தமிழ் டைம்ஸ் logo
முகப்புக்கு திரும்பு

india

28 கட்டுரைகள் india இல்

விளம்பர இடம்

உங்கள் விளம்பரத்தை இங்கே காட்சி செய்யலாம்

தூத்துக்குடி: அஜிதா ஆக்னலுக்கு சீட் மறுப்பு; த.வெ.க கொடியை கழற்றி வீசிய ஆதரவாளர்கள்!
இந்தியா

தூத்துக்குடி: அஜிதா ஆக்னலுக்கு சீட் மறுப்பு; த.வெ.க கொடியை கழற்றி வீசிய ஆதரவாளர்கள்!

தமிழக வெற்றிக் கழகம் தமிழக சட்டமன்றத் தேர்தலில் முதல்முறையாக 234 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. எந்தக் கட்சியுடணும் கூட்டணி அமைக்காமல் தனித்து போட்டியிடுகிறது. 234 தொகுதிகளின் வேட்பாளர்கள் பட்டிலை அறிவித்துள்ளார் விஜய். இந்த நிலையில், தூத்துக்குடி தொகுதி வேட்பாளராக தனது நண்பரும் நடிகருமான ஸ்ரீநாத்தை அறிவித்துள்ளார். கட்சி தொடங்கியது முதலே தூத்துக்குடி தொகுதியில் களப்பணி ஆற்றி வந்த அஜிதா ஆக்னல், தனக்கு மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தார். ஆனால், தமிழ் மாநில காங்கிரஸின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் எஸ்.டி.ஆர்.விஜயசீலனின் உடன்பிறந்த சகோதரரான எஸ்.டி.ஆர். சாமுவேல் ராஜ், த.வெ.கவின் தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளராக அறிவிக்கப்பட்டார். ஸ்ரீநாத்இதனால், அதிருப்தி அடைந்த அஜிதா ஆக்னல், பனையூரில் நடிகர் விஜய்யின் காரை வழிமறித்ததுடன் தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டார். இதனையடுத்து தூத்துக்குடிக்கு வந்த அஜிதா ஆக்னல், விரக்தியில் தூக்க மாத்திரைகளை போட்டு தற்கொலைக்கு முயன்றார். இந்த நிலையில், தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியின் த.வெ.க வேட்பாளராக நடிகர் விஜய்யின் நண்பர் நடிகர் மற்றும் இயக்குநருமான ஸ்ரீநாத் அறிவிக்கப்பட்டுள்ளார்.இவருக்கு மனையியும், ஒரு மகளும் உள்ளனர். இவர், அ.தி.மு.கவின் முன்னாள் அமைச்சர் ஜி.ஆர்.எட்மண்டின் சகோதரி மகன் என்பதும், மறைந்த நகைச்சுவை நடிகர் சந்திரபாபுவின் நெருங்கிய உறவினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஸ்ரீநாத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்கு தூத்துக்குடி த.வெ.கவினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2 ஆண்டாக தூத்துக்குடியில் த.வெ.க சார்பில் பல நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார் அஜிதா ஆக்னல். மாவட்ட செயலாளர் பதவி கிடைக்காவிட்டாலும், எம்.எல்.ஏ சீட் கிடைக்கும் என்ற நினைப்பில் இருந்தவருக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. அஜிதா ஆக்னல், விஜய்இதனால், அஜிதா ஆக்னலின் ஆதராவாளர்கள் தங்களின் கார்களில் இருந்த த.வெ.க கட்சிக் கொடியை அகற்றியும், வீடுகளில் ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கர்களையும் கிழத்தனர். பெண்கள் பலரும் விசில்களை தரையில் போட்டு உடைத்தனர். சிலர் கொடியை தீயிட்டும் கொளுத்தி அதிருப்தியை வெளிப்படுத்தினர். இது ஒருபுறமிருக்க அஜிதா ஆகன்லுக்கும், மாவட்ட செயலாளரன சாமுவேல்ராஜூவுக்கும் இடையே கோஷ்டிப்பூசலால், தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வந்த நிலையில்தான் சென்னையிலுள்ள தனது நண்பரான ஸ்ரீநாத்தை தூத்துக்குடி தொகுதி வேட்பாளராக அறிவிக்க விஜய் முடிவெடுத்தார் எனவும், இந்த யோசனையை கூறியதே பொதுச் செயலாளர் ஆனந்த்தான் என்கின்றனர்.

vikatan
30 மார்.
3 min read
நயினார், சண்முகம், பொன்ராஜ்: `இந்த ஆணின் மொழி...' - சொற்களில் ஒளிந்திருக்கும் பாலின அரசியல்! | ஓவியா
இந்தியா

நயினார், சண்முகம், பொன்ராஜ்: `இந்த ஆணின் மொழி...' - சொற்களில் ஒளிந்திருக்கும் பாலின அரசியல்! | ஓவியா

(பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடனின் கருத்துக்கள் அல்ல - ஆசிரியர்)களம்: சொற்களின் அரசியல்ஓவியா, பெண்ணிய செயற்பாட்டாளர்அண்மைக் காலமாக மேடைப் பேச்சுகள் மீதும் பொதுவான உரையாடல்களில் பயன்படுத்தப்படும் சொற்கள் மீதான கண்டனங்களும், அதன் மீதான தொடர் அரசியலும் முகாமையாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதில் பல்வேறு கோணங்கள் அடங்கியிருக்கின்றன. இந்த உரைகளைத் தாண்டி அவற்றிற்குள் இருக்கும் அரசியலையும் இணைத்து பார்ப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும். மனித இன தோற்றுவாய்க்கும் அதன் தொடர் பரிணாமத்திற்கும் தலைமை ஏற்று வழி நடத்திய பெண்ணினத்தை ஆண்கள் தங்களுடைய பாலின்ப தூண்டலுக்கான பொருட்களாகவும் தங்கள் பிறவிப் பணியாட்களாகவும் சுருக்கி விட்ட நிகழ்வுக்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் வரலாறு இருக்கிறது. அந்த வரலாற்றின் குழந்தையாக பிறந்து வளர்ந்து நிலை பெற்றிருக்கும் மொழி தான் இன்று வரை சமூகத்தின் மொழியாக நிலவி வருகிறது. வீட்டில் ஒரு மூலையில் அடுப்படியிலும், படுக்கையறையிலும் கொல்லைப் பக்கங்களிலும் பெண்களை உட்கார வைத்துவிட்டு வெளி உலகத்திற்கு வருகின்ற ஆண்கள் தங்களுடைய உரையாடல்களில் சுவை கூட்டும் பொருட்டாகவே பெண்களைப் பொதுவெளியில் சுட்டிப் பேசி வந்திருக்கிறார்கள். (அன்று அவ்வாறு ஆண்கள் பேசி மகிழ்ந்து கொண்ட பொதுவெளிகளில் பெண்களே இல்லை. அவ்விதமே இவர்கள் படைத்து வைத்திருந்த இலக்கியங்களை பெண்கள் வாசிக்கவும் அனுமதிக்கப்படவில்லை). ஓர் ஆணின் மொழியில் பெண்கள் இரண்டு இடங்களில்தான் அல்லது இரண்டு விதங்களில்தான் இடம் பெறுகிறார்கள். ஒன்று அவையைக் கவர்ந்து குபீர் சிரிப்பலையைத் தோற்றுவிக்கும் நகைச்சுவை கருப்பொருட்களாக... மற்றொன்று ஓர் ஆண் தனது ஆண்மையின் பெருமையிழந்து பெண்களைப் போல் அதாவது பெட்டைகளாக மாறி விடக் கூடாது என ஆண்மையின் தலைமையை வலியுறுத்தி விதந்தோதும் விதமாக. இந்த சாயல் படியாத ஆணின் உரை கிட்டத் தட்ட சாத்தியமற்ற ஒன்றாகவே வரலாறு நெடுகிலும் காணக் கிடைக்கிறது. மனித இனம் தவிர்க்கவே முடியாத ஆளுமைத் தலைவர்கள் அனைவர் உரைகளிலிருந்துமே இதற்கான உதாரணங்களை நாம் காட்ட இயலும். “கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்வேட்ப மொழிவதாம் சொல்.”என்ற வள்ளுவரின் வாக்கை, அதாவது அனைவரும் கேட்க விரும்பும் மொழி என்பதே பெண்ணை இழிவுபடுத்தி ஏளனப்படுத்தி பேசுவதுதான் என்றுதான் ஆண் மக்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள். 18ம் நூற்றாண்டு தொடங்கி 19ம் நூற்றாண்டில் தொடர்ந்து கருக் கொண்டு உருவம் கொண்டு பெண்ணியச் சிந்தனைகளின் விசாரணைகள் இந்த மொழி மீதான திறனாய்வை முன்னிறுத்தின. பேசுகின்ற மொழியே பெண்களை இழிவுபடுத்துவதாக இருக்குமேயானால் பெண்ணியச் சிந்தனைகளை மக்கள் பொதுப்புத்திக்கு எடுத்துச் செல்வது எவ்வளவு சவால் மிக்க பணியாக இருக்குமென்பதை பெண்ணியச் சிந்தனையாளர்கள் ஆழமாக உணர்ந்தார்கள். உலகின் ஈடு இணையற்ற பெண்விடுதலைச் சிந்தனையாளர் பெரியார் விதவை, விபச்சாரி, கைம்பெண் , மலடி ….போன்ற வார்த்தைகளுக்கு இணையான ஆண்பாற் சொற்கள் ஏன் இல்லை என்கின்ற கேள்வியை இந்தத் தமிழ்நாட்டின் பட்டி தொட்டி யெங்கும் நடைபெற்ற ஆயிரக்கணக்கான கூட்டங்களில் எழுப்பினார். பெரியார்ஆனால் இன்று வரை அரசியல் உரைகள் மட்டுமல்ல நீதிமன்ற தீர்ப்புகள் , அரசு அலுவலக கோப்புகள் , அரசு அலுவலகக் கூட்டங்கள், கார்ப்பரேட் போர்டு ரூம் அறைக் கூட்டங்கள் , கதா காலேட்பங்கள், புராண உரைகள், தன்னார்வ தன்னெழுச்சி போதனைகள் இவை அனைத்திலும் நம்மால் இந்த ஆணின் மொழியைக் காண இயலும். முதல் தலைமுறைப் பட்டதாரியாக, முதல் தலைமுறை படிப்பாளியாக, முதல் தலைமுறை பணிக்கு செல்பவராக, முதல் தலைமுறை அரசியல்வாதியாக வெளி வருகின்ற ஒவ்வொரு பெண்ணும் நேற்று மட்டுமல்ல இன்றும் கூட சந்திக்க வேண்டிய முதல் சவால் என்று ஒன்றை சொல்ல வேண்டும் என்று சொன்னால் அது இந்த ஆணின் மொழி தான்.இந்த வரலாற்றுப் புரிதலோடு நாம் இன்றைய காட்சிகளுக்குள் வருவோம். எப்படி அறிவியலறிஞர்கள் கண்டுபிடிக்கும் அணுகுண்டுகளை பயன்படுத்துகிறவர்களாக அரசியல்வாதிகள் இருக்கிறார்களோ அப்படித்தான் பல தியாகங்களுடன் வென்றெடுக்கப் படும் உரிமை முழக்கங்களை அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்திக் கொள்வோரும் அரசியல் வாதிகளாகதான் இருக்கிறார்கள். இதற்கு மிகச் சிறந்த உதாரணம்தான் விஜய் போன்ற ஒரு மசாலாப் பட வெற்றி நாயக நடிகர் பெண்ணினத்தை அவமானப் படுத்தி விட்டார்கள் என்று ஒரு மனுவோடு டிஜிபி அலுவலகம் செல்லும் காட்சி இப்போது அரங்கேறியிருப்பது. கடந்த ஓராண்டில் பெண்களுக்கு விரோதமாகப் பேசி விட்டார்கள் என்று குற்றம் சாட்டப்பட்ட , தண்டிக்கப் பட்ட பேச்சாளர்கள், சம்பவங்கள் நிறைய இருக்கின்றன. அத்தனையும் விரிவாகப் பேசப்படத்தான் வேண்டும். இந்தக் கட்டுரையில் சில நாட்கள் இடைவெளியில் நடைபெற்றிருக்கிற மூன்று நிகழ்வுகளை மட்டும் எடுத்துக் கொள்வோம். நயினார் நாகேந்திரன் - பாரதிய ஜனதா கட்சியின் தற்போதைய மாநிலத் தலைவர் . அவர் நடிகரும் த.வெ.க கட்சி தலைவருமான விஜய் பற்றி பேசுகையில் விஜய் முதலில் வீட்டை விட்டு வெளியே வரவேண்டும், முதலில் நடிகையை(பெயர் தவிர்க்கப்படுகிறது) விட்டு அவர் வெளியே வர வேண்டும். அப்படி வெளியே வந்தால் தான் நாட்டில் என்ன நடக்கின்றது என்பது தெரியும். இந்த பேச்சு பெண்களை இழிவுபடுத்துகிறது என்றும் விஜய் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய விமர்சனம் என்றும் கூறி கடுமையாக எதிர்க்கப் பட்டது. மேலும் இவர்களின் அரசியலுக்கே தொடர்பில்லாத நடிகை பற்றி அவர் பேசுவது தவறு என்பதும் முன்வைக்கப் பட்டது. உண்மையில் சமூக வலைத்தளங்களில் இப்பிரச்சினை அக்கு வேறு ஆணி வேறாக அலசப் பட்டுக் கொண்டுதானிருந்தது. ஆனால் கவனிக்கத் தக்க விசயம் என்னவென்றால் இங்கு நயினார் நாகேந்திரன் அவர்கள் ஒரு கட்சியின் மாநிலத் தலைவர் ஆவார். அதுவும் ஆளுங் கட்சி. ஆனால் நயினார் நாகேந்திரன் மட்டுமல்ல எந்தத் தரப்பு என்கின்ற பாகுபாடுகள் இல்லாமல் பொதுவாழ்விலிருக்கும் எந்தவொரு மனிதராக இருந்தாலும் அவர்தம் தனி வாழ்க்கை பற்றிய விமர்சனத்தை இங்கு எல்லோருமே மேற்கொண்டுதான் வருகிறார்கள். மக்களாலும் அது தவறு என்று உணரப்படுவதோ உணர்த்தப் படுவதோ இல்லை. ஆனால் இந்த பேச்சை அந்த நடிகை உடனடியாக எதிர்த்து ஒரு வழக்கறிஞர் மூலமாக அறிக்கை அளித்தார். நயினார் நாகேந்திரன் நாகேந்திரனின் கருத்து “அவமானகரமானதும் பொருத்தமற்றதும்” என்று அவர் கண்டித்ததுடன் அப்படியான கருத்து ஒரு உயர்நிலை அரசியல் தலைவரிடமிருந்து எதிர்பார்க்கவில்லை என்றும் குறிப்பிட்டார். அவர் தன்னுடைய பெயரை அரசியல் விவாதத்தில் இழுத்துச் சேர்க்காமல் என் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட மரியாதை பாதுகாக்கப்படவேண்டும் எனவும்கூறினார். பொதுவெளியில் தனது தொழிலான நடிப்பு மட்டுமே தனது அடையாளமாக இருக்க முடியும் என்று அவர் தெரிவித்திருந்தார்.உண்மையில் அந்த நடிகையின் இச்செயற்பாடு மிகுந்த வரவேற்புக்குரியது. இவருடைய உறுதியான இச்செயல் வேறு வழியின்றி நயினார் நாகேந்திரனை மன்னிப்பு கேட்க வைத்தது. தமிழக முதல்வர் இந்நாட்டின் மாணவச் செல்வங்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தார். `உங்கள் கனவை என்னிடம் சொல்லுங்கள். நான் உங்கள் தகப்பனாக நின்று அவற்றை நிறைவேற்றி தருவேன்' என்பதாக. சாதிக்க விரும்பும் இளைஞர்களுக்கான ஒரு அழைப்பு அது. இதற்கு அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான சி. வி. சண்முகம் அவர்கள் முதல்வரைப் பார்த்து ஒரு மகத்தான கேள்வியைக் கேட்டார். அது மிகக் கேவலமானது, என்னுடைய கனவில் நடிகை (பெயர் தவிர்க்கப்படுகிறது) வேண்டும் என்று நான் நினைத்தால் நீங்கள் அதற்கு ஏற்பாடு செய்வீர்களா என்று அவர் கேட்டார். வளர்ந்து வருகின்ற பெண்ணுரிமை சமூகத்தில் மட்டுமல்ல இந்த பெண்ணுரிமை சிந்தனைகளை மலராது இருந்த ஒரு சமூகத்தில் கூட இந்த பேச்சை யாரும் ஓர் நாகரீகமான பேச்சாகக் கருத முடியாது. சி.வி.சண்முகம் அவருடைய நோக்கம் திமுக அரசைத் தாக்குவது… முதல்வரைத் தாக்கி பேசுவது. ஆனால் அவர் அவமானப்படுத்திய பெண் இவருடைய கேள்விக்கும் அல்லது இந்த இவர்களுடைய இந்த அரசியலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லாத கலை துறையைச் சார்ந்த ஒரு நபர். அவருடைய பெயரை பயன்படுத்தி இப்படி ஒரு கேள்வியை கேட்க சமூகத்திற்கு எந்த விதமான உரிமையும் கிடையாது. உண்மையில் அந்த நடிகை அவர்கள் சட்டரீதியாக நடவடிக்கை எடுத்திருந்தால் மிகக் கடுமையான தண்டனையை அவர் அடைந்திருப்பார். எனினும் அவர் வருத்தம் தெரிவித்ததுடன் அப்பிரச்சினைக்கு ஒரு முற்றுப்புள்ளி விழுந்தது.அண்மையிலே முன்னாள் குடியரசுத் தலைவர், அறிவியல் அறிஞர் அப்துல் கலாம் அவர்களுடைய உதவியாளராகப் பணிபுரிந்து அதன் வழியாக சமூகப் பொதுநீரோட்டத்திற்கு அறிமுகமாகி இன்றைய தினம் சமூகப் பிரச்சனைகள் குறித்த அரசியல் குறித்த கருத்து கூறுகின்ற ஒரு கருத்துரையாளராக தன்னை வளர்த்துக் கொண்டிருப்பவர் அறிவியலறிஞர் பொன்ராஜ் அவர்கள். பொதுவாக தொலைக்காட்சி விவாதங்களில் பரபரப்பாக பேசுவது, பிறரை சீண்டுவது போல் பேசுவது , வம்புக்கிழுத்து பேசுவது, அவதூறாக பேசுவது இது போன்று பல காட்சிகளை நாம் அன்றாடம் பார்த்து வருகின்றோம். இதில் நண்பர் பொன்ராஜ் அவர்களைப் பொறுத்தவரை தனது கருத்துக்களை தான் அறிந்தவற்றை தர்க்க ரீதியாக நாகரீகமான மொழிநடையில் எடுத்து வைக்கின்ற வரிசையில் வருபவர். அவருடைய கருத்துக்கள் ஒருவருக்கு ஏற்புடையதாக இருக்கலாம். ஏற்புடையதாக இல்லாமலும் இருக்கலாம். ஆனால் அவர் தனது கருத்துக்களை மிக நாகரீகமான மொழியிலே அவையை மதித்து உரையாடக் கூடியவர் என்பதில் இரண்டு கருத்துக்கள் இருக்க முடியாது. இன்னும் சொல்லப் போனால் அவர் தீவிரமான அரசியல் நிலைப்பாடு கொண்டவருமில்லை. எனவே கடுமையான கருத்துக்கள் அவரிடமிருந்து வராது. இவ்வாறிருக்க இப்போது அவர் ஒரு சிக்கலில் மாட்டிக் கொண்டு விட்டார். தவெக கட்சியை பற்றி பேசுகின்ற பொழுது அக்கட்சியினரை அதில் குறிப்பாக அக்கட்சிப் பெண்களை விபச்சாரிகள் கூட்டம் என்று கூறினார். பொன்ராஜ் ஒரு கட்சியை ஏற்றுக் கொள்ளாத எவரும் அக்கட்சியைப் பின்பற்றுகிறவர்களையும் சேர்த்து விமர்சிக்கதான் செய்வார்கள். ஆனால் அப்பெண்களை விபசாரிகள் என்று சொன்னதுதான் இப்போது நம்மை இது குறித்து பேச வேண்டிய நிலையை ஏற்படுத்தியிருக்கிறது.முதலில் விபச்சாரி என்கின்ற சொல் தடை செய்யப்பட வேண்டிய சொல் என்பதனை நாம் இங்கு அழுத்தமாகக் குறிப்பிட வேண்டும், எப்படி சாதியைச் சொல்லி இழிவு படுத்துவது குற்றம் என்று இன்று எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறதோ அதுபோல்தான் பெண்களை விபச்சாரிகள் என்று சொல்லி இழிவுபடுத்துவது தடை செய்யப்பட வேண்டிய ஒரு செயலாகும், எனவே இந்த பிரச்சனைக்குள் ஆழமாக உள்ளே போவதற்கு முன்னால் முதல் நிலையிலேயே இந்தச் சொல்லை நண்பர் பொன்ராஜ் அவர்கள் பயன்படுத்தியிருக்கக் கூடாது என்பதனை அவருக்கு நாம் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறோம். ஒரு அறிவியலறிஞராக தொடங்கி சமூகக் கருத்தியலாளராக தன்னை வளர்த்துக் கொண்டிருக்கும் திரு.பொன்ராஜ் அவர்கள் மனித உரிமைகள், மனித குல விடுதலை பெண்ணுரிமை ஆகிய தளங்களில் வரலாற்று ரீதியாக நிகழ்ந்து கொண்டிருப்பவற்றை உள்வாங்கி இந்த இடத்தில் விபச்சாரி என்கிற சொல்லை பயன்படுத்தியது ஏன் தவறு என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஏன் இதை சொல்லுகிறேன் என்றால் அந்த வார்த்தையை பின் வாங்கிக் கொள்ள அவர் கடுமையாக மறுப்பு தெரிவித்தார். அவருடைய கோபம் வேறு. அவர் குறிப்பிடும் விசயங்களுக்கு நான் வருகிறேன். ஆனால் அதற்கு முன்னதாக சமூகக் கருத்துரையாளர்களாக, அரசியல்வாதிகளாக, பொது மனிதர்களாக தங்களை முன்னிறுத்தக்கூடிய யாரும் இச்சொல்லை பயன்படுத்துவது தவறுதான் என்பதனை நண்பர் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன் அடுத்தபடியாக நயினார் நாகேந்திரனாக இருக்கட்டும், சிவி சண்முகமாக இருக்கட்டும், அவர்கள் உரை வெளிப்படையாக பெண்களை ஒரு போகப் பொருளாக பார்க்கின்ற அவர்களுடைய சொந்த மதிப்பீட்டை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. மேலும் அக்கூற்றுக்கள் நான் இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் கூறியுள்ள ஆண்களின் மனநிலையை (பெண்களைப் பற்றி பேசி கூட்டத்தை உற்சாகப்படுத்துவது. அதாவது தங்கள் உரைகளின் வெற்றிக்காக பாலியல் இன்பப் பொருட்களாகப் பெண்ணை நினைவூட்டுவது) வெளிப்படுத்துபவை. ஆனால் நண்பர் பொன்ராஜ் முன்னவர்கள் போல் எள்ளல் ஏளனத்திலிருந்து இக்கூற்றுக்களைப் பேசவில்லை. மாறாக அவருடைய அரசியல் நிலைப்பாடு சார்ந்து எழும் கோபத்திலிருந்து பேசுகிறார். அதனாலேயே அவர் மன்னிப்பு கேட்கவும் முதலில் மறுத்தார். பிறகு வருத்தம் தெரிவித்த நிலையிலும் கூட தன் கோபத்தை மீண்டும் நியாயப்படுத்தியே கருத்து கூறினார். இப்போது நாம் அவரின் அந்த கோபத்திற்குள் வருவோம். அவர் குறிப்பிட்டது விஜய் கூறுவது போல் ஒட்டு மொத்த பெண் சமுதாயத்தைப் பற்றியல்ல. விஜய் ரசிகைகள் அல்லது தவெக தொண்டர்கள் என்று தங்களை பொதுவெளியில் அறிமுகப்படுத்திக் கொண்டு பேசுகின்ற பெண்கள் என்ன பேசினார்கள் என்பதிலிருந்து இதனைத் தொடங்க வேண்டும். நான் காண நேர்ந்த சில உரைகளைக் குறிப்பிடுகிறேன்.தவெக விஜய் கரூர் தவெக கூட்ட நெரிசலில் சிக்கி தனது குழந்தையை பறிகொடுத்த பெண் கூறினார். எங்கள் பையன் விஜயை பார்க்கும் வாய்ப்பை எங்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்து விட்டு சென்றிருக்கிறான்.ஒரு அரசுப் பள்ளி தலைமையாசிரியர் தவெக மேடையில் திரையிசப் பாடலுக்குக் குத்தாட்டம் ஆடுகிறார்வாழ்க்கை இலட்சியம் விஜயைப் பார்க்கணும் நான் செத்தா அவர் புகைப்படத்துடன்தான் புதைக்கனும் எங்க அண்ணன் எத்தனை பொண்ணுகளை வேண்டுமானாலும் வைச்சுக்குவாரு குப்பை பொறுக்குறவனே நாலு பொண்டாட்டி வைச்சுக்கும் போது எங்க அண்ணன் வைச்சுகிட்டா என்ன தப்பு……விஜய் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம், பெண்களோடு அவர் ஏற்படுத்திக் கொள்கின்ற உறவு என்பது இந்த சமூகத்தில் கேள்விகளுக்கு அப்பாற்பட்டது. ஒரு ராஜாவுக்கு அந்தப்புரத்தில் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் வைத்துக் கொள்வதற்கு இந்த சமூகம் எந்த அடிப்படையில் அனுமதி வழங்கியதோ கிட்டத்தட்ட அதே மனநிலையில் இருந்து வரக்கூடிய வார்த்தைகள். இந்த ரீதியில் பல வீடியோக்கள் சமுக வலைத்தளத்தில் உலா வந்தன. உண்மையில் அரசியல் உரையாடல்களுக்கு மத்தியில் வீசியெறியப்பட்ட கற்களாய் வந்து விழுந்த இத்தகைய காட்சிகளும் குரல்களும் அனைவருக்கும் ஒரு பெரிய திகைப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தின. ஏதோ அந்த காலத்து இராஜ பவனிகளும் அவரைப் பார்க்க ஏங்கும் கன்னியர் கூட்டமும் ஓர் அரசனுக்கு எண்ண முடியாத அளவில் குவிக்கப் பட்டிருந்த ஆசை நாயகிகள் கூட்டமும் கொண்ட சமுதாய அமைப்பை இந்தக் குரல்கள் மீட்டெழுதுவது போலிருக்கிறது. அனைத்து அடிமைத் தனங்களும் அடிமைகளின் உழைப்பையும் உணர்வையும் பயன்படுத்திதான் எழுதப்படுகிறது. இன்னொரு கோணத்தில் உண்மையில் விஜய் பெண்களை அழைப்பது பற்றியோ அல்லது பல பெண்கள் அவர் மீது பெருவிருப்பம் கொண்டு அவரோடு போவது பற்றியோ கூட நமக்கு எந்த பிரச்சனையும் இல்லை. நமக்கு மட்டுமல்ல வேறு யாருக்கும் எந்த பிரச்சினையும் இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. ஒரு சினிமா நடிகர் மீதான சினிமா ரசிகைகளின் உரையாடலாக இருந்திருக்குமேயானால் நமக்கு பிரச்சனை இல்லை. ஆனால் இங்கு இந்த உரையாடல்கள் ஒரு அரசியல் களத்தில் நிகழ்த்தப்படுகின்றன. ஒரு அரசியல் மொழியாக முன்வைக்கப்படுகின்றன. விபச்சாரம் என்கின்ற சொல் குறிக்கின்ற சமூக நிலைகள் என்ன என்பதையும் நாம் சிந்திக்க வேண்டாமா? விபச்சாரம் என்கின்ற சொல்லை ஒழிப்பதில் இருக்கக்கூடிய அக்கறை விபச்சார தன்மையை ஒழிக்க வேண்டும் என்பதிலும் இருக்க வேண்டும் அல்லவா? ஒரு ஆணின் போகப் பொருளாக ஆணை மையப்படுத்தி வாழ்பவளாக, ஆண்களுக்கு அவர்களுடைய இன்பத்திற்கும் பயன்பாட்டுக்கும் மட்டுமே தான் பிறந்திருப்பதாகப் பெண்களைக் கருத வைப்பதுதான் பெண்ணடிமைத்தனத்தின் ஆணிவேர். விபச்சாரமாக இருந்தாலும் சரி விதவைத்தன்மையாக இருந்தாலும் சரி ஏன் பத்தினித் தன்மையாக இருந்தாலும் சரி இந்த நிலைகளில்தான் வேர் பிடித்து நிற்கிறது. சமூகத்தில் அந்த நிலைகளின் வேர்களை அறிந்து கண்டிக்க வேண்டிய கடமை உண்மையான சிந்தனையாளர்களுக்கு உண்மையான சமூக செயற்பாட்டாதவர்களுக்குக் கண்டிப்பாக இருக்கிறது. பெண்ணிய செயற்பாட்டாளர் ஓவியாஆனால் பொன்ராஜ் மீது கண்டனைக் குரல்களை எழுப்ப பாய்ந்து வந்த சமுக வலைத்தளப் புரட்சியாளர்களில் எத்தனை பேர் இந்தப் பெண்களின் இந்தத் திடீர் அரசியல் பிரவேசம் குறித்தும் அவை வெளிப்படுத்தப் பட்ட தன்மைகள் மற்றும் அவற்றின் அரசியல் கூறுகள் குறித்தும் கேள்ளவிகள் எழுப்பினார்கள்……? எந்தவொரு வார்த்தையின் பொருளும் அதனைப் பிறப்பித்த சூழல் சார்ந்ததில்லையா? பொதுத்தளத்தில் இந்தப் பெண்களுடைய இவர்கள் தெரிவிக்கும் கருத்துக்கள், அதை தெரிவிக்கும் போது அவர்கள் காட்டுகின்ற அவர்களுடைய உடல் மொழிகள்... இவையெல்லாம் இதுவரை தமிழகத்தினுடைய அரசியல் பரப்பில் பார்க்காத காட்சிகள் என்கின்ற ஒரு விஷயத்தை மவுனமாக யாரேனும் கடந்து போக முடியுமா என்று கேள்வி கேட்டுப் பாருங்கள். `இந்த கேள்வியை நான் அவரவர் மனசாட்சிக்கு விட்டு விடுகிறேன்.' - ஓவியா, பெண்ணிய செயற்பாட்டாளர்.

vikatan
30 மார்.
3 min read
பெரம்பூர்: "அவர்கள் காதிலேயே விசிலை ஊதுங்க; GEN Z கிட்ஸுக்கு ஒன்று சொல்லிக்கொள்கிறேன்" - தவெக விஜய்
இந்தியா

பெரம்பூர்: "அவர்கள் காதிலேயே விசிலை ஊதுங்க; GEN Z கிட்ஸுக்கு ஒன்று சொல்லிக்கொள்கிறேன்" - தவெக விஜய்

வேட்புமனுத் தாக்கல் செய்த பிறகு தவெக தலைவர் விஜய் தனது தொகுதியான பெரம்பூரில் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கி இருக்கிறார். பிரசாரத்தில் பேசிய விஜய், "தாய் வீட்டில் இருந்து பரப்புரையைத் தொடங்குகிறேன். எனக்கு பிடித்த இடம் பெரம்பூர். தமிழ்நாட்டை இந்த நிலைமைக்குக் கொண்டுவர தீயசக்தி திமுகதான் காரணம். டாஸ்மாக்கில் மட்டுமே ரூ. 1000 கோடி ஊழல் செய்திருக்கிறார்கள். பெண்கள் பாதுகாப்பு இல்லாத போதைப்பொருள் அதிகமாக இருக்கும் தமிழ்நாட்டைக் காப்பாற்றியாக வேண்டும். தவெக விஜய்இது நாடா? இல்ல காடா? போலீஸ் என்ற ஒன்று இங்கு இருக்கிறதா? இல்லையா? உங்களுக்குப் பாதுகாப்பு கொடுக்காத ஸ்டாலின் அரசைத் தூக்கி வீசிடுவோமா? பல இடங்களில் அடிப்படை வசதி கூட இல்ல. தீய சக்தி திமுக ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு உள்ளதா? ஸ்டாலின் சாருக்கு மக்களைப் பற்றி கவலையே இல்லை. இந்த 5 வருடத்தில் குடும்பத்தோடு சேர்ந்து கொள்ளை அடிப்பதுதான் முக்கியம். 'நாங்க செய்ததெல்லாம் வேஸ்ட்டா கோபால்?' - நண்பரை இறக்கிய விஜய்; கொந்தளிக்கும் தூத்துக்குடி தவெக!வண்டி வண்டியாக வைத்து இருக்கும் பணத்தை என்ன செய்வது என்று தெரியாமல் இப்போது உங்களுக்குக் கொடுத்து எப்படியாவது ஜெயித்து விடலாம் என்று நினைக்கிறார்கள். நான் ஏற்கனவே சொன்ன மாதிரி அவர்கள் கொடுக்கும் பணத்தை வாங்கிக்கொண்டு அவர்கள் காதிலேயே விசிலை ஊதுங்கள். இந்த அரசுக்கு வேட்டு வைக்கணும் வைப்பீர்கள் தானே? GEN Z கிட்ஸ்க்கு ஒன்றே ஒன்று சொல்லிக்கொள்கிறேன்.தவெக விஜய்ஏப்ரல் 23 ஆம் தேதி காலையில் எழுந்து பக்காவாகக் கிளம்பி உங்கள் ஓட்டர் ஐடியை எடுத்துக்கொண்டு பூத்திற்குச் சென்று விசில் சின்னத்தில் ஓட்டு போடுங்கள். இது ஒரு தலைமுறைக்கான தேர்தல். எவ்வளவு பெரிய வசதியான வாழ்க்கை இருந்தலும் எல்லாவற்றையும் உதறி தள்ளிவிட்டு உங்களுக்காக மட்டுமே வந்திருக்கிறேன். எல்லா வலிகளையும் தாங்கிக்கொண்டு உங்களுக்காகவே மட்டுமே வந்திருக்கிறேன். உங்கள் பிள்ளையான எனக்கு ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்கள். நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம்!" என்று பேசியிருக்கிறார்.'பெரம்பூரில் வேட்புமனுவை தாக்கல் செய்த விஜய்!' - எதிர்த்து நிற்கும் வேட்பாளர்கள் யார்? முழு விவரம்

vikatan
30 மார்.
3 min read
"இவர்தான்" - ஹார்முஸ் வழியாகச் செல்ல கப்பல்களுக்கு அனுமதியளித்தது யார்? - ட்ரம்ப் சொல்வது என்ன?
இந்தியா

"இவர்தான்" - ஹார்முஸ் வழியாகச் செல்ல கப்பல்களுக்கு அனுமதியளித்தது யார்? - ட்ரம்ப் சொல்வது என்ன?

நேற்று பைனான்சியல் டைம்ஸ் நாளிதழுக்கு ஈரான் போர் குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேட்டியளித்துள்ளார். அந்தப் பேட்டியில் அவர் பேசியிருக்கும் முக்கிய பாயின்ட்ஸ்…ஈரான் போரில் ட்ரம்பிற்குப் பிடித்த ஒன்று!“நான் நேர்மையாக பதில் சொல்ல வேண்டுமானால்… ஈரானில் இருந்து எண்ணெய் எடுப்பதுதான் எனக்குப் பிடித்த ஒன்று. ஆனால், அமெரிக்காவில் இருக்கும் சிலர், ‘ஏன் அதைச் செய்கிறீர்கள்?’ என்று கேட்கிறார்கள். அவர்கள் முட்டாள்கள்”. கார்க் தீவை அமெரிக்கா கைப்பற்றுமா?“கார்க் தீவை அமெரிக்கா கைப்பற்றுவது மிகவும் எளிது. அவர்களுக்கு அங்கே எந்தப் பாதுகாப்பும் இல்லை என்று நினைக்கிறேன். அதனால், அதை மிக எளிதாக நம்மால் கைப்பற்ற முடியும்”Kharg Island | கார்க் தீவுபோரை சீக்கிரம் முடிக்க நினைத்த நெதன்யாகு; 'மாஸ்டர் பிளானை' தகர்த்த ஈரான் மக்கள்! | Full Detailஈரானின் அன்பளிப்பு“ஈரான் முதலில் பாகிஸ்தான் கொடியிட்ட 10 எண்ணெய் டேங்கரை ஹார்முஸ் ஜலசந்தி வழியாக அனுமதித்தது. இப்போது 20 கப்பல்களை அனுமதிக்கிறது. இந்த 20 கப்பல்களும் தங்களது பயணத்தைத் தொடங்கிவிட்டன. ஈரானின் நாடாளுமன்ற அவைத் தலைவர் முகமது பாகர் காலிபாஃப்தான் இந்தக் கப்பல்களுக்கு அனுமதி கொடுத்தார்”. ஏப்ரல் 1-ம் தேதி முதல் என்டரி கொடுக்கும் ATM புதிய நடைமுறைகள் - லிஸ்டில் உங்க வங்கி இருக்கா? செக்!

vikatan
30 மார்.
3 min read
சுகுமாரால் அதகளப்படும் அதிமுக கூட்டணி; ஹாட்ரிக் வெற்றிபெறுவாரா ஈஸ்வரப்பன்? - பரபரக்கும் ஆற்காடு களம்
இந்தியா

சுகுமாரால் அதகளப்படும் அதிமுக கூட்டணி; ஹாட்ரிக் வெற்றிபெறுவாரா ஈஸ்வரப்பன்? - பரபரக்கும் ஆற்காடு களம்

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு சட்டமன்றத் தொகுதியைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக தக்கவைத்துக்கொண்டிருக்கிறார் தி.மு.க மாவட்ட இளைஞரணி அமைப்பாளரான ஜெ.எல்.ஈஸ்வரப்பன். இந்த முறையும், தி.மு.க வேட்பாளராக ஜெ.எல்.ஈஸ்வரப்பனே களமிறக்கப்பட்டிருக்கிறார். கடந்த 2006 - 2011 காலக்கட்டத்தில், ஆற்காடு நகர்மன்றத் தலைவராகவும் இருந்திருக்கிறார். பி.இ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்திருக்கும் ஈஸ்வரப்பன், தொகுதிக்குள் கணிசமாக வாழும் அகமுடைய முதலியார் சமூகத்தைச் சேர்ந்தவர். இதனால், அந்தச் சமூக வாக்குகள் தனக்குக் கைகொடுக்கும் என நம்புகிறார். ஜெ.எல்.ஈஸ்வரப்பன்அதே சமயம், உடன்பிறப்புகளிடம் உற்சாக மனநிலை இல்லாதது ஈஸ்வரப்பனை சோர்வடையச் செய்திருக்கிறது. பொருளாதார பின்னணியும் பலவீனமாக இருப்பதால் ஈஸ்வரப்பன் தடுமாற்றத்தில் இருக்கிறார். சொல்லப் போனால், 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள முன்கூட்டியே தன்னை தயார்ப்படுத்திக்கொள்ளாமலும் இருந்திருக்கிறார். தி.மு.க மாவட்டச் செயலாளரும் சிட்டிங் அமைச்சருமான ஆர்.காந்தியின் உள்ளடி வேலைகளால் ஈஸ்வரப்பன் அமைதி காத்ததாகக் கூறப்படுகிறது.இந்த நிலையில், ராணிப்பேட்டை தொகுதியில் அமைச்சர் காந்திக்கு சீட் மறுக்கப்பட்டு, அவரின் மகனுக்கு டிக்கெட் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனால், தனக்கு எந்தவிதமான நெருக்கடியும் இனி வராது என்ற நம்பிக்கையில் ஆற்காடு தொகுதியில் தன்னுடைய ஹாட்ரிக் வெற்றிக்கான பணிகளிலும் விறுவிறுப்பாக இறங்கிவிட்டார் ஈஸ்வரப்பன். மறுபுறம், அ.தி.மு.க கூட்டணியில் கூச்சல், குழப்பம் ஓய்ந்தபாடில்லை. கடந்த முறை ராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த அ.தி.மு.க மாவட்டச் செயலாளர் எஸ்.எம்.சுகுமார், `இந்த முறை ஆற்காடு தொகுதிக்கு ஏன் வந்தார்? பா.ம.க-வுக்குச் செல்ல வேண்டிய தொகுதியை எப்படிக் கைப்பற்றினார்? இதற்காக என்னவெல்லாம் டீல் நடந்தது ?’ போன்ற கேள்விகளை பாட்டாளிகள் அடுக்கடுக்காக கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.எஸ்.எம்.சுகுமார்அதற்கெல்லாம் பதிலளிக்காமல் பம்மிக்கொண்டிருக்கிறார் சுகுமார். எல்லாவற்றையும்விட `இப்போதே நான் ஜெயிச்சுட்டேன்’ என்ற மிதப்பிலும் சுகுமாரின் செயல்பாடுகள் இருப்பதால், அ.தி.மு.க கூட்டணி அதகளப்பட்டுக்கொண்டிருக்கிறது. இப்படி அ.தி.மு.க கூட்டணியில் பிரச்னைகளும், விமர்சனங்களும் பரபரத்தாலும், தொகுதி மக்களிடம் மாற்றத்துக்கான மனநிலை உருவாக்கியிருப்பதால் தி.மு.க-வைப் பின்னுக்குத் தள்ளி அ.தி.மு.க வெற்றியை நோக்கி முந்திக்கொண்டிருக்கிறது என்பதே தற்போதைய கள நிலவரமாக உள்ளது.

vikatan
30 மார்.
3 min read
"நரகத்திற்கு வரவேற்கிறோம்" - அமெரிக்காவை எச்சரிக்கும் ஈரான்; போர் முனையில் 2,500 கடற்படையினர்!
இந்தியா

"நரகத்திற்கு வரவேற்கிறோம்" - அமெரிக்காவை எச்சரிக்கும் ஈரான்; போர் முனையில் 2,500 கடற்படையினர்!

இஸ்ரேலும் - அமெரிக்காவும் கூட்டு சேர்ந்து ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28-ம் தேதி நடத்திய தாக்குதலில், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து தொடங்கிய இந்தப் போர் நாளுக்கு நாள் தீவிரமாகி வருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என சவூதி அரேபியா, துருக்கி, எகிப்து ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் பாகிஸ்தானில் சந்தித்துப் போரை நிறுத்தப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அதே வேளையில், மேற்கு ஆசியாவில் தரைவழித் தாக்குதலை நடத்த அமெரிக்கா திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியானது.யுஎஸ்எஸ் திரிபோலிஅதை உறுதிப்படுத்தும் விதமாக அமெரிக்காவின் பிரமாண்டமான 'யுஎஸ்எஸ் திரிபோலி' (USS Tripoli) போர்க்கப்பல் மேற்கு ஆசியப் பகுதிக்கு வந்தடைந்தது. அமெரிக்க மத்திய கட்டளை அமைப்பு இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. மறுபுறம், லெபனானின் தெற்குப் பகுதியில் தனது ஊடுருவலை விரிவாக்கவும், ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பைக் குறிவைக்கவும் இஸ்ரேல் திட்டமிட்டு வருகிறது.இந்த விவகாரம் தீவிரமான நிலையில், ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபாப், ``அமெரிக்கத் வீரர்கள் தரைவழியாக வருவதற்காக ஈரானியப் படைகள் காத்துக் கொண்டிருக்கின்றன. அவர்களைத் தீயிட்டுக் கொளுத்தவும், அவர்களது பிராந்தியக் கூட்டாளிகளை நிரந்தரமாகத் தண்டிக்கவும் நாங்கள் தயாராக உள்ளோம். எங்களது ஏவுகணைகள் தயார் நிலையில் உள்ளன. எங்களது உறுதியும் நம்பிக்கையும் அதிகரித்துள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.முகமது பாகர் கலிபாப்இதற்கிடையில் கடந்த சனிக்கிழமையன்று யேமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது, பாப் எல்-மண்டேப் ஜலசந்தி வழியாக நடக்கும் கடல்சார் வணிகத்திற்குப் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.மேலும், ஈரானின் 90 சதவீத எண்ணெய் ஏற்றுமதியைக் கையாளும் கார்க் தீவைக் (Kharg Island) கைப்பற்ற அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகின. இதற்குப் பதிலடியாக, ஈரானின் அரசு நாளிதழான 'தி டெஹ்ரான் டைம்ஸ்', தனது முதன்மைப் பக்கத்தில் "நரகத்திற்கு வரவேற்கிறோம்" எனத் தலைப்பிட்டு, "ஈரான் மண்ணில் கால் வைக்கும் அமெரிக்க வீரர்கள் சவப்பெட்டியில்தான் திரும்புவார்கள்" என உளவியல் ரீதியான எச்சரிக்கையை விடுத்துள்ளது.சனிக்கிழமையன்று சவூதி அரேபியாவிலுள்ள இளவரசர் சுல்தான் விமானத் தளம் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், அங்கு நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்காவின் அதிநவீன AWACS விமானம் சேதமடைந்தது. இது மேற்கு ஆசியாவில் அமெரிக்காவின் வான்வழி ஆதிக்கத்திற்குப் பலத்த அடியாகக் கருதப்படுகிறது. இப்போருக்காக அமெரிக்கத் பாதுகாப்புத் துறை, நாடாளுமன்றத்திடம் கூடுதலாக 200 பில்லியன் டாலர் நிதியைக் கோரியுள்ளது.!Iran: மேற்கு ஆசியாவிற்குள் நுழைந்த அமெரிக்கப் போர்க்கப்பல்; ஈரான் எல்லையில் பதற்றம்?

vikatan
30 மார்.
3 min read
`UAE ஈரானை திருப்பி தாக்காதது நல்லதே; அமெரிக்காவிற்கு நண்பராக இருப்பது பேராபத்து' - ஜெஃப்ரி சாக்ஸ்
இந்தியா

`UAE ஈரானை திருப்பி தாக்காதது நல்லதே; அமெரிக்காவிற்கு நண்பராக இருப்பது பேராபத்து' - ஜெஃப்ரி சாக்ஸ்

அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளைப் பழிவாங்க, ஈரான் மத்திய கிழக்கு நாடுகளின் மீதுதான் தாக்குதல் நடத்தி வருகிறது. அப்படி ஈரான் தாக்கும் மத்திய கிழக்கு நாடுகளில் ஐக்கிய அரபு அமீரகமும் முக்கியமான ஒன்று. ஆனால், ஈரான் தங்களைத் தாக்குவதற்கு இதுவரை எந்தப் பதிலடிகளையும் இந்த மத்திய கிழக்கு நாடுகள் கொடுக்கவில்லை. ஒருவேளை, அமீரகம் பதிலடி கொடுத்தாலும், அது அந்த நாட்டிற்கு தான் ஆபத்து என்று அமெரிக்காவின் மிக முக்கியமான பொருளாதார நிபுணர் ஜெஃப்ரி சாக்ஸ் கூறுகிறார்.ஐக்கிய அரபு அமீரகம்போரை சீக்கிரம் முடிக்க நினைத்த நெதன்யாகு; 'மாஸ்டர் பிளானை' தகர்த்த ஈரான் மக்கள்! | Full Detailஎன்ன சொல்கிறார்?“ஐக்கிய அரபு அமீரகம் ஈரான் போருக்குச் சென்றால் துபாயும், அபுதாபியும் பெரிய அடியைச் சந்திக்கும். காரணம், இந்த இரு நாடுகளும் சுற்றுலா தளங்கள். அங்கே ஏவுகணை பாதுகாப்பு பகுதிகள் இல்லை. அது பணக்காரர்கள் பார்ட்டிக்குச் சென்று, அதிக பணம் போடும் நகரங்கள். அதனால், அவர்கள் போருக்குச் சென்றால் கண்ணைத் திறந்துகொண்டே குழியில் விழுவதுபோல ஆகும். மேலும், அது இப்போதிருக்கும் பிரச்னையை இரட்டிப்பாக்கும். ஆப்ரஹாம் ஒப்பந்தத்தின் படி, இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிற்கு ஆதரவாக அமீரகம் போரில் இறங்குவது பிரச்னையை விலை கொடுத்து வாங்குவது போல. அமெரிக்காவிற்கு நண்பராக இருப்பது பேராபத்துஇந்த வளைகுடா நாடுகள் தங்களது பாதுகாப்பிற்கு அமெரிக்காவை நம்பி இருக்கின்றன. இது தவறான கணக்கு ஆகும். கிஸ்ஸிஞ்சரின் பிரபலமான பழமொழியை நான் அடிக்கடி கூறுகிறேன்… “அமெரிக்காவின் எதிரியாக இருப்பது ஆபத்து. ஆனால், அதை விட, அமெரிக்காவின் நண்பராக இருப்பது பேராபத்து”. ஈரானை எதிர்க்க டிரில்லியன் கணக்கான டாலர்களை அமெரிக்காவில் கண்மூடித்தனமாக கொட்டி வந்தனர். அது போதும். சூழலை புரிந்துகொண்டு இனி நீங்கள் உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்”.ஏப்ரல் 1-ம் தேதி முதல் என்டரி கொடுக்கும் ATM புதிய நடைமுறைகள் - லிஸ்டில் உங்க வங்கி இருக்கா? செக்!

vikatan
30 மார்.
3 min read
வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாமக - செளமியா அன்புமணி எந்தத் தொகுதியில் நிற்கிறார்?
இந்தியா

வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாமக - செளமியா அன்புமணி எந்தத் தொகுதியில் நிற்கிறார்?

2026 ஆம் ஆண்டிற்கான சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. மே 4 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் நிலையில் வேட்பாளர் பட்டியல் மார்ச் 30-ஆம் தேதிக்குள் வேட்புமனு தாக்கல் செய்யவேண்டும். திமுக, அதிமுக போன்ற கட்சிகள் தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருக்கிறது. அன்புமணி ராமதாஸ்இந்நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவற்றில் 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 15 தொகுதிகளின் பட்டியலை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டிருக்கிறார். அதன்படி, * பெரம்பூர் – திலகபாமா * தர்மபுரி – சௌமியா அன்புமணி* விருத்தாசலம் – தமிழரசி ஆதிமூலம்* விக்கிரவாண்டி – மயிலம் சிவக்குமார்* சேலம் மேற்கு – மு.கார்த்தி * சேலம் வடக்கு - சதாசிவம்* பென்னாகரம் – பாடி வெ.செல்வம்* சோளிங்கர் – வழக்கறிஞர் க.சரவணன்* மயிலாடுதுறை – சித்தமல்லி ஏ.பழனிச்சாமி* உத்திரமேரூர் பெ.மகேஷ்குமார்அன்புமணி ராமதாஸ் * போளூர் – சி.ஆர்.பாஸ்கரன்* திருப்போரூர் – வழக்கறிஞர் கே.பாலு* ஜெயங்கொண்டம் – க.வைத்தி* ரிஷிவந்தியம் – அ.ப.செழியன்* காட்டுமன்னார்கோயில் – மருத்துவர் அன்பு.சோழன்

vikatan
30 மார்.
3 min read
`அஜித் - எடப்பாடி' பறக்கும்படை சோதனை - எடப்பாடியின் நெல்லை, குமரி சுற்றுபயணம் புகைப்படத் தொகுப்பு
இந்தியா

`அஜித் - எடப்பாடி' பறக்கும்படை சோதனை - எடப்பாடியின் நெல்லை, குமரி சுற்றுபயணம் புகைப்படத் தொகுப்பு

அஜித்-எடப்பாடி! பறக்கும் படை சோதனை.! நெல்லை-குமரி எடப்பாடி தேர்தல் சுற்றுபயணம் புகைப்படத்தொகுப்பு.!

vikatan
30 மார்.
3 min read