
பள்ளிக்கரணை சதுப்பு நில விவகாரம்: தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை விளக்கம்
சென்னை: ‘ராம்சார் தலம் அமையும் நிலங்கள் வரையறுக்கப்படாததால், தற்போதைய பள்ளிக்கரணை சதுப்புநில காப்புக்காட்டு எல்லைகளுக்கு வெளியே உள்ள தனியார் பட்டா நிலங்களுக்கு மட்டுமே ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது’ என சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை விளக்கம் அளித்துள்ளது. சென்னை பெரும்பாக்கத்தில், பள்ளிக்கரணை காப்புக்காடு ராம்சார் தலத்தில், அடுக்குமாடி கட்டிட திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. இதுதொடர்பாக, பாஜக, அதிமுக தரப்பிலும் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்த கட்டுரை feedburner ஆல் வெளியிடப்பட்டது மற்றும் சுற்றுச்சூழல் செய்திகளை உள்ளடக்கியது.