபத்தில் திறந்து வைத்தார். அதற்கான முன்னெடுப்பைச் செய்த ம.க.ஸ்டாலின், நேருவின் காலில் விழுந்து ஆசி வாங்கியதைப் பார்த்து உடன்பிறப்புகளே வாயடைத்துப் போனார்களாம். 'பா.ம.க-வில் பிளவு நிலவுவதால் தி.மு.க-வில் இணைய முட்டி மோதுகிறார் ம.க.ஸ்டாலின். அதற்கு லோக்கல் உடன்பிறப்புக்கள் முட்டுக்கட்டை போடுவதால், இணைப்பு இழுத்துக்கொண்டு போகிறது' என்கிறார்கள் டெல்டா தி.மு.க-வினர். அப்செட்டில் மணியான மாஜி!அ.தி.மு.க ஆட்சிமன்றக் குழு...அ.தி.மு.க-வில் ஒற்றைத்தலைமை பஞ்சாயத்து வெடிக்கும்வரை, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், பா.வளர்மதி, தமிழ்மகன் உசேன், ஜஸ்டின் செல்வராஜ், வேணுகோபால், கே.பி.முனுசாமி என எட்டு பேர் ஆட்சி மன்றக் குழுவில் உறுப்பினர்களாக இருந்தனர். 2022-ல் ஓ.பி.எஸ், வைத்திலிங்கம் ஆகியோர் கட்சியை விட்டு நீக்கப்பட்ட பிறகு, மற்ற ஆறு பேரும் குழுவின் உறுப்பினர்களாகத் தொடர்ந்தனர். தற்போது, எஸ்.பி.வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், இன்பதுரை ஆகிய மூவரையும் ஆட்சிமன்றக் குழுவில் புதிதாக இணைத்திருக்கிறார் எடப்பாடி.எடப்பாடி பழனிசாமிஇதன்மூலமாக, குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை ஒன்பதாக உயர்ந்திருக்கிறது. விஷயம் அதுவல்ல... அந்த அறிவிப்பு இரட்டை 'மணி'களில் மற்றொரு மணியான முன்னாள் அமைச்சருக்கு கடுமையான வருத்தத்தை உண்டாக்கியிருக்கிறதாம். ஏற்கெனவே தலைமைக் கழகப் பொறுப்பிலும் இல்லை, தற்போது ஆட்சிமன்றக் குழுவிலும் பெயர் சேர்க்கப்படாததால் கடுமையான அப்செட்டில் இருக்கிறாராம். '2017 தொடங்கி தற்போது வரை டெல்லி தொடர்பான பல்வேறு விஷயங்களில் கூடவே இருந்தவன் நான். என்னைத் தொடர்ந்து புறக்கணிப்பது சரியல்ல' என தன் ஆதரவாளர்களிடம் வருத்தப்பட்டுப் பேசியிருக்கிறார்.மாற்றப்பட்ட காக்கிகள்!ஆளுங்கட்சிக்கு நெருக்கம்?தேர்தல் ஆணையத்தால் மாற்றப்பட்ட நான்கு எஸ்.பி-க்களில் மூன்று பேரின் குடும்பத்தினர் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களாம். இன்னொருவர் மாவட்ட அமைச்சருக்குத் தீவிர விசுவாசியாக இருந்து வந்தாராம். அதுதொடர்பான ரிப்போர்ட் அடிப்படையில்தான் நான்கு எஸ்.பி-க்களையும் தேர்தல் ஆணையம் மாற்றியிருக்கிறது. இவர்கள் அனைவரும் டி.ஜி.பி அலுவலகத்தில் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த இடமாறுதலைத் தொடர்ந்து ஐ.ஜி, ஏ.டி.ஜி.பி அந்தஸ்தில் உள்ள அதிகாரிகளைத் தேர்தல் ஆணையம் மாற்றத் திட்டமிட்டுள்ளதாம். காத்திருப்போர் பட்டியலுக்குச் செல்லும் நிலை இருப்பதால், ஆளுங்கட்சிக்கு விசுவாசமாக ஐ.ஜி அந்தஸ்தில் இருந்தபடி தகவல்களைப் பார்த்துச் சொன்ன அதிகாரி ஒருவர் மெடிக்கல் லீவ் லெட்டரை இப்போதே தயாராக வைத்திருக்கிறாராம்.மிஸ்டர் கழுகு: அ.தி.மு.க கூட்டணி! - ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்... கிளப்பிவிட்ட தி.மு.க!பேசி முடித்த வேலுமணி!தே.ஜ கூட்டணியில் புதிய தமிழகம்...புதிய தமிழகம் கட்சியை தே.ஜ கூட்டணிக்கு இழுத்து வரும் இறுதிக்கட்ட பணியில் மும்முரமாகியிருக்கிறாராம் முன்னாள் அமைச்சர் வேலுமணி. அதுதொடர்பாக, டாக்டர்.கிருஷ்ணசாமியுடன் இரண்டுகட்ட பேச்சுவார்த்தைகளை வேலுமணி நடத்தி முடித்திருப்பதாகக் கூறப்படுகிறது. 'ஐந்து சீட் என்பதில் உறுதியாக இருந்த கிருஷ்ணசாமியின் மனதை மாற்றி, இரண்டு சீட்டுகளை ஏற்றுக்கொள்ள வைத்துவிட்டார் வேலுமணி. விரைவிலேயே கூட்டணி உடன்படிக்கைக் கையெழுத்தாகிவிடும்' என்கின்றன எம்.ஜி.ஆர் மாளிகை வட்டாரங்கள். அதேசமயம், புதிய தமிழகத்துக்குத் தேவையான 'உதவிகள்' அனைத்தையும் செய்வதற்கு, பா.ஜ.க-வின் முன்னணி தலைவர் ஒருவர் மனம் திறந்திருப்பதால், வரும் வாரத்திலேயே எடப்பாடியுடன் கிருஷ்ணசாமி கைக்குலுக்க வாய்ப்புகள் இருக்கின்றன.முரண்டு பிடிக்கும் சிபிஎம்; ஆப்சென்ட் ஆன விசிக! - கூட்டணி தலைவலியில் அறிவாலயம்!

vikatan
19 மார்.
3 நிமிடம் படிக்க
முரண்டு பிடிக்கும் சிபிஎம்; ஆப்சென்ட் ஆன விசிக! - கூட்டணி தலைவலியில் அறிவாலயம்!
இந்தியா

முரண்டு பிடிக்கும் சிபிஎம்; ஆப்சென்ட் ஆன விசிக! - கூட்டணி தலைவலியில் அறிவாலயம்!

திமுக கூட்டணியில் நிலவி வரும் இழுபறிக்கு இன்னமும் ஒரு முடிவு கிடைக்கவில்லை. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் இன்று காலை கூட்டணி ஒப்பந்தத்தை முடித்த திமுக, இன்றே விசிக மற்றும் சி.பி.எம் உடனும் கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் என எதிர்பார்க்கப்பட்டது.CPI ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 'அதிக சீட்டுகள் வேண்டும்' என்கிற தங்களின் நிலைப்பாட்டி உறுதியாக நிற்பதாலும், விசிக திடீரென முதல்வருடனான சந்திப்பை தவிர்த்ததாலும் கூட்டணியை இறுதி செய்ய முடியாமல் தலைவலியில் தவிக்கிறது அறிவாலயம்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நேற்று திமுகவுடன் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தது. பேச்சுவார்த்தையை முடித்துவிட்டு, 'அதிக தொகுதிகளில் நிற்க வேண்டும் என்கிற எங்களின் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம்' என பெ.சண்முகம் பேசியிருந்தார். இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இருவருக்கும் ஒரே எண்ணிக்கையிலான தொகுதியை ஒதுக்கும் முடிவிலேயே திமுக இருந்தது. இதனால் இரு கட்சியினரும் ஒரே நாளில் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சிபிஐ இன்று காலை திமுகவுடன் 5 தொகுதிகளில் போட்டியிட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.Shanmugamசி.பி.எம் க்கும் 5 தொகுதிகளை மட்டுமே கொடுக்க திமுக முடிவெடுத்திருப்பதாகவும் தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து சி.பி.எம் இன் மாநில நிர்வாகக் குழு இன்று கூடியது. அந்தக் கூட்டத்தில் அதிக தொகுதிகளை கேட்டுப் பெறும் தங்களின் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க சி.பி.எம் முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது. அதன்படி, '6 சீட்டுக்கு மேல் என்றால் அறிவாலயத்துக்கு பேச வருகிறோம். இல்லையென்றால் எங்களை அழைக்காதீர்கள்.' என கறாராக ஒரு செய்தியை சி.பி.எம் திமுக தரப்பு கூறிவிட்டதாகவும் தோழர்கள் வட்டத்தில் கிசுகிசுக்கின்றனர். அதிக தொகுதிகளை கொடுக்க மனமில்லாத திமுக, விட்டுப்பிடிக்கும் மைண்ட் செட்டுக்கு வந்திருப்பதாக கூறுகின்றனர் அறிவாலய வட்டாரத்தினர்.சி.பி.எம் போல விசிக முரண்டு பிடிக்கவில்லை. கடந்த முறை போட்டியிட்டதிலிருந்து சீட்டுகள் குறையாது என விசிக தரப்புக்கு திமுக உத்தரவாதமும் கொடுத்திருந்தது. இதைத் தொடர்ந்து விசிக இன்று மாலை கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதாக தகவல் வெளியானது. விசிக தரப்பிலும் மாலை 5:30 மணியளவில் அறிவாலயத்தில் முதல்வரை சந்திக்க நேரம் வாங்கப்பட்டிருந்தது.திருமாவளவன்ஆனால், திடீரென மாலை 5:10 மணிக்கு முதல்வரை சந்திக்க வரவில்லை என விசிக தரப்பில் சொல்லப்பட்டதாக கூறுகின்றனர் அறிவாலய வட்டாரத்தினர். 'சீட் குறைப்பு இல்லை' என்கிற போதும் கடைசி நிமிடத்தில் விசிக முதல்வரின் அப்பாய்ண்மெண்டை கேன்சல் செய்ததில் அறிவாலயமே குழம்பி போயிருக்கிறது.அறிவாலயத்தின் தொகுதி பங்கீடு தலைவலி என்று முடியுமோ?

vikatan
19 மார்.
3 நிமிடம் படிக்க
Notary Portal: "தமிழ்நாடே இல்லையா?" - மத்திய அரசின் நோட்டரி இணையதளத்தில் நிலவும் பெரும் குளறுபடி
இந்தியா

Notary Portal: "தமிழ்நாடே இல்லையா?" - மத்திய அரசின் நோட்டரி இணையதளத்தில் நிலவும் பெரும் குளறுபடி

பொதுமக்களுக்குச் சட்டப்பூர்வமான ஆவணச் சான்றொப்பம் மற்றும் உறுதிமொழிப் பத்திரங்களை வழங்கும் நோட்டரி வழக்கறிஞர்களின் பணிகளை எளிதாக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் மத்திய அரசின் சட்ட அமைச்சகம் 'நோட்டரி போர்டல்' (Notary Portal) என்ற புதிய டிஜிட்டல் தளத்தைத் தீவிரப்படுத்தியுள்ளது.நோட்டரி வழக்கறிஞர் என்பவர் யார்?மத்திய அல்லது மாநில அரசால் நியமிக்கப்படும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞரே 'நோட்டரி' (Notary Public) எனப்படுகிறார். 10 ஆண்டுகளுக்கும் மேலாக (பெண்கள் மற்றும் SC/ST பிரிவினருக்கு 7 ஆண்டுகள்) வழக்கறிஞராகப் பணிபுரிந்த அனுபவம் கொண்டவர்கள் மட்டுமே இந்தப் பொறுப்புக்குத் தகுதியானவர்கள்.Advocateஒரு ஆவணம் உண்மையானதுதானா என்பதை உறுதிப்படுத்துவதும், அதில் கையெழுத்திட்ட நபர் அவர்தானா என்பதைச் சட்டப்பூர்வமாகச் சான்றளிப்பதும் இவர்களின் முதன்மைப் பணியாகும். சொத்து ஒப்பந்தங்கள், கல்விச் சான்றிதழ் உண்மைத்தன்மை, பெயர் மாற்றத்திற்கான உறுதிமொழிப் பத்திரங்கள் மற்றும் வெளிநாட்டுப் பயணங்களுக்கான ஆவணங்கள் ஆகியவற்றிற்கு நோட்டரி கையெழுத்து கட்டாயமாகும்.நோட்டரி போர்டல்எனவே, சட்ட மற்றும் நீதி அமைச்சகத்தால் இந்த 'நோட்டரி போர்டல்' (Notary Portal) அதிகாரப்பூர்வமாக 2024, ஏப்ரல் 26 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. காகிதமில்லா நிர்வாகத்தை (Paperless Administration) ஊக்குவிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள இந்தத் திட்டம், இடைத்தரகர்களின் தலையீட்டைக் குறைக்கும் எனக் கூறப்படுகிறது. 2026-ம் ஆண்டு நிலவரப்படி, அனைத்து மாநிலங்களில் உள்ள நோட்டரிகளும் இந்த மத்திய போர்டலில் தங்களைப் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.Notary Portalதற்போது என்ன சிக்கல்?2018-ம் ஆண்டு முதல் 2025-ம் ஆண்டு வரை இந்த நோட்டரியில் பதிவு செய்வதற்கு விண்ணப்பித்த 10,000-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களின் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு, அதிலிருந்து நேர்காணலுக்கென 3,612 வழக்கறிஞர்கள் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டிருக்கின்றனர். எனவே, தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் தங்கள் தற்போதைய ஆவணங்களை மீண்டும் உறுதிப்படுத்தும் விதமாக மறுவிண்ணப்பம் செய்ய வேண்டும். அதற்கென இருக்கும் நோட்டரி போர்டல் இணையப் பக்கத்தில் மூன்று முக்கிய சிக்கல்களை விண்ணப்பதாரர்கள் எதிர்கொள்கின்றனர்.1. விண்ணப்பதாரரின் மாநிலம் தேர்வு பகுதியில், மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு என்ற பெயரே இடம்பெறவில்லை. தமிழ்நாடு மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகா, மணிப்பூர் உள்ளிட்ட 12 மாநிலங்களின் பெயரும் விடுபட்டிருக்கிறது. 12 மாநிலங்களும் பெரும்பாலும் தென் மாநிலங்கள் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள். எனவே, பட்டியலில் மாநிலங்கள் விடுபட்டிருப்பது தொழில்நுட்பக் கோளாறா அல்லது திட்டமிட்ட புறக்கணிப்பா என்ற கேள்வி எழுகிறது.அதேநேரம், தமிழ்நாட்டு விண்ணப்பதாரர்களுக்கு மாவட்டங்களின் பெயர் பட்டியல் இடம்பெறுகிறது. அதை வைத்து விண்ணப்பத்தைத் தொடர்ந்தால் அடுத்த சிக்கலாக இந்தி வருகிறது.Notary Portal2. `தற்காலிகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நோட்டரி வழக்கறிஞர்கள், நோட்டரி போர்ட்டலில் பதிவு செய்யவும் மற்றும் ஆவணங்களைப் பதிவேற்றவும் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்' - என்ற வழிகாட்டுதலின் எண் (Step-7) -ல், தற்காலிகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நோட்டரி வழக்கறிஞர்கள், தங்களின் பெயர், தந்தையின் பெயர், பணிபுரியும் பகுதி மற்றும் முகவரி ஆகியவற்றை இந்தி மொழியிலும் உள்ளீடு செய்ய வேண்டும். ஆங்கிலத்திலிருந்து இந்திக்கு மொழிபெயர்க்கும் வசதி நோட்டரி போர்ட்டலிலேயே வழங்கப்பட்டுள்ளது. அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.தவெக-வுடன் கூட்டணிக்கு தயாராகும் என்.ஆர்.காங்கிரஸ்? - ரங்கசாமியின் `கிரீன்’ சிக்னலால் தவிக்கும் பாஜகஇந்தியில் நீங்கள் உள்ளீடு செய்யும் பெயர், தந்தையின் பெயர், பணிபுரியும் பகுதி மற்றும் முகவரி ஆகியவை ஏற்கனவே நீங்கள் 'சர்வீஸ் பிளஸ்' (Service Plus) அல்லது நோட்டரி ஆன்லைன் போர்ட்டலில் ஆங்கிலத்தில் கொடுத்த விவரங்களுடன் சரியாக ஒத்துப்போக வேண்டும். ஆங்கிலம் மற்றும் இந்தி பதிப்புகளுக்கு இடையே ஏதேனும் முரண்பாடுகள் (Mis-match) இருந்தால், உங்கள் விண்ணப்பம் குறைபாடுள்ள ஒன்றாகக் கருதப்படும்.நீங்கள் வழங்கும் இந்த விவரங்கள் தானாகவே கணினியால் எடுக்கப்பட்டு, உங்கள் 'தொழில்முறை சான்றிதழில்' (Certificate of Practice) அச்சிடப்படும். எனவே, இரண்டு மொழிகளிலும் உள்ள விவரங்களும் சரியாக இருப்பதை உறுதி செய்வது அவசியம்" எனக் குறிப்பிட்டிருக்கிறது.Notary Portalஇந்தப் போர்ட்டலில் இந்தி பேசும் மாநிலம் அல்லாத ஒருவர் பதிவு செய்கிறார் என்றால், அவர் தன் பெயர் முதல் முகவரி வரை கட்டாயம் இந்தியில் எழுத வேண்டும் என்ற சூழல் நிலவுகிறது. குறைந்தபட்சம் இந்தி மொழி தெரிந்தவரின் உதவி தேவைப்படும் இக்கட்டான நிலை ஏற்பட்டிருக்கிறது.3. மாநிலத்தின் பெயர் பட்டியலில் இல்லை என்பதால், மற்ற தகவல்களைப் பூர்த்தி செய்து சமர்பித்தாலும், மாநிலம் தேர்வு செய்யவில்லை என்பதால் விண்ணப்பத்தைச் சமர்பிக்க முடியவில்லை.சுமார் 3600-க்கும் மேற்பட்ட, நோட்டரிக்காகப் பதிவு செய்த வழக்கறிஞர்கள் இந்தச் சிக்கல்களால் சிரமப்படுவதாகத் தெரியவருகிறது.எனவே, விண்ணப்பதாரர்களின் காலக்கெடு முடிவதற்குள் இந்தக் கோளாறுகளைச் சரிசெய்து, தென்மாநில வழக்கறிஞர்களின் விண்ணப்பங்களை உறுதி செய்ய மத்திய சட்ட அமைச்சகம் முன்வருமா?"மகாராஷ்டிராவில் இந்தி படங்கள் முதலிடத்தில இருக்கு; ஆனா மராத்தியப் படங்கள்..!"- ரித்தேஷ் தேஷ்முக்

vikatan
19 மார்.
3 நிமிடம் படிக்க
மனோ தங்கராஜுக்கு எதிராக புகார்; ஸ்டாலின் முன்னிலையில் கொந்தளிப்பு; நேர்காணலில் நடந்தது என்ன?
இந்தியா

மனோ தங்கராஜுக்கு எதிராக புகார்; ஸ்டாலின் முன்னிலையில் கொந்தளிப்பு; நேர்காணலில் நடந்தது என்ன?

சட்டசபை தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தவர்களுக்கு நேர்காணல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளுக்கான நேர்காணலில் அமைச்சர் மனோதங்கராஜிக்கு சீட் கொடுக்கக் கூடாது என தி.மு.க தலைவர் ஸ்டாலினிடம் பெரும்பாலான நிர்வாகிகள் வலியுறுத்தியதாக நேர்காணல் முடிந்து வெளியே வந்த திருவட்டாறு ஒன்றிய முன்னாள் துணைச் செயலாளர் கலை வெளிப்படையாகவே மீடியாக்களிடம் பேசினார். நேர்காணலில் நடந்தது குறித்து அதில் கலந்துகொண்ட நிர்வாகிகள் நம்மிடம் கூறுகையில், "பத்மநாபபுரம் தொகுதியில் போட்டியிட சுமார் 38 பேர் விருப்பமனு வழங்கியிருந்த நிலையில் நேர்காணலில் சிட்டிங் எம்.எல்.ஏ மனோதங்கராஜ், முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் ஜான் கிறிஸ்டோபர், திருவட்டாறு வடக்கு ஒன்றிய செயலாளர் ஜான்பிரைட், திருவட்டாறு தெற்கு ஒன்றிய செயலாளர் ஜான்சன் உள்ப்பட 28 பேர் கலந்துகொண்டனர். தி.மு.க தலைவர் ஸ்டாலின் நேர்காணல் நடத்தியபோது டி.ஆர்.பாலு, துரைமுருகன், நேரு, ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். நேர்காணலில், 'வந்த அனைவருக்கும் சீட் கொடுக்க வாய்ப்பு இல்லை. உங்களில் ஒருவருக்கு சீட் கொடுத்தால் நீங்கள் அதை ஏற்றுக்கொண்டு கட்சிப் பணி செய்து, உழைத்து வெற்றிபெற வைப்பீர்களா?' என முதல்வர் ஸ்டாலின் கேட்டார். அனைவரும் சரி எனச் சொன்னார்கள். உங்களுக்கு எதாவது ஆட்சேபனை இருந்தால் கூறுங்கள் என ஸ்டாலின் கேட்டார். முதலில் பேசிய ஜான்பிரைட், 'மனோதங்கராஜுக்கு இரண்டு முறை வாய்ப்பு கொடுத்திருக்கிறீர்கள். அவர் அமைச்சரும் ஆகிவிட்டார். அவரை யாரும் தொடர்புகொள்ள முடியாத நிலைதான் இருந்தது. கட்சியினருக்கும், பொதுமக்களுக்கும் அவரால் பயன் இல்லை. அவர் கிள்ளியூர் தொகுதியைச் சேர்ந்தவர் என்பதால் பத்மநாபபுரம் தொகுதிக்குட்பட்ட புதியவருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். அப்படி கொடுத்தால் சுமார் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க வெற்றிபெறும்' எனச் சொன்னார். உடனே அங்கிருந்த நிர்வாகிகள் கைத்தட்டினர்.அடுத்து பேசிய ஜான்சன், 'அமைச்சர் மனோதங்கராஜுக்கு சீட் கொடுக்க வேண்டும்' என்றார். பின்னர் பேசிய ஸ்டாலின், 'தொகுதியில் வளர்ச்சிப் பற்றி பேசலாம். யாருக்கு சீட் கொடுக்க வேண்டும் என்பதுபற்றி நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்' என்றார்.ஸ்டாலின் தலைமையில் நடந்த நேர்காணல்கிள்ளியூர் தொகுதிக்கான நேர்காணலின்போது, அந்தத் தொகுதியை தி.மு.க-வுக்கு ஒதுக்கவேண்டும் என நிர்வாகிகள் கேட்டனர். கொல்லங்கோடு நகராட்சி மற்றும் 18 பஞ்சாயத்துக்களில் 13-ல் தி.மு.க வென்றுள்ளது எனக் கூறியுள்ளனர். அப்போது பேசிய முதல்வர், 'கிள்ளியூர் கூட்டணியான காங்கிரஸ் வசம் உள்ளது. அரசிடம் அதிக நிதிபெற்றவர் அந்தத் தொகுதி எம்.எல்.ஏ ராஜேஷ்குமார். அவர்தாம் நம்மை அதிகமாக விமர்சித்தும் பேசினார். ஆனாலும், கூட்டணி தர்மம் என்று ஒன்று இருக்கிறது. பார்க்கலாம்' என ஸ்டாலின் பேசினார்.அப்போது பாலூரைச் சேர்ந்த நிர்வாகி தேவா என்பவர், 'எப்படியும் காங்கிரசுக்குத்தான் கிள்ளியூரைக் கொடுக்கப் போகிறீர்கள்' எனக் கூறியுள்ளார். அவர் அப்படி பேசியதும் முதல்வர் முன்னிலையிலே பிற நிர்வாகிகள் அவரை அடிக்கப் பாய்ந்துள்ளனர். பின்னர், வெளியே வந்த அவரைச் சில நிர்வாகிகள் தாக்க முற்பட்டனர்.மனோ தங்கராஜ் நாகர்கோவில் தொகுதிக்கான நேர்காணலின்போது முதலில் மாவட்டச் செயலாளரான மேயர் மகேஷ் பேச எழுந்திருக்கிறார். அப்போது, மாவட்டச் செயலாளர் பேசவேண்டாம் எனக்கூறி உட்கார வைத்தார் முதல்வர். முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் பேசியபோது இடைமறித்த ஸ்டாலின், 'கடந்த தேர்தலில் பா.ஜ.க-விடம் தோற்றுப்போகக் காரணம் என்ன?' எனக் கேட்டார். 'அவர்கள் ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தார்கள்' எனச் சுரேஷ்ராஜன் பதில் சொன்னார். குளச்சல் தொகுதி நேர்காணலின்போது அந்தத் தொகுதியை தி.மு.க-வுக்கு ஒதுக்க வேண்டும் என நிர்வாகிகள் வலியுறுத்தினர்" என்றனர்.

vikatan
19 மார்.
3 நிமிடம் படிக்க
திமுகவுக்கு டஃப் கொடுக்கும் அதிமுக + அமமுக; தவெக தருமா ட்விஸ்ட்! - புதுக்கோட்டை சமஸ்தானம் யாருக்கு?
இந்தியா

திமுகவுக்கு டஃப் கொடுக்கும் அதிமுக + அமமுக; தவெக தருமா ட்விஸ்ட்! - புதுக்கோட்டை சமஸ்தானம் யாருக்கு?

முந்துவது யார்?தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. தற்போதைய நிலவரப்படி, யார் களத்தில் முந்துகிறார்கள் என்பது குறித்து விவரிக்கும் பக்கம் தான் `முந்துவது யார்?'புதுக்கோட்டை மாவட்ட நிலவரத்தை பார்க்கலாம்...!தமிழக சட்டமன்றத் தேர்தல் ஜூரம் இப்போதே தொற்றிக்கொள்ள, புதுக்கோட்டை சமஸ்தானத்து அரசியல் களம் 'தகி தகி' எனத் தகித்துக் கொண்டிருக்கிறது. விவசாயமும், அந்நியச் செலாவணியும் அச்சாணியாக இருக்கும் இந்த மண்ணில், புதுக்கோட்டை, ஆலங்குடி, அறந்தாங்கி, கந்தர்வக்கோட்டை(தனி) விராலிமலை, திருமயம் ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகளிள் வேட்பாளர் ரேஸில் யார் முந்துகிறார்கள் என்பது பற்றிய அலசல் ரிப்போர்ட்!சமஸ்தானம் யார் கையில்..?1. புதுக்கோட்டை தொகுதிதற்போதைய திமுக எம்.எல்.ஏ டாக்டர் வை.முத்துராஜா. மீண்டும் களத்தில் இறங்க சீட் வாங்குவதில் படுதீவிரமாக இருக்கிறார். மக்களிடம் அவர் காட்டிய எளிமையான அணுகுமுறை, தொகுதி முழுவதுமுள்ள அறிமுகம், மேலிடத்தில் உள்ள நல்ல தொடர்பு ஆகியவவை இந்த முறையும் சீட்டைப் பெற்றுத் தரும் என நம்புகிறார். இதற்காக கடந்த முறை சீட் பெற முயற்சித்த அதே ரூட்டிலேயே இப்போதும் ஸ்கெட்ச் போடுகிறார். இவருக்கு கடும் போட்டியாளராக திமுகவின் விருப்ப மனு செய்வதற்கான கடைசி நாளில் மனு செய்து சீட்டை பெரிதும் எதிர் நோக்கி இருப்பவர் முன்னாள் மாநிலங்களவை எம்.பி.எம்.எம்.அப்துல்லா. ஹைடெக் அரசியல்வாதி என பெயரெடுத்துள்ள இவர் தனது எம்.பி.பதவியால் பல திட்டங்களை தொகுதிக்கு கொண்டு வந்து சேர்த்தவர். தனக்குரிய கட்சியின் மேலிடச் செல்வாக்கால் கட்டாயம் தொகுதியில் களம் இறங்குவது உறுதி என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார்.டாக்டர் முத்துராஜாஅதேபோல் அதிமுகவில் எம்எல்ஏ-வாவாக இருந்து சமீபத்தில் திமுகவில் ஐக்கியமான மன்னர் வம்சத்தின் கார்த்திக் தொண்டைமானும் சீட் கிடைக்கும் எனக் காத்திருக்கிறார்.புதுக்கோட்டை வடக்கு மாவட்டச் செயலாளர் கே.கே.செல்லப்பாண்டியன் எப்படியும் இந்த முறை தேர்தலில் குதிக்காமல் விடுவதில்லை என்று கங்கணம் கட்டிக் கொண்டு சீட் வாங்கும் முயற்சியில் இருக்கிறார். அதேபோல் வடக்கு மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளரும் பாரம்பரிய திமுக குடும்பத்து உறுப்பினருமான டாக்டர் மு.க.முத்துக்கருப்பனும் முன்னணி ரேஸில் இருக்கிறார். முன்னாள் எம்எல்ஏவும், முன்னாள் மாவட்டச் செயலாளருமான பெரியண்ணன் அரசும், அவருடைய மூத்த மகள் மருத்துவர் அபிநயா அரசும் விருப்ப மனு தாக்கல் செய்து தொகுதிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளனர். புதுக்கோட்டை பெரியண்ணன் குடும்பம் என்ற முத்திரை மேலிடத்திடமிருந்து சீட்டைப் பெற்றுத் தரும் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.இப்படி விருப்ப மனுக் களத்தில் முக்கியமானவர்களில் அறிவாலாயம் யாரை டிக் அடிக்கப் போகிறது என்பதுதான் தெரியவில்லை.இவர்கள் தவிர, மாநகராட்சித் தலைவியான மேயர் திலகவதி செந்திலும், அவருடைய மகனும் அமைச்சர் கே.என்.நேருவின் ஆசீர்வாதத்தோடு ரேஸில் குதித்துள்ளனர். அதிமுகவில், எம்.பி. தேர்தலில் தோற்றாலும் சோர்ந்து போகாமல், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் ஆதரவோடு ப.கருப்பையா சீட்டுக்கு மல்லுக்கட்டுகிறார். இவர்களுடன் பெரிய அளவில் அறிமுகம் இல்லாத எம்.ஜி.ஆர்.மன்ற வடக்கு மாவட்டச் செயலாளர் தொழிலதிபர் பழனிவேல், முன்னாள் எம்.எல்.ஏ. நெடுஞ்செழியன் ஆகியோருடன் இன்னும் சில இஸ்லாமியப் பிரமுகர்களும் 'இரட்டை இலை'க்காக தவம் கிடக்கிறார்கள் இறுதிப்பட்டியலில் யார் இடம் பெறப்போகிறார்கள் என்பது விரைவில் தெரிந்துவிடும்.ஒருவேளை கூட்டணியில் தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்கினால் அக்கட்சியின் மேற்கு மாவட்டத்தலைவர் என்.ராமச்சந்திரன் முன்னாள் அமைச்சரின் ஆசியுடன் எளிதில் கைப்பற்ற ஆயத்த நிலையில் இருந்து வருகிறார்.த.வெ.க மாவட்டச் செயலாளர் பர்வேஸ், "எனக்கு சீட் கன்பார்ம்" என விசில் அடித்து வேலையைத் தொடங்கிவிட, நாம் தமிழர் கட்சியோ அதிரடியாகப் பொறியாளர் எழிலரசியை வேட்பாளராகவே அறிவித்து 'ஆல் தி பெஸ்ட்' சொல்லிவிட்டது. புதுக்கோட்டை தொகுதியில் தவெக பர்வேஸ் போட்டியிட்டால் கணிசமான வாக்குகளைப் பிரிக்க நிறைய வாய்ப்பிருக்கிறது.புதுக்கோட்டையைப் பொறுத்தவரை சிட்டிங் எம்.எல்.ஏ முத்துராஜா மீது பெரிய அதிருப்தி இல்லை என்பது தி.மு.க-வுக்குப் பெரிய நிம்மதி. ஆனால், நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளும், ஆளுங்கட்சிக்கு எதிரான பொதுவான அதிருப்தியும் ஆங்காங்கே எட்டிப் பார்க்கின்றன.தற்போதைய நிலவரப்படி கூட்டணி பலம், மகளிர் உரிமைத் தொகை, சிட்டிங் எம்எல்ஏவின் திருப்தியான செயல்பாடுகள் தி.மு.க-வை முன்னிலையில் வைத்திருக்கிறது. ஆனால், அ.தி.மு.க-வின் வைட்டமின் பலம் மற்றும் த.வெ.க, நா.த.க. பிரிக்கும் இளசுகளின் ஓட்டுகள் கடைசி நேரத்தில் 'ட்விஸ்ட்' வைக்கலாம்.'சமஸ்தானம்' யார் கையில்? பொறுத்திருந்து பார்ப்போம்..! வெற்றிமாலை யாருக்கு?2. விராலிமலை தொகுதிதமிழகமே எதிர்நோக்கும் ஸ்டார் சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று விராலிமலை. காரணம் இத்தொகுதியின் கதாநாயகன் முன்னாள் அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர். 2011, 2016, 2021 என மூன்று முறை ஹாட்ரிக் வெற்றி கண்டவர்.திமுக தரப்பில் 2011 இல் தற்போதைய இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி இதே தொகுதியில் போட்டியிட்டு விஜயபாஸ்கரிடம் 39 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி கண்டார். அடுத்து 2016 மற்றும் 2021 ஆகிய இரு தேர்தல்களிலும் தன்னை எதிர்த்து நின்ற திமுகவின் தென்னலூர் மா.பழனியப்பனை வெற்றி கண்டவர். டாக்டர் விஜயபாஸ்கரின் அணுகுமுறை, தொகுதிக்குள் இடைவிடாத பயணம், தொகுதி மக்களின் அனைத்து நிகழ்வுகளிலும் தவறாமல் பங்கேற்பது, வீட்டுக்கு வீடு அன்பளிப்புச் சீர்களை அள்ளிக் கொடுப்பது, ஏராளமான அரசுத் திட்டங்களை புதுக்கோட்டைக்கும், விராலிமலைக்கும் கொண்டு வந்து சேர்த்தது இப்படி செய்த சாதனைகள் அனைத்தும் டாக்டர் சி.விஜயபாஸ்கருக்கு விராலிமலையை விசுவாச மலையாக மாற்றியிருக்கிறது.விஜயபாஸ்கர் செல்வாக்கு பெற்ற வேட்பாளர் என அறியப்படும் முன்னாள் அமைச்சரை எதிர்த்துக் களம் காண இந்த முறை வெயிட்டான ஆளை இறக்க திமுக தலைமை தீவிரமாக ஆலோசித்து வருகிறது. டாக்டருக்கு டஃப் பைட் கொடுக்க திமுகவின் வடக்கு மாவட்டம் செல்லப்பாண்டியனோ அல்லது கார்த்திக் தொண்டைமானோ இங்கு இறக்குமதி செய்யப்படலாம் எனத் தெரிகிறது.மீண்டும் தென்னலூர் பழனியப்பனும் களமிறங்கத் திட்டமிட்டுள்ளார். மற்றும் சில திமுக புள்ளிகளும் சீட்டுக்காக அறிவாலயப் படையெடுப்பைத் தொடங்கி இருக்கிறார்கள். எப்படியும் டாக்டர் விஜயபாஸ்கரின் வெற்றிவாய்ப்பை இந்த முறை தடுத்து நிறுத்த பல வழிகளிலும் பிரசாரத் திட்டம் வகுத்து வருகிறதாம் திமுக தலைமை.தவெகவும், நாதகவும் ஓரளவு வாக்குகள் பெறும் நிலையில் உள்ளன. எப்படி இருந்தாலும் தற்போதைய நிலவரப்படி வெற்றிக் காற்று அதிமுகவின் பக்கமே வீசுகிறது.! கோட்டை மீண்டும் திமுக வசமாகுமா?3. திருமயம் தொகுதிபுதுக்கோட்டை மாவட்டத்தின் இன்னொரு நட்சத்திரத் தொகுதி திருமயம். பழமையான குடவரைக்கோவிலைக் கொண்ட, தீரர் சத்தியமூர்த்தியை தந்த இத்தொகுதியில் முக்குலத்தோர், முத்தரையர், தேவேந்திர குல வேளாளர், ஆதிதிராவிடர், கோனார், உடையார், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் என பல சமூக மக்களும் வசித்து வருகின்றனர். திமுகவில் சீட் கேட்டு முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்த இளைஞரணியைச் சேர்ந்த விராச்சிலை வக்கீல் கைலாசம், பொன்னமராவதி ஒன்றியச் செயலாளர் அடைக்கலம் மணி ஆகியோர் முட்டிமோதினாலும் மீண்டும் அமைச்சர் ரகுபதிதான் இங்கு வேட்பாளர் என்பது கிட்டத்தட்ட முடிவாகி விட்டது. இதனால் தனது மகன் டாக்டர் அண்ணாமலையை அழைத்துக் கொண்டு தனது பரிவாரங்களுடன் ஒவ்வொரு ஊராக களமிறங்கி நலத்திட்டப்பணிகளையும் அன்பளிப்புகளையும் அள்ளி வழங்கி வருகிறார். அமைச்சர் ரகுபதி கடந்த 2021 தேர்தலில் போட்டியிட்டு 15 ஆயிரம் வாக்குகள் பெற்ற கே.கே.செல்வக்குமாரின் தமிழர் தேசம் கட்சி தற்போது திமுக கூட்டணியில் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.அதிமுக தரப்பில் கடந்த 2 தேர்தல்களிலும் மிகக் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் (2016- 766, 2021 -1382) தோல்வியை தழுவிய வைரமுத்து இந்த முறை வெற்றிக்கனியைப் பறிக்காமல் விடுவதில்லை என்ற வைராக்கியத்துடன் களமாடி வருகிறார்.கடந்த முறை அமமுக தனியாகப் போட்டியிட்டு கணிசமான வாக்குகள் பெற்றது. அவ்வாறு பெற்ற வாக்குகள் இந்தமுறை கூட்டணியில் இருப்பதால் அதிமுகவுக்கு கிடைப்பது ஒரு பலம். இரண்டுமுறை தோல்வியைத் தழுவியவர் என்ற அனுதாபமும் தொகுதி மக்களிடையே நிறையவே உள்ளது. ஆனால் தொகுதியைக் கைப்பற்றுவதற்குள் கட்சியிலிருந்து சீட்டைக் கைப்பற்றவே படாதபாடு படவேண்டியிருக்கிறது. அரிமளம் ஒன்றியச் செயலாளர் கடையக்குடி திலகர் பெரும்பான்மையாக உள்ள தனது முத்தரையர் சமூகத்தை முன்னிலைப்படுத்தி எப்படியும் அதிமுகவில் சீட்டைக் கைப்பற்றும் பணியில் தீவிரமாக இருக்கிறார்.தவெக சார்பில் சிந்து ராமசாமிதான் வேட்பாளராக இருப்பார் என்பதால் அவரும் சமூக ஊடகங்களில் சளைக்காமல் பதிவுகளுடன் வலம் வந்து கொண்டிருக்கிறார். நாதகவும் லட்சுமி சீனிவாசனை வேட்பாளராக களத்தில் இறக்கிவிட்டுள்ளது.திமுகவும், அதிமுகவும் திருமயத்தில் மீண்டும் கடுமையான போட்டியைச் சந்திப்பார்கள் என்பது சந்தேகமில்லை. அதேபோல் முத்தரையர் சமூகத்தின் முக்கியப்புள்ளிகள் சிலர் சுயேட்சையாக களம் இறங்கவும் திட்டம் உள்ளது. தவெகவும், நாதகவும் குறிப்பிட்ட அளவு வாக்குகள் பெறும் என்பதாலும், இரு முக்கிய கட்சிகளின் இரு தரப்பிலும் கட்சிக்குள்ளேயே உள்ளடி வேலைகளும் தூக்கலாக இருக்கும் என்பதால் திருமயம் தொகுதி யாருக்குச் சாதகம் என்பதை அவ்வளவு எளிதில் சொல்ல முடியாத நிலையில்தான் தற்போதுவரை கடும் போட்டி நிலவும் தொகுதியாகவே உள்ளது. வெற்றிக் கடல் யார் பக்கம்?4. அறந்தாங்கி தொகுதிபுதுக்கோட்டையின் கடற்கரையோர தொகுதி. முக்குலத்தோர் , முத்தரையர், பட்டியலின மக்கள், இஸ்லாமியர்கள், உடையார், கோனார், நாடார் உள்ளிட்ட பல்வேறு சமூகங்கள் வசிக்கும் புதுக்கோட்டை மாவட்டத்தின் 'விஐபி' தொகுதிகளில் ஒன்றான அறந்தாங்கி, எப்போதுமே பரபரப்புக்கு பஞ்சமில்லாத களம்.ஒரு காலத்தில் காங்கிரஸ் கோட்டையாக இருந்து, பின் அதிமுகவின் பிடிக்குள் வந்து, இப்போது 'மிக்ஸட்' மோடில் இருக்கிறது.தற்போது காங்கிரஸ் (திமுக கூட்டணி) வசம் தொகுதி இருந்தாலும், கள நிலவரம் என்னவோ கூட்டணி ஒதுக்கீட்டில் தொகுதி திமுகவுக்கா? காங்கிரஸூக்கா? என்பதில்தான் பெரும் அனல் பறக்கிறது.தற்போதைய காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி. ராமச்சந்திரன், ஒரு காலத்தில் தொகுதியின் செல்லப்பிள்ளையாக வலம் வந்த எஸ்.திருநாவுக்கரசரின் வாரிசு என்ற கூடுதல் அறிமுகமும், அமைதியாவனர் என்ற பெயரும் இருந்தாலும் தொகுதியில் பெரிய அளவிலான உட்கட்டமைப்பு மாற்றங்களைக் கொண்டு வரவில்லை என்கிற ஆதங்கம் ஒரு தரப்பு மக்களிடம் இருக்கிறது.இதனை காரணம் காட்டி தொகுதியை காங்கிரஸிடமிருந்து மீட்க தொகுதியின் திமுக உடன்பிறப்புகள் கடும் போட்டி கொடுத்து வருகின்றனர். முன்னாள் எம்.எல்.ஏ.உதயம் சண்முகம், அதிமுகவிலிருந்து திமுகவில் ஐக்கியமான மணமேல்குடி பரணி கார்த்திகேயன், ஒன்றியச் செயலாளர் சக்தி ராமசாமி ஆகியோர் சீட்டுக்கான தீவிர முயற்சியில் இருந்து வருகின்றனர்.தொகுதி பங்கீட்டில் மீண்டும் தன் மகனுக்கே தக்க வைப்பதில் திருநாவுக்கரசர் காங்கிரஸ் மற்றும் திமுக மேலிடத்துக்கான வலுவான கோரிக்கைகளுடன் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். தொகுதியில் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க அதிமுக இங்கே தீவிரமாக வேலை செய்கிறது.அதிமுகவில் சீட்டை கைப்பற்றுவதில் எக்ஸ் எம்எல்ஏ ராஜநாயகம், ஒன்றியச் செயலாளர் பெரியசாமி ஆகியோர் கடும் போட்டி போடுகின்றனர். பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டால் அக்கட்சியின் மாநில மகளிரணித் தலைவர் கவிதா ஸ்ரீகாந்த் சீட்டைக் கைப்பற்றுவதில் குறியாக உள்ளார்.நாதக முத்துலெட்சுமி தவெக தரப்பில் பிரபு, ஆண்ட்ரூஸ் பாண்டியன் ஆகியோர் சீட்டுக்காக பனையூரை முகாமிட்டுள்ளனர். நாதக தரப்பில் முத்துலெட்சுமி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்தமுறை அதிமுக கூட்டணியில் அமமுக இடம் பெற்றுள்ளதும், திமுக கூட்டணியில் தமிழர் தேசம் பங்கு பெற்றுள்ளதும் ஓபிஎஸ் திமுகவில் ஐக்கியமாகி இருப்பதும் இளைஞர்களின் வாக்குகளை தவெகவும், நாம் தமிழர் கட்சியும் அறுவடை செய்ய இருப்பதும் தேர்தலில் பல அதிரடி திருப்பங்களை ஏற்படுத்தலாம். அறந்தாங்கியைப் பொறுத்தவரை வேட்பாளர் தேர்வுதான் வெற்றியைத் தீர்மானிக்கும்! மீண்டும் பறக்குமா செங்கொடி?5. கந்தர்வகோட்டை தொகுதிபுதுக்கோட்டையின் 'தனி'த் தொகுதியான கந்தர்வகோட்டை, எப்போதும் கம்யூனிஸ்ட் மற்றும் திராவிடக் கட்சிகளின் பலப்பரீட்சை களமாகவே இருந்து வருகிறது. இந்த முறை வழக்கமான கூட்டணிக் கணக்குகளையும் தாண்டி, புதுப்புது முகங்களின் வருகை களத்தை 'திக் திக்' ரகமாக மாற்ற இருக்கிறது.தற்போது சிபிஎம் வசம் இருக்கும் இந்தத் தொகுதியில், மீண்டும் மா. சின்னத்துரை களம் இறங்கத் தயாராகி வருகிறார். "மக்களோடு மக்களாக நிற்பவர்" என்ற பெயர் அவருக்கு பிளஸ். ஆனால், இந்த முறை திமுக நேரடியாக இங்கே கைவைக்க நினைக்கிறது.திமுக ரேஸில் இலக்கிய அணியின் ராசு கவிதைப்பித்தன், கட்சிப் பணிகளில் வேகம் காட்டும் கீரை தமிழ் ராஜா ஆகியோர் முட்டி மோதுகின்றனர். "கூட்டணிக்கு ஒதுக்கியது போதும், இந்த முறை உதயசூரியன் சின்னம் வேண்டும்" என்பதே உள்ளூர் உடன்பிறப்புகளின் கோஷமாக இருக்கிறது. ஆனாலும் செங்கொடி தோழர்கள் கூட்டணியில் கந்தர்வகோட்டையை அத்தனை எளிதில் இழந்துவிடமாட்டார்கள் .மறுபக்கம், இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க அதிமுகவில் கடும் போட்டி நிலவுகிறது. தொகுதியின் பழைய முகமாக இருந்தாலும், தொகுதிக்குள் மீண்டும் தன் செல்வாக்கை தக்கவைக்கப் பார்க்கிறார் நார்த்தாமலை ஆறுமுகம். கடந்த முறை போட்டியிட்டு தோல்வியடைந்த ஜெயபாரதி, புதுமுகம் புவனா பாண்டியன் ஆகிய இரு பெண் வேட்பாளர்களின் பெயர்களும் பலமாக அடிபடுகின்றன. பெண் வாக்காளர்களைக் கவர இவர்களில் ஒருவருக்கு 'சீட்' கிடைக்க அதிக வாய்ப்புள்ளதாகப் பேச்சு அடிபடுகிறது.ராஜ்மோகன் விஜய் கட்சியின் என்ட்ரி இங்கே இளைஞர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜ்மோகன், இந்திரகுமார், சரத்குமார் ஆகிய மூவரும் தளபதியின் ஆசிக்குக் காத்திருக்கிறார்கள். குறிப்பாக, புது முகங்கள் என்பதால் வாக்காளர்களிடம் ஒரு 'கியூரியாசிட்டி' இருக்கிறது.கடந்த தேர்தல்களில் கணிசமான வாக்குகளைப் பெற்ற நாதக, நதியாவை களத்தில் இறக்கி இருக்கிறது.தேசியக் கட்சியான பாஜகவின் பலத்தைக் காட்ட புரட்சிக் கவிதாசன், உதயகுமார், சாந்தார் என ஒரு பட்டாளமே சீட்டுக்காக முட்டி மோதுகிறது. கந்தர்வகோட்டையைப் பொறுத்தவரை பெரும்பான்மையாக உள்ள ஆத்திராவிடர், முக்குலத்தோர், உடையார், கோனார் மற்றும் பட்டியலின மக்களின் வாக்குகள் தான் வெற்றியைத் தீர்மானிக்கும் 'மாஸ்டர் கீ'. கூட்டணிக் குழப்பங்கள் ஒருபுறம் இருந்தாலும், 'புது ரத்தம்' பாய்ச்சும் தவெக மற்றும் நாதக வேட்பாளர்கள் இந்த முறை பெரிய கட்சிகளின் கணக்குகளைத் தலைகீழாக மாற்றினாலும் ஆச்சரியமில்லை!" அனல் பறக்கும் 'ஆடுபுலி' ஆட்டம்!6. ஆலங்குடி தொகுதிஆலங்குடி என்றாலே அது 'அரசியல் மல்லுக்கட்டு'க்குப் பெயர் போன ஊர். முத்தரையர் சமூக வாக்குகள் மெஜாரிட்டியாக இருக்கும் இந்த மண்ணில், இந்த முறை களம் வழக்கமான நேர்கோட்டில் இல்லை. ஜிக்-ஜாக் பாதையில் பயணிக்கிறது.அமைச்சர் மெய்யநாதன் தொகுதியில் பம்பரமாகச் சுழல்கிறார். தொகுதி மக்களின் அனைத்து இல்ல நிகழ்வுகளிலும் தவறாமல் ஆஜராகிவிடுவார் " என்கிற முத்திரை அவருக்குப் பெரிய பலம். 2016-ல் சுமார் 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயித்தவர், 2021-ல் அந்த இடைவெளியை 25 ஆயிரமாக உயர்த்தினார். இந்த முறை 'ஹாட்ரிக்' அடித்துத் தன் பலத்தை நிரூபிக்க நினைக்கிறார். கடந்த தேர்தலில் அளிக்கப்பட்ட பல வாக்குறுதிகளை அமைச்சர் இன்னும் நிறைவேற்றவில்லையே என்ற முணுமுணுப்பை அவர் சரிகட்டியாக வேண்டும்.மெய்யநாதன் அதிமுகவின் தர்ம தங்கவேல், கடந்த முறை தோல்வியடைந்தாலும் துவண்டுவிடாமல் இந்த முறையும் மீண்டும் களம் இறங்க காத்திருக்கிறார்.நாதகவின் வேட்பாளர் பொறியாளர் ராஜாராம் கிராமம் கிராமமாகத் திண்ணைப் பிரசாரம் செய்கிறார். "மாற்று அரசியலை" எதிர்பார்க்கும் ஒரு கணிசமான வாக்கு வங்கி நாதகவுக்கு இங்கே உண்டு. இது எந்தக் கட்சியின் வாக்கு வங்கியை பதம் பார்க்கும் என்பது தெரியவில்லை.தவெக வில் சிவநேசன், ஆதி அரங்குளவன், சூர்யா ஆகியோர் சீட்டை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இளைஞர்கள் மத்தியில் தவெகவுக்கு ஆர்வம் தெரிகிறது. இவர்கள் பிரிக்கும் வாக்குகள், வெற்றியாளரின் மார்ஜினைத் தீர்மானிக்கும் 'டிசைடிங் ஃபேக்டர்'.தொகுதியில் திமுகவுக்குச் சாதகமான காற்று வீசினாலும், அது சூறாவளியாக மாறாமல் தடுப்பது தவெக-வின் என்ட்ரிதான். அதிமுகவின் கோட்டைக்குள் தவெகவும் நாதகவும் புகுந்து வாக்குகளைக் குடைந்தால், அது மறைமுகமாக மெய்யநாதனுக்கு 'லக்' ஆக மாற வாய்ப்புண்டு. ஆகையால் தற்போதைய நிலையில் திமுகவின் அமைச்சர் மெய்யநாதன் முன்னிலை வகிக்கிறார்.புதுக்கோட்டை சமஸ்தானத்து அரசியல் ஆட்டம் இப்போது 'ஆடுபுலி' ஆட்டமாக மாறியிருக்கிறது!விராலிமலையில் அதிமுகவும், ஆலங்குடியில் திமுகவும் 'தனிநபர் செல்வாக்கு' கோட்டை கட்டினாலும், புதுக்கோட்டையிலும் திருமயத்திலும் திமுகவின் 'அதிகார பலம்' அணை கட்டுகிறது. ஆனால், அறந்தாங்கியிலும் கந்தர்வக்கோட்டையிலும் கூட்டணிக்குள் நடக்கும் உள்நாட்டுப் போர்தான் சமஸ்தானத்தின் தலைவிதியைத் தீர்மானிக்கப் போகிறது.திமுகவின் ஆட்சித் திறன் ஒருபுறம், அதிமுகவின் மீட்டெடுப்பு வேகம் மறுபுறம் இருந்தாலும், தவெக - நாதக எனும் இளம் சிங்கங்களின் பாய்ச்சலில் யாருடைய கோட்டை சரியப்போகிறது என்பதுதான் நிஜமான ட்விஸ்ட். சுருக்கமாகச் சொன்னால், பெரிய தலைகள் முட்டி மோதிக்கொள்ள, புது ரத்தம் பாய்ச்சும் இளைய சமுதாயத்தின் வாக்குகள் யாருக்குச் சாதகமோ....அவர்களுக்கே புதுக்கோட்டை சிம்மாசனமிடும்..!

vikatan
19 மார்.
3 நிமிடம் படிக்க

அதிகம் படிக்கப்பட்டது

எங்கள் வாசகர்கள் பேசும் பிரபலமான கதைகள்