தமிழ் டைம்ஸ் logo

அனைத்து செய்திகள்

சமீபத்திய செய்திகள் மற்றும் புதுப்பித்தல்களைப் பார்க்கவும்

மொத்தம் 20 செய்திகள் • பக்கம் 1 / 1

திருச்சி அருகே வாழைத் தோப்பில் பிடிபட்ட 7 அடி நீள முதலை
சுற்றுச்சூழல்

திருச்சி அருகே வாழைத் தோப்பில் பிடிபட்ட 7 அடி நீள முதலை

திருச்சி: திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலையில் சிறுகாடு தோப்பு பொய்யாமணி கரையில் உள்ள வாழைத் தோட்டத்தில் சுமார் 7 அடி நீளமுள்ள முதலை திரிவதை கண்டு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். உய்யக்கொண்டான் வாய்க்கால் மூலம் அந்த முதலை வாழை தோப்பிற்கு சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து அப்பகுதி மக்கள் திருச்சி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் முதலையை லாவகமாக மீட்டனர்.

feedburner
28 நவ.
3 நிமிடம் படிக்க
விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலையில் மர்மமாக இறந்து கிடந்த சிறுத்தை - வனத்துறை விசாரணை
சுற்றுச்சூழல்

விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலையில் மர்மமாக இறந்து கிடந்த சிறுத்தை - வனத்துறை விசாரணை

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலையில் இன்று (நவ.5) அதிகாலை மர்மமாக இறந்து கிடந்த 3 வயது ஆண் சிறுத்தையின் உடலை மீட்டு வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

feedburner
28 நவ.
3 நிமிடம் படிக்க
வால்பாறையில் தாக்க முயன்ற கரடியை குடையால் அடித்து விரட்டிய தொழிலாளர்கள்!
சுற்றுச்சூழல்

வால்பாறையில் தாக்க முயன்ற கரடியை குடையால் அடித்து விரட்டிய தொழிலாளர்கள்!

கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த லோயர் பாரளை எஸ்டேட் தேயிலை தொழிற்சாலை முன்பு நேற்று முன்தினம் மாலை தொழிலாளர்கள் 2 பேர் பேசிக் கொண்டிருந்தனர். லேசாக மழை பெய்து கொண்டிருந்த நிலையில், கையில் குடையுடன் நின்றிருந்தனர். அப்போது, தேயிலை செடிகளுக்கு பின்னால் மறைந்திருந்த கரடி ஒன்று, திடீரென ஓடி வந்து, தொழிலாளர்களை தாக்க முயன்றது. இதனை சற்றும் எதிர்பாராத தொழிலாளர்கள், சுதாகரித்துக் கொண்டு கையில் வைத்திருந்த குடையால், கரடியை அடித்தனர். இதையடுத்து, கரடி அங்கிருந்து தப்பி தேயிலை தோட்டத்துக்குள் ஓடி மறைந்தது.

feedburner
28 நவ.
3 நிமிடம் படிக்க
மயக்க ஊசி செலுத்த முயன்றபோது ‘ரோலக்ஸ்’ யானை தாக்கி கால்நடை மருத்துவர் படுகாயம்
சுற்றுச்சூழல்

மயக்க ஊசி செலுத்த முயன்றபோது ‘ரோலக்ஸ்’ யானை தாக்கி கால்நடை மருத்துவர் படுகாயம்

கோவை: கோவை அருகே மயக்க ஊசி செலுத்த முயன்றபோது, ‘ரோலக்ஸ்’ என்ற காட்டு யானை தாக்கியதில் கால்நடை மருத்துவர் படுகாயமடைந்தார். கோவை மாவட்டம் நரசீபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில், ‘ரோலக்ஸ்’ எனப்படும் ஒற்றை ஆண் காட்டு யானையின் நடமாட்டம் உள்ளது. இந்த யானை நரசீபுரம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் அடிக்கடி நுழைந்து பொதுமக்களை அச்சுறுத்தியும், விளை நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களை சேதப்படுத்தியும் வருகிறது.

feedburner
28 நவ.
3 நிமிடம் படிக்க
4 மாவட்ட அரசு அலுவலகங்களில் சோலார் கட்டமைப்புகளை நிறுவ டெண்டர்: பசுமை எரிசக்தி கழகம் அறிவிப்பு
சுற்றுச்சூழல்

4 மாவட்ட அரசு அலுவலகங்களில் சோலார் கட்டமைப்புகளை நிறுவ டெண்டர்: பசுமை எரிசக்தி கழகம் அறிவிப்பு

சென்னை: சென்​னை, திரு​வள்​ளூர், காஞ்​சிபுரம், செங்​கல்​பட்டு மாவட்​டங்​களில் உள்ள அனைத்து அரசு அலு​வல​கங்​களி​லும் சூரிய ஒளி மின்​சார உற்​பத்​திக்​காக 40 மெகா​வாட் சோலார் கட்டமைப்புகளை நிறுவுவதற்காக பசுமை எரிசக்தி கழகம் டெண்​டர் கோரி​யுள்​ளது. தமிழக அரசு அலு​வல​கங்​களில் தின​மும் பகல் நேர மின்​சா​ரத் தேவைக்கு ஏற்ற திறனுடன் சோலார் பேனல் அமைக்க அரசு கடந்த 2023-ம் ஆண்டு முடிவு செய்​து, அதற்​கான திட்​டத்தை அறி​வித்​தது. சில அரசு அலு​வல​கங்​களில் இத்​திட்​டம் செயல் படுத்தப்பட்டுள்ளது.

feedburner
28 நவ.
3 நிமிடம் படிக்க
பள்ளிக்கரணை ஏரியில் கழிவுநீர் கலப்பதை வேடிக்கை பார்க்கும் சென்னை மாநகராட்சி, நீர்வளத் துறை!
சுற்றுச்சூழல்

பள்ளிக்கரணை ஏரியில் கழிவுநீர் கலப்பதை வேடிக்கை பார்க்கும் சென்னை மாநகராட்சி, நீர்வளத் துறை!

நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிக்கரணை அணை ஏரியில் கழிவு நீர் கலப்பதை தடுக்க வேடிக்கை பார்க்காமல் உரிய நடவடிக்கையை சென்னை மாநகராட்சி, நீர்வளத்துறை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரி, 49.5 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதில், 1 ஏக்கரில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. இது சுற்றுவட்டார பகுதி நிலத்தடி நீருக்கு ஆதாரமாக உள்ளது. இந்நிலையில் ஏரியின் அருகில் உள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் விடப்படுவதாக புகார் எழுந்துள்ளது. ஏரியில் கழிவு நீர் கலப்பதால் நிலத்தடி நீரும் பாதிக்கப்படுகிறது.

feedburner
28 நவ.
3 நிமிடம் படிக்க
பள்ளிக்கரணை சதுப்பு நில விவகாரம்: தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை விளக்கம்
சுற்றுச்சூழல்

பள்ளிக்கரணை சதுப்பு நில விவகாரம்: தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை விளக்கம்

சென்னை: ‘​ராம்​சார் தலம் அமை​யும் நிலங்​கள் வரையறுக்​கப்​ப​டாத​தால், தற்​போதைய பள்​ளிக்​கரணை சதுப்​புநில காப்​புக்​காட்டு எல்​லைகளுக்கு வெளியே உள்ள தனி​யார் பட்டா நிலங்​களுக்கு மட்​டுமே ஒப்​புதல் வழங்​கப்​பட்​டுள்​ளது’ என சுற்​றுச்​சூழல் மற்​றும் வனத்​துறை விளக்​கம் அளித்​துள்​ளது. சென்னை பெரும்​பாக்​கத்​தில், பள்​ளிக்​கரணை காப்​புக்​காடு ராம்​சார் தலத்​தில், அடுக்​கு​மாடி கட்​டிட திட்​டத்​துக்கு ஒப்​புதல் வழங்​கப்​பட்ட விவ​காரம் தொடர்​பாக, அறப்​போர் இயக்​கம் குற்​றச்​சாட்​டு​களை முன்​வைத்​தது. இதுதொடர்​பாக, பாஜக, அதி​முக தரப்​பிலும் கடுமை​யான விமர்​சனங்​கள் எழுந்​துள்​ளன.

feedburner
28 நவ.
3 நிமிடம் படிக்க
உலகின் மாசுபட்ட நகரங்கள்: முதலிடத்தில் டெல்லி
சுற்றுச்சூழல்

உலகின் மாசுபட்ட நகரங்கள்: முதலிடத்தில் டெல்லி

புதுடெல்லி: உலகின் மாசுபட்ட நகரங்கள் பட்டியலில் டெல்லி முதலிடத்தில் உள்ளது. சுவிஸ் காற்று தர தொழில்நுட்ப நிறுவனமான ஐகியூஏர்-ன் (IQAir) உலக காற்று தர அறிக்கை 2025 தற்போது வெளியாகி உள்ளது. இந்தப் பட்டியலில் நம் நாட்டின் தலைநகரமான டெல்லி முதலிடத்தைப் பிடித்துள்ளது. நேற்று காலை நிலவரப்படி டெல்லியின் காற்று தரக்குறியீடு (ஏகியூஐ) 350 ஆக உள்ளது.

feedburner
28 நவ.
3 நிமிடம் படிக்க
20 ஆண்டாக வளர்த்த மரத்தை வெட்டியதால் மூதாட்டி கதறல்
சுற்றுச்சூழல்

20 ஆண்டாக வளர்த்த மரத்தை வெட்டியதால் மூதாட்டி கதறல்

புதுடெல்லி: சத்தீஸ்கரில் 20 ஆண்டுகளுக்கு முன் நட்டு வளர்ந்த அரச மரம் வெட்டப்பட்ட தால், அதன் அருகே மூதாட்டி ஒருவர் கதறி அழும் வீடியோவை சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ள மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ, இந்த காட்சி நெஞ்சை உருக்குவதாக உள்ளது என தெரிவித்து உள்ளார். சத்தீஸ்கர் மாநிலம் கைராகர் மாவட்டம் சாரா கோண்டி கிராமத்தைச் சேர்ந்த 85 வயது மூதாட்டி தியோலா பாய். இவர் 20 ஆண்டுகளுக்கு முன் தான் வசிக்கும் பகுதியில் அரச மரக் கன்றை நட்டு வளர்த்துள்ளார். அது தற்போது மிகப் பெரிய மரமாக வளர்ந்திருந்தது. அந்த மரம் தெய்வமாக வழிபடப்பட்டது போல் உள்ளது.

feedburner
28 நவ.
3 நிமிடம் படிக்க
டெல்லியில் காற்று மாசுபாட்டை குறைக்க செயற்கை மழை
சுற்றுச்சூழல்

டெல்லியில் காற்று மாசுபாட்டை குறைக்க செயற்கை மழை

புதுடெல்லி: டெல்லியில் மாசுவைக் குறைக்க செயற்கை மழை அவசியம் என்று முதல்வர் ரேகா குப்தா அறிவித்துள்ளார். டெல்லியில் நேற்று முன்தினம் கிளவுட் சீடிங் எனப்படும் செயற்கை மழை பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது. இது தொடர்பாக டெல்லி முதல்வர் ரேகா குப்தா செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: காற்று மாசுபாட்டை குறைக்கும் நோக்கில் டெல்லியில் நேற்று செயற்கை மழை வெற்றிகரமாக பரிசோதித்துப் பார்க்கப்பட்டுள்ளது.

feedburner
28 நவ.
3 நிமிடம் படிக்க
பாம்பன் மீனவர் வலையில் சிக்கிய அரிய வகை டூம்ஸ் டே மீன்!
சுற்றுச்சூழல்

பாம்பன் மீனவர் வலையில் சிக்கிய அரிய வகை டூம்ஸ் டே மீன்!

ராமேசுவரம்: ராமேசுவரம் அருகே பாம்பனில் மன்னார் வளைகுடா கடற்பகுதியில் இருந்து ஞாயிற்றுக்கழமை நூற்றுக்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். பின்னர் மீன்பிடித்து விட்டு மீனவர்கள் கரை திரும்பினார்கள். மீனவர்கள் வலையில் டூம்ஸ் டே (இறுதி நாள்) மீன் என்றழைக்கப்படும் அரிய வகை ஆழ்கடல் மீனான (Oar Fish) எனப்படும் துடுப்பு மீன் சிக்கியது. இந்த மீன் 10 கிலோ எடையும், 5 அடி நீளமும் உடையதாகவும் இருந்தது. மன்னார் வளைகுடா கடற்பகுதியில் முதன்முறையாக இந்த மீன் பிடிபட்டதால் இந்த மீனை பாம்பன் மக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.

feedburner
28 நவ.
3 நிமிடம் படிக்க
இந்தியாவில் கடும் மழைப் பொழிவு, வறட்சி ஏற்படும்: புவி அறிவியல் அமைச்சக முன்னாள் செயலர் எச்சரிக்கை
சுற்றுச்சூழல்

இந்தியாவில் கடும் மழைப் பொழிவு, வறட்சி ஏற்படும்: புவி அறிவியல் அமைச்சக முன்னாள் செயலர் எச்சரிக்கை

வரும் காலங்களில் காலநிலை மாற்றம் காரணமாக, இந்தியப் பகுதிகளில் கடும் மழைப்பொழிவும், கடும் வறட்சியும் ஏற்படக்கூடும் என்று மத்திய புவி அறிவியல் அமைச்சக முன்னாள் செயலர் மாதவன் நாயர் ராஜீவன் தெரிவித்துள்ளார். சென்னை தரமணியில் உள்ள ஆசிய இதழியல் கல்லூரியில், காலநிலை மாற்றம் மற்றும் இந்தியாவில் அதன் தாக்கம் குறித்த கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய புவி அறிவியல் அமைச்சக முன்னாள் செயலர் மாதவன் நாயர் ராஜீவன் பேசியதாவது: கால நிலை மாற்றத்தின் தாக்கத்தால் குறுகிய காலத்தில் அதிக அளவு மழை பொழிவது சமீபகாலமாக அதிகரித்துள்ளது. பருவமழை காலத்தில் பெய்ய வேண்டிய மொத்த மழையில் 50 சதவீதம், குறுகிய காலத்தில், அதாவது 16 மணி நேரத்தில் பெய்துவிடுகிறது. இது 14 மணி நேரமாக குறைந்து விட்டது. வரும் காலங்களில் இன்னும் குறுகிய காலத்தில் கனமழை பெய்ய அதிக வாய்ப்பு உள்ளது.

feedburner
28 நவ.
3 நிமிடம் படிக்க
கட்டுக்கடங்காத கூட்டத்தால் சபரிமலையில் குழந்தைகள், முதியோர் பரிதவிப்பு: மூதாட்டி மாரடைப்பால் உயிரிழப்பு
இந்தியா

கட்டுக்கடங்காத கூட்டத்தால் சபரிமலையில் குழந்தைகள், முதியோர் பரிதவிப்பு: மூதாட்டி மாரடைப்பால் உயிரிழப்பு

சபரிமலை: சபரிமலை​யில் ஏற்​பட்​டுள்ள கடும் நெரிசலில் சிக்கி குழந்​தைகள், முதி​யோர் பெரும் அவதிக்​குள்​ளாகி வரு​கின்​றனர். வரிசை​யில் நீண்ட நேரம் காத்​திருந்த மூதாட்டி ஒரு​வர் மாரடைப்​பால் உயி​ரிழந்​தார். சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் ஆன்​லைன் மூலம் 70 ஆயிரம் பேரும், ஸ்பாட் புக்​கிங் மூலம் 20 ஆயிரம் பேரும் என மொத்​தம் 90 ஆயிரம் பக்​தர்​கள் தின​மும் அனு​ம​திக்​கப்​படு​வர் என்று தேவசம் போர்டு தெரி​வித்​துள்​ளது. ஆனால் ஸ்பாட் புக்​கிங்​கில் கட்​டுப்​பாடின்றி பக்​தர்​கள் அனு​ம​திக்​கப்​படு​கின்​றனர். இதனால் நெரிசல் ஏற்​பட்டு பம்​பை, மரக்​கூடம் உள்​ளிட்ட பல பகு​தி​களி​லும் பக்​தர்​கள் வெகுநேரம் நிறுத்தி வைக்​கப்​பட்டு பின்பு அனு​ம​திக்​கப்​படு​கின்​றனர். 6 மணி நேரத்​துக்​கும் மேல் காத்​திருக்​கும் நிலை ஏற்​படு​கிறது. அது​வரை குடிநீர், கழிப்​பிட வசதி இல்​லாத​தால் பக்​தர்​கள் பெரும் பரித​விப்​புக்கு உள்​ளாகி வரு​கின்​றனர். இத்​துடன் கடும் நெரிசலும் ஏற்​படு​வ​தால் பலருக்​கும் மூச்​சுத்​திணறல் ஏற்​பட்டு வரு​கிறது.

feedburner
21 நவ.
3 நிமிடம் படிக்க
‘மேகேதாட்டு தீர்ப்பு எங்களுக்கு சாதகம்’ - கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் வரவேற்பு
இந்தியா

‘மேகேதாட்டு தீர்ப்பு எங்களுக்கு சாதகம்’ - கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் வரவேற்பு

பெங்களூரு: மேகேதாட்டு திட்டம் தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பை கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் வரவேற்றார். மேலும், இது மாநிலத்துக்கு ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக இருக்கும் என்றும் கூறினார். செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த சிவகுமார், “மேகேதாட்டு தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக வந்துள்ளது. இதற்காக வாதாடிய வழக்கறிஞர்களுக்கு நாம் நன்றி தெரிவிக்க வேண்டும். இதே விஷயம் தொடர்பாக நாளையும் ஒரு கூட்டம் உள்ளது. எதிர்காலத்தில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி விவாதிக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.

feedburner
21 நவ.
3 நிமிடம் படிக்க
‘தற்கொலை தாக்குதல் எனப்படுவது...’ - டெல்லி குண்டு வெடிப்பு குற்றவாளி உமர் நபியின் பழைய வீடியோ வெளியானது!
இந்தியா

‘தற்கொலை தாக்குதல் எனப்படுவது...’ - டெல்லி குண்டு வெடிப்பு குற்றவாளி உமர் நபியின் பழைய வீடியோ வெளியானது!

புதுடெல்லி: “தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் குறித்து பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. இது ஒரு வகையான உயிர்த் தியாக நடவடிக்கை.” என டெல்லி கார் குண்டு வெடிப்பு நடத்திய மருத்துவர் உமர் நபி பேசியுள்ள வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. கடந்த 10-ம் தேதி டெல்லி - செங்கோட்டை பகுதியில் உமர் நபி இந்த தாக்குதலை நடத்தினார். அதற்கு முன்பாக இந்த வீடியோவை அவர் பதிவு செய்திருக்கலாம் எனத் தகவல். இந்த வீடியோவை ஆங்கில ஊடக நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் அவர் கூறியுள்ளதாவது:

feedburner
21 நவ.
3 நிமிடம் படிக்க
‘இது குடும்பப் பிரச்சினை; நான் பார்த்துக் கொள்கிறேன்’ - தேஜஸ்வி - ரோகிணி மோதல் குறித்து லாலு கருத்து!
இந்தியா

‘இது குடும்பப் பிரச்சினை; நான் பார்த்துக் கொள்கிறேன்’ - தேஜஸ்வி - ரோகிணி மோதல் குறித்து லாலு கருத்து!

பாட்னா: தேஜஸ்வி யாதவ் - ரோகிணி ஆச்சார்யா இடையேயான பிரச்சினை என்பது குடும்பத்தின் உள் விவகாரம் என்றும் அதை தான் பார்த்துக் கொள்வதாகவும் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார். பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 202 இடங்களை வென்ற நிலையில், மகா கூட்டணி 35 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது, அதில் ஆர்ஜேடி கட்சி 25 இடங்களில் வென்றது. எந்த சட்டப்பேரவையிலும் எதிர்க்கட்சியாக தேர்வாக மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கையில் 10 சதவீத இடங்களில் வென்றிருக்க வேண்டும். பிஹார் சட்டப்பேரவையில் 243 இடங்கள் உள்ள நிலையில், ஆர்ஜேடி சரியாக 25 இடங்களை வென்றதால் எதிர்க்கட்சியாக தேர்வாகியுள்ளது.

feedburner
21 நவ.
3 நிமிடம் படிக்க
டெல்லி கார் குண்டு தற்கொலை தாக்குதல் வழக்கில் மருத்துவர் ஷாகின் சயீத் செல்போன் ஆய்வு
இந்தியா

டெல்லி கார் குண்டு தற்கொலை தாக்குதல் வழக்கில் மருத்துவர் ஷாகின் சயீத் செல்போன் ஆய்வு

புதுடெல்லி: காஷ்மீரைச் சேர்ந்த மருத்​து​வர் உமர் முகமது கடந்த வாரம் காரை வெடிபொருட்​களு​டன் ஓட்​டிச் சென்று டெல்லி செங்​கோட்டை பகு​தி​யில் வெடிக்​கச் செய்து தற்​கொலைத் தாக்​குதல் நடத்​தி​னார். இதில், 13 பேர் உயி​ரிழந்​தனர். இந்த தாக்​குதலின் பின்​னணி​யில் முக்​கிய குற்​ற​வாளி​யாக சந்​தேகிக்​கப்​பட்ட மருத்​து​வர் ஷாகின் சயீத் கைது செய்​யப்​பட்​டார். அவரிடம் நடத்​தப்​பட்ட விசா​ரணை​யில் பாகிஸ்​தானைச் சேர்ந்த ஜெய்​ஷ்-இ-​முகமது தீவிர​வாத அமைப்​பின் பெண்​கள் பிரி​வின் தலை​வ​ராக இந்​தி​யா​வில் செயல்​பட்​டது தெரிய​வந்​தது.

feedburner
21 நவ.
3 நிமிடம் படிக்க
நவ.19-ல் எம்எல்ஏக்கள் கூட்டம்; நவ.20-ல் பதவியேற்பு: பிஹார் பாஜக தலைவர் திலிப் ஜெய்ஸ்வால்
இந்தியா

நவ.19-ல் எம்எல்ஏக்கள் கூட்டம்; நவ.20-ல் பதவியேற்பு: பிஹார் பாஜக தலைவர் திலிப் ஜெய்ஸ்வால்

பாட்னா: பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டம் நாளை நடைபெறும். பின்னர், தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்எல்ஏக்களின் கூட்டம் நடைபெறும். இதையடுத்து நாளை மறுநாள் பதவியேற்பு விழா நடைபெறும் என்று பிஹார் மாநில பாஜக தலைவர் திலிப் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய திலிப் ஜெய்ஸ்வால், "நாளை காலை 10 மணிக்கு பாட்னாவில் உள்ள பாஜக தலைமையகமான அடல் சபஹாரில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டம் நடைபெறும். இதில், கட்சியின் சட்டப்பேரவைக் குழு தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார். இதில், சட்டப்பேரவை உறுப்பினர்களும், கட்சியின் மேலிட பார்வையாளர்களும் கலந்து கொள்வார்கள். இதனைத் தொடர்ந்து என்டிஏ கூட்டம் நடைபெறும்.

feedburner
21 நவ.
3 நிமிடம் படிக்க
மத்திய பிரதேசத்தில் யூடியூப் பார்த்து போலி ரூபாய் நோட்டுகளை அச்சடித்தவர் கைது
இந்தியா

மத்திய பிரதேசத்தில் யூடியூப் பார்த்து போலி ரூபாய் நோட்டுகளை அச்சடித்தவர் கைது

போபால்: ம.பி.​யில் யூடியூப் பார்த்து போலி ரூபாய் நோட்​டு​களை அச்​சடித்​தவர் கைது செய்​யப்​பட்​டுள்​ளார். மத்​திய பிரதேச மாநிலம் போபாலில் ஒரு பள்​ளிக்கு அருகே ஒரு​வர் போலி 500 ரூபாய் நோட்​டு​களை புழக்​கத்​தில் விட முயற்​சிப்​ப​தாக கடந்த வெள்​ளிக்​கிழமை போலீ​ஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்​தது. இதையடுத்​து, பிப்​லானி காவல் நிலை​யத்​தின் குற்​றப் பிரிவு போலீ​ஸார் சம்பவ இடத்​துக்​குச் சென்று விவேக் யாதவ் (21) என்​பவரை கைது செய்​தனர்.

feedburner
21 நவ.
3 நிமிடம் படிக்க
என்டிஏ அரசுக்கு லாலு மகன் தேஜ் பிரதாப் ஆதரவு
இந்தியா

என்டிஏ அரசுக்கு லாலு மகன் தேஜ் பிரதாப் ஆதரவு

பிஹார்: லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ், ராஷ்டிரிய ஜனதா தளத்தில் இருந்து விலகி ஜனசக்தி ஜனதா தளம் என்ற புதிய கட்சியை தொடங்கி உள்ளார். பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் அவரது புதிய கட்சி 22 தொகுதிகளில் போட்டியிட்டது. மஹுவா சட்டப்பேரவைத் தேர்தலில் தேஜ் பிரதாப் யாதவ் போட்டியிட்டார். அவர் உட்பட ஜன சக்தி ஜனதா தளத்தின் அனைத்து வேட்பாளர்களும் தோல்வியை தழுவினர். இதுதொடர்பாக பாட்னாவில் உள்ள தேஜ் பிரதாப் யாதவின் வீட்டில் கட்சி தலைவர்கள் நேற்று ஆலோசனை நடத்தினர். இதன்பிறகு கட்சியின் செய்தித் தொடர்பாளர் பிரேம் யாதவ் கூறும்போது, “தேர்தல் தோல்வி குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினோம். அடுத்த கட்டமாக கட்சியை வலுப்படுத்த நடவடிக்கை எடுப்போம். பிஹாரில் பதவியேற்க உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) அரசுக்கு எங்கள் கட்சி தார்மிக அடிப்படையில் ஆதரவு அளிக்கும்’’ என்று தெரிவித்தார்.

feedburner
21 நவ.
3 நிமிடம் படிக்க