
மாணவர்கள் உயர்கல்விக்கு பிணையில்லா கடன்: சிஎம் விஜய் திட்டம்!- தனி அலுவலர் நியமனம்!
தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் 06.07.2026 அன்று நடைபெற்ற உயர்கல்வித் துறை ஆய்வுக் கூட்டத்தில் பொறியியல், பலவகை தொழில்நுட்பம், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணாக்கர் சேர்க்கையினை மேலும் அதிகரிப்பதற்கும் பொருளாதார காரணங்களால் எந்தவொரு மாணவரும் உயர்கல்வியை இடைநிறுத்த வேண்டிய நிலை ஏற்படாத வகையில், தகுதியான மாணாக்கர்களுக்கு பிணையில்லா கல்விக் கடன் (Collateral Free Education Loan) வழங்குவதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்த முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். ஒவ்வொரு மாவட்டத்துக்கும் அலுவலர் நியமனம் அதன்படி, மாநிலம் முழுவதும் கல்விக்கடன் வழங்குவதை திறம்பட செயல்படுத்தும் நோக்கில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் உதவி பேராசிரியர் நிலையில் ஒருங்கிணைப்பு அலுவலர் (Facilitation Officer) ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த சேவைக்கென ஒவ்வொரு ஒருங்கிணைப்பு அலுவலருக்கும் பிரத்தியேகமான அலைபேசி எண் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஒருங்கிணைப்பு அலுவலர்கள். பொறியியல், பலவகை தொழில்நுட்பம். கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்க்கை பெற்றுள்ள மாணாக்கர்கள் கல்விக் கடன் பெறுவதற்கு தேவையான வழிகாட்டுதல்களையும், உதவிகளையும் வழங்குவார்கள். ஒருங்கிணைப்பு அலுவலர்களுக்கு வங்கிக் கடன் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்த பயிற்சி முன்னணி வங்கிகளின் உயர் அலுவலர்கள் வாயிலாக அளிக்கப்பட்டுள்ளது. இணைப்பு பாலம் கல்விக் கடன் பெற விரும்பும் மாணாக்கர்கள் இந்த ஒருங்கிணைப்பு அலுவலர்களை தொடர்பு கொண்டால் கல்வி கடன் குறித்த அனைத்து விவரங்களையும் மாணாக்கர்களுக்கு வழங்குவர். அத்தோடு மாவட்ட முன்னணி வங்கி மேலாளரையும் தொடர்பு கொண்டு மாணாக்கர்களுக்கும் வங்கிக்கும் ஒரு இணைப்பு பாலமாக ஒருங்கிணைப்பு அலுவலர்கள் செயல்படுவர். ஏற்கனவே மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் சுல்லூரிகளில் மாணாக்கர் சேர்க்கை மற்றும் உதவி மையமாக செயல்படும். கட்டுப்பாட்டு அறையில் உள்ள பொறுப்பு அலுவலர் (Nodal Officers அவர்களுடன் இந்த ஒருங்கிணைப்பு அலுவலர்கள் இணைந்து செயல்படுவர். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒருங்கிணைப்பாளர் மூலம் பெறப்படுகின்ற கல்வி கடன் குறித்த தகவல்கள் மற்றும் வங்கி விவரங்கள் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு தொடர்ந்து தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சித் தலைவர் அனைத்து வங்கிகளின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் (District Coordinators) மற்றும் கல்விக் கடன் ஒருங்கிணைப்பாளர்கள் (Facilitation Officers) மற்றும் பொறுப்பு அலுவலர்களுடன் (Nodal Officer) அவ்வப்போது ஆய்வுக் கூட்டம் நடத்தி வங்கி வாரியாக மாணாக்கர்களுக்கு கல்விக்கடன் எளிதாகவும், விரைவாகவும் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்வார். உடனடியாக கல்விக்கடன் இந்த ஆய்வுக் கூட்டத்தில் கல்லூரி வாரியாகவும் வங்கிகள் வாரியாகவும் கல்விக்கடன் பெறுவதற்கு விண்ணப்பிக்கப்பட்ட மாணாக்கர்களின் எண்ணிக்கை வங்கிகள் மூலம் வழங்கப்பட்டுள்ள கடன்களின் விவரம் மற்றும் நிலுவையிலுள்ள விண்ணப்பங்களின் மீது உடனடியாக கல்விக்கடன் வழங்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்யப்படும். தமிழ்நாடு அரசின் இந்த முன்னெடுப்பின் மூலம் பொருளாதார காரணங்களால் உயர்கல்வி பாதிக்கப்படாமல் தகுதியான பொறியியல், பலவகை தொழில்நுட்பம், கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணாக்கர்கள் எளிதில் கல்விக் கடன் பெற்று தங்களது கல்வியைத் தொடரும் வாய்ப்பு உறுதி செய்யப்படுவதுடன் உயர்கல்வித் துறையில் மாணாக்கர் சேர்க்கையும் மேலும் அதிகரிக்கும் என்று கல்லூரிக் கல்வி இயக்ககம் ஆணையர் தெரிவித்துள்ளார்.
இந்த கட்டுரை abplive ஆல் வெளியிடப்பட்டது மற்றும் வணிகம் செய்திகளை உள்ளடக்கியது.