தமிழ் டைம்ஸ் logo
பிஹார் பேரவையை கலைக்க நிதிஷ் பரிந்துரை
21 நவம்பர், 2025
feedburner
இந்தியா

பிஹார் பேரவையை கலைக்க நிதிஷ் பரிந்துரை

பாட்னா: பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்​டணி 202 இடங்​களில் வென்று ஆட்​சியை தக்​க​வைத்​துக் கொண்​டது. இந்​நிலை​யில், இப்​போதைய அமைச்​சர​வை​யின் கடைசி கூட்​டம் முதல்​வர் நிதிஷ் குமார் தலை​மை​யில் நேற்று நடை​பெற்​றது. இதில், சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் அமோக வெற்றி பெற்​றதற்​காக நிதிஷ் குமாருக்கு அமைச்​சர்​கள் வாழ்த்து தெரி​வித்​தனர். பின்​னர் இப்​போதைய சட்​டப்​பேர​வையை கலைப்​பது என தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்​டது. இதன்​படி, முதல்​வர் நிதிஷ் குமார் ஆளுநர் ஆரிப் முகமது கானை நேற்று சந்​தித்​தார். அப்​போது சட்​டப்​பேர​வையை கலைப்​ப​தற்​கான பரிந்​துரை கடிதத்தை வழங்​கி​னார். இதன்​படி, வரும் 19-ம் தேதி சட்​டப்​பேரவை முறைப்​படி கலைக்​கப்​படும்.

இந்த கட்டுரை feedburner ஆல் வெளியிடப்பட்டது மற்றும் இந்தியா செய்திகளை உள்ளடக்கியது.