தமிழ் டைம்ஸ் logo
ஆன்லைன் மோசடியில் ரூ.32 கோடி இழந்த பெண்: பெங்களூரு சைபர் க்ரைம் போலீஸார் தீவிர விசாரணை
21 நவம்பர், 2025
feedburner
இந்தியா

ஆன்லைன் மோசடியில் ரூ.32 கோடி இழந்த பெண்: பெங்களூரு சைபர் க்ரைம் போலீஸார் தீவிர விசாரணை

பெங்களூரு: பெங்​களூரு​வைச் சேர்ந்த 57 வயதான பெண், தனி​யார் நிறு​வனத்​தில் நிதிப்​பிரி​வில் உயர் பொறுப்​பில் உள்​ளார். இவரை கடந்த ஆண்டு செப்​டம்​பர் 15-ம் தேதி வாட்​ஸ்​அப் மூலம் மர்ம நபர் ஒரு​வர் தொடர்பு கொண்​டார். மும்​பை​யில் உள்ள கூரியர் நிறு​வனத்​தில் இருந்து பேசுவ​தாக கூறி, ‘‘உங்​களுக்கு வெளி​நாட்​டில் இருந்து பார்​சல் வந்​திருக்​கிறது. அதில் 4 பாஸ்​போர்ட்​கள், 3 கிரெடிட் கார்​டு​கள், போதை பொருட்​கள் உட்ப‌ட தடைசெய்​யப்​பட்ட பொருட்​கள் இருக்​கின்​றன. நீங்​கள் உடனடி​யாக மும்​பைக்கு வரா​விட்​டால், உங்​கள் மீது போலீ​ஸில் புகார் அளிக்​கப்​படும்'' என எச்​சரித்​தார்.

இந்த கட்டுரை feedburner ஆல் வெளியிடப்பட்டது மற்றும் இந்தியா செய்திகளை உள்ளடக்கியது.