தமிழ் டைம்ஸ் logo
Iran Vs Ukraine: இது என்னடா புது தலைவலி.?! வர்த்தக கப்பல் மீது தாக்குதல்; உக்ரைனுக்கு ஈரான் எச்சரிக்கை; நடந்தது என்ன.?
30 ஜூலை, 2026
abplive
உலகம்

Iran Vs Ukraine: இது என்னடா புது தலைவலி.?! வர்த்தக கப்பல் மீது தாக்குதல்; உக்ரைனுக்கு ஈரான் எச்சரிக்கை; நடந்தது என்ன.?

காஸ்பியன் கடலில் ஈரானிய வர்த்தகக் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, ஈரான் மற்றும் உக்ரைன் இடையேயான பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த சம்பவம், சர்வதேசச் சட்டம் மற்றும் ஐக்கிய நாடுகள் சாசனத்தின் மீறல் என்று கூறி, ஈரான் உக்ரைனுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்றும், இது தண்டிக்கப்படாமல் போகாது என்றும் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெளிவாகக் கூறியுள்ளார். உக்ரைன் மீது ஈரான் குற்றச்சாட்டு சனிக்கிழமையன்று காஸ்பியன் கடலில் தனது வர்த்தகக் கப்பல்களில் ஒன்றை உக்ரைன் குறிவைத்ததாக ஈரான் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளது. வெளியுறவு அமைச்சகத்தின்படி, சனிக்கிழமை அதிகாலையில் நடந்த இந்தத் தாக்குதலால், கப்பலில் வெடிப்பு ஏற்பட்டது. இதில் ஒரு மாலுமி உயிரிழந்தார், மற்றொருவர் படுகாயம் அடைந்தார். ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ரஷ்யாவிடமும் முறையீடு இந்த சம்பவம் தொடர்பாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைத் தலைவர் காஜா கல்லாஸ் மற்றும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் ஆகியோருடன் தனித்தனியாகப் பேச்சுவார்த்தை நடத்தியதாக, ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்தார். உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி ஒரு ஈரானிய வர்த்தகக் கப்பலைத் தாக்கி, அதில் இருந்த மாலுமியைக் கொன்றதாக அராக்சி தனது எக்ஸ் தளத்தில் எழுதியுள்ளார். இது ஐ.நா. சாசனத்தின் அப்பட்டமான மீறல் என்று விவரித்த அவர், ஐரோப்பாவைப் போரில் மேலும் ஆழமாக இழுப்பதற்காக இஸ்ரேலின் தூண்டுதலின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டினார். இரு தலைவர்களுடனான பேச்சுவார்த்தையின்போது, ​​கீவ் எடுத்துள்ள இந்த நடவடிக்கைக்கு பதில் அளிக்கப்படாமல் விடப்படாது என்பதைத் தாம் தெளிவுபடுத்தியதாக அவர் கூறினார். ரஷ்யா-உக்ரைன் போரில் எங்களுக்கு எந்த பங்கும் இல்லை - ஈரான் தாக்குதலுக்குப் பிறகு கப்பல் வெடித்ததில், கப்பல் பணியாளர்கள் உயிரிழந்ததாகவும் காயமடைந்ததாகவும் ஈரான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், ரஷ்யா-உக்ரைன் போரில் ஈரான் இஸ்லாமியக் குடியரசு தலையிடவில்லை என்றும் அந்த அமைச்சகம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இந்த மோதலில் எந்தவொரு தரப்புக்கும் ஈரான் கூட்டாளியாக இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளையும் அது நிராகரித்துள்ளது. தொலைதூரத் தாக்குதல்களை உறுதிப்படுத்திய ஜெலென்ஸ்கி இதற்கிடையே, காஸ்பியன் கடலில் உக்ரைன் ஒரு நீண்ட தூர ராணுவ நடவடிக்கையை நடத்தியதாக உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்தார். சர்வதேச தடைகளுக்கு உட்பட்டதும், ஈரான் மற்றும் ரஷ்யாவிற்கு இடையே ராணுவப் பொருட்களைக் கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்டதுமான சரக்குக் கப்பல்களை இந்த ட்ரோன் தாக்குதல்கள் குறிவைத்ததாக உக்ரைனிய உளவு அமைப்புகள் டெலிகிராமில் தெரிவித்தன. உக்ரேனிய தூதர் வரவழைத்து எச்சரித்த ஈரான் இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, சனிக்கிழமையன்று உக்ரைனின் தற்காலிக தூதரை (சார்ஜ் டி அஃபயர்ஸ்) வெளியுறவு அமைச்சகம் அழைத்ததாக ஈரான் அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது. இந்தத் தாக்குதலை ஒரு விரோதமான மற்றும் குற்றச் செயல் என்று குறிப்பிட்ட ஈரான், தனது கடுமையான தூதரக எதிர்ப்பைப் பதிவுசெய்ததுடன், அதிகாரப்பூர்வ வழிகள் மூலமாகவும் உக்ரைனுக்குத் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியது. இரு நாடுகளுமே தனித்தனியாக ஒரு போரில் ஈடுபட்டுள்ள நிலையில், தற்போது ஈரான்-உக்ரைன் இடையேயும் பதற்றம் ஏற்பட்டுள்ளது, உலக நாடுகள் இடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.  

இந்த கட்டுரை abplive ஆல் வெளியிடப்பட்டது மற்றும் உலகம் செய்திகளை உள்ளடக்கியது.

அதிகம் படிக்கப்பட்டது