தமிழ் டைம்ஸ் logo
ஆசிரியர் தகுதித் தேர்வு தொடங்கியது: முதல் தாள் தேர்வில் ஒரு லட்சம் பேர் பங்கேற்பு; 1,241 மையங்களில் இன்று 2-ம் தாள் தேர்வு
21 நவம்பர், 2025
feedburner
கல்வி

ஆசிரியர் தகுதித் தேர்வு தொடங்கியது: முதல் தாள் தேர்வில் ஒரு லட்சம் பேர் பங்கேற்பு; 1,241 மையங்களில் இன்று 2-ம் தாள் தேர்வு

சென்னை: ஆசிரியர் பணித் தகுதிக்​கான டெட் தேர்வு நேற்று தொடங்​கியது. முதல் தாள் தேர்​வில் சுமார் 1 லட்​சம் பேர் பங்​கேற்​றனர். தேர்வு எளி​தாக இருந்​த​தாக தேர்​வர்​கள் கூறி​யுள்​ளனர். 2-ம் தாள் தேர்வு இன்று நடை​பெறுகிறது. இலவச கட்​டாயக் கல்வி உரிமைச் சட்​டத்​தின்​படி, அனைத்து வித​மான பள்​ளி​களி​லும் இடைநிலை, பட்​ட​தாரி ஆசிரியர் பணி​யில் சேர தகு​தித் தேர்​வில் (டெட்) கட்​டா​யம் தேர்ச்சி பெற வேண்​டும். இந்த தேர்வு மொத்​தம் 2 தாள்​களைக் கொண்​டது. முதல் தாளில் தேர்ச்சி பெறு​பவர்​கள் இடைநிலை ஆசிரிய​ராக​வும், 2-ம் தாளில் தேர்ச்சி அடைபவர்​கள் பட்​ட​தாரி ஆசிரிய​ராக​வும் பணிபுரிய​லாம். தமிழகத்​தில் ஆசிரியர் தேர்வு வாரி​யம் (டிஆர்​பி) மூலம் டெட் தேர்வு நடத்​தப்​படு​கிறது. எனினும், கடந்த 2 ஆண்​டுகளாக டெட் தேர்வு நடத்​தப்​பட​வில்​லை.

இந்த கட்டுரை feedburner ஆல் வெளியிடப்பட்டது மற்றும் கல்வி செய்திகளை உள்ளடக்கியது.