தமிழ் டைம்ஸ் logo
முகப்புக்கு திரும்பு

india

49 கட்டுரைகள் india இல்

விளம்பர இடம்

உங்கள் விளம்பரத்தை இங்கே காட்சி செய்யலாம்

ஷேக் ஹசீனா தொடர்பான தீர்ப்பை கவனத்தில் கொண்டுள்ளோம்: இந்திய வெளியுறவுத் துறை
இந்தியா

ஷேக் ஹசீனா தொடர்பான தீர்ப்பை கவனத்தில் கொண்டுள்ளோம்: இந்திய வெளியுறவுத் துறை

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தொடர்பாக “வங்கதேச சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம்” அறிவித்த தீர்ப்பை இந்தியா கவனத்தில் கொண்டுள்ளதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் வெளியிட்டுள் அறிக்கையில், "முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தொடர்பாக “வங்கதேச சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம்” அறிவித்த தீர்ப்பை இந்தியா கவனத்தில் கொண்டுள்ளது. நெருங்கிய அண்டை நாடு என்ற முறையில், வாங்கதேச மக்களின் நலன், அந்த நாட்டின் அமைதி, ஜனநாயகம், அனைவரையும் உள்ளடக்கிய செயல்பாடுகள், ஸ்திரத்தன்மை உள்ளிட்டவற்றுக்காக இந்தியா உறுதிபூண்டுள்ளது. இந்த நோக்கத்துக்காக தொடர்புடைய அனைவருடனும் நாங்கள் எப்போதும் ஆக்கப்பூர்வமாக ஈடுபடுவோம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

feedburner
21 நவ.
3 min read
அசாமில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு
இந்தியா

அசாமில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு

புதுடெல்லி: அசாமில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் மேற்கொள்வதற்கான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு பிஹாரில் சிறப்பு தீவிர திருத்தத்தை (SIR) மேற்கொண்ட இந்திய தேர்தல் ஆணையம் அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், சத்தீஸ்கர், கோவா, குஜராத், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், அந்தமான் நிகோபார் தீவுகள், லட்சத்தீவுகள் ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை தொடங்கியுள்ளது.

feedburner
21 நவ.
3 min read
சவுதி பேருந்து விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் உயிரிழந்த சோகம்
இந்தியா

சவுதி பேருந்து விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் உயிரிழந்த சோகம்

சவுதி அரேபியாவில் நடந்த பேருந்து விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 இந்தியர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்திலிருந்து சவுதி அரேபியாவிலுள்ள மெக்கா மற்றும் மதினாவுக்கு புனித யாத்திரை மேற்கொண்ட 45 முஸ்லிம்கள் பேருந்து விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். டீசல் டேங்கர் மீது இவர்கள் பயணம் செய்த பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 45 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் 18 பெண்கள், 10 சிறுவர்கள், 17 ஆண்கள் உள்ளனர்.

feedburner
21 நவ.
3 min read
மதினா புனித யாத்திரையின்போது டீசல் டேங்கர் மோதி பேருந்து தீக்கிரை: சவுதியில் 45 இந்தியர்கள் உயிரிழப்பு - நடந்தது என்ன?
இந்தியா

மதினா புனித யாத்திரையின்போது டீசல் டேங்கர் மோதி பேருந்து தீக்கிரை: சவுதியில் 45 இந்தியர்கள் உயிரிழப்பு - நடந்தது என்ன?

ஹைதராபாத்: சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா, மதினாவுக்கு புனித யாத்திரை மேற்கொண்ட இந்திய யாத்ரீகர்கள் 45 பேர், பேருந்து விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். டீசல் டேங்கர் மீது பேருந்து மோதியதில் இந்த பயங்கர விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 18 பேர் உயிரிழந்தனர். தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் மல்லேபல்லி, பஜார் காட், ஆசிஃப் நகர் ஆகிய பகுதிகளை சேர்ந்த இஸ்லாமிய குடும்பத்தார், புனித ஹஜ் யாத்திரை செல்ல தீர்மானித்தனர். அதன்படி 4 சுற்றுலா ஏஜென்சிகள் மூலம் மொத்தம் 54 பேர், ஹைதராபாத்தில் இருந்து கடந்த 9-ம் தேதி சவுதி அரேபியாவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

feedburner
21 நவ.
3 min read
மதீனாவில் பேருந்து விபத்து: இந்திய யாத்ரீகர்கள் பலியானதாக தகவல் - அமைச்சர் ஜெய்சங்கர் இரங்கல்!
இந்தியா

மதீனாவில் பேருந்து விபத்து: இந்திய யாத்ரீகர்கள் பலியானதாக தகவல் - அமைச்சர் ஜெய்சங்கர் இரங்கல்!

ஹைதராபாத்: சவூதி அரேபியாவில் நடந்த பேருந்து விபத்தில் ஹைதராபாத்தைச் சேர்ந்த 42 இந்திய யாத்ரீகர்கள் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. மெக்காவிலிருந்து மதீனாவுக்கு யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, டீசல் டேங்கர் லாரி மீது மோதியதால் பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், “மெதினாவில் இந்தியர்கள் சென்ற வாகனம் விபத்துக்குள்ளான நிகழ்வை அறிந்து மிகுந்த அதிர்ச்சியடைந்தேன். ரியாத்தில் உள்ள நமது தூதரகமானது, ஜெட்டா தூதரக அதிகாரிகளுடன் ஆலோசனையில் உள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு முழு ஆதரவை அளிக்கும். அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விழைகிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.

feedburner
21 நவ.
3 min read
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தை ஒத்திவைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் கேரளா மனு
இந்தியா

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தை ஒத்திவைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் கேரளா மனு

புதுடெல்லி: உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்த இருப்பதால் தங்கள் மாநிலத்தில் சிறப்பு தீவிர திருத்தத்தை ஒத்திவைக்கக் கோரி கேரள அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளது. இது தொடர்பாக கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், “அரசியல் சாசன பிரிவு 243-E, 243-U ஆகியவற்றின் படியும், கேரள பஞ்சாயத்து சட்டம் பிரிவு 94ன் படியும், கேரள நகராட்சி சட்டப்படியும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை ஐந்தாண்டுகளுக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்பது கட்டாயம். இந்த சட்டங்களின்படி, வரும் டிசம்பர் 21, 2025-க்குள் கேரள உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்தி முடித்தாக வேண்டும்.

feedburner
21 நவ.
3 min read
‘தற்கொலை தாக்குதல் எனப்படுவது...’ - டெல்லி குண்டு வெடிப்பு குற்றவாளி உமர் நபியின் பழைய வீடியோ வெளியானது!
இந்தியா

‘தற்கொலை தாக்குதல் எனப்படுவது...’ - டெல்லி குண்டு வெடிப்பு குற்றவாளி உமர் நபியின் பழைய வீடியோ வெளியானது!

புதுடெல்லி: “தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் குறித்து பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. இது ஒரு வகையான உயிர்த் தியாக நடவடிக்கை.” என டெல்லி கார் குண்டு வெடிப்பு நடத்திய மருத்துவர் உமர் நபி பேசியுள்ள வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. கடந்த 10-ம் தேதி டெல்லி - செங்கோட்டை பகுதியில் உமர் நபி இந்த தாக்குதலை நடத்தினார். அதற்கு முன்பாக இந்த வீடியோவை அவர் பதிவு செய்திருக்கலாம் எனத் தகவல். இந்த வீடியோவை ஆங்கில ஊடக நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் அவர் கூறியுள்ளதாவது:

feedburner
21 நவ.
3 min read
குடும்ப பிரச்சினை பற்றி விசாரணைக்கு உத்தரவிட பிரதமர் மோடிக்கு லாலு மகன் தேஜ் பிரதாப் கோரிக்கை
இந்தியா

குடும்ப பிரச்சினை பற்றி விசாரணைக்கு உத்தரவிட பிரதமர் மோடிக்கு லாலு மகன் தேஜ் பிரதாப் கோரிக்கை

பாட்னா: பிஹார் தேர்​தலில் முன்​னாள் முதல்​வர் லாலு பிர​சாத் யாத​வின் ராஷ்ட்​ரிய ஜனதா தளம் படு​தோல்வி அடைந்​தது. இத்​தோல்வி அவரது குடும்​பத்​தை​யும் பாதித்​துள்​ளது. லாலு​வுக்கு சிறுநீரகம் தானம் செய்​தவரும் அவரது இரண்​டாவது மகளு​மான ரோகிணி ஆச்​சார்யா, தனது தம்பி தேஜஸ்​வி​யின் கூட்​டாளி​களால் தாம் பெற்​றோர் வீட்​டில் இருந்து வெளி​யேற்​றப்​பட்​ட​தாக கடந்த ஞாயிற்​றுக்​கிழமை குற்​றம் சாட்​டி​னார்.

feedburner
21 நவ.
3 min read
‘இது குடும்பப் பிரச்சினை; நான் பார்த்துக் கொள்கிறேன்’ - தேஜஸ்வி - ரோகிணி மோதல் குறித்து லாலு கருத்து!
இந்தியா

‘இது குடும்பப் பிரச்சினை; நான் பார்த்துக் கொள்கிறேன்’ - தேஜஸ்வி - ரோகிணி மோதல் குறித்து லாலு கருத்து!

பாட்னா: தேஜஸ்வி யாதவ் - ரோகிணி ஆச்சார்யா இடையேயான பிரச்சினை என்பது குடும்பத்தின் உள் விவகாரம் என்றும் அதை தான் பார்த்துக் கொள்வதாகவும் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார். பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 202 இடங்களை வென்ற நிலையில், மகா கூட்டணி 35 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது, அதில் ஆர்ஜேடி கட்சி 25 இடங்களில் வென்றது. எந்த சட்டப்பேரவையிலும் எதிர்க்கட்சியாக தேர்வாக மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கையில் 10 சதவீத இடங்களில் வென்றிருக்க வேண்டும். பிஹார் சட்டப்பேரவையில் 243 இடங்கள் உள்ள நிலையில், ஆர்ஜேடி சரியாக 25 இடங்களை வென்றதால் எதிர்க்கட்சியாக தேர்வாகியுள்ளது.

feedburner
21 நவ.
3 min read