தமிழ் டைம்ஸ் logo
சென்னையில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இன்று ​முதல் நவ.25 வரை வாக்காளர் உதவி மையம் செயல்படும்: தேர்தல் அதிகாரி தகவல்
21 நவம்பர், 2025
feedburner
தமிழ்நாடு

சென்னையில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இன்று ​முதல் நவ.25 வரை வாக்காளர் உதவி மையம் செயல்படும்: தேர்தல் அதிகாரி தகவல்

சென்னை: சென்னை மாவட்​டத்​தில் அனைத்து வாக்​குச்​சாவடிகளி​லும் இன்​று​முதல் நவ.25-ம் தேதி வரை வாக்​காளர் உதவி மையங்​கள் செயல்​படும் என்று மாவட்ட தேர்​தல் அதி​காரி ஜெ.குமரகுருபரன் தெரி​வித்​துள்​ளார். இது தொடர்​பாக அவர் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: சென்னை மாநக​ராட்​சிக்கு உட்​பட்ட 16 சட்​டப்​பேரவை தொகு​தி​களி​லும் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தப் பணி​கள் நடை​பெற்று வரு​கின்​றன. இதில் அனைத்து தொகு​தி​களி​லும் பிஎல்​ஓ-க்​கள் வீடு வீடாகச் சென்று வாக்​காளர்​களுக்கு எஸ்​ஐஆர் படிவங்​களை வழங்​கி, நிரப்​பப்​பட்ட படிவங்​களை மீண்​டும் பெற்று வரு​கின்​றனர்.

இந்த கட்டுரை feedburner ஆல் வெளியிடப்பட்டது மற்றும் தமிழ்நாடு செய்திகளை உள்ளடக்கியது.