தமிழ் டைம்ஸ் logo
Trump's Fee Plan-Students: யோவ் ட்ரம்ப்பே.! மாணவர்கள கூட விட்டு வைக்க மாட்டியா.? US-ல் படித்து முடித்து வேலைக்கு சேர ரூ.1 கோடி ஃபீஸ்
31 ஜூலை, 2026
abplive
உலகம்

Trump's Fee Plan-Students: யோவ் ட்ரம்ப்பே.! மாணவர்கள கூட விட்டு வைக்க மாட்டியா.? US-ல் படித்து முடித்து வேலைக்கு சேர ரூ.1 கோடி ஃபீஸ்

அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற பிறகு அமெரிக்காவில் பணிபுரிவதற்காக சர்வதேச மாணவர்களுக்கு வழங்கப்படும் விசாக்களுக்கு 1,00,000 அமெரிக்க டாலர் கட்டணம் விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக 'தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' செய்தி வெளியிட்டுள்ளது. H1-B-க்கு பதிலாக F-1 விசாவில் கை வைத்த ட்ரம்ப் நிர்வாகம் H1-B விசாக்களுக்கு 1,00,000 அமெரிக்க டாலர் கட்டணம் விதிக்கும் திட்டத்தை அமெரிக்க நீதிமன்றம் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, ட்ரம்ப் நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகையின்படி, மாணவர்களுக்கு வழங்கப்படும் F-1 விசாக்களின் நீட்டிப்பான விருப்பப் பயிற்சி (OPT) விசாக்களுக்கான அதிக கட்டணத்தை உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை பரிசீலித்து வருகிறது. OPT திட்டமானது, வெளிநாட்டுப் பட்டதாரிகள் தங்கள் மாணவர் விசாக்களில், படிப்புடன் நேரடியாகத் தொடர்புடைய துறைகளில் ஒன்று முதல் மூன்று ஆண்டுகள் வரை பணிபுரிய அனுமதிக்கிறது. தரவுகள் கிடைக்கப்பெற்ற சமீபத்திய ஆண்டான 2024-ல், ஏறத்தாழ 4,19,000 வெளிநாட்டினர் வெளிநாட்டுப் பணி உதவித்தொகை (OPT) திட்டத்தின் கீழ் பணிபுரிந்து வந்தனர். அமெரிக்கப் பல்கலைக்கழகங்களிலிருந்து பெரும்பாலான ஆட்சேர்ப்புகளை நடத்தும் தொழில்நுட்ப நிறுவனங்கள், H1-B விசாக்களுக்கான 1,00,000 அமெரிக்க டாலர் கட்டணத்தை எதிர்த்தன. க்ரீன் கார்டுகளுக்கும் 1 லட்சம் டாலர் கட்டணம் - வெளியுறவுத் துறை அதிகாரிகள் பரிசீலனை உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (DHS) செய்தித் தொடர்பாளர் ஒருவர் ஓர் அறிக்கையில் கூறியதாவது: “முறையாக அறிவிக்கப்படும் வரை எந்தக் கொள்கைகளையும் இறுதியானதாகக் கருதக்கூடாது. DHS-ல் நாங்கள், எங்களின் சட்டப்பூர்வமான குடிவரவு அமைப்பின் நேர்மையைப் பாதுகாக்க, எங்களிடம் உள்ள அனைத்து வழிமுறைகளையும் எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து எப்போதும் கலந்துரையாடி வருகிறோம்.” H-1B மற்றும் மாணவர் விசாக்களுக்குக் கூடுதலாக, அமெரிக்காவிற்கு வெளியே இருந்து கிரீன் கார்டுகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் மீது 1,00,000 அமெரிக்க டாலர் பிணைத்தொகையை விதிப்பது குறித்தும் வெளியுறவுத் துறை அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர். இந்த பிணைத் தொகையை, அவர்கள் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்து குடிமக்களான பிறகு மட்டுமே திரும்பப் பெற முடியும். அமெரிக்காவில் படிக்க விரும்பும் சர்வதேச மாணவர்களுக்கு OPT திட்டம் ஒரு முக்கிய ஈர்ப்பாக விளங்குகிறது. OPT இல்லாவிட்டால், பெரும்பாலான வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் பெற்ற திறன்களை வெளிநாட்டுச் சந்தைகளுக்கு எடுத்துச் சென்று, பட்டப்படிப்பு முடிந்தவுடன் உடனடியாக அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாவார்கள். கட்டணத்தை யார் செலுத்த வேண்டும்.? கட்டணத்தை மாணவர்களே செலுத்த வேண்டுமா அல்லது அவர்களை பணியமர்த்தும் நிறுவனங்கள் செலுத்த வேண்டுமா என்பதை ட்ரம்ப் நிர்வாகம் இன்னும் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.‘ ஒருவேளை நிறுவனங்கள் செலுத்த வேண்டும் என கூறப்பட்டால், அதற்கு பதிலாக, உள்நாட்டிலேயே பணியாட்களை தேர்வு செய்ய அந்நிறுவனங்கள் முடிவு செய்யும். அப்படி இல்லாமல், மாணவர்கள் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டால், அவ்வளவு பெரிய தொகையை அவர்கள் செலுத்த வாய்ப்புகள் இல்லை. இந்திய மாணவர்களுக்கு பாதிப்பு.? அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களில், 3.3 லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள்  இருக்கின்றனர். இந்நிலையில், தற்போது இந்த புதிய கட்டணம் விதிக்கப்பட்டால், அமெரிக்காவிலேயே படித்து முடித்து, அங்கேயே வேலை தேடி, கடனை அடைக்கலாம் என்ற கனவில் இருக்கும் நடுத்தர குடும்ப மாணவர்களுக்கு இது பெரிய பிரச்னையாக மாறிவிடும். அதனால், இந்த கட்டணம் நடைமுறைக்கு வரக் கூடாது என்பதே ஒட்டுமொத்த மாணவர்களின் பிரார்த்தனையாக இருக்கும்.  

இந்த கட்டுரை abplive ஆல் வெளியிடப்பட்டது மற்றும் உலகம் செய்திகளை உள்ளடக்கியது.