தமிழ் டைம்ஸ் logo
அரையாண்டுத் தேர்வுகள் டிச.10-ம் தேதி தொடக்கம்
21 நவம்பர், 2025
feedburner
கல்வி

அரையாண்டுத் தேர்வுகள் டிச.10-ம் தேதி தொடக்கம்

சென்னை: பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வுகள் டிச.10-ம் தேதி முதல் தொடங்கும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு விவரம்: தமிழகத்தில் பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தைப் பின்பற்றும் அனைத்து விதமான பள்ளிகளிலும் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு டிச.10 முதல் 23-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இதில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு டிச.10-ம் தேதியும், 6 முதல் 9-ம் வகுப்புகளுக்கு டிச.15-ம் தேதியும் தேர்வுகள் தொடங்கும். இதற்குரிய பாடவாரியான கால அட்டவணை பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்த கட்டுரை feedburner ஆல் வெளியிடப்பட்டது மற்றும் கல்வி செய்திகளை உள்ளடக்கியது.