
Heart Attack: 60 நொடிகள் போதும்..! மாரடைப்பை தடுக்க உதவும் 5 பழக்க வழக்கங்கள் - எக்ஸ்பேர்ட்ஸ் அட்வைஸ்
Preventing Heart Attack: மாரடைப்பு அபாயத்தைக் குறைக்கவும், நீண்டகால இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவக்கூடிய ஆலோசனைகள் கீழே பட்டியலிடப்பட்டுளன. உயிரை பறிக்கும் மாரடைப்பு ஆபத்தான அவசரநிலை ஏற்படுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே சில முக்கியமான காரணிகளை கண்டறிந்து சரிசெய்ய முடிந்தாலும், மாரடைப்புகள் அடிக்கடி திடீரென நிகழ்கின்றன. எனவே மக்கள் தங்கள் இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்க கவனம் செலுத்த வேண்டிய 5 முக்கிய வழிகள் சிலவற்றை பெரும்பாலான மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். மக்கள் தங்கள் இதய ஆரோக்கியத்தைப் பற்றி ஒரு நிமிடம் கூட சிந்திக்க முடிந்தால், இந்த நடைமுறைகளுக்குத்தான் அவர்கள் முன்னுரிமை அளிக்க முடியும். பல தசாப்தங்களாக நடத்தப்பட்ட இருதய நோய்கள் தொடர்பான ஆய்வுகள், புகைப்பிடித்தல், உயர் ரத்த அழுத்தம், அதிகரித்த கொலஸ்ட்ரால், இன்சுலின் எதிர்ப்புத்தன்மை மற்றும் சமூகத் தனிமைப்படுத்தல் ஆகிய அனைத்தும் இதய நோயின் அபாயத்தைப் பாதிக்கின்றன என்பதை நிரூபித்துள்ளன. மாரடைப்பை தடுக்க ஆலோசனைகள்: 1. புகைப்பிடிப்பதை நிறுத்துங்கள்: ஒவ்வொரு சிகரெட்டும் இதயத்தைச் சேதப்படுத்துகிறது. இதய ஆரோக்கியத்திற்கான மிக முக்கியமான நடவடிக்கை, "புகை பிடிக்காதீர்கள்" என்பதுதான் மருத்துவர்களின் பிரதான ஆலோசனை. புகைப்பிடித்தல் ரத்த நாளங்களை அழித்து, ரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் அளவைக் குறைத்து, தமனிகளுக்குள் கொழுப்புப் படிவுகள் சேர்வதை வேகப்படுத்துவதால், அது மாரடைப்புக்கான மிகப்பெரிய ஆபத்துக் காரணிகளில் ஒன்றாகத் தொடர்ந்து இருந்து வருகிறது புகைப்பிடிப்பதை நிறுத்திய சிறிது நேரத்திலேயே உடல் தன்னைத்தானே குணப்படுத்தத் தொடங்குவதாகவும், காலப்போக்கில் இதயமும் இரத்த ஓட்டமும் சீராக மேம்படுவதாகவும் சுகாதார வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். 2. ரத்த அழுத்தத்தைக் கண்காணியுங்கள் நீண்ட கால இதய ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமான அம்சங்களில் ஒன்றாக மக்கள் தங்களது ரத்த அழுத்தத்தைக் கவனத்தில் கொள்ளுமாறும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். உயர் ரத்த அழுத்தம் பெரும்பாலும் வெளிப்படையான அறிகுறிகள் இல்லாமல் உருவாகி, படிப்படியாக தமனிகளை அழித்து, இதயத்தைக் கடினமாக உழைக்க வைப்பதால், இதனை 'அமைதியான கொலையாளி' என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். அமெரிக்க இதய சங்கத்தின் கூற்றுப்படி, கட்டுப்படுத்தப்படாத உயர் ரத்த அழுத்தம் மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் இதய செயலிழப்பு ஏற்படும் அபாயத்தை கணிசமாக அதிகரிக்கிறது. 3. கொலஸ்ட்ராலை கவனியுங்கள் கொலஸ்ட்ரால் அளவைக் கவனத்தில் கொள்ள வேண்டியதும் அவசியம் என மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர். இதன் அளவுகளை அறிந்துகொள்வது மிகவும் முக்கியம், ஏனெனில் சில சமயங்களில் 'கெட்ட கொலஸ்ட்ரால்' என்று அழைக்கப்படும் அதிகப்படியான குறைந்த அடர்த்தி லிப்போபுரோட்டீன் (LDL), தமனிகளின் உள்ளே அடைப்புகளை ஏற்படுத்தி, இதயத்திற்குச் செல்லும் ரத்த ஓட்டத்தைக் கட்டுப்படுத்துகிறது. இதையும் படியுங்கள்: Chennai Bengaluru Bullet Train: ரூ.18,000 கோடி பட்ஜெட், சென்னை டூ பெங்களூரு புல்லட் ரயில், 350KM ஸ்பீட், 73 நிமிடங்கள் போதும் பிரிட்டிஷ் இதய அறக்கட்டளையின்படி, உடல் பருமன், நீரிழிவு நோய் அல்லது குடும்பத்தில் இதய நோய் வரலாறு போன்ற ஆபத்துக் காரணிகளைக் கொண்டவர்கள் அடிக்கடி பரிசோதனை செய்வது மிகவும் முக்கியமானதாகும். ஏனெனில் அதிக கொலஸ்ட்ரால் பொதுவாக எந்த அறிகுறிகளையும் காட்டுவதில்லை. ஆரோக்கியமான உணவு, அடிக்கடி உடற்பயிற்சி செய்தல் மற்றும் தேவைப்பட்டால், பரிந்துரைக்கப்பட்ட கொலஸ்ட்ரால் குறைக்கும் மருந்துகள் மூலம் இதய நோய்க்கான அபாயத்தை கணிசமாகக் குறைக்க முடியும். 4. நீரிழிவு நோய் உடலின் செல்கள் இன்சுலினுக்குக் குறைந்த உணர்திறன் கொண்டதாக மாறி, ரத்தச் சர்க்கரை அளவை உயர்த்தும் ஒரு கோளாறான இன்சுலின் எதிர்ப்பைத் தடுப்பது அவசியமாகிறது. சிகிச்சை பெறாவிட்டால், இன்சுலின் எதிர்ப்பு, இருதய நோய்க்கான ஒரு முக்கிய ஆபத்துக் காரணியான வகை 2 நீரிழிவு நோயாக உருவாகக்கூடும். அதிகம் பதப்படுத்தப்பட்ட உணவுகளைக் குறைப்பது, ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிப்பது, உடல் செயல்பாடுகளை அதிகரிப்பது மற்றும் உணவைச் சீரமைப்பது ஆகியவை இன்சுலின் உணர்திறனை மேம்படுத்த உதவும் என்று அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) கூறுகின்றன. 5. தனிமையின் தாக்கம் தனிமையைத் தவிர்ப்பது மிகவும் அவசியமானதாம். ஆழமான சமூக உறவுகளைப் பேணுவது பொது ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது. உணர்ச்சி நலனையும் உடல் நலனையும் பிரிக்கக்கூடாது என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். அமெரிக்க இதய சங்கம் வெளியிட்ட ஆய்வின்படி, நாள்பட்ட தனிமையும் சமூகத் தனிமைப்படுத்தலும் இருதய நோய், மனச்சோர்வு மற்றும் அகால மரணம் ஆகியவற்றின் அபாயத்தை அதிகரிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த கட்டுரை abplive ஆல் வெளியிடப்பட்டது மற்றும் சுகாதாரம் செய்திகளை உள்ளடக்கியது.