தமிழ் டைம்ஸ் logo
நாமக்கல்: பட்டியல் மற்றும் பிற சாதி குழந்தைகளுக்கு அருகருகே தனித்தனி அங்கன்வாடி மையங்களா?
பொதுவான

நாமக்கல்: பட்டியல் மற்றும் பிற சாதி குழந்தைகளுக்கு அருகருகே தனித்தனி அங்கன்வாடி மையங்களா?

நாமக்கல் அருகே பட்டியல் மற்றும் பிற சாதி குழந்தைகளுக்கென அருகருகே தனித்தனி அங்கன்வாடி மையங்கள் செயல்படுவதாக சர்ச்சை எழுந்துள்ளது. 'பிரச்னைகளைப் பேசுவோம்' என்ற புதிய முயற்சியில் பிபிசி தமிழுக்கு கிடைத்த தகவலின் பேரில் அங்கே எங்களது குழு கள ஆய்வு செய்தது.

bbci
30 மார்., 05:30 AM
இரான் போருக்கு மத்தியில் பாலத்தீன கிராமங்களை இஸ்ரேலிய குடியேறிகள் தாக்கியது ஏன்?
பொதுவான

இரான் போருக்கு மத்தியில் பாலத்தீன கிராமங்களை இஸ்ரேலிய குடியேறிகள் தாக்கியது ஏன்?

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள பாலத்தீனக் கிராமங்கள் மீது தீவிரவாத யூதக் குடியேறிகள் தொடர் தாக்குதல்களை நடத்தி, வீடுகள், வாகனங்கள் மற்றும் விவசாய வயல்களுக்குத் தீ வைத்துள்ளனர்.

bbci
30 மார்., 05:30 AM
தினசரி காலையில் வெந்நீர் குடிப்பது உடல் நலனுக்கு உகந்தது என்பது உண்மையா?
சுகாதாரம்

தினசரி காலையில் வெந்நீர் குடிப்பது உடல் நலனுக்கு உகந்தது என்பது உண்மையா?

வெதுவெதுப்பான அல்லது சூடான நீரை அருந்துவது உடல் நலனுக்கு நல்லது என்று ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நம்பப்படுகிறது. இது பாரம்பரிய சீன மருத்துவம், ஆயுர்வேதம் போன்ற பாரம்பரிய மருத்துவ முறைகளின் ஒரு பகுதியாக உள்ளது. அது பற்றி அறிவியல் கூறுவது என்ன?

bbci
30 மார்., 05:30 AM
இரானுடன் ஒப்பந்தம் செய்வது பற்றி டிரம்ப் கூறியது என்ன?
விளையாட்டு

இரானுடன் ஒப்பந்தம் செய்வது பற்றி டிரம்ப் கூறியது என்ன?

தமிழ்நாடு, இந்தியா, இலங்கை, உலகம் மற்றும் விளையாட்டு தொடர்பான சமீபத்திய நிகழ்வுகள் பற்றிய தகவல்களை இந்த பக்கத்தில் பார்க்கலாம்.

bbci
30 மார்., 05:30 AM
Share Market: 'இவர்கள்' எல்லாம் இப்போது பங்குகளை விற்கலாம்!
உலகம்

Share Market: 'இவர்கள்' எல்லாம் இப்போது பங்குகளை விற்கலாம்!

"ஈரானுக்கும், எங்களுக்குப் பேச்சுவார்த்தை நடக்கிறது. கடந்த இரண்டு நாள்களாக நன்றாக சென்று கொண்டிருக்கிறது. அதனால், இன்னும் ஐந்து நாள்களுக்கு ஈரான் எரிசக்தி கட்டமைப்புகள் மீது ராணுவ தாக்குதல் கூடாது என்று ஆணையிட்டிருக்கிறேன்" என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியிருக்கிறார். இதனால், அமெரிக்கா, ஆசிய சந்தைகள் பாசிட்டிவாகவே உள்ளது. இந்திய சந்தையிலும் ஏற்றத்தை எதிர்பார்க்கலாம். இந்த நேரத்தில், முதலீட்டாளர்கள் பங்குகளை விற்க வேண்டும் என்று கூறுகிறார் பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ். அது ஏன் என்று பார்க்கலாம்.பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்ஏப்ரல் 1 முதல் புதிய வருமான வரிச் சட்டம் அமல் : என்னென்ன மாற்றங்கள் இடம்பெறுகின்றன? A டு Z பட்டியல்!"போர் தொடங்கியதில் இருந்து சந்தைகள் ஏற்ற, இறக்கத்தில் தான் உள்ளன. 'Sell on Rise' என்பது சந்தையின் இப்போதைய ஸ்ட்ரேட்டஜி. போரினால் சந்தை இறங்கியிருந்த போது, பங்குகளை வாங்கியவர்கள், இப்போது சந்தை ஏற்றம் காணும்போது அதை விற்கலாம். இந்த நேரத்தில் 'பிராஃபிட் புக்கிங்' செய்வது தான் சரியான அணுகுமுறை. இது ஒரு டிரேடிங் ஸ்டைல் ஆகும். இந்த ஸ்ட்ரேட்டஜியை சந்தை 22,900 - 23,450-க்குள் இருக்கும் போது பயன்படுத்தலாம். இது அப்போது தான் வர்க் அவுட் ஆகும். மீண்டும் வாங்க வேண்டுமென்றால் 22,000 - 22,300 வரும் போது வாங்க வேண்டும். அதன் பின் மேலே சொன்ன ரேஞ்ச் வரும்போது, விற்க வேண்டும். இந்த ரிப்பீட்டு தான் Sell on Rise ஸ்ட்ரேட்டஜி". Data in this section is not a buy/sell recommendation but only a compilation of information on various technical/volume-based parametersAnalyst certifies that all of the views, if any, expressed in this report reflect his personal views about the subject company or companies and its or their securities, and no part of his compensation was, is or will be, directly or indirectly related to specific recommendations or views expressed in this report. Analyst affirms that there exists no conflict of interest that can bias his views in this report. The Analyst does not hold any share(s) in the company/ies discussed.INVESTMENT IN SECURITIES MARKET ARE SUBJECT TO MARKET RISKS. READ ALL THE RELATED DOCUMENTS CAREFULLY BEFORE INVESTING. Registration granted by SEBI and certification from NISM in no way guarantee the performance of the intermediary or provide any assurance of returns to investors. For a detailed disclaimer and disclosure please visit https://www.vikatan.com/business/share-market/113898-disclaimer-disclosures. Before making an investment/trading decision on the basis of this data you need to consider, with the assistance of a qualified adviser, whether the investment/trading is appropriate in light of your particular investment/trading needs, objectives and financial circumstances.One year Price history of the daily closing price of the securities covered in this section is available at https://www.nseindia.com/report-detail/eq_security (Choose the respective symbol) /name of company/time duration)

vikatan
30 மார்., 05:30 AM
ஹார்முஸ் டோல்கேட்: அமெரிக்காவின் ஆயுதத்தைக் கையில் எடுக்கும் ஈரான்? - உலகப் பொருளாதாரம் என்ன ஆகும்?
உலகம்

ஹார்முஸ் டோல்கேட்: அமெரிக்காவின் ஆயுதத்தைக் கையில் எடுக்கும் ஈரான்? - உலகப் பொருளாதாரம் என்ன ஆகும்?

ஹார்முஸ்பழங்காலம் முதலே பட்டு, முத்து மற்றும் வாசனை திரவியங்களின் வர்த்தக மையமாக விளங்கும் ஹார்முஸ் நீரிணை, இன்று உலகப் பொருளாதாரத்தின் 'கழுத்துப்பகுதி' என அழைக்கப்படுகிறது. ஈரானுக்கும் ஓமனுக்கும் இடையே அமைந்துள்ள இந்தச் சிறிய கடல் பகுதி, பாரசீக வளைகுடாவையும் அரபிக்கடலையும் இணைக்கும் ஒரே வழியாகும்.உலகின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் விநியோகத்தில் 20% மற்றும் எல்.என்.ஜி எரிவாயுவில் 25% இந்தப் பாதை வழியாகவே நடைபெறுகிறது. நாளொன்றுக்கு சுமார் 2 கோடி பேரல்கள் கச்சா எண்ணெய் இதன் வழியே கடக்கின்றன. குறிப்பாக இந்தியா, சீனா, ஜப்பான் மற்றும் தென் கொரியா போன்ற ஆசிய நாடுகளின் எரிசக்தி தேவையைப் பூர்த்தி செய்வதில் இந்த நீரிணை முதன்மையானது. எண்ணெய் தவிர உணவு, ரசாயனம் மற்றும் மின்னணு பொருட்களின் வர்த்தகத்திற்கும் இதுவே பிரதான வழி.ஹோர்மூஸ் நீரிணை வரைபடம்ஈரானும் - அமெரிக்காவும்ஹார்முஸ் நீரிணை முழுமையாக ஈரானுக்குச் சொந்தமானதல்ல. ஹார்முஸ் நீரிணையின் தெற்குப் பகுதி ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இருப்பினும், இப்பகுதியில் ஈரான் தனது ராணுவ பலத்தை பேரளவில் வளர்த்துள்ளது. நவீன ஏவுகணைகள், ட்ரோன்கள் போன்ற ஆயிரக்கணக்கான கண்ணிவெடிகளை ஈரான் இங்கு நிலைநிறுத்தியுள்ளது. 1980-களின் ஈரான்-ஈராக் போர் முதல், சமீபத்திய பிரிட்டிஷ் மற்றும் கிரீஸ் நாட்டு கப்பல்கள் சிறைபிடிப்பு வரை, தனது அரசியல் எதிர்ப்பைக் காட்ட இப்பாதையை ஈரான் ஆயுதமாகப் பயன்படுத்தி வருகிறது.இந்த நிலையில்தான் ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் கூட்டுத் தாக்குதல் நடத்தின. ஈரானை கட்டுக்குள் கொண்டுவந்துவிட வேண்டும் என்ற நோக்கில் இஸ்ரேலும் அமெரிக்காவும் கடுமையான தாக்குதல்களை நடத்திவருகின்றன. குறிப்பாக ஈரானின் கச்சா எண்ணெய் உற்பத்தி நிலையம் உள்ளிட்ட பல்வேறு பொருளாதாரத் தளங்கள் மீது அமெரிக்கா குறிவைத்துத் தாக்குதல் நடத்தியிருக்கிறது. இதனால் ஈரானுக்கு பேரிழப்பு ஏற்பட்டிருப்பதாக இஸ்ரேலும் அமெரிக்காவும் ஒன்றாகத் தெரிவித்தன.இஸ்ரேல் - காசா போர் நிறுத்தம்?அமெரிக்காவின் நிபந்தனை!இந்தப் போரை நிறுத்த...இதற்கிடையில், உலகப் பொருளாதாரத்தை ஸ்தம்பிக்க வைக்கும் நடவடிக்கையை ஈரான் கையில் எடுத்தது. அதுதான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடும் முடிவு. இதனால் உலக நாடுகள் கச்சா எண்ணெய், எரிவாயு பற்றாக்குறை போன்ற அத்தியாவசியப் பொருள்களுக்கு பெரும் சிரமத்தை எதிர்கொள்கின்றன. அதனால், ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்கா தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக 'இந்தப் போரை நிறுத்த வேண்டுமென்றால் என்னென்ன செய்ய வேண்டும்...' என ஈரானுக்கு 15 நிபந்தனைகள் அடங்கிய பட்டியலை அனுப்பியிருக்கிறது.அதில் 'ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரிக்கும் எண்ணத்தை கைவிடுவதில் தொடங்கி, ஹார்முஸ் நீரிணையை சுதந்திரமான கடல்வழிப் பாதையாக செயல்பட வைப்பதற்காக அதை மீண்டும் திறக்க வேண்டும். அமெரிக்கா - ஈரான் இருவரும் சேர்ந்து அதனைக் கட்டுப்படுத்தலாம்' என்பதுவரை அந்தப் பட்டியல் நீள்கிறது.ஆனால் ஈரான், "போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக தற்போது அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை; அவ்வாறு செய்யும் நோக்கமும் இல்லை" என ஹார்முஸ் கட்டுப்பாட்டுக்கான கடிவாளத்தை தன்னிடமே வைத்திருக்கிறது.ஈரான் போர்: கச்சா எண்ணெய்ஹார்முஸ் சுங்கச்சாவடி!இதற்கிடையில்தான் 'லாய்ட்ஸ்லிஸ்ட்' (Lloyds List) கப்பல் போக்குவரத்து இணையதளம் வெளியிட்டிருக்கும் செய்தி உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. ஈரானின் புரட்சிகர காவல் படை ஹார்முஸ் ஜலசந்தியில் புதிதாக 'சுங்கச்சாவடி' (Toll Booth) முறையை அமல்படுத்தியுள்ளதாக அந்தச் செய்தி தெரிவித்தது.மேலும், அந்தச் செய்தியின் அடிப்படையில், ஈரான் ஏற்கெனவே ஹார்முஸ் ஜலசந்தியில் ஒரு 'நடைமுறை சுங்கச்சாவடி' முறையை நடத்தி வருவதாகத் தெரிகிறது.ஜலசந்தியைக் கடக்கும் கப்பல்கள் அவற்றின் சரக்கு விவரங்கள் (manifests), ஊழியர் விவரங்கள் மற்றும் சேருமிடம் ஆகியவற்றை ஈரானின் புரட்சிகர காவல் படையிடம் சமர்ப்பிக்க வேண்டும். இந்தத் தகவல்கள் ஹார்முஸ்கான் மாகாணக் கட்டளைப் பிரிவுக்கு அனுப்பப்பட்டு, அங்கு தடைகள் குறித்த சோதனைகள் மற்றும் சரக்குச் சரிபார்ப்புகள் நடத்தப்படுகின்றன.மார்ச் 13 முதல் சுமார் 26 கப்பல்கள் இந்த முறையைப் பின்பற்றிச் சென்றுள்ளன. அதில் சில கப்பல்களிடம் சீனாவின் 'யுவான்' (Yuan) கரன்சியாக கட்டணம் பெறப்பட்டிருக்கிறது. மார்ச் 15-க்குப் பிறகு வழக்கமான பாதையில் பெரும்பாலான கப்பல்களால் பயணிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.ராஜேஷ் சின்ஹாஇந்தியாவின் நிலைபாடு என்ன?இந்தப் புதிய சுங்கச்சாவடி முறை விவாதமான நிலையில், அந்த வழியே பயணத்தை மேற்கொண்ட இந்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம், 'இந்தியாவை நோக்கி வந்துகொண்டிருக்கும் ஜக் வசந்த் மற்றும் பைன் கேஸ் உள்ளிட்ட ஐந்து கப்பல்கள் பாதுகாப்பாக இந்த ஜலசந்தியைக் கடந்துள்ளன. இவை வார இறுதிக்குள் இந்தியத் துறைமுகங்களை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, ஹார்முஸ் நீரிணையில் எந்தச் சுங்கச்சாவடி நடைமுறையும் இல்லை' என மறுத்துள்ளது.இது குறித்துப் பேசிய அமைச்சகத்தின் சிறப்புச் செயலாளர் ராஜேஷ் சின்ஹா, "சர்வதேச விதிகளின்படி ஹார்முஸ் ஜலசந்தி ஒரு சர்வதேச கடல்வழிப் பாதை. இதில் பயணிக்கக் கட்டணம் ஏதும் வசூலிக்க முடியாது. எனவே, இத்தகைய செய்திகள் ஆதாரமற்றவை" என்று தெரிவித்தார்.இதற்கு விளக்கமளிக்கும் வகையில் பேசிய ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி, "இந்தியா உள்ளிட்ட நட்பு நாடுகளின் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகப் பயணிக்க அனுமதி அளித்துள்ளோம்" என்று தெரிவித்தார். மும்பையில் உள்ள ஈரானிய தூதரகம் வெளியிட்டுள்ள பதிவில், 'சீனா, ரஷ்யா, இந்தியா, ஈராக் மற்றும் பாகிஸ்தான் போன்ற நட்பு நாடுகளுக்கு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது' எனக் கூறப்பட்டுள்ளது.மொஜ்தபா கமேனிபுதிய கட்டணத் திட்டம்!ஈரான்போரினால் ஈரானுக்கு ஏற்பட்ட பொருளாதார இழப்புகளை ஈடுகட்டவும், தன் நாட்டை மீட்டெடுக்கவும் இந்த நீர்வழிப் பாதையை ஈரான் ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளதாக சர்வதேச அரசியலை கூர்ந்து கவனித்து வரும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அதன் அடிப்படையில், ஈரான் புரட்சிகர காவல் படைக்கு நெருக்கமான ஃபார்ஸ் (Fars) மற்றும் தஸ்னிம் (Tasnim) செய்தி நிறுவனங்கள், ஈரானிய நாடாளுமன்ற உறுப்பினர் மொஹம்மத்ரெஜா ரெஜாயி கூச்சியை மேற்கோள் காட்டி செய்தி ஒன்றை வெளியிட்டன.அதில், "ஹார்முஸ் ஜலசந்தியின் மீது ஈரானின் இறையாண்மை, கட்டுப்பாடு மற்றும் மேற்பார்வையை அதிகாரப்பூர்வமாக சட்டமாக்கவும், அதன் மூலம் கட்டணம் வசூலித்து வருவாயை உருவாக்கவும் நாடாளுமன்றம் திட்டமிட்டுள்ளது. மற்ற போக்குவரத்து வழித்தடங்கள் வழியாகப் பொருட்கள் செல்லும்போது கட்டணம் செலுத்துவது போலவே, ஹார்முஸ் ஜலசந்தியும் ஒரு வழித்தடம்தான். இந்தப் பகுதியின் பாதுகாப்பை நாங்கள் வழங்குகிறோம், எனவே கப்பல்களும் எண்ணெய் டாங்கர்களும் கட்டணம் செலுத்துவது இயல்பானது" எனக் குறிப்பிட்டிருக்கிறது.அமெரிக்கா - ஈரான்'நியாயமான வசூல்' - ஈரான்!இதன் அடிப்படையில், ஜலசந்தியைக் கடக்கும் ஒவ்வொரு எண்ணெய் டாங்கர் கப்பலுக்கும் சுங்கவரி விதிக்க ஈரான் ஆலோசித்து வருகிறது. இதற்கான சட்ட மசோதாவை ஈரானிய நாடாளுமன்றம் தயாரித்து வருகிறது. "எங்கள் கடல் பகுதியில் பாதுகாப்பு வழங்குவதற்கு ஈடாகக் கட்டணம் வசூலிப்பது நியாயமானது" என்பது ஈரானின் வாதம். மேலும், இந்த நடைமுறை, தன் மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ள நாடுகள் மீது கட்டுப்பாடுகளை விதிக்க ஈரானுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்தும்.எனவே, ஹார்முஸ் நீரிணை மீதான தனது செல்வாக்கை வெறும் தற்காப்பு நடவடிக்கையாக மட்டுமல்லாமல், வருவாய் ஈட்டுவதற்கான ஒரு நீண்டகால புவிசார் அரசியல் கருவியாக நிறுவனமயமாக்கவும் ஈரான் முயல்கிறது.ஒருவேளை சுங்கச்சாவடி அமைந்தால்..?ஹார்முஸ் ஜலசந்தி என்பது உலக நாடுகளின் 'பொருளாதாரக் கழுத்துப்பகுதி' போன்றது. உலகின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் போக்குவரத்தில் சுமார் 20% இந்தப் பாதை வழியாகத்தான் நடக்கிறது. ஒருவேளை ஈரான் இங்கே அதிகாரப்பூர்வமாகச் சுங்கச்சாவடி அமைத்துக் கட்டணம் வசூலிக்கத் தொடங்கினால், அது உலகளவில் பெரும் விளைவுகளை ஏற்படுத்தும்.பெட்ரோல் விலைபொதுமக்களுக்கான சிக்கல்...கப்பல்களுக்குக் கட்டணம் விதிக்கப்பட்டால், அந்தச் செலவு நுகர்வோர் மீது சுமத்தப்படும். இதனால் சர்வதேச சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை அதிரடியாக உயரும். கத்தார் போன்ற நாடுகள் தங்களின் திரவ இயற்கை எரிவாயுவை (LNG) இந்தப் பாதை வழியாகத்தான் ஏற்றுமதி செய்கின்றன. இதனால் சமையல் எரிவாயு மற்றும் மின்சாரக் கட்டணங்கள் உலகெங்கும் அதிகரிக்கக்கூடும்.இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 80%-க்கும் மேல் இறக்குமதி செய்கிறது. இதில் பெரும்பகுதி ஹார்முஸ் வழியாகவே வருகிறது. ஈரானின் இந்த நடவடிக்கையால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மிகக் கடுமையாக உயரும். எரிபொருள் விலை உயர்ந்தால், அத்தியாவசியப் பொருள்களின் போக்குவரத்துச் செலவு அதிகரித்து, காய்கறிகள் முதல் மின்னணு பொருள்கள் வரை அனைத்தின் விலையும் ஏறும். இதனால் விவசாயம் மற்றும் தொழில் உற்பத்தி உலகளவில் மந்தமடையும் அபாயம் உள்ளது.ஹார்முஸ்சட்ட ரீதியான சிக்கல்...சர்வதேசக் கடல் பகுதியில் ஒரு நாடு தன்னிச்சையாகக் கட்டுப்பாடு விதிப்பது, அந்தப் பகுதியை 'ஆபத்தான பகுதி' (War Risk Zone) என அறிவிக்க வழிவகுக்கும். இதனால் கப்பல்களுக்கான காப்பீட்டுக் கட்டணம் பல மடங்கு உயரும்; இது ஒட்டுமொத்த கடல்வழி வர்த்தகத்தையும் செலவுமிக்கதாக மாற்றும்.ஐக்கிய நாடுகளின் கடல்சார் சட்ட ஒப்பந்தத்தின்படி (UNCLOS), சர்வதேச ஜலசந்திகளில் கப்பல்கள் தடையின்றிப் பயணிக்க உரிமை உண்டு (Transit Passage). ஈரான் கட்டணம் வசூலிப்பது இந்தச் சர்வதேசச் சட்டத்திற்கு எதிரானது என்பதால், ஐநா சபை மற்றும் சர்வதேச நீதிமன்றத்தில் பெரிய சட்டப் போராட்டங்கள் வெடிக்கும்.ஆதிக்கச் சிக்கல்...அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் சவுதி அரேபியா போன்ற நாடுகள் ஈரானின் இந்த ஆதிக்கத்தை ஏற்காது. கப்பல்களைப் பாதுகாக்கத் தங்களின் போர்க்கப்பல்களை அந்தப் பகுதிக்கு அனுப்பும். இது ஈரான் மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு இடையே நேரடிப் போர் மூளும் அபாயத்தை உருவாக்கும்.தற்போது சில கப்பல்களிடம் செய்வது போல ஈரான் இந்தக் கட்டணத்தைச் சீனாவின் 'யுவான்' கரன்சியில் வசூலிக்கத் தொடங்கினால், அது சர்வதேச வர்த்தகத்தில் அமெரிக்க டாலரின் ஆதிக்கத்தைச் சற்றே குறைத்து, சீனாவின் கரன்சிக்கு உலகளாவிய முக்கியத்துவத்தைக் கொடுக்கும்.ஈரான் போர்சுருக்கமாக சொல்வதானால், ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் சுங்கச்சாவடி அமைப்பது என்பது வெறும் பண வசூல் மட்டுமல்ல, அது உலகப் பொருளாதாரத்தின் சாவியைத் தன் கையில் எடுப்பதற்குச் சமம். இதனால் உலகப் பொருளாதாரம் வேறொரு பரிமாணத்தை நோக்கி நகரும்.இந்த நிகழ்வுகள் மூலம், உலக நிகழ்வுகளை வடிவமைப்பதில் ராணுவ பலத்தைப் பயன்படுத்துவதைப் போலவே பணத்தையும் பொருளாதார அழுத்தத்தையும் பயன்படுத்துவது அமெரிக்காவின் உக்தி. அதை இப்போது ஈரானும் கையில் எடுத்திருக்கிறது. இது எந்த வகையில் ஈரானுக்கு பயன்படும் என்பதற்கு காலம்தான் பதில் சொல்லும்!ஈரான் போர் நிறுத்தம்: ட்ரம்ப்-ன் 15 அமைதி பரிந்துரைகளுக்கு ஈரான் முன்வைக்கும் '5' நிபந்தனைகள் என்ன?

vikatan
30 மார்., 05:30 AM
இன்னும் மூன்று நாள்களில் பெட்ரோல் ஏற்றுமதிக்கு தடை விதிக்க ரஷ்யா 'அதிரடி' முடிவு? காரணம் என்ன?
உலகம்

இன்னும் மூன்று நாள்களில் பெட்ரோல் ஏற்றுமதிக்கு தடை விதிக்க ரஷ்யா 'அதிரடி' முடிவு? காரணம் என்ன?

ஈரான் போர்... ஹார்முஸ் ஜலசந்தி மூடல் போன்ற சூழலில், இந்தியா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியை நம்பித் தான் இருக்கின்றன.ஆனால், ரஷ்யா இப்போது அதிர்ச்சி முடிவு ஒன்றை எடுத்துள்ளது.அதாவது வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் ரஷ்யாவில் இருந்து பெட்ரோல் ஏற்றுமதி செய்யப்படாது என்று முடிவு செய்யப்பட உள்ளது.ரஷ்யாவின் துணை பிரதமர் அலெக்சாண்டர் நோவாக் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளார். அலெக்சாண்டர் நோவாக் போரை சீக்கிரம் முடிக்க நினைத்த நெதன்யாகு; 'மாஸ்டர் பிளானை' தகர்த்த ஈரான் மக்கள்! | Full Detailஇதனையடுத்து ரஷ்ய எரிசக்தி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது..."ரஷ்யாவில் முன்னர் கணிக்கப்பட்ட விலையைத் தாண்டி பெட்ரோல் விலை செல்வதை தடுக்கவும்... ரஷ்யாவின் உள்நாட்டு தேவைக்கு பெட்ரோல் தொடர்ந்து இருக்கவும் வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் பெட்ரோல் ஏற்றுமதி தடை செய்வதற்கான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட உள்ளது" என்று குறிப்பிட்டுள்ளதாவது.ரஷ்ய அதிபர் புதினும் உள்நாட்டில் பெட்ரோல் விலை அதிகமாகக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.ஈரான் போர்‌ குறித்து மோடி - ட்ரம்ப் போன் கால்; லைனில் 'எலான் மஸ்க்'கும்! - சர்ப்ரைஸ் ட்விஸ்ட்?

vikatan
30 மார்., 05:30 AM
'கொளத்தூருக்குள் செல்லவே முடியவில்லை; வில்லிவாக்கத்தில் பிரசாரம் கேன்சல்!' - என்ன சொல்கிறது தவெக?
இந்தியா

'கொளத்தூருக்குள் செல்லவே முடியவில்லை; வில்லிவாக்கத்தில் பிரசாரம் கேன்சல்!' - என்ன சொல்கிறது தவெக?

தவெக தலைவர் விஜய் இன்று சென்னையில் மூன்று இடங்களில் பிரசாரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அதன்படி பெரம்பூர், கொளத்தூரில் பிரசாரம் செய்த விஜய், வில்லிவாக்கத்தில் பிரசாரம் செய்ய முடியாமல் கூட்டத்தை ரத்து செய்திருக்கிறார். என்ன காரணம்?Vijayதவெக தலைவர் விஜய் இன்று காலை பெரம்பூரின் அம்பேத்கர் கல்லூரியில் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். வேட்புமனுவை தாக்கல் செய்துவிட்டு வெளியே வந்த உடனேயே பிரசார வேனில் ஏறிவிட்டார். பிரசாரத்துக்கு திட்டமிடப்பட்டிருந்த முதல் ஸ்பாட்டான பெரம்பூர் விவேகானந்த ரோடை மதியம் 1 மணிக்கு மேல் எட்டினார்.வழிநெடுகும் விஜய்யின் தொண்டர்கள் சூழ்ந்ததால் விஜய்யின் வாகனம் ஊர்ந்து ஊர்ந்தே நகர்ந்தது. பெரம்பூரில் பேசி முடித்துவிட்டு கொளத்தூருக்கு விஜய் சென்றார். பெரம்பூரிலிருந்து கொளத்தூருக்கு விஜய் செல்ல 3 மணி நேரம் ஆனது. கொளத்தூரில் அளவுக்கதிகமான கூட்டம் கூடியதால், அசம்பாவிதங்களை தவிர்க்க விஜய்யை காவல்துறையினர் சீக்கிரம் பேசி முடிக்குமாறு அறிவுறுத்தினர். அதன்படி விஜய்யும் 2 நிமிடங்களில் பேசி முடித்தார்.வில்லிவாக்க கூட்டம்இதேவேளையில் மூன்றாவது ஸ்பாட்டான வில்லிவாக்கத்திலும் விஜய்யின் பிரசாரத்தை பார்க்க எக்கச்சக்கமான பேர் கூடியிருந்தனர். விஜய் கொளத்தூரை எட்டிய சமயத்திலேயே தவெகவின் முக்கிய நிர்வாகயான சி.டி.ஆர்.நிர்மல் குமாகுமார் 'காவல்துறை எங்களின் பிரசாரத்துக்கு முறையான பாதுகாப்பு வழங்கவில்லை' என தேர்தல் ஆணையத்துக்கு புகார் ஒன்றை கொடுத்தார்.இந்நிலையில் கொளத்தூரிலிருந்து விஜய் நேராக வில்லிவாக்கம் வருவார் என எதிர்பார்த்த நிலையில், பிரசாரத்தை ரத்து செய்துவிட்டு வீட்டுக்கு திரும்பியிருக்கிறார். வில்லிவாக்கம் தொகுதியின் மாவட்டச்செயலாளர் பூக்கடை குமார் பேசுகையில், 'தலைவரால் கொளத்தூருக்குள்ளேயே செல்ல முடியவில்லை. காவல்துறை முறையாக பாதுகாப்பு கொடுக்கவில்லை. வில்லிவாக்கத்தில் மாலை 6 மணி வரைதான் பிரசாரம் செய்ய அனுமதி வாங்கியிருக்கிறோம். நெரிசலில் தலைவர் வந்து சேர 8 மணி ஆகும் போல தெரிகிறது. அதனால் பிரசாரத்தை ரத்து செய்கிறோம். இன்னொரு நாள் தலைவர் உங்களை சந்திப்பார்' என்றார்.

vikatan
30 மார்., 05:30 AM
மனோ தங்கராஜ்: `அமைச்சருக்கே சீட் இல்லியா?' - இரவு வரை போராட்டம் - நிர்வாகிகள் சொல்வது என்ன?
இந்தியா

மனோ தங்கராஜ்: `அமைச்சருக்கே சீட் இல்லியா?' - இரவு வரை போராட்டம் - நிர்வாகிகள் சொல்வது என்ன?

கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதியில் சிட்டிங் அமைச்சர் மனோ தங்கராஜிக்கு சீட் மறுக்கப்பட்டதுடன் அந்த தொகுதி சி.பி.எம் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பத்மநாபபுரம் தொகுதி கடந்த 20 ஆண்டுகளாக தி.மு.க வசம் இருந்தது. தொடர்ந்து 10 ஆண்டுகள் எம்.எல்.ஏ-வாக இருந்தார் மனோ தங்கராஜ். 2021 தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் வென்ற ஒரே தி.மு.க எம்.எல்.ஏ-வான மனோ தங்கராஜிக்கு அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டிருந்தது. இந்த முறையும் அவருக்கு போட்டியிட வாய்ப்பு கிடக்கும் என எண்ணியிருந்தார். ஆனால், அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதுடன் தொகுதியும் கூட்டணி கட்சியான சி.பி.எம்-க்கு ஒதுக்கப்பட்டது. இது மனோ தங்கராஜ் ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் நேற்று கன்னியாகுமரி மேற்கு மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளும், மனோதங்கராஜின் ஆதரவாளர்களும் கூடினர். தி.மு.க அலுவலகத்தில் நடந்த நிர்வாகிகள் கூட்டம்பின்னர் அங்கு நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றினர். அதில், மனோ தங்கராஜ் மாவட்டச் செயலாளராகவும், அமைச்சராகவும் பொறுப்பேற்றதில் இருந்து தேசிய கட்சிகளின் கோட்டையாக இருந்த குமரி மாவட்டத்தை தி.மு.க கோட்டையாக மாறி அசுர வளர்ச்சி கண்டுள்ளது. இந்த மாவட்டத்தில் ஒரு தொகுதிகூட தி.மு.க-வுக்கு ஒதுக்கப்படாதது வருத்தமளிப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், கழகத்துக்கு உண்மையாகவும், அரசுக்கு தன் துறை வழியாக நற்பெயரும் உருவாக்கியதோடு, குமரி மாவட்ட தி.மு.க-வை அரண்போல் காத்து, பல ஆயிரம் கோடி திட்டங்கள் மூலம் மாவட்டத்தை வளர்ச்சிப்பாதையில் வழிநடத்திய அமைச்சர் மனோ தங்கராஜிக்கு பத்மநாபபுரம் தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்க மறுபரிசீலனை செய்ய தி.மு.க தலைவர் ஸ்டாலினை கேட்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.பின்னர் கட்சி அலுவலகத்துக்கு வெளியே சாலை ஓரமாக நின்று மனோ தங்கராஜிக்கு சீட் ஒதுக்க வேண்டும் எனக்கேட்டு அவரது ஆதரவாளர்கள் கோஷங்கள் எழுப்பினர். நேற்று காலையில் இருந்தே கட்சி அலுவலகத்துக்கு வந்த தி.மு.க-வினர் மதியம் கலைந்து சென்றனர். பின்னர் மாலை 3 மணிக்கு மேல் சில நிர்வாகிகள் கட்சி அலுவலகத்துக்குச் சென்று இரவு சுமார் 9 மணி வரை உள்ளிருப்பு போராட்டம் செய்தனர். மனோ தங்கராஜ் சென்னையில் இருந்தாலும் அவரது ஏற்பாட்டின்படியே ஆதரவாளர்கள் மூலம் இந்த கூட்டம் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மனோ தங்கராஜ் மாவட்டச் செயலாளராக உள்ள கன்னியாகுமரி மேற்கு மாவட்டத்தில் அமைப்பு ரீதியாக 9 ஒன்றியங்கள் உள்ளன. அதில் 5 ஒன்றிய செயலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். 4 பேர் ஆப்சென்ட் ஆகினர். பத்மநாபபுரம் தொகுதியின் மையப்பகுதியான பத்மநாபபுரம் நகர முக்கிய நிர்வாகிகளும் இதில் கலந்துகொள்ளவில்லை.தி.மு.க போராட்டம்இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் ராஜ், "தேர்தல் கூட்டணி விவகாரத்தில் விளவங்கோடு தொகுதியை கம்யூனிஸ்ட் கட்சிக்கு காங்கிரஸ் விட்டு கொடுக்க மறுத்ததால் வேறு வழியின்றி பத்மநாபபுரம் தொகுதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு தி.மு.க தலைமை ஒதுக்கியது. கட்சி எடுத்த முடிவுக்கு நாம் அனைவரும் கட்டுப்பட வேண்டும். மீண்டும் திராவிட மாடல் அரசு தொடர நமது பணி இருக்க வேண்டும். இருந்தாலும் குமரி மேற்கு மாவட்டத்தில் கட்சி வளர்ச்சிக்காக தி.மு.க-வுக்கு ஏதாவது ஒரு தொகுதி ஒதுக்கப்பட வேண்டியது அவசியம். இதனை தி.மு.க தலைவர் பரிசீலனை செய்ய வேண்டும். எனவே, பத்மநாபபுரம் தொகுதியை தி.மு.க-வுக்கு ஒதுக்கி மனோ தங்கராஜை வேட்பாளராக அறிவிக்க தலைமை பரிசினை செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி கட்சி தலைமைக்கு இமெயில் மூலம் அனுப்பியுள்ளோம்" என்றார்.

vikatan
30 மார்., 05:30 AM

சமீபத்திய செய்திகள்

சமீபத்திய புதுப்பித்தல்கள்

மக்கள் தொகை கணக்கெடுப்பு: 'Live-in உறவிலிருப்பவர்கள் தம்பதியா?' - மத்திய அரசின் பதில் என்ன?
இந்தியா

மக்கள் தொகை கணக்கெடுப்பு: 'Live-in உறவிலிருப்பவர்கள் தம்பதியா?' - மத்திய அரசின் பதில் என்ன?

vikatan
Mar 303 நிமிடம் படிக்க
'பெரம்பூரில் வேட்புமனுவை தாக்கல் செய்த விஜய்!' - எதிர்த்து நிற்கும் வேட்பாளர்கள் யார்? முழு விவரம்
இந்தியா

'பெரம்பூரில் வேட்புமனுவை தாக்கல் செய்த விஜய்!' - எதிர்த்து நிற்கும் வேட்பாளர்கள் யார்? முழு விவரம்

vikatan
Mar 303 நிமிடம் படிக்க
"கேரளத்தில் பி.ஜே.பி-தான் ஏ டீம்; மோடியின் உத்தரவாதம்!" - பாலக்காட்டில் பிரதமர் மோடி பேசியது என்ன?
இந்தியா

"கேரளத்தில் பி.ஜே.பி-தான் ஏ டீம்; மோடியின் உத்தரவாதம்!" - பாலக்காட்டில் பிரதமர் மோடி பேசியது என்ன?

பிரதமர் மோடி கேரள மாநிலம் பாலக்காடு மற்றும் திருச்சூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். திருச்சூரில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திறந்த வாகனத்தில் ரோடு ஷோ நடத்தினார் பிரதமர் மோடி. மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி, திருச்சூர் பி.ஜே.பி வேட்பாளர் பத்மஜா வேணுகோபால், மணலூர் தொகுதி வேட்பாளர் கே.கே. அனீஷ் குமார், நாட்டிகா தொகுதி சி.பி.ஐ கட்சி எம்.எல்.ஏ-வாக இருந்து பின்னர் பா.ஜ.க-வில் இணைந்து வேட்பாளரான சி.சி.முகுந்தன் ஆகியோரும் பிரதமரின் ரோடு ஷோ வாகனத்தில் இருந்தனர். பாலக்காட்டில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, "கேரளத்தின் சிந்தனையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கேரளத்தின் இளைஞர்களும், பெண்களும், விவசாயிகளும் பி.ஜே.பி பக்கம் நிற்கிறார்கள். நமது எத்தனையோ நிர்வாகிகள் அரசியல் தாக்குதலால் உயிரை தியாகம் செய்தனர். அந்த நிர்வாகிகளை வணங்குகிறேன். கேரளத்தின் நுழைவு வாயிலாக பாலக்காடு அமைந்துள்ளது. பல தசாப்தங்களாக கேரளா இடது-வலது கட்சிகளின் வஞ்சனையில் சிக்கிக்கிடக்கிறது. ஒன்று ஊழல் கட்சி, மற்றொன்று மகா ஊழல் கட்சி. ஒன்று வகுப்புவாதம் மற்றொன்று பயங்கர வகுப்புவாதம். எல்.டி.எஃப் மற்றும் யு.டி.எஃப் ஆகிய கூட்டணிகளின் கொள்கைகள் வாக்கு வங்கி அரசியலாகும். கேரளாவின் வளர்ச்சியைப் பற்றி அவர்களுக்கு எந்த எண்ணமும் இல்லை. இங்கு அமைய உள்ள பி.ஜே.பி அரசு கேரளாவில் வேகமான வளர்ச்சிப்பணிகளை ஏற்படுத்தும். கேரளம் வளரும், மாறாதது இனி மாறும். பல தசாப்தங்களாக எல்.டி.எஃப் மற்றும் யு.டி.எஃப் ஆகியவை மாறி மாறி கேரளாவை கொள்ளையடித்து வருகிறது.பாலக்காடு பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடிகாங்கிரஸ் பி.ஜே.பி-யின் 'பி' டீம் என்று சி.பி.எம் கூறுகிறது. சி.பி.எம் கட்சி பி.ஜே.பி-யின் 'பி' டீம் என்று காங்கிரஸ் கூறுகிறது. எனவே கேரளாவில் 'ஏ' டீம் பி.ஜே.பி மட்டும்தான் என்பதை இரு கூட்டணிகளும் ஒப்புக்கொள்கின்றன. கேரளத்தில் பி.ஜே.பி-தான் ஏ டீம். இரண்டு ஊழல் கட்சிகளும் பி.ஜே.பி-யைக் கண்டு பயப்படுகின்றன. ஏனென்றால் கேரளாவில் பி.ஜே.பி ஆட்சி வந்ததும், அவர்களின் ஊழல் எல்லாவற்றையும் வெளியே கொண்டுவரும். பல ஆண்டுகளாக அவர்கள் கொள்ளையடித்தாலும், மாறி மாறி சட்ட நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். கேரளத்தில் பி.ஜே.பி அரசு அமைந்தால், சி.பி.எம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி அரசுகளின் அனைத்து ஊழல்கள் குறித்தும் விசாரணை நடத்தப்படும். மக்களுக்கு நீதியை நிலைநாட்டுவோம். இதனால்தான் சி.பி.எம் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் பி.ஜே.பி-யைப் பார்த்து பயப்படுகின்றன.வளர்ந்த கேரளம் - மோடியின் உத்தரவாதம்!ரோடு ஷோ-வில் பிரதமர் மோடியுடன் மத்திய அமைச்சர் சுரேஷ்கோபிமேற்கு ஆசியாவில் யுத்தம் நடக்கிறது. கேரளத்தில் இருந்து நிறையபேர் யுத்த பூமியில் சிக்கி உள்ள்ளனர். அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருக்க நம் நாட்டு தூதரகங்கள் அங்கு தீவிரமாக வேலைசெய்து வருகின்றன. ஆனால் காங்கிரஸ் ஆபத்தான விஷயங்களை பேசுகிறார்கள். வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள சுமார் ஒருகோடிக்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு ஆபத்து ஏற்படவேண்டும், அதன்மூலம் அரசியல் செய்ய வேண்டும் என காங்கிரஸ் நினைக்கிறது. காங்கிரஸும், சி.பி.எம் கட்சியும் நாடு முழுவதும் ஒன்றாக உள்ளன. பீகார், ஆந்திரா, மணிப்பூர், திரிபுரா, அசாம் மற்றும் தமிழ்நாட்டிலும் இவர்கள் ஒற்றுமையாக உள்ளனர். கேரளாவில் மட்டும் பரஸ்பரம் மோதிக்கொள்வார்கள். எனவே இவர்களிடம் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கேரளத்தில் சாலை, ரயில்வே வளர்ச்சி, ஜல் ஜீவன் மிஷன், பி.எம் ஆவாஸ் யோஜனா போன்ற திட்டங்களுக்காக வழங்கப்பட்ட பணம் மக்களைச் சென்றடையவில்லை. வளர்ந்த கேரளம் என்பது மோடியின் உத்தரவாதம்" என்றார்.

vikatan
Mar 30, 05:30 AM
5 நிமிடம் படிக்க

விளம்பர இடம்

உங்கள் விளம்பரத்தை இங்கே காட்சி செய்யலாம்

மேலும் செய்திகள்

தமிழ்நாடு முழுவதும் மற்றும் அதற்கு அப்பால் இருந்து சமீபத்திய கதைகளுடன் புதுப்பித்த நிலையில் இருங்கள்

`தூக்கு தண்டனையா... ஆயுள் தண்டனையா என முடிவு செய்ய வேண்டும்'- சாத்தான்குளம் வழக்கில் நீதிபதி காட்டம்
இந்தியா

`தூக்கு தண்டனையா... ஆயுள் தண்டனையா என முடிவு செய்ய வேண்டும்'- சாத்தான்குளம் வழக்கில் நீதிபதி காட்டம்

சாத்தன்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு, நீதிபதி முத்துகுமரன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. கடந்த 23 ஆம் தேதி 9 பேரும் குற்றவாளிகள் என நீதிபதி தெரிவித்ததோடு, அவர்களின் மனநிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டு, தீர்ப்பு விவரங்கள் மார்ச் 30-ம் தேதி வெளியாகும் எனக் கூறியிருந்தார்.இந்நிலையில் இன்று மத்திய, மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்யவில்லை. இதனால் கோபமடைந்த நீதிபதி, "மத்திய, மாநில அரசின் அறிக்கை என்ன ஆனது. சாத்தன்குளம் வழக்கு மிக முக்கியமானது. எந்தக் கருத்தாக இருந்தாலும் பதில் மனுவாகப் பதிவுசெய்யுங்கள். சாத்தன்குளம் வழக்கு மிக முக்கியமானது" என்றார்.சாத்தன்குளம் வழக்குஅதற்கு, '2 நாள்கள் அவகாசம் கொடுங்கள்' - சிபிஐ தரப்பில் தெரிவிக்கபட்டது.இதைக் கேட்ட நீதிபதி காட்டமான தொனியில், ``கடந்த 23-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்யக் கூறியும், ஏன் அறிக்கை தாக்கல் செய்யபடவில்லை. 9 பேருக்கு தூக்குத் தண்டனையா ஆயுள் தண்டனையா என நான் முடிவெடுக்க வேண்டும்... அதற்காகவே அறிக்கை கேட்கிறேன். என்ன தண்டனை கொடுக்க வேண்டும் என்பதற்காகவே அறிக்கை கேட்கிறேன்" எனச் சொன்னதோடு, வழக்கு ஏப்ரல் 2-ஆம் தேதி ஒத்திவைத்தார். இதைத் தொடர்ந்து சாத்தன்குளம் கொலை வழக்கில் தொடர்புடைய ஒன்பது குற்றவாளிகளும் நீதிபதி முன் ஆஜரானார்கள். மாலை 4.30 மணிக்குள் அறிக்கையை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார் நீதிபதி.

vikatan
30 மார்.
3 நிமிடம் படிக்க
பெரம்பூர்: "அவர்கள் காதிலேயே விசிலை ஊதுங்க; GEN Z கிட்ஸுக்கு ஒன்று சொல்லிக்கொள்கிறேன்" - தவெக விஜய்
இந்தியா

பெரம்பூர்: "அவர்கள் காதிலேயே விசிலை ஊதுங்க; GEN Z கிட்ஸுக்கு ஒன்று சொல்லிக்கொள்கிறேன்" - தவெக விஜய்

வேட்புமனுத் தாக்கல் செய்த பிறகு தவெக தலைவர் விஜய் தனது தொகுதியான பெரம்பூரில் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கி இருக்கிறார். பிரசாரத்தில் பேசிய விஜய், "தாய் வீட்டில் இருந்து பரப்புரையைத் தொடங்குகிறேன். எனக்கு பிடித்த இடம் பெரம்பூர். தமிழ்நாட்டை இந்த நிலைமைக்குக் கொண்டுவர தீயசக்தி திமுகதான் காரணம். டாஸ்மாக்கில் மட்டுமே ரூ. 1000 கோடி ஊழல் செய்திருக்கிறார்கள். பெண்கள் பாதுகாப்பு இல்லாத போதைப்பொருள் அதிகமாக இருக்கும் தமிழ்நாட்டைக் காப்பாற்றியாக வேண்டும். தவெக விஜய்இது நாடா? இல்ல காடா? போலீஸ் என்ற ஒன்று இங்கு இருக்கிறதா? இல்லையா? உங்களுக்குப் பாதுகாப்பு கொடுக்காத ஸ்டாலின் அரசைத் தூக்கி வீசிடுவோமா? பல இடங்களில் அடிப்படை வசதி கூட இல்ல. தீய சக்தி திமுக ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு உள்ளதா? ஸ்டாலின் சாருக்கு மக்களைப் பற்றி கவலையே இல்லை. இந்த 5 வருடத்தில் குடும்பத்தோடு சேர்ந்து கொள்ளை அடிப்பதுதான் முக்கியம். 'நாங்க செய்ததெல்லாம் வேஸ்ட்டா கோபால்?' - நண்பரை இறக்கிய விஜய்; கொந்தளிக்கும் தூத்துக்குடி தவெக!வண்டி வண்டியாக வைத்து இருக்கும் பணத்தை என்ன செய்வது என்று தெரியாமல் இப்போது உங்களுக்குக் கொடுத்து எப்படியாவது ஜெயித்து விடலாம் என்று நினைக்கிறார்கள். நான் ஏற்கனவே சொன்ன மாதிரி அவர்கள் கொடுக்கும் பணத்தை வாங்கிக்கொண்டு அவர்கள் காதிலேயே விசிலை ஊதுங்கள். இந்த அரசுக்கு வேட்டு வைக்கணும் வைப்பீர்கள் தானே? GEN Z கிட்ஸ்க்கு ஒன்றே ஒன்று சொல்லிக்கொள்கிறேன்.தவெக விஜய்ஏப்ரல் 23 ஆம் தேதி காலையில் எழுந்து பக்காவாகக் கிளம்பி உங்கள் ஓட்டர் ஐடியை எடுத்துக்கொண்டு பூத்திற்குச் சென்று விசில் சின்னத்தில் ஓட்டு போடுங்கள். இது ஒரு தலைமுறைக்கான தேர்தல். எவ்வளவு பெரிய வசதியான வாழ்க்கை இருந்தலும் எல்லாவற்றையும் உதறி தள்ளிவிட்டு உங்களுக்காக மட்டுமே வந்திருக்கிறேன். எல்லா வலிகளையும் தாங்கிக்கொண்டு உங்களுக்காகவே மட்டுமே வந்திருக்கிறேன். உங்கள் பிள்ளையான எனக்கு ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்கள். நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம்!" என்று பேசியிருக்கிறார்.'பெரம்பூரில் வேட்புமனுவை தாக்கல் செய்த விஜய்!' - எதிர்த்து நிற்கும் வேட்பாளர்கள் யார்? முழு விவரம்

vikatan
30 மார்.
3 நிமிடம் படிக்க
"நரகத்திற்கு வரவேற்கிறோம்" - அமெரிக்காவை எச்சரிக்கும் ஈரான்; போர் முனையில் 2,500 கடற்படையினர்!
இந்தியா

"நரகத்திற்கு வரவேற்கிறோம்" - அமெரிக்காவை எச்சரிக்கும் ஈரான்; போர் முனையில் 2,500 கடற்படையினர்!

இஸ்ரேலும் - அமெரிக்காவும் கூட்டு சேர்ந்து ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28-ம் தேதி நடத்திய தாக்குதலில், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து தொடங்கிய இந்தப் போர் நாளுக்கு நாள் தீவிரமாகி வருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என சவூதி அரேபியா, துருக்கி, எகிப்து ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் பாகிஸ்தானில் சந்தித்துப் போரை நிறுத்தப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அதே வேளையில், மேற்கு ஆசியாவில் தரைவழித் தாக்குதலை நடத்த அமெரிக்கா திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியானது.யுஎஸ்எஸ் திரிபோலிஅதை உறுதிப்படுத்தும் விதமாக அமெரிக்காவின் பிரமாண்டமான 'யுஎஸ்எஸ் திரிபோலி' (USS Tripoli) போர்க்கப்பல் மேற்கு ஆசியப் பகுதிக்கு வந்தடைந்தது. அமெரிக்க மத்திய கட்டளை அமைப்பு இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. மறுபுறம், லெபனானின் தெற்குப் பகுதியில் தனது ஊடுருவலை விரிவாக்கவும், ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பைக் குறிவைக்கவும் இஸ்ரேல் திட்டமிட்டு வருகிறது.இந்த விவகாரம் தீவிரமான நிலையில், ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபாப், ``அமெரிக்கத் வீரர்கள் தரைவழியாக வருவதற்காக ஈரானியப் படைகள் காத்துக் கொண்டிருக்கின்றன. அவர்களைத் தீயிட்டுக் கொளுத்தவும், அவர்களது பிராந்தியக் கூட்டாளிகளை நிரந்தரமாகத் தண்டிக்கவும் நாங்கள் தயாராக உள்ளோம். எங்களது ஏவுகணைகள் தயார் நிலையில் உள்ளன. எங்களது உறுதியும் நம்பிக்கையும் அதிகரித்துள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.முகமது பாகர் கலிபாப்இதற்கிடையில் கடந்த சனிக்கிழமையன்று யேமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது, பாப் எல்-மண்டேப் ஜலசந்தி வழியாக நடக்கும் கடல்சார் வணிகத்திற்குப் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.மேலும், ஈரானின் 90 சதவீத எண்ணெய் ஏற்றுமதியைக் கையாளும் கார்க் தீவைக் (Kharg Island) கைப்பற்ற அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகின. இதற்குப் பதிலடியாக, ஈரானின் அரசு நாளிதழான 'தி டெஹ்ரான் டைம்ஸ்', தனது முதன்மைப் பக்கத்தில் "நரகத்திற்கு வரவேற்கிறோம்" எனத் தலைப்பிட்டு, "ஈரான் மண்ணில் கால் வைக்கும் அமெரிக்க வீரர்கள் சவப்பெட்டியில்தான் திரும்புவார்கள்" என உளவியல் ரீதியான எச்சரிக்கையை விடுத்துள்ளது.சனிக்கிழமையன்று சவூதி அரேபியாவிலுள்ள இளவரசர் சுல்தான் விமானத் தளம் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், அங்கு நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்காவின் அதிநவீன AWACS விமானம் சேதமடைந்தது. இது மேற்கு ஆசியாவில் அமெரிக்காவின் வான்வழி ஆதிக்கத்திற்குப் பலத்த அடியாகக் கருதப்படுகிறது. இப்போருக்காக அமெரிக்கத் பாதுகாப்புத் துறை, நாடாளுமன்றத்திடம் கூடுதலாக 200 பில்லியன் டாலர் நிதியைக் கோரியுள்ளது.!Iran: மேற்கு ஆசியாவிற்குள் நுழைந்த அமெரிக்கப் போர்க்கப்பல்; ஈரான் எல்லையில் பதற்றம்?

vikatan
30 மார்.
3 நிமிடம் படிக்க
இரானுக்காக பல கோடி மதிப்பிலான நன்கொடைகளை சேகரிக்கும் காஷ்மீர் மக்கள்
பொதுவான

இரானுக்காக பல கோடி மதிப்பிலான நன்கொடைகளை சேகரிக்கும் காஷ்மீர் மக்கள்

காஷ்மீரில் இரானுக்காக நடைபெற்று வரும் ஒரு உதவிப் பிரசாரத்தில் மக்கள் பங்களித்து வருகின்றனர்.

bbci
26 மார்.
3 நிமிடம் படிக்க
அமெரிக்கா – இரான் இடையே மத்தியஸ்தம் செய்ய முன்வந்த பாகிஸ்தானுக்கு என்ன கிடைக்கும்?
பொதுவான

அமெரிக்கா – இரான் இடையே மத்தியஸ்தம் செய்ய முன்வந்த பாகிஸ்தானுக்கு என்ன கிடைக்கும்?

இரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு பாகிஸ்தான் அதிகாரப்பூர்வமாக முன்வந்துள்ளது. இதனால் அந்த நாட்டுக்கு கிடைக்கும் லாபம் என்ன?

bbci
26 மார்.
3 நிமிடம் படிக்க
'சிதறிய அதிகாரம்' - இரான் ஆட்சி இன்னும் வீழாதது ஏன்?
பொதுவான

'சிதறிய அதிகாரம்' - இரான் ஆட்சி இன்னும் வீழாதது ஏன்?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இருப்பதாகக் கூறினாலும் அதனை இரான் ராணுவம் மறுத்துள்ள நிலையில், ஆயத்துல்லா அலி காமனெயி-யின் மறைவிற்குப் பிறகு அந்நாட்டின் அதிகாரக் கட்டமைப்பு சிதறி கீழ்மட்ட ராணுவ அதிகாரிகளிடம் பரவியுள்ளது.

bbci
26 மார்.
3 நிமிடம் படிக்க
தோழமை தொடர்வோம், களத்தினில் வெல்வோம்
அரசியல்

தோழமை தொடர்வோம், களத்தினில் வெல்வோம்

234 தொகுதிகளும் நம்முடைய தொகுதிகள் தான், கவனம் சிதறாது இலக்கை வெல்வோம் என்று, முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.நேர்காணல் நிறைவு இதுகுறித்து தொண்டர்களுக்கு, மு.க.ஸ்டாலின் எழுதி உள்ள மடலில் கூறி இருப்பதாவது;2026 சட்டமன்றத் தேர்தல் களத்திற்கான தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தோழமைக் கட்சிகள் உடனான தொகுதிப் பங்கீடும், விருப்ப மனு அளித்தவர்கள் உடனான நேர்காணலையும் நிறைவு செய்துவிட்டு, அன்பு உடன்பிறப்புகளாம் உங்களுக்கு இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.ஜனநாயகப்பூர்வ பேச்சுவார்த்தை பத்தாண்டுகால படுமோசமான அ.தி.மு.க. ஆட்சியினால் தமிழ்நாட்டின் அனைத்து துறைகளிலும் ஏற்பட்ட சீரழிவுகளைச் சரிசெய்து, கடந்த ஐந்தாண்டுகால திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சியை இந்திய அளவில் உயர்த்திக் காட்டி இருக்கிறோம். இந்தப் பெரும் முயற்சிக்கும் சாதனைக்கும் துணை நின்ற கொள்கைவழித் தோழமை இயக்கத்தினரின் பங்களிப்பு மிக மிக முக்கியமானது. அதனை மதித்து உணர்ந்தே இந்த முறையும் திமுக சார்பில் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை, ஜனநாயகப்பூர்வமாக நடைபெற்றன.தொகுதி பங்கீடு, ஒப்பந்தம் நமது கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ள காரணத்தால், உரிய அளவில் தொகுதிகளைப் பங்கிட்டுக் கொள்ள வேண்டிய சூழலும் தேவையும் இருப்பதை நம்முடன் தொடர்ந்து பயணிக்கும் தோழமைக் கட்சிகளான விடுதலைச் சிறுத்தைகள், இ.கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், ம.தி.மு.க, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட அனைத்து இயக்கங்களின் தலைவர்களுடனும் ஆலோசித்தே தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை நடைபெற்று, ஒப்பந்தங்கள் நிறைவேறியுள்ளன.நேரில் விளக்கம் தந்தேன் கம்யூனிஸ்ட் தலைவர்களிடமும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் சகோதரர் திருமாவளவன், ம.தி.மு.க பொதுச்செயலாளர் அண்ணன் வைகோ, மற்ற இயக்கத் தலைவர்களிடமும் தொகுதிப் பங்கீட்டு நிலவரங்களை உங்களில் ஒருவனான நான் நேரில் விளக்கினேன். அவர்கள் எதிர்பார்க்கின்ற எண்ணிக்கையில் உள்ள நியாயத்தை மதித்து, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி மகத்தான வெற்றி பெறுவதற்கேற்ப எண்ணிக்கையை நிர்ணயிக்க வேண்டிய சூழல் இருப்பதையும் அவர்களிடம் விளக்கமாகச் சொன்னேன்.உறுதி செய் உத்தரவாதம்எப்போதும் என் மீது அன்பும், திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும் என்ற உறுதியும் கொண்ட நமது தோழமை இயக்கத் தலைவர்களும், தங்கள் இயக்க நிர்வாகிகளுடன் தொடர்ந்து ஆலோசித்து, உரிய அவகாசம் எடுத்துக்கொண்டு, பல சுற்று பேச்சுவார்த்தைகளுக்குப் பின் மனப்பூர்வமாக எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் தான் தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. கூட்டணியின் தலைவர் என்ற முறையில் தோழமைக் கட்சிகளை நம்முடைய அங்கமாகத் தான் பார்க்கிறேன். அவர்களுக்கான தொகுதிகளில் முழுமையான வெற்றியை உறுதி செய்ய அவர்களின் சகோதரனாக என் உத்தரவாதத்தையும் வழங்கி இருக்கிறேன்.கூட்டணி வலிமைக்கு சான்று தேர்தல் களத்தில் ஒவ்வொரு அரசியல் கட்சியும் தங்களுக்குத் தேவைப்படும் தொகுதிகளை உரிமையுடன் கேட்பதும், அவற்றைப் பரிசீலித்து எந்தளவுக்கு வழங்க முடியுமோ அவற்றை வழங்குவதும் கூட்டணிக்கான நடைமுறை. அதனை ஜனநாயகத் தன்மையுடன் நிறைவேற்றியிருக்கிறது தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி.கூட்டணியின் வெற்றியே பெரிது என்பதை எடுத்துரைத்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவரான நண்பர் கமல்ஹாசன், தனது மனம் திறந்து வெளியிட்டிருக்கும் அறிக்கையை மனதார வரவேற்கிறேன். அதுபோலவே விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள், ம.தி.மு.க. உள்ளிட்ட தோழமைக் கட்சித் தலைவர்களும் மனப்பூர்வமாகத் தெரிவித்திருக்கும் கருத்துகள், 2019 முதல் தொடர்ந்திடும் நமது கூட்டணியின் வலிமைக்குச் சான்றாகும்.சதிகாரர்களின் எண்ணங்கள்... தமிழ்நாட்டைத் தொடர்ந்து வஞ்சிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் மதவாத அரசியலைத் துணிவுடன் எதிர்த்து நிற்கும் திமுகவுக்கு, தோளோடு தோள் நிற்பவை நம் தோழமை இயக்கங்கள். மதச்சார்பின்மை - மாநில உரிமை – சமூகநீதி - சமத்துவம் இவற்றை அடித்தளமாகக் கொண்ட கொள்கைக் கூட்டணி தான் நம்முடையது. இதில் ஏதாவது விரிசல் ஏற்படாதா, பிளவு உருவாகாதா, தி.மு.க. கூட்டணியின் வெற்றியைத் தடுத்திட வழி ஏற்படாதா என நினைத்த சதிகாரர்களின் எண்ணங்கள் தவிடுபொடியானதால், தி.மு.க கூட்டணியின் தொகுதிப் பங்கீடு குறித்து தங்கள் கற்பனைக்கேற்ப விமர்சனங்களைப் பரப்பிட முயற்சி செய்கின்றனர். திசை திருப்ப நினைக்கும் வதந்திகளை உடன்பிறப்புகள் கண்டுகொள்ளாமல் புறக்கணித்து, தோழமைக் கட்சியினருடன் இணைந்து களத்தில் பணியாற்றி, வெற்றியை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.16,500 பேருடன் நேர்காணல்தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகளை திமுக குழு நடத்தி வந்த நிலையில், தி.மு.க.வின் சார்பில் தேர்தல் களத்தில் போட்டியிட விருப்பமனு அளித்திருந்த ஆயிரக்கணக்கான உடன்பிறப்புகளை ஒவ்வொரு நாளும் சந்தித்து, நேர்காணலையும் நடத்தி முடித்திருக்கிறேன். மார்ச் 17ஆம் தேதி தொடங்கி, 23ஆம் தேதி வரை, இடையில் ரமலான் திருநாள் விடுமுறை தவிர்த்து, 6 நாட்கள் இந்த நேர்காணல் நடைபெற்று உள்ளது.நேர்காணல் என்பது தலைமைக்கும் தொண்டர்களுக்குமான உறவின் வெளிப்பாடு. இந்த முறை 16 ஆயிரத்து 500 உடன்பிறப்புகள் கலந்துகொண்ட கொள்கை உறவுத் திருவிழா. மாரத்தான் ஓட்டத்தைப்போல ஒவ்வொரு நாளும் 10 மணி நேரத்திற்குக் குறையாமல் நேர்காணல் நடைபெற்றது. விருப்பமனு அளித்த உடன்பிறப்புகளின் முகம் கண்டபோது எனக்குள் ஏற்பட்ட உற்சாகத்தினால் அடுத்தடுத்த நாட்களும் தொடர்ந்து ஊக்கமுடன் பணியாற்ற முடிந்தது.இந்த மு.க.ஸ்டாலின் தான் நிற்கிறேன்அண்ணா அறிவாலயம் - கலைஞர் அரங்கில் தலைமை நிர்வாகிகள் முன் தங்களுக்கான நேர்காணல் ‘சீட்’ ஒதுக்கப்பட்டிருந்ததில் விருப்பமனு செய்திருந்த ஒவ்வொருவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அவர்களிடம், “உங்கள் தொகுதியில் தலைமை யாருக்கு சீட் கொடுத்தாலும் நீங்கள் இதே மகிழ்ச்சியுடன் களத்தில் பணியாற்ற வேண்டும்” என்று தெரிவித்தேன். தோழமைக் கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளும் தி.மு.க.வின் தொகுதிகள் தான் என்பதால், 234 தொகுதிகளிலும், இந்த மு.க.ஸ்டாலின்தான் நிற்கிறேன் என்ற உணர்வுடன் வேலை செய்ய வேண்டும் என்று சொன்னபோது, உடன்பிறப்புகள் அனைவரும், வெற்றி ஒன்றுதான் எங்கள் இலக்கு என்ற உறுதியை அளித்தனர்.175 இடங்களில் உதயசூரியன்உடன்பிறப்புகள் தந்த உறுதியில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. தமிழ்நாட்டு மக்களிடமும் தி.மு.க தலைமையிலான கூட்டணிக்குப் பெரும் செல்வாக்கு இருக்கிறது. நம்பிக்கையும் செல்வாக்கும் வெற்றியாக விளைவதற்கு நாம் அடுத்த 4 வாரங்களும் அயராமல் உழைத்திட வேண்டும். மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தொகுதிப் பங்கீட்டு நிறைவில், தங்கள் கட்சி சின்னத்தில் போட்டியிடும் தோழமைக் கட்சிகளின் தொகுதிகள் போக, தி.மு.க வேட்பாளர்கள் மற்றும் தி.மு.க. சின்னத்தில் போட்டியிடும் தோழமைக் கட்சி வேட்பாளர்களுமாக இணைந்து 2026 சட்டமன்றத் தேர்தல் களத்தில், 175 இடங்களில் உதயசூரியன் களம் காண்கிறது.கவனம் சிதறாது இலக்கை வெல்வோம்உதயசூரியனும் நமது சின்னம்தான். கை, முரசு, கதிர் அரிவாள், அரிவாள் சுத்தியல் நட்சத்திரம், பானை, ஏணி ஆகியவையும் நமது சின்னங்கள்தான். 234 தொகுதிகளும் நம்முடைய தொகுதிகள்தான். மதவாத அரசியலையும், தமிழ்நாட்டை வஞ்சிக்கும் துரோகத்தையும் எதிர்த்து நின்று, எல்லார்க்கும் எல்லாம் என்கிற ஆட்சி தொடர்ந்திடவும், இந்தியாவின் ஜனநாயகத்தைக் காத்திடவும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கான வெற்றிக் களத்தில் தோழமைக் கட்சிகளுடன் இணைந்து நின்று, விரைந்து பணியாற்றுவீர். கவனம் சிதறாது இலக்கை வெல்வோம்.இவ்வாறு மடலில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. The post தோழமை தொடர்வோம், களத்தினில் வெல்வோம் appeared first on https://www.newstamil.tv.

newstamil
25 மார்.
3 நிமிடம் படிக்க
சர்பராஸ் கானின் குழந்தையுடன் விளையாடிய தோனி
விளையாட்டு

சர்பராஸ் கானின் குழந்தையுடன் விளையாடிய தோனி

குழந்தையுடன் விளையாடிய தோனி : சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் பயிற்சி முகாமில் ​​எம்.எஸ். தோனி, சர்பராஸ் கானின் குழந்தையுடன் பாசமாக விளையாடும் வீடியோ வைரலாகியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரீ யூனியன் நிகழ்ச்சி சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு முன்னதாக சர்பராஸ் கானின் குழந்தையை எம்.எஸ். தோனி தூக்கி கொஞ்சினார். ஐபிஎல் ஏலத்தில் சர்பராஸ் கானை 75 லட்சம் ரூபாய்க்கு அந்த அணி ஏலத்தில் எடுத்தது குறிப்பிடதக்கது. Related Link காயம் காரணமாக போர்ச்சுகல் வீரர் ரொனால்டோ விலகல் The post சர்பராஸ் கானின் குழந்தையுடன் விளையாடிய தோனி appeared first on https://www.newstamil.tv.

newstamil
25 மார்.
3 நிமிடம் படிக்க
காயம் காரணமாக போர்ச்சுகல் வீரர் ரொனால்டோ விலகல்
விளையாட்டு

காயம் காரணமாக போர்ச்சுகல் வீரர் ரொனால்டோ விலகல்

போர்ச்சுகல் வீரர் ரொனால்டோ விலகல் : FIFA கால்பந்து உலகக் கோப்பை தொடரை முன்னிட்டு நடைபெறும் நட்புறவு போட்டியில், காயம் காரணமாக போர்ச்சுகல் நட்சத்திர வீரர் ரொனால்டோ பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. ஜூன்-ஜூலை மாதங்களில் உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறும் நிலையில், போர்ச்சுகல் அணி வரும் 28ஆம் தேதி மெக்சிகோவுடனும், 31ஆம் தேதி அமெரிக்காவுடனும் நட்புறவு ஆட்டத்தில் விளையாடுகிறது. தசைப்பிடிப்பு காரணமாக அவதிப்பட்டு வரும் ரொனால்டோ,விரைவில் உடற் தகுதியை எட்டுவார் என நம்பப்படுகிறது. Related Link மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களுக்கு உறுதியளித்த ரோகித் ஷர்மா The post காயம் காரணமாக போர்ச்சுகல் வீரர் ரொனால்டோ விலகல் appeared first on https://www.newstamil.tv.

newstamil
25 மார்.
3 நிமிடம் படிக்க
'அனைவரும் குற்றவாளிகள்' - சாத்தான்குளம் ஜெயராஜ் பென்னிக்ஸ் வழக்கின் தீர்ப்பு கூறுவது என்ன?
விளையாட்டு

'அனைவரும் குற்றவாளிகள்' - சாத்தான்குளம் ஜெயராஜ் பென்னிக்ஸ் வழக்கின் தீர்ப்பு கூறுவது என்ன?

சாத்தான்குளம் "பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் மரணம் கொலை" என தீர்மானிக்கப்படுவதாக கூறிய மதுரை மாவட்ட அமர்வு நீதிபதி, தண்டனை விவரங்கள் மார்ச் 30-ம் தேதி அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

bbci
24 மார்.
3 நிமிடம் படிக்க
நெருக்கடியான ஒவ்வொரு கட்டத்திலும் ஆட்டத்தை மும்பை பக்கம் திருப்பிய 3 இந்திய வீரர்கள்
விளையாட்டு

நெருக்கடியான ஒவ்வொரு கட்டத்திலும் ஆட்டத்தை மும்பை பக்கம் திருப்பிய 3 இந்திய வீரர்கள்

ஸ்லோ பால்களை அதிகளவு பயன்படுத்திய ஷார்துல் அதிலும் பல வேரியேஷன்கள் செய்தார். பெரும்பாலும் ஃபுல் லென்த்தில் ஸ்டம்ப் லைனில் வீசிய அவர், அவ்வப்போது ஷார்ட் லென்த்திலும் வீசினார். லைன்களையும் மாற்றினார். ஷார்துலின் இரண்டாவது ஓவரில் அப்படி வீசப்பட்ட ஒரு பந்து தான் கேமரூன் கிரீன் விக்கெட்டைக் கைப்பற்றியது.

bbci
30 மார்.
3 நிமிடம் படிக்க
காணொளி: 'இடிபாடுகளுக்கு அடியில் என் மகள் இருக்கிறாள்' - இரானில் ஒரு தாயின் கண்ணீர்
பொதுவான

காணொளி: 'இடிபாடுகளுக்கு அடியில் என் மகள் இருக்கிறாள்' - இரானில் ஒரு தாயின் கண்ணீர்

தெஹ்ரானின் கிழக்குப் பகுதியில் உள்ள ரெசலாத் என்ற குடியிருப்புப் பகுதி மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 40 பேர் கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது.

bbci
30 மார்.
3 நிமிடம் படிக்க
'பேட்டிங் வரிசை பிரமிப்பு தந்தாலும் கவலை தரும் ஒரு பலவீனம்' - சிஎஸ்கே ஒரு பார்வை
பொதுவான

'பேட்டிங் வரிசை பிரமிப்பு தந்தாலும் கவலை தரும் ஒரு பலவீனம்' - சிஎஸ்கே ஒரு பார்வை

இந்த ஆண்டுக்கான டிரேட், ஏலம் எல்லாமே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சிறப்பாக அமைந்தது. இந்திய அணிக்கு டி20 உலகக் கோப்பையைத் தனி ஆளாக வென்று கொடுத்த சஞ்சு சாம்சன் அணியில் இணைந்திருப்பது பெரும் பலம்.

bbci
30 மார்.
3 நிமிடம் படிக்க
அமெரிக்காவின் தரைவழித் தாக்குதல் ஊகங்களுக்கு இரான் கூறும் பதில் என்ன?
பொதுவான

அமெரிக்காவின் தரைவழித் தாக்குதல் ஊகங்களுக்கு இரான் கூறும் பதில் என்ன?

இரான் மீது அமெரிக்கா தரைவழித் தாக்குதல் நடத்தத் தயாராகி வருவதாக 'வாஷிங்டன் போஸ்ட்' செய்தி வெளியிட்டுள்ள நிலையில், அதற்குப் பதிலடியாக "நரகத்திற்கு உங்களை வரவேற்கிறோம், அமெரிக்க வீரர்கள் சவப்பெட்டிகளில் மட்டுமே திரும்புவார்கள்" என இரான் அரசு ஊடகங்கள் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளன.

bbci
30 மார்.
3 நிமிடம் படிக்க
வெறும் 14 நிமிடம் போதும்: ரத்த அழுத்தத்தை குறைக்க வீட்டிலேயே செய்யும் எளிய பயிற்சி
பொதுவான

வெறும் 14 நிமிடம் போதும்: ரத்த அழுத்தத்தை குறைக்க வீட்டிலேயே செய்யும் எளிய பயிற்சி

ஐசோமெட்ரிக் பயிற்சிகள் என்பவை உங்கள் உடலை ஒரு குறிப்பிட்ட நிலையில் நிலையாக வைத்திருக்கும் பயிற்சிகளாகும். இவை உங்கள் உடலை வலுப்படுத்தவும், இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகின்றன.

bbci
30 மார்.
3 நிமிடம் படிக்க
இரான் தாக்குதலில் அமெரிக்க ராணுவ விமானம் தகர்ப்பா? புகைப்படத்தின் பின்னுள்ள உண்மை
பொதுவான

இரான் தாக்குதலில் அமெரிக்க ராணுவ விமானம் தகர்ப்பா? புகைப்படத்தின் பின்னுள்ள உண்மை

சௌதி அரேபியாவில் உள்ள ஒரு விமானப்படை தளத்தில், அமெரிக்காவின் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு விமானம் ஒன்று அழிக்கப்பட்டதை சரிபார்க்கப்பட்ட புகைப்படங்கள் காட்டுகின்றன.

bbci
30 மார்.
3 நிமிடம் படிக்க

அதிகம் படிக்கப்பட்டது

எங்கள் வாசகர்கள் பேசும் பிரபலமான கதைகள்