தமிழ் டைம்ஸ் logo
முகப்புக்கு திரும்பு

world

27 கட்டுரைகள் world இல்

விளம்பர இடம்

உங்கள் விளம்பரத்தை இங்கே காட்சி செய்யலாம்

இறைச்சிக்காக கடத்தப்பட்ட 7 நாய்கள்; ஓடும் லாரியிலிருந்து தப்பித்து 17 கிமீ தூரம் பயணம் - viral video
உலகம்

இறைச்சிக்காக கடத்தப்பட்ட 7 நாய்கள்; ஓடும் லாரியிலிருந்து தப்பித்து 17 கிமீ தூரம் பயணம் - viral video

சீனாவின் ஜிலின் மாகாணத்தில் உள்ள சாங்சுன் பகுதியில், நாய் இறைச்சி கடைக்காக கடத்திச் செல்லப்பட்ட ஏழு வளர்ப்பு நாய்கள், ஓடும் லாரியில் இருந்து சாமர்த்தியமாகத் தப்பித்து, சுமார் 17 கிலோமீட்டர் தூரம் ஒன்றாகவே பயணித்துத் தங்களது கிராமத்திற்குத் திரும்பியுள்ளன.இந்த நாய்கள் நெடுஞ்சாலையில் வரிசையாக நடந்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.கடந்த மார்ச் 16-ம் தேதி, ஒரு நாய் இறைச்சிக் கடையைச் சேர்ந்த நபர்கள் இந்த நாய்களைத் திருடி லாரியில் ஏற்றிச் சென்றுள்ளனர். ஆனால், இடையில் அந்த லாரியில் இருந்து தப்பித்த இந்த நாய்கள், வழி தெரியாத நிலையிலும் ஒன்றுக்கொன்று துணையாக நின்றபடி தங்கள் இருப்பிடத்தை நோக்கி நடக்கத் தொடங்கின.இதில் ஜெர்மன் ஷெப்பர்ட், கோல்டன் ரெட்ரீவர், லாப்ரடார் மற்றும் கோர்கி உள்ளிட்ட பல்வேறு இனங்களைச் சேர்ந்த நாய்கள் இடம்பெற்றிருந்தன.இந்த நாய்கள் நெடுஞ்சாலையில் கூட்டமாகச் செல்வதைப் பார்த்த லூ என்ற நபர், அவற்றிற்கு உதவ முயன்றார். ஆனால், அந்த நாய்கள் எதற்கும் நிற்காமல் தங்களது இலக்கை நோக்கி உறுதியாகச் சென்றன. நாய்களின் நடமாட்டத்தைக் கவனித்த தன்னார்வலர்கள், அவை பாதுகாப்பாக வீடு திரும்புவதை உறுதி செய்தனர். இந்த நாய்கள் அனைத்தும் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவை என்றும், அவை எப்போதும் ஒன்றாக விளையாடும் பழக்கம் கொண்டவை என்பதால் இவ்வளவு தூரம் பிரியாமல் ஒன்றாகவே பயணித்துள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.China: Heroic corgi leads 7 stolen dogs back home after daring escape from meat truck, travel back 17 kilometers - Watch the viral video pic.twitter.com/KNfOvKc1h9— NDTV (@ndtv) March 24, 2026 இரண்டு நாட்களாக 17 கி.மீ தூரம் அலைந்து திரிந்த இந்த நாய்கள், இறுதியாக மார்ச் 18 அன்று தங்கள் கிராமத்தை அடைந்து உரிமையாளர்களிடம் சேர்ந்தன. ஒரு நாய் மட்டும் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டது.சீனாவில் நாய் திருடுவது ஒரு குற்றச் செயலாகும். இந்தச் சம்பவம் விலங்குகளின் அறிவுத்திறனையும், அவற்றுக்கு இடையே உள்ள பிணைப்பையும் உலகிற்கு உணர்த்தும் வகையில் அமைந்துள்ளதாக நெட்டிசன்கள் நெகிழ்ச்சியுடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

vikatan
30 மார்.
3 min read
போரை சீக்கிரம் முடிக்க நினைத்த நெதன்யாகு; 'மாஸ்டர் பிளானை' தகர்த்த ஈரான் மக்கள்! | Full Detail
உலகம்

போரை சீக்கிரம் முடிக்க நினைத்த நெதன்யாகு; 'மாஸ்டர் பிளானை' தகர்த்த ஈரான் மக்கள்! | Full Detail

நாளையோடு ஈரான் போர் நான்கு வாரங்களை நிறைவு செய்யப்போகிறது.'ஈரான் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது...', 'சிறப்பான பேச்சுவார்த்தை இது'; 'அமெரிக்காவிற்கு பரிசாக ஈரான் 10 கப்பல்களை ஹார்முஸ் ஜலசந்தி வழியாக அனுமதித்துள்ளது' என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இஷ்டத்திற்கு அடுக்கிக் கொண்டே போகிறார். 'இதை எதையுமே நாங்கள் செய்யவில்லை' என்று முழுமையாக மறுக்கிறது ஈரான்.ட்ரம்போ, 'நாங்கள் மதிக்கும் ஈரான் தலைவர் ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்' என்று கூறுகிறார். ஆனால், அந்தத் தலைவர் யார் என்று தான் தெரியவில்லை. ஒருவேளை, அது ட்ரம்ப் அரசாங்கத்திற்கு மட்டும் தெரிந்த ரகசியமாக இருக்கலாம். ட்ரம்ப்கமேனி இறப்புக்கு 48 மணிநேரத்திற்கு முன்.! ட்ரம்ப், நெதன்யாகு போன்கால் - என்ன நடந்தது?ட்ரம்ப் மீண்டும் மீண்டும் இப்படி பேசுவது... தாக்குதலை 6 நாள்களுக்கு... 10 நாள்களுக்குத் தள்ளி வைப்பதைப் பார்த்தாலே தெரிகிறது, 'அவர் விரைவில் ஈரான் போரை முடிக்க நினைக்கிறார்' என்று. ஈரானின் 'செக்' ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடி உலக அளவிலான எரிசக்தி மற்றும் எரிவாயு வணிகத்திற்கு மிகப்பெரிய 'செக்'கை வைத்துவிட்டது. இதனால், பெரும்பாலான உலக நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.இதற்கு, அமெரிக்கா மட்டும் விதிவிலக்கு ஆகாது என்பது நாம் அறிந்ததே.ஈரான் தங்களை சுற்றியுள்ள அமெரிக்க நட்பு நாடுகளை சுற்றி சுற்றி தாக்கி வருகிறது. இதனால், அமெரிக்கா மீது சற்று அதிருப்தியில் தான் இருக்கின்றன அந்த நாடுகள். இதில் மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்கா அமைத்துள்ள படைத்தளம், அமெரிக்காவின் படைவீரர்கள் என பலரும் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றனர். இப்படி பல முனை தாக்குதலில் தள்ளாடி வருகிறார் ட்ரம்ப். இஸ்ரேல் - ஈரான்'உயிரோடு தான் இருக்கிறேன்' - நிரூபிக்க போராடும் நெதன்யாகு: வீடியோக்களும், சர்ச்சைகளும்! |Full Detailஇஸ்ரேல் - ஈரானின் 'ஈசி' டார்க்கெட் இந்தத் தள்ளாட்டத்திற்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு போட்ட ஒரு திட்டம் தவிடுபொடி ஆனதே காரணம். மேற்கு ஆசிய நாடுகள், அமெரிக்கா என்று பேசிக்கொண்டிருந்த இடத்தில், திடீரென நெதன்யாகு எங்கே வந்தார் என்று தானே கேள்வி எழுகிறது.ஈரான் இஸ்ரேலுக்கு தான் மிகப்பெரிய அச்சுறுத்தல். ஹிஸ்புல்லா போன்று இஸ்ரேலுக்கு எதிராக உருவாகும் தீவிரவாதக் குழுக்களுக்கு ஈரான் தான் நிதியுதவி அளித்து வளர்த்து வருகிறது. ஈரானுக்கும், இஸ்ரேலுக்கும் 1,500 கிலோ மீட்டர் தூரம் தான். ஆனால், அமெரிக்காவிற்கோ 11,600 கிலோ மீட்டர். இஸ்ரேலை தாக்க ஈரான் ஏவுகணைக்கு 12 நிமிடங்கள் போதும். ஆனால், ஈரானில் இருந்துகொண்டு அமெரிக்காவைக் குறி வைக்கவே முடியாது. ஈரான் அமெரிக்காவைத் தாக்க வேண்டுமென்றால் இரண்டே வழிகள் தான் உள்ளன.ஒன்று, மேற்கு ஆசிய நாடுகளில் உள்ள அமெரிக்காவின் படைத்தளங்கள் மற்றும் சொத்துகளை அழிப்பது. மற்றொன்று, மேற்கு ஆசிய நாடுகளில் பிரச்னையை ஏற்படுத்தி, உலக பொருளாதாரத்திற்கு குந்தகம் விளைவிப்பது. இந்த இரண்டையுமே ஈரான் செய்யாது. காரணம், தாங்கள் ஆரம்பித்தால் அமெரிக்கா சும்மா விடாது என்று ஈரானுக்கு நன்றாகவே தெரியும். அதனால், அது வீண் வம்பிற்கு போகாது. ஆனால், ஈரானும், இஸ்ரேலும் பக்கத்து பிராந்திய நாடுகளே. அதனால், ஒன்று வளர்வது இன்னொன்றுக்குப் பிடிக்காது. இது இயற்கையானது.இஸ்ரேல் தன்னுடைய வாழ்வாதாரத்திற்குப் பிரச்னை என்றால், பொறுத்துக்கொண்டு இருக்காது. இதற்கு பாலஸ்தீனப் போரே நல்ல உதாரணம்.அதனால் தான், இஸ்ரேல் ஈரானைப் பெரிய அச்சுறுத்தலாக பார்க்கிறது. நெதன்யாகுஎங்கேயும் ஃபாலோ செய்யும் Meta & Youtube; '6 மில்லியன் டாலர் நஷ்ட ஈடு' - அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்புஇஸ்ரேலின் மாஸ்டர் பிளான் இஸ்ரேலுக்கு ஈரான் முழுவதுமாக அழிய வேண்டும் என்பதெல்லாம் இல்லை. ஈரானில் உள்ள ஆட்சியை மாற்றினாலே போதுமானது. அயோதுல்லா அலி கமேனி அந்தப் பிராந்தியத்தில் சக்திவாய்ந்த தலைவர்களில் ஒருவர் என்பது மறுப்பதற்கில்லை. அவரை இஸ்ரேலால் கண்டிப்பாக வழிக்குக் கொண்டுவர முடியாது. அவர் ஈரானை முன்னிறுத்தியே காய்களை நகர்த்துவார். அவரை அகற்றிவிட்டாலே, இஸ்ரேலுக்கு உள்ள அச்சுறுத்தல் போய்விடும். நாட்டில் பெருகும் விலைவாசி, ஊழல், நாணய மதிப்பிழப்பு போன்றவற்றை எதிர்த்து தெருக்களில் இறங்கி போராட தொடங்கினர் ஈரான் மக்கள். இது கடந்த டிசம்பர் மாதம் தொடங்கியது. இதைப் பயன்படுத்திக் கொள்ள தான் நெதன்யாகு நினைத்தார். எப்படியோ கமேனியை கொன்றுவிட்டால், ஈரான் மக்கள் களத்தில் இறங்கி புரட்சி ஏற்படுத்துவார்கள். விளைவு, ஆட்சி மாற்றம் ஏற்படும். இதனால், போர் நீண்ட காலத்திற்கு செல்லாது... கமேனியை மட்டும் அழித்துவிட்டால் போதும் என்பது நெதன்யாகு திட்டம். இதை கூறி தான், ட்ரம்பை உடனடியாக போருக்கு சம்மதிக்க வைத்தார் என்று சமீபத்தில் வெளியான அறிக்கைகள் கூறுகின்றன. அயதுல்லா கமேனிஈரான் போர் நிறுத்தம்: ட்ரம்ப்-ன் 15 அமைதி பரிந்துரைகளுக்கு ஈரான் முன்வைக்கும் '5' நிபந்தனைகள் என்ன?இப்படி நெதன்யாகு போட்ட திட்டத்தை ஈரான் மக்கள் ஏன் செயல்படுத்தவில்லை என்கிற கேள்விக்கான பதில்களை அரசியல் பார்வையாளர்கள் தருகின்றனர்...> ஈரானின் பாதுகாப்பு படை, 'இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை'. டிசம்பர் மாதம் தொடங்கிய மக்கள் போராட்டத்தைக் கடுமையாக ஒடுக்கியது இந்தப் படை. இதன் தாக்குதலில் கிட்டத்தட்ட 30,000 பேர் கடந்த ஜனவரி முதல் இறந்திருக்கிறார்கள் என்கிற தரவுகள் வெளியாகி உள்ளன. இப்போது போராட்டத்தைத் தொடங்கினால், இந்தப் படை இன்னமும் ஆக்ரோஷமாக தாக்கும் என்கிற பயம் ஈரான் மக்கள் இடையில் இருக்கிறது. எங்கேயும் கூட்டம் கூடி விடக்கூடாது என்று ஈரான் அரசாங்கம் மிக தெளிவாக இருக்கிறதாம். இதனால், ஆங்காங்கே கண்காணிப்புகள் இருந்துகொண்டே இருக்கிறது.> ஈரான் ஆட்சிக்கு எதிராக சில மக்கள் அதிருப்தியில் உள்ளனர். ஆனால், அவர்கள் யாரும் நெதன்யாகுவை நம்பவில்லை. காரணம், இஸ்ரேல் பல ஆண்டுகளாக ஈரானின் பொருளாதாரத்தின் மீது குறி வைத்து வருகிறது. இதனால், அங்கே ஈரானின் சாதாரண மக்களும் கடுமையாக பாதித்துள்ளனர். > அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலை ஈரான் மக்கள் 'வெளிநாட்டினரின் தாக்குதலாகவே' பார்க்கின்றனர். இன்னொரு நாடு நம் நாட்டை எப்படி தாக்கலாம் என்கிற எண்ணம் அவர்களிடம் வலுவாக இருந்து வருகிறது. > ஒருவேளை, இந்த நேரத்தில் போராட்டம் செய்து ஆட்சியைக் கலைத்தால், லிபியா, சிரியா போல வலுவான தலைமை இல்லாத நாடாக ஈரான் மாறும் என்று பயப்படுகின்றனர். மொஜ்தபா ஹொசைனி கமேனிசிலிண்டர் தட்டுப்பாடு: அரசாங்கம் 'இதை' செய்தால் எப்போதுமே பிரச்னை இல்லை - ஹோட்டல் சங்கம் சொல்வதென்ன?> ஈரான் மக்களின் அதிருப்தியை ஒருங்கிணைக்க ஒரு வலுவான தலைமை அங்கே இல்லை. இது ஈரானில் இன்னும் ஆட்சி கலையாததற்கு மிக முக்கிய காரணம். > மேலும், கமேனியின் இறப்பிற்குப் பின், ஈரானின் தலைமையும் ஒரு முக்கியமான... நுணுக்கமான நகர்வு ஒன்றை செய்தது. அது உடனே இன்னொரு உச்ச தலைவரை தேர்ந்தெடுப்பது ஆகும். தலைவர் இல்லையென்றால் தான், ஒரு நாட்டின் அடித்தளத்தைத் தகர்க்க முடியும். இதற்கு முட்டுக்கட்டைப் போடுவது போல, ஈரானின் தலைமை உடனடியாக மொஜ்தபா கமேனியை உச்ச தலைவர் ஆக்கியது. > அமெரிக்காவும், இஸ்ரேலும் தொடர்ந்து ஈரானைத் தாக்கி வருகின்றன. இதனால், இந்த மக்களுக்கு தங்களுடைய பாதுகாப்பைத் தேடவே நேரம் சரியாக இருக்கிறது. மேலும், உள்கட்டமைப்புகளை அழித்து வருகின்றன இந்த இரு நாடுகளும். இதுவும் அந்த மக்களுக்கு பெரிய அடி. இவற்றை தாண்டி தான் இந்த மக்களால் தங்களது அரசுக்கு எதிராக போராட வர முடியவில்லை. தேர்தல் நடத்தை விதிமுறைகள் : பணத்திற்கு உள்ள கெடுபிடிகள் என்ன? தெரிந்து கொள்ளுங்கள்!

vikatan
30 மார்.
3 min read
அமெரிக்க வரலாற்றில் முதல் முறை... டாலர் கரன்சியில் அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!
உலகம்

அமெரிக்க வரலாற்றில் முதல் முறை... டாலர் கரன்சியில் அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

அமெரிக்காவின் அதிபராக டொனால்டு ட்ரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்றதில் இருந்து அவர் எடுத்து வரும் நடவடிக்கைகள் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பி வருகிறது. அவரது பொருளாதார கொள்கை உலக நாடுகளை மட்டுமல்லாது அமெரிக்காவையும் பாதித்து இருக்கிறது. தற்போது ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து நடத்தி வரும் போர் காரணமாக டொனால்டு ட்ரம்ப் மீது அமெரிக்க மக்கள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். அமெரிக்கா சுதந்திரம் அடைந்து 250வது ஆண்டை கொண்டாடும் விதமாக புதிய டாலர் கரன்சியை வெளியிட இருக்கிறது. இந்த கரன்சியில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கையெழுத்து இடம் பெற இருக்கிறது. தற்போது டாலரில் கருவூல செயலாளர் மற்றும் கருவூல பொருளாளர் ஆகியோர் கையெழுத்து இடம் பெற்று இருக்கிறது. இதில் கருவூல பொருளாளர் கையெழுத்தை நீக்கிவிட்டு அதில் ட்ரம்ப் தனது கையெழுத்தை பதிவேற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவில் 1861ம் ஆண்டுதான் டாலர் அறிமுகம் செய்யப்பட்டது. அதன் பிறகு அதிபர் கையெழுத்து டாலரில் இடம் பெறுவது இதுவே முதல் முறையாகும். முதல் கட்டமாக 100 டாலர் கரன்சியில் ட்ரம்ப் கையெழுத்து இடம் பெற இருக்கிறது. படிப்படியாக மற்ற கரன்சிகளிலும் இந்த கையெழுத்து விரிவுபடுத்தப்படும். இது குறித்து கருவூல செயலாளர் பெசென்ட் கூறுகையில், ''இந்த நடவடிக்கை 250வது ஆண்டு நிறைவையொட்டி வெளியிடப்படுகிறது. அதிபர் ட்ரம்பின் தலைமையின் கீழ், நாங்கள் நிதி வலிமை மற்றும் ஸ்திரத்தன்மையை நோக்கிய பாதையில் இருக்கிறோம். நமது பெரிய நாடு மற்றும் அதிபர் டொனால்ட் ஜே ட்ரம்பின் வரலாற்று சாதனைகளை அங்கீகரிக்க அவரது பெயரைக் கொண்ட அமெரிக்க டாலர் பில்களை விட சக்திவாய்ந்த வழி எதுவுமில்லை''என்று தெரிவித்தார். டொனால்டு ட்ரம்ப் கையெழுத்துடன் கூடிய டாலர்களை அச்சடிக்கும் பணிகள் முழுவேகத்தில் நடந்து வருகிறது. விரைவில் அவை புழக்கத்திற்கு வரும். ஏற்கனவே அரசு கட்டிடங்கள், நிறுவனங்கள், அரசாங்க திட்டங்கள், போர்க்கப்பல்கள் மற்றும் நாணயங்களில் அதிபரின் பெயரை வைக்க ட்ரம்ப் நிர்வாகம் மற்றும் அவரின் ஆதரவாளர்களும் நடவடிக்கை எடுத்துள்ளனர். சமீபத்தில் ட்ரம்பின் உருவம் பொறிக்கப்பட்ட ஒரு நினைவு தங்க நாணயம் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது..

vikatan
30 மார்.
3 min read
இன்னும் மூன்று நாள்களில் பெட்ரோல் ஏற்றுமதிக்கு தடை விதிக்க ரஷ்யா 'அதிரடி' முடிவு? காரணம் என்ன?
உலகம்

இன்னும் மூன்று நாள்களில் பெட்ரோல் ஏற்றுமதிக்கு தடை விதிக்க ரஷ்யா 'அதிரடி' முடிவு? காரணம் என்ன?

ஈரான் போர்... ஹார்முஸ் ஜலசந்தி மூடல் போன்ற சூழலில், இந்தியா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியை நம்பித் தான் இருக்கின்றன.ஆனால், ரஷ்யா இப்போது அதிர்ச்சி முடிவு ஒன்றை எடுத்துள்ளது.அதாவது வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் ரஷ்யாவில் இருந்து பெட்ரோல் ஏற்றுமதி செய்யப்படாது என்று முடிவு செய்யப்பட உள்ளது.ரஷ்யாவின் துணை பிரதமர் அலெக்சாண்டர் நோவாக் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளார். அலெக்சாண்டர் நோவாக் போரை சீக்கிரம் முடிக்க நினைத்த நெதன்யாகு; 'மாஸ்டர் பிளானை' தகர்த்த ஈரான் மக்கள்! | Full Detailஇதனையடுத்து ரஷ்ய எரிசக்தி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது..."ரஷ்யாவில் முன்னர் கணிக்கப்பட்ட விலையைத் தாண்டி பெட்ரோல் விலை செல்வதை தடுக்கவும்... ரஷ்யாவின் உள்நாட்டு தேவைக்கு பெட்ரோல் தொடர்ந்து இருக்கவும் வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் பெட்ரோல் ஏற்றுமதி தடை செய்வதற்கான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட உள்ளது" என்று குறிப்பிட்டுள்ளதாவது.ரஷ்ய அதிபர் புதினும் உள்நாட்டில் பெட்ரோல் விலை அதிகமாகக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.ஈரான் போர்‌ குறித்து மோடி - ட்ரம்ப் போன் கால்; லைனில் 'எலான் மஸ்க்'கும்! - சர்ப்ரைஸ் ட்விஸ்ட்?

vikatan
30 மார்.
3 min read
``ஈரான் 'இந்த' 15 பரிந்துரைகளை ஏற்றால்... போர் நிறுத்தத்திற்கு அமெரிக்கா தயார்" - ட்ரம்ப்
உலகம்

``ஈரான் 'இந்த' 15 பரிந்துரைகளை ஏற்றால்... போர் நிறுத்தத்திற்கு அமெரிக்கா தயார்" - ட்ரம்ப்

மூன்று வாரமாக ஈரான் மீது கடுமையான தாக்குதலை நடத்திய அமெரிக்கா, இப்போது சற்று 'சமாதன' மோடிற்கு வந்துள்ளது. அதன் விளைவாக, கடந்த திங்கட்கிழமை (மார்ச் 23) ஐந்து நாள்கள் போர் தாக்குதல் நிறுத்தி வைப்பை அறிவித்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். நேற்று, ஈரான் போர் அமைதிக்கான 15 பரிந்துரைகளை முன்மொழிந்துள்ளார். அதில் ஈரான் என்னென்ன செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதாவது...> ஈரான் தற்போது தங்களிடம் உள்ள அணுசக்தி கட்டமைப்புகளைக் கலைக்க வேண்டும். > அணு ஆயுதம் தயாரிப்பதற்கான எந்தவொரு முன்னெடுப்பும் செய்யமாட்டோம் என்று ஈரான் வாக்கு கொடுக்க வேண்டும். ஈரான் போர்கமேனி இறப்புக்கு 48 மணிநேரத்திற்கு முன்.! ட்ரம்ப், நெதன்யாகு போன்கால் - என்ன நடந்தது?> ஈரானியப் பிரதேசத்தில் யுரேனியம் செறிவூட்டல் நடைபெறக் கூடாது. > ஈரான் தங்களிடம் உள்ள சுமார் 450 கிலோ செறிவூட்டப்பட்ட யுரேனியக் கையிருப்பை சர்வதேச அணுசக்தி முகமையிடம் விரைவில் ஒப்படைக்க ஒத்துக்கொள்ள வேண்டும். > நடன்ஸ், இஸ்பஹான் மற்றும் ஃபோர்டோ அணுசக்தி நிலையங்கள் அகற்றப்பட வேண்டும்.> சர்வதேச அணுசக்தி முகமை மற்றும் ஐ.நா அணுசக்தி பார்வையாளர்கள் ஈரான் முழுவதும் சோதனையிட முழு அனுமதியையும், வெளிப்படைத்தன்மையையும் தர வேண்டும். > ஈரான் தங்களது பிராந்தியத்தில் பயங்கரவாதிகள் போன்றவர்களைக் கொண்டு செயல்படுவதை நிறுத்த வேண்டும். > அந்தப் பிராந்தியத்தில் இருக்கும் பயங்கரவாதிகளுக்கு நிதி, ஆயுதம் போன்றவற்றை வழங்குவதை ஈரான் நிறுத்த வேண்டும். > ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட வேண்டும். அது சுதந்திரமான கடல்வழிப் பாதையாகச் செயல்பட வேண்டும்.> ஈரானின் ஏவுகணைத் திட்டத்தில், அதன் தயாரிப்பு எண்ணிக்கையையும், அது சென்று தாக்கும் தூரத்தையும் குறைக்க வேண்டும். > எதிர்காலத்தில் ஈரான் ஏவுகணைகளைப் பயன்படுத்தினாலும், அது தற்காப்பிற்காக மட்டுமே இருக்க வேண்டும். ஹார்முஸ் ஜலசந்தி'உயிரோடு தான் இருக்கிறேன்' - நிரூபிக்க போராடும் நெதன்யாகு: வீடியோக்களும், சர்ச்சைகளும்! |Full Detailஇவற்றை செய்தால் ஈரானுக்கு என்ன கிடைக்கும்?> ஈரான் மீதுள்ள முழு தடைகளும் நீக்கப்படும். > புஷேர் அணுமின் நிலையத்தில் மின்சார உற்பத்தி உட்பட, ஈரானின் குடிசார் அணுசக்தித் திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு அமெரிக்கா உதவும்.> ஈரான் மேலே சொன்னவற்றை மீறினால், மீண்டும் முழு தடை விதிக்கப்படும். சிலிண்டர் தட்டுப்பாடு: அரசாங்கம் 'இதை' செய்தால் எப்போதுமே பிரச்னை இல்லை - ஹோட்டல் சங்கம் சொல்வதென்ன?

vikatan
30 மார்.
3 min read
No Kings: அமெரிக்கா, ஐரோப்பாவில் வெடித்த போராட்டம்; அதிபர் ட்ரம்ப்க்கு எதிராகக் குவியும் மக்கள்!
உலகம்

No Kings: அமெரிக்கா, ஐரோப்பாவில் வெடித்த போராட்டம்; அதிபர் ட்ரம்ப்க்கு எதிராகக் குவியும் மக்கள்!

ஈரான் மீதான போர் நடவடிக்கைக்கும் மற்றும் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் செயல்பாடுகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் பல்வேறு நகரங்களில் நேற்று (சனிக்கிழமை) பிரமாண்டமான 'நோ கிங்ஸ்' பேரணிகள் நடைபெற்றன.அமெரிக்காவின் 50 மாநிலங்களிலும் சுமார் 3,100-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்தப் போராட்டங்கள் பதிவாகின. இதில் மினசோட்டா மாகாணம் போராட்டத்தின் மையப்புள்ளியாக மாறியது. செயின்ட் பால் பகுதியில் உள்ள கேபிடல் புல்வெளியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டனர்.Actor Robert De Niro on trump at "No Kings" Day event in New York: "He can't do all the fucked-up things that he's been doing without the collusion of Congress and the goons in his administration." pic.twitter.com/p9mDN91Mr5— CSPAN (@cspan) March 28, 2026 பிரபல இசைக்கலைஞர் புரூஸ் ஸ்பிரிங்ஸ்டீன், பெடரல் ஏஜென்ட்களால் சுட்டுக் கொல்லப்பட்ட ரெனீ குட் மற்றும் அலெக்ஸ் பிரெட்டி ஆகியோரின் நினைவாக எழுதப்பட்ட பாடலைப் பாடி போராட்டத்தைத் தொடங்கி வைத்தார். "இந்த பிற்போக்குத்தனமான கனவு நீடிக்காது" என்று அவர் உணர்ச்சிவசப்படப் பேசினார். இந்தப் பேரணியில் புகழ்பெற்ற நடிகர் ராபர்ட் டி நீரோ, பாடகி ஜோன் பேஸ், நடிகை ஜேன் ஃபோண்டா மற்றும் செனட்டர் பெர்னி சாண்டர்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.ஆபரேஷன் ஹார்முஸ், கார்க் தீவு: தரைவழித் தாக்குதலுக்கு ஈரான் அருகில் வீரர்களைக் குவிக்கும் அமெரிக்காவாஷிங்டன் டிசியின் லிங்கன் மெமோரியல் முதல் நேஷனல் மால் வரை நூற்றுக்கணக்கானோர் அணிவகுத்துச் சென்றனர். "மகுடத்தைக் கீழே போடு, கோமாளியே" போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனர்.லாஸ் ஏஞ்சல்ஸின் போராட்டம் வன்முறையாக மாறியது. போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர். பலரைக் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.no kings protestஅமெரிக்கா தவிர லண்டன், பாரிஸ் மற்றும் ரோம் ஆகிய நகரங்களிலும் போராட்டங்கள் வெடித்தன. லண்டனில் 'வலதுசாரிப் போக்கை நிறுத்து' என்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ரோமில் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனிக்கு எதிராகவும், ஈரான் மீதான ராணுவ நடவடிக்கைக்கு எதிராகவும் மக்கள் வீதியில் இறங்கினர்.இந்தப் போராட்டங்களை குடியரசுக் கட்சித் தலைவர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர். வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் அபிகாயில் ஜாக்சன் கூறுகையில், "இவை இடதுசாரி அமைப்புகளால் திட்டமிடப்பட்டவை. பொதுமக்களின் உண்மையான ஆதரவு இதற்கு இல்லை" எனத் தெரிவித்தார். தேசிய குடியரசுக் கட்சி கமிட்டியும் (NRCC) இந்தப் போராட்டங்களை "அமெரிக்காவை வெறுக்கும் பேரணிகள்" எனக் குறிப்பிட்டுள்ளது.அமெரிக்கா வசூலித்த வரி அந்தந்த நாட்டிற்கே திரும்புகிறதா? - ட்ரம்ப் புலம்பல் பதிவு

vikatan
30 மார்.
3 min read
ஆபரேஷன் ஹார்முஸ், கார்க் தீவு: தரைவழித் தாக்குதலுக்கு ஈரான் அருகில் வீரர்களைக் குவிக்கும் அமெரிக்கா
உலகம்

ஆபரேஷன் ஹார்முஸ், கார்க் தீவு: தரைவழித் தாக்குதலுக்கு ஈரான் அருகில் வீரர்களைக் குவிக்கும் அமெரிக்கா

இஸ்ரேலும், அமெரிக்காவும் இணைந்து ஈரான் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இத்தாக்குதலுக்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. போரால் ஈரான் தனது எல்லைக்கு உட்பட்ட ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிட்டது. இதையடுத்து ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்காவிட்டால் ஈரானில் உள்ள மின் உற்பத்தி மையங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஈரானை மிரட்டி வருகிறார். அதோடு இதற்காக ட்ரம்ப், ஈரானுக்குக் காலக்கெடுவும் விதித்து வருகிறார். மற்றொரு புறம் ஈரான் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்காத பட்சத்தில் ஈரான் மீது தரைவழித் தாக்குதல் நடத்தவும் அமெரிக்கா தயாராகி வருகிறது. இதற்காக ஈரானுக்கு அருகில் அமெரிக்கா தொடர்ந்து ராணுவத்தைக் குவித்து வருகிறது. இத்தரைவழித் தாக்குதலை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக ஈரானும் தெரிவித்துள்ளது. தற்போது வளைகுடா நாட்டில் இருந்து ஈரானிற்குள் சென்று தாக்குதல் நடத்துவது சரியாக இருக்காது என்று அமெரிக்கா கருதுகிறது. எனவே கடல் வழியாகச் சென்று இத்தாக்குதலில் ஈடுபட அமெரிக்கா தயாராகி வருகிறது. ராணுவம்இதற்காக யு.எஸ்.எஸ்.திரிபோலி என்ற போர்க்கப்பல் மூலம் 3500 அமெரிக்கக் கடற்படை வீரர்கள் வளைகுடாவிற்கு வந்து சேர்ந்துள்ளனர். அவர்கள் ஈரான் அருகில் முகாமிட்டுள்ளனர். தற்போது மொத்தம் 5,000 வீரர்கள் ஈரானைத் தாக்க தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் 10 ஆயிரம் வீரர்களை மத்திய கிழக்கு பகுதிக்கு அனுப்ப பெண்டகன் பரிசீலித்து வருகிறது.இத்தாக்குதல் தொடங்கப்பட்டால் சில வாரங்கள் நடக்கலாம் என்றும், அதிகபட்சம் 2 மாதங்கள் வரை மட்டுமே இருக்கும் என்றும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தரைவழித் தாக்குதல் நடத்துவது குறித்து டொனால்டு ட்ரம்ப் தொடர்ந்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். எந்நேரமும் இதற்கு ட்ரம்ப் ஒப்புதல் கொடுக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஈரான் போர்‌ குறித்து மோடி - ட்ரம்ப் போன் கால்; லைனில் 'எலான் மஸ்க்'கும்! - சர்ப்ரைஸ் ட்விஸ்ட்?இதனால் ஈரானில் பதற்றம் மேலும் அதிகரித்து இருக்கிறது. ஈரானில் உள்கட்டமைப்புகள் அல்லது பொருளாதார மையங்கள் குறிவைக்கப்பட்டால், அதற்குப் பதிலடி கடுமையாக இருக்கும் என்றும், நாங்களாகத் தாக்கமாட்டோம் என்றும் ஈரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியான் எச்சரித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், "ஈரான் முன்கூட்டிய தாக்குதல்களை மேற்கொள்வதில்லை என்று நாங்கள் பலமுறை கூறியுள்ளோம்; ஆனால், எங்களது உள்கட்டமைப்புகள் அல்லது பொருளாதார மையங்கள் குறிவைக்கப்பட்டால், நாங்கள் கடுமையாகப் பதிலடி கொடுப்போம்" என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் ஈரானில் அதிக எண்ணெய் வளம் கொண்ட கார்க் தீவை முதலில் பிடித்துக்கொண்டு அதன் பிறகு ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து அமெரிக்கா பரிசீலித்து வருகிறது. இத்தரைவழித் தாக்குதல் மூலம் ஈரானைப் பிடிப்பது தங்களது நோக்கம் இல்லை என்றும், தாக்குதல் நடவடிக்கைகள் மூலம் ஈரானின் ராணுவத் கட்டமைப்புகளை அழிப்பதே பிரதான இலக்கு என்றும் அமெரிக்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஈரானில் உள்ள ஏவுகணை ஏவுதளங்கள், வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் கப்பல் போக்குவரத்துப் பாதைகளுக்கு அச்சுறுத்தலாக உள்ள கடலோரக் கட்டமைப்புகளும் இத்தாக்குதலில் குறிவைக்கப்பட இருக்கின்றன. இத்தாக்குதலுக்கு நான்கு முக்கிய அம்சங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. கார்க் தீவைக் கைப்பற்றுவது அல்லது முற்றுகையிடுவது, ஹார்முஸ் ஜலசந்தியைக் கட்டுப்படுத்த ஈரானுக்கு உதவும் லாராக் தீவைத் தாக்குவது, மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உரிமை கோரும் அருகிலுள்ள தீவுகளுடன் அபு மூசாவையும் கைப்பற்றுவது ஆகியவை அடங்கும்.மேலும் அப்பகுதியில் ஈரானிய எண்ணெயை ஏற்றுமதி செய்யும் கப்பல்களை இடைமறிப்பது இத்தாக்குதலின் நோக்கமாகும். முழு அளவில் அமெரிக்கப் படைகள் தரைவழித்தாக்குதலுக்குத் தயாராகி வந்தாலும் எப்போது இத்தாக்குதல் தொடங்கும் என்பது மர்மமாக இருக்கிறது. பேச்சுவார்த்தை என்று ஈரானின் கவனத்தை திசை திருப்பிவிட்டு பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தியது போன்று இப்போதும் தாக்குதல் நடத்த அமெரிக்கா சத்திட்டம் தீட்டியது. ஆனால் இப்போது அதன் வலையில் ஈரான் விழவில்லை.Iran: மேற்கு ஆசியாவிற்குள் நுழைந்த அமெரிக்கப் போர்க்கப்பல்; ஈரான் எல்லையில் பதற்றம்?

vikatan
30 மார்.
3 min read
சவுதி விமானப்படை தளத்தில் ஈரான் தாக்குதல்: 12 அமெரிக்க வீரர்கள் காயம், விமானங்கள் சேதம்
உலகம்

சவுதி விமானப்படை தளத்தில் ஈரான் தாக்குதல்: 12 அமெரிக்க வீரர்கள் காயம், விமானங்கள் சேதம்

அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து ஈரான் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இத்தாக்குதலுக்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. நேற்று இரவு ஈரானில் உள்ள டெஹ்ரான் நகரில் இஸ்ரேல் கடுமையான ஏவுணணைத் தாக்குதலை நடத்தியது. மேலும் ஈரானில் தாக்குதல் நடத்தப்படும் இடங்களை விரிவுபடுத்தப்போவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. மின் உற்பத்தி மையங்கள் மீது தாக்குதல் நடத்தமாட்டோம் என்று அமெரிக்கா தெரிவித்து இருந்தாலும் ஈரானின் மற்ற இடங்களில் அமெரிக்கா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. அதோடு முதல் முறையாக ஏமனும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. ஈரான் சவுதி அரேபியாவில் உள்ள இளவரசர் சுல்தான் விமானப்படை தளம் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இந்த விமானப்படைத்தளத்தை அமெரிக்கா தன் வசம் வைத்திருந்தது. அங்கு அதிக அளவில் அமெரிக்க ராணுவ வீரர்களும், போர் விமானங்களும் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. ஈரான் தாக்குதலில் விமானப்படை தள கட்டடம் மீது குண்டு விழுந்து வெடித்தது. கட்டடம் தாக்கப்பட்டபோது அதில் அமெரிக்க ராணுவ வீரர்கள் தங்கி இருந்தனர். அவர்கள் அனைவரும் அலறியடித்து ஓடினர். அவர்களில் 12 பேர் காயம் அடைந்தனர். அதில் இரண்டு பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது. மேலும் இத்தாக்குதலில் அமெரிக்காவிற்கு சொந்தமான எரிபொருள் நிரம்பும் விமானங்கள் அதிக அளவில் சேதம் அடைந்தது. ஒரு ஏவுகணையும், சில ஆளில்லா ட்ரோன்களும் இத்தாக்குதலில் ஈடுபட்டன. இந்த விமானப்படை தளத்தில் ஈரான் தாக்குதல் நடத்துவது இது இரண்டாவது முறையாகும். ஏற்கனவே ஈரான் நடத்திய தாக்குதலில் 5 எரிபொருள் நிரப்பும் விமானங்கள் சேதம் அடைந்தன. அமெரிக்காவுக்கு எதிராக ஈரான் நடத்தி வரும்போரில் இது வரை அமெரிக்க வீரர்கள் 300 பேர் காயம் அடைந்துள்ளனர்.அமெரிக்காவுக்கு 2.9 பில்லியன் இழப்புஈரானுக்கு எதிரான இப்போரில் அமெரிக்காவிற்கு ராணுவ வீரர்களின் இழப்பு குறைவு என்றாலும் ராணுவ உபகரணங்கள் பெரிய அளவில் சேதம் அடைந்துள்ளன. முதல் 3 வார போரில் அமெரிக்காவிற்கு அதிக பட்சமாக 2.9 பில்லியன் டாலர் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. எவ்வளவு இழப்பு என்ற விபரத்தை பென்டகன் அதிகாரிகள் கணக்கிட்டு வருகின்றனர். குவைத்தில் அமெரிக்காவிற்கு சொந்தமான 3 F-15E ரக போர் விமானங்கள் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. எரிபொருள் நிரப்பும் KC-135 விமானம் மற்றொரு விமானத்தில் மோதி கீழே விழுந்தது. இதில் அதில் இருந்த 6 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்தனர். சவுதி அரேபியாவில் உள்ள அமெரிக்க விமானப்படை தளத்தில் ஈரான் நடத்திய தாக்குதலில் ஏராளமான எரிபொருள் நிரப்பும் விமானங்கள் சேதம் அடைந்துள்ளன. அதோடு அமெரிக்காவிற்கு சொந்தமான MQ-9 ரக ட்ரோன்களும் அதிக அளவில் சேதம் அடைந்துள்ளன. 300 மில்லியன் டாலர் மதிப்புள்ள விமான பாதுகாப்பு ரேடாரை ஈரான் தாக்கி அழித்துள்ளது. அமெரிக்க வீரர்கள் ஹோட்டலில் தஞ்சம்ஈரானின் தொடர் தாக்குதல் காரணமாக அமெரிக்க ராணுவ வீரர்கள் தங்களது தளத்தை காலி செய்துவிட்டு இப்போது ஹோட்டல்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். இதனால் ஹோட்டல்கள் மீது ஈரான் படைகள் தாக்குதல் நடத்தும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அபுதாபியில் உள்ள பொருளாதார மண்டத்தின் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலை வான்பாதுகாப்பு இடைமறித்து அழித்தது. இதனால் கீழே விழுந்த கழிவுகள் பட்டு 5 இந்தியர்கள் காயம் அடைந்தனர். குவைத்தில் உள்ள புபியான் தீவில் அமெரிக்க கடற்படையினர் மீது ஈரான் ட்ரோன் மற்றும் ஏவுகணைத்தாக்குதல் நடத்தியதில் அந்த தளம் முழுமையாக சேதம் அடைந்து இருப்பதாக ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளது. குவைத்தில் உள்ள வர்த்தக துறைமுகம் ஒன்றும் சேதம் அடைந்து இருக்கிறது.

vikatan
30 மார்.
3 min read
Iran: மேற்கு ஆசியாவிற்குள் நுழைந்த அமெரிக்கப் போர்க்கப்பல்; ஈரான் எல்லையில் பதற்றம்?
உலகம்

Iran: மேற்கு ஆசியாவிற்குள் நுழைந்த அமெரிக்கப் போர்க்கப்பல்; ஈரான் எல்லையில் பதற்றம்?

ஈரான் மீது அமெரிக்கா தரைவழித் தாக்குதலை நடத்தக்கூடும் என்ற ஊகங்கள் வலுத்து வரும் நிலையில், அமெரிக்காவின் பிரமாண்டமான 'யுஎஸ்எஸ் திரிபோலி' (USS Tripoli) போர்க்கப்பல் மேற்கு ஆசியப் பகுதிக்கு வந்தடைந்தது. நேற்று (28-ம் தேதி) அமெரிக்க மத்திய கட்டளை அமைப்பு இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.ஜப்பானைத் தளமாகக் கொண்டு இயங்கும் இக்கப்பல், சுமார் 3,500 கடற்படை வீரர்கள் மற்றும் மாலுமிகளைக் கொண்டுள்ள ஒரு வலிமையான படைப்பிரிவின் முதன்மைக் கப்பலாகும்.யுஎஸ்எஸ் திரிபோலிஇதில் அதிநவீன F-35 போர் விமானங்கள், சீஹாக் ஹெலிகாப்டர்கள் மற்றும் வீரர்களை ஏற்றிச் செல்லும் ஆஸ்ப்ரே (Osprey) ரக விமானங்கள் எனப் பெரும் ஆயுதக் கிடங்கே தயார் நிலையில் உள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளை அமைப்பு (United States Central Command - CENTCOM) தெரிவித்துள்ளது.அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ வெள்ளிக்கிழமை, ``நவீனப் போர்முறையில் தரைப்படை வீரர்களை நேரடியாகக் களமிறக்காமல், அமெரிக்கா தனது இலக்குகளை அடைய முடியும். ஒரு நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்த அல்லது அதன் ராணுவத் திறனை முடக்கப் பல வழிகள் உள்ளன" எனத் தெரிவித்திருந்தார்.இருப்பினும், அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இது குறித்துத் தெளிவான முடிவை அறிவிக்காமல் மௌனம் காத்து வருகிறார். சுமார் 10,000 வீரர்களை மேற்கு ஆசியாவிற்கு அனுப்ப அதிபர் ஆலோசித்து வருவதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.திரிபோலி போர்க்கப்பலின் வருகை இப்பகுதியில் நிலவும் போர் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.ஈரான் போருக்கு அமெரிக்கா செலவு செய்யும் பெருந்தொகை; சிதையும் ஏழை மக்கள் - அதிர்ச்சி ரிப்போர்ட்!

vikatan
30 மார்.
3 min read