
28 நவம்பர், 2025
feedburner
சுற்றுச்சூழல்மான்கள் வாழும் கள்ளங்காடு பகுதி பாதுகாக்கப்படுமா?
மதுரை மாவட்டம், மேலூர் வட்டம் வஞ்சிநகரம், பூதமங்கலம் மற்றும் கொடுக்கம்பட்டி ஆகிய 3 ஊராட்சிகளை உள்ளடக்கிய கள்ளங்காடு பகுதி 100 ஏக்கரில் அமைந்துள்ளது. மதுரை இயற்கை மற்றும் பண்பாட்டு அறக்கட்டளை ஆய்வுக்குழுவினரால் இப்பகுதியில் உள்ள பண்பாடு மற்றும் பல்லுயிரிகள் குறித்த ஆய்வுகள் நடைபெற்றுள்ளன. இதில் இங்கு பழமையான கோயில் காடுகள் உள்ளதும், இங்கு உசிலை, குருந்தம், விடத்தலை, களா, காரை, ஆத்தி, ஆலம், அரசம், தைலம், குறிஞ்சி, திருகுகள்ளி, செங்கத்தாறி, மஞ்சநத்தி, சிறுபூனைக்காலி உள்ளிட்ட தாவரங்கள் பெருமளவில் காணப்படுகிற தகவல் வெளியானது.
இந்த கட்டுரை feedburner ஆல் வெளியிடப்பட்டது மற்றும் சுற்றுச்சூழல் செய்திகளை உள்ளடக்கியது.