தமிழ் டைம்ஸ் logo

அனைத்து செய்திகள்

சமீபத்திய செய்திகள் மற்றும் புதுப்பித்தல்களைப் பார்க்கவும்

மொத்தம் 20 செய்திகள் • பக்கம் 1 / 1

பிரிட்டனுக்கு சூயஸ் போல அமெரிக்காவுக்கு ஹோர்மூஸ் முடிவுரை எழுதுமா? வரலாற்றில் 3 முக்கிய தருணங்கள்
பொதுவான

பிரிட்டனுக்கு சூயஸ் போல அமெரிக்காவுக்கு ஹோர்மூஸ் முடிவுரை எழுதுமா? வரலாற்றில் 3 முக்கிய தருணங்கள்

இரான் போர் தொடங்கிய வாரங்களில், வல்லுநர்கள் இந்தக் கொந்தளிப்பைப் புரிந்துகொள்ளவும், அது எந்தத் திசையில் செல்லக்கூடும் என்று கணிக்கவும் கடந்த கால நிகழ்வுகளை அதிகளவில் ஆதாரமாகக் கொண்டுள்ளனர். அவற்றில், மூன்று முக்கிய தருணங்கள் தனித்து நிற்கின்றன. பிரிட்டனுக்கு சூயஸ் போல அமெரிக்காவுக்கு ஹொர்முஸ் நெருக்கடி அமையுமா?

bbci
30 மார்.
3 நிமிடம் படிக்க
இரான் தாக்குதலில் அமெரிக்க ராணுவ விமானம் தகர்ப்பா? புகைப்படத்தின் பின்னுள்ள உண்மை
பொதுவான

இரான் தாக்குதலில் அமெரிக்க ராணுவ விமானம் தகர்ப்பா? புகைப்படத்தின் பின்னுள்ள உண்மை

சௌதி அரேபியாவில் உள்ள ஒரு விமானப்படை தளத்தில், அமெரிக்காவின் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு விமானம் ஒன்று அழிக்கப்பட்டதை சரிபார்க்கப்பட்ட புகைப்படங்கள் காட்டுகின்றன.

bbci
30 மார்.
3 நிமிடம் படிக்க
குவைத்தில் 'இரான்' தாக்குதல் - ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு
பொதுவான

குவைத்தில் 'இரான்' தாக்குதல் - ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு

குவைத்தில் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் இந்தியர் ஒருவர் உயிரிழந்ததாக இந்திய தூதரகம் உறுதி செய்துள்ளது.

bbci
30 மார்.
3 நிமிடம் படிக்க
'பாட்டி தந்த கம்மல்; போரால் துயரப்படும் மக்களுக்காக' - ஈரான் மக்களுக்கு காஷ்மீர் குழந்தைகள் உதவி
உலகம்

'பாட்டி தந்த கம்மல்; போரால் துயரப்படும் மக்களுக்காக' - ஈரான் மக்களுக்கு காஷ்மீர் குழந்தைகள் உதவி

"இது எனக்கு பாட்டி கொடுத்த தங்கக் கம்மல். எனக்கு ரொம்ப பிடிக்கும்தான். ஆனால் என்ன... போரால் துயரப்படும் மக்களுக்காக இதைக் கொடுக்கிறேன்" - ஒன்பது வயது சிறுமி ஆசிர் ஃபாத்திமா பிஞ்சுக்கரங்களால் அணிந்திருந்த காதணியைக் கழற்றித் தந்திருக்கிறார்.ஈரானில் பிப்ரவரி 28-ம் தேதி தொடங்கிய போர், உலகத்தையே உலுக்கி உள்ளது... மக்களையும் வெவ்வேறு விதங்களில் பாதித்து வருகிறது. உலகத்தையே பாதித்துள்ளது என்றால், அந்தப் போர் நடக்கும் நாடான ஈரானில் மக்கள் எப்படி பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்று கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். With sincere appreciation for the support and solidarity of the esteemed people of India in providing humanitarian assistance through the Embassy’s bank account, we wish to inform you that, in response to your requests and in order to facilitate the process of aid delivery, this… pic.twitter.com/bzKAkuGpnI— Iran in India (@Iran_in_India) March 23, 2026 சமீபத்தில், இந்தியாவில் உள்ள ஈரான் தூதரகம் நிதியுதவிக்காக ஒரு QR குறியீட்டை சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தது. இதை ஸ்கேன் செய்து ஈரான் மக்களுக்கு உதவ பண செலுத்தலாம் என்பதுதான் இந்த முன்னெடுப்பின் நோக்கம்.இதற்கு இந்தியாவில் பலரும் நல்ல வரவேற்பைக் கொடுத்துள்ளனர். பலரும் பணத்தை அனுப்பி அதன் ஸ்கிரீன்ஷாட்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அப்படித்தான் ராம்பன் பகுதியைச் சேர்ந்த ஆசிர் ஃபாத்திமா தனது கம்மலைக் கழற்றி கொடுத்திருக்கிறார். இவர் மட்டுமல்ல.... அதே பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுமி மிஷா ஷாகிர் தனது உண்டியலை அப்படியே கொண்டு வந்து கொடுத்துள்ளார்."இரண்டு வருஷமா ஈத் பண்டிகைக்காக நான் சேர்த்து வைத்த காசு இது. இப்போது அங்கே இருப்பவர்களுக்குத்தான் இது ரொம்பத் தேவை" என்று மழலை மொழியில் அவர் கூறியது அங்கிருந்த தன்னார்வலர்களை நெகிழ வைத்துள்ளது.இந்த உதவிக்கரம் வெறும் குழந்தைகளோடு நின்றுவிடவில்லை. புத்காம் பகுதியைச் சேர்ந்த ஜனா பேகம் (53) தனது மகளின் திருமணத்திற்காகச் சேர்த்து வைத்திருந்த தங்க நகைகளைத் தானமாக வழங்கியுள்ளார். ஜம்மு காஷ்மீர்"என் மகளின் திருமணத்தை சில மாதங்கள் தள்ளி வைக்கலாம், ஆனால் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதலால் தவிக்கும் மக்களுக்கு உதவுவதே இப்போதைய முதற்கடமை" என்று உறுதியுடன் சொல்லியிருக்கிறார் அவர்.ஆரம்பத்தில் ஜாதிபால், ஹஸ்னாபாத் போன்ற பகுதிகளில் சிறிய அளவில் தொடங்கிய இந்த இயக்கம், இன்று காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் ஒரு பெரும் அலையாக மாறியுள்ளது. எல்லைகளைத் தாண்டி மனிதநேயம் விரிகிறது... இணைகிறது!

vikatan
30 மார்.
3 நிமிடம் படிக்க
"5 நாள்களுக்குத் தாக்க மாட்டோம்" - ஈரான், அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை; ட்ரம்ப் என்ன சொல்கிறார்?
உலகம்

"5 நாள்களுக்குத் தாக்க மாட்டோம்" - ஈரான், அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை; ட்ரம்ப் என்ன சொல்கிறார்?

ஈரான் போர் நான்காவது வாரமாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. 'எப்போது இந்தப் போர் முடியும்?' என்று நினைத்துக்கொண்டிருந்தவர்கள், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அற்விப்பு ஒன்றை பகிர்ந்துள்ளார். "கடந்த இரண்டு நாள்களாக, அமெரிக்கா, ஈரானுக்கு இடையே நடந்து வரும் பேச்சுவார்த்தை நன்றாகவும், சுமுகமாகவும் சென்று கொண்டிருக்கிறது. இந்தப் பேச்சுவார்த்தை மத்திய கிழக்கில் நடந்துவரும் பிரச்னைகளை முழுவதும் முடிப்பதற்கானது ஆகும். ஈரான் போர்ஏப்ரல் 1 முதல் புதிய வருமான வரிச் சட்டம் அமல் : என்னென்ன மாற்றங்கள் இடம்பெறுகின்றன? A டு Z பட்டியல்!கடந்த ஒரு வாரம் நடந்த முழுவதுமான, விளக்கமான உரையாடலுக்குப் பின், அமெரிக்காவின் போர்த் துறையிடம் ஈரானின் எரிசக்தி கட்டமைப்புகள் மீதான எந்தவொரு ராணுவ தாக்குதலையும் அடுத்த ஐந்து நாள்களுக்குத் தள்ளிவைக்குமாறு ஆணையிட்டிருக்கிறேன். இது இன்னும் ஒரு வாரத்திற்கு தொடரும்" என்று தனது ட்ரூத் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்தப் பேச்சுவார்த்தை சுமுகமாகச் சென்றால், விரைவில் இந்தப் போர் முடிவுக்கு வரலாம். ட்ரம்ப் பதிவு

vikatan
30 மார்.
3 நிமிடம் படிக்க
அமெரிக்க வரலாற்றில் முதல் முறை... டாலர் கரன்சியில் அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!
உலகம்

அமெரிக்க வரலாற்றில் முதல் முறை... டாலர் கரன்சியில் அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

அமெரிக்காவின் அதிபராக டொனால்டு ட்ரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்றதில் இருந்து அவர் எடுத்து வரும் நடவடிக்கைகள் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பி வருகிறது. அவரது பொருளாதார கொள்கை உலக நாடுகளை மட்டுமல்லாது அமெரிக்காவையும் பாதித்து இருக்கிறது. தற்போது ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து நடத்தி வரும் போர் காரணமாக டொனால்டு ட்ரம்ப் மீது அமெரிக்க மக்கள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். அமெரிக்கா சுதந்திரம் அடைந்து 250வது ஆண்டை கொண்டாடும் விதமாக புதிய டாலர் கரன்சியை வெளியிட இருக்கிறது. இந்த கரன்சியில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கையெழுத்து இடம் பெற இருக்கிறது. தற்போது டாலரில் கருவூல செயலாளர் மற்றும் கருவூல பொருளாளர் ஆகியோர் கையெழுத்து இடம் பெற்று இருக்கிறது. இதில் கருவூல பொருளாளர் கையெழுத்தை நீக்கிவிட்டு அதில் ட்ரம்ப் தனது கையெழுத்தை பதிவேற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவில் 1861ம் ஆண்டுதான் டாலர் அறிமுகம் செய்யப்பட்டது. அதன் பிறகு அதிபர் கையெழுத்து டாலரில் இடம் பெறுவது இதுவே முதல் முறையாகும். முதல் கட்டமாக 100 டாலர் கரன்சியில் ட்ரம்ப் கையெழுத்து இடம் பெற இருக்கிறது. படிப்படியாக மற்ற கரன்சிகளிலும் இந்த கையெழுத்து விரிவுபடுத்தப்படும். இது குறித்து கருவூல செயலாளர் பெசென்ட் கூறுகையில், ''இந்த நடவடிக்கை 250வது ஆண்டு நிறைவையொட்டி வெளியிடப்படுகிறது. அதிபர் ட்ரம்பின் தலைமையின் கீழ், நாங்கள் நிதி வலிமை மற்றும் ஸ்திரத்தன்மையை நோக்கிய பாதையில் இருக்கிறோம். நமது பெரிய நாடு மற்றும் அதிபர் டொனால்ட் ஜே ட்ரம்பின் வரலாற்று சாதனைகளை அங்கீகரிக்க அவரது பெயரைக் கொண்ட அமெரிக்க டாலர் பில்களை விட சக்திவாய்ந்த வழி எதுவுமில்லை''என்று தெரிவித்தார். டொனால்டு ட்ரம்ப் கையெழுத்துடன் கூடிய டாலர்களை அச்சடிக்கும் பணிகள் முழுவேகத்தில் நடந்து வருகிறது. விரைவில் அவை புழக்கத்திற்கு வரும். ஏற்கனவே அரசு கட்டிடங்கள், நிறுவனங்கள், அரசாங்க திட்டங்கள், போர்க்கப்பல்கள் மற்றும் நாணயங்களில் அதிபரின் பெயரை வைக்க ட்ரம்ப் நிர்வாகம் மற்றும் அவரின் ஆதரவாளர்களும் நடவடிக்கை எடுத்துள்ளனர். சமீபத்தில் ட்ரம்பின் உருவம் பொறிக்கப்பட்ட ஒரு நினைவு தங்க நாணயம் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது..

vikatan
30 மார்.
3 நிமிடம் படிக்க
Iran: மேற்கு ஆசியாவிற்குள் நுழைந்த அமெரிக்கப் போர்க்கப்பல்; ஈரான் எல்லையில் பதற்றம்?
உலகம்

Iran: மேற்கு ஆசியாவிற்குள் நுழைந்த அமெரிக்கப் போர்க்கப்பல்; ஈரான் எல்லையில் பதற்றம்?

ஈரான் மீது அமெரிக்கா தரைவழித் தாக்குதலை நடத்தக்கூடும் என்ற ஊகங்கள் வலுத்து வரும் நிலையில், அமெரிக்காவின் பிரமாண்டமான 'யுஎஸ்எஸ் திரிபோலி' (USS Tripoli) போர்க்கப்பல் மேற்கு ஆசியப் பகுதிக்கு வந்தடைந்தது. நேற்று (28-ம் தேதி) அமெரிக்க மத்திய கட்டளை அமைப்பு இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.ஜப்பானைத் தளமாகக் கொண்டு இயங்கும் இக்கப்பல், சுமார் 3,500 கடற்படை வீரர்கள் மற்றும் மாலுமிகளைக் கொண்டுள்ள ஒரு வலிமையான படைப்பிரிவின் முதன்மைக் கப்பலாகும்.யுஎஸ்எஸ் திரிபோலிஇதில் அதிநவீன F-35 போர் விமானங்கள், சீஹாக் ஹெலிகாப்டர்கள் மற்றும் வீரர்களை ஏற்றிச் செல்லும் ஆஸ்ப்ரே (Osprey) ரக விமானங்கள் எனப் பெரும் ஆயுதக் கிடங்கே தயார் நிலையில் உள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளை அமைப்பு (United States Central Command - CENTCOM) தெரிவித்துள்ளது.அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ வெள்ளிக்கிழமை, ``நவீனப் போர்முறையில் தரைப்படை வீரர்களை நேரடியாகக் களமிறக்காமல், அமெரிக்கா தனது இலக்குகளை அடைய முடியும். ஒரு நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்த அல்லது அதன் ராணுவத் திறனை முடக்கப் பல வழிகள் உள்ளன" எனத் தெரிவித்திருந்தார்.இருப்பினும், அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இது குறித்துத் தெளிவான முடிவை அறிவிக்காமல் மௌனம் காத்து வருகிறார். சுமார் 10,000 வீரர்களை மேற்கு ஆசியாவிற்கு அனுப்ப அதிபர் ஆலோசித்து வருவதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.திரிபோலி போர்க்கப்பலின் வருகை இப்பகுதியில் நிலவும் போர் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.ஈரான் போருக்கு அமெரிக்கா செலவு செய்யும் பெருந்தொகை; சிதையும் ஏழை மக்கள் - அதிர்ச்சி ரிப்போர்ட்!

vikatan
30 மார்.
3 நிமிடம் படிக்க
"ஆட்சி மாற்றம் நடக்கும்; ஆனால், ஈரானில் அல்ல" - ட்ரம்ப் குடும்பத்திலேயே எழும் எதிர்ப்புக் குரல்
இந்தியா

"ஆட்சி மாற்றம் நடக்கும்; ஆனால், ஈரானில் அல்ல" - ட்ரம்ப் குடும்பத்திலேயே எழும் எதிர்ப்புக் குரல்

"ஈரானில் ஆட்சி மாற்றம் வேண்டும். ஈரானின் புதிய அரசாங்கத்தோடு பேசி வருகிறேன்" என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அடிக்கடி கூறி வருகிறார். அமெரிக்கா, இஸ்ரேல் – இரண்டு நாடுகளும் ஈரான் மீது போர் தொடுத்ததற்குக் காரணம் ‘ஈரானின் ஆட்சி மாற்றத்திற்காகத்தான்’ என்பது இப்போது நன்கு தெரிகிறது. ஈரான் மீது அமெரிக்கா போர் நடத்துவது அமெரிக்காவில் இருக்கும் பலருக்குப் பிடிக்கவில்லை. அமெரிக்காவின் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ்க்கும் இந்தப் போரில் விருப்பமில்லை என்கிற செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. மேரி எல். ட்ரம்ப் பதிவுபோரை சீக்கிரம் முடிக்க நினைத்த நெதன்யாகு; 'மாஸ்டர் பிளானை' தகர்த்த ஈரான் மக்கள்! | Full Detailஇந்த நிலையில், ட்ரம்பின் சொந்த குடும்பத்தில் இருந்தே ஒரு குரல் வந்திருக்கிறது. ட்ரம்பின் அண்ணன் மகள் மேரி எல். ட்ரம்ப். இவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது…“டொனால்ட் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வரப் போகிறார்தான். ஆனால், அது ஈரானில் இல்லை. அமெரிக்காவில்” என்று பதிவிட்டுள்ளார். `UAE ஈரானை திருப்பி தாக்காதது நல்லதே; அமெரிக்காவிற்கு நண்பராக இருப்பது பேராபத்து' - ஜெஃப்ரி சாக்ஸ்

vikatan
30 மார்.
3 நிமிடம் படிக்க
`தேர்தலில் ஜெயிக்கவில்லை என்றால் சாவதைத் தவிர வேறு வழி இல்லை!' - அதிர்ச்சி கொடுத்த திமுக எம்.எல்.ஏ
இந்தியா

`தேர்தலில் ஜெயிக்கவில்லை என்றால் சாவதைத் தவிர வேறு வழி இல்லை!' - அதிர்ச்சி கொடுத்த திமுக எம்.எல்.ஏ

தமிழ்நாட்டில் ஏப்ரல் மாதம் 23-ம் தேதி நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று தொடங்குகிறது. அதற்காக தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் கடந்த இரண்டு நாட்களில் தங்கள் வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டு முடித்திருக்கின்றன. அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களுக்கு அவர்களின் தொண்டர்கள் வரவேற்பு கொடுத்து வருகின்றனர். அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஜி.ஆர்.வசந்தவேலுக்கு, பேருந்து நிலையம் அருகே நேற்று வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது ரிஷிவந்தியம் தொகுதியின் எம்.எல்.ஏ-வும், கள்ளக்குறிச்சி தி.மு.க தெற்கு மாவட்டச் செயலாளருமான வசந்தம் கார்த்திகேயனும் ஜி.ஆர்.வசந்தவேல் வந்த அந்த வாகனத்தில் இருந்தார்.வரவேற்பு நிகழ்ச்சியில் ஜி.ஆர்.வசந்தவேலுடன், வசந்தம் கார்த்திகேயன்அப்போது பேசிய வசந்தம் கார்த்திகேயன், ``எங்கள் வீட்டுப் பிள்ளையாக நிற்கும் ஜி.ஆர்.வசந்தவேல் அவர்களை சுமார் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைக்க வேண்டும். கடந்த தேர்தலில் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தவர் ஜி.ஆர்.வசந்தவேல். அவர் பணக்காரர் இல்லை. பெரிய மாட மாளிகைகள் அவரிடம் இல்லை. பல்வேறு பதவிகளில் இருந்து பணத்தை வாரிச் சுருட்டவில்லை. எதுவுமே இல்லாத அப்பாவி அவர். இந்தத் தேர்தலில் அவர் ஜெயிக்கவில்லை என்றால் சாவதைத் தவிர வேறு வழியே இல்லை. நம் வீட்டுப் பிள்ளை சாகலாமா ? அவர் உயிருக்கு நாம் உத்தரவாதம் கொடுக்க வேண்டும்தானே ? அவரை காப்பாற்ற வேண்டும்தானே ? வசந்தவேல் தோற்றால் இந்த வசந்தம் கார்த்திகேயன் செத்ததாக அர்த்தம். இந்தத் தேர்தலில் எனக்கு எந்த வேலையும் இல்லை. அண்ணன் வசந்தவேல் அவர்களின் வெற்றிக்காக உழைப்பதுதான் என் வேலை.அதனால் வசந்தவேல் உயிருடன் இருக்க வேண்டுமென்றால், 25 நாட்களுக்கு நாம் அயராது பாடுபட வேண்டும். நம் வீட்டுப் பிள்ளையின் வெற்றிக்கு நாம்தான் உழைக்க வேண்டும். நாம் அனைவரும் வசந்தவேல்தான், நாம்தான் உதயசூரியன் என்ற எண்ணத்துடன், வசந்தம் கார்த்திகேயனின் ஆதரவுடன் அவரை நாம் வெற்றிபெற வைக்க வேண்டும். நான் போட்டியிடும் ரிஷிவந்தியம் தொகுதி கூட எனக்கு முக்கியம் இல்லை. உளுந்தூர்பேட்டை தொகுதி வெற்றிதான் எனக்கு முக்கியம். உங்கள் பார்வையில் வேண்டுமானால் வசந்தவேலிடம் என்ன இருக்கிறது என்று கேட்கலாம். அதை வசந்தவேலிடம்தான் கேட்க முடியுமே தவிர, வசந்தம் கார்த்திகேயனிடம் கேட்க முடியாது. உளுந்தூர்பேட்டை தொகுதியில் வீடு பார்க்குமாறு கூறியிருக்கிறேன். அவரை சட்டமன்ற உறுப்பினராக்க நீங்கள் அயராது பாடுபட வேண்டும் என்று உங்கள் பாதம் தொட்டு கேட்டுக் கொள்கிறேன். நமக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு இதுதான்.தி.மு.க எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயன்இதை விட்டுவிட்டால் உளுந்தூர்பேட்டை தொகுதியை காப்பாற்றவே முடியாது. எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயனின் இந்தப் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், ``வசந்தம் கார்த்திகேயனின் விளம்பர மோகத்துக்கு அளவே இல்லையா ? அவரும் இந்த தேர்தலில் போட்டியிடுகிறார். அப்படி இருக்கும்போது, அவர் தொகுதியை விட்டுவிட்டு வேறு ஒரு தொகுதியில் வேலை செய்வாரா ? மேலும் உளுந்தூர்பேட்டை தொகுதி கள்ளக்குறிச்சி மேற்கு மாவட்டத்தில் வருகிறது. அதன் மாவட்டச் செயலாளர் எங்கள் எம்.எல்.ஏ உதயசூரியன்தான். அவர் இருக்கும்போது இவர் முந்திரிக் கொட்டைத்தனமாக நடந்து கொண்டதுடன், எதிர்க்கட்சிகள் கேலி செய்யுமளவுக்கும் பேசி வைத்திருக்கிறார்" என்று கடுகடுக்கின்றனர் வடக்கு மாவட்ட செயலாளர் உதயசூரியனின் ஆதரவாளர்கள்."மாணிக்கம் தாக்கூர் சொன்னது அவருடைய சொந்தக் கருத்து; திமுக-வைத் தவிர..." - செல்வப்பெருந்தகை

vikatan
30 மார்.
3 நிமிடம் படிக்க
"அனுபவம் பார்த்து சீட் கொடுத்த காலம் போச்சு" - கொந்தளிக்கும் கரூர் திமுக; யார் இந்த ஆசி.தியாகராஜன்?
இந்தியா

"அனுபவம் பார்த்து சீட் கொடுத்த காலம் போச்சு" - கொந்தளிக்கும் கரூர் திமுக; யார் இந்த ஆசி.தியாகராஜன்?

கரூர் தொகுதி தி.மு.க வேட்பாளராக ஆசி. தியாகராஜன் அறிவிக்கப்பட்டதிலிருந்து கரூர் தி.மு.க நிர்வாகிகள் பொறுமிக்கொண்டிருக்கின்றனர். கரூர் தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டியிடாததால், இங்குள்ள தி.மு.க-வினர் சேர்வடைந்துள்ளனர் எனத் தகவல் வெளியானது. இது பற்றி விசாரிக்க களம் இறங்கினோம்... `தயவு செய்து பெயரை மட்டும் போட்டு விடாதீர்கள்' எனக் கூறிய கட்சி நிர்வாகிகள் சிலர், ``காலம் காலமாக கட்சிக்கு வேலை பார்த்து வரும் சீனியர்கள் பலர் தொகுதியில் இருக்க, 40 ஆண்டுகளுக்கு மேலாக கட்சி போராட்டங்கள், சிறைவாசம் எனக் கட்சிக்காக வாழ்க்கையே தியாகம் செய்தவர்கள் கரூர் மாவட்டத்தில் பலர் இருக்க அதில், ஒருவர் கூட கட்சி தலைமைக்குத் தெரியாமல் போய்விட்டது?முதல்வர் ஸ்டாலின் - செந்தில் பாலாஜிதி.மு.க அரசியல் வரலாற்றில் இப்படி ஒரு வேட்பாளர் தேர்வு நடந்திருக்காது. தலைவர் கருணாநிதி இருந்திருந்தால் கரூர் மாவட்ட தி.மு.க-விற்கு இப்படி ஒரு அநீதி நடந்திருக்காது" எனத் புலம்பித் தள்ளினர்.``2026 சட்டமன்றத் தேர்தலில் செந்தில் பாலாஜி கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுவது என்பது கடந்த உள்ளாட்சித் தேர்தல் முடிந்ததுமே கட்சி தலைமை முடிவு செய்து விட்டதாம்.செந்தில் பாலாஜி அனுப்பிய மெசேஜ்; கலர் மாறும் கோவை தெற்கு தொகுதி! - திமுக நிர்வாகிகள் ஷாக்!இதனால், கரூரில் இருந்து தனது ஆதரவாளர்கள் சிலரை கோவைக்கு இடம் மாற வைத்து சரியான அடித்தளத்தை அமைத்துள்ளார். கரூர் தொகுதியில் போட்டியிடப் போவதில்லை என்பது தெரிந்தும், கட்சிக்கு விசுவாசமாக, உண்மையாகப் பாடுபட்டு வரும் பலர் இருக்க அதில் யாராவது ஒருவரைத் தேர்வு செய்து நிறுத்தி இருக்கலாம். ஆனால், செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர் என்பதால், கட்சிக்குத் தொடர்பு இல்லாத ஆசி.தியாகரஜனுக்கு சீட் வாங்கி கொடுத்திருப்பது எந்த வகையில் நியாயம் எனத் தெரியவில்லை.ஆசி. தியாகராஜன்உண்மையான கட்சி நிர்வாகிகள் அனைவரும் வெளிய சொல்ல முடியாதளவிற்குக் கொதித்துப் போய் உள்ளனர். செந்தில் பாலாஜிதான் கட்சி தொண்டர்களை மறந்து விட்டார் என்றால்? தி.மு.க தலைமையுமா கரூர் நிர்வாகிகளை மறந்து விட்டது? கட்சிக்காக காலம் முழுதுவம் பாடுபடும் தொண்டர்களுக்கு தலைமை கொடுக்கும் வெகுமதி இதுதானா?" எனச் சர வெடியாய் வெடிக்கின்றனர்.யார் இந்த தியாகராஜன்?65 வயதான ஆசி. தியாகராஜன் கொங்கு வெள்ளாளர் கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். பி.எஸ்.சி பட்ட படிப்பு முடித்த இவர், விவசாய மற்றும் டெக்ஸ்டைல்ஸ் தொழில் செய்து வருகிறார். கரூர் தான்தோன்றி மலை வெங்கட்ரமண சுவாமி கோவில் அறங்காவலர் குழுத் தலைவர், உப்பிடமங்கலம் விவசாயிகள் நுண்ணுயிர் நீரேற்று பாசன சங்கத் தலைவர் இவைதான் இவரது அரசியல் அனுபவம். இவருக்கு சீட்டு கொடுத்து இருப்பதால் கரூர் தி.மு.க-வினருக்கு மத்தியில் கடும் அதிருப்தி நிலவி வருகிறது.கோவைக்கு மாறிய செந்தில் பாலாஜி; அமைச்சருக்கு இடம் இல்லை! - திமுக வேட்பாளர் பட்டியல்! முழு விவரம்

vikatan
30 மார்.
3 நிமிடம் படிக்க
`முதல்வர் தொகுதியில் பிரசாரம் செய்யக் கூடாதா? அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் ஆதரவா?' - தவெக கேள்வி
இந்தியா

`முதல்வர் தொகுதியில் பிரசாரம் செய்யக் கூடாதா? அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் ஆதரவா?' - தவெக கேள்வி

கொளத்தூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் பிரசாரம் செய்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து அந்தக் கட்சியின் இணைப் பொதுச் செயலாளர் CTR. நிர்மல் குமார் பதிவிட்டுள்ளார்."தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களின் தேர்தல் பிரசாரத்திற்கு மைக் மற்றும் பாக்ஸ் ஸ்பீக்கர்களை பயன்படுத்தத் தடை விதிப்பதா?முதலமைச்சரின் தொகுதி என்றால் மற்றக் கட்சியினர் பிரசாரம் செய்யக் கூடாதா?திமுக தலைவர் ரோட் ஷோ நடத்தலாம், ஆனால் தமிழக வெற்றிக் கழகத் தலைவர், மைக்குடன் பிரசாரம் செய்ய அனுமதி மறுப்பதா?அதிகாரிகள் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதை தேர்தல் ஆணையம் ஆதரிக்கிறதா?பிரசாரத்தில் விஜய்"அனுபவம் பார்த்து சீட் கொடுத்த காலம் போச்சு" - கொந்தளிக்கும் கரூர் திமுக; யார் இந்த ஆசி.தியாகராஜன்?கழகத் தலைவரின் பிரசாரத்திற்கு முறையாக அனுமதி பெற்றும், இன்று மதியம், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்கள் அங்கு சென்றடையும் வரைக்கும், மாலை முதலமைச்சர் வருகிறார் என்று காரணம் கூறி பிரசார இடத்தில் இரும்பாலான தடுப்புகள் கொண்டு (Barricades) பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய அனுமதிக்கவில்லை.தேர்தல் ஆணையத்திடம் முறையாக அனுமதி பெற்று நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தால், முதலமைச்சர் வருகிறார் என்று கூறி பிரசாரத்திற்கு தடை விதிப்பது கண்டனத்திற்குரியது.திமுகவின் கைப்பாவையாக அதிகாரிகள் செயல்படுகிறார்கள்.தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் போது, அதிகாரிகள் பாரபட்சமாக நடந்துகொள்வது ஏன்?ஒருதலைபட்சமாக செயல்படும் அதிகாரிகள் மீது தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.முறையாக அனுமதி பெற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களின் கொளத்தூர் தொகுதி பிரசாரத்திற்கு, கடுமையாகப் போராடி, அதிகாரிகளிடம் பலகட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்திய பிறகே மைக், ஸ்பீக்கர் பாக்ஸ் உள்ளிட்டவைகளை பயன்படுத்த அனுமதி பெறுவதுதான் முறையா?ஒருதலைபட்சமாக செயல்படும் அதிகாரிகள் மீது தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்".புகார் கடிதம்தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களின் தேர்தல் பிரசாரத்திற்கு மைக் மற்றும் பாக்ஸ் ஸ்பீக்கர்களை பயன்படுத்தத் தடை விதிப்பதா?முதலமைச்சரின் தொகுதி என்றால் மற்றக் கட்சியினர் பிரசாரம் செய்யக் கூடாதா?திமுக தலைவர் ரோட் ஷோ நடத்தலாம், ஆனால் தமிழக வெற்றிக் கழகத் தலைவர், மைக்குடன்…— CTR.Nirmalkumar (@CTR_Nirmalkumar) March 30, 2026

vikatan
30 மார்.
3 நிமிடம் படிக்க
நயினார், சண்முகம், பொன்ராஜ்: `இந்த ஆணின் மொழி...' - சொற்களில் ஒளிந்திருக்கும் பாலின அரசியல்! | ஓவியா
இந்தியா

நயினார், சண்முகம், பொன்ராஜ்: `இந்த ஆணின் மொழி...' - சொற்களில் ஒளிந்திருக்கும் பாலின அரசியல்! | ஓவியா

(பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடனின் கருத்துக்கள் அல்ல - ஆசிரியர்)களம்: சொற்களின் அரசியல்ஓவியா, பெண்ணிய செயற்பாட்டாளர்அண்மைக் காலமாக மேடைப் பேச்சுகள் மீதும் பொதுவான உரையாடல்களில் பயன்படுத்தப்படும் சொற்கள் மீதான கண்டனங்களும், அதன் மீதான தொடர் அரசியலும் முகாமையாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதில் பல்வேறு கோணங்கள் அடங்கியிருக்கின்றன. இந்த உரைகளைத் தாண்டி அவற்றிற்குள் இருக்கும் அரசியலையும் இணைத்து பார்ப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும். மனித இன தோற்றுவாய்க்கும் அதன் தொடர் பரிணாமத்திற்கும் தலைமை ஏற்று வழி நடத்திய பெண்ணினத்தை ஆண்கள் தங்களுடைய பாலின்ப தூண்டலுக்கான பொருட்களாகவும் தங்கள் பிறவிப் பணியாட்களாகவும் சுருக்கி விட்ட நிகழ்வுக்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் வரலாறு இருக்கிறது. அந்த வரலாற்றின் குழந்தையாக பிறந்து வளர்ந்து நிலை பெற்றிருக்கும் மொழி தான் இன்று வரை சமூகத்தின் மொழியாக நிலவி வருகிறது. வீட்டில் ஒரு மூலையில் அடுப்படியிலும், படுக்கையறையிலும் கொல்லைப் பக்கங்களிலும் பெண்களை உட்கார வைத்துவிட்டு வெளி உலகத்திற்கு வருகின்ற ஆண்கள் தங்களுடைய உரையாடல்களில் சுவை கூட்டும் பொருட்டாகவே பெண்களைப் பொதுவெளியில் சுட்டிப் பேசி வந்திருக்கிறார்கள். (அன்று அவ்வாறு ஆண்கள் பேசி மகிழ்ந்து கொண்ட பொதுவெளிகளில் பெண்களே இல்லை. அவ்விதமே இவர்கள் படைத்து வைத்திருந்த இலக்கியங்களை பெண்கள் வாசிக்கவும் அனுமதிக்கப்படவில்லை). ஓர் ஆணின் மொழியில் பெண்கள் இரண்டு இடங்களில்தான் அல்லது இரண்டு விதங்களில்தான் இடம் பெறுகிறார்கள். ஒன்று அவையைக் கவர்ந்து குபீர் சிரிப்பலையைத் தோற்றுவிக்கும் நகைச்சுவை கருப்பொருட்களாக... மற்றொன்று ஓர் ஆண் தனது ஆண்மையின் பெருமையிழந்து பெண்களைப் போல் அதாவது பெட்டைகளாக மாறி விடக் கூடாது என ஆண்மையின் தலைமையை வலியுறுத்தி விதந்தோதும் விதமாக. இந்த சாயல் படியாத ஆணின் உரை கிட்டத் தட்ட சாத்தியமற்ற ஒன்றாகவே வரலாறு நெடுகிலும் காணக் கிடைக்கிறது. மனித இனம் தவிர்க்கவே முடியாத ஆளுமைத் தலைவர்கள் அனைவர் உரைகளிலிருந்துமே இதற்கான உதாரணங்களை நாம் காட்ட இயலும். “கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்வேட்ப மொழிவதாம் சொல்.”என்ற வள்ளுவரின் வாக்கை, அதாவது அனைவரும் கேட்க விரும்பும் மொழி என்பதே பெண்ணை இழிவுபடுத்தி ஏளனப்படுத்தி பேசுவதுதான் என்றுதான் ஆண் மக்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள். 18ம் நூற்றாண்டு தொடங்கி 19ம் நூற்றாண்டில் தொடர்ந்து கருக் கொண்டு உருவம் கொண்டு பெண்ணியச் சிந்தனைகளின் விசாரணைகள் இந்த மொழி மீதான திறனாய்வை முன்னிறுத்தின. பேசுகின்ற மொழியே பெண்களை இழிவுபடுத்துவதாக இருக்குமேயானால் பெண்ணியச் சிந்தனைகளை மக்கள் பொதுப்புத்திக்கு எடுத்துச் செல்வது எவ்வளவு சவால் மிக்க பணியாக இருக்குமென்பதை பெண்ணியச் சிந்தனையாளர்கள் ஆழமாக உணர்ந்தார்கள். உலகின் ஈடு இணையற்ற பெண்விடுதலைச் சிந்தனையாளர் பெரியார் விதவை, விபச்சாரி, கைம்பெண் , மலடி ….போன்ற வார்த்தைகளுக்கு இணையான ஆண்பாற் சொற்கள் ஏன் இல்லை என்கின்ற கேள்வியை இந்தத் தமிழ்நாட்டின் பட்டி தொட்டி யெங்கும் நடைபெற்ற ஆயிரக்கணக்கான கூட்டங்களில் எழுப்பினார். பெரியார்ஆனால் இன்று வரை அரசியல் உரைகள் மட்டுமல்ல நீதிமன்ற தீர்ப்புகள் , அரசு அலுவலக கோப்புகள் , அரசு அலுவலகக் கூட்டங்கள், கார்ப்பரேட் போர்டு ரூம் அறைக் கூட்டங்கள் , கதா காலேட்பங்கள், புராண உரைகள், தன்னார்வ தன்னெழுச்சி போதனைகள் இவை அனைத்திலும் நம்மால் இந்த ஆணின் மொழியைக் காண இயலும். முதல் தலைமுறைப் பட்டதாரியாக, முதல் தலைமுறை படிப்பாளியாக, முதல் தலைமுறை பணிக்கு செல்பவராக, முதல் தலைமுறை அரசியல்வாதியாக வெளி வருகின்ற ஒவ்வொரு பெண்ணும் நேற்று மட்டுமல்ல இன்றும் கூட சந்திக்க வேண்டிய முதல் சவால் என்று ஒன்றை சொல்ல வேண்டும் என்று சொன்னால் அது இந்த ஆணின் மொழி தான்.இந்த வரலாற்றுப் புரிதலோடு நாம் இன்றைய காட்சிகளுக்குள் வருவோம். எப்படி அறிவியலறிஞர்கள் கண்டுபிடிக்கும் அணுகுண்டுகளை பயன்படுத்துகிறவர்களாக அரசியல்வாதிகள் இருக்கிறார்களோ அப்படித்தான் பல தியாகங்களுடன் வென்றெடுக்கப் படும் உரிமை முழக்கங்களை அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்திக் கொள்வோரும் அரசியல் வாதிகளாகதான் இருக்கிறார்கள். இதற்கு மிகச் சிறந்த உதாரணம்தான் விஜய் போன்ற ஒரு மசாலாப் பட வெற்றி நாயக நடிகர் பெண்ணினத்தை அவமானப் படுத்தி விட்டார்கள் என்று ஒரு மனுவோடு டிஜிபி அலுவலகம் செல்லும் காட்சி இப்போது அரங்கேறியிருப்பது. கடந்த ஓராண்டில் பெண்களுக்கு விரோதமாகப் பேசி விட்டார்கள் என்று குற்றம் சாட்டப்பட்ட , தண்டிக்கப் பட்ட பேச்சாளர்கள், சம்பவங்கள் நிறைய இருக்கின்றன. அத்தனையும் விரிவாகப் பேசப்படத்தான் வேண்டும். இந்தக் கட்டுரையில் சில நாட்கள் இடைவெளியில் நடைபெற்றிருக்கிற மூன்று நிகழ்வுகளை மட்டும் எடுத்துக் கொள்வோம். நயினார் நாகேந்திரன் - பாரதிய ஜனதா கட்சியின் தற்போதைய மாநிலத் தலைவர் . அவர் நடிகரும் த.வெ.க கட்சி தலைவருமான விஜய் பற்றி பேசுகையில் விஜய் முதலில் வீட்டை விட்டு வெளியே வரவேண்டும், முதலில் நடிகையை(பெயர் தவிர்க்கப்படுகிறது) விட்டு அவர் வெளியே வர வேண்டும். அப்படி வெளியே வந்தால் தான் நாட்டில் என்ன நடக்கின்றது என்பது தெரியும். இந்த பேச்சு பெண்களை இழிவுபடுத்துகிறது என்றும் விஜய் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய விமர்சனம் என்றும் கூறி கடுமையாக எதிர்க்கப் பட்டது. மேலும் இவர்களின் அரசியலுக்கே தொடர்பில்லாத நடிகை பற்றி அவர் பேசுவது தவறு என்பதும் முன்வைக்கப் பட்டது. உண்மையில் சமூக வலைத்தளங்களில் இப்பிரச்சினை அக்கு வேறு ஆணி வேறாக அலசப் பட்டுக் கொண்டுதானிருந்தது. ஆனால் கவனிக்கத் தக்க விசயம் என்னவென்றால் இங்கு நயினார் நாகேந்திரன் அவர்கள் ஒரு கட்சியின் மாநிலத் தலைவர் ஆவார். அதுவும் ஆளுங் கட்சி. ஆனால் நயினார் நாகேந்திரன் மட்டுமல்ல எந்தத் தரப்பு என்கின்ற பாகுபாடுகள் இல்லாமல் பொதுவாழ்விலிருக்கும் எந்தவொரு மனிதராக இருந்தாலும் அவர்தம் தனி வாழ்க்கை பற்றிய விமர்சனத்தை இங்கு எல்லோருமே மேற்கொண்டுதான் வருகிறார்கள். மக்களாலும் அது தவறு என்று உணரப்படுவதோ உணர்த்தப் படுவதோ இல்லை. ஆனால் இந்த பேச்சை அந்த நடிகை உடனடியாக எதிர்த்து ஒரு வழக்கறிஞர் மூலமாக அறிக்கை அளித்தார். நயினார் நாகேந்திரன் நாகேந்திரனின் கருத்து “அவமானகரமானதும் பொருத்தமற்றதும்” என்று அவர் கண்டித்ததுடன் அப்படியான கருத்து ஒரு உயர்நிலை அரசியல் தலைவரிடமிருந்து எதிர்பார்க்கவில்லை என்றும் குறிப்பிட்டார். அவர் தன்னுடைய பெயரை அரசியல் விவாதத்தில் இழுத்துச் சேர்க்காமல் என் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட மரியாதை பாதுகாக்கப்படவேண்டும் எனவும்கூறினார். பொதுவெளியில் தனது தொழிலான நடிப்பு மட்டுமே தனது அடையாளமாக இருக்க முடியும் என்று அவர் தெரிவித்திருந்தார்.உண்மையில் அந்த நடிகையின் இச்செயற்பாடு மிகுந்த வரவேற்புக்குரியது. இவருடைய உறுதியான இச்செயல் வேறு வழியின்றி நயினார் நாகேந்திரனை மன்னிப்பு கேட்க வைத்தது. தமிழக முதல்வர் இந்நாட்டின் மாணவச் செல்வங்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தார். `உங்கள் கனவை என்னிடம் சொல்லுங்கள். நான் உங்கள் தகப்பனாக நின்று அவற்றை நிறைவேற்றி தருவேன்' என்பதாக. சாதிக்க விரும்பும் இளைஞர்களுக்கான ஒரு அழைப்பு அது. இதற்கு அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான சி. வி. சண்முகம் அவர்கள் முதல்வரைப் பார்த்து ஒரு மகத்தான கேள்வியைக் கேட்டார். அது மிகக் கேவலமானது, என்னுடைய கனவில் நடிகை (பெயர் தவிர்க்கப்படுகிறது) வேண்டும் என்று நான் நினைத்தால் நீங்கள் அதற்கு ஏற்பாடு செய்வீர்களா என்று அவர் கேட்டார். வளர்ந்து வருகின்ற பெண்ணுரிமை சமூகத்தில் மட்டுமல்ல இந்த பெண்ணுரிமை சிந்தனைகளை மலராது இருந்த ஒரு சமூகத்தில் கூட இந்த பேச்சை யாரும் ஓர் நாகரீகமான பேச்சாகக் கருத முடியாது. சி.வி.சண்முகம் அவருடைய நோக்கம் திமுக அரசைத் தாக்குவது… முதல்வரைத் தாக்கி பேசுவது. ஆனால் அவர் அவமானப்படுத்திய பெண் இவருடைய கேள்விக்கும் அல்லது இந்த இவர்களுடைய இந்த அரசியலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லாத கலை துறையைச் சார்ந்த ஒரு நபர். அவருடைய பெயரை பயன்படுத்தி இப்படி ஒரு கேள்வியை கேட்க சமூகத்திற்கு எந்த விதமான உரிமையும் கிடையாது. உண்மையில் அந்த நடிகை அவர்கள் சட்டரீதியாக நடவடிக்கை எடுத்திருந்தால் மிகக் கடுமையான தண்டனையை அவர் அடைந்திருப்பார். எனினும் அவர் வருத்தம் தெரிவித்ததுடன் அப்பிரச்சினைக்கு ஒரு முற்றுப்புள்ளி விழுந்தது.அண்மையிலே முன்னாள் குடியரசுத் தலைவர், அறிவியல் அறிஞர் அப்துல் கலாம் அவர்களுடைய உதவியாளராகப் பணிபுரிந்து அதன் வழியாக சமூகப் பொதுநீரோட்டத்திற்கு அறிமுகமாகி இன்றைய தினம் சமூகப் பிரச்சனைகள் குறித்த அரசியல் குறித்த கருத்து கூறுகின்ற ஒரு கருத்துரையாளராக தன்னை வளர்த்துக் கொண்டிருப்பவர் அறிவியலறிஞர் பொன்ராஜ் அவர்கள். பொதுவாக தொலைக்காட்சி விவாதங்களில் பரபரப்பாக பேசுவது, பிறரை சீண்டுவது போல் பேசுவது , வம்புக்கிழுத்து பேசுவது, அவதூறாக பேசுவது இது போன்று பல காட்சிகளை நாம் அன்றாடம் பார்த்து வருகின்றோம். இதில் நண்பர் பொன்ராஜ் அவர்களைப் பொறுத்தவரை தனது கருத்துக்களை தான் அறிந்தவற்றை தர்க்க ரீதியாக நாகரீகமான மொழிநடையில் எடுத்து வைக்கின்ற வரிசையில் வருபவர். அவருடைய கருத்துக்கள் ஒருவருக்கு ஏற்புடையதாக இருக்கலாம். ஏற்புடையதாக இல்லாமலும் இருக்கலாம். ஆனால் அவர் தனது கருத்துக்களை மிக நாகரீகமான மொழியிலே அவையை மதித்து உரையாடக் கூடியவர் என்பதில் இரண்டு கருத்துக்கள் இருக்க முடியாது. இன்னும் சொல்லப் போனால் அவர் தீவிரமான அரசியல் நிலைப்பாடு கொண்டவருமில்லை. எனவே கடுமையான கருத்துக்கள் அவரிடமிருந்து வராது. இவ்வாறிருக்க இப்போது அவர் ஒரு சிக்கலில் மாட்டிக் கொண்டு விட்டார். தவெக கட்சியை பற்றி பேசுகின்ற பொழுது அக்கட்சியினரை அதில் குறிப்பாக அக்கட்சிப் பெண்களை விபச்சாரிகள் கூட்டம் என்று கூறினார். பொன்ராஜ் ஒரு கட்சியை ஏற்றுக் கொள்ளாத எவரும் அக்கட்சியைப் பின்பற்றுகிறவர்களையும் சேர்த்து விமர்சிக்கதான் செய்வார்கள். ஆனால் அப்பெண்களை விபசாரிகள் என்று சொன்னதுதான் இப்போது நம்மை இது குறித்து பேச வேண்டிய நிலையை ஏற்படுத்தியிருக்கிறது.முதலில் விபச்சாரி என்கின்ற சொல் தடை செய்யப்பட வேண்டிய சொல் என்பதனை நாம் இங்கு அழுத்தமாகக் குறிப்பிட வேண்டும், எப்படி சாதியைச் சொல்லி இழிவு படுத்துவது குற்றம் என்று இன்று எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறதோ அதுபோல்தான் பெண்களை விபச்சாரிகள் என்று சொல்லி இழிவுபடுத்துவது தடை செய்யப்பட வேண்டிய ஒரு செயலாகும், எனவே இந்த பிரச்சனைக்குள் ஆழமாக உள்ளே போவதற்கு முன்னால் முதல் நிலையிலேயே இந்தச் சொல்லை நண்பர் பொன்ராஜ் அவர்கள் பயன்படுத்தியிருக்கக் கூடாது என்பதனை அவருக்கு நாம் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறோம். ஒரு அறிவியலறிஞராக தொடங்கி சமூகக் கருத்தியலாளராக தன்னை வளர்த்துக் கொண்டிருக்கும் திரு.பொன்ராஜ் அவர்கள் மனித உரிமைகள், மனித குல விடுதலை பெண்ணுரிமை ஆகிய தளங்களில் வரலாற்று ரீதியாக நிகழ்ந்து கொண்டிருப்பவற்றை உள்வாங்கி இந்த இடத்தில் விபச்சாரி என்கிற சொல்லை பயன்படுத்தியது ஏன் தவறு என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஏன் இதை சொல்லுகிறேன் என்றால் அந்த வார்த்தையை பின் வாங்கிக் கொள்ள அவர் கடுமையாக மறுப்பு தெரிவித்தார். அவருடைய கோபம் வேறு. அவர் குறிப்பிடும் விசயங்களுக்கு நான் வருகிறேன். ஆனால் அதற்கு முன்னதாக சமூகக் கருத்துரையாளர்களாக, அரசியல்வாதிகளாக, பொது மனிதர்களாக தங்களை முன்னிறுத்தக்கூடிய யாரும் இச்சொல்லை பயன்படுத்துவது தவறுதான் என்பதனை நண்பர் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன் அடுத்தபடியாக நயினார் நாகேந்திரனாக இருக்கட்டும், சிவி சண்முகமாக இருக்கட்டும், அவர்கள் உரை வெளிப்படையாக பெண்களை ஒரு போகப் பொருளாக பார்க்கின்ற அவர்களுடைய சொந்த மதிப்பீட்டை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. மேலும் அக்கூற்றுக்கள் நான் இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் கூறியுள்ள ஆண்களின் மனநிலையை (பெண்களைப் பற்றி பேசி கூட்டத்தை உற்சாகப்படுத்துவது. அதாவது தங்கள் உரைகளின் வெற்றிக்காக பாலியல் இன்பப் பொருட்களாகப் பெண்ணை நினைவூட்டுவது) வெளிப்படுத்துபவை. ஆனால் நண்பர் பொன்ராஜ் முன்னவர்கள் போல் எள்ளல் ஏளனத்திலிருந்து இக்கூற்றுக்களைப் பேசவில்லை. மாறாக அவருடைய அரசியல் நிலைப்பாடு சார்ந்து எழும் கோபத்திலிருந்து பேசுகிறார். அதனாலேயே அவர் மன்னிப்பு கேட்கவும் முதலில் மறுத்தார். பிறகு வருத்தம் தெரிவித்த நிலையிலும் கூட தன் கோபத்தை மீண்டும் நியாயப்படுத்தியே கருத்து கூறினார். இப்போது நாம் அவரின் அந்த கோபத்திற்குள் வருவோம். அவர் குறிப்பிட்டது விஜய் கூறுவது போல் ஒட்டு மொத்த பெண் சமுதாயத்தைப் பற்றியல்ல. விஜய் ரசிகைகள் அல்லது தவெக தொண்டர்கள் என்று தங்களை பொதுவெளியில் அறிமுகப்படுத்திக் கொண்டு பேசுகின்ற பெண்கள் என்ன பேசினார்கள் என்பதிலிருந்து இதனைத் தொடங்க வேண்டும். நான் காண நேர்ந்த சில உரைகளைக் குறிப்பிடுகிறேன்.தவெக விஜய் கரூர் தவெக கூட்ட நெரிசலில் சிக்கி தனது குழந்தையை பறிகொடுத்த பெண் கூறினார். எங்கள் பையன் விஜயை பார்க்கும் வாய்ப்பை எங்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்து விட்டு சென்றிருக்கிறான்.ஒரு அரசுப் பள்ளி தலைமையாசிரியர் தவெக மேடையில் திரையிசப் பாடலுக்குக் குத்தாட்டம் ஆடுகிறார்வாழ்க்கை இலட்சியம் விஜயைப் பார்க்கணும் நான் செத்தா அவர் புகைப்படத்துடன்தான் புதைக்கனும் எங்க அண்ணன் எத்தனை பொண்ணுகளை வேண்டுமானாலும் வைச்சுக்குவாரு குப்பை பொறுக்குறவனே நாலு பொண்டாட்டி வைச்சுக்கும் போது எங்க அண்ணன் வைச்சுகிட்டா என்ன தப்பு……விஜய் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம், பெண்களோடு அவர் ஏற்படுத்திக் கொள்கின்ற உறவு என்பது இந்த சமூகத்தில் கேள்விகளுக்கு அப்பாற்பட்டது. ஒரு ராஜாவுக்கு அந்தப்புரத்தில் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் வைத்துக் கொள்வதற்கு இந்த சமூகம் எந்த அடிப்படையில் அனுமதி வழங்கியதோ கிட்டத்தட்ட அதே மனநிலையில் இருந்து வரக்கூடிய வார்த்தைகள். இந்த ரீதியில் பல வீடியோக்கள் சமுக வலைத்தளத்தில் உலா வந்தன. உண்மையில் அரசியல் உரையாடல்களுக்கு மத்தியில் வீசியெறியப்பட்ட கற்களாய் வந்து விழுந்த இத்தகைய காட்சிகளும் குரல்களும் அனைவருக்கும் ஒரு பெரிய திகைப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தின. ஏதோ அந்த காலத்து இராஜ பவனிகளும் அவரைப் பார்க்க ஏங்கும் கன்னியர் கூட்டமும் ஓர் அரசனுக்கு எண்ண முடியாத அளவில் குவிக்கப் பட்டிருந்த ஆசை நாயகிகள் கூட்டமும் கொண்ட சமுதாய அமைப்பை இந்தக் குரல்கள் மீட்டெழுதுவது போலிருக்கிறது. அனைத்து அடிமைத் தனங்களும் அடிமைகளின் உழைப்பையும் உணர்வையும் பயன்படுத்திதான் எழுதப்படுகிறது. இன்னொரு கோணத்தில் உண்மையில் விஜய் பெண்களை அழைப்பது பற்றியோ அல்லது பல பெண்கள் அவர் மீது பெருவிருப்பம் கொண்டு அவரோடு போவது பற்றியோ கூட நமக்கு எந்த பிரச்சனையும் இல்லை. நமக்கு மட்டுமல்ல வேறு யாருக்கும் எந்த பிரச்சினையும் இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. ஒரு சினிமா நடிகர் மீதான சினிமா ரசிகைகளின் உரையாடலாக இருந்திருக்குமேயானால் நமக்கு பிரச்சனை இல்லை. ஆனால் இங்கு இந்த உரையாடல்கள் ஒரு அரசியல் களத்தில் நிகழ்த்தப்படுகின்றன. ஒரு அரசியல் மொழியாக முன்வைக்கப்படுகின்றன. விபச்சாரம் என்கின்ற சொல் குறிக்கின்ற சமூக நிலைகள் என்ன என்பதையும் நாம் சிந்திக்க வேண்டாமா? விபச்சாரம் என்கின்ற சொல்லை ஒழிப்பதில் இருக்கக்கூடிய அக்கறை விபச்சார தன்மையை ஒழிக்க வேண்டும் என்பதிலும் இருக்க வேண்டும் அல்லவா? ஒரு ஆணின் போகப் பொருளாக ஆணை மையப்படுத்தி வாழ்பவளாக, ஆண்களுக்கு அவர்களுடைய இன்பத்திற்கும் பயன்பாட்டுக்கும் மட்டுமே தான் பிறந்திருப்பதாகப் பெண்களைக் கருத வைப்பதுதான் பெண்ணடிமைத்தனத்தின் ஆணிவேர். விபச்சாரமாக இருந்தாலும் சரி விதவைத்தன்மையாக இருந்தாலும் சரி ஏன் பத்தினித் தன்மையாக இருந்தாலும் சரி இந்த நிலைகளில்தான் வேர் பிடித்து நிற்கிறது. சமூகத்தில் அந்த நிலைகளின் வேர்களை அறிந்து கண்டிக்க வேண்டிய கடமை உண்மையான சிந்தனையாளர்களுக்கு உண்மையான சமூக செயற்பாட்டாதவர்களுக்குக் கண்டிப்பாக இருக்கிறது. பெண்ணிய செயற்பாட்டாளர் ஓவியாஆனால் பொன்ராஜ் மீது கண்டனைக் குரல்களை எழுப்ப பாய்ந்து வந்த சமுக வலைத்தளப் புரட்சியாளர்களில் எத்தனை பேர் இந்தப் பெண்களின் இந்தத் திடீர் அரசியல் பிரவேசம் குறித்தும் அவை வெளிப்படுத்தப் பட்ட தன்மைகள் மற்றும் அவற்றின் அரசியல் கூறுகள் குறித்தும் கேள்ளவிகள் எழுப்பினார்கள்……? எந்தவொரு வார்த்தையின் பொருளும் அதனைப் பிறப்பித்த சூழல் சார்ந்ததில்லையா? பொதுத்தளத்தில் இந்தப் பெண்களுடைய இவர்கள் தெரிவிக்கும் கருத்துக்கள், அதை தெரிவிக்கும் போது அவர்கள் காட்டுகின்ற அவர்களுடைய உடல் மொழிகள்... இவையெல்லாம் இதுவரை தமிழகத்தினுடைய அரசியல் பரப்பில் பார்க்காத காட்சிகள் என்கின்ற ஒரு விஷயத்தை மவுனமாக யாரேனும் கடந்து போக முடியுமா என்று கேள்வி கேட்டுப் பாருங்கள். `இந்த கேள்வியை நான் அவரவர் மனசாட்சிக்கு விட்டு விடுகிறேன்.' - ஓவியா, பெண்ணிய செயற்பாட்டாளர்.

vikatan
30 மார்.
3 நிமிடம் படிக்க
வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாமக - செளமியா அன்புமணி எந்தத் தொகுதியில் நிற்கிறார்?
இந்தியா

வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாமக - செளமியா அன்புமணி எந்தத் தொகுதியில் நிற்கிறார்?

2026 ஆம் ஆண்டிற்கான சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. மே 4 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் நிலையில் வேட்பாளர் பட்டியல் மார்ச் 30-ஆம் தேதிக்குள் வேட்புமனு தாக்கல் செய்யவேண்டும். திமுக, அதிமுக போன்ற கட்சிகள் தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருக்கிறது. அன்புமணி ராமதாஸ்இந்நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவற்றில் 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 15 தொகுதிகளின் பட்டியலை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டிருக்கிறார். அதன்படி, * பெரம்பூர் – திலகபாமா * தர்மபுரி – சௌமியா அன்புமணி* விருத்தாசலம் – தமிழரசி ஆதிமூலம்* விக்கிரவாண்டி – மயிலம் சிவக்குமார்* சேலம் மேற்கு – மு.கார்த்தி * சேலம் வடக்கு - சதாசிவம்* பென்னாகரம் – பாடி வெ.செல்வம்* சோளிங்கர் – வழக்கறிஞர் க.சரவணன்* மயிலாடுதுறை – சித்தமல்லி ஏ.பழனிச்சாமி* உத்திரமேரூர் பெ.மகேஷ்குமார்அன்புமணி ராமதாஸ் * போளூர் – சி.ஆர்.பாஸ்கரன்* திருப்போரூர் – வழக்கறிஞர் கே.பாலு* ஜெயங்கொண்டம் – க.வைத்தி* ரிஷிவந்தியம் – அ.ப.செழியன்* காட்டுமன்னார்கோயில் – மருத்துவர் அன்பு.சோழன்

vikatan
30 மார்.
3 நிமிடம் படிக்க
இறந்தவர்களுக்காக பெங்களூரு மைதானத்தில் 11 காலி இருக்கைகள்? மகளை இழந்த தந்தை கூறுவது என்ன?
பொதுவான

இறந்தவர்களுக்காக பெங்களூரு மைதானத்தில் 11 காலி இருக்கைகள்? மகளை இழந்த தந்தை கூறுவது என்ன?

நடக்கவிருக்கும் 2026 ஐபிஎல் தொடரின்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் 'ஹோம் ஸ்டேடியம்' சின்னசாமி மைதானத்தில் நடக்கும் போட்டிகளில் 11 இருக்கைகள் காலியாக விடப்படுவது குறித்து ஆலோசித்து வருவதாக ஆர்சிபி நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.

bbci
26 மார்.
3 நிமிடம் படிக்க
அமெரிக்கா, இஸ்ரேலால் கொல்லப்பட்ட முக்கிய இரானிய தலைவர்கள் யார்? இப்போது இருப்பது யார்?
பொதுவான

அமெரிக்கா, இஸ்ரேலால் கொல்லப்பட்ட முக்கிய இரானிய தலைவர்கள் யார்? இப்போது இருப்பது யார்?

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலால் கொல்லப்பட்ட இரானிய அதிகாரிகள் அந்நாட்டின் அதிகார கட்டமைப்பில் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக இருந்தனர்? இப்போது யார் பொறுப்பில் இருக்கிறார்கள்? இரானின் தலைமை எவ்வாறு மாறியுள்ளது என்பதைப் பற்றி இங்கு எளிமையாகத் தெரிந்துகொள்வோம்.

bbci
26 மார்.
3 நிமிடம் படிக்க
அமெரிக்காவின் போர் நிறுத்த திட்டத்தை இரான் நிராகரிப்பது ஏன்?
பொதுவான

அமெரிக்காவின் போர் நிறுத்த திட்டத்தை இரான் நிராகரிப்பது ஏன்?

இரானிய அரசு நடத்தும் பிரஸ் டிவி தகவலின்படி, போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் 15 அம்சத் திட்டத்தை இரான் நிராகரித்துள்ளது.

bbci
26 மார்.
3 நிமிடம் படிக்க
அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகள்
அரசியல்

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகள்

எதிர் வரும் சட்டசபை தேர்தலில், அதிமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிடும் பாஜகவுக்கு, ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் பட்டியலை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். 1. மைலாப்பூர் (25)2. தளி (56)3. மொடக்குறிச்சி (100)4. உதகமண்டலம் (108)5. அவினாசி (தனி) (112)6. திருப்பூர் (தெற்கு) (114)7. கோயம்புத்தூர் வடக்கு (118)8. கந்தர்வகோட்டை (தனி) (178)9. புதுக்கோட்டை (180)10. திருப்பத்தூர் (185)11. மதுரை தெற்கு (192)12. சாத்தூர் (204)13. திருச்செந்தூர் (215)14. வாசுதேவநல்லூர் (தனி) (220)15. ராதாபுரம் (228)16. நாகர்கோவில் (230)17. விளவன்கோடு (233)18. ஆவடி (6)19. திருவண்ணாமலை (63)20. தஞ்சாவூர் (174)21. திருவாரூர் (168)22. அறந்தாங்கி (183)23. மானாமதுரை (தனி) (187)24. ராமநாதபுரம் (211)25. குளச்சல் (231)26. பத்மநாபபுரம் (232)27. ராசிபுரம் (தனி) (92) The post அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகள் appeared first on https://www.newstamil.tv.

newstamil
25 மார்.
3 நிமிடம் படிக்க
இந்திய வீராங்கனை கொனேரு ஹம்பி விலகுவதாக அறிவிப்பு
விளையாட்டு

இந்திய வீராங்கனை கொனேரு ஹம்பி விலகுவதாக அறிவிப்பு

கொனேரு ஹம்பி விலகுவதாக அறிவிப்பு : மேற்கு ஆசியாவில் நிலவும் போர் சூழல் காரணமாக சைப்ரஸில் நடைபெறவுள்ள 2026-ம் ஆண்டு ஃபிடே மகளிர் கேண்டிடேட்ஸ் சதுரங்க போட்டியில் இருந்து விலகுவதாக இந்திய வீராங்கனை கொனேரு ஹம்பி அறிவித்துள்ளார். எந்த ஒரு போட்டியும், அது எவ்வளவு முக்கியமானதாக இருந்தாலும், தனிப்பட்ட பாதுகாப்பை விட மேலானது இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து அவருக்கு பதிலாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த அன்னா முசிச்சுக் இந்தப் போட்டியில் பங்கேற்பார் என்று சர்வதேச சதுரங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது. Related Link மிரட்டலுக்கு மத்தியில் பாகிஸ்தான் சென்றடைந்த ஸ்மித் The post இந்திய வீராங்கனை கொனேரு ஹம்பி விலகுவதாக அறிவிப்பு appeared first on https://www.newstamil.tv.

newstamil
25 மார்.
3 நிமிடம் படிக்க
கிரெவெண்டிக் ஐரோப்பிய தொடரில் அஜித்குமார் ரேஸிங் அணி
விளையாட்டு

கிரெவெண்டிக் ஐரோப்பிய தொடரில் அஜித்குமார் ரேஸிங் அணி

ஐரோப்பிய தொடரில் அஜித்குமார் ரேஸிங் அணி : கிரெவெண்டிக் ஐரோப்பிய தொடரில் கலந்து கொண்ட அஜித் குமாரின் ரேஸிங் அணி தங்களின் திறமையை வெளிப்படுத்தி 9ஆம் இடத்தை பிடித்தது. குட் பேட் அக்லி திரைப்படத்துக்கு பின் ரேசிங்கில் அதிக கவனம் செலுத்தி வரும் அஜித்குமார் தனது அணியுடன் கிரெவெண்டிக் ஐரோப்பிய தொடரில் பங்கேற்றார். இப்போட்டியின் இறுதி சுற்று 12 மணிநேரம் நடைபெற்ற நிலையில், அஜித்குமார் அணி 13 ஆவது இடத்திலிருந்து முன்னேறி 9ஆம் இடத்தை பிடித்தது. Related Link சர்பராஸ் கானின் குழந்தையுடன் விளையாடிய தோனி The post கிரெவெண்டிக் ஐரோப்பிய தொடரில் அஜித்குமார் ரேஸிங் அணி appeared first on https://www.newstamil.tv.

newstamil
25 மார்.
3 நிமிடம் படிக்க
திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு
விளையாட்டு

திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு

தமிழ்நாடு, இந்தியா, இலங்கை, உலகம் மற்றும் விளையாட்டு தொடர்பான சமீபத்திய நிகழ்வுகள் பற்றிய தகவல்களை இந்த பக்கத்தில் பார்க்கலாம்.

bbci
24 மார்.
3 நிமிடம் படிக்க