தமிழ் டைம்ஸ் logo
எம்பிஏ படிப்புக்கான சிமேட் நுழைவுத் தேர்வு - விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்
கல்வி

எம்பிஏ படிப்புக்கான சிமேட் நுழைவுத் தேர்வு - விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

எம்பிஏ படிப்புக்கான சிமேட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் நாளையுடன் (நவ.17) முடிவடைகிறது. நம்நாட்டில் உள்ள மத்திய உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமத்தின்கீழ் (ஏஐசிடிஇ) இயங்கும் கல்லூரிகளில் மேலாண்மை படிப்புகளில் சேர சிமேட் எனும் பொது நிர்வாக நுழைவுத் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். தேசிய தேர்வுகள் முகமை(என்டிஏ) சார்பில் இந்த தேர்வு ஆண்டுதோறும் கணினி வழியில் நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டுக்கான சிமேட் தேர்வு ஜனவரி மாதம் நடைபெற உள்ளது.

feedburner
21 நவ., 05:30 AM
யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வில் வென்ற பார்வை மாற்றுத்திறன் பி.ஹெச்டி மாணவர் முனியாண்டி!
கல்வி

யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வில் வென்ற பார்வை மாற்றுத்திறன் பி.ஹெச்டி மாணவர் முனியாண்டி!

கரூர்: கரூர் அரசு கலைக் கல்லூரியில் பி.ஹெச்டி ஆராய்ச்சி படிப்பு படித்து வரும் பார்வை மாற்றுத் திறன் மாணவர், யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகேயுள்ள கூட்டக்காரன்பட்டி என்கிற சித்திரப்பள்ளியைச் சேர்ந்தவர் சி.முனியாண்டி (30). கரூர் அரசு கலைக் கல்லூரியில் பி.ஹெச்டி ஆராய்ச்சி படிப்பு மேற்கொண்டு வரும் இவர், அண்மையில் வெளியான யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வில் தமிழகத்தில் தேர்ச்சி பெற்ற 155 பேரில் ஒருவர். கரூர் அரசு கலைக் கல்லூரியில் 2012-15-ம் ஆண்டுகளில் பி.ஏ. தமிழ் படித்த இவர், சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பி.எட். கல்லூரியில் 2015- 17-ம் ஆண்டில் பி.எட்., படித்தார்.

feedburner
21 நவ., 05:30 AM
கட்டுக்கடங்காத கூட்டத்தால் சபரிமலையில் குழந்தைகள், முதியோர் பரிதவிப்பு: மூதாட்டி மாரடைப்பால் உயிரிழப்பு
இந்தியா

கட்டுக்கடங்காத கூட்டத்தால் சபரிமலையில் குழந்தைகள், முதியோர் பரிதவிப்பு: மூதாட்டி மாரடைப்பால் உயிரிழப்பு

சபரிமலை: சபரிமலை​யில் ஏற்​பட்​டுள்ள கடும் நெரிசலில் சிக்கி குழந்​தைகள், முதி​யோர் பெரும் அவதிக்​குள்​ளாகி வரு​கின்​றனர். வரிசை​யில் நீண்ட நேரம் காத்​திருந்த மூதாட்டி ஒரு​வர் மாரடைப்​பால் உயி​ரிழந்​தார். சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் ஆன்​லைன் மூலம் 70 ஆயிரம் பேரும், ஸ்பாட் புக்​கிங் மூலம் 20 ஆயிரம் பேரும் என மொத்​தம் 90 ஆயிரம் பக்​தர்​கள் தின​மும் அனு​ம​திக்​கப்​படு​வர் என்று தேவசம் போர்டு தெரி​வித்​துள்​ளது. ஆனால் ஸ்பாட் புக்​கிங்​கில் கட்​டுப்​பாடின்றி பக்​தர்​கள் அனு​ம​திக்​கப்​படு​கின்​றனர். இதனால் நெரிசல் ஏற்​பட்டு பம்​பை, மரக்​கூடம் உள்​ளிட்ட பல பகு​தி​களி​லும் பக்​தர்​கள் வெகுநேரம் நிறுத்தி வைக்​கப்​பட்டு பின்பு அனு​ம​திக்​கப்​படு​கின்​றனர். 6 மணி நேரத்​துக்​கும் மேல் காத்​திருக்​கும் நிலை ஏற்​படு​கிறது. அது​வரை குடிநீர், கழிப்​பிட வசதி இல்​லாத​தால் பக்​தர்​கள் பெரும் பரித​விப்​புக்கு உள்​ளாகி வரு​கின்​றனர். இத்​துடன் கடும் நெரிசலும் ஏற்​படு​வ​தால் பலருக்​கும் மூச்​சுத்​திணறல் ஏற்​பட்டு வரு​கிறது.

feedburner
21 நவ., 05:30 AM
டெல்லி கார் குண்டுவெடிப்பு ஒரு தற்கொலைப்படை தாக்குதல்: என்ஐஏ உறுதி
இந்தியா

டெல்லி கார் குண்டுவெடிப்பு ஒரு தற்கொலைப்படை தாக்குதல்: என்ஐஏ உறுதி

புதுடெல்லி: டெல்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பு ஒரு தற்கொலைப் படைத் தாக்குதல் என்றும் இந்த சதியில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளி ஒருவரை கைது செய்திருப்பதாகவும் என்று தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) தெரிவித்துள்ளது. டெல்லி செங்கோட்டை அருகே கடந்த 10-ம் தேதி கார் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில், 10 பேர் உயிரிழந்தனர், 32 பேர் காயமடைந்தனர். காஷ்மீரைச் சேர்ந்த மருத்துவரான உமர் முகமது நபி என்பவர் காரை ஓட்டிச் சென்று வெடிவிபத்தை நிகழ்த்தினார். இந்த வெடி விபத்து குறித்து முதலில் டெல்லி போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். பின்னர், இந்த வழக்கை என்ஐஏவுக்கு மாற்றி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இதையடுத்து, என்ஐஏ, 10 பேர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து, தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது.

feedburner
21 நவ., 05:30 AM
‘மேகேதாட்டு தீர்ப்பு எங்களுக்கு சாதகம்’ - கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் வரவேற்பு
இந்தியா

‘மேகேதாட்டு தீர்ப்பு எங்களுக்கு சாதகம்’ - கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் வரவேற்பு

பெங்களூரு: மேகேதாட்டு திட்டம் தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பை கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் வரவேற்றார். மேலும், இது மாநிலத்துக்கு ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக இருக்கும் என்றும் கூறினார். செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த சிவகுமார், “மேகேதாட்டு தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக வந்துள்ளது. இதற்காக வாதாடிய வழக்கறிஞர்களுக்கு நாம் நன்றி தெரிவிக்க வேண்டும். இதே விஷயம் தொடர்பாக நாளையும் ஒரு கூட்டம் உள்ளது. எதிர்காலத்தில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி விவாதிக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.

feedburner
21 நவ., 05:30 AM
அசாமில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு
இந்தியா

அசாமில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு

புதுடெல்லி: அசாமில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் மேற்கொள்வதற்கான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு பிஹாரில் சிறப்பு தீவிர திருத்தத்தை (SIR) மேற்கொண்ட இந்திய தேர்தல் ஆணையம் அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், சத்தீஸ்கர், கோவா, குஜராத், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், அந்தமான் நிகோபார் தீவுகள், லட்சத்தீவுகள் ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை தொடங்கியுள்ளது.

feedburner
21 நவ., 05:30 AM
சவுதி பேருந்து விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் உயிரிழந்த சோகம்
இந்தியா

சவுதி பேருந்து விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் உயிரிழந்த சோகம்

சவுதி அரேபியாவில் நடந்த பேருந்து விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 இந்தியர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்திலிருந்து சவுதி அரேபியாவிலுள்ள மெக்கா மற்றும் மதினாவுக்கு புனித யாத்திரை மேற்கொண்ட 45 முஸ்லிம்கள் பேருந்து விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். டீசல் டேங்கர் மீது இவர்கள் பயணம் செய்த பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 45 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் 18 பெண்கள், 10 சிறுவர்கள், 17 ஆண்கள் உள்ளனர்.

feedburner
21 நவ., 05:30 AM
மதீனாவில் பேருந்து விபத்து: இந்திய யாத்ரீகர்கள் பலியானதாக தகவல் - அமைச்சர் ஜெய்சங்கர் இரங்கல்!
இந்தியா

மதீனாவில் பேருந்து விபத்து: இந்திய யாத்ரீகர்கள் பலியானதாக தகவல் - அமைச்சர் ஜெய்சங்கர் இரங்கல்!

ஹைதராபாத்: சவூதி அரேபியாவில் நடந்த பேருந்து விபத்தில் ஹைதராபாத்தைச் சேர்ந்த 42 இந்திய யாத்ரீகர்கள் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. மெக்காவிலிருந்து மதீனாவுக்கு யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, டீசல் டேங்கர் லாரி மீது மோதியதால் பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், “மெதினாவில் இந்தியர்கள் சென்ற வாகனம் விபத்துக்குள்ளான நிகழ்வை அறிந்து மிகுந்த அதிர்ச்சியடைந்தேன். ரியாத்தில் உள்ள நமது தூதரகமானது, ஜெட்டா தூதரக அதிகாரிகளுடன் ஆலோசனையில் உள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு முழு ஆதரவை அளிக்கும். அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விழைகிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.

feedburner
21 நவ., 05:30 AM
‘தற்கொலை தாக்குதல் எனப்படுவது...’ - டெல்லி குண்டு வெடிப்பு குற்றவாளி உமர் நபியின் பழைய வீடியோ வெளியானது!
இந்தியா

‘தற்கொலை தாக்குதல் எனப்படுவது...’ - டெல்லி குண்டு வெடிப்பு குற்றவாளி உமர் நபியின் பழைய வீடியோ வெளியானது!

புதுடெல்லி: “தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் குறித்து பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. இது ஒரு வகையான உயிர்த் தியாக நடவடிக்கை.” என டெல்லி கார் குண்டு வெடிப்பு நடத்திய மருத்துவர் உமர் நபி பேசியுள்ள வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. கடந்த 10-ம் தேதி டெல்லி - செங்கோட்டை பகுதியில் உமர் நபி இந்த தாக்குதலை நடத்தினார். அதற்கு முன்பாக இந்த வீடியோவை அவர் பதிவு செய்திருக்கலாம் எனத் தகவல். இந்த வீடியோவை ஆங்கில ஊடக நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் அவர் கூறியுள்ளதாவது:

feedburner
21 நவ., 05:30 AM

சமீபத்திய செய்திகள்

சமீபத்திய புதுப்பித்தல்கள்

நூ நகரில் 10 நாள் பதுங்கியிருந்த டெல்லி குண்டுவெடிப்பு குற்றவாளி: என்ஐஏ அதிகாரிகள் தகவல்
இந்தியா

நூ நகரில் 10 நாள் பதுங்கியிருந்த டெல்லி குண்டுவெடிப்பு குற்றவாளி: என்ஐஏ அதிகாரிகள் தகவல்

feedburner
Nov 213 நிமிடம் படிக்க
டெல்லி குண்டுவெடிப்பு: 25 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை; அல் பலா பல்கலைக்கழக நிறுவனர் கைது
இந்தியா

டெல்லி குண்டுவெடிப்பு: 25 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை; அல் பலா பல்கலைக்கழக நிறுவனர் கைது

feedburner
Nov 213 நிமிடம் படிக்க
டெல்லி கார் குண்டு தற்கொலை தாக்குதல் வழக்கில் மருத்துவர் ஷாகின் சயீத் செல்போன் ஆய்வு
இந்தியா

டெல்லி கார் குண்டு தற்கொலை தாக்குதல் வழக்கில் மருத்துவர் ஷாகின் சயீத் செல்போன் ஆய்வு

feedburner
Nov 213 நிமிடம் படிக்க
‘இது குடும்பப் பிரச்சினை; நான் பார்த்துக் கொள்கிறேன்’ - தேஜஸ்வி - ரோகிணி மோதல் குறித்து லாலு கருத்து!
இந்தியா

‘இது குடும்பப் பிரச்சினை; நான் பார்த்துக் கொள்கிறேன்’ - தேஜஸ்வி - ரோகிணி மோதல் குறித்து லாலு கருத்து!

பாட்னா: தேஜஸ்வி யாதவ் - ரோகிணி ஆச்சார்யா இடையேயான பிரச்சினை என்பது குடும்பத்தின் உள் விவகாரம் என்றும் அதை தான் பார்த்துக் கொள்வதாகவும் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார். பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 202 இடங்களை வென்ற நிலையில், மகா கூட்டணி 35 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது, அதில் ஆர்ஜேடி கட்சி 25 இடங்களில் வென்றது. எந்த சட்டப்பேரவையிலும் எதிர்க்கட்சியாக தேர்வாக மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கையில் 10 சதவீத இடங்களில் வென்றிருக்க வேண்டும். பிஹார் சட்டப்பேரவையில் 243 இடங்கள் உள்ள நிலையில், ஆர்ஜேடி சரியாக 25 இடங்களை வென்றதால் எதிர்க்கட்சியாக தேர்வாகியுள்ளது.

feedburner
Nov 21, 05:30 AM
5 நிமிடம் படிக்க

விளம்பர இடம்

உங்கள் விளம்பரத்தை இங்கே காட்சி செய்யலாம்

மேலும் செய்திகள்

தமிழ்நாடு முழுவதும் மற்றும் அதற்கு அப்பால் இருந்து சமீபத்திய கதைகளுடன் புதுப்பித்த நிலையில் இருங்கள்

பிரதமர் மோடியை மீண்டும் புகழ்ந்த காங். எம்.பி.சசி தரூர்
இந்தியா

பிரதமர் மோடியை மீண்டும் புகழ்ந்த காங். எம்.பி.சசி தரூர்

புதுடெல்லி: முன்​னாள் மத்​திய அமைச்​சரும் திரு​வனந்​த​புரம் மக்​களவை தொகுதி காங்​கிரஸ் எம்​.பி.​யு​மான சசி தரூர் சமீப கால​மாக பிரதமர் நரேந்​திர மோடியை புகழ்ந்து பேசி வரு​கிறார். இது காங்​கிரஸ் மூத்த தலை​வர்​கள் மத்​தி​யில் அதிருப்​தியை ஏற்படுத்தி உள்​ளது. காங்​கிரஸ் கட்​சிக்​கும் அவருக்​கும் இடையே விரிசல் ஏற்​பட்​டுள்ள நிலை​யில், சசி தரூர் எக்ஸ் தளத்​தில் நேற்று கூறிய​தாவது: டெல்​லி​யில் நடை​பெற்ற ஒரு நிகழ்ச்​சி​யில், அழைப்​பின் பேரில் நான் பங்​கேற்​றேன். அதில் பேசிய பிரதமர் நரேந்​திர மோடி, இந்​தியா என்​பது வளரும் சந்தை மட்​டுமல்ல, உலக நாடு​களுக்​காக வளர்ந்து வரும் மாதிரி என்று கூறி​னார். கரோனா பெருந்​தொற்​று, ரஷ்​யா-உக்​ரைன் போர் உள்​ளிட்ட சர்​வ​தேச அளவி​லான நிச்​சயமற்ற தன்​மைக்கு நடு​விலும் இந்​திய பொருளா​தா​ரம் வளர்ந்து வரு​வதைத்​தான் அவர் அவ்​வாறு குறிப்​பிட்​டுள்​ளார்.

feedburner
21 நவ.
3 நிமிடம் படிக்க
பாஜக.வினருக்கு மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த போஸ் ஆயுதங்கள் அளிப்பதை நிறுத்த வேண்டும்: கல்​யாண் பானர்​ஜி பேச்சால் சர்ச்சை
இந்தியா

பாஜக.வினருக்கு மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த போஸ் ஆயுதங்கள் அளிப்பதை நிறுத்த வேண்டும்: கல்​யாண் பானர்​ஜி பேச்சால் சர்ச்சை

கொல்கத்தா: ‘‘​பாஜக.​வினருக்கு ஆயுதங்​கள், வெடிப்​பொருட்​கள் வழங்​கு​வதை ஆளுநர் ஆனந்த போஸ் நிறுத்​திக் கொள்ள வேண்​டும்’’ என்று திரிண​மூல் காங்​கிரஸ் கட்சி எம்​.பி. கல்​யாண் பானர்​ஜி பேசி​யது பெரும் சர்ச்​சையை ஏற்​படுத்தி உள்​ளது. மேற்கு வங்க மாநிலத்​தில் திரிண​மூல் காங்​கிரஸ் சார்​பில் மம்தா பானர்ஜி முதல்​வ​ராக பொறுப்பு வகிக்​கிறார். இவரது கட்​சி​யின் எம்​.பி. கல்​யாண் பானர்​ஜி. அவ்​வப்​போது ஏதாவது கருத்​துகளை தெரி​வித்து சர்ச்​சை​யில் சிக்கி வரு​கிறார்.

feedburner
21 நவ.
3 நிமிடம் படிக்க
நவ.19-ல் எம்எல்ஏக்கள் கூட்டம்; நவ.20-ல் பதவியேற்பு: பிஹார் பாஜக தலைவர் திலிப் ஜெய்ஸ்வால்
இந்தியா

நவ.19-ல் எம்எல்ஏக்கள் கூட்டம்; நவ.20-ல் பதவியேற்பு: பிஹார் பாஜக தலைவர் திலிப் ஜெய்ஸ்வால்

பாட்னா: பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டம் நாளை நடைபெறும். பின்னர், தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்எல்ஏக்களின் கூட்டம் நடைபெறும். இதையடுத்து நாளை மறுநாள் பதவியேற்பு விழா நடைபெறும் என்று பிஹார் மாநில பாஜக தலைவர் திலிப் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய திலிப் ஜெய்ஸ்வால், "நாளை காலை 10 மணிக்கு பாட்னாவில் உள்ள பாஜக தலைமையகமான அடல் சபஹாரில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டம் நடைபெறும். இதில், கட்சியின் சட்டப்பேரவைக் குழு தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார். இதில், சட்டப்பேரவை உறுப்பினர்களும், கட்சியின் மேலிட பார்வையாளர்களும் கலந்து கொள்வார்கள். இதனைத் தொடர்ந்து என்டிஏ கூட்டம் நடைபெறும்.

feedburner
21 நவ.
3 நிமிடம் படிக்க
மத்திய பிரதேசத்தில் யூடியூப் பார்த்து போலி ரூபாய் நோட்டுகளை அச்சடித்தவர் கைது
இந்தியா

மத்திய பிரதேசத்தில் யூடியூப் பார்த்து போலி ரூபாய் நோட்டுகளை அச்சடித்தவர் கைது

போபால்: ம.பி.​யில் யூடியூப் பார்த்து போலி ரூபாய் நோட்​டு​களை அச்​சடித்​தவர் கைது செய்​யப்​பட்​டுள்​ளார். மத்​திய பிரதேச மாநிலம் போபாலில் ஒரு பள்​ளிக்கு அருகே ஒரு​வர் போலி 500 ரூபாய் நோட்​டு​களை புழக்​கத்​தில் விட முயற்​சிப்​ப​தாக கடந்த வெள்​ளிக்​கிழமை போலீ​ஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்​தது. இதையடுத்​து, பிப்​லானி காவல் நிலை​யத்​தின் குற்​றப் பிரிவு போலீ​ஸார் சம்பவ இடத்​துக்​குச் சென்று விவேக் யாதவ் (21) என்​பவரை கைது செய்​தனர்.

feedburner
21 நவ.
3 நிமிடம் படிக்க
என்டிஏ அரசுக்கு லாலு மகன் தேஜ் பிரதாப் ஆதரவு
இந்தியா

என்டிஏ அரசுக்கு லாலு மகன் தேஜ் பிரதாப் ஆதரவு

பிஹார்: லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ், ராஷ்டிரிய ஜனதா தளத்தில் இருந்து விலகி ஜனசக்தி ஜனதா தளம் என்ற புதிய கட்சியை தொடங்கி உள்ளார். பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் அவரது புதிய கட்சி 22 தொகுதிகளில் போட்டியிட்டது. மஹுவா சட்டப்பேரவைத் தேர்தலில் தேஜ் பிரதாப் யாதவ் போட்டியிட்டார். அவர் உட்பட ஜன சக்தி ஜனதா தளத்தின் அனைத்து வேட்பாளர்களும் தோல்வியை தழுவினர். இதுதொடர்பாக பாட்னாவில் உள்ள தேஜ் பிரதாப் யாதவின் வீட்டில் கட்சி தலைவர்கள் நேற்று ஆலோசனை நடத்தினர். இதன்பிறகு கட்சியின் செய்தித் தொடர்பாளர் பிரேம் யாதவ் கூறும்போது, “தேர்தல் தோல்வி குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினோம். அடுத்த கட்டமாக கட்சியை வலுப்படுத்த நடவடிக்கை எடுப்போம். பிஹாரில் பதவியேற்க உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) அரசுக்கு எங்கள் கட்சி தார்மிக அடிப்படையில் ஆதரவு அளிக்கும்’’ என்று தெரிவித்தார்.

feedburner
21 நவ.
3 நிமிடம் படிக்க
ஆர்ஜேடி 25 இடங்களில் மட்டுமே வெற்றி: தேர்தலில் சீட் கிடைக்காதவர்கள் சாபம் பலித்ததாக விமர்சனம்
இந்தியா

ஆர்ஜேடி 25 இடங்களில் மட்டுமே வெற்றி: தேர்தலில் சீட் கிடைக்காதவர்கள் சாபம் பலித்ததாக விமர்சனம்

புதுடெல்லி: ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்​ஜேடி) கட்​சி​யின் தலை​வர் மதன் ஷா. இவருக்கு பிஹார் தேர்​தலில் போட்​டி​யிடு​வதற்கு வாய்ப்பு வழங்​கப்​பட​வில்​லை. இதன் காரண​மாக அவர் கடந்த மாதம் சட்​டையை கிழித்​துக்​கொண்டு அழுது தனது விரக்​தியை வெளிப்​படுத்​தி​னார். மேலும், ஆர்​ஜேடி கட்சி 25 இடங்​களுக்கு மேல் தேறாது என்ற சாபத்​தை​யும் வழங்​கி​னார். இவர் வயிறு எரிந்து விட்ட சாபத்​தைப் போலவே ஆர்​ஜேடி 25 இடங்​களில் மட்​டுமே வெற்றி பெற்​றது.

feedburner
21 நவ.
3 நிமிடம் படிக்க
‘தீவிரவாதிகள் மீது எப்போதும் அனுதாபம்’ - மெஹபூபா முப்தியை சாடிய முன்னாள் உ.பி அமைச்சர்
இந்தியா

‘தீவிரவாதிகள் மீது எப்போதும் அனுதாபம்’ - மெஹபூபா முப்தியை சாடிய முன்னாள் உ.பி அமைச்சர்

லக்னோ: டெல்லியில் கடந்த வாரம் நடைபெற்ற கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், பிடிபி கட்சியின் தலைவருமான மெஹபூபா முப்தி தனது கருத்தை அண்மையில் தெரிவித்திருந்தார். இதையடுத்து தீவிரவாதிகள் மீது மெஹபூபா முப்திக்கு எப்போதும் அனுதாபம் என உத்தர பிரதேசத்தின் முன்னாள் அமைச்சர் மொஹ்சின் ராசா விமர்சித்துள்ளார். “தேசத்தில் தீவிரவாத தாக்குதல்கள் நடைபெறும் போதெல்லாம் அவர்களின் குடும்பம் முதல் ஆளாக வந்து நிற்கிறது. ஏனெனில், அவர்களுக்கும் தீவிரவாதிகளும் இடையிலான உறவு மிகவும் பழையது.

feedburner
21 நவ.
3 நிமிடம் படிக்க
உ.பி.யில் மனைவியை கொன்று தற்கொலை என சித்தரித்தவர் கைது
இந்தியா

உ.பி.யில் மனைவியை கொன்று தற்கொலை என சித்தரித்தவர் கைது

பிரயாக்ராஜ்: உ.பி.​யின் பிர​யாக்​ராஜ் மாவட்​டம், பாரா அனல் மின் நிலை​யத்​தில் பணி​யாற்றி வந்​தவர் ரோகித் (35). இவர் லாலாப்​பூர் என்ற கிராமத்​தில் தனது மனைவி சுஷ்மா திவேதி (32) உடன் வாடகை வீட்​டில் வசித்து வந்​தார். இந்​நிலை​யில் சுஷ்மா கடந்த வெள்​ளிக்​கிழமை பிற்​பகல் கழுத்​தில் காயத்​துடன் ரத்த வெள்​ளத்​தில் வீட்​டில் இறந்து கிடந்​தார். தகவலின் பேரில் விரைந்து சென்ற போலீ​ஸார், வீட்​டின் தரை​யில், ‘‘நான் மனநிலை சரி​யில்​லா​தவள், எனது கணவர் அப்​பா​வி’’ என ரத்​தத்​தால் எழு​தி​யிருந்​ததை பார்த்​தனர்.

feedburner
21 நவ.
3 நிமிடம் படிக்க
பட்டியல் சாதியினருக்கான இடஒதுக்கீட்டில் கிரீமிலேயருக்கு விலக்கு: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் வலியுறுத்தல்
இந்தியா

பட்டியல் சாதியினருக்கான இடஒதுக்கீட்டில் கிரீமிலேயருக்கு விலக்கு: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் வலியுறுத்தல்

புதுடெல்லி: பட்​டியல் சாதி​யினருக்​கான இட ஒதுக்​கீட்​டில் கிரீமி லேயருக்கு விலக்கு அளிக்​கப்பட வேண்​டும் என்று உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் வலி​யுறுத்​தி​யுள்​ளார். ஆந்​திரப் பிரதேச மாநிலம் அமராவ​தி​யில் நடை​பெற்ற ‘75-ஆவது ஆண்​டில் இந்​தியா மற்​றும் இந்​திய அரசமைப்​புச் சட்​டம்’ என்ற தலைப்​பில் நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் தலைமை நீதிபதி பி.ஆர்​.க​வாய் பேசி​ய​தாவது:

feedburner
21 நவ.
3 நிமிடம் படிக்க
பிஹார் பேரவையை கலைக்க நிதிஷ் பரிந்துரை
இந்தியா

பிஹார் பேரவையை கலைக்க நிதிஷ் பரிந்துரை

பாட்னா: பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்​டணி 202 இடங்​களில் வென்று ஆட்​சியை தக்​க​வைத்​துக் கொண்​டது. இந்​நிலை​யில், இப்​போதைய அமைச்​சர​வை​யின் கடைசி கூட்​டம் முதல்​வர் நிதிஷ் குமார் தலை​மை​யில் நேற்று நடை​பெற்​றது. இதில், சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் அமோக வெற்றி பெற்​றதற்​காக நிதிஷ் குமாருக்கு அமைச்​சர்​கள் வாழ்த்து தெரி​வித்​தனர். பின்​னர் இப்​போதைய சட்​டப்​பேர​வையை கலைப்​பது என தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்​டது. இதன்​படி, முதல்​வர் நிதிஷ் குமார் ஆளுநர் ஆரிப் முகமது கானை நேற்று சந்​தித்​தார். அப்​போது சட்​டப்​பேர​வையை கலைப்​ப​தற்​கான பரிந்​துரை கடிதத்தை வழங்​கி​னார். இதன்​படி, வரும் 19-ம் தேதி சட்​டப்​பேரவை முறைப்​படி கலைக்​கப்​படும்.

feedburner
21 நவ.
3 நிமிடம் படிக்க
அசாமில் இன்று முதல் வாக்காளர் திருத்த பணி தொடக்கம்
இந்தியா

அசாமில் இன்று முதல் வாக்காளர் திருத்த பணி தொடக்கம்

புதுடெல்லி: அ​சாம் மாநிலத்​தில் அடுத்த ஆண்டு சட்​டப் பேர​வைத் தேர்​தல் நடை​பெற உள்ளது. இந்​நிலை​யில் அசாமிலும் சிறப்பு வாக்​காளர் பட்​டியல் திருத்​தப் பணியை (எஸ்​ஐஆர்) மேற்​கொள்ள தேர்​தல் ஆணை​யம் நேற்று உத்​தரவு பிறப்​பித்​தது. இதுதொடர்​பான உத்​தர​வை, அசாம் மாநில தலைமை தேர்​தல் அதி​காரிக்கு தேர்​தல் ஆணை​யம் அனுப்​பி​யுள்​ள​தாகத் தெரி​கிறது. அதன்​படி 18-ம் தேதி (இன்​று) முதல் சிறப்பு வாக்​காளர் பட்​டியல் திருத்​தப் பணி தொடங்​க உள்ளது.

feedburner
21 நவ.
3 நிமிடம் படிக்க
போலி அனுதாபம் வேண்டாம்: தேஜஸ்வி மீது ரோகிணி சாடல்
இந்தியா

போலி அனுதாபம் வேண்டாம்: தேஜஸ்வி மீது ரோகிணி சாடல்

புதுடெல்லி: ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத்துக்கு அழுக்கான சிறுநீரகத்தை கொடுத்துவிட்டு அதற்கு பதில் அரசியல் வாய்ப்பையும், பணத்தையும் ரோகிணி ஆச்சார்யா பெற்றதாக அவரது சகோதரர் தேஜஸ்வி தெரிவித்திருந்தார். இதுகுறித்து ரோகிணி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘‘லாலுவின் பெயரில் போலி அனுதாபம் காட்டுவதை நிறுத்திவிட்டு மருத்துவமனைகளில் உள்ள லட்சக்கணக்கான ஏழை நோயாளிகளுக்கு தங்களது சிறுநீரகங்களை தானம் செய்ய அவர்கள் முன்வர வேண்டும். லாலு மீது அவர்களுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால், அவர் பெயரில்தான் சிறுநீரங்களை தானம் செய்ய வேண்டும்.

feedburner
21 நவ.
3 நிமிடம் படிக்க
வருவாய்த் துறையினர் போராட்டத்தை திமுக அரசு தூண்டுகிறது: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
தமிழ்நாடு

வருவாய்த் துறையினர் போராட்டத்தை திமுக அரசு தூண்டுகிறது: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

திருநெல்வேலி: தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகளுக்கு எதிராக வருவாய்த் துறையினர் போராட்டம் நடத்த திமுக அரசு தூண்டுகிறது என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டினார். திருநெல்வேலியில் வ.உ.சி-யின் நினைவு தினத்தை ஒட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: வ.உ.சி-க்கு அஞ்சலி செலுத்துவதில் பெருமைப் படுகிறோம். சுதந்திரப் போராட்ட வீரர்களை கவுரவப்படுத்துவதில் முதல் ஆளாக இருப்பவர் பிரதமர் மோடி.

feedburner
21 நவ.
3 நிமிடம் படிக்க
நெல்லை கவின் கொலை வழக்கில் சார்பு ஆய்வாளர் ஜாமீன் மனு விசாரணை தள்ளிவைப்பு
தமிழ்நாடு

நெல்லை கவின் கொலை வழக்கில் சார்பு ஆய்வாளர் ஜாமீன் மனு விசாரணை தள்ளிவைப்பு

மதுரை: நெல்லையில் மென்பொருள் பொறியாளர் கவின் கொலை வழக்கில் கைதான சார்பு ஆய்வாளர் ஜாமீன் மனு விசாரணையை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது. நெல்லையில் மென்பொருள் பொறியாளர் கவின் காதல் விவகாரம் காரணமாக ஜூலை 27-ல் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கவின் காதலித்து வந்த இளம் பெண்ணின் தம்பி சுர்ஜித், அவரது தந்தை உதவி ஆய்வாளர் சரவணன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பெண்ணின் தாயாரும் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளார்.

feedburner
21 நவ.
3 நிமிடம் படிக்க
‘புதியவர்கள் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறோம்’ - மதில் மேல் பூனையாய் நிற்கும் ரங்கசாமி கருத்து
தமிழ்நாடு

‘புதியவர்கள் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறோம்’ - மதில் மேல் பூனையாய் நிற்கும் ரங்கசாமி கருத்து

புதுச்சேரி அரசியலில் பாஜக அமைச்சர் ஜான்குமார் முதல்வர் ரங்கசாமிக்கு தேவையற்ற நெருக்கடிகளை உண்டாக்கி வருகிறார். லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸை வைத்து, வரும் தேர்தலில் தனியான ஒரு அணியை கட்டமைக்க நினைக்கிறார் ஜான்குமார். இதற்காக அவர் எடுத்து வரும் நடவடிக்கைகளை பாஜக மேலிடமும் கண்டும் காணாமல் இருக்கிறது. ஆனாலும் இவை அனைத்தையும் மவுனமாக கடந்து கொண்டிருக்கும் ரங்கசாமி, பிஹார் தேர்தல் வெற்றிக்காக பாஜக தலைவர் நட்டாவுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பி இருப்பதுடன், டெல்லி சென்று பிரதமரைச் சந்திக்கவும் தயாராகி வருகிறார்.

feedburner
21 நவ.
3 நிமிடம் படிக்க
மத்திய அரசுப் பள்ளிகளில் 14,967 காலி பணியிடங்கள்: டிச.4-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு

மத்திய அரசுப் பள்ளிகளில் 14,967 காலி பணியிடங்கள்: டிச.4-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

சென்னை: கேந்​திரிய வித்​யால​யா, நவோதயா பள்​ளி​களில் காலி​யாக உள்ள 14,967 பணி​யிடங்​களுக்கு டிச.4-ம் தேதிக்​குள் விண்​ணப்​பிக்க வேண்டுமென அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. நாடு முழு​வதும் உள்ள கேந்​திரிய வித்​யாலயா பள்​ளி​களில் 9,126, நவோதயா பள்​ளி​களில் 5,841 என மொத்​தம் 14,967 ஆசிரியர் மற்​றும் பணி​யாளர் பணி​யிடங்​கள் காலி​யாக உள்​ளன. இதில் 13,008 பணி​யிடங்​கள் இடைநிலை, பட்​ட​தா​ரி, முது​நிலை ஆசிரியர், முதல்​வர், துணை முதல்​வர், நூல​கர் பதவி​களுக்​கானவை. மீத​முள்ள 1,959 பணி​யிடங்​கள் உதவி ஆணை​யர், நிர்​வாக அதி​காரி, இளநிலை உதவி​யாளர், மூத்த உதவி​யாளர், உதவி பிரிவு அலு​வலர் (ஏஎஸ்​ஓ), நிர்​வாகப் பணி​யாளர், நிதி அதி​காரி, பொறி​யாளர், மொழிபெயர்ப்​பாளர் மற்​றும் சுருக்​கெழுத்​தாளர் என ஆசிரியர் அல்​லாத பிரி​வில் வரு​கின்​றன.

feedburner
21 நவ.
3 நிமிடம் படிக்க

அதிகம் படிக்கப்பட்டது

எங்கள் வாசகர்கள் பேசும் பிரபலமான கதைகள்