

எம்பிஏ படிப்புக்கான சிமேட் நுழைவுத் தேர்வு - விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்
எம்பிஏ படிப்புக்கான சிமேட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் நாளையுடன் (நவ.17) முடிவடைகிறது. நம்நாட்டில் உள்ள மத்திய உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமத்தின்கீழ் (ஏஐசிடிஇ) இயங்கும் கல்லூரிகளில் மேலாண்மை படிப்புகளில் சேர சிமேட் எனும் பொது நிர்வாக நுழைவுத் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். தேசிய தேர்வுகள் முகமை(என்டிஏ) சார்பில் இந்த தேர்வு ஆண்டுதோறும் கணினி வழியில் நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டுக்கான சிமேட் தேர்வு ஜனவரி மாதம் நடைபெற உள்ளது.

யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வில் வென்ற பார்வை மாற்றுத்திறன் பி.ஹெச்டி மாணவர் முனியாண்டி!
கரூர்: கரூர் அரசு கலைக் கல்லூரியில் பி.ஹெச்டி ஆராய்ச்சி படிப்பு படித்து வரும் பார்வை மாற்றுத் திறன் மாணவர், யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகேயுள்ள கூட்டக்காரன்பட்டி என்கிற சித்திரப்பள்ளியைச் சேர்ந்தவர் சி.முனியாண்டி (30). கரூர் அரசு கலைக் கல்லூரியில் பி.ஹெச்டி ஆராய்ச்சி படிப்பு மேற்கொண்டு வரும் இவர், அண்மையில் வெளியான யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வில் தமிழகத்தில் தேர்ச்சி பெற்ற 155 பேரில் ஒருவர். கரூர் அரசு கலைக் கல்லூரியில் 2012-15-ம் ஆண்டுகளில் பி.ஏ. தமிழ் படித்த இவர், சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பி.எட். கல்லூரியில் 2015- 17-ம் ஆண்டில் பி.எட்., படித்தார்.

கட்டுக்கடங்காத கூட்டத்தால் சபரிமலையில் குழந்தைகள், முதியோர் பரிதவிப்பு: மூதாட்டி மாரடைப்பால் உயிரிழப்பு
சபரிமலை: சபரிமலையில் ஏற்பட்டுள்ள கடும் நெரிசலில் சிக்கி குழந்தைகள், முதியோர் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்த மூதாட்டி ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்தார். சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆன்லைன் மூலம் 70 ஆயிரம் பேரும், ஸ்பாட் புக்கிங் மூலம் 20 ஆயிரம் பேரும் என மொத்தம் 90 ஆயிரம் பக்தர்கள் தினமும் அனுமதிக்கப்படுவர் என்று தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. ஆனால் ஸ்பாட் புக்கிங்கில் கட்டுப்பாடின்றி பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் நெரிசல் ஏற்பட்டு பம்பை, மரக்கூடம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் பக்தர்கள் வெகுநேரம் நிறுத்தி வைக்கப்பட்டு பின்பு அனுமதிக்கப்படுகின்றனர். 6 மணி நேரத்துக்கும் மேல் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. அதுவரை குடிநீர், கழிப்பிட வசதி இல்லாததால் பக்தர்கள் பெரும் பரிதவிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இத்துடன் கடும் நெரிசலும் ஏற்படுவதால் பலருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு வருகிறது.

டெல்லி கார் குண்டுவெடிப்பு ஒரு தற்கொலைப்படை தாக்குதல்: என்ஐஏ உறுதி
புதுடெல்லி: டெல்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பு ஒரு தற்கொலைப் படைத் தாக்குதல் என்றும் இந்த சதியில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளி ஒருவரை கைது செய்திருப்பதாகவும் என்று தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) தெரிவித்துள்ளது. டெல்லி செங்கோட்டை அருகே கடந்த 10-ம் தேதி கார் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில், 10 பேர் உயிரிழந்தனர், 32 பேர் காயமடைந்தனர். காஷ்மீரைச் சேர்ந்த மருத்துவரான உமர் முகமது நபி என்பவர் காரை ஓட்டிச் சென்று வெடிவிபத்தை நிகழ்த்தினார். இந்த வெடி விபத்து குறித்து முதலில் டெல்லி போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். பின்னர், இந்த வழக்கை என்ஐஏவுக்கு மாற்றி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இதையடுத்து, என்ஐஏ, 10 பேர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து, தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது.

‘மேகேதாட்டு தீர்ப்பு எங்களுக்கு சாதகம்’ - கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் வரவேற்பு
பெங்களூரு: மேகேதாட்டு திட்டம் தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பை கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் வரவேற்றார். மேலும், இது மாநிலத்துக்கு ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக இருக்கும் என்றும் கூறினார். செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த சிவகுமார், “மேகேதாட்டு தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக வந்துள்ளது. இதற்காக வாதாடிய வழக்கறிஞர்களுக்கு நாம் நன்றி தெரிவிக்க வேண்டும். இதே விஷயம் தொடர்பாக நாளையும் ஒரு கூட்டம் உள்ளது. எதிர்காலத்தில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி விவாதிக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.

அசாமில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு
புதுடெல்லி: அசாமில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் மேற்கொள்வதற்கான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு பிஹாரில் சிறப்பு தீவிர திருத்தத்தை (SIR) மேற்கொண்ட இந்திய தேர்தல் ஆணையம் அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், சத்தீஸ்கர், கோவா, குஜராத், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், அந்தமான் நிகோபார் தீவுகள், லட்சத்தீவுகள் ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை தொடங்கியுள்ளது.

சவுதி பேருந்து விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் உயிரிழந்த சோகம்
சவுதி அரேபியாவில் நடந்த பேருந்து விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 இந்தியர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்திலிருந்து சவுதி அரேபியாவிலுள்ள மெக்கா மற்றும் மதினாவுக்கு புனித யாத்திரை மேற்கொண்ட 45 முஸ்லிம்கள் பேருந்து விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். டீசல் டேங்கர் மீது இவர்கள் பயணம் செய்த பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 45 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் 18 பெண்கள், 10 சிறுவர்கள், 17 ஆண்கள் உள்ளனர்.

மதீனாவில் பேருந்து விபத்து: இந்திய யாத்ரீகர்கள் பலியானதாக தகவல் - அமைச்சர் ஜெய்சங்கர் இரங்கல்!
ஹைதராபாத்: சவூதி அரேபியாவில் நடந்த பேருந்து விபத்தில் ஹைதராபாத்தைச் சேர்ந்த 42 இந்திய யாத்ரீகர்கள் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. மெக்காவிலிருந்து மதீனாவுக்கு யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, டீசல் டேங்கர் லாரி மீது மோதியதால் பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், “மெதினாவில் இந்தியர்கள் சென்ற வாகனம் விபத்துக்குள்ளான நிகழ்வை அறிந்து மிகுந்த அதிர்ச்சியடைந்தேன். ரியாத்தில் உள்ள நமது தூதரகமானது, ஜெட்டா தூதரக அதிகாரிகளுடன் ஆலோசனையில் உள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு முழு ஆதரவை அளிக்கும். அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விழைகிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.

‘தற்கொலை தாக்குதல் எனப்படுவது...’ - டெல்லி குண்டு வெடிப்பு குற்றவாளி உமர் நபியின் பழைய வீடியோ வெளியானது!
புதுடெல்லி: “தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் குறித்து பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. இது ஒரு வகையான உயிர்த் தியாக நடவடிக்கை.” என டெல்லி கார் குண்டு வெடிப்பு நடத்திய மருத்துவர் உமர் நபி பேசியுள்ள வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. கடந்த 10-ம் தேதி டெல்லி - செங்கோட்டை பகுதியில் உமர் நபி இந்த தாக்குதலை நடத்தினார். அதற்கு முன்பாக இந்த வீடியோவை அவர் பதிவு செய்திருக்கலாம் எனத் தகவல். இந்த வீடியோவை ஆங்கில ஊடக நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் அவர் கூறியுள்ளதாவது:
சமீபத்திய செய்திகள்
சமீபத்திய புதுப்பித்தல்கள்


டெல்லி குண்டுவெடிப்பு: 25 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை; அல் பலா பல்கலைக்கழக நிறுவனர் கைது

டெல்லி கார் குண்டு தற்கொலை தாக்குதல் வழக்கில் மருத்துவர் ஷாகின் சயீத் செல்போன் ஆய்வு

‘இது குடும்பப் பிரச்சினை; நான் பார்த்துக் கொள்கிறேன்’ - தேஜஸ்வி - ரோகிணி மோதல் குறித்து லாலு கருத்து!
பாட்னா: தேஜஸ்வி யாதவ் - ரோகிணி ஆச்சார்யா இடையேயான பிரச்சினை என்பது குடும்பத்தின் உள் விவகாரம் என்றும் அதை தான் பார்த்துக் கொள்வதாகவும் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார். பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 202 இடங்களை வென்ற நிலையில், மகா கூட்டணி 35 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது, அதில் ஆர்ஜேடி கட்சி 25 இடங்களில் வென்றது. எந்த சட்டப்பேரவையிலும் எதிர்க்கட்சியாக தேர்வாக மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கையில் 10 சதவீத இடங்களில் வென்றிருக்க வேண்டும். பிஹார் சட்டப்பேரவையில் 243 இடங்கள் உள்ள நிலையில், ஆர்ஜேடி சரியாக 25 இடங்களை வென்றதால் எதிர்க்கட்சியாக தேர்வாகியுள்ளது.
விளம்பர இடம்
உங்கள் விளம்பரத்தை இங்கே காட்சி செய்யலாம்
மேலும் செய்திகள்
தமிழ்நாடு முழுவதும் மற்றும் அதற்கு அப்பால் இருந்து சமீபத்திய கதைகளுடன் புதுப்பித்த நிலையில் இருங்கள்

பிரதமர் மோடியை மீண்டும் புகழ்ந்த காங். எம்.பி.சசி தரூர்
புதுடெல்லி: முன்னாள் மத்திய அமைச்சரும் திருவனந்தபுரம் மக்களவை தொகுதி காங்கிரஸ் எம்.பி.யுமான சசி தரூர் சமீப காலமாக பிரதமர் நரேந்திர மோடியை புகழ்ந்து பேசி வருகிறார். இது காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கும் அவருக்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், சசி தரூர் எக்ஸ் தளத்தில் நேற்று கூறியதாவது: டெல்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், அழைப்பின் பேரில் நான் பங்கேற்றேன். அதில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா என்பது வளரும் சந்தை மட்டுமல்ல, உலக நாடுகளுக்காக வளர்ந்து வரும் மாதிரி என்று கூறினார். கரோனா பெருந்தொற்று, ரஷ்யா-உக்ரைன் போர் உள்ளிட்ட சர்வதேச அளவிலான நிச்சயமற்ற தன்மைக்கு நடுவிலும் இந்திய பொருளாதாரம் வளர்ந்து வருவதைத்தான் அவர் அவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பாஜக.வினருக்கு மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த போஸ் ஆயுதங்கள் அளிப்பதை நிறுத்த வேண்டும்: கல்யாண் பானர்ஜி பேச்சால் சர்ச்சை
கொல்கத்தா: ‘‘பாஜக.வினருக்கு ஆயுதங்கள், வெடிப்பொருட்கள் வழங்குவதை ஆளுநர் ஆனந்த போஸ் நிறுத்திக் கொள்ள வேண்டும்’’ என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி. கல்யாண் பானர்ஜி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் திரிணமூல் காங்கிரஸ் சார்பில் மம்தா பானர்ஜி முதல்வராக பொறுப்பு வகிக்கிறார். இவரது கட்சியின் எம்.பி. கல்யாண் பானர்ஜி. அவ்வப்போது ஏதாவது கருத்துகளை தெரிவித்து சர்ச்சையில் சிக்கி வருகிறார்.

நவ.19-ல் எம்எல்ஏக்கள் கூட்டம்; நவ.20-ல் பதவியேற்பு: பிஹார் பாஜக தலைவர் திலிப் ஜெய்ஸ்வால்
பாட்னா: பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டம் நாளை நடைபெறும். பின்னர், தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்எல்ஏக்களின் கூட்டம் நடைபெறும். இதையடுத்து நாளை மறுநாள் பதவியேற்பு விழா நடைபெறும் என்று பிஹார் மாநில பாஜக தலைவர் திலிப் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய திலிப் ஜெய்ஸ்வால், "நாளை காலை 10 மணிக்கு பாட்னாவில் உள்ள பாஜக தலைமையகமான அடல் சபஹாரில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டம் நடைபெறும். இதில், கட்சியின் சட்டப்பேரவைக் குழு தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார். இதில், சட்டப்பேரவை உறுப்பினர்களும், கட்சியின் மேலிட பார்வையாளர்களும் கலந்து கொள்வார்கள். இதனைத் தொடர்ந்து என்டிஏ கூட்டம் நடைபெறும்.

மத்திய பிரதேசத்தில் யூடியூப் பார்த்து போலி ரூபாய் நோட்டுகளை அச்சடித்தவர் கைது
போபால்: ம.பி.யில் யூடியூப் பார்த்து போலி ரூபாய் நோட்டுகளை அச்சடித்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். மத்திய பிரதேச மாநிலம் போபாலில் ஒரு பள்ளிக்கு அருகே ஒருவர் போலி 500 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட முயற்சிப்பதாக கடந்த வெள்ளிக்கிழமை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, பிப்லானி காவல் நிலையத்தின் குற்றப் பிரிவு போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விவேக் யாதவ் (21) என்பவரை கைது செய்தனர்.

என்டிஏ அரசுக்கு லாலு மகன் தேஜ் பிரதாப் ஆதரவு
பிஹார்: லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ், ராஷ்டிரிய ஜனதா தளத்தில் இருந்து விலகி ஜனசக்தி ஜனதா தளம் என்ற புதிய கட்சியை தொடங்கி உள்ளார். பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் அவரது புதிய கட்சி 22 தொகுதிகளில் போட்டியிட்டது. மஹுவா சட்டப்பேரவைத் தேர்தலில் தேஜ் பிரதாப் யாதவ் போட்டியிட்டார். அவர் உட்பட ஜன சக்தி ஜனதா தளத்தின் அனைத்து வேட்பாளர்களும் தோல்வியை தழுவினர். இதுதொடர்பாக பாட்னாவில் உள்ள தேஜ் பிரதாப் யாதவின் வீட்டில் கட்சி தலைவர்கள் நேற்று ஆலோசனை நடத்தினர். இதன்பிறகு கட்சியின் செய்தித் தொடர்பாளர் பிரேம் யாதவ் கூறும்போது, “தேர்தல் தோல்வி குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினோம். அடுத்த கட்டமாக கட்சியை வலுப்படுத்த நடவடிக்கை எடுப்போம். பிஹாரில் பதவியேற்க உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) அரசுக்கு எங்கள் கட்சி தார்மிக அடிப்படையில் ஆதரவு அளிக்கும்’’ என்று தெரிவித்தார்.

ஆர்ஜேடி 25 இடங்களில் மட்டுமே வெற்றி: தேர்தலில் சீட் கிடைக்காதவர்கள் சாபம் பலித்ததாக விமர்சனம்
புதுடெல்லி: ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சியின் தலைவர் மதன் ஷா. இவருக்கு பிஹார் தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதன் காரணமாக அவர் கடந்த மாதம் சட்டையை கிழித்துக்கொண்டு அழுது தனது விரக்தியை வெளிப்படுத்தினார். மேலும், ஆர்ஜேடி கட்சி 25 இடங்களுக்கு மேல் தேறாது என்ற சாபத்தையும் வழங்கினார். இவர் வயிறு எரிந்து விட்ட சாபத்தைப் போலவே ஆர்ஜேடி 25 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

‘தீவிரவாதிகள் மீது எப்போதும் அனுதாபம்’ - மெஹபூபா முப்தியை சாடிய முன்னாள் உ.பி அமைச்சர்
லக்னோ: டெல்லியில் கடந்த வாரம் நடைபெற்ற கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், பிடிபி கட்சியின் தலைவருமான மெஹபூபா முப்தி தனது கருத்தை அண்மையில் தெரிவித்திருந்தார். இதையடுத்து தீவிரவாதிகள் மீது மெஹபூபா முப்திக்கு எப்போதும் அனுதாபம் என உத்தர பிரதேசத்தின் முன்னாள் அமைச்சர் மொஹ்சின் ராசா விமர்சித்துள்ளார். “தேசத்தில் தீவிரவாத தாக்குதல்கள் நடைபெறும் போதெல்லாம் அவர்களின் குடும்பம் முதல் ஆளாக வந்து நிற்கிறது. ஏனெனில், அவர்களுக்கும் தீவிரவாதிகளும் இடையிலான உறவு மிகவும் பழையது.

உ.பி.யில் மனைவியை கொன்று தற்கொலை என சித்தரித்தவர் கைது
பிரயாக்ராஜ்: உ.பி.யின் பிரயாக்ராஜ் மாவட்டம், பாரா அனல் மின் நிலையத்தில் பணியாற்றி வந்தவர் ரோகித் (35). இவர் லாலாப்பூர் என்ற கிராமத்தில் தனது மனைவி சுஷ்மா திவேதி (32) உடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் சுஷ்மா கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் கழுத்தில் காயத்துடன் ரத்த வெள்ளத்தில் வீட்டில் இறந்து கிடந்தார். தகவலின் பேரில் விரைந்து சென்ற போலீஸார், வீட்டின் தரையில், ‘‘நான் மனநிலை சரியில்லாதவள், எனது கணவர் அப்பாவி’’ என ரத்தத்தால் எழுதியிருந்ததை பார்த்தனர்.

பட்டியல் சாதியினருக்கான இடஒதுக்கீட்டில் கிரீமிலேயருக்கு விலக்கு: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் வலியுறுத்தல்
புதுடெல்லி: பட்டியல் சாதியினருக்கான இட ஒதுக்கீட்டில் கிரீமி லேயருக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் வலியுறுத்தியுள்ளார். ஆந்திரப் பிரதேச மாநிலம் அமராவதியில் நடைபெற்ற ‘75-ஆவது ஆண்டில் இந்தியா மற்றும் இந்திய அரசமைப்புச் சட்டம்’ என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் பேசியதாவது:

பிஹார் பேரவையை கலைக்க நிதிஷ் பரிந்துரை
பாட்னா: பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி 202 இடங்களில் வென்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. இந்நிலையில், இப்போதைய அமைச்சரவையின் கடைசி கூட்டம் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், சட்டப்பேரவைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றதற்காக நிதிஷ் குமாருக்கு அமைச்சர்கள் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் இப்போதைய சட்டப்பேரவையை கலைப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி, முதல்வர் நிதிஷ் குமார் ஆளுநர் ஆரிப் முகமது கானை நேற்று சந்தித்தார். அப்போது சட்டப்பேரவையை கலைப்பதற்கான பரிந்துரை கடிதத்தை வழங்கினார். இதன்படி, வரும் 19-ம் தேதி சட்டப்பேரவை முறைப்படி கலைக்கப்படும்.

அசாமில் இன்று முதல் வாக்காளர் திருத்த பணி தொடக்கம்
புதுடெல்லி: அசாம் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் அசாமிலும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியை (எஸ்ஐஆர்) மேற்கொள்ள தேர்தல் ஆணையம் நேற்று உத்தரவு பிறப்பித்தது. இதுதொடர்பான உத்தரவை, அசாம் மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ளதாகத் தெரிகிறது. அதன்படி 18-ம் தேதி (இன்று) முதல் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடங்க உள்ளது.

போலி அனுதாபம் வேண்டாம்: தேஜஸ்வி மீது ரோகிணி சாடல்
புதுடெல்லி: ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத்துக்கு அழுக்கான சிறுநீரகத்தை கொடுத்துவிட்டு அதற்கு பதில் அரசியல் வாய்ப்பையும், பணத்தையும் ரோகிணி ஆச்சார்யா பெற்றதாக அவரது சகோதரர் தேஜஸ்வி தெரிவித்திருந்தார். இதுகுறித்து ரோகிணி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘‘லாலுவின் பெயரில் போலி அனுதாபம் காட்டுவதை நிறுத்திவிட்டு மருத்துவமனைகளில் உள்ள லட்சக்கணக்கான ஏழை நோயாளிகளுக்கு தங்களது சிறுநீரகங்களை தானம் செய்ய அவர்கள் முன்வர வேண்டும். லாலு மீது அவர்களுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால், அவர் பெயரில்தான் சிறுநீரங்களை தானம் செய்ய வேண்டும்.

வருவாய்த் துறையினர் போராட்டத்தை திமுக அரசு தூண்டுகிறது: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
திருநெல்வேலி: தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகளுக்கு எதிராக வருவாய்த் துறையினர் போராட்டம் நடத்த திமுக அரசு தூண்டுகிறது என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டினார். திருநெல்வேலியில் வ.உ.சி-யின் நினைவு தினத்தை ஒட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: வ.உ.சி-க்கு அஞ்சலி செலுத்துவதில் பெருமைப் படுகிறோம். சுதந்திரப் போராட்ட வீரர்களை கவுரவப்படுத்துவதில் முதல் ஆளாக இருப்பவர் பிரதமர் மோடி.

நெல்லை கவின் கொலை வழக்கில் சார்பு ஆய்வாளர் ஜாமீன் மனு விசாரணை தள்ளிவைப்பு
மதுரை: நெல்லையில் மென்பொருள் பொறியாளர் கவின் கொலை வழக்கில் கைதான சார்பு ஆய்வாளர் ஜாமீன் மனு விசாரணையை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது. நெல்லையில் மென்பொருள் பொறியாளர் கவின் காதல் விவகாரம் காரணமாக ஜூலை 27-ல் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கவின் காதலித்து வந்த இளம் பெண்ணின் தம்பி சுர்ஜித், அவரது தந்தை உதவி ஆய்வாளர் சரவணன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பெண்ணின் தாயாரும் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளார்.

‘புதியவர்கள் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறோம்’ - மதில் மேல் பூனையாய் நிற்கும் ரங்கசாமி கருத்து
புதுச்சேரி அரசியலில் பாஜக அமைச்சர் ஜான்குமார் முதல்வர் ரங்கசாமிக்கு தேவையற்ற நெருக்கடிகளை உண்டாக்கி வருகிறார். லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸை வைத்து, வரும் தேர்தலில் தனியான ஒரு அணியை கட்டமைக்க நினைக்கிறார் ஜான்குமார். இதற்காக அவர் எடுத்து வரும் நடவடிக்கைகளை பாஜக மேலிடமும் கண்டும் காணாமல் இருக்கிறது. ஆனாலும் இவை அனைத்தையும் மவுனமாக கடந்து கொண்டிருக்கும் ரங்கசாமி, பிஹார் தேர்தல் வெற்றிக்காக பாஜக தலைவர் நட்டாவுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பி இருப்பதுடன், டெல்லி சென்று பிரதமரைச் சந்திக்கவும் தயாராகி வருகிறார்.

மத்திய அரசுப் பள்ளிகளில் 14,967 காலி பணியிடங்கள்: டிச.4-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
சென்னை: கேந்திரிய வித்யாலயா, நவோதயா பள்ளிகளில் காலியாக உள்ள 14,967 பணியிடங்களுக்கு டிச.4-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 9,126, நவோதயா பள்ளிகளில் 5,841 என மொத்தம் 14,967 ஆசிரியர் மற்றும் பணியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில் 13,008 பணியிடங்கள் இடைநிலை, பட்டதாரி, முதுநிலை ஆசிரியர், முதல்வர், துணை முதல்வர், நூலகர் பதவிகளுக்கானவை. மீதமுள்ள 1,959 பணியிடங்கள் உதவி ஆணையர், நிர்வாக அதிகாரி, இளநிலை உதவியாளர், மூத்த உதவியாளர், உதவி பிரிவு அலுவலர் (ஏஎஸ்ஓ), நிர்வாகப் பணியாளர், நிதி அதிகாரி, பொறியாளர், மொழிபெயர்ப்பாளர் மற்றும் சுருக்கெழுத்தாளர் என ஆசிரியர் அல்லாத பிரிவில் வருகின்றன.
அதிகம் படிக்கப்பட்டது
எங்கள் வாசகர்கள் பேசும் பிரபலமான கதைகள்