தமிழ் டைம்ஸ் logo
திருச்சி அருகே வாழைத் தோப்பில் பிடிபட்ட 7 அடி நீள முதலை
சுற்றுச்சூழல்

திருச்சி அருகே வாழைத் தோப்பில் பிடிபட்ட 7 அடி நீள முதலை

திருச்சி: திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலையில் சிறுகாடு தோப்பு பொய்யாமணி கரையில் உள்ள வாழைத் தோட்டத்தில் சுமார் 7 அடி நீளமுள்ள முதலை திரிவதை கண்டு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். உய்யக்கொண்டான் வாய்க்கால் மூலம் அந்த முதலை வாழை தோப்பிற்கு சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து அப்பகுதி மக்கள் திருச்சி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் முதலையை லாவகமாக மீட்டனர்.

feedburner
28 நவ., 05:30 AM
நீலகிரி ஈட்டி மரங்கள் பாதுகாக்கப்படுமா?
சுற்றுச்சூழல்

நீலகிரி ஈட்டி மரங்கள் பாதுகாக்கப்படுமா?

கூடலூர்: பிப்ரவரி மாதம் காலாவதியான பாரம்பரிய ஈட்டி மரங்களை பாதுகாக்க, தமிழ்நாடு ஈட்டி மரங்கள் (பாதுகாப்பு) சட்டம் ஏன் புதுப்பிக்கப்படவில்லை என இயற்கை ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் ஈட்டி, சந்தனம், தேக்கு போன்ற விலை உயர்ந்த மரங்கள் அதிகளவில் உள்ளன. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள்‌ மட்டுமின்றி தனியாருக்குச் சொந்தமான நிலங்களிலும் இந்த வகை மரங்கள் காணப்படுகின்றன. தனியார் நிலத்திலிருந்தாலும் இந்த மரங்களை வெட்டத் தடைகளும் கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

feedburner
28 நவ., 05:30 AM
சுற்றுச்சூழல் பாதுகாப்பு, ஆராய்ச்சி பணிகளில் விருது: நவ.14-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
சுற்றுச்சூழல்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு, ஆராய்ச்சி பணிகளில் விருது: நவ.14-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

‘சுற்றுச்சூழல் பாதுகாப்பு, ஆராய்ச்சிப் பணிகளில் சிறந்து விளங்கும் நபர்கள், நிறுவனங்களுக்கான சுற்றுச்சூழல் விருதுகளுக்கு நவ.14-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்’ என சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை இயக்குநர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் சுற்றுச்சூழல் கல்வி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சிப் பணிகளில் சிறந்து விளங்கும் கல்வி நிறுவனங்கள், தனிநபர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை கவுரவிக்கும் விதமாக, 2024-ம் ஆண்டுக்கான சுற்றுச்சூழல் விருதுகள் வழங்கப்பட உள்ளன.

feedburner
28 நவ., 05:30 AM
விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலையில் மர்மமாக இறந்து கிடந்த சிறுத்தை - வனத்துறை விசாரணை
சுற்றுச்சூழல்

விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலையில் மர்மமாக இறந்து கிடந்த சிறுத்தை - வனத்துறை விசாரணை

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலையில் இன்று (நவ.5) அதிகாலை மர்மமாக இறந்து கிடந்த 3 வயது ஆண் சிறுத்தையின் உடலை மீட்டு வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

feedburner
28 நவ., 05:30 AM
‘பறிபோகும் பள்ளிக்கரணை சதுப்பு நிலம்... விதிகளை மீறிய அதிகாரிகள்!’ - பாஜக குற்றச்சாட்டு
சுற்றுச்சூழல்

‘பறிபோகும் பள்ளிக்கரணை சதுப்பு நிலம்... விதிகளை மீறிய அதிகாரிகள்!’ - பாஜக குற்றச்சாட்டு

சென்னை: பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் விதிகளை மீறி அடுக்குமாடி குடியிருப்புகளை கட்ட தனியார் கட்டுமான நிறுவனத்துக்கு அதிகாரிகள் அனுமதி அளித்தது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க கோரி மத்திய அமைச்சருக்கு பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் கடிதம் அனுப்பி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் 3800 ஏக்கர் நிலப்பரப்பு, ராம்சார் தளமாக கடந்த 2022 ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த சதுப்பு நிலப் பகுதியில் உள்ள 14.7 ஏக்கர் நிலத்தில், ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் 1,250 வீடுகள் அடங்கிய பிரிகேட் மார்க் சென்டர் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி வருகிறது.

feedburner
28 நவ., 05:30 AM
கார்பன் சேமிப்பு திட்டம் விரைவில் அறிமுகம்: நிதி ஆயோக் ஆலோசகர் தகவல்
சுற்றுச்சூழல்

கார்பன் சேமிப்பு திட்டம் விரைவில் அறிமுகம்: நிதி ஆயோக் ஆலோசகர் தகவல்

புதுடெல்லி: இந்​திய வர்த்தக கூட்​டமைப்பு (ஐசிசி) சார்​பில் 17-வது நிலக்​கரி உச்சி மாநாடு டெல்​லி​யில் நேற்று நடை​பெற்​றது. இதில் பங்​கேற்ற நிதி ஆயோக் அமைப்​பின் ஆலோ​சகர் (எரிசக்​தி) ராஜ்​நாத் ராம் பேசி​ய​தாவது: கார்​பன் டை ஆக்​ஸைடை சேமித்து பயன்​படுத்​தும் திட்​டத்தை (சிசி​யுஎஸ்) அரசு விரை​வில் அறி​முகப்​படுத்த உள்​ளது. இந்த திட்​டத்​தின் கீழ் சில தொழில்​நுட்​பங்​களுக்கு 100% அரசு நிதி​யுதவி வழங்​கப்​படும். மொத்த ஊக்​கத் தொகை 50% முதல் 100% வரை இருக்​கும். இந்த ஊக்​கத் தொகை, தொழில் துறை​யினர் கார்​பன் சேமிப்பு தொழில்​நுட்​பங்​களை எளி​தில் கடைபிடிக்​க​வும் அவற்றை நிலக்​கரி அடிப்​படையி​லான எரிசக்தி அமைப்​பு​களு​டன் இணைக்​க​வும் உதவும் என்​றார்.

feedburner
28 நவ., 05:30 AM
வால்பாறையில் தாக்க முயன்ற கரடியை குடையால் அடித்து விரட்டிய தொழிலாளர்கள்!
சுற்றுச்சூழல்

வால்பாறையில் தாக்க முயன்ற கரடியை குடையால் அடித்து விரட்டிய தொழிலாளர்கள்!

கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த லோயர் பாரளை எஸ்டேட் தேயிலை தொழிற்சாலை முன்பு நேற்று முன்தினம் மாலை தொழிலாளர்கள் 2 பேர் பேசிக் கொண்டிருந்தனர். லேசாக மழை பெய்து கொண்டிருந்த நிலையில், கையில் குடையுடன் நின்றிருந்தனர். அப்போது, தேயிலை செடிகளுக்கு பின்னால் மறைந்திருந்த கரடி ஒன்று, திடீரென ஓடி வந்து, தொழிலாளர்களை தாக்க முயன்றது. இதனை சற்றும் எதிர்பாராத தொழிலாளர்கள், சுதாகரித்துக் கொண்டு கையில் வைத்திருந்த குடையால், கரடியை அடித்தனர். இதையடுத்து, கரடி அங்கிருந்து தப்பி தேயிலை தோட்டத்துக்குள் ஓடி மறைந்தது.

feedburner
28 நவ., 05:30 AM
சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் 47 சட்டவிரோத ரிசார்ட்டுகளை மூட உத்தரவு
சுற்றுச்சூழல்

சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் 47 சட்டவிரோத ரிசார்ட்டுகளை மூட உத்தரவு

சென்னை: சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் சட்டவிரோதமாக செயல்படும் 47 ரிசார்ட்டுகளை உடனடியாக மூட தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ள உயர் நீதிமன்றம், அப்பகுதிகளில் பேட்டரி கார்களை இயக்குவது குறித்தும் தமிழக அரசு பதிலளிக்க அறிவுறுத்தியுள்ளது. சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் தேசிய வன விலங்குகள் வாரியம், மலைப்பகுதி பாதுகாப்பு ஆணையம் ஆகியவற்றின் ஒப்புதல் பெறாமல் சட்டவிரோதமாக செயல்படும் ரிசார்ட்டுகளை மூடக்கோரி கோவையைச் சேர்ந்த ஒலி விழிப்புணர்வு இயக்கத்தின் நிறுவனரான கற்பகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2022-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார்.

feedburner
28 நவ., 05:30 AM
பயிர்க்கழிவை எரிப்பவர்களுக்கு சிறை: உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து
சுற்றுச்சூழல்

பயிர்க்கழிவை எரிப்பவர்களுக்கு சிறை: உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து

புதுடெல்லி: தேசிய தலைநகர் மண்டலத்தில் காற்று மாசுவை தடுக்கக் கோரும் மனுக்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், நீதிபதி கே.வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது. விசாரணையின்போது தலைமை நீதிபதி கூறியதாவது: பயிர்க்கழிவுகளை எரிக்கும் விவசாயிகள் சிலரை சிறைக்கு அனுப்பினால் அது எச்சரிக்கையாக அமையும். பயிர்க்கழிவுகளை எரிக்கும் விவசாயிகளைத் தண்டிக்கும் பிரிவுகளைக் கொண்ட சட்டத்தை ஏன் இயற்றக் கூடாது?

feedburner
28 நவ., 05:30 AM

சமீபத்திய செய்திகள்

சமீபத்திய புதுப்பித்தல்கள்

4 மாவட்ட அரசு அலுவலகங்களில் சோலார் கட்டமைப்புகளை நிறுவ டெண்டர்: பசுமை எரிசக்தி கழகம் அறிவிப்பு
சுற்றுச்சூழல்

4 மாவட்ட அரசு அலுவலகங்களில் சோலார் கட்டமைப்புகளை நிறுவ டெண்டர்: பசுமை எரிசக்தி கழகம் அறிவிப்பு

feedburner
Nov 283 நிமிடம் படிக்க
பள்ளிக்கரணை ஏரியில் கழிவுநீர் கலப்பதை வேடிக்கை பார்க்கும் சென்னை மாநகராட்சி, நீர்வளத் துறை!
சுற்றுச்சூழல்

பள்ளிக்கரணை ஏரியில் கழிவுநீர் கலப்பதை வேடிக்கை பார்க்கும் சென்னை மாநகராட்சி, நீர்வளத் துறை!

feedburner
Nov 283 நிமிடம் படிக்க
தீபாவளியை விபத்து, ஒலி மாசு இல்லாமல் கொண்டாட பொதுமக்களுக்கு வேண்டுகோள்
சுற்றுச்சூழல்

தீபாவளியை விபத்து, ஒலி மாசு இல்லாமல் கொண்டாட பொதுமக்களுக்கு வேண்டுகோள்

feedburner
Nov 283 நிமிடம் படிக்க
மயக்க ஊசி செலுத்த முயன்றபோது ‘ரோலக்ஸ்’ யானை தாக்கி கால்நடை மருத்துவர் படுகாயம்
சுற்றுச்சூழல்

மயக்க ஊசி செலுத்த முயன்றபோது ‘ரோலக்ஸ்’ யானை தாக்கி கால்நடை மருத்துவர் படுகாயம்

கோவை: கோவை அருகே மயக்க ஊசி செலுத்த முயன்றபோது, ‘ரோலக்ஸ்’ என்ற காட்டு யானை தாக்கியதில் கால்நடை மருத்துவர் படுகாயமடைந்தார். கோவை மாவட்டம் நரசீபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில், ‘ரோலக்ஸ்’ எனப்படும் ஒற்றை ஆண் காட்டு யானையின் நடமாட்டம் உள்ளது. இந்த யானை நரசீபுரம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் அடிக்கடி நுழைந்து பொதுமக்களை அச்சுறுத்தியும், விளை நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களை சேதப்படுத்தியும் வருகிறது.

feedburner
Nov 28, 05:30 AM
5 நிமிடம் படிக்க

விளம்பர இடம்

உங்கள் விளம்பரத்தை இங்கே காட்சி செய்யலாம்

மேலும் செய்திகள்

தமிழ்நாடு முழுவதும் மற்றும் அதற்கு அப்பால் இருந்து சமீபத்திய கதைகளுடன் புதுப்பித்த நிலையில் இருங்கள்

பசுமை மின்சாரம் உற்பத்தி திறனில் தமிழகத்துக்கு பின்னடைவு
சுற்றுச்சூழல்

பசுமை மின்சாரம் உற்பத்தி திறனில் தமிழகத்துக்கு பின்னடைவு

சென்னை: சுற்​றுச்​சூழலை பாது​காக்​க​வும், நிலை​யான மின் உற்​பத்​தியை உறுதி செய்​ய​வும் புதுப்​பிக்​கத்​தக்க எரிசக்தி ஆதா​ரங்​கள் வாயி​லாக மின்​சா​ரம் உற்​பத்தி செய்ய, அனைத்து மாநிலங்​களுக்​கும், மத்​திய அரசு வலி​யுறுத்தி வரு​கிறது. அனைத்து மாநிலங்​களும் சூரியசக்தி மின் நிலையங்கள், காற்​றலைகள், நீர்​மின் நிலை​யங்​களை அமைத்​து, மாநிலத்​தின் பசுமை மின்​சார உற்​பத்தி திறனை அதி​கரித்து வரு​கின்​றன. இந்த மின்​நிலை​யங்​களை மாநிலங்​களின் மின்​வாரி​யங்​களும், தனி​யார் நிறு​வனங்​களும் அமைத்து வரு​கின்​றன.

feedburner
28 நவ.
3 நிமிடம் படிக்க
பள்ளிக்கரணை சதுப்பு நில விவகாரம்: தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை விளக்கம்
சுற்றுச்சூழல்

பள்ளிக்கரணை சதுப்பு நில விவகாரம்: தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை விளக்கம்

சென்னை: ‘​ராம்​சார் தலம் அமை​யும் நிலங்​கள் வரையறுக்​கப்​ப​டாத​தால், தற்​போதைய பள்​ளிக்​கரணை சதுப்​புநில காப்​புக்​காட்டு எல்​லைகளுக்கு வெளியே உள்ள தனி​யார் பட்டா நிலங்​களுக்கு மட்​டுமே ஒப்​புதல் வழங்​கப்​பட்​டுள்​ளது’ என சுற்​றுச்​சூழல் மற்​றும் வனத்​துறை விளக்​கம் அளித்​துள்​ளது. சென்னை பெரும்​பாக்​கத்​தில், பள்​ளிக்​கரணை காப்​புக்​காடு ராம்​சார் தலத்​தில், அடுக்​கு​மாடி கட்​டிட திட்​டத்​துக்கு ஒப்​புதல் வழங்​கப்​பட்ட விவ​காரம் தொடர்​பாக, அறப்​போர் இயக்​கம் குற்​றச்​சாட்​டு​களை முன்​வைத்​தது. இதுதொடர்​பாக, பாஜக, அதி​முக தரப்​பிலும் கடுமை​யான விமர்​சனங்​கள் எழுந்​துள்​ளன.

feedburner
28 நவ.
3 நிமிடம் படிக்க
‘Blood Moon’ இன்று முழு சந்திர கிரகணம்: இந்தியாவில் எந்தெந்த நகரங்களில் பார்க்க முடியும்?
சுற்றுச்சூழல்

‘Blood Moon’ இன்று முழு சந்திர கிரகணம்: இந்தியாவில் எந்தெந்த நகரங்களில் பார்க்க முடியும்?

சென்னை: பேரண்டம் எப்போதுமே விந்தையானது. அந்த வகையில் இன்று (செப்.7) இரவு முழு சந்திர கிரகணம் நடைபெற உள்ளது. இதுவொரு அரிய நிகழ்வு. இதை வெறும் கண்களில் மக்கள் பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ள சூழலில் இந்நிகழ்வு இந்தியாவில் எந்தெந்த நகரங்களில் பார்க்க முடியும் என்பதை பார்ப்போம். நிலவுக்கு எப்போதுமே நம் வாழ்வில் தனித்த இடம் உண்டு. குழந்தைகள், பெரியவர்கள், கவிஞர்கள், விண்வெளி ஆய்வாளர்கள் என ஒவ்வொருவரும் சந்திரனை சார்ந்து இருப்பது உண்டு. பகல் நேர பகலவனை காட்டிலும் இரவு நேர நிலவொளி பொழுது பலருக்கும் பிடிக்கும். கடற்கரையில் அமர்ந்தபடி நிலவை பார்த்து ரசிப்பது தனித்த அனுபவம். இரவு நேர வானம், விண்மீன் கூட்டம், அதற்கு மத்தியில் தவழும் வெண்மதி என அந்த காட்சியின் நிகழ் அனுபவம் அற்புதமாக இருக்கும்.

feedburner
28 நவ.
3 நிமிடம் படிக்க
உலகின் மாசுபட்ட நகரங்கள்: முதலிடத்தில் டெல்லி
சுற்றுச்சூழல்

உலகின் மாசுபட்ட நகரங்கள்: முதலிடத்தில் டெல்லி

புதுடெல்லி: உலகின் மாசுபட்ட நகரங்கள் பட்டியலில் டெல்லி முதலிடத்தில் உள்ளது. சுவிஸ் காற்று தர தொழில்நுட்ப நிறுவனமான ஐகியூஏர்-ன் (IQAir) உலக காற்று தர அறிக்கை 2025 தற்போது வெளியாகி உள்ளது. இந்தப் பட்டியலில் நம் நாட்டின் தலைநகரமான டெல்லி முதலிடத்தைப் பிடித்துள்ளது. நேற்று காலை நிலவரப்படி டெல்லியின் காற்று தரக்குறியீடு (ஏகியூஐ) 350 ஆக உள்ளது.

feedburner
28 நவ.
3 நிமிடம் படிக்க
மான்கள் வாழும் கள்ளங்காடு பகுதி பாதுகாக்கப்படுமா?
சுற்றுச்சூழல்

மான்கள் வாழும் கள்ளங்காடு பகுதி பாதுகாக்கப்படுமா?

மதுரை மாவட்டம், மேலூர் வட்டம் வஞ்சிநகரம், பூதமங்கலம் மற்றும் கொடுக்கம்பட்டி ஆகிய 3 ஊராட்சிகளை உள்ளடக்கிய கள்ளங்காடு பகுதி 100 ஏக்கரில் அமைந்துள்ளது. மதுரை இயற்கை மற்றும் பண்பாட்டு அறக்கட்டளை ஆய்வுக்குழுவினரால் இப்பகுதியில் உள்ள பண்பாடு மற்றும் பல்லுயிரிகள் குறித்த ஆய்வுகள் நடைபெற்றுள்ளன. இதில் இங்கு பழமையான கோயில் காடுகள் உள்ளதும், இங்கு உசிலை, குருந்தம், விடத்தலை, களா, காரை, ஆத்தி, ஆலம், அரசம், தைலம், குறிஞ்சி, திருகுகள்ளி, செங்கத்தாறி, மஞ்சநத்தி, சிறுபூனைக்காலி உள்ளிட்ட தாவரங்கள் பெருமளவில் காணப்படுகிற தகவல் வெளியானது.

feedburner
28 நவ.
3 நிமிடம் படிக்க
20 ஆண்டாக வளர்த்த மரத்தை வெட்டியதால் மூதாட்டி கதறல்
சுற்றுச்சூழல்

20 ஆண்டாக வளர்த்த மரத்தை வெட்டியதால் மூதாட்டி கதறல்

புதுடெல்லி: சத்தீஸ்கரில் 20 ஆண்டுகளுக்கு முன் நட்டு வளர்ந்த அரச மரம் வெட்டப்பட்ட தால், அதன் அருகே மூதாட்டி ஒருவர் கதறி அழும் வீடியோவை சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ள மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ, இந்த காட்சி நெஞ்சை உருக்குவதாக உள்ளது என தெரிவித்து உள்ளார். சத்தீஸ்கர் மாநிலம் கைராகர் மாவட்டம் சாரா கோண்டி கிராமத்தைச் சேர்ந்த 85 வயது மூதாட்டி தியோலா பாய். இவர் 20 ஆண்டுகளுக்கு முன் தான் வசிக்கும் பகுதியில் அரச மரக் கன்றை நட்டு வளர்த்துள்ளார். அது தற்போது மிகப் பெரிய மரமாக வளர்ந்திருந்தது. அந்த மரம் தெய்வமாக வழிபடப்பட்டது போல் உள்ளது.

feedburner
28 நவ.
3 நிமிடம் படிக்க
டெல்லியில் காற்று மாசுபாட்டை குறைக்க செயற்கை மழை
சுற்றுச்சூழல்

டெல்லியில் காற்று மாசுபாட்டை குறைக்க செயற்கை மழை

புதுடெல்லி: டெல்லியில் மாசுவைக் குறைக்க செயற்கை மழை அவசியம் என்று முதல்வர் ரேகா குப்தா அறிவித்துள்ளார். டெல்லியில் நேற்று முன்தினம் கிளவுட் சீடிங் எனப்படும் செயற்கை மழை பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது. இது தொடர்பாக டெல்லி முதல்வர் ரேகா குப்தா செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: காற்று மாசுபாட்டை குறைக்கும் நோக்கில் டெல்லியில் நேற்று செயற்கை மழை வெற்றிகரமாக பரிசோதித்துப் பார்க்கப்பட்டுள்ளது.

feedburner
28 நவ.
3 நிமிடம் படிக்க
சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு சவாலாக பருவநிலை மாற்றம்: மாசுக்கட்டுப்பாடு வாரிய தலைவர் தகவல்
சுற்றுச்சூழல்

சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு சவாலாக பருவநிலை மாற்றம்: மாசுக்கட்டுப்பாடு வாரிய தலைவர் தகவல்

சென்னை: சுற்​றுச்​சூழல் பாது​காப்​புக்கு பரு​வநிலை மாற்​றம் பெரும் சவாலாக இருப்​ப​தாக தமிழ்​நாடு மாசுக்​கட்​டுப்​பாடு வாரிய தலை​வர் ஜெயந்தி தெரி​வித்​துள்​ளார். அறி​வியல் மற்​றும் தொழிற்​சாலை ஆராய்ச்சி கவுன்​சிலின் (CSIR) சென்னை வளாகம் மற்​றும் தேசிய சுற்​றுச்​சூழல் பொறி​யியல் ஆராய்ச்சி நிறு​வனம் (NEERI) சார்​பில் "தென்​னிந்​தி​யா​வில் சுற்​றுச்​சூழல் பாது​காப்​பில் தற்​போதுள்ள பிரச்​சினை​கள் மற்​றும் சவால்​கள்" என்ற தலைப்​பில் கருத்​தரங்​கம் சென்னை தரமணி​யில் நேற்று நடை​பெற்​றது. இதில் தமிழ் நாடு மாசுக்​கட்​டுப்​பாடு வாரிய தலை​வர் ஜெயந்தி பேசி​ய​தாவது: வாகன உதிரி​பாக உற்பத்​தி, ஜவுளி, தோல், சர்க்​கரை மற்​றும் அதன் உப பொருட்​கள் உற்பத்​தி​யில் தமிழகம் முன்​னிலை​யில் உள்​ளது. நாடு முழு​வதும் உள்ள தொழிற்​சாலைகளில் பணிபுரி​யும் பெண்​களில் 40% பேர் தமிழகத்​தில் உள்​ளனர்.

feedburner
28 நவ.
3 நிமிடம் படிக்க
சென்னை கிண்டியில் 118 ஏக்கரில் மாபெரும் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கும் பணிகள் தொடக்கம்
சுற்றுச்சூழல்

சென்னை கிண்டியில் 118 ஏக்கரில் மாபெரும் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கும் பணிகள் தொடக்கம்

சென்னை கிண்டியில் 118 ஏக்கர் பரப்பில் மாபெரும் சுற்றுச்சூழல் பூங்காவில், நீர்நிலைகளின் கரைகள் அமைக்கும் பணி உள்ளிட்ட தோட்டக் கலைப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்து, பார்வையிட்டார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் சென்னை, கிண்டியில் 118 ஏக்கர் பரப்பில் மாபெரும் சுற்றுச்சூழல் பூங்காவில், முதற்கட்டமாக நீர்நிலைகளின் கரைகளை சீரமைக்கும் பணிகள், அரியவகை மரங்கள், அழகிய மலர்ச் செடிகள் நடவு செய்தல் மற்றும் நாற்றங்கால் பணிகள் ஆகியவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.

feedburner
28 நவ.
3 நிமிடம் படிக்க
பாம்பன் மீனவர் வலையில் சிக்கிய அரிய வகை டூம்ஸ் டே மீன்!
சுற்றுச்சூழல்

பாம்பன் மீனவர் வலையில் சிக்கிய அரிய வகை டூம்ஸ் டே மீன்!

ராமேசுவரம்: ராமேசுவரம் அருகே பாம்பனில் மன்னார் வளைகுடா கடற்பகுதியில் இருந்து ஞாயிற்றுக்கழமை நூற்றுக்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். பின்னர் மீன்பிடித்து விட்டு மீனவர்கள் கரை திரும்பினார்கள். மீனவர்கள் வலையில் டூம்ஸ் டே (இறுதி நாள்) மீன் என்றழைக்கப்படும் அரிய வகை ஆழ்கடல் மீனான (Oar Fish) எனப்படும் துடுப்பு மீன் சிக்கியது. இந்த மீன் 10 கிலோ எடையும், 5 அடி நீளமும் உடையதாகவும் இருந்தது. மன்னார் வளைகுடா கடற்பகுதியில் முதன்முறையாக இந்த மீன் பிடிபட்டதால் இந்த மீனை பாம்பன் மக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.

feedburner
28 நவ.
3 நிமிடம் படிக்க
இந்தியாவில் கடும் மழைப் பொழிவு, வறட்சி ஏற்படும்: புவி அறிவியல் அமைச்சக முன்னாள் செயலர் எச்சரிக்கை
சுற்றுச்சூழல்

இந்தியாவில் கடும் மழைப் பொழிவு, வறட்சி ஏற்படும்: புவி அறிவியல் அமைச்சக முன்னாள் செயலர் எச்சரிக்கை

வரும் காலங்களில் காலநிலை மாற்றம் காரணமாக, இந்தியப் பகுதிகளில் கடும் மழைப்பொழிவும், கடும் வறட்சியும் ஏற்படக்கூடும் என்று மத்திய புவி அறிவியல் அமைச்சக முன்னாள் செயலர் மாதவன் நாயர் ராஜீவன் தெரிவித்துள்ளார். சென்னை தரமணியில் உள்ள ஆசிய இதழியல் கல்லூரியில், காலநிலை மாற்றம் மற்றும் இந்தியாவில் அதன் தாக்கம் குறித்த கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய புவி அறிவியல் அமைச்சக முன்னாள் செயலர் மாதவன் நாயர் ராஜீவன் பேசியதாவது: கால நிலை மாற்றத்தின் தாக்கத்தால் குறுகிய காலத்தில் அதிக அளவு மழை பொழிவது சமீபகாலமாக அதிகரித்துள்ளது. பருவமழை காலத்தில் பெய்ய வேண்டிய மொத்த மழையில் 50 சதவீதம், குறுகிய காலத்தில், அதாவது 16 மணி நேரத்தில் பெய்துவிடுகிறது. இது 14 மணி நேரமாக குறைந்து விட்டது. வரும் காலங்களில் இன்னும் குறுகிய காலத்தில் கனமழை பெய்ய அதிக வாய்ப்பு உள்ளது.

feedburner
28 நவ.
3 நிமிடம் படிக்க
கொடைக்கானலில் அனுமதியின்றி வெட்டப்படும் மரங்கள் - வனத்துக்கும் தண்ணீருக்கும் ஆபத்து
சுற்றுச்சூழல்

கொடைக்கானலில் அனுமதியின்றி வெட்டப்படும் மரங்கள் - வனத்துக்கும் தண்ணீருக்கும் ஆபத்து

பழநி: கொடைக்கானல் வனப்பகுதி யில் அனுமதியின்றி மரங்கள் வெட்டப்படுவதால் வனத்துக் கும், தண்ணீருக்கும் ஆபத்து ஏற்படும் நிலை உருவாகி வருவ தாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வேதனை தெரிவித்தனர். கொடைக்கானல் வனப் பகுதியில் அரியவகை மூலிகை கள், குங்குலியம், சில்வர் ஓக், ரோஸ் உட், வேங்கை உள்ளிட்ட மரங்கள் அதிகளவில் உள்ளன. தமிழகத்தில் பசுமை பரப்பை அதிகரிக்க, பசுமை தமிழகம் என்ற இயக்கம் தொடங்கப்பட்டு பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால், அதற்கு நேர் மாறாக, கொடைக்கானல் மலைப் பகுதியில் சமீபகாலமாக மரங்கள் வெட்டி கடத்தப்பட்டு வருவது அதிகரித்து வருகிறது. குறிப்பாக, பட்டா நிலங்களில் உள்ள மரங்களை வெட்ட அனுமதி பெற்று, அருகிலுள்ள வனப்பகுதியில் இருந்தும் மரங்களை வெட்டி வருகின்றனர். அவ்வாறு வெட்டிய மரங்களை சாலையோரம், பட்டா நிலம் மற்றும் வனப்பகுதிக்கு உள்ளே பதுக்கி வைக்கின்றனர்.

feedburner
28 நவ.
3 நிமிடம் படிக்க
சென்னை | லேப்-டாப் வியாபாரியிடம் ரூ.55 லட்சம் வழிப்பறி: தலைமறைவாக இருந்த 3 பேர் கைது
குற்றம்

சென்னை | லேப்-டாப் வியாபாரியிடம் ரூ.55 லட்சம் வழிப்பறி: தலைமறைவாக இருந்த 3 பேர் கைது

சென்னை: லேப்-டாப் வியாபாரியிடம், போலீஸ் எனக் கூறி, ரூ.55 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில், தலைமறைவாக இருந்த மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். சென்​னை, ரிச்சி தெரு​வில் நரேஷ்கு​மார் (38) என்​பவர் லேப்​-​டாப் உதிரி பாகங்​கள் விற்​பனை செய்​யும் கடை நடத்தி வரு​கிறார். இவர் கடந்த அக். 3-ம் தேதி இரவு, அவரது நண்​பருக்கு சொந்​த​மான ரூ.55 லட்​சம் பணத்தை வங்​கி​யில் டெபாசிட் செய்​வதற்​காக இருசக்கர வாக​னத்​தில் சென்று கொண்​டிருந்​தார். அவரை பின் தொடர்ந்து இருசக்கர வாக​னங்களில் வந்த சிலர் நரேஷ்கு​மாரை வழிமறித்​தனர்.

feedburner
28 நவ.
3 நிமிடம் படிக்க
முதல்வர் ஸ்டாலின், நடிகர் அஜித் வீட்டுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்
குற்றம்

முதல்வர் ஸ்டாலின், நடிகர் அஜித் வீட்டுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

சென்னை: முதல்​வர் மு.க.ஸ்​டா​லின், நடிகர் அஜித் வீட்​டுக்கு மீண்​டும் வெடிகுண்டு மிரட்​டல் விடுக்​கப்​பட்​டது. வெடிகுண்டு மிரட்டல் விடும் சம்​பவம் தொடர்ந்து நடை​பெற்று வரு​கிறது. அந்த வகை​யில் நேற்று முதல்​வர் மு.க.ஸ்​டா​லின், நடிகர்​கள் அஜித், லிவிங்​ஸ்​டன், நடிகை குஷ்பு, தமிழக இளம் செஸ் விளை​யாட்டு வீரர் பிரக்​ஞானந்​தா, தமிழ்​நாடு பாடநூல் கழக தலை​வரும், பட்​டிமன்ற பேச்​சாள​ரு​மான திண்​டுக்​கல் லியோனி உள்​ளிட்ட 11 பேரின் வீடு​களுக்கு வெடிகுண்டு மிரட்​டல் வந்​தது. வழக்​கம்​போல் டிஜிபி அலு​வல​கத்​துக்கு இ-மெ​யில் வாயி​லாக இந்த மிரட்​டல் கடிதம் வந்​திருந்​தது. மிரட்​டல் விடுக்​கப்​பட்ட 11 பேர் வீடு​களி​லும் வெடிகுண்டு நிபுணர்​கள் சோதனை நடத்தி வெறும் புரளி என்​பதை உறுதி செய்​தனர். முதல்​வர் உட்பட பலரது வீட்​டுக்கு மீண்​டும் மீண்​டும் வெடிகுண்டு மிரட்டல்கள் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

feedburner
28 நவ.
3 நிமிடம் படிக்க
சென்னை | போதை காளான் கடத்திய மருத்துவ மாணவர் கைது
குற்றம்

சென்னை | போதை காளான் கடத்திய மருத்துவ மாணவர் கைது

சென்னை: நொளம்பூர் போலீஸார் நேற்று முன்தினம் அதே பகுதி அண்ணாமலை அவென்யூ சந்திப்பில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரின் பையை சோதனை செய்தபோது, போதைக் காளான், போதை ஸ்டாம்ப் அகியவை இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த போலீஸார் அதை வைத்திருந்த தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர் மோனிஷை கைது செய்தனர். இவர் கூரியர் மூலம் போதைப் பொருளை வாங்கியது தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

feedburner
28 நவ.
3 நிமிடம் படிக்க
சென்னை | குட்கா கடத்திய அசாம் இளைஞர்கள் 4 பேர் கைது
குற்றம்

சென்னை | குட்கா கடத்திய அசாம் இளைஞர்கள் 4 பேர் கைது

சென்னை: எழும்​பூர் போலீ​ஸார் நேற்று அதி​காலை எழும்​பூர், காந்தி இர்​வின் சாலை, ஆவணக் காப்​பகம் அருகே கண்காணித்தனர். அப்​போது, அங்கு சந்​தேகத்​துக்​கிட​மான முறை​யில் நின்று கொண்​டிருந்த 4 பேரிடம் சென்று விசா​ரித்​தனர். அப்​போது, அவர்​கள் முன்​னுக்​குப்​பின் முரணாக பதிலளித்​தனர். இதையடுத்து அவர்​கள் வைத்​திருந்த பைகளை சோதித்து பார்த்​த​போது அதில், குட்கா மற்​றும் கஞ்சா பொட்​டலங்​கள் மறைத்து வைத்​திருந்​தது தெரிய​வந்​தது.

feedburner
28 நவ.
3 நிமிடம் படிக்க

அதிகம் படிக்கப்பட்டது

எங்கள் வாசகர்கள் பேசும் பிரபலமான கதைகள்