
சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் 47 சட்டவிரோத ரிசார்ட்டுகளை மூட உத்தரவு
சென்னை: சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் சட்டவிரோதமாக செயல்படும் 47 ரிசார்ட்டுகளை உடனடியாக மூட தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ள உயர் நீதிமன்றம், அப்பகுதிகளில் பேட்டரி கார்களை இயக்குவது குறித்தும் தமிழக அரசு பதிலளிக்க அறிவுறுத்தியுள்ளது. சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் தேசிய வன விலங்குகள் வாரியம், மலைப்பகுதி பாதுகாப்பு ஆணையம் ஆகியவற்றின் ஒப்புதல் பெறாமல் சட்டவிரோதமாக செயல்படும் ரிசார்ட்டுகளை மூடக்கோரி கோவையைச் சேர்ந்த ஒலி விழிப்புணர்வு இயக்கத்தின் நிறுவனரான கற்பகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2022-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த கட்டுரை feedburner ஆல் வெளியிடப்பட்டது மற்றும் சுற்றுச்சூழல் செய்திகளை உள்ளடக்கியது.