தமிழ் டைம்ஸ் logo
PM Modi: இஸ்லாமாபாத்திற்கு செல்கிறாரா பிரதமர் மோடி? அழைப்பிதழை உறுதி செய்த பாக்., - அரசின் முடிவு என்ன?
31 ஜூலை, 2026
abplive
இந்தியா

PM Modi: இஸ்லாமாபாத்திற்கு செல்கிறாரா பிரதமர் மோடி? அழைப்பிதழை உறுதி செய்த பாக்., - அரசின் முடிவு என்ன?

PM Modi: ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்படும் என பாகிஸ்தான் தரப்பு உறுதி செய்துள்ளது. பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கும் பாகிஸ்தான் இஸ்லாமாபாத்தில் நடைபெறும் 2027 ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சி மாநாட்டிற்கு பிரதமர் நரேந்திர மோடி அழைக்கப்படுவார் என்றும், அமைப்பின் நிலையான நடைமுறைகளுக்கு இணங்கி அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் அழைப்புகள் அனுப்பப்படும் என்றும் பாகிஸ்தான் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் பேசிய பாகிஸ்தான் வெளியுறவு அலுவலக செய்தி தொடர்பாளர், இந்தியா உட்பட அனைத்து ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உறுப்பு நாடுகளின் தலைவர்களுக்கும் அரசாங்கத் தலைவர்களுக்கும் அழைப்பிதழ்கள் அனுப்பப்படும் என்று தெரிவித்தார். அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் அழைப்பிதழ்களை அனுப்புவது மாநாட்டை நடத்தும் நாட்டின் கடமை என்றும், அது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) நிறுவப்பட்ட நெறிமுறையின்படி மேற்கொள்ளப்படும் என்றும் உறுதியளித்தார். பாகிஸ்தான் செல்கிறாரா பிரதமர் மோடி? உறுப்பு நாடுகளுக்கு மாநாட்டிற்கான அழைப்பிதழ் வழங்குவது என்பது, தலைமையேற்கும் நாட்டின் ஒரு கடமையாகும். இது நிறுவப்பட்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) நெறிமுறையின்படி வழங்கப்படும் என்று பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) சுழற்சிமுறைத் தலைமை மற்றும் நடத்தும் ஏற்பாடுகளின் கீழ், 2027-ஆம் ஆண்டுக்கான உச்சிமாநாட்டை பாகிஸ்தான் நடத்தவுள்ளது. இந்த உச்சிமாநாடு, பிராந்தியப் பாதுகாப்பு, பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் பிற மூலோபாயப் பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்காக உறுப்பு நாடுகளின் தலைவர்களை ஒன்றிணைக்கும், அந்த அமைப்பின் மிக முக்கியமான வருடாந்திரக் கூட்டங்களில் ஒன்றாகும். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) முழு உறுப்பினராக இருப்பதால், அந்நிறுவனம் பின்பற்றும் வழக்கமான ராஜதந்திர செயல்முறையின் ஒரு பகுதியாக இந்தியாவுக்கு அழைப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையேற்று பிரதமர் மோடி பங்கேற்பாரா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். ஆப்ரேஷன் சிந்தூருக்குப் பிறகு பாகிஸ்தான் உடனான இந்தியாவின் உறவு என்பது மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஜெய்சங்கருடன் ஆலோசனை? இதனிடையே, மணிலாவில் நடைபெறும் ஆசியான் கூட்டங்களின் இடையே, வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சருக்கும் இடையே சந்திப்பு நடைபெறுவதற்கான சாத்தியக்கூறு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அத்தகைய சந்திப்புக்காக இந்தியா தரப்பில் எந்தக் கோரிக்கையும் வந்ததாக இஸ்லாமாபாத்துக்குத் தெரியாது என்று பாகிஸ்தான் செய்தித் தொடர்பாளர் பதிலளித்துள்ளார். பிராந்தியக் கூட்டத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை தொடர்பாக எந்த தகவலும் வெளியாகவில்லை. இதையும் படியுங்கள்: Skoda Kylaq Rivals: ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் வரப்போகும் 3 SUV-விக்கள் - இல்லாத வசதிகளே இல்லை, கைலாக்கிற்கு சவால் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் தற்போது சீனா, ரஷ்யா, இந்தியா, பாகிஸ்தான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், ஈரான் மற்றும் பெலாரஸ் ஆகிய 10 உறுப்பு நாடுகள் உள்ளன. பிராந்தியம் முழுவதும் அமைதி, பாதுகாப்பு, நிலைத்தன்மை மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன், இந்த அமைப்பு 2001 ஆம் ஆண்டு ஜூன் 15 ஆம் தேதி பீஜிங்கில் நிறுவப்பட்டது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சிமாநாடு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. மேலும் இதனை நடத்தும் நாடு, அந்த அமைப்பால் ஒப்புக்கொள்ளப்பட்ட கட்டமைப்புக்கு ஏற்ப உறுப்பு நாடுகளிடையே சுழற்சி முறையில் அமைகிறது.  

இந்த கட்டுரை abplive ஆல் வெளியிடப்பட்டது மற்றும் இந்தியா செய்திகளை உள்ளடக்கியது.